Chapter 26
முதல்ல, நீ விவேக்கை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டப்ப, என் மனசுல பெரிய இண்ட்ரெஸ்ட் எதுவும் இல்ல. மாமா கூட, ஆஃபிஸ் போறப்ப கேட்டதுக்கு, விளையாட்டா, பையன் நல்ல ஸ்டைல்லா, செம ஃபிகரா இருக்கான் மாமா. பேசாம கரெக்ட் பண்ணிடட்டுமான்னு கேட்டேன்.
ஒரு நாள் மதியானம், மாமாவைப் பார்க்க, ரெண்டு பேரு, ஆஃபிஸ் வந்திருந்தாங்க! என்னன்னு தெரியலை, ரொம்ப நேரம் பேசுனவங்க கூடயே, மாமாவும் கிளம்பிப்போயிட்டாரு. ஆச்சரியம் என்னான்னா, என்கிட்ட சொல்லாமியே போயிட்டாரு. அது வரைக்கும் மாமா அப்படி பண்ணதேயில்லை.
இன்னும் ஆச்சரியம் என்னான்னா, அன்னிக்கு நைட்டு அவர் வீட்டுக்கு வரவே இல்லை. அடுத்த நாள் மதியானம் ஆஃபிஸ் வந்தவரு, எங்க போனாரு, என்ன பண்ணாருன்னு ஒரு வார்த்தை சொல்லலை. ஒரு மாதிரி ரொம்ப டென்ஷனா, டிஸ்டர்ப்டா இருந்தாரு. அன்னிக்கு ஈவ்னிங்கும் அதே மாதிரி சொல்லிக்காமியே எங்கியோ போனாரு. இப்படியே ரெண்டு நாள் போச்சு.
நானும், எதாவதுன்னா மாமாவே சொல்லுவாருன்னு நினைச்சிட்டு விட்டுட்டேன். ஆனா, 4 நாளாகியும் ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருந்தாரு, ஆஃபிஸ் வேலை எதுலயும் கவனம் இல்லை. எல்லார்கிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு, என்கிட்ட பேசுறதையே சுத்தமா அவாய்ட் பண்ணாரு. வீட்டுக்கும் வர்றதில்லை. நீயும் அதைக் கண்டுக்கவே இல்லை.
முதல்ல சரியாயிடுவாருன்னு நினைச்ச என்னால, அவரு அப்டியே இருந்தக்கவும்தான், ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சுது. அஞ்சு நாள் கழிச்சு, நீ அந்த விவேக்கை கல்யாணம் பண்ணிக்க வேணாம் ஹாசிணி, அக்காகிட்ட சொல்லிடுன்னு என்கிட்ட சொன்னாரு.
ரொம்ப டென்ஷனா இருந்தாரே, அவரை கூல் பண்ணலாம்ன்னு நினைச்சு, நான் விளையாட்டா, ஏன் மாமா, செம ஃபிகரை மடக்கிடலாம்ன்னு பாத்தேன், விட மாட்டேங்குறீங்களே, உங்களை விட ஸ்மார்ட்டா இருக்குறதுனால பொறாமையா இருக்கான்னு சொன்னதுக்கு, திடீர்ன்னு பயங்கரமா கோவப்பட்டு, திட்டுனாரு!
இத்தனை வருஷத்துல, மாமா இப்டி ரியாக்ட் பண்ணி நான் பாத்ததே இல்லை. ஆஃபிஸ்ல எல்லாரும், என்னாச்சு அவருக்கு இவ்ளோ கோவப்படுறாருன்னு பேசுனாங்க! அவர் திட்டுன பின்னாடி, இன்னும் அதிகமா அவரோட நடவடிக்கையை கவனிக்க ஆரம்பிச்சேன்.
ஈவ்னிங் ஆனா, எங்கியோ போறாரேன்னு, ஒரு நாள் அவரையே ஃபாலோ பண்ணி போனா, ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல, ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டோட ரூமுக்குள்ள போனாரு!
எனக்கு பெரிய அதிர்ச்சி. 4 நாளா, அங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு, அட்டெண்டர்கிட்ட பேச்சு கொடுத்து தெரிஞ்சுகிட்டேன். டாக்டருக்கு க்ளோஸ் போல, அதுனால டியுட்டி நேரம் முடிஞ்சு, இவருக்கு மட்டும் ஸ்பெஷல் அப்பாய்ண்மெண்ட்ன்னு வேறச் சொன்னாங்க.
அப்டி என்ன பிரச்சினை, உன்கிட்டயோ, என்கிட்டயோ கூட சொல்ல முடியாமன்னு எனக்குத் தெரியலை. மாமாவை வற்புறுத்திக் கேக்கவும் மனசில்லை. அதுனால, அவர் போனதுக்கப்புறம், அந்த ரூமுக்குள்ள போனா, அடுத்த ஷாக்! ஏன்னா, அங்க இருந்தது, அன்னைக்கு ஆஃபிஸ் வந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு. அவருக்கும் என்னைக் கண்டு ஆச்சரியம்! ஹாசிணிதானேன்னு என் பேரைக் கூடச் சொன்னாரு.
ஹாசிணிதானே நீ? இங்க எப்டி வந்த?
ஆமா, நா… நான் மாமாவை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.
ஃபாலோ பண்ண்ணியா? ஏன்?
கே… கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க வந்துட்டு போனதுல இருந்து மாமா ஆளே மாறிட்டாரு. எ… ஏதாச்சும் பிரச்சினையா? நான் அவரை ஃபாலோ பண்ணப்ப கூட, வேற ஏதோ பிசினஸ் இஷ்யூன்னு நினைச்சேன். ஆனா, இங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு சொல்றாங்க. இப்ப எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என் பயமெல்லாம், வீட்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு என்ன ப்ராப்ளம் அவருக்கு. சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க வந்திருக்காருன்னா, வேற பெரிய நோய் இல்லைதானேன்னு படபடப்பா கேட்டேன்.
ஆனா, அவரு என்னையே கொஞ்ச நேரம் ஆழமா பாத்துட்டு கேட்டாரு.
பயப்பட ஒண்ணுமில்லை, டோண்ட் ஒர்ரி… ஆக்சுவலா, லாஸ்ட் ரெண்டு நாளா அவரோட பிகேவியர்ல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியனுமே?!
நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு அப்டி தோணுது டாக்டர், ஆனா, 4 நாள் முன்னாடி அவர் பிகேவியர் தந்த ஷாக்னால, நான் அதை கவனிக்கலை. ஆனா இப்ப யோசிச்சா தெரியுது.
மனித மனம் அப்டித்தான் ஹாசிணி. ஒரு பெரிய ஷாக் கிடைக்கிறப்ப, அதை விட்டு வெளிய வந்து, நம்மைச் சுத்தி இருக்குற நல்லதுக்காக தன்னை மாத்திக்க முயற்சி பண்றதுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. நாம மட்டும் கொஞ்சம் சுதாரிப்பா இல்லாட்டி, மனசு அந்த பெரிய பிரச்சினையைப் பத்தி மட்டுமே யோசிச்சு, ஒரு சுழல் மாதிரி அதுலியே மாட்டி நின்னுக்கும். பெரிய வில்பவரும், சரியா தூண்டி விட ஒருத்தரும் இருந்தாதான் அதுல இருந்து வெளிய வர முடியும். சொல்லப்போனா சுந்தரும் அதைத்தான் ட்ரை பண்ணிட்டிருக்காரு!
ஆக்சுவலா அன்னிக்கு, எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு உண்மையைச் சொல்றதுக்குதான் நாங்க ஆஃபிஸ்க்கு வந்தோம். அந்த அதிர்ச்சியான உண்மை தெரிஞ்சி ரெண்டு நாள் சுந்தர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காரு. அதுக்கப்புறம், அவரே என்னைத் தேடி வந்தாரு. எனக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்கன்னு கேட்டுகிட்டாரு. அநேகமா இன்னும் ரெண்டு, மூணு நாள்ல அவரு சரியாகிடுவாரு. டோண்ட் ஒர்ரி!
அ… அப்டி என்ன உண்மை டாக்டர்?
அதை சுந்தர் அனுமதியில்லாம…
மாமாவுக்கு ஏதாவது விதத்துல சப்போர்ட் பண்ணனும்ன்னுதான் டாக்டர் கேக்குறேன். நீங்க தரலைன்னா, நான் நேரா மாமாகிட்டயே போய் கேட்டுருவேன். அவரால என்கிட்ட மறுக்க முடியாது. என் யோசனையெல்லாம், எனக்கு விஷயம் தெரியுதேன்னு அவருக்கு சங்கடமா இருக்கக் கூடாதுன்னுதான்! நீங்களா சொல்றீங்களா, இல்லை மாமாகிட்டயே கேட்டுக்கட்டுமா?
ஹா ஹா.. சுந்தர் சொன்னது சரிதான். ஹாசிணியை தப்பா எடை போடாதீங்க. அவகிட்ட வயசுக்கு மீறுன மெச்சூரிட்டி இருக்கு, விளையாட்டுத்தனமா இருக்கிற மாதிரி தோணினாலும், அதிரடியா பேசக்கூடிய தைரியமும் இருக்கும், நிதானமா முடிவெடுக்குற திறமையும் இருக்குன்னு… சரியாத்தான் இருக்கு. என்னையே மிரட்டுறியே?!
மாமா என்னைன்னு இல்லை, தன்னைச் சுத்தி இருக்குற எல்லாரையுமே பாசிட்டிவாதான் பாப்பாரு. அவரோட கேரக்டர் அப்படி… அப்படிப்பட்ட ஒருத்தருக்கு ஏதோ பிரச்சினைன்னா நான் எப்படி டாக்டர் வேடிக்கை பாத்துட்டு சும்மா இருக்க முடியும்? அதுனால, ப்ளீஸ், சொல்லுங்க!
இந்தப் பெண்டிரைவ்ல எல்லா டீடெயில்சும் இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், இந்த விஷயம் எதுவும் சுந்தர் மனைவி உட்பட வேற யாருக்கும் தெரியக் கூடாது. நான் இதை உங்களுக்கு கொடுக்க காரணம், சுந்தர் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பினாலயும், சுந்தர் உங்களைப் பத்தி பாசிட்டிவா சொல்லியிருக்கிறதுனாலயும் மட்டும்தான். சோ ப்ளீஸ் கேர்ஃபுல்…
ஓகே டாக்டர்..
இன்னொரு விஷயம், பாத்துட்டு சுந்தரை எதுவும் கேக்காதீங்க. எதுவா இருந்தாலும், நாளைக்கு மார்னிங் 11 மணிக்கு என்கிட்ட வாங்க.
ஓகேன்னு சொல்லிட்டு வாங்கிட்டுப் போன பெண்டிரைவ்ல இருந்ததைத்தான் போன வாரம் நீ பாத்தக்கா.
இ… இதெல்லாம் அவரு கைக்கு எப்டி போச்சு ஹாசிணி?
அடுத்த நாள், எப்படா 11 மணி ஆகும்ன்னு வெயிட் பண்ணிப் போயி, அவரைப் பாத்து நான் கேட்ட முதல் கேள்வியே இதுதான்!
இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும் டாக்டர்?
உக்காருங்க ஹாசிணி. நைட்டு ஃபுல்லா தூங்கலை போல, கண்ணெல்லாம் சிவந்திருக்கு. காஃபி குடிக்கிறீங்களா?
அதுல இருந்ததைப் பாத்த எனக்கே பயங்கர அதிர்ச்சியாவும் வேதனையாவும் இருந்ததுன்னா, மாமாவுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு எனக்குப் புரியுது. விவேக்கை ஸ்டைலா இருக்கான்னு சொன்னதுக்கு ஏன் கோவப்பட்டாருன்னு இப்பதான் தெரியுது. எல்லாத்துக்கும் மேல, இதுக்கெல்லாம் என் அக்காவும் ஒரு காரணம்ன்னு நினைக்கிறப்ப… அதுக்கு மேல பேச முடியாமல் ஹாசிணி அழுதாள்.
கொஞ்ச நேரம் அழ விட்டவர், ஹாசிணி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! இதை ஏன் உங்க அக்காவோட தப்பா பாக்குறீங்க? சுந்தர் மேலக் கூடத் தப்பு இருக்கலாம்ல? அவரு பிசினஸ் மேல கவனம் வெச்ச அளவுக்கு, ஒய்ஃப் மேல கவனம் வைக்காம இருந்திருக்கலாம், அதுனாலக் கூட அவங்க தப்பு செஞ்சிருக்கலாம்.
மண்ணாங்கட்டி… பிசினஸ் மேல கவனம் வெச்சாலும், வீட்டு மேல எப்பவுமே மாமாவுக்கு ஒரு கண்ணு இருக்கும். எங்க அப்பாவுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி, பைபாஸ் சர்ஜரி பண்ணனும்ன்னு வந்தப்ப, மாமாதான் முன்ன நின்னு எல்லாத்தையும் பாத்துகிட்டாரு. இத்தனைக்கும், அப்ப அவருக்கு பிசினஸ்ல செம டைட்டா இருந்த சமயம். இப்பியும் அக்கா ஆசைப்படறதையெல்லாம் வாங்கிக் கொடுக்க ட்ரை பண்ணுவாரு. ட்ரிப்புக்கு கூட்டிட்டு போவாரு. அவளுக்கு விருப்பமில்லைன்னு சொன்னவுடனே, மாமாவுக்கு வருத்தமாயிருந்தாலும், ஆஃபிஸ் வர வேணாம்ன்னு உட்டுட்டாரு.
அவரு, ஊருக்கு போனப்பல்லாம், இவளும் ஊர் சுத்த போனப்ப, குழந்தையை பாத்துக்காம ஏன் இப்டி பண்றன்னு கேட்டாலும், வெளிய போகக் கூடாதுன்னு ஒரு கண்டிஷனும் போட்டதில்லை! அந்தத் தப்புக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க டாக்டர்!
நீங்க சொல்றதெல்லாம் பொதுவான விஷயத்துல ஓகே ஹாசிணி. பட், அவங்களுக்குள்ள தாம்பத்ய உறவுல சுந்தரால திருப்தி படுத்த முடியாம போயிருந்தா…
கேன் யு ப்ளீஸ் ஸ்டாப் இட்! அப்டி ஒரு பிரச்சினை இருந்திருந்தா, ரெண்டு பேருமே கவுன்சிலிங் போயிருக்கலாம், இந்த மாதிரி பிரச்சினைகளை இம்ப்ரூவ் பண்றதுக்குன்னே, இப்பல்லாம் ஸ்பெஷல் ஹாஸ்பிடல்ஸ், டாக்டர்ஸ் இருக்காங்க. அங்க போயிருக்கலாம்.
இவ்ளோ பெரிய அதிர்ச்சியை தாங்கிகிட்டு, எனக்கு கவுன்சிலிங் கொடுங்கன்னு, தானா வந்து நின்ன எங்க மாமா, கண்டிப்பா தன்கிட்ட ஒரு பிரச்சினை இருக்குன்னா, அதை நிவர்த்தி பண்ண ட்ரை பண்ணியிருப்பாரு. அதை எதுவும் பண்ணாம… அதுக்காக, அக்கா பண்ணது சரியாகாது டாக்டர்!
இல்ல, மாமாவால சுத்தமா முடியலைன்னா, அவரை டைவர்ஸ் பண்ணியிருக்கனும், ஏன் இப்படி ஏமாத்தனும்? அதுல இருக்குற சில வீடியோஸ், ஆடியோஸ்லாம் பாக்கக் கூட முடியலை. அந்த விவேக் சொல்றதையெல்லாம் செய்யுறாங்க ரெண்டு பேரும். இதுக்காகத்தான், அக்கா அந்த விவேக்கையே கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை கன்வின்ஸ் பண்றா. ச்சே! இந்தக் கேவலமான நடத்தைக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் தப்புதான் டாக்டர். ஒரு டாக்டரா இருந்துட்டு நீங்களும் அதுக்கு காரணம் சொல்லாதீங்க!
இல்லை ஹாசிணி, என்ன இருந்தாலும் இதுல பாதிக்கப்பட போறது உன் அக்காதானே? உன் மாமாவா, அக்காவான்னு வந்தா, உனக்கு அக்காதானே நெருங்கிய உறவு. அவங்க பக்கம்தானே நீ நிக்கனும்?!
ஒரு ஆணுக்கு, மனைவிங்கிறதுதான் டாக்டர் இருக்குறதுலியே ரொம்ப நெருங்கின உறவு! அப்பேர்பட்ட கணவனுக்காக, மனைவியான என் அக்கா பாக்கலியே? சொந்தத் தங்கச்சின்னு கூட பாக்காம, இப்படி ஒரு கேரக்டர் கூட என்னைக் கல்யாணம் பண்ணப் பாக்குற என் அக்காவுக்கு நான் எதுக்கு சப்போர்ட் பண்ணனும்?
என் பிரச்சினை ஒண்ணுமேயில்லை. இன்னைக்கே, எனக்கு அவனைப் பிடிக்கலைன்னு சொல்லிடுவேன். இது இல்லைன்னாலும், இந்த விஷயத்துல, நான் மாமா பக்கம்தான். என் மாமா மன்னிச்சாலும், என்னால எங்கக்காவை மன்னிக்கவே முடியாது, எங்கக்காவை! ரெண்டு மூணு வருஷமா, ஏதோ வித்தியாசம் தெரியுதேன்னு நினைச்சேனே ஒழியா, இப்படி மாறியிருப்பான்னு நினைக்கவே இல்லை! எவ்ளோ அழகான குடும்பத்தை சிதைச்சுட்டா பாவி என்று உணர்ச்சி தாங்காமல் ஹாசிணி மீண்டும் அழுதாள்.
கூல் ஹாசிணி… உன்னை டெஸ்ட் பண்ணதான் அப்டில்லாம் கேள்வி கேட்டேன்!
டெஸ்ட் பண்ணவா?
எஸ்! சுந்தர் உன்னைப் பத்தி நிறையச் சொல்லியிருக்காரு. அதெல்லாம் உண்மையான்னு தெரிஞ்சிக்கதான் அப்டிக் கேட்டேன். அவர் சொன்னது கரெக்ட்தான். ஆக்சுவலா இந்த விஷயத்துல ஹாசிணியைக் கூட நம்ப வேணாம், என்ன இருந்தாலும் சொந்த அக்காவுக்காகதான் பேசுவாங்கன்னு நான் கூட சொன்னேன். ஆனா அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
எ… என்னச் சொன்னாரு?
ஹாசிணி அப்படி பண்ண மாட்டா! யாராயிருந்தாலும் தப்பு தப்புதான்னு சொல்லுவா. எப்டின்னாலும் என்னால இதை அவகிட்ட சொல்ல முடியாது. ஏன்னா, என்னை விட அவ ரொம்ப மனசொடைஞ்சு போயிடுவா. இப்டி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவா. அவ சின்ன பொண்ணு! என் தேவைக்காகா, ஜாலியா இருக்க வேண்டிய வயசுல ஏகப்பட்ட வேலை கொடுத்திருக்கேனோன்னு எனக்கு ஏற்கனவே ஒரு வருத்தம் இருக்கு! தவிர, அவ வயசுக்கு இதையெல்லாம் ஏன் பாக்கனும். விடுங்கன்னு சொன்னாரு! கரெக்டாதான் சொல்லியிருக்காரு.
ப்ப்ச்… இத்தனை அதிர்ச்சியிலும் மாமா மத்தவங்களுக்காக பாக்குறாரு. அப்பேர்பட்டவருக்குதான் எங்கக்கா துரோகத்தை பரிசா கொடுத்திருக்கா! ப்ப்ச்ச்… இ… இப்ப மாமா எப்டியிருக்காரு டாக்டர். அ… அவரை பாக்க முடியுமா? வீட்டுக்கே வர்றதில்லை, எங்க இருக்காரு?
அவசியம் பாக்கனுமா? நான் ஏன் யோசிக்கிறேன்னா, அவரு மேல பரிதாபப் பார்வை விழுறதை, ஒரு டாக்டரா நான் விரும்பலை.
நா… கண்டிப்பா பாக்கனும் டாக்டர்! எ… என்னால, இந்த விஷயத்துல நடிக்க முடியாது! அடுத்து நான் எப்ப அவரைப் பாத்தாலும், உடைஞ்சுடுவேன். அதுனால, தனியா இப்பயே பாத்துடுறேன் ப்ளீஸ்!
ம்ம்.. ஓகே, கொஞ்சம் முன்னாடி எதுக்கு டெஸ்ட் பண்ணேன்னு கேட்டீங்களே! இதுக்குதான். சுந்தர் சொன்ன மாதிரி, நீங்க இவ்ளோ அன்பு வெச்சிருக்கீங்கன்னா, கண்டிப்பா நீங்க உடனே சுந்தரைப் பாக்கனும்ன்னு துடிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அப்டி, அவரை பாக்கப் போறதுக்கு முன்னாடி, இந்த விஷயத்துல உங்க நிலைப்பாடு என்னன்னு எனக்குத் தெரிஞ்சிக்கதான் அதெல்லாம் கேட்டேன். இந்தச் சமயத்துல, அவர் மேலயும் தப்பு இருக்கலாம்னு நினைக்கக் கூடிய யாரையும், அவரு சந்திக்கக் வேணாம்ன்னுதான் அதெல்லாம் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
பாத்த கொஞ்ச நாளான உங்களுக்கே, அவரோட மனநிலை இவ்ளோ அக்கறை இருக்கும் போது, எனக்கு இருக்காதா டாக்டர். ப்ளீஸ், நான் அவரைப் பாக்கனும்!
இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே நீங்க? இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
அன்னிக்கு ஆஃபிஸ்க்கு என் கூட ஒருத்தர் வந்தாரில்லையா?
ஆமா!
அவருக்குதான் முதல்ல இது தெரியும். அவரு வேற யாருமில்லை. அந்த வீடியோல இருந்த கீதாவோட ஹஸ்பெண்ட்தான் அவரு.
என்ன ஹாசிணி சொல்ற? கீதாவோட ஹஸ்பெண்டா?
ஆமாக்கா, அவருக்குதான் விஷயம் முதல்ல தெரியுமாம்.
அ… அப்டீனா?
எஸ், கீதாவோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்குறதுக்கான காரணம் இதான். இப்ப, அவ சொந்த ஊருல இருக்கா!
ஹரிணிக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை. மனம் மிகப்பெரிய வெறுமையில் இருந்தது.
மாமா மேல என்னோட அன்பு எப்ப தெரியுமாக்கா அதிகமாச்சு? விவேக்கைப் பத்தி சொன்னதுக்கு என்னைத் திட்டுன மாமா, அடுத்த நாளே என்கிட்ட வந்து, ஓவரா கோவப்பட்டுட்டேன் ஹாசிணி, அவன் உனக்கு மேட்ச்சே இல்லை, அதை நீ புரிஞ்சிக்கலியோன்னு நினைச்சுதான் கோபப்பட்டுட்டேன், சாரின்னு சொன்னாரு!
அன்னிக்கு ஈவ்னிங்தான், அவரை ஃபாலோ பண்ணிட்டுப் போனதே! அன்னிக்கு நைட்டு, எல்லா உண்மையும் தெரிஞ்ச பின்னாடி, இத்தனைக்குப் பின்னாடியும், தனக்கு துரோகம் தெரிஞ்சவளோட தங்கச்சியான எனக்கு நல்ல வாழ்க்கை அமையனும், நம்ம குடும்பம் வேதனைப் படக் கூடாதுன்னு யோசிச்சாரு பாத்தியா, அங்கதான் அவரை வேற மாதிரி பாக்க ஆரம்பிச்சேன். அப்பியும், என் மனசுல காதல்லாம் இல்லை. வெறும் அன்பு மட்டுந்தான் இருந்துது.
அ… அப்டீன்னா, அதுவரைக்கும் நீங்க லவ்வே பண்ணலையா? இந்த விஷயம்லாம் தெரிஞ்ச பின்னாடிதான் இந்த லவ் ஸ்டார்ட் ஆச்சா…?
நீ எங்களை என்னான்னு நினைச்சக்கா? எப்படா சான்ஸ் கிடைக்கும், எப்டி ஒண்ணு சேரனும்ன்னு பாத்துட்டிருந்தோம்ன்னா? இல்லை, படுக்குறதுக்கு காரணம் கிடைச்சதுன்னு சந்தோஷப்பட்டோம்ன்னா?
ஒண்ணு தெரிஞ்சிக்கோ, கடைசி வரைக்கும், இதுக்குப் பேரு காதல் இல்லை ஹாசிணி, பரிதாபம், உணர்ச்சி வசப்பாட்டு, லூசு மாதிரி உளறாதன்னு, மாமா சொல்லிட்டிருந்தாரு. நான் சொன்னதை கேக்கவேயில்லை. அவரை ஒத்துக்க வைக்கதான், நான் விவேக்கை கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன்.
என்னடி சொல்ற?
பின்ன, அந்த நாயைக் கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா? இல்லை, கல்யாணம் பண்ணி அவனை திருத்துறதுக்கு நான் என்ன அந்த காலத்து நளாயினியா? அப்டி பண்ணானாச்சும் மாமா என் லவ்வை ஏத்துக்குவாருன்னுதான் ஓகே சொன்னேன். ஆனா அவரு, நான் விவேக்கை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன பின்னாடியும், இப்டில்லாம் பண்னா நான் மனசு மாற மாட்டேன், என்னை பிளாக்மெயில் பண்றியா, ஏன் நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக்குறன்னு என்னைத் திட்டுனாரே ஒழிய, ஏத்துக்கவே இல்லை. அவரை ஒத்துக்க வைக்குறதுக்குள்ள, போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!
அப்புறம் எ… எப்டி அவரு மனசு மாறுனாரு?
ஹரிணியின் கேள்வி, ஹாசிணியின் உதடுகளில் புன்னகையையும், அவள் மனதில் சுந்தருடனான நினைவுகளையும் வரவைத்தது.
அன்று, டாக்டருடன் கெஸ்ட் ஹவுஸ் வந்த ஹாசிணியைப் பார்த்த சுந்தருக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு புன்னகை செய்தான்.
சுந்தரிடம் தைரியமாய் பேச வேண்டும், இது ஒண்ணுமில்லை மாமா என்று ஊக்கமூட்ட வேண்டும் என்று எதெதையோ யோசித்து வைத்திருந்த ஹாசிணி, சுந்தரைப் பார்த்தவுடன், தன்னை மீறி விசும்ப ஆரம்பித்தாள். தன்னைப் பார்த்ததும், அவன் புன்னகையைக் கண்டவள், மனம் தாங்காமல், சாரி மாமா, ரியல்லி சாரி என்று அவன் தோள்களிலேயே சாய்ந்து கேவினாள்.
மனதுக்கு நெருக்கமான ஒருவருக்கு வலி என்றால், இயல்பாக எழும் கண்ணீரை எப்படி அடக்க முடியும்?!
சுந்தருக்கு தான் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டும் என்று நினைத்து வந்த ஹாசிணியை, சுந்தர் தேற்றிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் விசும்பியவள், சத்தியமா இதையெல்லாம் எதிர்பாக்கலை மாமா, அவ எப்டி இப்டி மாறுனான்னு தெரியலை மாமா என்று உளறியவள், மெல்ல திடம் பெற ஆரம்பித்தாள்!
திடம் பெற்று விலகி அமர்ந்தவள், சிறிது நேர மவுனத்திற்க்குப் பின்பே கேட்டாள்.
எப்டி மாமா இருக்கீங்க?
இன்னும் அவள் கண்களில் ஈரம் இருந்தது. அது அவள் மனதில், அவன்பால் எப்போதும் இருக்கும் அன்பின் ஈரம்.
ம்ம்… இருக்கேன் என்று எழுந்த சுந்தர், ஜன்னலில் வேடிக்கை பார்த்தான். நீண்ட நேரம் அங்கு மவுனம் மட்டுமே நிலவியது. சுந்தருக்கு, ஹாசிணி தன்னையே பார்த்தபடி காத்திருப்பதை உணர முடிந்தது. பெரு மூச்சு விட்டவன், வெளியே வெறித்த படி நின்று சொல்ல ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும், தான் பதில் சொல்லும் வரை ஹாசிணி விட மாட்டாள் என்று.
முதல்ல நம்ப முடியலை ஹாசிணி! பொய்யா இருக்கும், மார்ஃபிங்கா இருக்கும்ன்னு கூட நினைச்சேன். ஆனா உண்மைன்னு தெரிஞ்ச பின்னாடி தாங்க முடியலை! இவ்ளோ நம்பிக்கை வெச்சது தப்பா, அவளை கண்ட்ரோல் பண்ணாம விட்டது தப்பான்னு கஷ்டமா இருந்துச்சு. எல்லாத்தையும் விட, என்னை அவங்க முட்டாளா நினைச்சிருக்காங்களே, இத்தனை நாளா இது தெரியாம, இன்னொருத்தர் வந்து சொல்ற வரைக்கும் தெரியாம இருந்திருக்கோமேங்கிறதத்தான் என்னால தாங்க முடியலை!
அதுக்குப் பேரு முட்டாள்தனம் இல்லை மாமா. நம்பிக்கை. கணவன் மனைவி உறவுக்குள்ள அடிப்படையே நம்பிக்கைதான். அப்படி ஒரு நம்பிக்கையை சிதைச்சதுக்கு, அக்காதான் ஃபீல் பண்ணனும்! நீங்க என்ன தப்பு பண்ணீங்க!
மவுனமாய் புன்னகைத்த சுந்தர்! டாக்டரும் இதைத்தான் சொன்னாரு! முதல்ல கண்ணாபிண்ணான்னு கோபம் வந்துது. அவங்களைக் கொன்னுடலாம்ன்னு கூடத் தோணுச்சு! அந்த ஃபீல் நரகம் ஹாசிணி! தோல்விகளை தாங்கிக்கலாம், துரோகங்களை?! அதுவும் ரொம்ப நம்பினவங்ககிட்ட இருந்து வர்ற துரோகத்தை?! ப்ப்ச்… என்று சுவரில் ஓங்கிக் குத்தினான்!
மாமா…
சாரி… கொஞ்சம் எமோஷனலாயிட்டேன் என்றவன் தொடர்ந்தான். ரெண்டு நாள் ஒரு மாதிரி பிளாங்க்கா இருந்துது. எது மேலயும் பிடிப்பே இல்லை. எதுக்காக வாழனும், இனி யாரிருக்கா, ஏற்கனவே அப்பா, அம்மா இல்லை, இப்ப இப்படி ஒரு துரோகம், அதுவும் ஹரிணிகிட்ட இருந்தே, என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம் அப்டின்னுல்லாம் தோணுச்சு!
அவன் பேச பேச, ஹாசிணி விசும்ப ஆரம்பித்தாள்! அவன வார்த்தைகளில் தெறித்த வலி, அவள் மனதைப் பிராண்டியது.
அந்த வலி, கோபமா மாறி, ஹாரிணியை ஏதாவது செய்யனும்ன்னு ஆவேசமா இருந்தப்ப, என்னை அமைதிப்படுத்துனது, விவேக்கோட ஞாபகந்தான்!
விவேக்கா?
ம்ம்ம்… நான் எதைச் செஞ்சாலும் பாதிப்பு எனக்கும், என் குழந்தைக்கும்தான் வரும். தப்பு செஞ்சதுக்காக ஹரிணிக்கு தண்டனை. ஆனா, எதுவுமே செய்யாம, நானும், என் குழந்தையும் ஏன் கஷ்டப்படனும்? தவிர, எல்லாத் தப்பும் பண்ணிட்டு, அந்த விவேக், கூலா இன்னொரு தப்பைப் பண்ண போயிடுவான், நான் கஷ்டப்படனுமான்னு தோணுச்சு! நான் அவசரப்பட்டு எந்த முடிவை எடுத்தாலும், நான் தோத்துடுவேன், அதைத்தான் அந்த விவேக் எதிர்பாக்குறான்னு தோணுச்சு. அப்பதான் முடிவெடுத்தேன்!
அடுத்து நான் எந்த முடிவை எடுத்தாலும், அது உணர்ச்சி வசப்பட்டு இருக்கக் கூடாது. தெளிவா, யோசிச்சு எடுத்ததா இருக்கனும்ன்னு! அதுனாலத்தான், நானே கவுன்சிலிங்க்கு போனேன்!
சுந்தர் மிகச் சாதாரணமாகச் சொன்னாலும், அவன் எவ்வளவு வலிகளை அடைந்திருப்பான் என்பதை ஹாசிணியால் உணர முடிந்தது.
எப்போதும், சுந்தர் என்றால் அவளுக்கு ஒரு சின்ன பிரமிப்பு இருக்கும்.
தான் அதிகம் பேசாத போதே, தன் குடும்பம் தன்னை தவறாகப் புரிந்த போதும் தன்னை புரிந்து கொண்டவன் என்பதால் ஆரம்பமான அன்பு, போகப்போக, அவனுடைய உழைப்பு, திறமை, நேர்மையான சிந்தனை, அணுகும் விதம் எல்லாவற்றையும் பார்த்து அது இன்னும் அதிகமாகியிருக்கிறது. தன் கண்களை மட்டும் பார்த்து பேசும் அவன் நேர்மையின் மீது மரியாதை வந்திருக்கிறது.
ஹரிணி ஆஃபிஸ் வரலைன்னா, கண்டிஷனா வரச் சொல்லலாம்ல என்று கேட்டதற்க்கு, என் விருப்பத்துக்காக, அவளுக்கு பிடிக்காததை ஏன் செய்ய வைக்கனும் என்று மனைவியை அடக்காமால் இருப்பவனின் மீது சின்ன ஈர்ப்பு வந்திருக்கிறது.
இப்போது, இத்தனை துரோகத்திற்க்குப் பின்னும், சுதாரித்து எழ முயலும் அவனது ஆண்மையைக் கண்டு பெரும் பிரமிப்படைந்தாள். தான் எடுப்பது தெளிவான முடிவாக இருக்க வேண்டும் என்று முயற்ச்சிக்கும் செயலில் தெரிந்த நிமிர்வை, சோதனைகளை மீறி வர எடுக்கும் முயற்ச்சிகளை, அதில் தெரியும் துணிச்சலையும், வீரத்தையும் கண்டு வியந்தாள்.
துணிச்சல், வீரம்ங்கிறது பத்து பேரை அடிக்கிறதில்லை ஹாசிணி, முடிஞ்சா 10 பேர் வாழ்க்கை நல்லாயிருக்க வழி பண்றதுன்னு சுந்தர் கேசுவலாய் சொல்லும் வார்த்தையின் அர்த்தம் புரிந்த போது மலைத்து நின்றாள்.
மனைவியை, தன் அம்மாவுடன் பொறுத்திப் பார்க்கும் ஆண்கள் மிகக் குறைவு. அப்படியே இருந்தாலும், அது சாப்பாடு மாதிரியான விஷயத்தில்தான் இருக்கும். ஆனால், தன் கணவன், தன் தந்தையைப் போல் இருக்க வேண்டும், அவரைப் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற பெண்கள் நம்மூரில் அதிகம்.
ஹாசிணிக்கு அந்த எண்ணம் இல்லாவிடினும், அவளையறியாமலேயே, தன் கணவனும் சுந்தரைப் போன்றே, அன்பான, தோழமையான, சரியான, திறமையான, ஆண் மகனாக இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் மனதில் தோன்றியிருந்தது.
ஒரு வருடத்திற்க்கு முன்பு, உனக்கு மாப்ளை பாக்கலாம்ன்னு இருக்கோம், உனக்கு எப்படிப்பட்ட மாப்ளை வேணும் என்று கேட்டவுடன், அவள் மனதில் தோன்றிய உணர்வு, மாமா மாதிரி இருக்கனும் என்பதுதான்! அதற்க்காக, அக்கா கணவனை, தன் கணவனாக்க அவள் நினைத்ததே இல்லை! தந்தையைப் போல் கணவன் இருக்க வேண்டும் என்பவர்கள் அப்படி நினைக்கிறார்களா என்ன?
இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும், நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு என்று முடிவெடுத்தாலும், அவளுடைய ஆதர்ச நாயகன், எப்போதும் சுந்தரே. அப்படிப்பட்டவனுக்கு துரோகத்தின் வலி எனும் போது வருத்தமுற்றவள், அந்த நிலையிலும், அவனுடைய தெளிவான முடிவு, அவள் மனதில் அவன் மீதான பிம்பத்தை மிகப் பிரமாண்டமாக்கியது!
இதுவரை, நல்ல வாழ்க்கையை கெடுத்துகிட்டியேக்கா என்று ஹரிணியை நினைத்துக் கொண்டிருந்தவள், அந்தத் தருணத்தில் இருந்து, எனக்கு இப்படி ஒரு புருஷன் அமைஞ்சிருந்தா எவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பேன் என்று நினைக்க ஆரம்பித்தாள்.
சுந்தரையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில், முதன் முதலாக, அக்காவின் கணவன் என்ற பார்வை மறைந்து, ஒரு ஆண்மகனாகப் பார்க்கத் தொடங்கினாள்.
நம் கண்கள் எப்போதும் ஒரு கண்ணாடியை அணிந்திருக்கும். சொல்லப் போனால், அதுதான் பல சமயங்களில் தறி கெட்டு ஓடும் நம் பார்வையை நேர் படுத்துகிறது! பார்க்கும் பெண்களிடமெல்லாம் அலைபாயும் மனது, தங்கையிடம் அலைபாயாமல் இருப்பதற்க்கும், ஆண்ட்டிகளைக் கண்டுச் சலனப்படும் ஆண், வீட்டில் அமைதியாக இருப்பதற்கெல்லாம் காரணம், நாகரீகம் என்ற கண்ணாடிதான்!
தன் மனைவி என்றவுடன் இயல்பாகத் தோன்றும் உரிமையுணர்வும், அடுத்தவன் மனைவி என்றவுடன் மனதில் எழும் காம உணர்வுக்கும் அடிப்படை ஒரே கண்ணாடிதான்.
இதுவரை தன் அக்காவின் கணவன் என்ற கண்ணாடியின் வழியாகவே சுந்தரைப் பார்த்து வியந்திருந்த ஹாசிணி, முதன் முறையாக, ஒரு இளம்பெண், ஆண்மை ததும்பும் ஒரு ஆணைப் பார்க்கும் பார்வையுடன் பார்க்கத் தொடங்கினாள்! இது எதுவும், அவள் தெரிந்து செய்யவில்லை. இத்தனை நாள் இருந்த அதே குணநலத்துடன் தான் அவன் இருக்கிறான். புதிதாக எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. இனி, சுந்தர் ஹரிணியை மனைவியாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற ஒன்றைத் தவிர!
சுதாரித்து நிமிர்ந்த ஹாசிணி, தான் மேலும் சுந்தரை எரிச்சலூட்டக் கூடாது, இப்ப இருக்கும் நிலையில், இந்த உணர்வுகள் எல்லாம் அபத்தம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், மெல்லச் சொன்னாள்!
நீங்க எந்த முடிவை எடுக்குறதா இருந்தாலும், என் சப்போர்ட் இருக்கும் மாமா! எங்க அப்பா, அம்மாவுக்காக யோசிக்காதீங்க. நான் பாத்துக்குறேன்.
திடீரென்று பெரிய மனுஷியாய் பேசியவளில் வார்த்தையிலும், தனக்காக உருகும் அந்த நேசத்திலும் மீண்ட சுந்தர், அவளைப் பார்த்து புன்னகை செய்தான். பின் அவளையேப் பார்த்தவன், பின் சொன்னான்.
சரி வா போலாம்!
எங்க?
வா சொல்றேன் என்று, அவர்களுக்குத் தனிமை கொடுத்து வேலைகளில் மூழ்கியிருந்த டாக்டரையும் அழைத்துக் கொண்டு, சாப்பிடச் சென்றான்.
புரியாமல் பார்த்த ஹாசிணியை, எப்டியும் நேத்து நைட்டும் காலைலியும் சாப்ட்டிருக்க மாட்ட. தூக்கம் வேற கெட்டிருக்க. முதல்ல சாப்டு என்று கூறியவனின் அன்பில் திகைத்தாள் ஹாசிணி! அவன் சொன்னது உண்மைதான்.
தடுமாற ஆரம்பித்திருந்த அவள் மனதிற்க்கு இன்னொன்றும் ஞாபகத்திற்க்கு வந்தது. அது, என்னிக்காவுது ஐ லவ் யுன்னு சொல்றீங்களா, ரொமாண்டிக்காவே பேசத் தெரியலை என்று கல்யாணமான புதிதில், ஹரிணி அவனிடம் குறைபட்டுக் கொள்ளும் சமயங்களிலெல்லாம், சுந்தர் சொல்லும் பதில்.
லவ்வைச் சொல்ல, லவ் யு ன்னுதான் சொல்லனும்ன்னு அவசியமில்லை ஹரிணி, சாப்ட்டியான்னு கேக்குறதும் ஒரு விதத்துல லவ்வைச் சொல்றதுதான் என்று.
புன்னகைத்தவள், என்னைச் சாப்பிடச் சொல்றது இருக்கட்டும், முதல்ல நீங்க சாப்பிடுங்க. நாலு நாள்ல நல்லா இளைச்சிட்டீங்க என்றவள், இயல்பாக இருவருக்கும் பரிமாறியபடியே சாப்பிட்டாள். குறைவாகச் சாப்பிட்ட சுந்தரை, நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்கன்னு எனக்குத் தெரியாது, கம்முன்னு சாப்பிடுங்க என்று அதட்டிச் சாப்பிட வைத்தாள்!
நீங்க பொறுமையா யோசிச்சு எந்த முடிவு வேணா எடுங்க. ஆனா, நாளையில இருந்து ஆஃபிஸ் வாங்க, உங்களை இப்படிப் பாக்க புடிக்கலை, நல்லா ட்ரிம்மா எப்பியும் போல வாங்க, நான் இப்ப ஆஃபிஸ் போயி பாத்துக்குறேன் என்றவளிடம், புன்னகையுடன் தலையாட்டினான் சுந்தர்.
நான் ஹாசிணியை ட்ராப் பண்ணிட்டு ஹாஸ்பிடல் போறேன் என்று உடன் வந்த டாக்டர், வழியில் சொன்னார்.
நான் கூட, சுந்தர் உங்களைப் பாத்தா இன்னும் டவுனாகிடுவாரு, அசிங்கமா ஃபீல் பண்ணுவாருன்னு நினைச்சேன் ஹாசிணி! ஆனா, உங்ககிட்ட பேசின பின்னாடி அவர் நல்லாத் தெளிவாயிட்டாரு.
என்ன டாக்டர் சொல்றீங்க?
எஸ்! என்னதான் அவரு கவுன்சிலிங் வந்தாலும், அவர் மனசுல இருக்குற கோபம், வலியை எல்லாம் கண்ட்ரோல் பண்ணப் பாத்தாலும், அவரோட அடி மனசுல, ஒரு சுய பச்சாதாபம் இருந்துது ஹாசிணி. தனக்கு ஏன் இது நடந்துதுன்னு ஒரு ஆழமான வடு இருந்துது.
ஆனா உன்கிட்ட மனசு விட்டுப் பேசின பின்னாடி அவரு இன்னும் தெளிவாயிட்டாரு. லேடீஸ் வாய் விட்டு அழுறதுனால, சில வலிகள் குறைஞ்சுடும். ஆனா, ஆம்பிளைங்க அழக் கூடாதுன்னு சொல்லிச் சொல்லி வளக்குறதுனால, அது மனசுலியே அடக்கி வெச்சிடுறாங்க. இன்னிக்கு உன்கிட்ட பேசுனது, மனசுல இருக்குறதையெல்லாம் சொன்னது எல்லாம், அவருக்கு ஒரு அவுட்லெட்டா இருக்கும்.
எல்லாம் தாண்டி, நீ சரியா சாப்ட்டிருக்கமாட்டன்னு கவனிச்சாரு பாத்தியா, அங்கதான் எனக்கு நம்பிக்கை வந்துது. அவரு தேறிட்டாருன்னு!
உ… உண்மையாவா டாக்டர்!
எஸ்… பொறுப்புங்கிறது எந்தளவுக்கு சுமையோ, அதே அளவுக்கு சுகமும் கூட! விவேக், உங்கக்கா மாதிரி ஆட்களுக்கு, எந்தப் பொறுப்பும் இல்லை, எடுத்துக்கவும் மாட்டாங்க. ஆனா சுந்தர் மாதிரி ஆட்களால சும்மா இருக்க முடியாது. தன்னை நம்பி வந்தவங்களைக் காப்பாத்தனும், சந்தோஷமா வெச்சுக்கனும்னு நினைச்சு ஓடிட்டு இருக்குறவங்களுக்கு, பொறுப்புங்கிறது சுகம்தான்!
இத்தனை நாளா, எங்க கூட கடமைக்கு சாப்ட்டவரு, இன்னிக்கு கொஞ்சம் உரிமையா, நீ அதட்டிச் சொன்ன உடனே ஒழுங்கா சாப்ட்டாரு பாத்தியா, அப்பியே தெரிஞ்சிடுச்சு, நீ வந்தது ரொம்ப நல்லதுன்னு.
பல ஆம்பிளைங்க வெளியதான் ரஃபா இருக்குற மாதிரி தோணும். ஆனா, சில துரோகங்களை எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாம, கேசுவலா செய்யுற திறமை சில பெண்களுக்கு இருக்கிறது மாதிரி, ஆண்களுக்குக் கூட இருக்காது!
பெரு மூச்சு விட்ட ஹாசிணி,
உண்மைதான் டாக்டர். இதுல முக்கியக் காரணம் விவேக்னாலும், துரோகம் பண்ணது என்னமோ, எங்க அக்கா, கீதா மாதிரி ஆட்கள்தான். சொல்லப் போனா, விவேக் தப்புதான் பண்ணான். ஆனா இவிங்கதான்…… ப்ப்ச்!
சரி விடு ஹாசிணி! ஆக்சுவலி, உன்னைப் பாக்குறப்ப, என் தங்கச்சிதான் ஞாபகத்துக்கு வர்றா! உன்னை விட பெரியவ அவ. ஒரு நாள் இண்ட்ரடியுஸ் பண்ணி வைக்குறேன்! அவளுக்கும் உன்னை ரொம்பப் புடிக்கும்
தன் தங்கையைப் பற்றி சொன்னவுடன், டாக்டரின் முகம் மிகக் கனிவாக மாறியதை, புன்னகையுடன் பார்த்த ஹாசிணி சொன்னாள். கண்டிப்பா மீட் பண்ணனும் டாக்டர். அப்புறம், உங்க ஒய்ஃப் பேரு என்ன? எத்தனை குழந்தைங்க?
ஓடிக் கொண்டிருந்த வண்டி, சட்டென்று ஓரமாய் நின்றது! இளகியிருந்த முகம், கொஞ்சம் கொஞ்சமாய் கடினமாகியது. பின் இறுகிய குரலில் டாக்டர் சொன்னார்.
எ… என் மனைவி பேரு அபர்ணா!
ஒரு நாள் மதியானம், மாமாவைப் பார்க்க, ரெண்டு பேரு, ஆஃபிஸ் வந்திருந்தாங்க! என்னன்னு தெரியலை, ரொம்ப நேரம் பேசுனவங்க கூடயே, மாமாவும் கிளம்பிப்போயிட்டாரு. ஆச்சரியம் என்னான்னா, என்கிட்ட சொல்லாமியே போயிட்டாரு. அது வரைக்கும் மாமா அப்படி பண்ணதேயில்லை.
இன்னும் ஆச்சரியம் என்னான்னா, அன்னிக்கு நைட்டு அவர் வீட்டுக்கு வரவே இல்லை. அடுத்த நாள் மதியானம் ஆஃபிஸ் வந்தவரு, எங்க போனாரு, என்ன பண்ணாருன்னு ஒரு வார்த்தை சொல்லலை. ஒரு மாதிரி ரொம்ப டென்ஷனா, டிஸ்டர்ப்டா இருந்தாரு. அன்னிக்கு ஈவ்னிங்கும் அதே மாதிரி சொல்லிக்காமியே எங்கியோ போனாரு. இப்படியே ரெண்டு நாள் போச்சு.
நானும், எதாவதுன்னா மாமாவே சொல்லுவாருன்னு நினைச்சிட்டு விட்டுட்டேன். ஆனா, 4 நாளாகியும் ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருந்தாரு, ஆஃபிஸ் வேலை எதுலயும் கவனம் இல்லை. எல்லார்கிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு, என்கிட்ட பேசுறதையே சுத்தமா அவாய்ட் பண்ணாரு. வீட்டுக்கும் வர்றதில்லை. நீயும் அதைக் கண்டுக்கவே இல்லை.
முதல்ல சரியாயிடுவாருன்னு நினைச்ச என்னால, அவரு அப்டியே இருந்தக்கவும்தான், ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சுது. அஞ்சு நாள் கழிச்சு, நீ அந்த விவேக்கை கல்யாணம் பண்ணிக்க வேணாம் ஹாசிணி, அக்காகிட்ட சொல்லிடுன்னு என்கிட்ட சொன்னாரு.
ரொம்ப டென்ஷனா இருந்தாரே, அவரை கூல் பண்ணலாம்ன்னு நினைச்சு, நான் விளையாட்டா, ஏன் மாமா, செம ஃபிகரை மடக்கிடலாம்ன்னு பாத்தேன், விட மாட்டேங்குறீங்களே, உங்களை விட ஸ்மார்ட்டா இருக்குறதுனால பொறாமையா இருக்கான்னு சொன்னதுக்கு, திடீர்ன்னு பயங்கரமா கோவப்பட்டு, திட்டுனாரு!
இத்தனை வருஷத்துல, மாமா இப்டி ரியாக்ட் பண்ணி நான் பாத்ததே இல்லை. ஆஃபிஸ்ல எல்லாரும், என்னாச்சு அவருக்கு இவ்ளோ கோவப்படுறாருன்னு பேசுனாங்க! அவர் திட்டுன பின்னாடி, இன்னும் அதிகமா அவரோட நடவடிக்கையை கவனிக்க ஆரம்பிச்சேன்.
ஈவ்னிங் ஆனா, எங்கியோ போறாரேன்னு, ஒரு நாள் அவரையே ஃபாலோ பண்ணி போனா, ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல, ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டோட ரூமுக்குள்ள போனாரு!
எனக்கு பெரிய அதிர்ச்சி. 4 நாளா, அங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு, அட்டெண்டர்கிட்ட பேச்சு கொடுத்து தெரிஞ்சுகிட்டேன். டாக்டருக்கு க்ளோஸ் போல, அதுனால டியுட்டி நேரம் முடிஞ்சு, இவருக்கு மட்டும் ஸ்பெஷல் அப்பாய்ண்மெண்ட்ன்னு வேறச் சொன்னாங்க.
அப்டி என்ன பிரச்சினை, உன்கிட்டயோ, என்கிட்டயோ கூட சொல்ல முடியாமன்னு எனக்குத் தெரியலை. மாமாவை வற்புறுத்திக் கேக்கவும் மனசில்லை. அதுனால, அவர் போனதுக்கப்புறம், அந்த ரூமுக்குள்ள போனா, அடுத்த ஷாக்! ஏன்னா, அங்க இருந்தது, அன்னைக்கு ஆஃபிஸ் வந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு. அவருக்கும் என்னைக் கண்டு ஆச்சரியம்! ஹாசிணிதானேன்னு என் பேரைக் கூடச் சொன்னாரு.
ஹாசிணிதானே நீ? இங்க எப்டி வந்த?
ஆமா, நா… நான் மாமாவை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.
ஃபாலோ பண்ண்ணியா? ஏன்?
கே… கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க வந்துட்டு போனதுல இருந்து மாமா ஆளே மாறிட்டாரு. எ… ஏதாச்சும் பிரச்சினையா? நான் அவரை ஃபாலோ பண்ணப்ப கூட, வேற ஏதோ பிசினஸ் இஷ்யூன்னு நினைச்சேன். ஆனா, இங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு சொல்றாங்க. இப்ப எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என் பயமெல்லாம், வீட்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு என்ன ப்ராப்ளம் அவருக்கு. சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க வந்திருக்காருன்னா, வேற பெரிய நோய் இல்லைதானேன்னு படபடப்பா கேட்டேன்.
ஆனா, அவரு என்னையே கொஞ்ச நேரம் ஆழமா பாத்துட்டு கேட்டாரு.
பயப்பட ஒண்ணுமில்லை, டோண்ட் ஒர்ரி… ஆக்சுவலா, லாஸ்ட் ரெண்டு நாளா அவரோட பிகேவியர்ல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியனுமே?!
நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு அப்டி தோணுது டாக்டர், ஆனா, 4 நாள் முன்னாடி அவர் பிகேவியர் தந்த ஷாக்னால, நான் அதை கவனிக்கலை. ஆனா இப்ப யோசிச்சா தெரியுது.
மனித மனம் அப்டித்தான் ஹாசிணி. ஒரு பெரிய ஷாக் கிடைக்கிறப்ப, அதை விட்டு வெளிய வந்து, நம்மைச் சுத்தி இருக்குற நல்லதுக்காக தன்னை மாத்திக்க முயற்சி பண்றதுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. நாம மட்டும் கொஞ்சம் சுதாரிப்பா இல்லாட்டி, மனசு அந்த பெரிய பிரச்சினையைப் பத்தி மட்டுமே யோசிச்சு, ஒரு சுழல் மாதிரி அதுலியே மாட்டி நின்னுக்கும். பெரிய வில்பவரும், சரியா தூண்டி விட ஒருத்தரும் இருந்தாதான் அதுல இருந்து வெளிய வர முடியும். சொல்லப்போனா சுந்தரும் அதைத்தான் ட்ரை பண்ணிட்டிருக்காரு!
ஆக்சுவலா அன்னிக்கு, எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு உண்மையைச் சொல்றதுக்குதான் நாங்க ஆஃபிஸ்க்கு வந்தோம். அந்த அதிர்ச்சியான உண்மை தெரிஞ்சி ரெண்டு நாள் சுந்தர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காரு. அதுக்கப்புறம், அவரே என்னைத் தேடி வந்தாரு. எனக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்கன்னு கேட்டுகிட்டாரு. அநேகமா இன்னும் ரெண்டு, மூணு நாள்ல அவரு சரியாகிடுவாரு. டோண்ட் ஒர்ரி!
அ… அப்டி என்ன உண்மை டாக்டர்?
அதை சுந்தர் அனுமதியில்லாம…
மாமாவுக்கு ஏதாவது விதத்துல சப்போர்ட் பண்ணனும்ன்னுதான் டாக்டர் கேக்குறேன். நீங்க தரலைன்னா, நான் நேரா மாமாகிட்டயே போய் கேட்டுருவேன். அவரால என்கிட்ட மறுக்க முடியாது. என் யோசனையெல்லாம், எனக்கு விஷயம் தெரியுதேன்னு அவருக்கு சங்கடமா இருக்கக் கூடாதுன்னுதான்! நீங்களா சொல்றீங்களா, இல்லை மாமாகிட்டயே கேட்டுக்கட்டுமா?
ஹா ஹா.. சுந்தர் சொன்னது சரிதான். ஹாசிணியை தப்பா எடை போடாதீங்க. அவகிட்ட வயசுக்கு மீறுன மெச்சூரிட்டி இருக்கு, விளையாட்டுத்தனமா இருக்கிற மாதிரி தோணினாலும், அதிரடியா பேசக்கூடிய தைரியமும் இருக்கும், நிதானமா முடிவெடுக்குற திறமையும் இருக்குன்னு… சரியாத்தான் இருக்கு. என்னையே மிரட்டுறியே?!
மாமா என்னைன்னு இல்லை, தன்னைச் சுத்தி இருக்குற எல்லாரையுமே பாசிட்டிவாதான் பாப்பாரு. அவரோட கேரக்டர் அப்படி… அப்படிப்பட்ட ஒருத்தருக்கு ஏதோ பிரச்சினைன்னா நான் எப்படி டாக்டர் வேடிக்கை பாத்துட்டு சும்மா இருக்க முடியும்? அதுனால, ப்ளீஸ், சொல்லுங்க!
இந்தப் பெண்டிரைவ்ல எல்லா டீடெயில்சும் இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், இந்த விஷயம் எதுவும் சுந்தர் மனைவி உட்பட வேற யாருக்கும் தெரியக் கூடாது. நான் இதை உங்களுக்கு கொடுக்க காரணம், சுந்தர் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பினாலயும், சுந்தர் உங்களைப் பத்தி பாசிட்டிவா சொல்லியிருக்கிறதுனாலயும் மட்டும்தான். சோ ப்ளீஸ் கேர்ஃபுல்…
ஓகே டாக்டர்..
இன்னொரு விஷயம், பாத்துட்டு சுந்தரை எதுவும் கேக்காதீங்க. எதுவா இருந்தாலும், நாளைக்கு மார்னிங் 11 மணிக்கு என்கிட்ட வாங்க.
ஓகேன்னு சொல்லிட்டு வாங்கிட்டுப் போன பெண்டிரைவ்ல இருந்ததைத்தான் போன வாரம் நீ பாத்தக்கா.
இ… இதெல்லாம் அவரு கைக்கு எப்டி போச்சு ஹாசிணி?
அடுத்த நாள், எப்படா 11 மணி ஆகும்ன்னு வெயிட் பண்ணிப் போயி, அவரைப் பாத்து நான் கேட்ட முதல் கேள்வியே இதுதான்!
இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும் டாக்டர்?
உக்காருங்க ஹாசிணி. நைட்டு ஃபுல்லா தூங்கலை போல, கண்ணெல்லாம் சிவந்திருக்கு. காஃபி குடிக்கிறீங்களா?
அதுல இருந்ததைப் பாத்த எனக்கே பயங்கர அதிர்ச்சியாவும் வேதனையாவும் இருந்ததுன்னா, மாமாவுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு எனக்குப் புரியுது. விவேக்கை ஸ்டைலா இருக்கான்னு சொன்னதுக்கு ஏன் கோவப்பட்டாருன்னு இப்பதான் தெரியுது. எல்லாத்துக்கும் மேல, இதுக்கெல்லாம் என் அக்காவும் ஒரு காரணம்ன்னு நினைக்கிறப்ப… அதுக்கு மேல பேச முடியாமல் ஹாசிணி அழுதாள்.
கொஞ்ச நேரம் அழ விட்டவர், ஹாசிணி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! இதை ஏன் உங்க அக்காவோட தப்பா பாக்குறீங்க? சுந்தர் மேலக் கூடத் தப்பு இருக்கலாம்ல? அவரு பிசினஸ் மேல கவனம் வெச்ச அளவுக்கு, ஒய்ஃப் மேல கவனம் வைக்காம இருந்திருக்கலாம், அதுனாலக் கூட அவங்க தப்பு செஞ்சிருக்கலாம்.
மண்ணாங்கட்டி… பிசினஸ் மேல கவனம் வெச்சாலும், வீட்டு மேல எப்பவுமே மாமாவுக்கு ஒரு கண்ணு இருக்கும். எங்க அப்பாவுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி, பைபாஸ் சர்ஜரி பண்ணனும்ன்னு வந்தப்ப, மாமாதான் முன்ன நின்னு எல்லாத்தையும் பாத்துகிட்டாரு. இத்தனைக்கும், அப்ப அவருக்கு பிசினஸ்ல செம டைட்டா இருந்த சமயம். இப்பியும் அக்கா ஆசைப்படறதையெல்லாம் வாங்கிக் கொடுக்க ட்ரை பண்ணுவாரு. ட்ரிப்புக்கு கூட்டிட்டு போவாரு. அவளுக்கு விருப்பமில்லைன்னு சொன்னவுடனே, மாமாவுக்கு வருத்தமாயிருந்தாலும், ஆஃபிஸ் வர வேணாம்ன்னு உட்டுட்டாரு.
அவரு, ஊருக்கு போனப்பல்லாம், இவளும் ஊர் சுத்த போனப்ப, குழந்தையை பாத்துக்காம ஏன் இப்டி பண்றன்னு கேட்டாலும், வெளிய போகக் கூடாதுன்னு ஒரு கண்டிஷனும் போட்டதில்லை! அந்தத் தப்புக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க டாக்டர்!
நீங்க சொல்றதெல்லாம் பொதுவான விஷயத்துல ஓகே ஹாசிணி. பட், அவங்களுக்குள்ள தாம்பத்ய உறவுல சுந்தரால திருப்தி படுத்த முடியாம போயிருந்தா…
கேன் யு ப்ளீஸ் ஸ்டாப் இட்! அப்டி ஒரு பிரச்சினை இருந்திருந்தா, ரெண்டு பேருமே கவுன்சிலிங் போயிருக்கலாம், இந்த மாதிரி பிரச்சினைகளை இம்ப்ரூவ் பண்றதுக்குன்னே, இப்பல்லாம் ஸ்பெஷல் ஹாஸ்பிடல்ஸ், டாக்டர்ஸ் இருக்காங்க. அங்க போயிருக்கலாம்.
இவ்ளோ பெரிய அதிர்ச்சியை தாங்கிகிட்டு, எனக்கு கவுன்சிலிங் கொடுங்கன்னு, தானா வந்து நின்ன எங்க மாமா, கண்டிப்பா தன்கிட்ட ஒரு பிரச்சினை இருக்குன்னா, அதை நிவர்த்தி பண்ண ட்ரை பண்ணியிருப்பாரு. அதை எதுவும் பண்ணாம… அதுக்காக, அக்கா பண்ணது சரியாகாது டாக்டர்!
இல்ல, மாமாவால சுத்தமா முடியலைன்னா, அவரை டைவர்ஸ் பண்ணியிருக்கனும், ஏன் இப்படி ஏமாத்தனும்? அதுல இருக்குற சில வீடியோஸ், ஆடியோஸ்லாம் பாக்கக் கூட முடியலை. அந்த விவேக் சொல்றதையெல்லாம் செய்யுறாங்க ரெண்டு பேரும். இதுக்காகத்தான், அக்கா அந்த விவேக்கையே கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை கன்வின்ஸ் பண்றா. ச்சே! இந்தக் கேவலமான நடத்தைக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் தப்புதான் டாக்டர். ஒரு டாக்டரா இருந்துட்டு நீங்களும் அதுக்கு காரணம் சொல்லாதீங்க!
இல்லை ஹாசிணி, என்ன இருந்தாலும் இதுல பாதிக்கப்பட போறது உன் அக்காதானே? உன் மாமாவா, அக்காவான்னு வந்தா, உனக்கு அக்காதானே நெருங்கிய உறவு. அவங்க பக்கம்தானே நீ நிக்கனும்?!
ஒரு ஆணுக்கு, மனைவிங்கிறதுதான் டாக்டர் இருக்குறதுலியே ரொம்ப நெருங்கின உறவு! அப்பேர்பட்ட கணவனுக்காக, மனைவியான என் அக்கா பாக்கலியே? சொந்தத் தங்கச்சின்னு கூட பாக்காம, இப்படி ஒரு கேரக்டர் கூட என்னைக் கல்யாணம் பண்ணப் பாக்குற என் அக்காவுக்கு நான் எதுக்கு சப்போர்ட் பண்ணனும்?
என் பிரச்சினை ஒண்ணுமேயில்லை. இன்னைக்கே, எனக்கு அவனைப் பிடிக்கலைன்னு சொல்லிடுவேன். இது இல்லைன்னாலும், இந்த விஷயத்துல, நான் மாமா பக்கம்தான். என் மாமா மன்னிச்சாலும், என்னால எங்கக்காவை மன்னிக்கவே முடியாது, எங்கக்காவை! ரெண்டு மூணு வருஷமா, ஏதோ வித்தியாசம் தெரியுதேன்னு நினைச்சேனே ஒழியா, இப்படி மாறியிருப்பான்னு நினைக்கவே இல்லை! எவ்ளோ அழகான குடும்பத்தை சிதைச்சுட்டா பாவி என்று உணர்ச்சி தாங்காமல் ஹாசிணி மீண்டும் அழுதாள்.
கூல் ஹாசிணி… உன்னை டெஸ்ட் பண்ணதான் அப்டில்லாம் கேள்வி கேட்டேன்!
டெஸ்ட் பண்ணவா?
எஸ்! சுந்தர் உன்னைப் பத்தி நிறையச் சொல்லியிருக்காரு. அதெல்லாம் உண்மையான்னு தெரிஞ்சிக்கதான் அப்டிக் கேட்டேன். அவர் சொன்னது கரெக்ட்தான். ஆக்சுவலா இந்த விஷயத்துல ஹாசிணியைக் கூட நம்ப வேணாம், என்ன இருந்தாலும் சொந்த அக்காவுக்காகதான் பேசுவாங்கன்னு நான் கூட சொன்னேன். ஆனா அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
எ… என்னச் சொன்னாரு?
ஹாசிணி அப்படி பண்ண மாட்டா! யாராயிருந்தாலும் தப்பு தப்புதான்னு சொல்லுவா. எப்டின்னாலும் என்னால இதை அவகிட்ட சொல்ல முடியாது. ஏன்னா, என்னை விட அவ ரொம்ப மனசொடைஞ்சு போயிடுவா. இப்டி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவா. அவ சின்ன பொண்ணு! என் தேவைக்காகா, ஜாலியா இருக்க வேண்டிய வயசுல ஏகப்பட்ட வேலை கொடுத்திருக்கேனோன்னு எனக்கு ஏற்கனவே ஒரு வருத்தம் இருக்கு! தவிர, அவ வயசுக்கு இதையெல்லாம் ஏன் பாக்கனும். விடுங்கன்னு சொன்னாரு! கரெக்டாதான் சொல்லியிருக்காரு.
ப்ப்ச்… இத்தனை அதிர்ச்சியிலும் மாமா மத்தவங்களுக்காக பாக்குறாரு. அப்பேர்பட்டவருக்குதான் எங்கக்கா துரோகத்தை பரிசா கொடுத்திருக்கா! ப்ப்ச்ச்… இ… இப்ப மாமா எப்டியிருக்காரு டாக்டர். அ… அவரை பாக்க முடியுமா? வீட்டுக்கே வர்றதில்லை, எங்க இருக்காரு?
அவசியம் பாக்கனுமா? நான் ஏன் யோசிக்கிறேன்னா, அவரு மேல பரிதாபப் பார்வை விழுறதை, ஒரு டாக்டரா நான் விரும்பலை.
நா… கண்டிப்பா பாக்கனும் டாக்டர்! எ… என்னால, இந்த விஷயத்துல நடிக்க முடியாது! அடுத்து நான் எப்ப அவரைப் பாத்தாலும், உடைஞ்சுடுவேன். அதுனால, தனியா இப்பயே பாத்துடுறேன் ப்ளீஸ்!
ம்ம்.. ஓகே, கொஞ்சம் முன்னாடி எதுக்கு டெஸ்ட் பண்ணேன்னு கேட்டீங்களே! இதுக்குதான். சுந்தர் சொன்ன மாதிரி, நீங்க இவ்ளோ அன்பு வெச்சிருக்கீங்கன்னா, கண்டிப்பா நீங்க உடனே சுந்தரைப் பாக்கனும்ன்னு துடிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அப்டி, அவரை பாக்கப் போறதுக்கு முன்னாடி, இந்த விஷயத்துல உங்க நிலைப்பாடு என்னன்னு எனக்குத் தெரிஞ்சிக்கதான் அதெல்லாம் கேட்டேன். இந்தச் சமயத்துல, அவர் மேலயும் தப்பு இருக்கலாம்னு நினைக்கக் கூடிய யாரையும், அவரு சந்திக்கக் வேணாம்ன்னுதான் அதெல்லாம் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
பாத்த கொஞ்ச நாளான உங்களுக்கே, அவரோட மனநிலை இவ்ளோ அக்கறை இருக்கும் போது, எனக்கு இருக்காதா டாக்டர். ப்ளீஸ், நான் அவரைப் பாக்கனும்!
இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே நீங்க? இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
அன்னிக்கு ஆஃபிஸ்க்கு என் கூட ஒருத்தர் வந்தாரில்லையா?
ஆமா!
அவருக்குதான் முதல்ல இது தெரியும். அவரு வேற யாருமில்லை. அந்த வீடியோல இருந்த கீதாவோட ஹஸ்பெண்ட்தான் அவரு.
என்ன ஹாசிணி சொல்ற? கீதாவோட ஹஸ்பெண்டா?
ஆமாக்கா, அவருக்குதான் விஷயம் முதல்ல தெரியுமாம்.
அ… அப்டீனா?
எஸ், கீதாவோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்குறதுக்கான காரணம் இதான். இப்ப, அவ சொந்த ஊருல இருக்கா!
ஹரிணிக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை. மனம் மிகப்பெரிய வெறுமையில் இருந்தது.
மாமா மேல என்னோட அன்பு எப்ப தெரியுமாக்கா அதிகமாச்சு? விவேக்கைப் பத்தி சொன்னதுக்கு என்னைத் திட்டுன மாமா, அடுத்த நாளே என்கிட்ட வந்து, ஓவரா கோவப்பட்டுட்டேன் ஹாசிணி, அவன் உனக்கு மேட்ச்சே இல்லை, அதை நீ புரிஞ்சிக்கலியோன்னு நினைச்சுதான் கோபப்பட்டுட்டேன், சாரின்னு சொன்னாரு!
அன்னிக்கு ஈவ்னிங்தான், அவரை ஃபாலோ பண்ணிட்டுப் போனதே! அன்னிக்கு நைட்டு, எல்லா உண்மையும் தெரிஞ்ச பின்னாடி, இத்தனைக்குப் பின்னாடியும், தனக்கு துரோகம் தெரிஞ்சவளோட தங்கச்சியான எனக்கு நல்ல வாழ்க்கை அமையனும், நம்ம குடும்பம் வேதனைப் படக் கூடாதுன்னு யோசிச்சாரு பாத்தியா, அங்கதான் அவரை வேற மாதிரி பாக்க ஆரம்பிச்சேன். அப்பியும், என் மனசுல காதல்லாம் இல்லை. வெறும் அன்பு மட்டுந்தான் இருந்துது.
அ… அப்டீன்னா, அதுவரைக்கும் நீங்க லவ்வே பண்ணலையா? இந்த விஷயம்லாம் தெரிஞ்ச பின்னாடிதான் இந்த லவ் ஸ்டார்ட் ஆச்சா…?
நீ எங்களை என்னான்னு நினைச்சக்கா? எப்படா சான்ஸ் கிடைக்கும், எப்டி ஒண்ணு சேரனும்ன்னு பாத்துட்டிருந்தோம்ன்னா? இல்லை, படுக்குறதுக்கு காரணம் கிடைச்சதுன்னு சந்தோஷப்பட்டோம்ன்னா?
ஒண்ணு தெரிஞ்சிக்கோ, கடைசி வரைக்கும், இதுக்குப் பேரு காதல் இல்லை ஹாசிணி, பரிதாபம், உணர்ச்சி வசப்பாட்டு, லூசு மாதிரி உளறாதன்னு, மாமா சொல்லிட்டிருந்தாரு. நான் சொன்னதை கேக்கவேயில்லை. அவரை ஒத்துக்க வைக்கதான், நான் விவேக்கை கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன்.
என்னடி சொல்ற?
பின்ன, அந்த நாயைக் கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா? இல்லை, கல்யாணம் பண்ணி அவனை திருத்துறதுக்கு நான் என்ன அந்த காலத்து நளாயினியா? அப்டி பண்ணானாச்சும் மாமா என் லவ்வை ஏத்துக்குவாருன்னுதான் ஓகே சொன்னேன். ஆனா அவரு, நான் விவேக்கை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன பின்னாடியும், இப்டில்லாம் பண்னா நான் மனசு மாற மாட்டேன், என்னை பிளாக்மெயில் பண்றியா, ஏன் நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக்குறன்னு என்னைத் திட்டுனாரே ஒழிய, ஏத்துக்கவே இல்லை. அவரை ஒத்துக்க வைக்குறதுக்குள்ள, போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!
அப்புறம் எ… எப்டி அவரு மனசு மாறுனாரு?
ஹரிணியின் கேள்வி, ஹாசிணியின் உதடுகளில் புன்னகையையும், அவள் மனதில் சுந்தருடனான நினைவுகளையும் வரவைத்தது.
அன்று, டாக்டருடன் கெஸ்ட் ஹவுஸ் வந்த ஹாசிணியைப் பார்த்த சுந்தருக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு புன்னகை செய்தான்.
சுந்தரிடம் தைரியமாய் பேச வேண்டும், இது ஒண்ணுமில்லை மாமா என்று ஊக்கமூட்ட வேண்டும் என்று எதெதையோ யோசித்து வைத்திருந்த ஹாசிணி, சுந்தரைப் பார்த்தவுடன், தன்னை மீறி விசும்ப ஆரம்பித்தாள். தன்னைப் பார்த்ததும், அவன் புன்னகையைக் கண்டவள், மனம் தாங்காமல், சாரி மாமா, ரியல்லி சாரி என்று அவன் தோள்களிலேயே சாய்ந்து கேவினாள்.
மனதுக்கு நெருக்கமான ஒருவருக்கு வலி என்றால், இயல்பாக எழும் கண்ணீரை எப்படி அடக்க முடியும்?!
சுந்தருக்கு தான் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டும் என்று நினைத்து வந்த ஹாசிணியை, சுந்தர் தேற்றிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் விசும்பியவள், சத்தியமா இதையெல்லாம் எதிர்பாக்கலை மாமா, அவ எப்டி இப்டி மாறுனான்னு தெரியலை மாமா என்று உளறியவள், மெல்ல திடம் பெற ஆரம்பித்தாள்!
திடம் பெற்று விலகி அமர்ந்தவள், சிறிது நேர மவுனத்திற்க்குப் பின்பே கேட்டாள்.
எப்டி மாமா இருக்கீங்க?
இன்னும் அவள் கண்களில் ஈரம் இருந்தது. அது அவள் மனதில், அவன்பால் எப்போதும் இருக்கும் அன்பின் ஈரம்.
ம்ம்… இருக்கேன் என்று எழுந்த சுந்தர், ஜன்னலில் வேடிக்கை பார்த்தான். நீண்ட நேரம் அங்கு மவுனம் மட்டுமே நிலவியது. சுந்தருக்கு, ஹாசிணி தன்னையே பார்த்தபடி காத்திருப்பதை உணர முடிந்தது. பெரு மூச்சு விட்டவன், வெளியே வெறித்த படி நின்று சொல்ல ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும், தான் பதில் சொல்லும் வரை ஹாசிணி விட மாட்டாள் என்று.
முதல்ல நம்ப முடியலை ஹாசிணி! பொய்யா இருக்கும், மார்ஃபிங்கா இருக்கும்ன்னு கூட நினைச்சேன். ஆனா உண்மைன்னு தெரிஞ்ச பின்னாடி தாங்க முடியலை! இவ்ளோ நம்பிக்கை வெச்சது தப்பா, அவளை கண்ட்ரோல் பண்ணாம விட்டது தப்பான்னு கஷ்டமா இருந்துச்சு. எல்லாத்தையும் விட, என்னை அவங்க முட்டாளா நினைச்சிருக்காங்களே, இத்தனை நாளா இது தெரியாம, இன்னொருத்தர் வந்து சொல்ற வரைக்கும் தெரியாம இருந்திருக்கோமேங்கிறதத்தான் என்னால தாங்க முடியலை!
அதுக்குப் பேரு முட்டாள்தனம் இல்லை மாமா. நம்பிக்கை. கணவன் மனைவி உறவுக்குள்ள அடிப்படையே நம்பிக்கைதான். அப்படி ஒரு நம்பிக்கையை சிதைச்சதுக்கு, அக்காதான் ஃபீல் பண்ணனும்! நீங்க என்ன தப்பு பண்ணீங்க!
மவுனமாய் புன்னகைத்த சுந்தர்! டாக்டரும் இதைத்தான் சொன்னாரு! முதல்ல கண்ணாபிண்ணான்னு கோபம் வந்துது. அவங்களைக் கொன்னுடலாம்ன்னு கூடத் தோணுச்சு! அந்த ஃபீல் நரகம் ஹாசிணி! தோல்விகளை தாங்கிக்கலாம், துரோகங்களை?! அதுவும் ரொம்ப நம்பினவங்ககிட்ட இருந்து வர்ற துரோகத்தை?! ப்ப்ச்… என்று சுவரில் ஓங்கிக் குத்தினான்!
மாமா…
சாரி… கொஞ்சம் எமோஷனலாயிட்டேன் என்றவன் தொடர்ந்தான். ரெண்டு நாள் ஒரு மாதிரி பிளாங்க்கா இருந்துது. எது மேலயும் பிடிப்பே இல்லை. எதுக்காக வாழனும், இனி யாரிருக்கா, ஏற்கனவே அப்பா, அம்மா இல்லை, இப்ப இப்படி ஒரு துரோகம், அதுவும் ஹரிணிகிட்ட இருந்தே, என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம் அப்டின்னுல்லாம் தோணுச்சு!
அவன் பேச பேச, ஹாசிணி விசும்ப ஆரம்பித்தாள்! அவன வார்த்தைகளில் தெறித்த வலி, அவள் மனதைப் பிராண்டியது.
அந்த வலி, கோபமா மாறி, ஹாரிணியை ஏதாவது செய்யனும்ன்னு ஆவேசமா இருந்தப்ப, என்னை அமைதிப்படுத்துனது, விவேக்கோட ஞாபகந்தான்!
விவேக்கா?
ம்ம்ம்… நான் எதைச் செஞ்சாலும் பாதிப்பு எனக்கும், என் குழந்தைக்கும்தான் வரும். தப்பு செஞ்சதுக்காக ஹரிணிக்கு தண்டனை. ஆனா, எதுவுமே செய்யாம, நானும், என் குழந்தையும் ஏன் கஷ்டப்படனும்? தவிர, எல்லாத் தப்பும் பண்ணிட்டு, அந்த விவேக், கூலா இன்னொரு தப்பைப் பண்ண போயிடுவான், நான் கஷ்டப்படனுமான்னு தோணுச்சு! நான் அவசரப்பட்டு எந்த முடிவை எடுத்தாலும், நான் தோத்துடுவேன், அதைத்தான் அந்த விவேக் எதிர்பாக்குறான்னு தோணுச்சு. அப்பதான் முடிவெடுத்தேன்!
அடுத்து நான் எந்த முடிவை எடுத்தாலும், அது உணர்ச்சி வசப்பட்டு இருக்கக் கூடாது. தெளிவா, யோசிச்சு எடுத்ததா இருக்கனும்ன்னு! அதுனாலத்தான், நானே கவுன்சிலிங்க்கு போனேன்!
சுந்தர் மிகச் சாதாரணமாகச் சொன்னாலும், அவன் எவ்வளவு வலிகளை அடைந்திருப்பான் என்பதை ஹாசிணியால் உணர முடிந்தது.
எப்போதும், சுந்தர் என்றால் அவளுக்கு ஒரு சின்ன பிரமிப்பு இருக்கும்.
தான் அதிகம் பேசாத போதே, தன் குடும்பம் தன்னை தவறாகப் புரிந்த போதும் தன்னை புரிந்து கொண்டவன் என்பதால் ஆரம்பமான அன்பு, போகப்போக, அவனுடைய உழைப்பு, திறமை, நேர்மையான சிந்தனை, அணுகும் விதம் எல்லாவற்றையும் பார்த்து அது இன்னும் அதிகமாகியிருக்கிறது. தன் கண்களை மட்டும் பார்த்து பேசும் அவன் நேர்மையின் மீது மரியாதை வந்திருக்கிறது.
ஹரிணி ஆஃபிஸ் வரலைன்னா, கண்டிஷனா வரச் சொல்லலாம்ல என்று கேட்டதற்க்கு, என் விருப்பத்துக்காக, அவளுக்கு பிடிக்காததை ஏன் செய்ய வைக்கனும் என்று மனைவியை அடக்காமால் இருப்பவனின் மீது சின்ன ஈர்ப்பு வந்திருக்கிறது.
இப்போது, இத்தனை துரோகத்திற்க்குப் பின்னும், சுதாரித்து எழ முயலும் அவனது ஆண்மையைக் கண்டு பெரும் பிரமிப்படைந்தாள். தான் எடுப்பது தெளிவான முடிவாக இருக்க வேண்டும் என்று முயற்ச்சிக்கும் செயலில் தெரிந்த நிமிர்வை, சோதனைகளை மீறி வர எடுக்கும் முயற்ச்சிகளை, அதில் தெரியும் துணிச்சலையும், வீரத்தையும் கண்டு வியந்தாள்.
துணிச்சல், வீரம்ங்கிறது பத்து பேரை அடிக்கிறதில்லை ஹாசிணி, முடிஞ்சா 10 பேர் வாழ்க்கை நல்லாயிருக்க வழி பண்றதுன்னு சுந்தர் கேசுவலாய் சொல்லும் வார்த்தையின் அர்த்தம் புரிந்த போது மலைத்து நின்றாள்.
மனைவியை, தன் அம்மாவுடன் பொறுத்திப் பார்க்கும் ஆண்கள் மிகக் குறைவு. அப்படியே இருந்தாலும், அது சாப்பாடு மாதிரியான விஷயத்தில்தான் இருக்கும். ஆனால், தன் கணவன், தன் தந்தையைப் போல் இருக்க வேண்டும், அவரைப் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற பெண்கள் நம்மூரில் அதிகம்.
ஹாசிணிக்கு அந்த எண்ணம் இல்லாவிடினும், அவளையறியாமலேயே, தன் கணவனும் சுந்தரைப் போன்றே, அன்பான, தோழமையான, சரியான, திறமையான, ஆண் மகனாக இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் மனதில் தோன்றியிருந்தது.
ஒரு வருடத்திற்க்கு முன்பு, உனக்கு மாப்ளை பாக்கலாம்ன்னு இருக்கோம், உனக்கு எப்படிப்பட்ட மாப்ளை வேணும் என்று கேட்டவுடன், அவள் மனதில் தோன்றிய உணர்வு, மாமா மாதிரி இருக்கனும் என்பதுதான்! அதற்க்காக, அக்கா கணவனை, தன் கணவனாக்க அவள் நினைத்ததே இல்லை! தந்தையைப் போல் கணவன் இருக்க வேண்டும் என்பவர்கள் அப்படி நினைக்கிறார்களா என்ன?
இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும், நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு என்று முடிவெடுத்தாலும், அவளுடைய ஆதர்ச நாயகன், எப்போதும் சுந்தரே. அப்படிப்பட்டவனுக்கு துரோகத்தின் வலி எனும் போது வருத்தமுற்றவள், அந்த நிலையிலும், அவனுடைய தெளிவான முடிவு, அவள் மனதில் அவன் மீதான பிம்பத்தை மிகப் பிரமாண்டமாக்கியது!
இதுவரை, நல்ல வாழ்க்கையை கெடுத்துகிட்டியேக்கா என்று ஹரிணியை நினைத்துக் கொண்டிருந்தவள், அந்தத் தருணத்தில் இருந்து, எனக்கு இப்படி ஒரு புருஷன் அமைஞ்சிருந்தா எவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பேன் என்று நினைக்க ஆரம்பித்தாள்.
சுந்தரையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில், முதன் முதலாக, அக்காவின் கணவன் என்ற பார்வை மறைந்து, ஒரு ஆண்மகனாகப் பார்க்கத் தொடங்கினாள்.
நம் கண்கள் எப்போதும் ஒரு கண்ணாடியை அணிந்திருக்கும். சொல்லப் போனால், அதுதான் பல சமயங்களில் தறி கெட்டு ஓடும் நம் பார்வையை நேர் படுத்துகிறது! பார்க்கும் பெண்களிடமெல்லாம் அலைபாயும் மனது, தங்கையிடம் அலைபாயாமல் இருப்பதற்க்கும், ஆண்ட்டிகளைக் கண்டுச் சலனப்படும் ஆண், வீட்டில் அமைதியாக இருப்பதற்கெல்லாம் காரணம், நாகரீகம் என்ற கண்ணாடிதான்!
தன் மனைவி என்றவுடன் இயல்பாகத் தோன்றும் உரிமையுணர்வும், அடுத்தவன் மனைவி என்றவுடன் மனதில் எழும் காம உணர்வுக்கும் அடிப்படை ஒரே கண்ணாடிதான்.
இதுவரை தன் அக்காவின் கணவன் என்ற கண்ணாடியின் வழியாகவே சுந்தரைப் பார்த்து வியந்திருந்த ஹாசிணி, முதன் முறையாக, ஒரு இளம்பெண், ஆண்மை ததும்பும் ஒரு ஆணைப் பார்க்கும் பார்வையுடன் பார்க்கத் தொடங்கினாள்! இது எதுவும், அவள் தெரிந்து செய்யவில்லை. இத்தனை நாள் இருந்த அதே குணநலத்துடன் தான் அவன் இருக்கிறான். புதிதாக எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. இனி, சுந்தர் ஹரிணியை மனைவியாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற ஒன்றைத் தவிர!
சுதாரித்து நிமிர்ந்த ஹாசிணி, தான் மேலும் சுந்தரை எரிச்சலூட்டக் கூடாது, இப்ப இருக்கும் நிலையில், இந்த உணர்வுகள் எல்லாம் அபத்தம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், மெல்லச் சொன்னாள்!
நீங்க எந்த முடிவை எடுக்குறதா இருந்தாலும், என் சப்போர்ட் இருக்கும் மாமா! எங்க அப்பா, அம்மாவுக்காக யோசிக்காதீங்க. நான் பாத்துக்குறேன்.
திடீரென்று பெரிய மனுஷியாய் பேசியவளில் வார்த்தையிலும், தனக்காக உருகும் அந்த நேசத்திலும் மீண்ட சுந்தர், அவளைப் பார்த்து புன்னகை செய்தான். பின் அவளையேப் பார்த்தவன், பின் சொன்னான்.
சரி வா போலாம்!
எங்க?
வா சொல்றேன் என்று, அவர்களுக்குத் தனிமை கொடுத்து வேலைகளில் மூழ்கியிருந்த டாக்டரையும் அழைத்துக் கொண்டு, சாப்பிடச் சென்றான்.
புரியாமல் பார்த்த ஹாசிணியை, எப்டியும் நேத்து நைட்டும் காலைலியும் சாப்ட்டிருக்க மாட்ட. தூக்கம் வேற கெட்டிருக்க. முதல்ல சாப்டு என்று கூறியவனின் அன்பில் திகைத்தாள் ஹாசிணி! அவன் சொன்னது உண்மைதான்.
தடுமாற ஆரம்பித்திருந்த அவள் மனதிற்க்கு இன்னொன்றும் ஞாபகத்திற்க்கு வந்தது. அது, என்னிக்காவுது ஐ லவ் யுன்னு சொல்றீங்களா, ரொமாண்டிக்காவே பேசத் தெரியலை என்று கல்யாணமான புதிதில், ஹரிணி அவனிடம் குறைபட்டுக் கொள்ளும் சமயங்களிலெல்லாம், சுந்தர் சொல்லும் பதில்.
லவ்வைச் சொல்ல, லவ் யு ன்னுதான் சொல்லனும்ன்னு அவசியமில்லை ஹரிணி, சாப்ட்டியான்னு கேக்குறதும் ஒரு விதத்துல லவ்வைச் சொல்றதுதான் என்று.
புன்னகைத்தவள், என்னைச் சாப்பிடச் சொல்றது இருக்கட்டும், முதல்ல நீங்க சாப்பிடுங்க. நாலு நாள்ல நல்லா இளைச்சிட்டீங்க என்றவள், இயல்பாக இருவருக்கும் பரிமாறியபடியே சாப்பிட்டாள். குறைவாகச் சாப்பிட்ட சுந்தரை, நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்கன்னு எனக்குத் தெரியாது, கம்முன்னு சாப்பிடுங்க என்று அதட்டிச் சாப்பிட வைத்தாள்!
நீங்க பொறுமையா யோசிச்சு எந்த முடிவு வேணா எடுங்க. ஆனா, நாளையில இருந்து ஆஃபிஸ் வாங்க, உங்களை இப்படிப் பாக்க புடிக்கலை, நல்லா ட்ரிம்மா எப்பியும் போல வாங்க, நான் இப்ப ஆஃபிஸ் போயி பாத்துக்குறேன் என்றவளிடம், புன்னகையுடன் தலையாட்டினான் சுந்தர்.
நான் ஹாசிணியை ட்ராப் பண்ணிட்டு ஹாஸ்பிடல் போறேன் என்று உடன் வந்த டாக்டர், வழியில் சொன்னார்.
நான் கூட, சுந்தர் உங்களைப் பாத்தா இன்னும் டவுனாகிடுவாரு, அசிங்கமா ஃபீல் பண்ணுவாருன்னு நினைச்சேன் ஹாசிணி! ஆனா, உங்ககிட்ட பேசின பின்னாடி அவர் நல்லாத் தெளிவாயிட்டாரு.
என்ன டாக்டர் சொல்றீங்க?
எஸ்! என்னதான் அவரு கவுன்சிலிங் வந்தாலும், அவர் மனசுல இருக்குற கோபம், வலியை எல்லாம் கண்ட்ரோல் பண்ணப் பாத்தாலும், அவரோட அடி மனசுல, ஒரு சுய பச்சாதாபம் இருந்துது ஹாசிணி. தனக்கு ஏன் இது நடந்துதுன்னு ஒரு ஆழமான வடு இருந்துது.
ஆனா உன்கிட்ட மனசு விட்டுப் பேசின பின்னாடி அவரு இன்னும் தெளிவாயிட்டாரு. லேடீஸ் வாய் விட்டு அழுறதுனால, சில வலிகள் குறைஞ்சுடும். ஆனா, ஆம்பிளைங்க அழக் கூடாதுன்னு சொல்லிச் சொல்லி வளக்குறதுனால, அது மனசுலியே அடக்கி வெச்சிடுறாங்க. இன்னிக்கு உன்கிட்ட பேசுனது, மனசுல இருக்குறதையெல்லாம் சொன்னது எல்லாம், அவருக்கு ஒரு அவுட்லெட்டா இருக்கும்.
எல்லாம் தாண்டி, நீ சரியா சாப்ட்டிருக்கமாட்டன்னு கவனிச்சாரு பாத்தியா, அங்கதான் எனக்கு நம்பிக்கை வந்துது. அவரு தேறிட்டாருன்னு!
உ… உண்மையாவா டாக்டர்!
எஸ்… பொறுப்புங்கிறது எந்தளவுக்கு சுமையோ, அதே அளவுக்கு சுகமும் கூட! விவேக், உங்கக்கா மாதிரி ஆட்களுக்கு, எந்தப் பொறுப்பும் இல்லை, எடுத்துக்கவும் மாட்டாங்க. ஆனா சுந்தர் மாதிரி ஆட்களால சும்மா இருக்க முடியாது. தன்னை நம்பி வந்தவங்களைக் காப்பாத்தனும், சந்தோஷமா வெச்சுக்கனும்னு நினைச்சு ஓடிட்டு இருக்குறவங்களுக்கு, பொறுப்புங்கிறது சுகம்தான்!
இத்தனை நாளா, எங்க கூட கடமைக்கு சாப்ட்டவரு, இன்னிக்கு கொஞ்சம் உரிமையா, நீ அதட்டிச் சொன்ன உடனே ஒழுங்கா சாப்ட்டாரு பாத்தியா, அப்பியே தெரிஞ்சிடுச்சு, நீ வந்தது ரொம்ப நல்லதுன்னு.
பல ஆம்பிளைங்க வெளியதான் ரஃபா இருக்குற மாதிரி தோணும். ஆனா, சில துரோகங்களை எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாம, கேசுவலா செய்யுற திறமை சில பெண்களுக்கு இருக்கிறது மாதிரி, ஆண்களுக்குக் கூட இருக்காது!
பெரு மூச்சு விட்ட ஹாசிணி,
உண்மைதான் டாக்டர். இதுல முக்கியக் காரணம் விவேக்னாலும், துரோகம் பண்ணது என்னமோ, எங்க அக்கா, கீதா மாதிரி ஆட்கள்தான். சொல்லப் போனா, விவேக் தப்புதான் பண்ணான். ஆனா இவிங்கதான்…… ப்ப்ச்!
சரி விடு ஹாசிணி! ஆக்சுவலி, உன்னைப் பாக்குறப்ப, என் தங்கச்சிதான் ஞாபகத்துக்கு வர்றா! உன்னை விட பெரியவ அவ. ஒரு நாள் இண்ட்ரடியுஸ் பண்ணி வைக்குறேன்! அவளுக்கும் உன்னை ரொம்பப் புடிக்கும்
தன் தங்கையைப் பற்றி சொன்னவுடன், டாக்டரின் முகம் மிகக் கனிவாக மாறியதை, புன்னகையுடன் பார்த்த ஹாசிணி சொன்னாள். கண்டிப்பா மீட் பண்ணனும் டாக்டர். அப்புறம், உங்க ஒய்ஃப் பேரு என்ன? எத்தனை குழந்தைங்க?
ஓடிக் கொண்டிருந்த வண்டி, சட்டென்று ஓரமாய் நின்றது! இளகியிருந்த முகம், கொஞ்சம் கொஞ்சமாய் கடினமாகியது. பின் இறுகிய குரலில் டாக்டர் சொன்னார்.
எ… என் மனைவி பேரு அபர்ணா!