Chapter 32

HEY நீ ஸ்ருதி தானே ! மது கேட்டாள்

ஆமாம் என் பேர் உனக்கு எப்படி தெரியும் ?

அவ்வளவு சீக்கிரம் உன்னை போய் மறந்து விடுவேனா?என்ன முன்னாடி ரொம்ப சிம்பிளா ட்ரெஸ் பண்ணி இருப்பே.ஆனா இப்போ கொஞ்சம் விலை உயர்ந்த ஆடையில் ஜொலிக்கிற இல்ல?அது தான் ஒரு கணம் திணறி விட்டேன். ஆமா என்னை தெரியல உனக்கு.

இல்லையே ,நிச்சயமாக இதற்கு முன்னாடி உங்களை பார்த்த மாதிரி ஞாபகமே இல்ல

மாதவரம் காலேஜில் தானே படிச்சே ! அங்க நீ படிக்கும் போது, சேர்மன் மது தெரியுமா ?

ஆமாம் கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் நேரில் பார்த்தது இல்லை. காலேஜ் Annual day function அப்பவும் அவங்க ஒரு டான்ஸ் புரோகிராம் சூப்பரா பண்ணதா சொன்னாங்க.ஆனா அன்னிக்கு heavy fever இருந்ததால் என்னால் கல்லூரிக்கு வர முடியல

அது நான் தான். உன்னோட காலேஜ் சீனியர். காலேஜ் பியூட்டி என்று மூணு வருஷமா நான் வைத்து இருந்த பட்டத்தை நீ தான் உள்ளே வந்த உடனேயே காலி பண்ணிட்டேயே.அதுவும் +2 வில் வேறு ஸ்டேட் 2 ND வேறு.இது ஒன்னு போதாதா ? நீ காலேஜ் முழுக்க ஃபேமஸ் ஆவதற்கு .அப்பவே உன்கிட்ட பேசணும் பேசணும் என்று நினைத்தேன்.ஆனால் உன்னை மாதிரி LOW CLASS பொண்ணுங்க கிட்ட எல்லாம் வந்து பேச எனக்கு கௌரவ குறைச்சலாக இருந்தது .அதனால் தான் அப்ப வந்து பேச முடியல.

நான் இப்பவும் அதே low கிளாஸ் பொண்ணு தான்.இப்ப மட்டும் வந்து பேசிட்டு இருக்கீங்க.

அப்ப இருந்த மது வேற ,இப்போ இருக்கிற மது வேற .நிறைய மாறி விட்டேன்.ஆனால் உன் மேல இருக்கிற கோவம் தான் இன்னும் மாறாமல் தான் இருக்கு.

என் மேல கோபமா ஏன், நான் உங்களுக்கு என்ன தீங்கும் பண்ண வில்லையே ?

நீ தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல , ஆனா தெரியாம பண்ண தப்பினால் உன்னால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கேன் .

எனக்கு புரியல மது ,நீங்க சொல்றது ?

பின்ன, நீ வந்தவுடனே என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த பசங்க எல்லாம் உன் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.என்கிட்ட இருந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் உன்கிட்ட வந்துடுச்சு.

"இந்த சின்ன விசயத்திற்கா என் மேல கோபம்? நான் இந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் எதையும் மதித்ததே இல்ல". என்று ஸ்ருதி சிரித்தாள்.

"சிரிக்காதே ஸ்ருதி ,எனக்கு கோபம் கோபமாக வருது" .மது கடுப்புடன்" இந்த ஒரு விசயத்திற்காக மட்டும் என்றால் கூட உன்னை மன்னித்து விடுவேன்.ஆனால் இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு"

சரி சொல்லுங்க ,அடுத்த நீங்க சொல்ல போற மொக்கை விஷயத்தையும் கேட்டு அதுக்கும் சேர்த்தே சிரிக்கிறேன்.

இது ஒன்னும் மொக்கை விசயம் கிடையாது ஸ்ருதி.என்னோட வாழ்கையே உன்னால தான் போச்சு.

அப்படி என்னங்க உங்க வாழ்க்கையே போற அளவுக்கு நான் தப்பு பண்ணேன்?

நான் தான் முதலிலேயே சொன்னேன் இல்ல ,உன்னை அறியாமல் நடந்த தவறு என்று.குறுக்கே பேசாமல் நான் சொல்வதை கேள்.நீ வந்த பிறகு எல்லா பசங்களும் உன் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஒரே ஒருத்தன் மட்டும் என் பின்னாடி அப்பொழுதும் இருந்தான்.அவன் பேர் அசோக்.சரி என்னை விட அழகான பொண்ணு வந்தாலும் என் பின்னாடியே சுற்றுகிறானே என்று அவன் மேல் இரக்கம் வந்தது.அந்த இரக்கமே பின்பு காதலாக மாறியது.இதனால் என்னை ஆசையாக வளர்த்த என் தந்தையை எதிர்த்து எல்லாவற்றையும் இழந்து பிடிவாதமாக அவனை கல்யாணம் பண்ணி கொண்டேன்.ஆனால் என் வாழ்வில் வேறொரு ஆண் வரும் வரை இவன் ஒரு முட்டி செத்தவன் ,எதுக்கும் வேலைக்கும் ஆக மாட்டான் என்ற விசயம் எனக்கு தெரியாது.அந்த ஆண் என் வாழ்வில் வந்த பிறகு தான் செக்ஸின் உண்மையான சுகம் தெரிந்தது.அவன் மூலம் தான் நான் தாயாகும் பாக்கியமும் கிடைத்தது.ஒருவேளை நீ காலேஜில் சேர்ந்திராவிடில் அந்த அசோக்கின் காதலை கண்டிப்பாக நிராகரித்து இருப்பேன்.என் தந்தையும் ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செய்து வைத்து இருப்பார்.என்னோட வாழ்க்கையில் இன்னொரு நபருடன் தவறான உறவு ஏற்பட்டு இருக்காது.இப்போ நான் அசோக்கையும் விட்டு விலகி ,இன்னொரு பையனையும் கல்யாணம் பண்ண முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் நிலைக்கு நீ தான் காரணம்.

மது சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதி, "தெரிந்தோ தெரியாமலோ என் மூலமா உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்குன்னு சொல்றீங்க .ஆனா இது எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது.நான் உங்களை போல நடந்து போனதை பற்றி கவலைப்படும் ஆளும் கிடையாது.எனக்கு என் வாழ்வில் என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் பக்குவம் இறைவன் எனக்கு கொடுத்து இருக்கார்.எந்த low class பொண்ணுகிட்ட பேச கெளரவ குறைச்சல் என்று நினைத்தீர்களோ,இப்போ அதே பொண்ணு கிட்ட தான் இறைவன் உங்களை பேச வைத்து இருக்கிறார்.இந்த மாற்றம் எப்படி உங்களிடம் வந்தது? சக மனிதனை சமமாய் பார்க்கும் பக்குவம் எங்கிருந்து வந்தது? நீங்கள் சுக போகங்களை விட்டு வெளியே வந்து எல்லோரிடமும் பழகிய பிறகு தானே,?நடந்ததெல்லாம் நன்மைக்கே என்று வாழ பழகி கொள்ளுங்கள்..நீங்க நல்லவங்க தான். கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் நல்லதே நடக்கும்.எப்பவுமே புதிதாக வருபவர்களுக்கு கொஞ்சம் மவுசு இருக்கும்.அதனால் தான் உங்களை விட்டு என் பின்னே சுற்றி இருப்பார்கள்.அதுக்காக உங்கள் அழகு குறைந்து விடுமா என்ன ?எனக்கு தெரிந்து என்னை விட நீங்க தான் அழகாக இருக்கீங்க !

அப்படியா ? மது ஆச்சரியத்துடன் கேட்க

உண்மை தான் மது , இதுவரை நான் பார்த்து கூட இராத பல விசயங்களை இறைவன் உனக்கு கொடுத்து உள்ளார்.எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது.ஏதாவது ஒரு குறை இருக்கும்.உனக்கென்ன மது?இப்போ உன்னோட அழகுக்கு நீ திருமணம் செய்ய ஆசைப்பட்டால் பலபேர் வரிசையில் நிற்பார்கள் தெரியுமா?

உண்மை தான் ஸ்ருதி, மற்றவர்களுக்கு கிடைத்ததை காட்டிலும் எனக்கு நிறையவே கிடைத்து உள்ளது.அதை நான் என்னோட comfort zone இல் வெளிவந்த போதே தெரிந்து கொண்டேன்.ஏராளமான சொத்துக்கள் என் பேரில். நான் சொல்லும் வேலையை மண்டி போட்டு செய்ய காத்து இருக்கும் பல பேர்! ஏன் இப்போ நீ நிக்கிற இடம் கூட என்னோடது தான்.

அப்பொழுது தான் ஸ்ருதிக்கு ஹாஸ்பிடல் பெயர் ஞாபகமே வந்தது . மது பல்நோக்கு மருத்துவமனை.மது,இது உன்னோட ஹாஸ்பிடலா ?

என்னடி கேள்வி இது ? ஹாஸ்பிடல் பேரிலேயே என் பேர் இருக்குதே !

அப்போ என் கணவர் பார்க்க வந்தது உன்னை தானா?அவசரப்பட்டு வார்த்தையை வெளிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

என்னது வந்தது உன் கணவரா ?ஷெட்டி உன் புருஷனா?

ஆமாம் மது,இது என்னோட பெர்சனல்.நான் கிளம்பறேன்.அவசரமாக ஸ்ருதி கிளம்ப

நில்லு ஸ்ருதி , உனக்கும் ஷெட்டிக்கும் கல்யாணம் ஆகி விட்டதா ?

அது வந்து .

சொல்லு ஸ்ருதி ,கருணாகரன் patient relation தானே நீ ,

ஆமா ,என்று மௌனமாக தலை அசைத்தாள்.

கருணாகரன் உனக்கு என்ன வேணும்?

அவர் என் பெரியப்பா .என் மேல இருக்கிற கோபத்தை அவர் மேல எதுவும் காட்ட வேண்டாம்.

ச்சீ ,அந்த கேவலமான விசயத்தை நான் செய்ய மாட்டேன்.நான் கோபத்தை காட்ட வேண்டிய இடமே வேறு .ஓ அதுக்கு தான் பணம் அவன் கட்டி இருக்கானா ?

இன்னொரு request மது,எனக்கு கல்யாணம் ஆனது என் பெரியம்மாவுக்கு தெரிய வேண்டாம்.

சபாஷ் அப்படி போடு இது வேறயா,உன்னை பழி வாங்கும் சந்தர்ப்பத்திற்காக நானே காத்து கொண்டு இருக்கேன்.எனக்கு அல்வா மாதிரி விசயங்களை நீயே எடுத்து கொடுக்கிறாயே!

"பிளீஸ் மது என் பெரியம்மாகிட்ட மட்டும் சொல்ல வேண்டாம்"என்று ஸ்ருதி கெஞ்ச ,

உன் பெரியம்மாவுக்கு இந்த விசயம் தெரிய கூடாது என்றால் இப்போவே உன் புருஷன் கிட்ட என்னை கூட்டிட்டு போ.

சரி வாங்க ,தயக்கத்துடன் கீழே பார்க்கிங் செல்ல,போகும் வழியில்

ஸ்ருதி ,உன் புருஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது அது தெரியுமா ?அவ பேர் அனிதா .

தெரியும் மது ,அனிதா இந்த மருத்துவமனையில் தான் வேலை பார்த்தாள் என்று கூட தெரியும்.

அப்ப தெரிஞ்சு தான் அவன் கூட கள்ள தொடர்பு வைத்து இருக்கிறாயா? இந்த கேள்வி முள்ளை போல ஸ்ருதி நெஞ்சில் தைத்தது.

நான் கள்ள தொடர்பு எல்லாம் வைக்கல மது,எனக்கு முறைப்படி தான் அவர் தாலி கட்டி இருக்கார்.சொல்லும் போதே ஸ்ருதி குரலில் அழுகை வந்தது.

அதுவும் எதிர்பாராத விதமாக தான் எங்களுக்குள் கல்யாணம் நடந்து விட்டது.இருந்தாலும் அனிதா வரும் வரை இருவரும் காத்து இருப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இதை நான் நம்பனும்,இதுவரை அவன் உன்னை தொடாமலா இருந்து இருப்பான்.யார் கண்டது நீ இந்நேரம் அவன் வாரிசை கூட சுமந்து கொண்டு இருக்கலாம்.

இல்ல மது அவன் என்னை தொட்டு இருந்தாலும் நாங்க இன்னும் வரம்பு மீறவில்லை.வரம்பு மீற இருந்த சமயம் தான் என் பெரியப்பாவுக்கு accident என்று ஃபோன் வந்தது.அதனால் எங்களுக்குள் அந்த விசயம் நிகழவில்லை.

உன் பெரியப்பா என்று சொன்னதால் நான் இப்போ நம்பறேன்.ஆனால் இந்த உறவை இதோட நிப்பாட்டு.அனிதாவுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான்.

ஒருவேளை அனிதா வந்து எங்களை ஏற்றுக்கொண்டால் ?

செம்ம joke,அனிதா வந்து உன்னை ஏற்று கொள்வாள் என்ற நப்பாசை வேற இருக்கா உனக்கு.இரு இரு உங்க ரெண்டு பேருக்கு இன்று செமையா இருக்கு

கீழே வந்து டிரைவரை பார்த்து ஸ்ருதி ,"சார் வந்தாரா டிரைவர் "

என்னம்மா ,முதலில் நீங்க வந்து கேட்டுவிட்டு மேலே தேடி போனீங்க .அப்புறம் அவர் வந்து உங்களை தேடி மேலே போனார்.முதலில் உங்க கூட இருக்காங்களே , அவங்க கூட தான் அவர் மேலே போனார்.

ஸ்ருதி போனில் ஷெட்டியை அழைக்க , அங்கு பிரமாதமாக அவனுக்கு பல் பிடுங்கப்பட்டு கொண்டு இருந்தது .

சிஸ்டர் அந்த லெஃப்ட் கடைவாய் பல்லு சொத்தையாக இருக்கு பாருங்க ,அதை பிடுங்குங்க,

இருடா ,right side ஒரு சொத்தை பல் இருக்கு.அதை எடுத்துவிட்டு நான் left side வரேன்.இந்த பக்கமே புடுங்க வேண்டிய பல் நிறைய இருக்கு

அய்யோ விட்டால் மொத்த பல்லையும் பிடுங்கி என்னை பொக்கை வாய் ஆக்கி விடுவாங்க போல் இருக்கே என்று ஷெட்டி தவித்து கொண்டு இருக்க

சிஸ்டர் என்று குரல் கேட்டது.

சிஸ்டர் பில்லை கட்டி விட்டு வந்துட்டேன் என்று வேறொருவன் உள்ளே நுழைய

அப்போ இது யாரு ? சிஸ்டர் கேட்க

ம்ம்ம்ம்மம் வார்த்தை வராமல் ஷெட்டி கூக்குரல் இட

டேய் அவர் வாயில் இருந்து கிளிப் எடுடா ,சிஸ்டர் சொல்ல

ஏன் சிஸ்டர் யார் என்னவென்று எல்லாம் பார்ப்பது இல்லையா ? அப்படியே பல்லை பிடுங்கி விடுவதா ? அய்யோ பல் வலிக்குதே என்று கத்தினான்.

சாரி சார்,நான் சரியா பார்க்கல.

இப்படி தான் வர்றவங்க முகத்தை கூட பார்க்காமல் எல்லோருக்கும் வைத்தியம் பார்க்கறீங்களா சிஸ்டர் ? ஐயோ வலிக்குதே

சார் சும்மா என்னையே குறை சொல்லாதீங்க ,நான் வேலைக்கு புதுசு .நீங்க தான் என்னோட முதல் patient.ஏதோ ஒரு ஆர்வத்துல செய்து விட்டேன்.பல் தானே போன போகுது விடுங்க.

என்னது முதல் பேஷன்ட்டா ! உன்னை .. ஐயோ பல் வலிக்குதே.

சார் இந்தாங்க pain killer மாத்திரை இதை போட்டுங்க ,சரி ஆகிவிடும்.

வலியையும் கொடுத்து விட்டு, வலி மாத்திரை வேறயா ! மாத்திரை சரியான மாத்திரை தானா check பண்ணி கொடுங்க ,

அப்புறம் இந்தாங்க சார்,.

என்னதும்மா இது ?

பில் சார் ,வெற்றிகரமாக ரெண்டு பல் பிடுங்கி இருக்கேன்.அதுக்கான சர்வீஸ் சார்ஜ்

உங்க ரெண்டு பேரையும். அடிக்க ஷெட்டி கை ஓங்க ,ஒடுடா ஒடுடா ரெண்டு பேரும் பதறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

ஃபோன் எடுக்கல மது ,ஸ்ருதி சொல்ல

அவன் எப்படி எடுப்பான்.நீயும் நானும் ஒண்ணா இருந்ததை பார்த்து இருப்பான். அதனாலே கண்டிப்பாக எடுக்க மாட்டான்.எனக்கு வேற நேரம் ஆச்சு என் குழந்தைகள் வந்து விடுவார்கள்.இது இங்கே பேச வேண்டிய விசயம் கிடையாது.public place ஆக வேறு இருக்கு.

நீ என்ன பண்ணு,உன் புருஷனை கூட்டி கொண்டு சாயங்காலம் 4 மணிக்கு நாம படிச்ச காலேஜ் auditorium

வந்து விடு.செமஸ்டர் லீவு இருப்பதால் என்னை தவிர வேறு யாரும் அங்க இருக்க மாட்டாங்க.வாட்ச்மேன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.நம்ம பஞ்சாயத்தை அங்கே வச்சிக்கலாம்.எங்கே தொலைத்தோமோ அங்கே தானே தேடி எடுக்க முடியும்.ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்காதீங்க.அப்புறம் உன் பெரியம்மாகிட்ட உன் விசயம் ஒன்னு விடாம சொல்லி விடுவேன்.

இல்லை மது ,நான் கண்டிப்பாக கூட்டி கொண்டு வரேன்.

இன்னொரு முக்கியமான விசயம்.உன் புருஷன் கிட்ட என்னை தான் பார்க்க போகிறேன் என்று சொல்லாதே.அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி டிமிக்கி கொடுக்க பார்ப்பான்.எப்படியாவது நைசா பேசி கூட்டி வா.இன்னக்கி உனக்கும் எனக்கும் இருக்கிற பழைய கணக்கை எல்லாம் நேர் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு.

மது தான் ஸ்ருதியை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சந்தோஷமாக செல்ல,ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் நின்று கொண்டு இருந்தாள்..

என்னடா இது ,நம்ம நேரம் lift கூட வந்து தொலைய மாட்டேங்குது ,ஷெட்டி புலம்ப
சரி படிக்கட்டில் இறங்குவோம்.

லிஃப்ட்க்கு காத்து இருக்காமல் கீழே படிக்கட்டில் ஷெட்டி இறங்கவும்,அப்பொழுது மது லிஃப்ட் திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

படிக்கட்டில் ஷெட்டி கீழே இறங்கும் போது ,"சண்டாள சிறுக்கி ,பல்லையும் பிடுங்கி விட்டுட்டு காசையும் கேட்கிறா !"

அப்பொழுது காமெடி நடிகர் வையாபுரி போன்ற ஒரு நபர் அவள் காதலியிடம் போனில் பேசி கொண்டு இருந்தான்.

"கண்ணே இந்த உலகத்திலேயே பெரிய வலி எது தெரியுமா ? அது இந்த காதல் பிரிவினால் உண்டாகும் வலி தான்."

இதை கேட்ட ஷெட்டி ,என்னப்பா சொன்னே ?

ஒன்னும் இல்ல சார் ,காதல் பிரிவினால் வரும் வலி தான் இந்த உலகத்திலேயே பெரிய வலி என்று சொன்னேன்.

ஷெட்டி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவன் வாயை பிடித்து கொண்டு "அம்மா என் பல்லு" என்று அலறினான்.

" போ,இப்போ போய் பல்லை புடுங்கு.இப்போ தெரியுமடா எது கொடுமையான வலி எது என்று .பார்க்,பீச் தான் இவங்க தொல்லை என்று பார்த்தால் ஹாஸ்பிடல் கூட விட மாட்டாங்க போல் இருக்கு"

ஸ்ருதியும் மதுவும் ஒண்ணா இருக்காங்களா இல்லை ஸ்ருதி மட்டும் தனியாக இருக்காளா என்றே தெரியலையே .தனியா இருந்தா அப்பிட்டு ஆவோம்.ஒண்ணா இருந்தா இன்னொரு ரவுண்ட் repeat.இப்போ அப்பிட்டா,ரீப்பிட்டா என்றே தெரியலையே.என்ன நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு.இதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான் என்று கவுண்டமணி போல் புலம்பி மெதுவா எட்டி பார்த்தான்.

ஸ்ருதி தனியாக காரில் சாய்ந்து கொண்டு நகத்தை கடித்து கொண்டு நின்று இருப்பதை பார்த்து,சுற்றும் முற்றும் பார்க்க அப்பாடா மது இல்லை ,ஸ்ருதியை கூட்டிட்டு உடனே கிளம்ப வேண்டியது தான்.

வா ஸ்ருதி கிளம்பலாம்.ஷெட்டி அவசரப்படுத்த

எங்கே போய் இருந்தீங்க ,நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல,கன்னத்தில் ஏன் கை வைச்சு இருக்கீங்க .

ஸ்ருதி நீ முதலில் வண்டில ஏறு,அப்புறம் பேசிக்கலாம்.டிரைவர் நீ வண்டிய லீ மெரிடியன் ஓட்டல் சீக்கிரம் விடுப்பா .

கார் கிளம்ப, ஸ்ருதி அந்த தண்ணி பாட்டில் கொஞ்சம் எடுத்து கொடு.

வலி மாத்திரை போட்டு கொண்டு தண்ணி குடித்த ஷெட்டி,

அது ஒன்னும் இல்ல ஸ்ருதி , பல் ரெண்டு சொத்தையா இருந்தது .அதை போய் புடிங்கிட்டு வந்தேன்.அவ்வளவு தான்.அதான் ஃபோன் எடுக்கல.

"ஆமா ,நீங்க யாரோ ஒரு பொண்ணோட போனதாக டிரைவர் சொன்னாரே."வேண்டுமென்றே தெரியாதது போல் ஸ்ருதி கேட்க

அது இந்த ஹாஸ்பிடல் MD ,நான் தான் எனக்கு இந்த ஹாஸ்பிடல் MD தெரியும் ,அனிதா இங்கே தான் வேலை பார்த்தாள் என்று சொன்னேன் இல்ல.

சரி ,சாயங்காலம் என்னோட ப்ரெண்ட் பார்க்க மாதவரம் வரை போகனும்.

என்ன விளையாடிறீயா ஸ்ருதி,நைட் 9 மணிக்கு பிளைட் .நான் வேற என்னென்னவோ கற்பனை பண்ணி வைத்து இருந்தேன்.இன்னிக்கு இரவே எல்லாம் நடக்கும் என்று.ஆனா இப்போ இருக்கிற வலிக்கு எதுவும் முடியாது போல இருக்கே.ஹோட்டல் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு நாம உடனே ஏர்போர்ட் கிளம்பறோம். அவ்வளவு தான் நான் சொல்லிட்டேன்.

ஸ்ருதி கோபத்துடன் முகத்தை திருப்பி கொள்ள,

சரி சரி ,எத்தனை மணிக்கு போகனும்,

4 மணிக்கு , ஸ்ருதி சொல்ல

சரி,போனமோ பேசிட்டு உடனே கிளம்பனும் .

"ம்ம் ok" என்று சிரிப்புடன் ஸ்ருதி தலை அசைத்தாள்.

4 மணிக்கு ஸ்ருதி படித்த மாதவரம் காலேஜில் கார் நுழைய

இந்த காலேஜை எப்பவோ பார்த்து இருக்கோம்ல.ஆஹா இது மது படித்த காலேஜ் அல்லவா !ஏற்கனவே அவ காலேஜ் புரோகிராமில் இங்கு வந்து பார்த்து தானே அவள் மீது ஆசைப்பட்டேன்.அங்கே இங்கே என்று தப்பித்து கடைசியில் சிங்கத்தின் குகைக்குள்ளே நுழையற மாதிரி இல்ல இருக்கு.

"வாங்க உள்ளே போகலாம்" ,ஸ்ருதி அழைக்க

"ஹிஹி.இல்லை ஸ்ருதி, நீ போய்ட்டு வா .நான் இங்கேயே வெயிட் பண்றேன்."

என்ன நீங்க ஹாஸ்பிடல் உள்ளே கூப்பிட்டாலும் வர மாட்டேன்றீங்க ,இங்கே கூப்பிட்டாலும் வர மாடேன்றீங்க.உங்க நடவடிக்கையே சரி இல்லையே .ஸ்ருதி கூர்ந்து அவன் முகத்தை நோக்க,

ஐயோ சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டா இப்ப என்ன பண்றது,சரி சரி உன் ப்ரெண்ட் பேரு என்ன ?

"அனாமிகா"என்று ஸ்ருதி சொல்ல

ஷெட்டி முகம் மலர்ந்து "அப்ப போகலாம்?"உற்சாகமாய் முன்னே நடக்க ஸ்ருதி இதை உன்னிப்பாக கவனித்து கொண்டாள்.

Auditorium வந்து பார்க்க காலியாக இருந்தது.

எங்க யாரையுமே காணோம் ? ஷெட்டி கேட்க,

ஸ்ருதி மதுவிற்கு ஃபோன் செய்ய ,

நேராக பாரு ஸ்ருதி மது போனில் சொல்ல ,auditorium ஸ்கிரீன் விலகி மது வெளியே வந்ததை பார்த்ததும் ஷெட்டி முகம் வெளிறி போனது.

அடிப்பாவிங்களா ,ரெண்டு கள்ளச்சிகளும் சேர்ந்து நாடகம் ஆடி பொறி வைச்சு பிடிக்கிற மாதிரி என்னை ஒரேயடியாக அமுக்கிடீங்களே ! கட்டத்துரைக்கு இன்னிக்கு முழுக்க கட்டம் சரி இல்ல போல் இருக்கு என்று தன்னை தானே சொல்லி கொண்டு ,சரி சமாளிப்போம்.

இவ தான் உன் பிரென்ட் அனாமிகாவா!

ஆமாம் ,இவங்க பேரு மது .ஆனா நாங்க இவங்களை காலேஜில் அனாமிகா என்று தான் கூப்பிடுவோம்.

மது ஸ்ருதியை பார்த்து " யார் ஸ்ருதி இது,சார் பேய் அறைந்தது மாறி இருக்கார்."

இவர் என்னோட கணவர் மது ,

ஏன் சார் பேச மாட்டாரா ?

ஷெட்டி உடனே சுதாரித்து , " by the by i am shetty,shruthi husband"என்று கை குலுக்க நீட்ட,

நீட்டிய கையை முறுக்கி முதுகு பின்னே மடக்கி ,ஓங்கி முதுகில் ரெண்டு குத்து விட்டு " ஏண்டா நேராக முன்னாடி வந்து நின்ன பிறகும் கூடவா இன்னும் நடிக்கிற "

அய்யோ வலிக்குதுடி ,கையை விடு நான் எல்லா உண்மையையும் சொல்லி விடுகிறேன் .

பிறகு ஷெட்டி ,சென்னையில் ஸ்ருதியை சந்தித்தது முதல், புலிகிராமத்தில் எதிர்பாராத விதமாக கல்யாணம் நடந்தது, குலு மணாலி சென்றது வரை சொல்லி முடிக்க

சரி நடந்தது நடந்து விட்டது.இன்னும் உங்களுக்குள்ள மேட்டர் எதுவும் நடக்கல.இப்பவே நீ இவளை இங்கேயே விட்டு ஓடி போய்டு.இவளுக்கு ஆக வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.

இல்லை மது நான் இவரை விட்டு விலகமுடியாது .

ஏன் ?

என் உடம்பை முழுசா பார்த்தவன் இவன் மட்டும் தான். எங்களுக்குள் fuck மட்டுமே தான் நடக்க வில்லையே தவிர ,மற்றது எல்லாம் முடிந்து விட்டது.

ஸ்ருதி உனக்கு இவனை பற்றி நிறைய விசயம் தெரியாது.புரிஞ்சிக்க நீ இவன் கூட இருப்பதால் அப்புறம் நிறைய பிரச்சினை வரும்.
மது திரும்பி ஷெட்டியை பார்த்து
" டேய் என்னடா ஊமை மாதிரி இருக்கே.வாயை திறந்து பேசுடா"

"மது இது தான் உனக்கு limit,நீங்க அனிதாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம் அதுக்காக, என் புருஷனை வாடா போடா என்றெல்லாம் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்."

என்னது நான் வாடா போடா என்று சொல்ல கூடாதா ? இவனை அடிக்கிற உரிமை கூட எனக்கு இருக்குது.பளாரென்று முதல் அறை ஷெட்டி கன்னத்தில் விழுந்தது.அடுத்து இன்னொரு அறை விழ போன சமயம் ஸ்ருதி மதுவின் கையை பிடித்து பின்னே தள்ளினாள்.

கையை நீட்டி"உனக்கு அவ்வளவு தான் மரியாதை மது ,இது நான் ,இவர் ,அனிதா சம்பந்தப்பட்ட விசயம் .எங்களை கேள்வி கேட்பதற்கு அனிதாவை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை "

மது ஆவேசம் அடைந்து "இங்கே பாரு ஸ்ருதி,ஒழுங்கா இவன் வாழ்க்கையை விட்டு வெளியே போய்விடு.இல்ல உன்னோட ரகசியத்தை எல்லாம் உன் பெரியம்மா கிட்ட சொல்லி விடுவேன்."

எனக்கு நீ இந்த மாதிரி எல்லாம் நீ மிரட்டுவே என்று தெரியும் மது , எல்லாவற்றுக்கும் நானும் தயாராக வந்து இருக்கேன்.என் பெரியம்மாவை எப்படி சமாதனப்படுத்துவது என்று எனக்கு தெரியும்.

ஐயோ ஸ்ருதி,உன்கிட்ட எப்படி சொல்வது என்று எனக்கு தெரியல.
நான் நிச்சயமாக உன் பெரியம்மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் கிடையாது.சும்மா உன்னை மிரட்ட தான் அப்படி சொன்னேன்.நான் அந்த மாதிரி கேரக்டரும் கிடையாதுடி.நான் சொல்றத புரிஞ்சுக்கடி,இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று கீழே உட்கார்ந்து கன்னத்தில் அடித்து கொண்டு அழ தொடங்கினாள்.

ஸ்ருதிக்கு ஏன் அவள் அழுகிறாள் என்று புரியாமல் அவள் கையை பிடித்து "ஐயோ அழாதே மது ,உன் சிஸ்டர் மாதிரி நினைத்து எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு.அப்படி என்ன தான் என்கிட்ட சொல்ல முடியாத விசயம்"

மது அவனை பார்த்து கொண்டே"என்னோட உரலில் பலமுறை உலக்கையை விட்டு ஆட்டியவனே இவன் தாண்டி " ஷெட்டியை நோக்கி கை நீட்டினாள்.

"ங்ஙே .மது நீ கரெக்டா தான் சொன்னீயா இல்லை என் காதில் ஏதோ தப்பா வந்து விழுந்த மாதிரி.. தெரியுது "!

அடச்சீ போடி மண்டு,இதை விட உனக்கு எப்படி பச்சையாக சொல்றது என்றே தெரியல.​
Next page: Chapter 33
Previous page: Chapter 31