Chapter 68

நீண்ட நாட்களுக்குப் பின் அந்த அதிகாலை நேரத்து ஆவேச கலவிக்கு பின் மனமும் உடலும் அபரிதமான திருப்தியில் திளைக்க, அன்றைய காலை எங்கள் இருவருக்குமே ரம்மியமானதாக புலர, நான் மன்நிறைவோடு எழுந்து, மகிழ்ச்சியுடன் குளித்து உடலை குளிர வைத்து பின் காலை உணவை தயாரிக்க, நானும் கணவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம்.

காலை உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் என்னை கொஞ்சிக் கொண்டிருந்த என் கணவர் பயணக் களைப்பில் கண்கள் அசருவதாக சொல்லி உறங்க வேண்டும் என்று படுக்கைக்கு செல்ல, நான் 11 மணிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, அது வரை தூங்குங்க, நான் 10.30-க்கு எழுப்புறேன் என்றேன். சரி என்று சொல்லி விட்டு படுத்தவர் நான் சொன்ன நேரத்தில் எழுப்பிய போது எந்த அசைவும் காட்டாமல் கிடந்தார். தோள்களை பிடித்து உலுக்கியும், கன்னத்தில் தட்டியும் எழுந்திரிக்காமல் அடம் பிடிக்க நான் மெல்ல மெல்ல கோபத்தில் விழுந்து கத்த துவங்கினேன். அதற்கும் மசியாமல், கண்களை லேசாக திறந்து பார்த்து விட்டு, ரொம்ப டயர்டா இருக்குடி, இப்ப போனாலும் என்னாலே அவங்க சொல்ற வேலையெல்லாம் செய்ய முடியாது என்றார்.

வேணும்ன்னே பண்றீங்களா? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க. நான் ஹெல்ப் பண்றேன். எல்லாம் முடியும் வாங்க.

நீ ஹெல்ப் பண்ணாலும் இப்போ முடியாது. காலைலேயே எல்லாம் முடிஞ்சு போச்சு...

என்ன முடிஞ்சு போச்சு?

அதான் வந்தவுடனே ஒரு ஷாட் போட்டேனே. அதிலே ஸ்டாக் காலியாகிருக்கும்...

கணவரின் பதில் எரிச்சலை கிளப்ப...

லாவண்யான்னா மூணு டைம் செய்ற வரைக்கும் ஸ்டாக் இருக்குமா?

ஐயோ... அதை ஏண்டி சொல்லிக் காட்டுறே. உன் கிட்டே சொன்னது தப்பா போச்சு...

ஆமா எல்லாமே தப்பா தான் போகுது.

ப்ளீஸ்... இன்னைக்கு விட்டுடும்மா. ட்ராவல் பண்ணி வந்திருக்கேன். அப்புறம் உன்னை... தூக்கமா வருதுடி...

இப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் தொடவே விட்டிருக்க மாட்டேன்.

....

எந்திரிக்க முடியுமா? முடியாதா?

....

கொஞ்ச நேரம் கோபத்தில் கத்திக் கொண்டிருந்து விட்டு சலித்துப் போய் ஹாலுக்கு வந்து கோபத்தோடு அமர்ந்துக் கொண்டேன்.

மதியம் ஒரு மணியை நெருங்கிய போது என் கணவர் எழுந்து ஹாலுக்கு வந்தார். என்னிடம் வந்து அமர, நான் எந்த அசைவும் இல்லாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கோபமா அம்மு...?

...

ஸாரி...

....

பசிக்குதுடி...

திரும்பி கோபமாக முறைத்து விட்டு மீண்டும் டிவி பார்க்க துவங்கினேன்.

என்ன சமைச்சிருக்கே?

...

நான் வெஜ் எடுத்திருக்கலாம். தூங்கிட்டேன்.

...

சமைக்கலையா?

...

என்ன அம்மு இவ்ளோ கோபம்? இந்த வாரம் இல்லைன்னா அடுத்த வாரம் போனா ஆகாதா? எதுக்காக இவ்ளோ சீரியஸா ரியாக்ட் பண்றே...

...

அதான் சொல்றேனில்லே... அடுத்த வாரம் கண்டிப்பா போலாம் அம்மு.

அடக்க முடியாத கோபத்தோடு, உங்களுக்கு பசிச்சா, என்ன வேணும்னாலும் ப்ராமிஸ் பண்ணுவீங்க. உங்க பசி தீர்ந்ததும், எல்லா சத்தியமும் காத்துலே பறந்துடும். நான் தான் இளிச்சவாயி...

அப்படி இல்லைடி... நைட் ட்ராவல் பண்ணின களைப்பு. அதில்லாம வந்ததும் உன்னை வேற....

திரும்பி முறைத்தேன்.

அவர் சிரித்து விட்டு காதருகில் வந்து இரண்டு டைம் நல்லா ஓத்திருக்கேன். அந்த டயர்ட் இருக்காதா? என்றதும் கோபம் போன இடம் தெரியாமல், ஆனால் பொய் கோபத்தோடு, அவர் கன்னத்திலும் முதுகிலும் செல்லமாக படபடவென்று கைகளால் மாறி மாறி அடித்து விட்டு உனக்கு வெட்கமே இல்லையாடா எரும மாடு. எவ்ளோ கஷ்டப்படுறேன். நமக்கு ஒரு குழந்தை இருந்தா வாழ்க்கை எவ்ளோ சந்தோஷமா மாறும்ன்னு தானே இவ்ளோ கெஞ்சுறேன். ஏண்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்ள, என்னை இழுத்து தழுவிக் கொண்ட என் கணவர் ஒன்றும் சொல்லாமல் அப்படியே என்னை அணைப்பிலேயே வைத்திருக்க, கொஞ்ச நேரம் அவர் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டிருந்து விட்டு மெல்ல விலகி அமர்ந்து அவரை முறைத்துப் பார்க்க...

இந்த டைம் நான் சொன்ன சொல்லை காப்பாத்துறேன். அடுத்த வாரம் ஞாயித்துக் கிழமை நாம ஹாஸ்பிடல் போறோம். நான் அங்கே போய் கையடிக்கிறேன். கஞ்சியை எடுக்கிறேன். டெஸ்ட் பண்றோம். குழந்தை பெத்துக்குறோம் என்று சொல்ல...

ச்சீ... அசிங்கம் புடிச்சவனே.... எல்லா நேரத்திலேயும் இதே மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே. வெட்கம் கெட்ட மனுசா... உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா...

இல்லைடி... உன் மூடை மாத்த தான் அப்படி சொன்னேன். இனி நானும் கோ ஆபரேட் பண்றேன். சரியா...

ம்...

இன்னைக்கு மத்தியானம் பட்டினிதானா? சமைக்கலை போல இருக்கே....

ஹாஃப் அன் ஹவர் வெய்ட் பண்ணுங்க. ரெடி பண்ணிடறேன்.

ஆர்டர் பண்ணிடலாமா?

வேண்டாம். வெளி சாப்பாடு உடம்புக்கு ஆகாது.

இதுலே உள் குத்து எதாவது இருக்கா செல்லமே.

இருக்குடா என் புருஷா. இனி எல்லாமே உள் குத்து மட்டும் தான். வெளி குத்துக்கெல்லாம் ஆசைப்படாதே. அறுத்துருவேன்.

அம்மாடியோவ்... உத்தரவு மஹாராணி...

அந்த ஞாயிற்றுக் கிழமை கணவருடன் பகல் நேர கூடல் மகிழ்ச்சியாய் இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு செல்ல அவர் ஒத்துழைக்காதது மனதின் ஓரத்தில் கொஞ்சம் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. மதிய உணவுக்குப் பின் இருவரும் கொஞ்ச நேரம் டிவி பார்த்தோம். பிறகு சிறிது நேரம் படுக்கலாம் என்று இருவரும் படுக்கையறைக்கு சென்றோம். ஆனால் தூக்கம் வரவில்லை. நான் என் கணவரிடம் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி பேச ஆரம்பிக்க, அவர் கொஞ்சம் சலிப்புடன் அதான் அடுத்த வாரம் கண்டிப்பா ஹாஸ்பிடல் வரேன்னு சொல்லிட்டேனில்லே, எதுக்கு அதையே திரும்ப திரும்ப பேசுறே என்றார். கோபமாக வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தேன். அவர் என்னை சமாதானப்படுத்த என்னென்னவோ சொல்ல ஆரம்பித்தார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது காலிங் பெல் ஒலிக்க, என் கணவர் எழுந்து சென்று கதவை திறந்தார். அதை தொடர்ந்து அவருடைய உற்சாக குரல் அம்மு லாவண்யா மிஸ் வந்திருக்காங்க என்று கேட்க...

மனதின் ஓரத்தில் ஒரு எரிச்சல் உண்டானது. எதற்காக இப்போது வீடு தேடி வந்திருக்கிறாள். இவரை மெல்ல மெல்ல அவள் மேல் இருக்கும் மயக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இவள் இப்படி அடிக்கடி வீட்டுக்கு வந்தால் என் திட்டங்கள் எல்லாம் உருப்படாமல் தான் போக போகிறது என்று ஒரு கோபம் மனதில் உதிக்க, அவளோ, என் கணவரோ என்ன நினைத்தாலும் சரி அவளிடம் இப்படி அடிக்கடி வீட்டுக்கு வராதே, ஏன் இன்னும் கடுமையாக இனி என் வீட்டுக்கு வராதே என்று கூட சொல்லி விடுவது என்று நினைத்துக் கொண்டே எழுந்து வாசலை நோக்கி ஒரு முடிவோடு சென்றேன்.

கோபத்துடன் சென்றவள் வாசலில் கண்ட காட்சியால் அப்படியே அதிர்ந்து போய் நின்றேன். அங்கே லாவண்யாவுடன் ஒரு இளைஞனும் நின்றிருந்தான். அந்த இளைஞன் நான் நேற்று லாவண்யாவின் வீட்டில் திருட்டுத் தனமாக நுழைந்து பார்த்த போது அவளை புணர்ந்துக் கொண்டிருந்த இளைஞன்.

சில நொடிகள் எனக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் எதுவும் பேசவும் முடியாமல் சிலை போல நான் நின்றிருந்தேன்.

என் திகைப்பை அதிகமாக்குவது போல இருந்தது லாவண்யாவின் பேச்சு.

மிஸ்... இது குமார். என் ஹஸ்பண்ட் என்று லாவண்யா அவனை எனக்கு அறிமுகப்படுத்த எனக்கு தலை கிறுகிறுத்தது.

கணவனா? என்ன சொல்கிறாள் இவள்? கணவன் என்றால் எதற்காக காரில் ஒளிந்துக் கொண்டு செல்ல வேண்டும்? வெளிநாட்டில் தானே இருந்தான்? எப்போது வந்தான்? இவள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்ன பித்தலாட்டம் இது? எதாவது கேம் விளையாடுகிறாளா? இவள் மட்டுமா? என் கணவரும் உடந்தையா? என்ன இவர்கள் திட்டம் என்று கேள்விகள் ஓய்வே இல்லாத அலைகள் போல உள்ளத்தில் தொடர்ந்து தாக்க, நான் பேச வாய் எழாமல் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

லாவண்யாவும் அவள் கணவனும் மூன்று மணி நேரம் எங்களுடன் இருந்தார்கள். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. என் கணவர் இன்னும் லாவண்யாவிடம் வழிவது போல தெரிய அது ஒரு பக்கம் எரிச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. அதை விட பெரிய எரிச்சல் லாவண்யாவின் கணவன் பார்த்த பார்வை. அவன் என்னை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான்.

லாவண்யாவின் கணவன் எதோ சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்திருந்தான். அதை பரிசாக கொடுக்க, நானும் நாகரீகம் கருதி அவற்றை சிரித்த படி வாங்கிக் கொண்டேன். மாலை நானும் லாவண்யாவும் சேர்ந்து ஸ்நாக்ஸ் தயாரித்து டீ வைக்க, எல்லோரும் பேசிக் கொண்டே அவற்றை சாப்பிட்டோம். லாவண்யாவிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் இது சரியான நேரமில்லை என்பதால் ஒன்றும் கேட்கவில்லை. இருவரும் மாலை ஆறு மணிக்கு பை சொல்லி விட்டு கிளம்பி சென்றார்கள்.

அன்று இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. லாவண்யாவின் கணவன் வந்திருப்பது என் வாழ்க்கையில் எதாவது குழப்பங்களை உண்டாக்குமா? என்று ஒரு பக்கம் அச்சம் மனதை தின்றுக் கொண்டே இருந்தது. அந்த இளைஞனின் பார்வை சரியில்லாத மாதிரி தெரிந்தது. அவன் பார்வையில் ஒரு கள்ளத்தனமும், குறும்பும் இருந்தது. அவன் பயப்படாமல் என் உடலை கண்களால் மேய்ந்தான் என்று நினைக்கிறேன். அவன் பார்வை என் உடலில் சென்ற இடங்கள் தவறாக இருந்தன.

விருந்தாளியாக வந்த இடத்தில், மனைவியுடன் வேலை செய்யும் ஒரு டீச்சரை, அவளுடைய கணவன் அருகில் இருக்கும் போதே, இப்படி கண்களால் கற்பழிக்கிறான் என்றால் அந்த தைரியத்தை அவனுக்கு கொடுத்தது எது என்று என் மனம் யோசித்தது. எங்களுக்குள், எனக்கும், லாவண்யாவுக்கும். என் கணவருக்கும் இடையில் நடந்த சம்பவங்களை ஒரு வேளை லாவண்யா அவனிடம் சொல்லியிருப்பாளோ? ஏன் அதற்கும் மேல் என் மாணவர்களுடன் நான் நடத்திய காம களியாட்டங்களை கூட சொல்லியிருக்கலாம், குப்தா விசயத்தையும் கூட சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் என்னை பற்றி என்ன மதிப்பீடு செய்திருப்பான். கண்டிப்பாக நல்ல விதமாக இருக்காது. அவன் பார்வையே அதை காட்டி விட்டது.

இந்த லாவண்யா சனியனால் என் வாழ்க்கை மீண்டும் மீண்டும் சிக்கல்களில் சிக்குவது போல தோன்றியது. கையாலாகாத கோபம் அவள் மேல் எழுந்தாலும் என்னமோ தெரியவில்லை, அவள் மேல் எப்போதும் மனதின் ஓரத்தில் ஒரு கனிவான அன்பு இருப்பதையும் என்னால் உணர முடிந்தது. அவள் மேல் ஒரு அளவுக்கு மேல் என்னால் கோபப்பட முடியவில்லை.

மூன்று மாணவர்களின் இளமை துடிப்பு நிரம்பிய காம களியாட்டம், குப்தாவின் பொறுமையான, ரசனையான காமம் இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து மறக்க துணிந்து விட்ட என்னால் லாவண்யாவின் அன்பை மட்டும் அப்படி தூக்கி எறிய முடியவில்லை. இது எதோ அவளுடன் வைத்துக் கொண்ட ஓரின சேர்க்கையால் உண்டான மயக்கமாகவும் தெரியவில்லை. ஒரு காதல் போல லாவண்யாவின் நட்பு என்னை வியாபித்திருந்தது. அதே சமயம் இந்த சனியனை என் வாழ்க்கையில் குறுக்கிடாமல் வைத்திருப்பது எப்படி என்றும் மனம் குழம்பியது.

கட்டுப்பாடுகளே இல்லாமல் மனம் போன படி காமத்தில் விழுந்து திரிந்த போது உண்டாகாத குழப்பங்களும் சிக்கல்களும், அனைத்தையும் மறந்து கட்டுப்பாடாக கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ முடிவெடுத்த பின் ஒன்றுக்கு பின் ஒன்றாக என் வாழ்க்கையில் விளையாடுவதை கண்டு மனம் மேலும் மேலும் குழம்ப இந்த கவலை எதுவுமே இல்லாதவராக என் கணவரும் என்னிடம் அதிகம் பேசாமலும், என்னை தொட முயற்சிக்காமலும் படுத்து உறங்கி விட, ஒரு வேளை லாவண்யாவை பார்த்ததால் அவளை பற்றி கனவு காண்கிறாரோ என்று மனம் கன்னா பின்னாவென்று யோசித்தது. எப்படியோ ஒரு வழியாக உறங்கி விட்டேன்.

திங்கள் காலை வழக்கம் போல ஸ்கூல் கிளம்பினேன். இந்த வாரத்துடன் வகுப்புகள் முடிவடைகின்றன. இனி மாணவர்களுக்கு பாடம் எடுக்கிற வேலை இருக்காது. பள்ளி நிர்வாகம் கொடுக்கிற ஆபிஸ் வேலைகள் மட்டும் பார்த்தால் போதும். ஆனால் தினமும் ஸ்கூலுக்கு சென்றாக வேண்டும். எப்படியோ அந்த மூன்று மாணவர்கள் இனி என் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டார்கள் என்று தோன்ற ஒரு நிம்மதி மனதோரத்தில்.

எல்லா வகுப்பிலும் மாணவர்களை படிக்க சொல்லி விட்டு சும்மா அவர்களை கண்காணிக்கும் வேலைகள் தான் நடந்துக் கொண்டிருந்தன. மதிய உணவின் போது டீச்சர்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, நான் லாவண்யாவிடம், கார்லேயா வந்தே என்று கேட்டேன்.

ம்...

ஈவனிங் உன் கூட கொஞ்சம் பேசனும்...

வீட்டுக்கு வரியா?

லாவண்யா அப்படி கேட்டதும் அதுவரை உணவில் கவனமாக தலையை குனிந்து எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் தலை நிமிர்ந்து அவள் கண்களை ஊடுருவினேன். அவள் இயல்பாக இருந்தாள். என் மனதில் தான் இவள் வீட்டுக்கு வரியா என்று கேட்டது எதோ உள் நோக்கத்துடன் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் லாவண்யா எந்த கள்ளத்தனமும் இல்லாத புன்சிரிப்புடன் என்னை பார்த்துக் கொண்டு உணவை அவளுடைய அழகான செவ்விதழ்களை அசைத்து மென்றுக் கொண்டிருந்தாள். காரணமேயில்லாத என் சந்தேகங்களை ஓரம் தள்ளி விட்டு நானும் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு அவள் கேள்விக்கு பதில் சொல்ல துவங்கினேன்.

இல்லை... வீட்டுக்கு வேண்டாம். நானும் உன் கூட கார்லே வரேன். வழிலே எங்கேயாவது தனியா ஓரமா நிறுத்தி பேசலாம். எனக்கு நிறைய பேசனும் எனக்கு. பேசிட்டு என்னை எங்க தெரு எண்டரன்ஸ்லே ட்ராப் பண்ணிட்டு நீ வீட்டுக்கு போய்க்கோ.

அந்த கடைசி வரிகளை சொல்லும் போது ஏனோ என்னால் லாவண்யாவின் முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை. என் விழிகளை தாழ்த்திக் கொண்டு உணவில் கவனமாக இருப்பது போல நடித்தேன்.

ஆனால் நான் சொன்னதற்கு நீண்ட நேரமாக லாவண்யாவிடமிருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல விழிகளை உயர்த்திய போது இந்த முறை லாவண்யாவின் விழிகள் என்னை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தன. அவள் செவ்விதழ்களில் தவழ்ந்துக் கொண்டிருந்த அந்த இனிக்கும் புன்னகை இப்போது ஓய்வெடுக்க போயிருந்தது. ஆனால் அந்த அழகு முகத்தின் கனிவு கண்களில் இன்னும் தேங்கியிருந்தது. விழிகளின் வழியே என் எண்ணங்களை படிக்க முயல்வது போல இருந்தது அந்த ராட்சசியின் பார்வை.

அவள் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டேன் நான். என்னமோ தெரியவில்லை, என்னிடம் பாடம் படிக்க வந்த மூன்று மாணவர்களின் இளமைத் துள்ளல் நிரம்பிய காம வெறியாட்டத்தையும், குப்தாவுடன் வைத்துக் கொண்ட மென் காதல் கலந்த ரசனையான காம சஞ்சாரங்களையும் மிக எளிமையாக ஒதுக்கி தள்ளி விட்டு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர திட்டமிட்டுக் கொண்டிருந்த என்னால் லாவண்யாவை அப்படி எளிதாக தூக்கி எறிந்து விட முடியாமல் தவித்தது.

அவளுடன் கலந்திருந்த அந்த ஓரின சேர்க்கை அனுபவங்கள் ஒன்று மட்டுமே இதற்கு காரணமாயிருக்காது என்று தோன்றியது. காமத்தையும் கடந்த ஒரு காதல் இது என்று தோன்றியது. உடல் பசிக்காக என் மாணவர்களுடனும் என் பள்ளி நிர்வாகியுடனும் படுத்து புரண்ட போதெல்லாம் ஏற்படாத சிக்கல்களும் குழப்பங்களும் இனி இதெல்லாம் வேண்டாம் என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்த பின் நாளுக்கொரு ப்ரசனையும் நிமிடத்திற்கொரு குழப்பமுமாக என்னை அலைகழிப்பதால் சோர்ந்து நம்பிக்கை இழந்து விட்ட எனக்கு சாய்ந்து அழவும் ஆறுதல் தேடவும் அன்பு காட்டவும் செவி சாய்த்து கேட்கவும் ஒரு நம்பிக்கையான அன்பான தோள் வேண்டும் என்று தேடியது என் மனம்.

என் கணவரிடம் நான் என் மன குழப்பங்களை சொல்ல முடியாது. என் அளவு அவர் உணர்வு பூர்வமாக சிந்திப்பவரல்ல. டேக் இட் ஈஸி என்ற முறையில் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை கொண்டவர் அவர். என் சஞ்சலங்களை அவரிடம் சொன்னால், நானே உன்னை எதுவும் சொல்லலை, அப்புறம் ஏன் இப்படி தேவையில்லாம குழம்புறே என்று சிம்பிளாக சொல்லி விட்டு போய் விடுவார்.

எனக்கு இப்போதிருக்கும் ஒரே நம்பிக்கையான துணையும் நட்பும் இந்த குட்டி பிசாசு லாவண்யா மட்டும் தான். என்றும் அவள் தான் என் நம்பிக்கையான தோழி. நான் பலவீனமாக இருந்த நாட்களில் கூட என்னை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் ஒவ்வொன்றையும் என் விருப்பத்தை கேட்டு தான் செய்தாள். அவளிடம் தான் நான் தோள் சாய்ந்து அழ முடியும்.

அதே சமயம் இந்த சனியனே என் வாழ்க்கையில் மீண்டும் குழப்பங்களை கொண்டு வந்து விட்டு விடுவாளோ என்று அவள் மேல் கோபமாகவும் இருக்க தான் செய்தது. அவளிடம் எப்படி இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே, என் கணவரை சந்திக்க முயற்சிக்காதே, அவருடன் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளாதே என்று சொல்வது என்று புரியவில்லை. அவள் மனம் புண்படாமல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை.

இந்த சனியனை வெறுக்கவும் முடியவில்லை. ஒதுக்கவும் மனமில்லை. என்ன இருந்தாலும் அவள் என் உயிர் தோழி. அவள் என் கணவருக்கு இணையான இடத்தில் என் மனதில் இருக்கிறாள். எப்படி தான் சமாளிப்பது இந்த குழப்பங்களை என்று ஏதேதோ சிந்தனைகளில் நான் கையில் எடுத்த உணவை வாய்க்கு கூட கொண்டு போகாமல் நீண்ட சிந்தனையில் இருந்தேன்.

யாரோ ஒரு டீச்சர் டிபன் பாக்ஸை கை தவறி கீழே போட்டதால் உண்டான ஓசையில் திடுகிட்டு சிந்தனைகளிலிருந்து விடுபட்ட நான் தலையை நிமிர்த்தி லாவண்யாவை பார்த்த போது அவள் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு மெல்ல அதிர்ந்து அவளை பார்த்தேன்.

லாவண்யாவின் அந்த மதிவதனத்தில் மீண்டும் காதல் ததும்பும் அந்த புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது.

என்னை புன்னகை மாறா முகத்தோடு பார்த்தவள் மெல்லிய குரலில் அழைத்தாள்.

அம்மு....

அவள் அம்மு என்று சொன்னதும் என் மனம் நெகிழ நான் அதே மெல்லிய குரலில்...

ம்ம்ம்.... என்றேன்.

லாவண்யா மற்றவருக்கு கேட்காத குரலில் பேச துவங்கினாள்.

பயப்படாதே அம்மு. உனக்கு கஷ்டத்தையோ சிக்கலையோ குடுக்கிற எந்த விசயத்தையும் நான் செய்ய மாட்டேன். உன்னை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவும் மாட்டேன்.

அங்கே மற்ற டீச்சர்களும் இல்லாமல் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக வாய் விட்டு அழுதிருப்பேன். என் மனதை அப்படியே படித்தவள் போல லாவண்யா அந்த வார்த்தைகளை சொன்னது ஒரு விதத்தில் என் மனதில் இருந்த சந்தேகங்களை அவள் கண்டு பிடித்து விட்டாளே என்று கூச்சமாக இருந்தாலும் எனக்கு எந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்குமோ அந்த வார்த்தைகளை அவள் சொன்னதால் இன்னொரு புறம் நிம்மதியாகவும் இருந்தது எனக்கு.

அதன் பின் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாமல் எழுந்து அவரவர் வகுப்பறைகளுக்கு சென்றோம். மாலை வாசலில் லாவண்யாவின் கார் எனக்காக காத்திருக்க, நான் ஓடி போய் ஏறிக் கொண்டேன். லாவண்யா காரை நகர்த்தினாள். சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாணவர்களின் கூட்டங்களை கடந்த பின் அவளே பேச்சையும் ஆரம்பித்தாள்.

என்ன அம்மு உன் ப்ரசனை? ஏன் இப்பெல்லாம் ரொம்ப டல்லாவே இருக்கே?

லாவண்யாவுக்கும் என் கணவருக்குமான உறவு பற்றிய என் சந்தேகங்களையோ, லாவண்யாவின் கணவனின் பார்வை என் உடலில் மேய்ந்ததை பற்றியோ பட்டென்று கேட்க மனமில்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசையையும், அதற்கு கணவர் ஒத்துழைக்காததையும் மட்டும் முதலில் அவளிடம் சொன்னேன்.

ஏன் இந்த கிழவன் இப்படி அழிச்சாட்டியம் பண்றான் என்றாள் லாவண்யா.

எனக்கு சுரீர் என்று கோபம் வர, அவரை கிழவன், அவன், இவனெல்லாம் சொல்லாதே லாவண்யா ப்ளீஸ் என்றேன்.

உடனே லாவண்யா சிரித்து விட்டு, ஓஓஓஓஓஓ.... ஸாரி.... ஸாரி... அம்மு செல்லம், எப்பவும் புருசனை விட்டுக் குடுக்க மாட்டீங்கல்லே. உண்மையிலே அவர் கிழவனில்லை. குமரன் தான். என்ன ஆட்டம் போடுறார் என்று சொல்லி விட்டு வாய் தவறி உளறி விட்டதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள்.

உண்மையில் லாவண்யா என் கணவரை கிழவன் என்றது கேலியாக சொன்னதும், அவன் இவன் என்று ஒருமையில் பேசியதும், மரியாதை குறைவாக பேசுகிறாளே என்ற விதத்தில் எனக்கு கோபத்தை வர வைக்கவில்லை. அவள் அப்படி உரிமையுடன் சொன்னது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை காட்டியதால் உண்டான கடுப்பில் தான் நான் கோபப்படுகிறேன் என்பது இந்த சிறுக்கிக்கு புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

அவள் குமரன் என்றதும் மனதுக்குள் லாவண்யாவின் கணவன் பெயர் குமார் தானே என்று தோன்ற, அவனைப் பற்றி, அவன் பார்வையை பற்றி லாவண்யாவிடம் சொல்லலாமா என்று யோசித்து விட்டு பின் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தவள், ஒண்ணும் சங்கடப்படாதே, அந்த ஆள் நீங்க இரண்டு பேரும் போட்ட ஆட்டத்தை கதையாவே எழுதி எனக்கு படிக்க சொல்லிட்டான் என்றேன்.

கதையா? என்ன கதை என்று லாவண்யா புரியாமல் கேட்டபடி சாலையோரம் இருந்த மரங்களுக்கு நடுவில் காரை செலுத்தி கொஞ்சம் மறைவாக நிறுத்தி கார் கண்ணாடிகளை முழுமையாக ஏற்றி விட்டாள்.

என் கணவர் லாவண்யாவுடன் அடித்த கூத்தை ஒன்று விடாமல் வர்ணித்து கதை போல் எழுதி அதை வேர்ட் டாக்குமெண்டாக எனக்கே அனுப்பி படிக்க சொன்ன சாகசத்தை லாவண்யாவுக்கு சுருக்கமாக சொல்ல...

அவள் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கடுப்புமாக, அடப் பிக்காளிப் பயலே... அந்த கிழவனுக்கு... ஸாரி... ஸாரி... அந்த குமரனுக்கு அறிவு கிறிவு கெட்டு போச்சா. இப்படி கட்டின பொண்டாட்டி கிட்டே அடுத்தவ கூட அனுபவிச்சதை கதையா சொல்லிருக்கான்... ஸாரி... கார்.. என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

நானும் சிரித்து விட்டு, லாவ்... நான் கொஞ்சம் மனசு விட்டு பேச நினைக்கிறேன். நான் பேச நினைக்கிற விசயங்கள்லே நீயும் சம்பந்தப்பட்டிருக்கே. நான் சொல்லப் போற விசயங்கள்லே உன்னை பத்தி எதாவது தவறா சொன்னா கூட நீ அதை சரியான விதத்திலே புரிஞ்சுக்குவேன்னு நம்பிக்கையோட பேச போறேன், என்றேன்.

அம்மு... நான் உன் ஹஸ்பண்ட் கூட நீ இல்லாதப்ப ஒரு நைட் ஸ்பெண்ட் பண்ணினதுலே உனக்கு எதாவது வருத்தமா? நான் அதை செஞ்சதிலே என் விருப்பமும் இருந்தாலும், உன்னோட, உன் கணவரோட நல்லதுக்குகாகவும் தான் அப்படி நடந்துக்கிட்டேன். அந்த நைட் மட்டும் அவர் தனியா இருந்திருந்தா, கண்டிப்பா அவர் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும். அதுக்கப்புறம் அவர் உன் கிட்டே எப்படி வேணா நடந்திட்டிருக்கலாம். அதையெல்லாம் யோசிச்சு தான் அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்.

எனக்கு புரியுதுடி. என் ப்ரசனையே இப்ப எது நல்லது? எது கெட்டதுன்னு தெரியாதது தான். நீ அன்னைக்கு அவரோட இருந்த நேரத்திலே தான் அவர் ஒரு முழுமையான ஆணா தன்னை உணர ஆரம்பிச்சு இப்ப தன்னம்பிக்கையோட இருக்கார். அதே சமயம் உன்னை ரொம்ப உயர்வாகவும், உயிராகவும் நினைக்கிறார். என்னை பொருத்த வரை நான் என் ஸ்டூடண்ட்ஸ் கூடவும், குப்தா கூடவும் படுத்ததை எல்லாம் தவறா நினைக்கலை. அந்த நேரத்திலே இருந்த சூழ்நிலைகள், உணர்ச்சிகள் என்னை அப்படி நடக்க வைச்சிருச்சு. ஒத்துக்க கஷ்டமா இருந்தாலும் அதுக்கு ஒரு விதத்திலே என் கணவரும் தான் காரணம். எல்லாமே அவரோட சம்மதத்தோட, அவரோட விருப்பத்துக்காக தான் நடந்தது. பின்னாடி நானும் அதுலே விழுந்துட்டேன். எதையும் என் கணவருக்கு தெரியாம நான் செய்யலை. அதனாலே நான் செஞ்ச எந்த காரியங்கள் பத்தியும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதையெல்லாம் தவறுன்னும் நினைக்கலை. அதே சமயம் இந்த வழிலே தொடர்ந்து போக விரும்பலை. இதோட நிறுத்திக்க விரும்புறேன். போதும்ன்னு நினைக்கிறேன். இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு? எப்படியும் எல்லோருக்கும் வயசு கூடும். அழகும் இளமையும் உடம்பை விட்டு ஓடும். அப்ப இப்ப என்னை அனுபவிச்சங்க யாராவது என் கூட நிப்பாங்களா? என் கணவர் நிற்பார்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுக்கு பிரதிபலனா இனியாவது அவருக்கு மட்டும் சொந்தமானவளா வாழ விரும்புறேன். அவருக்கு தேவையானதை குடுக்க நினைக்கிறேன். அதுக்கு தான் ஒரு குழந்தையும் அவர் மூலமா பெத்துக்கனும்ன்னு நினைக்கிறேன்.

நான் பேசி முடித்து விட்டு கொஞ்சம் நிதானிக்க, லாவண்யா என்னை கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகள் கழித்து எனக்கு பதில் சொல்ல துவங்கினாள்.

நீ சொல்றதை நான் அப்படியே ஏத்துக்கிறேன் அம்மு. கிட்டத்தட்ட நானும் கூட அந்த மாதிரி ஒரு முடிவுக்கு தான் வந்திருக்கேன். ஒண்ணு ரெண்டுன்னு ஆரம்பிச்சு, வரம்பே இல்லாம, வரைமுறையே இல்லாம போய் கிட்டே இருந்தா, ஒரு கட்டத்திலே நாம இன்பம்ன்னு நினைச்சதெல்லாம் தாங்க முடியாத துன்பமா மாறலாம். கற்பு ஒழுக்கம்ன்னு புருசனை தவிர வேற ஆம்பிளையை நிமிர்ந்து கூட பார்க்காத பொண்ணுங்களையே இந்த ஆம்பிளைங்க பாடா படுத்துவானுங்க. நாம எந்த கட்டுப்பாடும் இல்லாம இப்படி திரிஞ்சா இன்னைக்கு இதை ரசிக்கிற நம்ம புருசனுங்க, நாளைக்கு தேவுடியா தானடி நீன்னு மாறினாலும் மாறலாம். இப்பவும் அந்த வாய்ப்பு இருக்குன்னாலும், இனியாவது இதையெல்லாம் நிறுத்திட்டு புருசனுங்களுக்கு மட்டும்ன்னு வாழ்ந்தாலாவது அவனுங்களும் நம்மை கொஞ்சமாவது மதிக்க வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் நானும் யோசிச்சேன். அனுபவிச்சாச்சு. இதிலே திருப்திங்கறது கிடையவே கிடையாதுன்னு போக போக தான் புரிஞ்சது. நாமளா நம்ம மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்திக்கிட்டாலொழிய இந்த போதையிலே இருந்து மீள முடியாதுன்னு தெரியுது. கிடைச்ச வரை அனுபவிச்சிட்டோம். இதிலே பத்து சதவிகிதம் கூட அனுபவிக்காதவங்க, ஒருத்தன் ஒருத்தின்னு வாழறவங்க சந்தோஷமா இல்லையா? இது மட்டும் தான் சந்தோஷமா? எல்லாமே நானும் யோசிச்சிட்டேன். கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு நினைக்கிறேன். நடுவிலே உன்னை மாதிரியே எனக்கும் ஒரு சிக்கல். அது என்னன்னு அப்புறம் சொல்றேன். இப்ப நான் கேட்க விரும்புறது, என்னாலே உனக்கு என்ன செய்ய முடியும்ங்கறது தான். அதை சொல்லு. நான் முடிஞ்சதை செய்றேன்.

லாவண்யா திடுதிப்பென்று அப்படி ஒரு கேள்வியுடன் முடிப்பாள் என்று எதிர்பார்க்காத நான் அவளிடம் இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே, என் கணவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதே, என் வீட்டுக்கு வராதே என்று எப்படி முகத்திலடித்தது போல சொல்வது என்று புரியாமல், யோசிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு மேம்போக்காக, அவளிடம், சொல்றேன்... அதுக்கு முன்னாடி சில விசயங்கள் கேட்கனும் என்றேன்.

என்ன? கேளு...

இரண்டு நாள் முன்னாடி நீ கார்லே போகும் போது உன் கார் பின் சீட்டிலே ஒருத்தன் ஒளிஞ்சிட்டு இருந்ததை நான் பஸ்லே இருந்து பார்த்தேன் லாவ்...

நான் சொல்லி முடிப்பதற்கு முன்பே லாவண்யா கலகலவென்று சிரிக்க துவங்கி விட்டாள். கண் கலங்கும் வரை சிரித்து விட்டு பின் சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கிக் கொண்டு என்னை பார்த்து என்னடி இப்படி கேட்டுட்டே? அப்படி யாரையாவது நான் வீட்டுக்கு அதுக்காக கூட்டிட்டு போறதை உன் கிட்டே சொல்லாம இருப்பனா? நமக்குள்ளே எந்த ரகசியமும் கிடையாது தானே. இதை ரெண்டு நாளா மனசுலே வைச்சுட்டு இருந்தியா? என் கிட்டேயே கேட்டிருக்கலாமே என்றாள்.

நீயா சொல்வேன்னு நினைச்சேன். சரி சொல்லு. யார் அது?

குமார் தாண்டி.

உன் ஹஸ்பண்டா?

ம்...

அப்புறம் ஏன் அவன் பின் சீட்டிலே ஒளிஞ்சிட்டு வந்தான்?

ஒளிஞ்சுட்டு வந்தானா? என்னடி சொல்றே?

நான் பார்த்தேன். அவன் தலையை பிடிச்சு அழுத்தினே நீ...

அடியே லூசுக் கழுதை. அன்னைக்கு தாண்டி வந்தான். வரும் போதே ரொம்ப காஜிலே வந்தான். என்னை லீவ் போட சொல்லிருந்தான். நான் தான் நீ வரது ஈவனிங் தானே. டே ஃபுல்லா சும்மா வீட்டிலே உட்கார்ந்திட்டிருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அந்த நாய் பொறுமையில்லாம ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்கே வந்துட்டான். கார்லே ஏறினதும்...

...

அங்கேயே கொஞ்சம் விவஸ்தை கெட்டத் தனமா நடந்துக்க ட்ரை பண்ணினான். நான் மிரட்டி பின் சீட்டுக்கு போக சொன்னேன். போனவன் அங்கே உட்கார்ந்துட்டு முன்னாடி கை விட்டு என் கிட்டே சில்மிஷம் பண்ணினான். தலைலே தட்டி பேசாம வர சொன்னேன். கோச்சுக்கிட்டு கம்முன்னு பின் சீட்டிலே படுத்துக்கிட்டான். அதை பார்த்து நீ உன் கற்பனையை கண்டபடி அலைய விட்டிருக்கே.

அவன்... ஸாரி... அவர் வரது உனக்கு முன்னாடியே தெரியாதா?

இல்லைடி... அப்ராட் வேலை பத்தி உனக்கு தெரியுமான்னு தெரியலை. அதுவும் கல்ஃப் கண்ட்ரீஸ்லே லீவ் கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம். கேட்டிருக்கேன்னு சொல்வான். நிறைய டைம் லீவ் கிடைக்காது. இந்த டைமும் லீவ் கேட்டிருக்கேன்னு ஒன் வீக் முன்னாடி சொல்லிருந்தான். ஆனா கன்ஃபர்மா சொல்ல முடியாதுன்னு சொல்லிருந்தான். திடீர்ன்னு தான் நைட் போன் பண்ணி நெக்ஸ்ட் டே வரேன்னு சொன்னான்.

நான் கொஞ்சம் யோசித்து, சரி அவன்... ஸாரி... ஸாரி... அவர் வந்து டூ டேஸ் ஆகுதுல்லே... ஏன் என் கிட்டே சொல்லலை நீ?

நீ எப்பவும் எதாவது யோசனைலே இருக்க மாதிரி தெரிஞ்சது. டல்லாவும் இருந்தே... அதோட...

அதோட????

என்னை கொஞ்சம் அவாய்ட் பண்ண நினைக்கிற மாதிரி தோணுச்சு. என்னை கண்டா விலகி போனே... சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு சொல்லலை.

அவாய்ட் பண்ணலாம்ன்னு தாண்டி நினைக்கிறேன். ஆனா முடிய மாட்டேங்குதே, எதுக்காக உன்னை இப்படி லவ் பண்றேன்னு எனக்கே புரியலையே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

யோசிக்க யோசிக்க, லாவண்யா சொல்வது உண்மை தான் என்பது புரிய துவங்க, கட்டின கணவனை கள்ளக் காதலனாக நினைத்து விட்ட என் கற்பனைகளை நினைத்து எனக்கே கொஞ்சம் சங்கடமாக போய் விட்டது. கூச்சத்தோடு லாவண்யாவை பார்த்து ஸாரிடி என்றேன்.

இட்ஸ் ஓகே.... லீவ் இட்... அவ்ளோதான் மேடத்தோட சந்தேகங்களா? இல்லை இன்னும் இருக்கா? எதுவாயிருந்தாலும் கேட்டுடுங்க மேம்...

லாவண்யாவை கணவனுடன் சென்றதை தவறாக கணித்து அதை அவளிடமே கேட்டு அவள் சொன்ன பதிலில் உள்ள உண்மையால் சங்கடப்பட்டு உட்கார்ந்திருந்த நிலையில் மேற்கொண்டு பேச வார்த்தைகள் வராமல் நான் அமைதியாக இருக்க, லாவண்யா, மேடம், அதை விடுங்க... பேசுங்க... என்று என் கன்னத்தை தொட வந்தாள்.
நான் கூசி விலகி, பேசாம இருடி என்றேன்.

லாவண்யா சிரித்து, மேடம் திடீர்ன்னு கற்புகரசியா மாறிட்டீங்க மேடம். நான் கூட தொட கூடாதா? சரி விடுங்க... நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா மேடம்.

ம்ம்ம்... கேளு....

என் வீட்டுக்கு வந்தியா?

ஏன்னை போல தயங்கிக் கொண்டிருக்காமல் லாவண்யா பளிச் என்று கேட்க...

ஒரு நொடி அப்படியே உறைந்து போய் விட்டேன். அந்த அதிர்ச்சியில் யோசிக்காமல், எப்படி தெரியும்? என்று கேட்டு விட...

லாவண்யா சிரித்தாள்.

என்னடி பழக்கம் இது?

ஸாரி... இதுக்கு... இதுக்கு... என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை லாவ்... ஸாரி...

சொல்ல சொல்ல என் திருட்டுத் தனத்தை கண்டு பிடித்து விட்டாளே என்ற அவமானத்தில் மனம் உடைந்து கண்களில் நீர் கோர்க்க, இன்னொரு புறம் நான் அவளை என் காதலியை போல நேசிப்பதையும், அவள் தன்னிடம் எதையும் மறைப்பதை நான் விரும்பவில்லை என்பதையும் அந்த அன்பும், பாசமும், காதலும் தான் நான் அன்று அவள் என்ன திருட்டுத் தனம் செய்கிறாள் என்று ரகசியமாக அவள் வீட்டுக்குள் ஒரு திருடியை போல நுழைந்து வேவு பார்க்க காரணம் என்பதையும் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், கேவலமான செயலை செய்து விட்டு மாட்டிக் கொண்டு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் பெண்ணை போல தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

என் விழியோரங்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்ப்பதை கண்ட லாவண்யா, பதறியவளாக பாய்ந்து என்னை தழுவிக் கொண்டு, என்னாச்சு அம்மு, ஏன் நீ இப்படி வீக்காயிட்டே. எவ்ளோ ஸ்டாராங்கான டீச்சர் நீ? இப்ப எதுக்கெடுத்தாலும் அழுறே, மூட் அவுட் ஆகுறே, என்ன தாண்டி நடக்குது உன் மனசுக்குள்ளே என்று என் தோள்களை தடவி கொடுத்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பின் அவளுடைய உடலின் உரசலும் தழுவலும் எனக்கு இதமாய் இருக்க நான் மெல்ல நிதானித்துக் கொண்டு அவளிடமிருந்து விலகி இல்லைடி... எனக்கென்னவோ அன்னைக்கு நீ யார் கூடவோ... ஸாரி.... அதை நான் உன் புருசன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. என் கிட்டே எதையோ மறைக்கிறேன்னு தோணுச்சு. என்ன செய்றோமேன்னு யோசிக்க விடாம நீ யார் கூட... ஸாரி... யார் கூட படுக்க போறேன்னு கண்டுபிடிச்சே ஆகனும்ன்னு ஒரு வெறி வந்திடுச்சு. கொஞ்சம் கூட யோசிக்காம என் கிட்டே இருந்த சாவியை வைச்சு உன் வீட்டுக் கதவை திறந்துட்டு உள்ளே நுழைஞ்சிட்டேன்... ஸாரி...

அட அதை விடுடி... இதெல்லாம் நமக்குள்ளே நடக்காத விசயமா? நான் ஒண்ணும் உன்னை தப்பா நினைக்கலை. என் செல்ல திருட்டுக் கள்ளி... நான் யார் கிட்டே என் கற்பை பறி கொடுக்க போறேன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிருக்கான்னு தான் நினைச்சிட்டேன். அவ்ளோ அஃபெக்சனாடி என் மேலே....

சொன்னவளின் விழிகளில் அந்த விபரீத காதலை, காமத்தை பார்த்து நான் சுதாரித்துக் கொண்டேன்.

லாவ்... கொஞ்ச நாள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காம இருக்க விரும்புறேன். ஒரு நொடி தடுமாற்றம்... என் திட்டத்தையெல்லாம் கெடுத்திடலாம். செக்ஸ் விசயத்திலே இந்த அளவு போயிட்டு திடீர்ன்னு அத்தனையையும் நிறுத்தனும், எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்கனும்ன்னு நினைக்கிறது நடக்கிற வேலை இல்லைன்னு உனக்கும் தெரியும். அதனாலே தான் ஒரு குழந்தை பெத்துக்கிட்டா என் மனசும் உடம்பும் அந்த குழந்தையை வளர்க்கிறதிலே போயிடும்ன்னு குழந்தை பெத்துக்க ஆசைப்படுறேன். இந்த மனுசன் அதை எதையுமே புரிஞ்சுக்காம என்னை சாகடிக்கிறாரு. இந்த நேரத்திலே...

ம்... சொல்லு...

நீ வேற என்னை இப்படி பார்க்காதடி...

உன்னை ஓங்கி அறையலாம் போலவும் இருக்கு. பாவமாவும் இருக்குடி அம்மு...

ஏண்டி...

சும்மா தான்...

சும்மா சொல்லு லாவ்...​
Next page: Chapter 69
Previous page: Chapter 67