Chapter 04

மறுநாள் கோயம்புத்தூர், ஒரு புகழ் பெற்ற கிளப், எண்ட்ரன்ஸ் பீஸ் கட்டி பதிவு செய்து விட்டு, எனக்கு அளிக்கப்பட்ட நம்பர் பொறித்த வெஸ்ட் வாங்கிக்கொண்டு, நானும், கோச்சும் என் கேம் கோர்ட் தேடிப்போனோம், தாத்த சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு பார்க்கிங் சென்றார். எனது போட்டி ரெண்டாவது சுற்றில், இன்னும் நேரம் இருந்தது, நாங்கள் கோர்ட்டீன் கேலரியில் அமர, முதல் சுற்று போட்டியாளர்கள் சிலர் பயிற்சியிலும், சிலர் வாம்அப் பன்னிக்கொண்டும் இருந்தார்கள், வீட்டில் இருந்து கொண்டு வந்த ஜூஸை குடிக்க சொன்னார் கோச். சிறது நேரத்தில் தாத்தா வந்து எங்கள் பக்கத்தில் அமரந்து

"எப்போ தம்பி உன் மேச் ஆரம்பிக்கும்னு கேக்க"

"எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு குறையாது"யென்று கோச் சொன்னார்,

"இது தெரிஞ்சிருந்தா, நாம வெளிய போயே சாப்பிட்டு இருக்கலாமே, பரவா இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல இட்லி வந்துரும், இட்லி ஓகேவா தம்பி, இல்ல வேற சொல்லட்டுமா?"

"இடலியே போதும் சார்"னு சொன்னார் கோச், நாங்க ரெண்டு பெரும் காலையில் சாப்பிடுவதை பற்றியே யோசித்திருக்கவில்லை.

"தம்பி, நல்ல தூங்கினியா வண்டில, சோர்வா இல்லையே?"

"ஏறி உக்கந்த உடனே தூங்கினாவன் தான், இங்க வந்து வண்டி நின்னது கூட தெரியமா தானே தூங்கிக்கிட்டு இருந்தேன், நீங்கதான தாத்தா எழுப்பி விட்டீங்க!"

"சும்மா கேட்டேன் டா கண்ணா, இந்த சாப்பாடு வந்துருச்சு" வந்த சாப்பாட்டை நாங்கள் காருக்கு சென்று சாப்பிட்டு வர,

ஒரு அரைமணி நேரத்தில் எனக்கான போட்டி அழைப்பு வந்தது, ஆரம்பித்து பதிணைந்தே நிமிடத்தில் ஜெய்த்தேன், நேர் செட்களில், கூட்டம் இல்லா விட்டாலும் ஓரளவு அதிகமான கரஒலிகள், பரஸ்பர கை குழுக்களுக்கு பின் கோச் வந்தது என்னைப் பாராட்டி அனைத்துக் கொண்டார்.

"வெல் பிளேய்டு எங் மேன்"னு சொல்லி ரேபிரீ கைகொடுத்தார். தான் போட்டி நடக்கும் கிளப்பில் கோச் என்றும், நான் எந்த கிளப்னும் விசாரித்தார். நான் தொழில்முறை பயிற்ச்சி பெறவில்லை என்பதை நம்ம மறுத்தார், பின்பு விருப்பம் இருந்தால் தங்கள் கிளப்பில் சேர சொல்லி அவரது விசடிங்க காரட் கொடுத்தார். கோச் யோசிப்பதாக சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டார். அந்த கோச் சொன்னதை தாத்தாவிடம் கூற, பெருமையோடு முதுகில் தட்டி பாராட்டினார்.

"அடுத்த ஆட்டம் எப்போ"னு தாத்தா கேக்க, தான் கேட்டு விட்டு வருவதாக கோச் சொன்னார், நானும் உடன் செல்ல எழ, தடுத்து என்னை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் வந்தவர், அடுத்த சுற்று மூன்று மணிக்கு மேல் தான் என்றும், மூணாவது சுற்று நாளைக்கு காலையில் இருக்கும்னு சொல்ல

"அய்யோ, நாளைக்கு வரைக்கும் இருக்கணுமா பா?"னு தாத்தா கேட்க

"உங்களுக்கு வேலை இருந்தா, நீங்க கிளம்புங்க, நான் மணி கூட இருந்துட்டு, நாளைக்கு போட்டி முடிஞ்சதும், வீட்ல விட்டேறேன்"னு கோச் சொல்ல, சிரித்த தாத்தா

"என்ன தம்பி நீங்க, இதுக்குத் தான் உங்க வொய்ஃப்-ட திட்டு வாங்குரிங்க, இன்னைக்கு நைட் வரேன் சொல்லிட்டு ஏமாத்துனா, மாசமா இருக்க புள்ள ஏங்கிறாதா?"னு தாத்தா பரிவுடன் அவரின் மனைவியை பற்றி சொல்ல, கோச்சின் முகத்தில் சிறிது சோகம்,

"பரவா இல்ல, சொல்லிக்கிறேன், புரிஞ்சுப்பா" என்றார் கோச்.

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி,, நீங்க கிளம்புங்க,, அதான் நான் இருக்கேன்ல தம்பி கூட"னு தாத்தா சொல்ல, முடியவே முடியாதென்று மறுத்துவிட்டார். இந்த நிகழ்வுகளை பார்த்த எனக்கு கோச்-சின் மீது இருந்த அன்பு பல மடங்கு அதிகரித்தது.

"தாங்க்ஸ் சார்"னு சொல்லி அவரை அனைத்துக் கொண்டேன்.

"மணி சார், தாங்க்ஸ் சொல்லி எல்லாம் என்ன ஏமாத்த முடியாது, மெயின் டோர்னமெண்ட்ல வின் பண்ணு, அதுதான் எனக்கு நீ சொல்லற தாங்க்ஸ், இதெல்லாம் செல்லாது"னு சொல்லி அந்த சூழலை ரெம்ப இலகுவாக்கினார்.

"சரி தம்பி வாங்க, எப்படியும் நைட் தங்குறதுனு முடிவாகிருச்சு, போய் ரூம் போட்டு ஹோட்டல்ல ரிலாக்ஸ் பண்ணலாம்"னு தாத்தா சொல்ல,

கோச்-சும், தாத்தாவும் முன்னால் செல்ல, நான் கிட் பேக் மற்றும் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தேன்.
--------------------
சிறிது நேரத்தில் கார் தி ரெஸிடென்சி ஹோட்டலில் நின்றது, கிளப்-யில் இருந்து கிளம்பும் போதே தாத்தா ரூம் புக் பண்ண அவரது மேனேஜர்ரிடம் சொல்லி இருந்தார், ஹோட்டலை அடையும் முன் ரெண்டு ரூம் புக் செய்யப்பட்ட செய்தி வந்தது. ஐந்து நிமிடத்தில் ரூமில் இருந்தோம். நான் அப்படியே பெட்டில் சாய்ந்து ரிலாக்ஸ் பண்ண, தாத்தா என்னிடம்

"ஏதாவது வேண்னுமா? ஆர்டர் பண்ணனுமா?” என்று கேட்க, நான் வேண்டாம் என்றதும், காபி ஆர்டர் பண்ணிவிட்டு, கோச்-க்கு ஃபோன் செய்து, தயக்க படாமல் வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ளச் சொல்லிவிட்டு, மதியம் சாப்பிட எங்கள் ரூமிறக்கு வரச்சொன்னார். மதியம் ரூமிறக்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றவர், பத்து நிமிடத்தில் திரும்பிவந்து 3.15க்கு அடுத்த போட்டினும், மூணு மணிக்கு கோர்ட்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொன்னார்.

மதியம் 3.30

என்னிடம் தோற்ற பையன், கண்கள் கலங்கிய படி கை குழுக்கினான், மறுபடியும் நேர் செட், இந்தமுறையும் அதே பதினைந்து நிமிடங்கள், கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது, கர ஒலியும் சற்று பலமாக ஒலித்தது. பரஸ்பர கை குழுக்களுக்கு பின் நான் கோச்-சை தேட, அவர் ஏதோ பதட்டத்துடன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார். என்னை தேடிக் கண்டு பிடித்த தாத்தாவின் கண்கள் உடனே வருமாறு அழைக்க, ஓடிச் சென்றேன், உடனே என் உடமைகளை எடுத்துக்கொண்டு கார் பார்கக்கிங்க வரச்சொன்னார். சிறது நேரத்தில் நான் எங்கள் காரின் அருகில் செல்ல, இருவரும் பின்சீட்டில் இருந்தனர், நான் முன்சீட்டில் ஏற, டிரைவரரை வண்டி எடுக்கச் சொன்னார் தாத்தா. ஃபோனில் யாரிடமோ,

"அஞ்சு நிமிசத்துல என்னணு பாத்துட்டு எனக்கு கால் பண்ணனும், உடனே கிளம்பு" கட்டளையிட்டார். கோச்-சின், தோள்களில் கைவைத்து

"பயப்படாதீங்க தம்பி, ஒன்னும் ஆகாது, நம்ம காபி எஸ்டேட் உங்க வீட்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தான், அஞ்சு நிமிஷத்துல கார் வந்துரும்னு சொல்லுங்க",

கோச் யாருக்கோ ஃபோன் பண்ண, தாத்தா மறுபடியும் அவர் தோளில் தட்டி,

"நீங்க மொதல்ல தைரியமா பேசுங்க, நீங்களே பயந்த வீட்ல இன்னும் பயப்படுவாங்க"னு சொல்ல,

அவரும் வண்டி வந்துகொண்டிருப்பதாகவும், தானும் ஒரு நாலு மணிநேரத்தில் வந்து விடுவதாகவும் ஃபோனில் கூறினார். பத்து நிமிடத்தில் தாத்தாவுக்கு ஃபோன் வந்தது, எடுத்து பேசியவர்

"சரி"

"நல்லது, ஹாஸ்பிடல்ல சேத்துட்டு, கூடவே இருந்து பாத்துக்கணும், பில் என்ன வந்தாலும் கட்டிரு, நமக்கு ரெம்ப வேண்டப் பட்டவங்க, டாக்டர்ட பேசிட்டு உடனே எனக்கு தகவல் சொல்லணும், கூடவே இருக்கணும்"னு அறிவுறுத்திட்டு, கோச்-யைப் பார்த்து

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி, ஏழு மசம்தான ஆகுது, சூட்டு வலியாத்தான் இருக்கும், பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்ருவாங்க, கவலைப் படாதீங்க, இந்த நேரத்துல தான் ஒரு மனுஷன் ரெம்ப தைரியமா இருக்கணும், ரவி கொஞ்சம் மிதிச்சு போ"னு டிரைவர்க்கு அறிவுறுத்தினார்.

"ஏற்கனவே உங்க திங்க்ஸ் பேக் பண்ணி கீழ கொண்டுவரச் சொல்லி ஹோட்டல்ல சொல்லியச்சு, அப்படியே இந்த வண்டில நீங்க கொடைக்கானல் கிளம்புங்க, நீங்க அங்க போய் சேர்க்கிற வரைக்கும், நம்ம ஆளுங்க கூட இருப்பாங்க, தெம்பா இருங்க"னு தாத்தா சொல்லிக் கொண்டிருக்கையில்

கோச்-க்கு ஃபோன் வந்தது, தாத்தா சொல்லிய அதே தகவல். நாங்கள் ஹோட்டல்லை அடைய அங்கே தாத்தா சொன்னதுபோல், ஹோட்டல்லை சேர்ந்த ஒருவர் கோச்-சின் பையுடன் நின்றார், கோச் வண்டியை விட்டு இறங்கவே இல்லை, நான் திரும்பி கோச்-யிடம் "சாரி" என்று சொல்ல, என் தலைமுடிகளை கோதியவர், ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் இறங்கிக்கொள்ள, தாத்தா கோச்-யைப் பார்த்து

"உங்க நல்ல மனசுக்கு எல்லாம நல்லதுதான் தம்பி நடக்கும், பயப்படமா தைரியமா இருங்க, சீட் பெல்ட்ட போடுங்க, உதவினு நினைக்கமா என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க, - டிரைவரிடம் திரும்பி - இருட்டுறதுக்குள்ள முடிஞ்ச அளவு வேராட்டிப் போ, மலையேறும் பொது கவனமா போகணும், சொல்லுற வரைக்கும் தம்பி கூட இருக்கணும்"னு அறிவுரை சொல்லி வழியனுப்பினார். நாங்கள் எங்கள் அறைக்கு வந்தோம், காபி ஆர்டர் செய்துவிட்டு நான் குளிக்கச் சென்றேன்.

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூட, என் திறமையில், வளர்ச்சியில் அக்கறையும் அன்பும் காட்டும் கோச், தான் நினைத்ததை இருந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்கிற பலமும், தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவும் தாத்தாவின் பேரன்பு, என்னையே உயிராக, வாழ்க்கையாக நினைக்கும் ஆச்சிகள், நினைத்து பாரத்தால் என்னை சுற்றியுள்ள அனைவரது அன்பிறக்கும், பாசத்திற்க்கும் உரியவனாக இருக்கிறேன் என்ற எண்ணம் தந்த நெகிழ்ச்சியில், நெடுநேரம் நின்றிருந்தேன் ஷவரின் வெதுவெதுப்பில்.

என் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று அது. ஆனால் இந்த மகிழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் காணாமல் போகுமென்றும், என் வாழ்க்கையின் கோர உண்மை என்னை சந்ததிக்க ஜெட் வேகத்தில் வருகிறது தென்றும் அப்போது எனக்கு தெரியாது. நான் துண்டை கட்டிக்கொண்டு அறையினில் நுழைய, போனை வைத்த தாத்தா, என்னை பார்த்து முகமெல்லாம் சந்தோஷமாக

"டேய் தம்பி, உங்க கோச்-க்கு பெண் குழந்தை பிறந்திருக்காம், குறைப்பிரசாவம், ஆன ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையாம்"னு சொல்ல, நானும் மகிழ்ச்சியோடு அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, டிரஸ் செய்தேன். நான் டிரஸ் செய்து முடித்தவுடன் என்னை அருகில் உக்கார சொல்லி தோள்களை அனைத்துக் கொண்டு, தாத்தா கேட்டார்

"நைட் வீட்ல தங்கலாமா?", னு கேட்க, குழப்பத்துடன் நான்

"வேணாம் தாத்தா, மறுபடியும் காலைல சீக்கிரம் எழனும், வேண்டாமே, இங்கையே இருக்கலாம்"னு சொல்ல, ஒரு பெரும் மூச்சு விட்டுட்டு

"டேய் நமக்கு இங்கையும் வீடு இருக்கு, போலாமா?"னு சொல்ல, நான் முகம் சுருங்கி பாவமாக தாத்தாவைப் பார்த்தேன்.

"கொஞ்சம் நான் சொல்லுறத கேளு, அப்புறம் உன் முடிவுக்கே விட்டுறேன், நீ என்ன சொன்னாலும் சரி"

நான் மொனமாக இருக்க, தாத்தா தொடர்ந்தார்.

"நேரா வீட்டுக்கு போறோம், நீ அங்க வந்து யாரட்டையும் பேசவேணாம், நேரா உன் ரூம்க்கு போ, கொஞ்ச நேரம் டீவி பாரு, அப்புறம் நைட் டின்னர்க்கு நீயும் நானும் வெளிய ஹோட்டல் போறோம், திரும்பி ரூமுக்கு போய் தூங்குரோம், காலைல எழுந்து கிளம்பி சாப்டு, உன் மேட்ச் முடிஞ்சதும் ஊருக்குப் போறோம், ஓகே"னு கேக்க,

வழி இல்ல, நான் என்ன சொன்னாலும் பதில் வச்சிருப்பாரனு எனக்கு தெரியும், அதனால ஓகேனு மண்டையாட்ட, "குட் பாய்"னு சொல்லி என்னை பேக் பண்ண சொல்லிட்டு, என் அப்பாவுக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்பச் சொன்னார். என் வாழ்க்கையின் முதல் முறையா அடி வாங்கியது அந்த வீட்டில்தான், கடந்தமுறை அந்த வீட்டில் இருக்கும் பொது, எதுக்காகவோ என் தாத்தாவை தேடி படிகளில் இறங்கி ஓடிவர, குறுக்கே வந்த என் அம்மாவை கவனிக்காமல் இடித்துவிட்டேன், கொஞ்சம் வேகமா இடித்திருப்பேன் போல, அவளுக்கு வழித்திருக்கும் போல, கோபத்தில் என் தோள்களைப் பற்றி இழுத்தவள், நான் சாரி சொல்லம் முன், பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டாள். மொத்தக் கையும் என் முகத்தில் விழ, அவள் அடித்த அடியில் என் பல் கீறி உதட்டில் ரத்தம் வழிந்தது. அப்புறம் தாத்தா ஒரு காலவரமே செய்து விட்டார், ஆனாலும் அந்த அடி எனக்குள் சொல்ல முடியாத ஒரு பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தது, சின்ன பையன் நான், ஒரு பதினொரு வயசு இருக்கும் இச்சம்பவத்தின் பொது. அந்த வீட்டிறக்கு இனிமேல் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன் நான், சிறுவர்களின் முடிவு எப்பொழுது நிலைப்பதில்லை.

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, ரேஸ்கோரஸ்சில் ஒரு கேட்டீன் முன்பு வண்டி நின்றது, கேட் திறந்ததும் வண்டி உள்ளே நுழைய கண்ணில் பட்டது அந்த பழைய பெரிய வீடு, இப்பொழுது பல மறுதல்களுடன் ஆபீஸாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கு பின்னால் தொடர்ந்தார் போல் சில வீடுகள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு. வண்டி இப்பொழுது இரண்டாவது கேட்டில் நின்றது, எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது, தாத்தாவின் கைகள் பற்றிக் கொண்டேன், கைகளை தடவியவர், என்னை பார்த்து லேசாக, ஆதரவாக சிரித்தார், இரு கன்னங்களையும் தடவிக் கொடுத்தார். கேட் திறந்ததும் வண்டி உள்ளே நகர, வெளியே பார்த்ததைவிட மிகப்பெரிய வீடு, ஐந்து வருடத்திற்கு முன்னால் காட்டியது, கடைசியாக நான் வந்து ஒரு வருடத்திருக்கு மேல் இருக்கும், சரியாக நினைவில் இல்லை.

கார் போர்டிக்கொவில் நிற்க, அங்கே என் அம்மா!(?) எங்களை(?) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள், நல்ல வேலையாக தாத்தாவின் பக்கம் இருந்ததது வீடு. அவர் காரை விட்டு இறங்க, அம்மா அவர் கைபற்றி ஏதோ சிரித்து பேச, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு தாத்தா பின்னால் திரும்பி ஏதோ தேடினார், தேடியது கிடைக்காமல் என்னைப் பார்த்து ஏதோ கையசாய்த்துக் கூற, எனக்கு ஒன்றும் கேட்க்கவில்லை. நடப்பதெல்லாம் ஏதோ பிரம்மைப் போல் நான் உணர, யாரோ என் தோள்களில் கைவைத்து உலுக்க, மூளையும், உடலும் செயல்பட மறுக்க, கண்கள் இருட்ட, அப்படியே சீட்டில் சரிந்தேன் நான்.

ஏதோ சத்தம் வெகு தொலைவில், என் கன்னத்தை யாரோ தட்டுகிறார், கண்களை திறக்க வெறும் வெளிச்சம் மட்டுமே, மனதில் பெரும் பயம், கண்களை மீண்டும் இருக்க முடிக்கொண்டேன், தொலைவில் கேட்ட சத்தம்,,, இப்பொழுது அருகில் வர வார்த்தைகள் ஆயின,

"மணி, ஒண்ணும் இல்ல,, கண்ண திற, ஒண்ணும் இல்ல"

என்கிற வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில், மீண்டும் கன்னதிறக்க மங்கலாக ஏதோ ஒரு முகம், கன்னங்களில் யாரோ தட்ட, மங்கலான முகம் தெளிவாக தெரிகின்றது. பேரழகு முகம், பின்னிய கூந்தலில் இருந்து பிரிந்த மயிர் கற்றுக்கள் முகத்தின் இருபக்கமும் தொங்க, செதுக்கிய புருவம், அழகிய பெரிய கண்கள், அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம், குற்றஉணர்ச்சி, நல்ல கூர் மூக்கு, செழுமையான பூ போன்ற சிவந்த கன்னம், அழகிய ஈரம் நிரந்த உதடுகள், நல்ல வடிவான முகம். நான் இறந்து விட்டேனோ?, சொர்க்கத்தில் இருக்கிறேனோ?, என்ன எழுப்ப முயற்சிப்பது சொர்க்கத்து தேவதையோ? யென எண்ணற்ற கேள்விகள்.

இல்லையே!,, இந்த முகம் இதற்க்கு பார்த்த முகம்தானே!,, என்று என் மனம் குழப்ப, கண்கள் சுருக்கி உற்று நோக்க, அந்த அழகிய கண்களில் மின்னல் போன்ற ஒரு மகிழ்ச்சி, கண்களில் தோன்றிய மகிழ்ச்சி முகமெங்கும் பரவா, கழுத்தை பார்த்தால் ஸ்டேத்ஸ்கோப், மறுபடியும் யாரோ என் கன்னத்தில் தட்ட

"ஒண்ணும் இல்லடா கண்ணா, கண்ண திற, அப்படித்தான் குட் பாய்"என்கிற சத்ததில்,

அந்த அழகிய முகம் யாருடையது என்பது என் மூளைக்கு உரைக்க,,, ச்சீ,,, இது என் அம்மா, சுமாவின்(இனிமேல் சுமா என்றே அழைக்கப் பாடுவாள், என் அம்மாவாக இல்லை) முகம் எனும் எண்ணம்,,,, என் பிரம்மையில் இருந்து பட்டென விடுபட்டேன். நான் ஒரு சோபாவில் கிடத்தப் பட்டிருக்கிறேன், சுமா ஏதோ கூற,, என் காதில் ஒன்றும் விழவில்லை, என் கண்கள் தாத்தாவைத் தேடின,,, சுற்றி சிலர் பெண்கள் இருக்க தாத்தாவைக் காணும், மறுபடியும் பயம் தொற்றிக் கொள்ள "தாத்தா" என்று நான் குரல் கொடுக்க

"இங்க தாண்டா இருக்கேன் கண்ணா, ஒன்னுமில்ல ராஜா, ஒன்னுமில்ல" என்று தழுதழுத்த சத்தம் வந்த பக்கம் தலையை திருப்ப, தாத்தா என் கைகளைப் பற்றிய படி சோபாவின் பின் பக்கம், கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார். என் மனம் சற்று அமைதி அடைந்தது.

"மணி, கொஞ்சம் அப்படியே எழுந்து உக்கார முயற்சி பண்ணு" சொல்லிவாறே சுமா என்னை தோள்களை பற்ற,, சோபாவில் அமர வைக்கப் பட்டேன்.

"இப்போ எப்படி இருக்கு, தலை சுத்தல், வாமிட் வர்ற மாதிரி ஏதாவது பீல் பன்னுரையா?", நான் இல்லை என்று தலை ஆட்ட

"மூச்சுவிட ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?", அதற்கும் நான் இல்லை என்று தலை ஆட்ட

"கொஞ்சம் ஏந்திரிச்சு நிக்க ட்ரை பன்னு!"னு சுமா சொல்ல, என் சுய உணர்வு திரும்பியதைப் போல் உணர்ந்தேன், எழுந்து நின்று

"நான் ஓகே தாத்தா, ஐ ஆம் ஃபைன்"னு சுமாவுக்கு பதில் சொல்லாமல் தாத்தாவைப் பார்த்து சொல்ல,

"அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு ராஜா"னு அவர் கெஞ்சும் தொனியில் சொல்ல, நான் திரும்பி சுமாவைப் பார்த்து

"ஐ பீல் ஃபைன்"னு சொல்ல, எழுந்து நின்றவள், சிரித்தவரே என் கன்னத்தில் தட்டி

"ஓகே, குட், இப்போ உக்கரு"னு சொல்லிட்டு, தாத்தாவை பார்த்து,

"ஒன்னும் இல்லப்பா, சுகர் லெவல் குறைஞ்சிருக்கும், சரியா சாப்பிடலையா? காலைல இருந்து?"னு தாத்தாவை பார்த்து கேக்க, நான் இடைமறித்து,

"நான் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கவா?"னு கேட்டேன், தாத்தா அம்மாவை பார்த்துவிட்டு, சரியென்று தலையாட்ட, எழுந்து மாடிப் படி நோக்கி நடந்தேன்.

"மேல வேணாம், கீழ தாத்தா ரூம்ல படு"னு சுமா சொல்ல, பதில் சொல்ல விரும்பாமல், தாத்தா ரூம்க்கு சென்று கதவை அடைத்தேன், தாத்தா கேவி அழுகின்ற சத்தம் அறைக்குள் மெலிதாக கேட்டது, ஏனோ அழவேண்டாம் என தாத்தாவிடம் போய் சொல்ல மனமில்லை. பெட்டில் விழுந்து,, பட்டேன் தூங்கினேன். தூக்கத்தில் கைகளில் ஏதோ ஊருவது போல் இருக்க விழித்துப் பார்த்தால், அங்கே டாக்டர் சுமா, என் கைகளில் நீடில் குத்தபட்டு டிரிபிஸ் ஏறிக் கொண்டிருந்தது. நெஞ்சில் அவள் தட்டிக் கொடுக்க மறுபடியும் தூங்கிப் போனேன். தம்பி, தம்பி என்று சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன், தாத்தாதான் எழுப்பியது,

"எழுந்துட்டான், இந்த அவன்டா பேசுங்க"னு சொல்லி, கோச் பேசுவதாக கூறி ஃபோன் என்னிடம் கொடுத்தார்.

"நல்ல இருக்கேன் சார்"

"தெரியல சார்,..இப்போ ஓகே, நாளைக்கு மேட்ச் விளையாடிருவேன்"னு சொல்லியவரே பெட்டை விட்டு எழுந்தேன்.

"இல்ல சார், ஐ பீல் பிட்,..ஓகே சார்"

"சார், அப்புறம் பாப்பா, மேடம் ரெண்டு பேரும் நல்ல இருக்கங்களா?",

"ஓகே சார்..பாய்"சொல்லி தாத்தாவிடம் ஃபோனைக் கொடுக்க, வாங்கியவாரே

"கண்ணா, இப்போ எப்புடி இருக்கு"னு தாத்தா கேக்க, நான் சிரித்துக் கொண்டே

"ஏன் நான் நல்லா தானே இருக்கேன்!, இன்னைக்கு ரெண்டு மேட்ச் ஆடிருக்கேன், நாளைக்கு ஒரு மேட்ச் இருக்கு, இங்க பாருங்க நான் எப்புடி குதிக்கிறேன்னு" சொல்லி பெட் மீது ஏறி தாவிக் குதித்தேன்.

"சும்மா,,,,, எனக்கு ஒண்ணும் இல்ல,,,,,, என்னைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பனிஷ்மெண்ட்,,,,, நல்ல பயந்தீங்களா?"னு சொல்லி அவர் அருகில் சென்றேன், முகம் முழுக்க வருத்தத்தோடு சிரித்தவர், என் தலைமுடிகளைக் கோதி

"வா, வெளிய போய் கொஞ்ச நேரம் நடக்கலாம்"என்று என்னை வீட்டின் வெளிய இருக்கும் கார்டனுக்கு அழைத்து சென்றார். வெளியே கொஞ்சநேரம் நாங்கள் உலாத்திக் கொண்டிருந்தோம்,

"இங்க இருக்கீங்களா!,, ரெண்டு பேரும்" என்ற சத்தம் வந்த திசையை நோக்கினோம் இருவரும், எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சுமா,

"வா,,, மா,,, சும்மா அப்படியே வெளிக் காத்து வாங்கலாம்னு வந்தோம்"னு தாத்தா சொல்ல, என் அருகில் வந்தவள்

"இப்போ எப்புடிடா இருக்கு?,,,, ஆர் யு ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் அவள் முகம் பார்ப்பதை தவிர்க்க, கையில் டிரிப்ஸ் ஏற்றிய இடத்தில் இருந்த பளஸ்டரியை பிய்த்துக் கொண்டே

"ஐ பீல் நார்மல், ஒன்னும் இல்ல, இப்போ கூட விட்டா ஒரு ஜாக்கிங்க போவேன், இல்ல தாத்தா" என்று தாத்தாவை பார்த்து கூறினேன். தாத்தா வாஞ்சையாக என்னைப் பார்த்து சிரித்தார்.

"நாளைக்கு கண்டிப்பா மேட்ச் ஆடுறேன்னு சொல்றன் மா!"னு தாத்தா அவளைப் பார்த்து சொல்ல, நான் குறுக்கிட்டு

"தாத்தா, இங்க பாருங்க நான் நல்லத்தான் இருக்கேன், ஏதோ தெரியமா மயங்கிட்டென்"னு சொல்ல, சுமா எனக்கு ஆதரவாக பேசினால்

"மேட்ச் ஆடட்டும், ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, சரியா சாப்பிடமா, மேட்ச் பிரஷர்னு,, அது இதுணு,, சுகர் டிராப்,,, அவ்வளவதான், நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல"னு சொல்ல

என்ன மாதிரியான அம்மா இவள், மயங்கி விழுந்த பிள்ளையை மறுநாள் மேட்ச் ஆட சொல்றா, ச்சீ இவளுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பா, ஒரு வேல நான் செத்த கூட சந்தோசத்தான் படுவா போல, கண்டிப்பா வறுத்த படமாட்டானு,,, பல எண்ணங்கள் என் மனதில் ஓட

"மணி பத்தாக போகுது, வாங்கப்பா சாப்பிடலாம்"என்ற அவளின் பேச்சு என் எண்ண அலைகளை கலைத்தது.

வீட்டினுள் சென்று சாப்பிட்டு முடிக்க, அப்பாவிடம் இருந்து ஃபோன், என்னிடம் குசலம் விசாரிக்க ஏனோ தானோனு நானும் பதில் பேசி வைத்து விட்டு, தூங்கா என் அறைக்கு செல்ல, தாத்தா தன் அறையில் இன்று தூங்கச் சொன்னார்.

மேட்ச் காலையில் எட்டு மணிக்கு என்றும், தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும், காத்திருக்காமல் என்னைத் தூங்காச் சொன்னார். காலையில் அலாரம் எழுப்பிவிட எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, குளித்து ரூம்க்கு வந்ததால் தாத்தா இன்னும் தூங்கி கொண்டிருந்தார். எழுப்பி விட, கழிவறை சென்றவர் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார். வந்தவர் ஃபோன்ல் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், சுமாவை ரூம்க்கு வரும் படி அழைத்தார், நான் என்னாச்சுனு கேக்க, தனக்கு ஒன்றும் இல்லை என்றும், என்னை கிளம்பி ரெடியாகச் சொன்னார்.

நான் என் அறைக்கு சென்று ரெடி ஆகி கீழே வந்தால், தாத்தா இன்னும் பெட்டில் இருந்தார், பக்கத்தில் சுமா. நான் கிளம்புவதை பற்றி கேக்க, தாத்தாக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருப்பதாகவும், அவளே என்னை மேட்ச் ஆட கூட்டிப் போவதாகவும், தான் கிளம்பி வரும் வரை காத்திருக்க சொல்லிவிட்டு,,, வெளியே சென்றாள் சுமா. அவள் வெளியே சென்றவுடன்,

"தாத்தா நான் தனியா போய்ட்டு வந்துருவேன், அம்மா வர வேண்டாம், எனக்கும் கார் மட்டும் போதும்" என்று கெஞ்ச

கண்டிப்புடன் மறுத்தவர், ஏதேதோ சொல்லி என்னை சுமாவுடன் செல்ல சம்மதிக்க வைத்தார்.

அரைமணி நேரத்தில் வந்தவள், என்னை அழைத்தால், நான் தாத்தாவைப் பார்க்க, போ என்று செய்கை செய்தவர், சுமாவைப் பார்த்து

"பாத்துமா, பத்திரமா பாத்துக்கோ, கூடவே இரு, மேட்ச் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"னு அடுக்க

"அப்பா, இவன் என் பையன் சரியா!,,,, நீங்க கவலைப் படமா ரெஸ்ட் எடுங்க,,, மேட்ச் முடிஞ்சதும் கூட்டிடு வந்து உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சிறுவேன்,,,,, ஓகே" னு சொல்லி என்னை பின் தொடர்ந்தாள். நான் கார் கராஜ் அருகில் செல்ல, ஒரு சிவப்பு கலர் A-Class பென்ஸ் கார் திறக்கப் படும் சத்தம் கேட்டக, நான் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள், சீட் பெல்டை போட்டவரே, என்னிடம்

"முன்னாடி வந்து உக்காரு"னு சொன்னாள்

"பரவா இல்ல, ஐ ஆம் ஓகே"

"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் இல்ல, முன்னாடி வந்து உக்கார போறியா? இல்லையா?"னு கொஞ்சம் சத்தம் உயர்த்தி கேக்க,

வேறு வழியல்லாமல், இவளுக்கு அப்படி என் மேல் என்னதான் கோவம், ஒரு சின்ன பையன்னு கூட பாக்கம, இப்படி காலையிலேயே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுரா, எல்லாத்துக்கும் இந்த தாத்தாதான் காரணம் என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டு முன்னால் ஏறி அமர்ந்தேன். காரை ஸ்டார்ட் செய்தவள், மறுபடியும்

"சீட் பெல்ட் போடு, ஒன்னு ஒன்ன உனக்கு சொல்லனுமா?"னு அவள் கத்த,

எனக்கு கண்ணீர் பொங்கியது, தலையை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு, மொபைல் எடுத்து நோண்டினேன்.​
Next page: Chapter 05
Previous page: Chapter 03