Chapter 27
அ… அண்ணா?
உன்னைப் பாத்தா என் தங்கச்சி ஞாபகம் வருது என்று சொன்னதாலா, அல்லது டாக்டர், தன் மனைவி பெயரைச் சொன்னவுடன், அந்த அபர்ணாவாக இருக்கக் கூடாதே என்ற பதைபதைப்பில், இயல்பாக அண்ணா என்று பாசமாக அழைத்தாளா என்று தெரியவில்லை.
கீதா, ஹரிணி, விவேக் எபிசோடிலேயே அபர்ணாவைப் பற்றி இருந்தாலும், அந்த பென் டிரைவில், டிடெக்டிவ் ஏஜென்சியின் ரிப்போர்ட்டும், அபர்ணாவைப் பற்றி வேறு சில ஆதாரங்களும் இருந்தது. அதனாலேயே, அந்தப் பெயருக்கு ஹாசிணி கடும் அதிர்ச்சி அடைந்தாள்.
எஸ்… நீ நினைக்கிற அதே அபர்ணாதான்!
சா… சரிண்ணா!
தனக்குப் பெரிதும் அறிமுகமாகியிருக்காத, முன் பின் தெரியாத ஒரு பெண், தனக்காக உண்மையாக வருந்துவதைக் கண்டு புன்னகைத்தார் டாக்டர். சுந்தர் சொன்னது போல், இந்தப் பெண் கொஞ்சம் ஸ்பெஷல்தான்!
ரொம்ப நாளாவே எனக்கு அபர்ணாவோட பிகேவியர்ல நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது! முண்ணுக்குப் பின் முரணா பல விஷயங்கள் இருந்துது. இந்தத் தப்பு செய்யுறவங்க, கொஞ்சம் நாளான பின்னாடி, தான் யாருக்கும் எந்த டவுட்டும் வராத அளவுக்கு சரியா செய்யுறோம்ன்னு நினைச்சுக்குறாங்க. ஆனா, எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும், தொடர்ச்சியா ஒரு தப்பைப் பண்ண முடியாதுங்கிற உண்மை அவங்களுக்கு தெரியறதில்லை.
நான், அபர்ணா ஏதோ தப்பு பண்றான்னு நல்லாத் தெரிஞ்ச பின்னாடித்தான் டிடெக்டிவ்கிட்டயே போனேன். இன்ஃபாக்ட், நான் போனதும் கூட, எவிடென்ஸ் வேணும்கிறதுக்காகவும், அவ எந்தளவு போயிருக்கான்னு தெரிஞ்சக்கவும்தான்.
என்னதான் மனசு எல்லாத்துக்கும் தயாரா இருந்தாலும், ரிப்போர்ட்சை எல்லாம் பாத்துட்டு என்னால அதை ஜீரணிக்கவே முடியலை. இது ஏதோ கொஞ்ச நாளாத்தான் நடக்குது, சந்தர்ப்ப சூழ்நிலை அப்டி, அவளோட ஃபிரண்டு கூடத்தான் அப்டில்லாம் எதுவும் இல்லாம, இதுக்குன்னு இவளே தேடிப் போயிருக்காங்கிறப்ப மனசு கேக்கலை. சரியா, அந்தச் சமயம்தான் கீதாவோட ஹஸ்பெண்ட்டும் என்னைத் தேடி வந்தாரு.
அபர்ணாவோட தப்புகள்ல, கீதாவோட பேரு வர்றது ரொம்பக் கம்மிதான். ஆனா, கீதாவும், விவேக்கும் பேசுன பல இடங்கள்ல அபர்ணா பேரு வந்திருக்கு. அதுனால விஷயம் தெரிஞ்ச உடனேயே என்கிட்டயும் உண்மையைச் சொல்ல வந்தாலும், ரொம்பத் தயங்கித் தயங்கிதான் விஷயத்தை சொன்னாரு. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேந்துதான், சுந்தருக்கும் விஷயத்தைச் சொல்ல வந்தோம்.
ஆக்சுவலா, சுந்தர் என்கிட்ட கவுன்சிலிங் வர்றேன்னு சொன்னாலும், நாங்க மூணு பேருமே ஒருத்தருக்கொருத்தர் கவுன்சிலிங் மாதிரி, மனசு விட்டுப் பேசிகிட்டோம். கீதாவோட ஹஸ்பெண்ட் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டப்ப, அவரோட பொண்ணு பேரைச் சொல்லி அவரை தேத்துனது கூட சுந்தர்தான்.
மாமாவா? அவ்ளோ தெளிவா இருக்கிறவரு, ஏன் உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருந்தாருன்னு சொன்னீங்க?
எந்தப் பிரச்சினையையுமே தள்ளி நின்னு பாக்கிறப்பதான் அதைச் சரியா அணுக முடியும் ஹாசிணி. எல்லாருக்கும் துரோகத்தோட வலி ஒண்ணுதான்னாலும், அபர்ணாவும் சரி, கீதாவும் சரி, சில பல வருடங்களாவே, எங்ககிட்ட இருந்து மனசளவுல ரொம்ப விலகிட்டாங்க.
குடும்பமா இருக்கனும், கல்லூரி படிக்கிற பசங்க வந்தாச்சு; இதுக்கு மேல ஏன் சண்டை போடனும், சமூகத்துல என்ன சொல்லுவாங்க இது மாதிரியான விஷயங்கள்தான் பிரியாம இருந்ததுக்கு காரணம். தவிர, நாங்க வேலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மனைவிக்கு கொடுக்கலையோன்னு ஒரு சின்ன குற்ற உணர்வு எங்களுக்குள்ள இருந்துது.
எப்டின்னாலும், இந்த இடைவெளி வந்ததுக்கு, கணவன்ங்கிற முறையில, என் சைடும் நிறைய தப்பு இருக்குமில்லை, இதுக்கும் மேல, புதுசா இன்னொரு கல்யாணமா பண்ணப் போறோம், அப்டி ஏன் பிரியனும்னு நினைச்சுவிட்டாலும், மனசளவுல நானும், அபர்ணவும் ரொம்ப விலகிட்டோம்.
கீதா ஹஸ்பெண்டுக்கும் அப்படித்தான். அலுவலகத்தில் தன்னைப் பலரும் பெரிதாக மதிக்கும் போது, அதைப் பொருட்டாகவே மதிக்காத கீதா மேல அவருக்கு பயங்கர வருத்தம். அதுனாலியே, தனக்கு எங்க ரெகக்னிஷன் இருக்கோ, அங்க கவனத்தை செலுத்தி முன்னேற ஆரம்பிச்சிட்டாரு. தன்கிட்ட எப்டி நடந்தாலும், தன் பொண்ணை வளர்க்கிற விதத்துல கீதாகிட்ட குறையே சொல்லிட முடியாதுங்கிறதுனாலியே, அவரும் பிரிவைப் பத்தி நினைக்கவே இல்லை.
மனைவியா பாக்குறதை நிறுத்தி, எங்க குழந்தைகளோட அம்மான்னு பாக்க ஆரம்பிச்சிட்டோம். அதுனால, எங்க ரெண்டு பேருக்கும் இது சாதாரண துரோகம் மட்டுமே.
ஆனா, சுந்தருக்கு இது நம்பிக்கை துரோகம். தன் மனைவி, தனக்கு செஞ்ச துரோகம். தனக்கு துரோகம் செய்யுறதுக்காக, தன் குழந்தையோட அம்மாங்கிற கடமையையும் சரியா செய்யாத அளவுக்கான துரோகம். எந்தக் காரணமுமே இல்லாம, இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண எப்டி மனசு வந்திருக்கும்? எல்லாம் பண்ணிட்டு வந்து, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம எப்டி என்கிட்டயே சிரிச்சு பேச முடியுது? அவனையே, அவளோட சொந்தத் தங்கச்சிக்கு மாப்ளையா எப்டி பாக்க முடியுதுன்னு ஏகப்பட்ட கேள்விகள்!
சுந்தர், எங்க ரெண்டு பேரையும் விட ரொம்பவே வயசுல சின்னவரு! இந்த ஏஜ்லியே, தன் மனைவி, தன்னை விட்டுட்டு வேற ஒருத்தனைத் தேடி போயிருக்கான்னா, தாம்பத்ய விஷயத்துல தன்னால, தன் மனைவியைத் திருப்தி படுத்த முடியலையோன்னுல்லாம் டவுட்டு வர ஆரம்பிச்சிடுச்சி.
அ… அண்ணா!
கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் மனம் வலித்தது. மனைவியின் துரோகம், ஒரு ஆணுக்கு சைக்காலஜிக்கலாக என்ன விதமான வலியைத் தரும் என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.
தான் யோசிக்கிற விதம் ரொம்ப தப்புன்னு அவரு சுதாரிச்சிகிட்டதுனாலத்தான் கவுன்சிலிங்க்கே வந்தாரு. நான் டாக்டர், இந்த ஃபீல்டுங்கிறதுனால வசதியா போச்சுன்னாலும், உண்மையான கவுன்சிலிங், நாங்க மூணு பேரும் மனசு விட்டு பேசிகிட்டப்பதான் கிடைச்சுது!.
இருந்தாலும் அவரு அடிமனசுல, நான் இவ்ளோ நல்லவனா இருந்தும், முழு உரிமை கொடுத்தும், தன் மனைவியே தனக்கு துரோகம் பண்ணிட்டாங்ககிறதை அவரால ஜீரணிக்க முடியலை. தான் என்னதான் மத்தவங்க மேல அன்பா இருந்தாலும், தன் மேல அன்பு செலுத்த, துணையா நிக்க யாரும் உண்மையா இல்லியேன்னு வருத்தம் இருந்துது. ஆனா அக்கா பண்னது தப்பு, நீங்க ஃபீல் பண்ணாதீங்க மாமான்னு நீ அழுதப்பதான், நீ காட்டுன அன்பு, அவர் மனசை நெகிழ வெச்சிடுச்சு. ஒரு பாசிட்டிவ் மன நிலையைக் கொடுத்துது. அவரும் மனசு விட்டுப் பேசினாரு. இனி சரியாகிடுவாரு.
மெடிக்கல் ரீதியா நான் கவுன்சிலிங் கொடுத்தாலும், உணர்வுப் பூரமா அவங்க கூட இருந்த டைம்தான், எனக்கு நானே கவுன்சிலிங் எடுத்துகிட்ட தருணங்கள்! இப்ப உன்கிட்ட பேசுன நேரம் உட்பட!
என் கூட பேசுனதுமா?
ஆமா, சுந்தர் சொன்ன மாதிரி நீ ஸ்பெஷல்தான். உண்மையான அன்பு காட்டுறவங்களைப் பாத்தா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் வருமே அது மாதிரி.
நீங்க ரொம்ப அதிகமாச் சொல்றீங்கண்ணா! அ… அந்த அண்ணா, கீதாவோட ஹஸ்பெண்ட் எப்டி இருக்காரு?
அவருக்கும் ஷாக்தான்! ஆனா, அவருக்கு விஷயத்தைச் சொன்னதே அவரோட பொண்ணு. தன் பொண்ணுக்கு, இந்த வயசுல இப்படி ஒரு அதிர்ச்சிங்கிறதுனால சமாளிச்சு நின்னாலும், அவரும் எங்க கூட மனசு விட்டு பேசுன பின்னாடிதான் தெளிவானாரு. தன் பொண்ணு உள்ளுக்குள்ள என்ன ஃபீல் பண்றா, இதுல அவளுக்கு என்ன மாதிரி கவுன்சிலிங் கொடுக்கனும், ஃபியுச்சர்ல இதனால அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாதேன்னுதான் அவரோட கவலையெல்லாம்.
அ… அடுத்து என்ன பண்றதுண்ணா?
யோசிக்கனும்! அவசரப்படாம, தெளிவா யோசிச்சுதான் எடுக்கனும்.
அடுத்த நாள் அலுவலகம் வந்த சுந்தர், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். தெரிந்த உண்மையும், அது கெடுத்த தூக்கமும், அவன் முகத்தின் சோபையைக் குறைத்திருந்தாலும், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகவே தெரிந்தான்.
தன் கஷ்ட காலங்களில், தன்னுடன் துணை நின்ற, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பெண், எந்தக் காலத்திலும், ஆணின் கண்ணுக்கு பேரழகியாய் தெரிவது போல், தன்னம்பிக்கையாய், நேர்மையாய், வாழ்வின் சோதனைகளில் துவளாமல், நிமிர்ந்து நிற்கும் ஆண், பெண்ணுக்கு பேராண்மை மிக்கவனாய் தெரிவது போல், சுந்தர், ஹாசிணிக்கு தெரிந்தான்.
இந்த ஒரு வாரம், அலுவலகத்தில் தேங்கிய வேலைகளை, புத்துணர்ச்சியுடன், பார்க்க ஆரம்பித்ததையும், அவன் மனம் எதிர்காலத் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதையும், சற்று பிரமிப்புடனே பார்க்கத் துவங்கினாள்!
தன் தலையைத் தட்டிக் கொண்டவள், மாமா தெளிவாயிட்டாரு, நான் குழம்ப ஆரம்பிச்சிட்டேன் என்று சிரித்துக் கொண்டவள், அவரை மாதிரியே, தன் முடிவு உணர்ச்சி வசப்பட்டு இல்லாமல், தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் கழித்து, வார இறுதியில் சுந்தர் மற்ற இருவரையும் சந்தித்த போது ஹாசிணியும் உடனிருந்தாள்.
இடைபட்ட காலத்தில், ஹாசிணி கீதாவின் கணவனான ராமினை மட்டுமல்ல, அவள் மகளையும் சந்திருந்தாள்.
பார்த்த காட்சிகளின் அதிர்ச்சியும், தான் மிகவும் நம்பிய, தன் அன்னையின் செயலும், அவளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், யாரிடமும் அதை மனம் விட்டுப் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த இளம் மொட்டு, ஹாசிணியிடம் பேசிய பின் தான் தெளிவடைந்திருந்தாள். தன் மகளின் முகத்தில் மீண்டும் புன்னகையையும், புதுத் தெளிவையும் கொண்டு வந்த ஒற்றைக் காரணத்திற்க்காகவே, கீதாவின் கணவனுக்கும், ஹாசிணி அன்புத் தங்கையாகியிருந்தாள். அபர்ணாவின் கணவனுக்கு, ஹாசிணி மேலிருந்த அன்பும், மதிப்பும் இன்னும் கூடியது.
ஏன் ஹாசிணி, இன்னும் உங்கக்காகிட்ட விவேக்குக்கு நோ சொல்ல மாட்டேங்குறீயாம்? சுந்தர் ரொம்ப ஃபீல் பண்றாரு? என்று கேட்டது அபர்ணாவின் கணவன் மதுசூதனன்.
ஆமா, ஹாசிணி, வேணாம்ன்னு சொல்லிடலாம்ல்ல? என்றது ராம்!
நான் சொல்றது இருக்கட்டும், முதல்ல நீங்க அந்த விவேக்கை என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க?
அதுக்கும், இதுக்கும் என்ன ஹாசிணி சம்பந்தம்? நீ இதுல உள்ளயே வராத என்று கோபமாகப் பேசியது சுந்தர்.
சூப்ல காரம் கம்மியாதானே இருக்கு, நீங்க ஏன் கடு கடுன்னு பேசுறீங்க மாம்ஸ்?
சுந்தரின் கோபத்தினை அலட்சியம் செய்து ஹாசிணி பேசும் சுட்டித்தனம், ராமையும், மதுவையும் ரசிக்க வைத்தது என்றால், சுந்தருக்கு இன்னும் கோபத்தைக் கொடுத்தது.
ஹாசிணி, விளையாடாத. நான் சீரியசா சொல்றேன். அந்த விவேக்கே நாங்க பாத்துக்குறோம். நீ இதுல உள்ளயே வராத. எக்காரணம் கொண்டும், அவனோட நிழல் கூட, உன் பக்கம் திரும்புறதை நான் விரும்பலை!
அவன் அக்கறையின் மனம் கனிந்தவள், நான் வேணாம்ன்னு சொல்லிட்டா, அவிங்க அடுத்த ஸ்டெப்புக்கு போயிடுவாங்க மாமா. அதான் ஒரு மாசம் டைம் கேட்டிருக்கேன். இப்ப அவங்க வெயிட் பண்ணுவாங்க. கவனம் முழுக்க என்னைக் கன்வின்ஸ் பண்றதுலதான் இருக்கும். அக்கா டெய்லி, என்கிட்ட விவேக் புராணம் பாடிட்டிருக்காங்க. நான் கேசுவலா கேக்குற மாதிரி, அவனைப் பத்தி கொஞ்சம், கொஞ்சமா விஷயம் தேத்திட்டிருக்கேன். அநேகமா, அடுத்த வாரத்துல, அவனைப் பத்தின பிகேவியர் அண்ட் கேரக்டரை ஓரளவு ஸ்டடி பண்ணிடுவேன்.
அப்டி என்ன தெரிஞ்சிகிட்ட ஹாசிணி?
அவனுது சின்ன ஃபாமிலிதான். ஒரே ஒரு அண்ணன். ஆனா, அவன் தனிக்குடித்தனம் போயிட்டான். ஓரளவு அப்பர் மிடில் கிளாஸ் ஃபாமிலி. இவன் காசும் அனுப்ப மாட்டான், அதுக்கு தேவையும் இல்லை. அடிக்கடி ஊருக்கும் போறதில்லை. இந்த மாதிரி விசயங்கள்லியே தொடர்ந்து கவனம் செலுத்துறதுனால, அவனுக்குன்னு நம்பிக்கையான க்ளோஸ் நட்பு, உறவுன்னு வேற யாரும் அதிகம் இல்லை. டிடெக்டிவோட ரிப்போர்ட் படி யோசிச்சா, இவனோட தப்புகள் இவனோட அண்ணனுக்கு தெரிஞ்சதுனாலத்தான் தள்ளி நிக்கிறார்ன்னு தோணுது. அவன் அப்பாவுக்கும் கூட பையனைப் பத்தி ஓரளவு தெரியும் போல! பட், இதைக் கண்ஃபார்ம் பண்ணனும். பண்ணிடுவேன்!
மிகக் கேசுவலாக, தட்டினைப் பார்த்து சாப்பிட்டுக் கொண்டே ஹாசிணி சொன்ன தகவல்களைக் கேட்டு மூவருமே பிரமித்துப் போயிருந்தனர்.
சுந்தர் பிரமித்தாலும், அவள் மீதான அன்பினால், இதெல்லாம் நாங்க உன்னைக் கேட்டோமா? இது தேவையில்லாத வேலை.
நீங்கக் கேட்டுட்டாலும்! என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டா, தெளிவா முடிவெடுக்கனும்ன்னு ஓவர் பில்டப் கொடுத்து, வானத்தைப் பாத்து யோசிச்சுகிட்டுதான் இருக்கீங்க. அவ்ளோக்கெல்லாம் அவன் ஒர்த்தே இல்லை! பொண்ணுங்க கூட பேசுறதைத் தவிர, அவனுக்கு வேற ஒரு மண்ணும் அவனுக்குத் தெரியாது. அடிச்சுப்போட்டா, அவங்கம்மாவைத் தவிர, அவனுக்காக வரிஞ்சு கட்டிட்டு வர, சப்போர்ட்டும் கிடையாது.
பேச்சுக்குதான், தான் பெரிய இவனாட்டாம், தன்கிட்ட வர்ற லேடீஸ்கிட்ட பில்டப் பண்ணிக்குறான். சைக்காலஜிக்கலா, அவனுக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸா கூட இருக்கலாம். தனக்குன்னு நெருக்கமான நண்பர்கள், சொந்தம்ன்னு யாரும் இல்லையே, இத்தனைப் பெண்களை எமாத்த முடிஞ்சாலும், ஒரு பொண்ணையும் லவ் பண்ண வைக்க முடியலியே, ஒழுங்கா ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க துப்பில்லையேன்னு பல பிரச்சினைகள் இருக்கலாம். அதுல இருந்து மறைக்க இப்படி பேசிகிட்டு திரியுறான். அவன் ஒருத்தனுக்கு, நீங்க மூணு பேரும், ரூம் போட்டு வேற யோசிக்கிறீங்க! அதுவும் இத்தனை நாளா?!
அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு, மதுசூதனனே பிரமித்தார். எவ்ளோ பெரிய சைக்காலஜிக்கல் விஷயத்தை, இவ்வளவு அநாயசமாய் சொல்றா இவ என்று?
இதையெல்லாம் எப்படி யோசிச்ச ஹாசிணி?!
நீங்க சொன்னதுதான் டாக்டர். பிரச்சினைக்குள்ள இருந்து பாத்தா, தீர்வு கிடைக்காதுன்னு சொன்னீங்கள்ல? அதேதான். தெரிஞ்சோ, தெரியாமலோ, நீங்க மூணு பேரும், அவனை உங்களோட போட்டியாளரா பாக்க ஆரம்பிச்சுட்டீங்க! ஆனா, நான் அவனை ஒரு பொருட்டாவே பாக்கலை. இத்தனை பேரு சேந்து ப்ளான் பண்ணி தூக்குற அளவுக்கு அவன் ஒர்த்தே இல்லை!
ஹாசிணி சொன்ன விதத்தில், மூவருக்கும் சிரிப்புதான் வந்தது. அவள் மறைமுகமாக மூவரையும் இலேசாகச் சீண்டி, மோடிவேட் செய்து கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்களிடையே தொலைந்திருந்த நகைச்சுவையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்.
சுந்தர் கனிவாகச் சொன்னான்.
நீ சொன்னது ஒரு விதத்துல கரெக்ட்னாலும், நாங்க யோசிக்கிறது அவனுக்காக இல்லை ஹாசிணி! எங்களுக்காக. எந்த விதத்துலியும், நாங்க இதுவரை கொண்டு வந்திருக்கிற எங்க உழைப்புக்கோ, குடும்பத்துக்கோ, முக்கியமா எங்க குழந்தைங்க மனசு கஷ்டப்படும் படியோ எந்த விஷயமும் நடப்பதை நாங்க விரும்பலை.
ராமோட பொண்ணு, இதையெல்லாம் பாக்க வேண்டியதாயிடுச்சேன்னு, ஏற்கனவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. அவனை அடிச்சு தூக்கவோ, வேற ஏதாவது பண்ணவோ, நிமிஷம் ஆகாது. ஆனா, அப்படி இருக்கக் கூடாதுன்னுதான் யோசிக்கிறோம்.
ம்ம்… ஏதோ இவ்ளோ சொல்றீங்களோன்னு விடுறேன். இருந்தாலும், இன்னும் ஒரு வாரம்தான் உங்களுக்கெல்லாம் டைம்! அதுக்குள்ள பிளான் என்னன்னு சொல்றீங்க! இல்லை…
என்னை என் பொண்ணு கூட இப்டி மிரட்டினதில்லை ஹாசிணி என்று ராம் சிரித்தான்.
இனிமே மிரட்டச் சொல்றேண்ணா, டோண்ட் ஒர்ரி! தா அந்தப் பக்கம் பாருங்க, அவ்ளோ பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓனரு, சைக்கியாட்ரிஸ்ட்,ன்னு சொல்லிகிறாரு, அந்த விவேக்குக்கு ஸ்கெட்ச் போட இப்படி யோசிச்சிட்டிருக்காரு! சைக்காலஜிக்கலா அவனை எப்டித் தட்டனும்ன்னு இன்னேரம் முடிவு பண்ணியிருக்க வேணாம? என் கவலையெல்லாம், இவரையும் நம்பி வர்ற, இவரு பேஷண்ட்டுகளை நினைச்சாதான் பாவமா இருக்கு என்றவளின் பேச்சில், மதுசூதனன்னுக்கு புரையேறியது.
என்ன பேச்சு ஹாசிணி இது என்று சுந்தர் அதட்டியதற்க்கு,
அவிங்க ரெண்டு பேரும்தான், என்னைத் தங்கச்சின்னு சொன்னாங்க, தங்கச்சின்னா இப்டித்தான் ஓட்டிகிட்டு இருப்பா, உங்களுக்கென்ன?
ஹாசிணியைத் தடுக்காத சுந்தர். ரொம்ப நாள் ஆச்சு, இப்டி ஜாலியா இருந்து. உண்மையாலுமே அவ எங்க தங்கச்சிதான். அவ இப்டி இருக்கிறதுதான் எங்களுக்குப் புடிச்சிருக்கு என்று புன்னகையுடன் சொன்னவுடன்,
இப்ப என்ன பண்ணுவீங்க என்று சுந்தரைப் பார்த்து, பழிப்பு காட்டிச் சிரித்தவளின் செய்கையில் அனைவரது புன்னகையும் இன்னும் கூடியது.
அடுத்த இரு வாரங்களில், சுந்தர் மிகத் தெளிவாகியிருந்தாலும், ஹாசிணியின் குழப்பம் அதிகமாகியிருந்தது. ராம், மதுசூதனன், சுந்தர் சந்திப்புகளில், ஹாசிணியும் கலந்து கொள்வது இயல்பாகியிருந்தது. சமயங்களில் ராமின் பெண்ணும் கலந்து கொண்டாள்.
ராமிற்கும், மதுசூதனிற்க்கும் ஹாசிணி அன்புத் தங்கை என்றால், ராமின் பெண், சுந்தருக்கு செல்லத் தங்கையாகியிருந்தாள்.
ராம் இயல்பாகச் சொன்ன ஒரு விஷயமும், அதற்கு சுந்தரின் பதிலும் ஹாசிணியின் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது…
சுந்தர், என்னோட சஜசன், நீ இந்த விவேக் விஷயத்தை முழுக்க மறந்துட்டு, வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க. எங்களை மாதிரி இல்ல உனக்கு! உனக்கு இன்னும் வயசும், வாழ்க்கையும் இருக்கு!
ராம் சொல்றது கரெக்ட் சுந்தர்! உனக்காக இல்லைன்னாலும், உன் குழந்தைக்காகனாச்சும்ன்னு சினிமா டயலாக்லாம் பேச விரும்பலை. அது அந்தப் பொண்ணுக்கு செய்யுற துரோகம். முழுக்க, முழுக்க உனக்காகவே ஒரு கல்யாணம் பண்ணிக்க! உனக்காக வர்றவ, உன் குழந்தையை வேணாம்ன்னு சொல்லிடுவாளா என்ன?
பெருமூச்சு விட்ட சுந்தர், பாக்கனும், என்னதான் தெளிவானாலும், அடி மனசுல ஒரு சின்ன பயம் இருக்கு. மனசுக்கு நெருக்கமா இன்னொருத்தரை ஏத்துக்குறதுக்கு சின்னத் தயக்கம் இருக்கு. அவ்ளோ ஈசியா நம்பிக்கை வர மாட்டேங்குது!
மவுனமாய் கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் கண்கள் ஈரமாகியது. அவள் மனம், சுந்தரின் நிலையைக் கண்டு தவித்தது. அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஒருவனுக்கு, இந்தத் துரோகம் கொடுக்கும் வடு எத்தகையது என்பதில் அவள் மிகவும் வருந்தினாள்.
சும்மா லூசு மாதிரி உளறாத மாமா! இனி இப்டி பேசுன, எனக்கு கோபம் வந்துடும். லைஃல பாசிட்டிவா எப்டி இருக்கனும்ன்னு எனக்கு சொல்லிக் கொடுத்ததே நீதான். இப்ப யாரோ பண்ண தப்புக்கு, ஏன் இவ்ளோ நெகட்டிவா பேசுற? மனம் தாங்காமல் படபடத்தாள் ஹாசிணி!
அது யாரோ இல்ல ஹாசிணி! என் மனைவி! எனக்கு விவேக் மேல கூட பெரிய கோபமில்லை. ஹரிணி மேலத்தான் வருத்தமே!
என் அக்காவாவே இருந்தாலும் பராவாயில்லை, இனி ஹரிணி உங்களுக்கு யாரோத்தான் மாமா! நீங்க அவளை, மனசுல வெச்சு சுமக்கிறதுனாலத்தான், அவ பண்ணது வலிக்குது! அவ யாரோ, இனி உங்க வாழ்க்கைல அவளுக்கு இடமில்லை, எது உங்களோட லட்சியம், சந்தோஷம்ன்னு யோசிச்சு செய்ங்க. அப்ப, அந்த வலி பெருசா தெரியாது. அதை விட்டுட்டு…
தான் வருந்தினால், உடனே ரியாக்ட் செய்யும் ஹாசிணியின் அன்பில் சுந்தரும், அக்காவிற்காக இல்லாமல், நியாயத்தின் பால் பேசும் உண்மையில் ராமும், பெரிய மனோதத்துவ விஷயத்தை மிக சிம்ப்பிளாய் சொல்லி விட்டுச் செல்லும் அறிவில் மதுசூதனனும் புன்னகைத்தாலும், டாக்டரின் பார்வை கொஞ்சம் கூர்மையாகவே ஹாசிணியின் மேல் படிந்தது.
ஹாசிணி சொல்றது கரெக்ட்தான் சுந்தர். நான் சொல்ல வந்தது, விவேக்கிற்க்காக நீ யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண வேணாம் என்பதற்க்காகத்தான். சீக்கிரம் இன்னொரு கல்யாணத்தைப் பண்ணு என்று ராம் முடித்தான்.
சுந்தருக்கு இன்னொரு பெண்ணின் மேல் நம்பிக்கை வருவதில் சிக்கல் என்பதில் வருந்தினாலும், அவன் இன்னொருத்திக்குச் சொந்தமாவான் என்பதில் ஹாசிணியின் மனம் மீண்டும் குழம்ப ஆரம்பித்தது. இனி முன்பு போல் அவனுடன் உரிமையாய் பழக முடியாது என்ற உண்மை அவள் முகத்தில் அறைந்தது.
தான் பருவம் வந்ததிலிருந்து தன் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் சுந்தரிடம் பகிர்ந்து கொண்டு, அவனுடைய சஜசனை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, இனி அது முடியாது என்பதும், தனக்கு கணவனாக வருபவேனே அதை புரிந்துக் கொள்வானா என்ற நிச்சயமின்மையும், இதற்காக சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதா என்ற எண்ணமும் சேர்த்து ஹாசிணியை வாட்டியது.
என்னதான் மனதை ஒருமுகப்படுத்தினாலும், அடுத்த நான்கு நாட்களும், ஹாசிணியின் மனம், அதைச் சுற்றியே வந்தது. சில நாள் கழித்து, அவளைத் தனியாக வந்து பார்த்தது டாக்டர் மதுசூதனன் தான்!
சொல்லு ஹாசிணி! என்ன உன் குழப்பம்?
அ… அண்ணா?!
அன்னிக்கு சுந்தர்கிட்ட நீ பேசுனதுக்கும் முன்னாடியே இருந்து உன்னை கவனிச்சிட்டுதான் வர்றேன். என்ன உன் யோசனை?
எ… என்னைத் தப்பா நினைச்சுட மாட்டீங்களே?!
சுந்தர் சொன்னதுக்காக மட்டுமில்லை ஹாசிணி, இத்தனை நாளா உன் கூட பழகுன முறையிலயும் சொல்றேன், நீ தெரிஞ்சு எந்தத் தப்பும் யாருக்கும் பண்ண மாட்ட. விளையாட்டுக்கு தங்கச்சின்னு சொல்லலை. உண்மையாவே நினைச்சதாலத்தான், இப்ப தனியா வந்து பேசுறேன். என்னைப் பாக்க வர்ற பேஷண்ட்டையே, அவங்க ஷேர் பண்ற விஷயத்தை வெச்சு, ஜட்ஜ் பண்ண மாட்டேன். அப்டியிருக்கிறப்ப, உன்னை எப்டி பண்ணுவேன்? தைரியமாச் சொல்லு.
பெருமூச்சு விட்டவள், எ.. எனக்கு இது இன்னமும் குழப்பமாதாண்ணா இருக்கு. யார்கிட்ட இதைப் பத்தி பேசுறதுன்னு தெரியாம ரொம்ப யோசனை. வெளி ஆட்கள், யாராலயும் இதை சரியா புரிஞ்சிக்க முடியுமான்னு தயக்கம். அதான்…
ஏன், எல்லா விஷயத்துக்கும் சுந்தர்கிட்டதானே டிஸ்கஸ் பண்ணுவ? இதுல மட்டும் என்ன?
இதுக்கு மாமா என்ன பதில் சொல்லுவார்னு எனக்கு நல்லா தெரியும்ண்ணா! தவிர இந்த விஷயமே மாமாவை முக்கியமா வெச்சுதான்…
அப்டி என்ன விஷயம் ஹாசிணி?
நா… நான், மாமாவை லவ் பண்றேனோன்னு தோணுதுண்ணா! என்று சொல்லி விட்டு சற்றே தலை குனிந்து இருந்தவளைப் பார்த்த ராம் பிரமித்து நின்றான். கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் தைரியமாக சுற்றும் போது, இவள் அன்பைச் சொல்லுவதற்கு தயங்குகிறாள் என்று…
எ… என்னண்ணா எ… எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?
என்ன சொல்றதுண்ணு தெரியலை ஹாசிணி! ஓகே, நான் என் கருத்தைச் சொல்றதுக்கு முன்னாடி, என் கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு. மே பி, அது உனக்கே தெளிவைக் கொடுக்கலாம். என்ன சொல்ற?
ம்ம்ம்.. ஓகே.
நீ பரிதாபப்பட்டு இந்த முடிவை எடுத்தியா?
ம்கும்… நான் ரொம்ப யோசிச்சதுக்கு காரணமே, இப்படி ஒரு கேள்வி வருமேன்னுதாண்ணா. பரிதாபத்துக்காக வாழ்க்கை நடத்த முடியாதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்! பரிதாபப்படுற நிலைல மாமா இருக்காருன்னு நீங்க நினைக்கிறீங்களா?
நான் என்ன நினைக்கிறேங்கிறது பிரச்சினை இல்லை ஹாசிணி! இந்தச் சமூகம் என்ன நினைக்கும்கிறதுதான் விஷயம்!
எந்தத் தப்பும் செய்யாம, மாமாவை வேற யாரும் பரிதாபமா பாக்கக் கூடாதுன்னு நினைக்குறேண்ணா. அதுனாலத்தான் ரொம்ப யோசனையா இருக்கு. சொல்லப் போனா, அக்கா இறந்தாலோ, அக்காவுக்கு குழந்தை இல்லைன்னாலோ, தங்கச்சியைக் கல்யாணம் பண்றது இங்க வாடிக்கைதான். அக்கா பண்ண விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, எங்க வீட்லியே என்னை கேப்பாங்கங்கிறதுல எனக்குச் சந்தேகமே இல்லை.
ஆனா, நான் விரும்புறது அதை இல்லை! மாமாவை, அவரோட கேரக்டருக்காகவே லவ் பண்ணனும்கிறதுதான். இது அக்கா குழந்தையை வளர்க்கிறதுக்காகவோ, மாமா நிலைமை இப்படி ஆகிடுச்சேன்னு இல்லாம, அவரோட கேரக்டருக்காக நடக்கிறதா இருக்கனும்னு விரும்புறேன்.
எப்பருந்து அவரை லவ் பண்ற ஹாசிணி?
இதென்ன சினிமாவாண்ணா? ஒரு சீன்ல ஹீரோயினை, ஹீரோ காப்பாத்துவாரு, அதுலருந்து லவ் வந்துடுச்சுன்னு சொல்ல. எனக்கு மாமாவை எப்பவுமே பிடிக்கும். ஒரு வெல்விஷரா, ஃபிரண்டா, மோடிவேட்டரா, வழிகாட்டி மாதிரி பல ரோல்ல நெருக்கமா இருந்திருக்காரு. எங்க அக்காவுக்கு கூடத் தெரியாத, என் வயசுக்கேக்குரிய தடுமாற்றங்களைக் கூட அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அவ்ளோ க்ளோஸ்! ஆனா, அவரு மேல இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை! ஏன்னா, எனக்கு அவர் அறிமுகமானதே என் அக்காவோட கணவர்ங்கிற முறைலதான்.
ஆனா, இன்னிக்கு அக்காவோட உறவு தொடராதுங்கிற நிலையிலயும், என் மேல காட்டுற அக்கறைலியோ, அன்புலியோ எந்த டிஃபரன்சும் இல்லைங்கிறப்பதான் என் மனசு தடுமாற ஆரம்பிச்சுது. இத்தனைக்குப் பின்னாடியும், அடுத்து என்னன்னு தைரியமா நிக்குற அவரோட கம்பீரம் என்னை பாதிக்குது. ஆம்பிளைன்னா இப்டித்தான் இருக்கனும்ன்னு தோணுது!
எனக்கு வரப் போற கணவர், எங்க மாமா மாதிரியே கேரக்டர் கொண்டவரா இருக்கனும்ன்னு யோசிச்ச எனக்கு, ஏன் மாதிரியே? அவரே இருந்தா என்னன்னு ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கே, அதை ஏன் விடனும்ன்னு தோணுது!
எல்லாத்தையும் விட, எங்கக்காவோட நம்பிக்கை துரோகத்துக்கு பின்னாடி, வேறெந்த பொண்ணு மேலயும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னவரு, இன்னும் என்னை மட்டும் கண்மூடித்தனமா நம்புறாரே, அந்த நம்பிக்கையை ஏன் அவரோட வாழ்க்கை முழுக்க கொடுக்கக் கூடாதுன்னு யோசிக்க வைக்குது
நல்லாத் தெளிவா குழப்புற ஹாசிணி. இதுல எங்கியுமே லவ் வரலையே?
சினிமா, புக்ல வர்ற மாதிரி தோணுனாத்தான் லவ்வா என்ன? தன் கணவர்கிட்ட, ஒரு பொண்ணு எதிர்பாக்குற எல்லா கேரக்டரும் தேவைக்கும் அதிகமாவே அவர்கிட்ட இருக்கு. அதுனால அவர்கூட என் வாழ்க்கையை வாழனும்ன்னு ஆசைப்படுறது லவ் இல்லையா?
இவ்ளோ நாளா அக்கா கணவரா இருந்தப்ப, இது வெறும் அன்பு. இனி என் அக்கா கணவரா இருக்க முடியாது. வேற யாரோ ஒருத்தியோட கணவரா மாறுனா, அந்த அன்பு எனக்கு கிடைக்காதுங்கிற உண்மை, முன்ன மாதிரி நெருக்கமா இருக்க முடியாதேன்னு ஏக்கம், எல்லாம் தாண்டி, இந்த முறை, இன்னொருத்தருக்கு சொந்தமா அவரை யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு பொசசிவ்னெஸ் இதெல்லாம், ஒரு நார்மல் ஃபிரண்டுகிட்ட தோணாதுன்னா. வெளிப்படையாச் சொல்லனும்ன்னா, அவரை எனக்கே எனக்கா சொந்தமாக்கிக்கனும்ன்னு, கொஞ்சம் சுயநலமா யோசிக்கிறேன்!
இ… இன்னொருத்தி வந்து, அவரை சொந்தமாக்கிட்டுப் போறதுக்கு முன்னாடி, எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசையா இருக்கு. இ.. இதுக்குப் பேரு லவ் இல்லையா?
சற்றே தலைகுனிந்து அனைத்தையும் சொன்னவளை கொஞ்சம் பிரமிப்புடனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன். தன் காதலை கொஞ்சம் மட்டம் தட்டிச் சொன்னது போல் சொன்னாலும், அவள் சொன்ன விளக்கமும், அதிலிருந்த ஆழ்ந்த பொருளும், அதில் தெரிந்த அவள் தெளிவையும், அன்பையும் கண்டவன், இது நடந்தால் சுந்தர் லக்கி என்றே நினைத்தான். முன்பை விட மிகக் கனிவாகவும், அன்பாகவும் ஹாசிணியை பார்க்க ஆரம்பித்தான்.
அவ்ளோ தெளிவா இருக்கன்னா, இன்னும் என்ன யோசிக்கிற ஹாசிணி?
முதல்ல நான் யோசிக்கிறது சரிதானான்னு டவுட்டுண்ணா. ஆனா உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன பின்னாடி எனக்கே நல்லா தெளிவு வந்துடுச்சு. இப்ப என் யோசனையெல்லாம், மாமாவை எப்டி கன்வின்ஸ் பண்ணனும், சமூகத்துக்கு, இதை எந்த மாதிரி சொல்லனும்ன்னுதான் என்று தலை நிமிர்ந்தவளைக் கண்டு புன்னகை வந்தது மதுசூதனனுக்கு.
என்னண்ணா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?
நீ எடுத்த முடிவு சரியா, தப்பாங்கிறதுல்லாம் தேவையில்லாத விஷயம் ஹாசிணி! ஆனா, என்னை ஆச்சரியப்படுத்துனது, நீ யோசிக்கிற விதம்தான். சுந்தர் மாதிரி ஒரு மெச்சூர்டு திங்க்கருக்கு, நீ ரொம்பப் பொருத்தமா இருப்ப. ஏஜ் டிஃபரன்ஸோ, அண்டர்ஸ்டாடிங்கோ, அவன் குழந்தையை எப்படி பாத்துப்பன்னு எந்த விஷயத்துலியும் ப்ராப்ளம் இல்ல. சொல்லப் போனா, சில விஷயங்கள்ல, நீ அவன் மனைவியா வர்றதுதான் ரொம்பப் பொருத்தமும் கூட. என் டவுட்டு ரெண்டே ரெண்டுதான்!
எ.. என்னண்ணா?
ஒருத்தரை ஃபிரண்டா, வழிகாட்டியா, நல்லவர்ங்கிறதுனால மனசுக்கு நெருக்கமானவரா பாக்குறது வேற, அவரை லவ்வரா பாக்குறதுங்கிறது வேற! மெச்சூர்டா திங்க் பண்றதும், நடந்துக்குறதும் நல்லதுதான், ஆனா வாழ்க்கைல எல்லா நேரமும் அப்டியே இருந்தா போரடிச்சிடும். அதுல அழகு சேக்குறதுக்கு இண்டிமசி (Intimacy) ரொம்ப முக்கியம். என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல, நல்லா தெரிஞ்ச ஃபிரண்டைக் கல்யாணம் பண்ணவங்கக் கூட, இந்த டிஃபரன்சை புரிஞ்சிக்காம டைவர்ஸ்ஸு பண்ணலாமான்னு வந்துருக்காங்க.
சுந்தரை இதுவரைக்கும் மரியாதையா பாத்த நீ, கணவனா பாக்கனும்ன்னா, அந்த வித்தியாசத்தை உண்மையாலுமே உணர முடியுதா? இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருந்தாலும், இனிமே இருக்கக் கூடிய நெருக்கம் வேற. அந்த உணர்வை புரிஞ்சுதான் சொல்றியா? காதல் வேற, காமம் வேறன்னு பேசுறதெல்லாம் சினிமா டயலாக்குக்குதான் சரி வரும், எல்லாப் பொண்ணுங்களுக்கும் தன் கணவன்கிட்ட பாதுகாப்பு உணர்வு வர்ற அதே அளவுக்கு, காம உணர்வும் வந்தாதான், அது முழுமையா இருக்க முடியும். இதெல்லாம் யோசிச்சுதான் சொல்றியா?
இவ்வளவு நேரம் தலை குனிந்திருந்தவள், நிமிர்ந்து டாக்டரின் கண்களையே பார்த்தவாறே சொன்னாள்!
இதெல்லாம் நல்லா யோசிச்சுதாண்ணா சொல்றேன். சொல்லப் போனா, இந்த மாதிரி ஆங்கிள்லதான் அதிகம் யோசிச்சேன். அதுக்கப்புறம்தான், இது லவ்வுன்னு முடிவுக்கு வந்தேன்.
இன்னும் பிரமித்தான் மதுசூதனன்! தான் காமத்தை யோசித்தேன் என்று சொல்லுவதற்கு, கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ படவில்லை. தன் மனதுக்கு பிடித்தவனுடனான நெருக்கத்தில் கிறங்கி, வெட்கப்படும் உணர்வு எவ்வளவு அழகோ, அதை விட அழகு, அந்த உணர்வை ஒருவரிடம் மட்டுமே காட்ட முடியும், அது என் சுந்தரிடம் மட்டும் காட்ட முடியும் என்று தெளிவாக, தைரியமாக டாக்டரிடம் சொல்லும் போது காட்டும் நிமிர்வு. ஹாசிணியின் அன்பைக் கண்டு அவளைக் கனிவாக பார்த்த டாக்டருக்கும், அவளது நேர்மையைக் கண்டு, அவள் மீதான மரியாதை கூடியது.
ப்பா… என்னா பொண்ணுடா? சுந்தர் சொன்னது மிகச் சரிதான். அந்தளவு ஹாசிணியை சரியாக கணித்திருக்குக்கும், அவளை புரிந்திருக்கும் சுந்தருடன் ஹாசிணி இணைவது, இருவருக்குமே மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும். சுந்தருக்கும், இந்தச் சூழ்நிலையில், அவனை விரும்பும், அவனை இன்னும் உயர்த்தும், முழுமையாக புரிந்து கொள்ளும் மனைவி என்றால், கூடுதல் இன்பம்தானே என்று தோன்றியது?!
உங்க ரெண்டாவது டவுட்டு என்னண்ணா?
ம்ம்… இவ்ளோ தெளிவா நீ யோசிச்சாலும், சுந்தர் இப்ப இருக்குற நிலைல, இதைப் புரிஞ்சுக்குவாரா, அவரும் உன்னை லவ் பண்ணுவாரா? நான் உன்னை அப்டி பாக்கலைன்னோ, பரிதாபப் படுறியான்னுதான் கேப்பாரு. அவரை எப்டி கன்வின்ஸ் பண்ணுவன்னுதான்!
ஹா ஹா ஹா… மாமாவை நான் லவ்தான் பண்றேன்னு தெளிவான பின்னாடி, ஒரு வாரமா நான் யோசிச்சது, இதைப் பத்திதான். என்ன சொன்னாலும், மாமா இதுக்கு ஓகே சொல்ல மாட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்! அவரு ஓகே சொல்ல மாட்டாருங்கிறப்பதான், அவர் மேல இன்னும் லவ் ஜாஸ்தியா வருது. இந்த வாழ்க்கைல ஒரு சின்ன சுவாரசியம் வருது! ரொம்ப முக்கியமா, அவரை எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசை அதிகம் வருது!
அப்புறம் என்ன பண்ணப் போற?
ம்ம்… ரெண்டு விஷயம் பண்ணப் போறேன்.
ஒண்ணு, அவரைக் கண்ணாபிண்ணான்னு லவ் பண்ணப் போறேன், அதை அவர்கிட்டயே சொல்லிட்டு பண்ணப் போறேன்.
கேட்டுக் கொண்டிருந்த மதுவுக்கும் புன்னகை வந்தது. சிரிப்புடன், அடுத்து என்னப் பண்ணப் போற என்று கேட்டவன் அதிர்ந்தான்.
ரெண்டு, விவேக்கை கல்யாணம் பண்ணிக்க ஓகேன்னு சொல்லப் போறேன்!
உன்னைப் பாத்தா என் தங்கச்சி ஞாபகம் வருது என்று சொன்னதாலா, அல்லது டாக்டர், தன் மனைவி பெயரைச் சொன்னவுடன், அந்த அபர்ணாவாக இருக்கக் கூடாதே என்ற பதைபதைப்பில், இயல்பாக அண்ணா என்று பாசமாக அழைத்தாளா என்று தெரியவில்லை.
கீதா, ஹரிணி, விவேக் எபிசோடிலேயே அபர்ணாவைப் பற்றி இருந்தாலும், அந்த பென் டிரைவில், டிடெக்டிவ் ஏஜென்சியின் ரிப்போர்ட்டும், அபர்ணாவைப் பற்றி வேறு சில ஆதாரங்களும் இருந்தது. அதனாலேயே, அந்தப் பெயருக்கு ஹாசிணி கடும் அதிர்ச்சி அடைந்தாள்.
எஸ்… நீ நினைக்கிற அதே அபர்ணாதான்!
சா… சரிண்ணா!
தனக்குப் பெரிதும் அறிமுகமாகியிருக்காத, முன் பின் தெரியாத ஒரு பெண், தனக்காக உண்மையாக வருந்துவதைக் கண்டு புன்னகைத்தார் டாக்டர். சுந்தர் சொன்னது போல், இந்தப் பெண் கொஞ்சம் ஸ்பெஷல்தான்!
ரொம்ப நாளாவே எனக்கு அபர்ணாவோட பிகேவியர்ல நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது! முண்ணுக்குப் பின் முரணா பல விஷயங்கள் இருந்துது. இந்தத் தப்பு செய்யுறவங்க, கொஞ்சம் நாளான பின்னாடி, தான் யாருக்கும் எந்த டவுட்டும் வராத அளவுக்கு சரியா செய்யுறோம்ன்னு நினைச்சுக்குறாங்க. ஆனா, எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும், தொடர்ச்சியா ஒரு தப்பைப் பண்ண முடியாதுங்கிற உண்மை அவங்களுக்கு தெரியறதில்லை.
நான், அபர்ணா ஏதோ தப்பு பண்றான்னு நல்லாத் தெரிஞ்ச பின்னாடித்தான் டிடெக்டிவ்கிட்டயே போனேன். இன்ஃபாக்ட், நான் போனதும் கூட, எவிடென்ஸ் வேணும்கிறதுக்காகவும், அவ எந்தளவு போயிருக்கான்னு தெரிஞ்சக்கவும்தான்.
என்னதான் மனசு எல்லாத்துக்கும் தயாரா இருந்தாலும், ரிப்போர்ட்சை எல்லாம் பாத்துட்டு என்னால அதை ஜீரணிக்கவே முடியலை. இது ஏதோ கொஞ்ச நாளாத்தான் நடக்குது, சந்தர்ப்ப சூழ்நிலை அப்டி, அவளோட ஃபிரண்டு கூடத்தான் அப்டில்லாம் எதுவும் இல்லாம, இதுக்குன்னு இவளே தேடிப் போயிருக்காங்கிறப்ப மனசு கேக்கலை. சரியா, அந்தச் சமயம்தான் கீதாவோட ஹஸ்பெண்ட்டும் என்னைத் தேடி வந்தாரு.
அபர்ணாவோட தப்புகள்ல, கீதாவோட பேரு வர்றது ரொம்பக் கம்மிதான். ஆனா, கீதாவும், விவேக்கும் பேசுன பல இடங்கள்ல அபர்ணா பேரு வந்திருக்கு. அதுனால விஷயம் தெரிஞ்ச உடனேயே என்கிட்டயும் உண்மையைச் சொல்ல வந்தாலும், ரொம்பத் தயங்கித் தயங்கிதான் விஷயத்தை சொன்னாரு. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேந்துதான், சுந்தருக்கும் விஷயத்தைச் சொல்ல வந்தோம்.
ஆக்சுவலா, சுந்தர் என்கிட்ட கவுன்சிலிங் வர்றேன்னு சொன்னாலும், நாங்க மூணு பேருமே ஒருத்தருக்கொருத்தர் கவுன்சிலிங் மாதிரி, மனசு விட்டுப் பேசிகிட்டோம். கீதாவோட ஹஸ்பெண்ட் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டப்ப, அவரோட பொண்ணு பேரைச் சொல்லி அவரை தேத்துனது கூட சுந்தர்தான்.
மாமாவா? அவ்ளோ தெளிவா இருக்கிறவரு, ஏன் உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருந்தாருன்னு சொன்னீங்க?
எந்தப் பிரச்சினையையுமே தள்ளி நின்னு பாக்கிறப்பதான் அதைச் சரியா அணுக முடியும் ஹாசிணி. எல்லாருக்கும் துரோகத்தோட வலி ஒண்ணுதான்னாலும், அபர்ணாவும் சரி, கீதாவும் சரி, சில பல வருடங்களாவே, எங்ககிட்ட இருந்து மனசளவுல ரொம்ப விலகிட்டாங்க.
குடும்பமா இருக்கனும், கல்லூரி படிக்கிற பசங்க வந்தாச்சு; இதுக்கு மேல ஏன் சண்டை போடனும், சமூகத்துல என்ன சொல்லுவாங்க இது மாதிரியான விஷயங்கள்தான் பிரியாம இருந்ததுக்கு காரணம். தவிர, நாங்க வேலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மனைவிக்கு கொடுக்கலையோன்னு ஒரு சின்ன குற்ற உணர்வு எங்களுக்குள்ள இருந்துது.
எப்டின்னாலும், இந்த இடைவெளி வந்ததுக்கு, கணவன்ங்கிற முறையில, என் சைடும் நிறைய தப்பு இருக்குமில்லை, இதுக்கும் மேல, புதுசா இன்னொரு கல்யாணமா பண்ணப் போறோம், அப்டி ஏன் பிரியனும்னு நினைச்சுவிட்டாலும், மனசளவுல நானும், அபர்ணவும் ரொம்ப விலகிட்டோம்.
கீதா ஹஸ்பெண்டுக்கும் அப்படித்தான். அலுவலகத்தில் தன்னைப் பலரும் பெரிதாக மதிக்கும் போது, அதைப் பொருட்டாகவே மதிக்காத கீதா மேல அவருக்கு பயங்கர வருத்தம். அதுனாலியே, தனக்கு எங்க ரெகக்னிஷன் இருக்கோ, அங்க கவனத்தை செலுத்தி முன்னேற ஆரம்பிச்சிட்டாரு. தன்கிட்ட எப்டி நடந்தாலும், தன் பொண்ணை வளர்க்கிற விதத்துல கீதாகிட்ட குறையே சொல்லிட முடியாதுங்கிறதுனாலியே, அவரும் பிரிவைப் பத்தி நினைக்கவே இல்லை.
மனைவியா பாக்குறதை நிறுத்தி, எங்க குழந்தைகளோட அம்மான்னு பாக்க ஆரம்பிச்சிட்டோம். அதுனால, எங்க ரெண்டு பேருக்கும் இது சாதாரண துரோகம் மட்டுமே.
ஆனா, சுந்தருக்கு இது நம்பிக்கை துரோகம். தன் மனைவி, தனக்கு செஞ்ச துரோகம். தனக்கு துரோகம் செய்யுறதுக்காக, தன் குழந்தையோட அம்மாங்கிற கடமையையும் சரியா செய்யாத அளவுக்கான துரோகம். எந்தக் காரணமுமே இல்லாம, இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண எப்டி மனசு வந்திருக்கும்? எல்லாம் பண்ணிட்டு வந்து, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம எப்டி என்கிட்டயே சிரிச்சு பேச முடியுது? அவனையே, அவளோட சொந்தத் தங்கச்சிக்கு மாப்ளையா எப்டி பாக்க முடியுதுன்னு ஏகப்பட்ட கேள்விகள்!
சுந்தர், எங்க ரெண்டு பேரையும் விட ரொம்பவே வயசுல சின்னவரு! இந்த ஏஜ்லியே, தன் மனைவி, தன்னை விட்டுட்டு வேற ஒருத்தனைத் தேடி போயிருக்கான்னா, தாம்பத்ய விஷயத்துல தன்னால, தன் மனைவியைத் திருப்தி படுத்த முடியலையோன்னுல்லாம் டவுட்டு வர ஆரம்பிச்சிடுச்சி.
அ… அண்ணா!
கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் மனம் வலித்தது. மனைவியின் துரோகம், ஒரு ஆணுக்கு சைக்காலஜிக்கலாக என்ன விதமான வலியைத் தரும் என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.
தான் யோசிக்கிற விதம் ரொம்ப தப்புன்னு அவரு சுதாரிச்சிகிட்டதுனாலத்தான் கவுன்சிலிங்க்கே வந்தாரு. நான் டாக்டர், இந்த ஃபீல்டுங்கிறதுனால வசதியா போச்சுன்னாலும், உண்மையான கவுன்சிலிங், நாங்க மூணு பேரும் மனசு விட்டு பேசிகிட்டப்பதான் கிடைச்சுது!.
இருந்தாலும் அவரு அடிமனசுல, நான் இவ்ளோ நல்லவனா இருந்தும், முழு உரிமை கொடுத்தும், தன் மனைவியே தனக்கு துரோகம் பண்ணிட்டாங்ககிறதை அவரால ஜீரணிக்க முடியலை. தான் என்னதான் மத்தவங்க மேல அன்பா இருந்தாலும், தன் மேல அன்பு செலுத்த, துணையா நிக்க யாரும் உண்மையா இல்லியேன்னு வருத்தம் இருந்துது. ஆனா அக்கா பண்னது தப்பு, நீங்க ஃபீல் பண்ணாதீங்க மாமான்னு நீ அழுதப்பதான், நீ காட்டுன அன்பு, அவர் மனசை நெகிழ வெச்சிடுச்சு. ஒரு பாசிட்டிவ் மன நிலையைக் கொடுத்துது. அவரும் மனசு விட்டுப் பேசினாரு. இனி சரியாகிடுவாரு.
மெடிக்கல் ரீதியா நான் கவுன்சிலிங் கொடுத்தாலும், உணர்வுப் பூரமா அவங்க கூட இருந்த டைம்தான், எனக்கு நானே கவுன்சிலிங் எடுத்துகிட்ட தருணங்கள்! இப்ப உன்கிட்ட பேசுன நேரம் உட்பட!
என் கூட பேசுனதுமா?
ஆமா, சுந்தர் சொன்ன மாதிரி நீ ஸ்பெஷல்தான். உண்மையான அன்பு காட்டுறவங்களைப் பாத்தா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் வருமே அது மாதிரி.
நீங்க ரொம்ப அதிகமாச் சொல்றீங்கண்ணா! அ… அந்த அண்ணா, கீதாவோட ஹஸ்பெண்ட் எப்டி இருக்காரு?
அவருக்கும் ஷாக்தான்! ஆனா, அவருக்கு விஷயத்தைச் சொன்னதே அவரோட பொண்ணு. தன் பொண்ணுக்கு, இந்த வயசுல இப்படி ஒரு அதிர்ச்சிங்கிறதுனால சமாளிச்சு நின்னாலும், அவரும் எங்க கூட மனசு விட்டு பேசுன பின்னாடிதான் தெளிவானாரு. தன் பொண்ணு உள்ளுக்குள்ள என்ன ஃபீல் பண்றா, இதுல அவளுக்கு என்ன மாதிரி கவுன்சிலிங் கொடுக்கனும், ஃபியுச்சர்ல இதனால அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாதேன்னுதான் அவரோட கவலையெல்லாம்.
அ… அடுத்து என்ன பண்றதுண்ணா?
யோசிக்கனும்! அவசரப்படாம, தெளிவா யோசிச்சுதான் எடுக்கனும்.
அடுத்த நாள் அலுவலகம் வந்த சுந்தர், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். தெரிந்த உண்மையும், அது கெடுத்த தூக்கமும், அவன் முகத்தின் சோபையைக் குறைத்திருந்தாலும், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகவே தெரிந்தான்.
தன் கஷ்ட காலங்களில், தன்னுடன் துணை நின்ற, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பெண், எந்தக் காலத்திலும், ஆணின் கண்ணுக்கு பேரழகியாய் தெரிவது போல், தன்னம்பிக்கையாய், நேர்மையாய், வாழ்வின் சோதனைகளில் துவளாமல், நிமிர்ந்து நிற்கும் ஆண், பெண்ணுக்கு பேராண்மை மிக்கவனாய் தெரிவது போல், சுந்தர், ஹாசிணிக்கு தெரிந்தான்.
இந்த ஒரு வாரம், அலுவலகத்தில் தேங்கிய வேலைகளை, புத்துணர்ச்சியுடன், பார்க்க ஆரம்பித்ததையும், அவன் மனம் எதிர்காலத் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதையும், சற்று பிரமிப்புடனே பார்க்கத் துவங்கினாள்!
தன் தலையைத் தட்டிக் கொண்டவள், மாமா தெளிவாயிட்டாரு, நான் குழம்ப ஆரம்பிச்சிட்டேன் என்று சிரித்துக் கொண்டவள், அவரை மாதிரியே, தன் முடிவு உணர்ச்சி வசப்பட்டு இல்லாமல், தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் கழித்து, வார இறுதியில் சுந்தர் மற்ற இருவரையும் சந்தித்த போது ஹாசிணியும் உடனிருந்தாள்.
இடைபட்ட காலத்தில், ஹாசிணி கீதாவின் கணவனான ராமினை மட்டுமல்ல, அவள் மகளையும் சந்திருந்தாள்.
பார்த்த காட்சிகளின் அதிர்ச்சியும், தான் மிகவும் நம்பிய, தன் அன்னையின் செயலும், அவளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், யாரிடமும் அதை மனம் விட்டுப் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த இளம் மொட்டு, ஹாசிணியிடம் பேசிய பின் தான் தெளிவடைந்திருந்தாள். தன் மகளின் முகத்தில் மீண்டும் புன்னகையையும், புதுத் தெளிவையும் கொண்டு வந்த ஒற்றைக் காரணத்திற்க்காகவே, கீதாவின் கணவனுக்கும், ஹாசிணி அன்புத் தங்கையாகியிருந்தாள். அபர்ணாவின் கணவனுக்கு, ஹாசிணி மேலிருந்த அன்பும், மதிப்பும் இன்னும் கூடியது.
ஏன் ஹாசிணி, இன்னும் உங்கக்காகிட்ட விவேக்குக்கு நோ சொல்ல மாட்டேங்குறீயாம்? சுந்தர் ரொம்ப ஃபீல் பண்றாரு? என்று கேட்டது அபர்ணாவின் கணவன் மதுசூதனன்.
ஆமா, ஹாசிணி, வேணாம்ன்னு சொல்லிடலாம்ல்ல? என்றது ராம்!
நான் சொல்றது இருக்கட்டும், முதல்ல நீங்க அந்த விவேக்கை என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க?
அதுக்கும், இதுக்கும் என்ன ஹாசிணி சம்பந்தம்? நீ இதுல உள்ளயே வராத என்று கோபமாகப் பேசியது சுந்தர்.
சூப்ல காரம் கம்மியாதானே இருக்கு, நீங்க ஏன் கடு கடுன்னு பேசுறீங்க மாம்ஸ்?
சுந்தரின் கோபத்தினை அலட்சியம் செய்து ஹாசிணி பேசும் சுட்டித்தனம், ராமையும், மதுவையும் ரசிக்க வைத்தது என்றால், சுந்தருக்கு இன்னும் கோபத்தைக் கொடுத்தது.
ஹாசிணி, விளையாடாத. நான் சீரியசா சொல்றேன். அந்த விவேக்கே நாங்க பாத்துக்குறோம். நீ இதுல உள்ளயே வராத. எக்காரணம் கொண்டும், அவனோட நிழல் கூட, உன் பக்கம் திரும்புறதை நான் விரும்பலை!
அவன் அக்கறையின் மனம் கனிந்தவள், நான் வேணாம்ன்னு சொல்லிட்டா, அவிங்க அடுத்த ஸ்டெப்புக்கு போயிடுவாங்க மாமா. அதான் ஒரு மாசம் டைம் கேட்டிருக்கேன். இப்ப அவங்க வெயிட் பண்ணுவாங்க. கவனம் முழுக்க என்னைக் கன்வின்ஸ் பண்றதுலதான் இருக்கும். அக்கா டெய்லி, என்கிட்ட விவேக் புராணம் பாடிட்டிருக்காங்க. நான் கேசுவலா கேக்குற மாதிரி, அவனைப் பத்தி கொஞ்சம், கொஞ்சமா விஷயம் தேத்திட்டிருக்கேன். அநேகமா, அடுத்த வாரத்துல, அவனைப் பத்தின பிகேவியர் அண்ட் கேரக்டரை ஓரளவு ஸ்டடி பண்ணிடுவேன்.
அப்டி என்ன தெரிஞ்சிகிட்ட ஹாசிணி?
அவனுது சின்ன ஃபாமிலிதான். ஒரே ஒரு அண்ணன். ஆனா, அவன் தனிக்குடித்தனம் போயிட்டான். ஓரளவு அப்பர் மிடில் கிளாஸ் ஃபாமிலி. இவன் காசும் அனுப்ப மாட்டான், அதுக்கு தேவையும் இல்லை. அடிக்கடி ஊருக்கும் போறதில்லை. இந்த மாதிரி விசயங்கள்லியே தொடர்ந்து கவனம் செலுத்துறதுனால, அவனுக்குன்னு நம்பிக்கையான க்ளோஸ் நட்பு, உறவுன்னு வேற யாரும் அதிகம் இல்லை. டிடெக்டிவோட ரிப்போர்ட் படி யோசிச்சா, இவனோட தப்புகள் இவனோட அண்ணனுக்கு தெரிஞ்சதுனாலத்தான் தள்ளி நிக்கிறார்ன்னு தோணுது. அவன் அப்பாவுக்கும் கூட பையனைப் பத்தி ஓரளவு தெரியும் போல! பட், இதைக் கண்ஃபார்ம் பண்ணனும். பண்ணிடுவேன்!
மிகக் கேசுவலாக, தட்டினைப் பார்த்து சாப்பிட்டுக் கொண்டே ஹாசிணி சொன்ன தகவல்களைக் கேட்டு மூவருமே பிரமித்துப் போயிருந்தனர்.
சுந்தர் பிரமித்தாலும், அவள் மீதான அன்பினால், இதெல்லாம் நாங்க உன்னைக் கேட்டோமா? இது தேவையில்லாத வேலை.
நீங்கக் கேட்டுட்டாலும்! என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டா, தெளிவா முடிவெடுக்கனும்ன்னு ஓவர் பில்டப் கொடுத்து, வானத்தைப் பாத்து யோசிச்சுகிட்டுதான் இருக்கீங்க. அவ்ளோக்கெல்லாம் அவன் ஒர்த்தே இல்லை! பொண்ணுங்க கூட பேசுறதைத் தவிர, அவனுக்கு வேற ஒரு மண்ணும் அவனுக்குத் தெரியாது. அடிச்சுப்போட்டா, அவங்கம்மாவைத் தவிர, அவனுக்காக வரிஞ்சு கட்டிட்டு வர, சப்போர்ட்டும் கிடையாது.
பேச்சுக்குதான், தான் பெரிய இவனாட்டாம், தன்கிட்ட வர்ற லேடீஸ்கிட்ட பில்டப் பண்ணிக்குறான். சைக்காலஜிக்கலா, அவனுக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸா கூட இருக்கலாம். தனக்குன்னு நெருக்கமான நண்பர்கள், சொந்தம்ன்னு யாரும் இல்லையே, இத்தனைப் பெண்களை எமாத்த முடிஞ்சாலும், ஒரு பொண்ணையும் லவ் பண்ண வைக்க முடியலியே, ஒழுங்கா ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க துப்பில்லையேன்னு பல பிரச்சினைகள் இருக்கலாம். அதுல இருந்து மறைக்க இப்படி பேசிகிட்டு திரியுறான். அவன் ஒருத்தனுக்கு, நீங்க மூணு பேரும், ரூம் போட்டு வேற யோசிக்கிறீங்க! அதுவும் இத்தனை நாளா?!
அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு, மதுசூதனனே பிரமித்தார். எவ்ளோ பெரிய சைக்காலஜிக்கல் விஷயத்தை, இவ்வளவு அநாயசமாய் சொல்றா இவ என்று?
இதையெல்லாம் எப்படி யோசிச்ச ஹாசிணி?!
நீங்க சொன்னதுதான் டாக்டர். பிரச்சினைக்குள்ள இருந்து பாத்தா, தீர்வு கிடைக்காதுன்னு சொன்னீங்கள்ல? அதேதான். தெரிஞ்சோ, தெரியாமலோ, நீங்க மூணு பேரும், அவனை உங்களோட போட்டியாளரா பாக்க ஆரம்பிச்சுட்டீங்க! ஆனா, நான் அவனை ஒரு பொருட்டாவே பாக்கலை. இத்தனை பேரு சேந்து ப்ளான் பண்ணி தூக்குற அளவுக்கு அவன் ஒர்த்தே இல்லை!
ஹாசிணி சொன்ன விதத்தில், மூவருக்கும் சிரிப்புதான் வந்தது. அவள் மறைமுகமாக மூவரையும் இலேசாகச் சீண்டி, மோடிவேட் செய்து கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்களிடையே தொலைந்திருந்த நகைச்சுவையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்.
சுந்தர் கனிவாகச் சொன்னான்.
நீ சொன்னது ஒரு விதத்துல கரெக்ட்னாலும், நாங்க யோசிக்கிறது அவனுக்காக இல்லை ஹாசிணி! எங்களுக்காக. எந்த விதத்துலியும், நாங்க இதுவரை கொண்டு வந்திருக்கிற எங்க உழைப்புக்கோ, குடும்பத்துக்கோ, முக்கியமா எங்க குழந்தைங்க மனசு கஷ்டப்படும் படியோ எந்த விஷயமும் நடப்பதை நாங்க விரும்பலை.
ராமோட பொண்ணு, இதையெல்லாம் பாக்க வேண்டியதாயிடுச்சேன்னு, ஏற்கனவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. அவனை அடிச்சு தூக்கவோ, வேற ஏதாவது பண்ணவோ, நிமிஷம் ஆகாது. ஆனா, அப்படி இருக்கக் கூடாதுன்னுதான் யோசிக்கிறோம்.
ம்ம்… ஏதோ இவ்ளோ சொல்றீங்களோன்னு விடுறேன். இருந்தாலும், இன்னும் ஒரு வாரம்தான் உங்களுக்கெல்லாம் டைம்! அதுக்குள்ள பிளான் என்னன்னு சொல்றீங்க! இல்லை…
என்னை என் பொண்ணு கூட இப்டி மிரட்டினதில்லை ஹாசிணி என்று ராம் சிரித்தான்.
இனிமே மிரட்டச் சொல்றேண்ணா, டோண்ட் ஒர்ரி! தா அந்தப் பக்கம் பாருங்க, அவ்ளோ பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓனரு, சைக்கியாட்ரிஸ்ட்,ன்னு சொல்லிகிறாரு, அந்த விவேக்குக்கு ஸ்கெட்ச் போட இப்படி யோசிச்சிட்டிருக்காரு! சைக்காலஜிக்கலா அவனை எப்டித் தட்டனும்ன்னு இன்னேரம் முடிவு பண்ணியிருக்க வேணாம? என் கவலையெல்லாம், இவரையும் நம்பி வர்ற, இவரு பேஷண்ட்டுகளை நினைச்சாதான் பாவமா இருக்கு என்றவளின் பேச்சில், மதுசூதனன்னுக்கு புரையேறியது.
என்ன பேச்சு ஹாசிணி இது என்று சுந்தர் அதட்டியதற்க்கு,
அவிங்க ரெண்டு பேரும்தான், என்னைத் தங்கச்சின்னு சொன்னாங்க, தங்கச்சின்னா இப்டித்தான் ஓட்டிகிட்டு இருப்பா, உங்களுக்கென்ன?
ஹாசிணியைத் தடுக்காத சுந்தர். ரொம்ப நாள் ஆச்சு, இப்டி ஜாலியா இருந்து. உண்மையாலுமே அவ எங்க தங்கச்சிதான். அவ இப்டி இருக்கிறதுதான் எங்களுக்குப் புடிச்சிருக்கு என்று புன்னகையுடன் சொன்னவுடன்,
இப்ப என்ன பண்ணுவீங்க என்று சுந்தரைப் பார்த்து, பழிப்பு காட்டிச் சிரித்தவளின் செய்கையில் அனைவரது புன்னகையும் இன்னும் கூடியது.
அடுத்த இரு வாரங்களில், சுந்தர் மிகத் தெளிவாகியிருந்தாலும், ஹாசிணியின் குழப்பம் அதிகமாகியிருந்தது. ராம், மதுசூதனன், சுந்தர் சந்திப்புகளில், ஹாசிணியும் கலந்து கொள்வது இயல்பாகியிருந்தது. சமயங்களில் ராமின் பெண்ணும் கலந்து கொண்டாள்.
ராமிற்கும், மதுசூதனிற்க்கும் ஹாசிணி அன்புத் தங்கை என்றால், ராமின் பெண், சுந்தருக்கு செல்லத் தங்கையாகியிருந்தாள்.
ராம் இயல்பாகச் சொன்ன ஒரு விஷயமும், அதற்கு சுந்தரின் பதிலும் ஹாசிணியின் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது…
சுந்தர், என்னோட சஜசன், நீ இந்த விவேக் விஷயத்தை முழுக்க மறந்துட்டு, வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க. எங்களை மாதிரி இல்ல உனக்கு! உனக்கு இன்னும் வயசும், வாழ்க்கையும் இருக்கு!
ராம் சொல்றது கரெக்ட் சுந்தர்! உனக்காக இல்லைன்னாலும், உன் குழந்தைக்காகனாச்சும்ன்னு சினிமா டயலாக்லாம் பேச விரும்பலை. அது அந்தப் பொண்ணுக்கு செய்யுற துரோகம். முழுக்க, முழுக்க உனக்காகவே ஒரு கல்யாணம் பண்ணிக்க! உனக்காக வர்றவ, உன் குழந்தையை வேணாம்ன்னு சொல்லிடுவாளா என்ன?
பெருமூச்சு விட்ட சுந்தர், பாக்கனும், என்னதான் தெளிவானாலும், அடி மனசுல ஒரு சின்ன பயம் இருக்கு. மனசுக்கு நெருக்கமா இன்னொருத்தரை ஏத்துக்குறதுக்கு சின்னத் தயக்கம் இருக்கு. அவ்ளோ ஈசியா நம்பிக்கை வர மாட்டேங்குது!
மவுனமாய் கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் கண்கள் ஈரமாகியது. அவள் மனம், சுந்தரின் நிலையைக் கண்டு தவித்தது. அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஒருவனுக்கு, இந்தத் துரோகம் கொடுக்கும் வடு எத்தகையது என்பதில் அவள் மிகவும் வருந்தினாள்.
சும்மா லூசு மாதிரி உளறாத மாமா! இனி இப்டி பேசுன, எனக்கு கோபம் வந்துடும். லைஃல பாசிட்டிவா எப்டி இருக்கனும்ன்னு எனக்கு சொல்லிக் கொடுத்ததே நீதான். இப்ப யாரோ பண்ண தப்புக்கு, ஏன் இவ்ளோ நெகட்டிவா பேசுற? மனம் தாங்காமல் படபடத்தாள் ஹாசிணி!
அது யாரோ இல்ல ஹாசிணி! என் மனைவி! எனக்கு விவேக் மேல கூட பெரிய கோபமில்லை. ஹரிணி மேலத்தான் வருத்தமே!
என் அக்காவாவே இருந்தாலும் பராவாயில்லை, இனி ஹரிணி உங்களுக்கு யாரோத்தான் மாமா! நீங்க அவளை, மனசுல வெச்சு சுமக்கிறதுனாலத்தான், அவ பண்ணது வலிக்குது! அவ யாரோ, இனி உங்க வாழ்க்கைல அவளுக்கு இடமில்லை, எது உங்களோட லட்சியம், சந்தோஷம்ன்னு யோசிச்சு செய்ங்க. அப்ப, அந்த வலி பெருசா தெரியாது. அதை விட்டுட்டு…
தான் வருந்தினால், உடனே ரியாக்ட் செய்யும் ஹாசிணியின் அன்பில் சுந்தரும், அக்காவிற்காக இல்லாமல், நியாயத்தின் பால் பேசும் உண்மையில் ராமும், பெரிய மனோதத்துவ விஷயத்தை மிக சிம்ப்பிளாய் சொல்லி விட்டுச் செல்லும் அறிவில் மதுசூதனனும் புன்னகைத்தாலும், டாக்டரின் பார்வை கொஞ்சம் கூர்மையாகவே ஹாசிணியின் மேல் படிந்தது.
ஹாசிணி சொல்றது கரெக்ட்தான் சுந்தர். நான் சொல்ல வந்தது, விவேக்கிற்க்காக நீ யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண வேணாம் என்பதற்க்காகத்தான். சீக்கிரம் இன்னொரு கல்யாணத்தைப் பண்ணு என்று ராம் முடித்தான்.
சுந்தருக்கு இன்னொரு பெண்ணின் மேல் நம்பிக்கை வருவதில் சிக்கல் என்பதில் வருந்தினாலும், அவன் இன்னொருத்திக்குச் சொந்தமாவான் என்பதில் ஹாசிணியின் மனம் மீண்டும் குழம்ப ஆரம்பித்தது. இனி முன்பு போல் அவனுடன் உரிமையாய் பழக முடியாது என்ற உண்மை அவள் முகத்தில் அறைந்தது.
தான் பருவம் வந்ததிலிருந்து தன் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் சுந்தரிடம் பகிர்ந்து கொண்டு, அவனுடைய சஜசனை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, இனி அது முடியாது என்பதும், தனக்கு கணவனாக வருபவேனே அதை புரிந்துக் கொள்வானா என்ற நிச்சயமின்மையும், இதற்காக சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதா என்ற எண்ணமும் சேர்த்து ஹாசிணியை வாட்டியது.
என்னதான் மனதை ஒருமுகப்படுத்தினாலும், அடுத்த நான்கு நாட்களும், ஹாசிணியின் மனம், அதைச் சுற்றியே வந்தது. சில நாள் கழித்து, அவளைத் தனியாக வந்து பார்த்தது டாக்டர் மதுசூதனன் தான்!
சொல்லு ஹாசிணி! என்ன உன் குழப்பம்?
அ… அண்ணா?!
அன்னிக்கு சுந்தர்கிட்ட நீ பேசுனதுக்கும் முன்னாடியே இருந்து உன்னை கவனிச்சிட்டுதான் வர்றேன். என்ன உன் யோசனை?
எ… என்னைத் தப்பா நினைச்சுட மாட்டீங்களே?!
சுந்தர் சொன்னதுக்காக மட்டுமில்லை ஹாசிணி, இத்தனை நாளா உன் கூட பழகுன முறையிலயும் சொல்றேன், நீ தெரிஞ்சு எந்தத் தப்பும் யாருக்கும் பண்ண மாட்ட. விளையாட்டுக்கு தங்கச்சின்னு சொல்லலை. உண்மையாவே நினைச்சதாலத்தான், இப்ப தனியா வந்து பேசுறேன். என்னைப் பாக்க வர்ற பேஷண்ட்டையே, அவங்க ஷேர் பண்ற விஷயத்தை வெச்சு, ஜட்ஜ் பண்ண மாட்டேன். அப்டியிருக்கிறப்ப, உன்னை எப்டி பண்ணுவேன்? தைரியமாச் சொல்லு.
பெருமூச்சு விட்டவள், எ.. எனக்கு இது இன்னமும் குழப்பமாதாண்ணா இருக்கு. யார்கிட்ட இதைப் பத்தி பேசுறதுன்னு தெரியாம ரொம்ப யோசனை. வெளி ஆட்கள், யாராலயும் இதை சரியா புரிஞ்சிக்க முடியுமான்னு தயக்கம். அதான்…
ஏன், எல்லா விஷயத்துக்கும் சுந்தர்கிட்டதானே டிஸ்கஸ் பண்ணுவ? இதுல மட்டும் என்ன?
இதுக்கு மாமா என்ன பதில் சொல்லுவார்னு எனக்கு நல்லா தெரியும்ண்ணா! தவிர இந்த விஷயமே மாமாவை முக்கியமா வெச்சுதான்…
அப்டி என்ன விஷயம் ஹாசிணி?
நா… நான், மாமாவை லவ் பண்றேனோன்னு தோணுதுண்ணா! என்று சொல்லி விட்டு சற்றே தலை குனிந்து இருந்தவளைப் பார்த்த ராம் பிரமித்து நின்றான். கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் தைரியமாக சுற்றும் போது, இவள் அன்பைச் சொல்லுவதற்கு தயங்குகிறாள் என்று…
எ… என்னண்ணா எ… எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?
என்ன சொல்றதுண்ணு தெரியலை ஹாசிணி! ஓகே, நான் என் கருத்தைச் சொல்றதுக்கு முன்னாடி, என் கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு. மே பி, அது உனக்கே தெளிவைக் கொடுக்கலாம். என்ன சொல்ற?
ம்ம்ம்.. ஓகே.
நீ பரிதாபப்பட்டு இந்த முடிவை எடுத்தியா?
ம்கும்… நான் ரொம்ப யோசிச்சதுக்கு காரணமே, இப்படி ஒரு கேள்வி வருமேன்னுதாண்ணா. பரிதாபத்துக்காக வாழ்க்கை நடத்த முடியாதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்! பரிதாபப்படுற நிலைல மாமா இருக்காருன்னு நீங்க நினைக்கிறீங்களா?
நான் என்ன நினைக்கிறேங்கிறது பிரச்சினை இல்லை ஹாசிணி! இந்தச் சமூகம் என்ன நினைக்கும்கிறதுதான் விஷயம்!
எந்தத் தப்பும் செய்யாம, மாமாவை வேற யாரும் பரிதாபமா பாக்கக் கூடாதுன்னு நினைக்குறேண்ணா. அதுனாலத்தான் ரொம்ப யோசனையா இருக்கு. சொல்லப் போனா, அக்கா இறந்தாலோ, அக்காவுக்கு குழந்தை இல்லைன்னாலோ, தங்கச்சியைக் கல்யாணம் பண்றது இங்க வாடிக்கைதான். அக்கா பண்ண விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, எங்க வீட்லியே என்னை கேப்பாங்கங்கிறதுல எனக்குச் சந்தேகமே இல்லை.
ஆனா, நான் விரும்புறது அதை இல்லை! மாமாவை, அவரோட கேரக்டருக்காகவே லவ் பண்ணனும்கிறதுதான். இது அக்கா குழந்தையை வளர்க்கிறதுக்காகவோ, மாமா நிலைமை இப்படி ஆகிடுச்சேன்னு இல்லாம, அவரோட கேரக்டருக்காக நடக்கிறதா இருக்கனும்னு விரும்புறேன்.
எப்பருந்து அவரை லவ் பண்ற ஹாசிணி?
இதென்ன சினிமாவாண்ணா? ஒரு சீன்ல ஹீரோயினை, ஹீரோ காப்பாத்துவாரு, அதுலருந்து லவ் வந்துடுச்சுன்னு சொல்ல. எனக்கு மாமாவை எப்பவுமே பிடிக்கும். ஒரு வெல்விஷரா, ஃபிரண்டா, மோடிவேட்டரா, வழிகாட்டி மாதிரி பல ரோல்ல நெருக்கமா இருந்திருக்காரு. எங்க அக்காவுக்கு கூடத் தெரியாத, என் வயசுக்கேக்குரிய தடுமாற்றங்களைக் கூட அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அவ்ளோ க்ளோஸ்! ஆனா, அவரு மேல இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை! ஏன்னா, எனக்கு அவர் அறிமுகமானதே என் அக்காவோட கணவர்ங்கிற முறைலதான்.
ஆனா, இன்னிக்கு அக்காவோட உறவு தொடராதுங்கிற நிலையிலயும், என் மேல காட்டுற அக்கறைலியோ, அன்புலியோ எந்த டிஃபரன்சும் இல்லைங்கிறப்பதான் என் மனசு தடுமாற ஆரம்பிச்சுது. இத்தனைக்குப் பின்னாடியும், அடுத்து என்னன்னு தைரியமா நிக்குற அவரோட கம்பீரம் என்னை பாதிக்குது. ஆம்பிளைன்னா இப்டித்தான் இருக்கனும்ன்னு தோணுது!
எனக்கு வரப் போற கணவர், எங்க மாமா மாதிரியே கேரக்டர் கொண்டவரா இருக்கனும்ன்னு யோசிச்ச எனக்கு, ஏன் மாதிரியே? அவரே இருந்தா என்னன்னு ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கே, அதை ஏன் விடனும்ன்னு தோணுது!
எல்லாத்தையும் விட, எங்கக்காவோட நம்பிக்கை துரோகத்துக்கு பின்னாடி, வேறெந்த பொண்ணு மேலயும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னவரு, இன்னும் என்னை மட்டும் கண்மூடித்தனமா நம்புறாரே, அந்த நம்பிக்கையை ஏன் அவரோட வாழ்க்கை முழுக்க கொடுக்கக் கூடாதுன்னு யோசிக்க வைக்குது
நல்லாத் தெளிவா குழப்புற ஹாசிணி. இதுல எங்கியுமே லவ் வரலையே?
சினிமா, புக்ல வர்ற மாதிரி தோணுனாத்தான் லவ்வா என்ன? தன் கணவர்கிட்ட, ஒரு பொண்ணு எதிர்பாக்குற எல்லா கேரக்டரும் தேவைக்கும் அதிகமாவே அவர்கிட்ட இருக்கு. அதுனால அவர்கூட என் வாழ்க்கையை வாழனும்ன்னு ஆசைப்படுறது லவ் இல்லையா?
இவ்ளோ நாளா அக்கா கணவரா இருந்தப்ப, இது வெறும் அன்பு. இனி என் அக்கா கணவரா இருக்க முடியாது. வேற யாரோ ஒருத்தியோட கணவரா மாறுனா, அந்த அன்பு எனக்கு கிடைக்காதுங்கிற உண்மை, முன்ன மாதிரி நெருக்கமா இருக்க முடியாதேன்னு ஏக்கம், எல்லாம் தாண்டி, இந்த முறை, இன்னொருத்தருக்கு சொந்தமா அவரை யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு பொசசிவ்னெஸ் இதெல்லாம், ஒரு நார்மல் ஃபிரண்டுகிட்ட தோணாதுன்னா. வெளிப்படையாச் சொல்லனும்ன்னா, அவரை எனக்கே எனக்கா சொந்தமாக்கிக்கனும்ன்னு, கொஞ்சம் சுயநலமா யோசிக்கிறேன்!
இ… இன்னொருத்தி வந்து, அவரை சொந்தமாக்கிட்டுப் போறதுக்கு முன்னாடி, எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசையா இருக்கு. இ.. இதுக்குப் பேரு லவ் இல்லையா?
சற்றே தலைகுனிந்து அனைத்தையும் சொன்னவளை கொஞ்சம் பிரமிப்புடனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன். தன் காதலை கொஞ்சம் மட்டம் தட்டிச் சொன்னது போல் சொன்னாலும், அவள் சொன்ன விளக்கமும், அதிலிருந்த ஆழ்ந்த பொருளும், அதில் தெரிந்த அவள் தெளிவையும், அன்பையும் கண்டவன், இது நடந்தால் சுந்தர் லக்கி என்றே நினைத்தான். முன்பை விட மிகக் கனிவாகவும், அன்பாகவும் ஹாசிணியை பார்க்க ஆரம்பித்தான்.
அவ்ளோ தெளிவா இருக்கன்னா, இன்னும் என்ன யோசிக்கிற ஹாசிணி?
முதல்ல நான் யோசிக்கிறது சரிதானான்னு டவுட்டுண்ணா. ஆனா உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன பின்னாடி எனக்கே நல்லா தெளிவு வந்துடுச்சு. இப்ப என் யோசனையெல்லாம், மாமாவை எப்டி கன்வின்ஸ் பண்ணனும், சமூகத்துக்கு, இதை எந்த மாதிரி சொல்லனும்ன்னுதான் என்று தலை நிமிர்ந்தவளைக் கண்டு புன்னகை வந்தது மதுசூதனனுக்கு.
என்னண்ணா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?
நீ எடுத்த முடிவு சரியா, தப்பாங்கிறதுல்லாம் தேவையில்லாத விஷயம் ஹாசிணி! ஆனா, என்னை ஆச்சரியப்படுத்துனது, நீ யோசிக்கிற விதம்தான். சுந்தர் மாதிரி ஒரு மெச்சூர்டு திங்க்கருக்கு, நீ ரொம்பப் பொருத்தமா இருப்ப. ஏஜ் டிஃபரன்ஸோ, அண்டர்ஸ்டாடிங்கோ, அவன் குழந்தையை எப்படி பாத்துப்பன்னு எந்த விஷயத்துலியும் ப்ராப்ளம் இல்ல. சொல்லப் போனா, சில விஷயங்கள்ல, நீ அவன் மனைவியா வர்றதுதான் ரொம்பப் பொருத்தமும் கூட. என் டவுட்டு ரெண்டே ரெண்டுதான்!
எ.. என்னண்ணா?
ஒருத்தரை ஃபிரண்டா, வழிகாட்டியா, நல்லவர்ங்கிறதுனால மனசுக்கு நெருக்கமானவரா பாக்குறது வேற, அவரை லவ்வரா பாக்குறதுங்கிறது வேற! மெச்சூர்டா திங்க் பண்றதும், நடந்துக்குறதும் நல்லதுதான், ஆனா வாழ்க்கைல எல்லா நேரமும் அப்டியே இருந்தா போரடிச்சிடும். அதுல அழகு சேக்குறதுக்கு இண்டிமசி (Intimacy) ரொம்ப முக்கியம். என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல, நல்லா தெரிஞ்ச ஃபிரண்டைக் கல்யாணம் பண்ணவங்கக் கூட, இந்த டிஃபரன்சை புரிஞ்சிக்காம டைவர்ஸ்ஸு பண்ணலாமான்னு வந்துருக்காங்க.
சுந்தரை இதுவரைக்கும் மரியாதையா பாத்த நீ, கணவனா பாக்கனும்ன்னா, அந்த வித்தியாசத்தை உண்மையாலுமே உணர முடியுதா? இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருந்தாலும், இனிமே இருக்கக் கூடிய நெருக்கம் வேற. அந்த உணர்வை புரிஞ்சுதான் சொல்றியா? காதல் வேற, காமம் வேறன்னு பேசுறதெல்லாம் சினிமா டயலாக்குக்குதான் சரி வரும், எல்லாப் பொண்ணுங்களுக்கும் தன் கணவன்கிட்ட பாதுகாப்பு உணர்வு வர்ற அதே அளவுக்கு, காம உணர்வும் வந்தாதான், அது முழுமையா இருக்க முடியும். இதெல்லாம் யோசிச்சுதான் சொல்றியா?
இவ்வளவு நேரம் தலை குனிந்திருந்தவள், நிமிர்ந்து டாக்டரின் கண்களையே பார்த்தவாறே சொன்னாள்!
இதெல்லாம் நல்லா யோசிச்சுதாண்ணா சொல்றேன். சொல்லப் போனா, இந்த மாதிரி ஆங்கிள்லதான் அதிகம் யோசிச்சேன். அதுக்கப்புறம்தான், இது லவ்வுன்னு முடிவுக்கு வந்தேன்.
இன்னும் பிரமித்தான் மதுசூதனன்! தான் காமத்தை யோசித்தேன் என்று சொல்லுவதற்கு, கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ படவில்லை. தன் மனதுக்கு பிடித்தவனுடனான நெருக்கத்தில் கிறங்கி, வெட்கப்படும் உணர்வு எவ்வளவு அழகோ, அதை விட அழகு, அந்த உணர்வை ஒருவரிடம் மட்டுமே காட்ட முடியும், அது என் சுந்தரிடம் மட்டும் காட்ட முடியும் என்று தெளிவாக, தைரியமாக டாக்டரிடம் சொல்லும் போது காட்டும் நிமிர்வு. ஹாசிணியின் அன்பைக் கண்டு அவளைக் கனிவாக பார்த்த டாக்டருக்கும், அவளது நேர்மையைக் கண்டு, அவள் மீதான மரியாதை கூடியது.
ப்பா… என்னா பொண்ணுடா? சுந்தர் சொன்னது மிகச் சரிதான். அந்தளவு ஹாசிணியை சரியாக கணித்திருக்குக்கும், அவளை புரிந்திருக்கும் சுந்தருடன் ஹாசிணி இணைவது, இருவருக்குமே மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும். சுந்தருக்கும், இந்தச் சூழ்நிலையில், அவனை விரும்பும், அவனை இன்னும் உயர்த்தும், முழுமையாக புரிந்து கொள்ளும் மனைவி என்றால், கூடுதல் இன்பம்தானே என்று தோன்றியது?!
உங்க ரெண்டாவது டவுட்டு என்னண்ணா?
ம்ம்… இவ்ளோ தெளிவா நீ யோசிச்சாலும், சுந்தர் இப்ப இருக்குற நிலைல, இதைப் புரிஞ்சுக்குவாரா, அவரும் உன்னை லவ் பண்ணுவாரா? நான் உன்னை அப்டி பாக்கலைன்னோ, பரிதாபப் படுறியான்னுதான் கேப்பாரு. அவரை எப்டி கன்வின்ஸ் பண்ணுவன்னுதான்!
ஹா ஹா ஹா… மாமாவை நான் லவ்தான் பண்றேன்னு தெளிவான பின்னாடி, ஒரு வாரமா நான் யோசிச்சது, இதைப் பத்திதான். என்ன சொன்னாலும், மாமா இதுக்கு ஓகே சொல்ல மாட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்! அவரு ஓகே சொல்ல மாட்டாருங்கிறப்பதான், அவர் மேல இன்னும் லவ் ஜாஸ்தியா வருது. இந்த வாழ்க்கைல ஒரு சின்ன சுவாரசியம் வருது! ரொம்ப முக்கியமா, அவரை எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசை அதிகம் வருது!
அப்புறம் என்ன பண்ணப் போற?
ம்ம்… ரெண்டு விஷயம் பண்ணப் போறேன்.
ஒண்ணு, அவரைக் கண்ணாபிண்ணான்னு லவ் பண்ணப் போறேன், அதை அவர்கிட்டயே சொல்லிட்டு பண்ணப் போறேன்.
கேட்டுக் கொண்டிருந்த மதுவுக்கும் புன்னகை வந்தது. சிரிப்புடன், அடுத்து என்னப் பண்ணப் போற என்று கேட்டவன் அதிர்ந்தான்.
ரெண்டு, விவேக்கை கல்யாணம் பண்ணிக்க ஓகேன்னு சொல்லப் போறேன்!