Chapter 06
அந்த ஆண்டு ஸ்கூல் தேர்வு முடிந்து என்னை அழைத்துப் போக வந்திருந்த தாத்தா, கோச்-சிடம் அடுத்த வருடத்தில் இருந்து கோயம்புத்தூரில் படிக்க வைக்கப் போவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் நல்ல டென்னிஸ் அக்கடமியில் சேர்க்க போவதாகவும் சொல்ல, டோர்ணமென்ட் நடந்த அக்கடமிதான் கோவையில் சிறந்த அக்கடமி என்றும், சென்னையில் தான் கோவையை விட சிறந்த அக்கடமிகள் இருப்பதாகவும் கோச் தாத்தாவிடம் கூறினார். கோச் தாத்தாவிடம் என்னை சென்னையில் உள்ள அக்கடமியில் சேர்ப்பது தான் சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல, தாத்தா யோசிப்பதாக சொன்னார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு நாங்கள் பழனி வந்தடைந்தோம்.
சாதாரணமா என்னுடைய விடுமுறை நாட்களில், காலையில் தாத்தாவுடன் கிளம்பி டெக்ஸ்டைல் மில்லுக்கோ, கிரானைட் பிளாண்ட்-க்கோ போய் சுத்திவிட்டு, மதிய சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுவேன், மதியம் டீவி, புத்தகம் வாசிப்பது (தாத்தாவிடம் இருந்து வந்த பழக்கம்) அல்லது தூங்குவதாக இருக்கும். மாலை சிறிது நேரம் டென்னிஸ், பின்பு தாத்தா வரும் வரை ஆச்சிகளுடன் அரட்டை, தாத்தா வந்தவுடன் அரட்டையில் சேர்ந்து கொள்வார், சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரமாவது அன்று நடந்த, இல்லை பிசினஸ் சம்பந்தமாக ஏதாவது பேசுவார் தாத்தா என்னிடம். அவர் சொல்வது புரிக்கிறதோ இல்லையோ காது கொடுத்து கெட்க்க சொல்வார், பல நேரம் அவர் பேசுவது எனக்கு புரியவில்லை என்பது என் முகத்தில் தெரிந்தாள் "சொல்றத எல்லாம் கவனமா காதுல வாங்கிக்க, இப்போ புரியாவிட்டாலும், பின்னாளில் புரியும்" என்பார். அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கையில் தாத்தா திடீரென்று ஆரம்பித்தார்,
"தம்பி, அடுத்த வருசத்துல இருந்து கோயம்புத்தூர்ல படிக்கிறையா?"னு கேக்க, நான் உடனே மறுத்து தலைஅசைத்து
"சென்னைல படிக்கிறேன் தாத்தா, கோயம்புத்தூர் வேண்டாம்" என்க, என் பதிலை எதிர் பார்த்திருந்த அவர், சின்ன ஆச்சி (தாத்தாவின் மனைவி) என்னைப் பார்த்து
"இல்ல தங்கம், கோயம்புத்தூரு, இந்தா இங்குனக்குள்ள இருக்கு ரெண்டேட்ல வந்துரும், கொடைக்கானல் மாதிரி!,,,, மெட்ராஸ் எவ்வளவு தூரம், நினச்ச உடனே வர முடியுமா? சொல்லு?" னு சொல்ல, நான் சென்று தாத்தா மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு
"தாத்தா, நான் எங்க ஸ்கூல்லையே படிக்கிறேன், அங்க வேண்டாம், அங்க போன நான் தனியாத்தான் இருக்கனும்"னு சொல்லி மறுக, என் முதுகில் தட்டினார்,
"அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்ல, நான் வேணா அங்க ஏதாவது ஹாஸ்டல்ல சேந்துக்கிறேன், அந்த வீட்ல இருக்க மாட்டேன்"னு சொல்லி அழுதேன், முதுகில் தடவியவர்,
"கண்ணு, நீ பெரிய டென்னிஸ் பிளேயர்யா வரணும், நல்ல படிக்கணும், பேரும் புகழும் வாங்கணும், அதுதான் உன்ன வளத்த எங்களுக்கு பெருமை!”
"எங்களுக்கோ வயசாயிருச்சு, எங்க காலத்துக் அப்புறம், நீ எப்படி இருந்தாலும் அங்க போய்தான் இருக்கனும், என்ன இருந்தாலும் அவங்க உன்ன பெத்தவங்க! நீ நினைக்கிற மாதிரி உன் மேல பாசம் இல்லமா எல்லாம் இல்ல, ஏதோ நான் செஞ்ச பாவம்!, என் பேரன், நீ இப்படி கஷ்டப் படுறே?"னு
ஆரம்பிச்சு ஏதேதோ சொல்லி, பெரிய ஆச்சியையும் என் கூட அனுப்புவதாக சொல்லி என்னை சம்மதிக்க வச்சார், நானும் அவர்கள் கெஞ்சியதாலும், மேலும் அவர்களை கஷ்டப் படுத்த வேண்டாம்னும், பெரிய ஆச்சி கூட வருவதாலும் ஒத்துக் கொண்டேன்.
அடுத்த சில நாட்களில் இரு முறை கோவை சென்று வந்தார் தாத்தா, இரண்டாவது முறை செல்லும் போவது என் ரூமில் பாதியை காலிசெய்து கொண்டு போனார். கடைசியா நான் கோவை செல்லும் நாளும் வந்தது, மொத்தமாக அனைவரும் கிளம்பிச் சென்றோம், தாத்தா என்னுடன் இரண்டு நாள் தங்குவதாக உறுதி அளித்திருந்தார். பழனியில் இருந்து கிளம்பி அஞ்சு மணி நேரம் கழித்து, நான் என் அறையில், பெட்டில் அமர்ந்திருந்தேன், எனக்கு பிடிக்காத வீட்டில் எனது அறையில்(?). சிறிது நேரத்தில் தாத்தா வந்து என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார், வீட்டின் மூன்றாவது தளம், அந்த இடம் மொத்தமாக மாறியிருந்தது, அங்கே ஒரு பெரிய ஜிம் மற்றும் இன்டோர் ஸ்வீமிங்க பூல் தவிர மீதி இருந்த இடத்தில் அழுமினியும் ரூஃபிங்க் பண்ணிய மாடித் தோட்டம் இருந்தது.
ஆனால் இப்பொழுது அந்த தோட்டத்தில் முக்கால் வாசி காலி செய்யப் பட்டு, ஃபைபர் கிலாஸால், கதவுடன் கூடிய சுவர் எழுப்பி பட்டிருந்தது, கதவை திறந்து பார்த்தால் உள்ளே, ஒரு வலையடித்த டென்னிஸ் கோர்ட், ஆச்சரியமாக, அதே நேரம் சந்தோஷமாக நான் தாத்தாவை பார்க்க, சிரித்தவர்,
"எல்லாம் உனக்குத்தான், ஏர் கண்டிஷனிங் மட்டும் பண்ணனும், அதுவும் ரெண்டு நாள்ல ரெடியாயிரும்"னு சொல்ல, நான் தாத்தாவைக் காட்டிக் கொண்டேன்.
டென்னிஸ் கோர்ட்டைப் பார்த்தவுடன் தான் பானுவின் நினைவு வந்தது, தாத்தாவிடம் நன்றி சொல்லிக் கொண்டு, கீழே என் ரூம்க்கு வந்து "ஹாய்"னு ஒரு மெசேஜ் பன்னினேன் பானுவிற்க்கு, பதில் வர வில்லை, ஆஃப்லைனில் இருந்ததாள். அன்று இரவு டின்னரின் போது "ரெம்ப நாள் கழித்து மொத்த குடும்பமும் ஒன்ன உக்காந்து சாப்பிடுவதாக" தாத்தா கூற அனைவரும் ஆமோதித்தனர், இடையில் "சாப்பாடு நல்ல இருக்கானு?” சுமா என்னைப் பார்த்து கேட்டாள், சமயல்காரியை அழைத்த சிவா "என்ன வேண்டும், என்ன பிடிக்கும்" என்று என்னிடம் கேட்டு வைத்துக் கொள்ள உத்தரவு இட்டார். சாப்பாடு முடிந்தவுடன், ஹாலில் அமர்ந்தது பேசிக் கொண்டிருக்க, நான் தாத்தாவிடம் குட் நைட் சொல்லிவிட்டு தூங்க கிளம்ப, சுமா எனக்கு குட் நைட் சொன்னாள், நானும் பதிலுக்கு கூறிவிட்டு ரூம்க்கு வந்தேன்.
குழம்பியிருந்தேன், சிவாவும், சுமாவும் இதற்கு முன் இப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை, டின்னர்க்கு முன்னாடியே, இருவரும் தனித் தனியாக என் அறைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு போயிருந்தார்கள், ஒரு வேலை தாத்தா சொன்னது போல் என் மீது பெத்த பாசம் இருக்குமோ என்று எண்ணுகையில், மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
"டிங்" என்ற ஃபோனின் சத்தம் என் எண்ண ஓட்டத்தை கலைக்க, மெசேஜ்யை பார்க்க "ஹாய்" என்று பானுக்கா அனுப்பி இருந்தாள்,
அவளிடம் டெக்ஸ்ட் செய்ததின் சுருக்கம் - அவள் இத்தாலிக்கு வேக்கேஷன் போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என்று சொன்னாள். வந்தவுடன் மெசேஜ் பண்ண சொல்லியிருந்தேன். நான் கோவைக்கு ஷிப்ட் ஆனதை அவளிடம் சொல்லவில்லை, சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டேன். கோவை வந்த இந்த பத்து நாள்களில் சிவாவும், சுமாவும்-ஆக என் எண்ணத்தில் இருந்தவர்கள், அப்பவும், அம்மாவுமாக மாறியிருந்ததார்கள், பாசத்தை பொழிய விட்டாலும் அப்பா இல்லாத சமையங்களில் அம்மா கொஞ்சம் பேசுவாள், அப்பா "எண்ண? எது? “ என்று தேவைகளின் பொருட்டே பேசுவார், ஆனால் பேச்சில் முன்பிருந்த வெறுப்பு இருக்காது, ஆனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.
நான் தினமும் மதியம் ஆச்சி தூங்கியவுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்ட்க்கு வந்துவிடுவேன், சில பசங்களை பிரெண்ட்ஸ் பிடித்திருந்தேன், அவர்களுடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட், பின்பு வீட்டுக்கு சென்று டென்னிஸ், சாப்பிட்டு விட்டு தூக்கம் இப்படியாக கழிந்தது என் கோவை வாழ்க்கை. எப்பொழுதும் போவள் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்புகையில் என் ஃபோன் அடித்தது. சைக்கிள் நிறுத்திட்டு ஃபோன பார்கக, பானு தான் அழைத்தாள், சந்தோஷத்தில்
"ஹலோ அக்கா, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"
"யாராவது ஃபோன் பன்னா, முதல்ல நல்ல இருக்கீங்களானு கேக்கணும், எடுத்த உடனே வந்துட்டீங்களா? போட்டீங்களா?"னு அவள் போய்க் கோபம் கொள்ள
"ஓகே, நல்ல இருக்கீங்களா?"
"எஸ்"
"இப்போ சொல்லுங்க, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"
"இல்ல, இப்போதான் சென்னை வந்தோம், ஒரு மணி நேரம் ஆச்சு, கோயம்புத்தூர் ஃப்ளைட்-காக வெயிட்டிங்"
"நைட் வந்துருவிங்களா?"
"எஸ்"
"நீங்க கோயம்புத்தூர் வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு"
"அப்படியா?..நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுறுக்கேன்!" அவள் சொல்ல, நான் ஆர்வ மிகுதியில்
"என்ன சர்ப்ரைஸ்?"
"நீ ஒரு புளூ கலர் சைக்கிள் வச்சுருக்கியா?"
"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்" என்று ஆச்சரியமாக கேக்க
"சொன்னேல சர்ப்ரைஸ்னு, இத்தாலில ஜோசியம் காத்துக்கிட்டேன்" நான் சிரித்துக்கொண்டே
"சும்மா, விளையாடாதீங்க"னு சொல்ல,
"ஓகே இப்போ உன் எதிர் காலத்துல நடக்க போற ஒண்ணே சொல்லுறேன் கேக்குரியா?"
"ம்ம்"
"உன் எதிர்கால மாமியாரை பக்க போறே இன்னும் கொஞ்ச நேரத்துல"னு சொல்ல,
அப்போ உண்மையிலேயே ஒரு அழகான ஆண்ட்டி என்ன கடந்தது போச்சு, நான் பேச்சு மூச்சு இல்ல இருக்க,
"என் உன் மாமியார் அழகா இருக்கங்களா?" கேக்க, இந்த முறை ஆச்சரியத்துடன்
"அக்கா, உண்மையெலே நீங்க ஜோசியம் கத்துக்கிட்டீங்களா?" கேக்க
"இன்னும் என்ன நம்பமாட்டே, ஓகே இன்னொன்னு சொல்றேன் கேக்குரியா?"னு கேக்க, நான் வாயடைத்துப் போய், நான் தலையை மட்டும் ஆட்டினேன்
"என்ன தலையா ஆட்டுன கேக்கது தம்பி, வாயால பேசணும்"னு சொல்லி அவள் சிரிக்க, உண்மையிலேயே ஜோசியம் தான் சொல்லுற போல நான் நினைக்க
"ஓகே, கூல், இப்போ உன் முன்னாடி என்ன இருக்கு?", நான் நிமிர்ந்து பார்த்தேன்,
"ஒரு குப்பை தொட்டி"
"வேற?"
"கார்"
"வேற?"
"ஒரு லாம்ப் போஸ்ட்"
"ஓகே, இப்போ அந்த லாம்ப் போஸ்ட் கிட்ட போய் சைக்கிள திருப்பு", நான் அவள் சொன்னதை செய்ய
"ம்"
"இப்போ அப்படியே சைக்கிள உருட்டிக்கிட்டு எண்ணி ஒரு ஃபிஃப்டி ஸ்டெப்ஸ் ஸ்ட்ரைட்-ஆ வா", நான் எண்ணிக்கொண்டே அவள், சொன்னதை செய்ய
"ம்"
"ஓகே, இன்னும் ஒரு டென் ஸ்டெப்ஸ் முன்னால போ", மறுபடியும், நான் எண்ணிக்கொண்டே அவள், சொன்னதை செய்ய
"ம்"
"இப்போ உன் ரைட் ஸைட் என்ன இருக்கு?"
"ஒரு வீடு!"
"அந்த வீட்டுக்கு, காம்பவுண்ட் கேட் இருக்கா?"
"ஆமா"
"என்ன கலர்?"
"பிளாக்"
"கேட்ப் பக்கத்துல, காம்பவுண்ட்ல ஏதாவது பேர் எழுதிருக்கா?"
"ஆமா, டாக்டர் சிவகாமினு எழுதிருக்கு"
"ஐய்யோ! மண்டு, பேர் எழுதிருக்கானு மட்டும் தானே கேட்டேன்?, ஜோசியம் கேக்கும் போது, கேக்குறதுக்கு ஸ்பெசிஃபிக்கா பதில் சொல்லணும்"னு அவள் சீரியஸ்ஸா சொல்ல, நான் உண்மையிலேயே சாமியாரிடம் ஜோசியம் கேக்கும் ஒருவனின் மனநிலையில் இருந்தேன்.
"ஓகே, விடு, அந்த வீட்டு காம்பவுண்ட்ல டோர் நம்பர் இருக்க?"
"இருக்கு"
"ஓகே, இப்போ அந்த டோர் நம்பர் சொல்லட்டா?"
"ம்"
"ம்ம்.ம்ம்..ம்ம்..செவன்டீன் பை..ம்ம்..ம்ம்..128, கரெக்ட்டா"னு அந்த டோர் நம்பரா அவள் கரெக்ட்டா சொல்ல, நான் சிலிர்த்து விட்டேன்
"ஆமாக்கா, உண்மையிலேயே நீ ஜோசியம் கரெக்ட்டா சொல்லுறே"னு சொல்ல,
பலமான சிரிப்பு சத்தம், குழப்பமாக ஃபோன் காதில் இருந்து எடுத்த பின்பும், சிரிப்பு சத்தம் தொடர்ந்தது. சத்தம் வந்த திசையை அண்ணாந்து பாக்க அங்கே பானுவும், பக்கத்தில் அழகான ஆண்ட்டியும் ஹை ஃபைவ் தட்டிக் கொண்டார்கள். ஏமாற்றபட்டது புரிந்தவுடன், என் முகம் பாக்க, பானு என் கண்களில் இருந்து மறிந்து சில நொடிகளில் கேட்டில் இருந்து வெளிபட்டாள். வந்தவள் நேர என் கன்னத்தைக் கிள்ளியவள்,
"சாரி டா, சும்மா விளையாட்டுக்கு"னு சொல்லி கைய பிடுச்சு இழுக்க, நான் அசையாமல் நின்றேன், திரும்பி என்னை கட்டிப்பிடித்து
"அக்காதான் சாரி சொல்லிட்டேன்ல, நல்ல பையன்ல வா"னு கூப்பிட, உள்ள சென்று சைக்கிள் நிறுத்திவிட்டு திரும்ப, என் தோள்களில் கைபோட்டு, வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போதே கேட்டாள்
"நீ, எப்பிடிடா இங்க" நான் சந்தோஷமாக மூச்சு விடாமல், அவளிடம் மொத்த கதையையும் ஒப்பித்து முடிக்க, இவளுடன் மேலே நின்றிருந்த ஆண்ட்டி வந்தாள்,
"அம்மா, நான் சொல்ல "டென்னிஸ் ஓண்டர் பாய்", குட்டிப் பையன் சூப்பரா ஆடுறான்னு, இவன் தான்"
"பெரு மணி தானே? மணிகண்டன்? கரெக்ட்?"னு ஆண்ட்டி சொல்ல, ஆச்சரியத்துடன் நான் அவர்களைப் பார்க்க
"ஏற்கனவே இவன் பேர சொல்லிறுக்கணா?, இல்லையே, பின்ன எப்படி தெரியும்?"னு கேக்க
"பேரென்ன, இவன் ஜாதகமே எனக்கு தெரியும்"னு அவள் சொல்ல, பானு நக்கலாக
"ஓ, அப்போ உனக்கும் ஜோஷியம் தெரியுமோ?"னு கேட்டு சிரிக்க, என் அருகில் வந்த ஆண்ட்டி, நக்கலாக சிரித்தவாரே
"தெரியும், மச்ச ஜோசியம்.."னு சொல்லி டிக்கியில் தட்டியவள்
"இவனுக்கு இந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கு, ஆன எந்த ஸைட்னு சரியா தெரியல" தீவிரமா யோசிப்பது போல் பார்க்க, பானு சோபாவில் விழுந்து குலுங்க, குலுங்க சிரித்தாள், ஆண்ட்டி தொடர்ந்தாள்
"என் கணக்கு சரியா இருந்தா ரைட் ஸைட், கரெக்ட் டா"னு கேக்க,
நான் அதிர்ச்சியுடன் தலை ஆட்டுவதைப் பார்த்த பானுவின் சிரிப்பு பட்டேன அடங்ககியது. சோபாவில் இருந்து எழுந்தவாள், என் கைகளைப் பிடித்து
"நிஜமா இருக்கா?"னு கேக்க, நான் மறுபடியும் தலையாட்ட, பட்டேன பானு அவள் அம்மாவைப் பார்த்தாள், பானுவின் தலையில் தட்டிய ஆண்ட்டி
"டீ, இவன் நம்ம சுமா பையன் டீ?"
"சுமா ஆண்ட்டி பையனா?" அதிசயத்து கேட்டாள் பானு.
பின்பு நடந்த சுருக்கம்:
சிவகாமி மெடிக்கல் காலேஜ் நான்கு வருட சீனியர், நெருங்கிய தோழிகள், கோயம்புத்தூர்ல உள்ள பெரிய ஹாஸ்பிடல்-களில் இவர்களுடையதும் ஒன்று, கணவர் பானுவிற்க்கு இரண்டு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், என் அப்பா நடத்தும் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள். பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னாள்.
---------------------------
பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னதில் இருந்து, பத்து நாளில் அவள் படித்த ஸ்கூலில் அட்மிஷன் கிடத்தது. தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், சிலரிடம் பெருசா பழக்கம் இல்லாட்டலும் சட்டுனு ஒட்டிக்குவோம்ல அந்தமாதிரி நான் பானுவிடம் ஒட்டிக்கொண்டேன்.
ஒன்றரை மாதங்களுக்குப் பின், நான் புது ஸ்கூலில், என் கிளாசில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருதேன். ஒன்பதாம் வகுப்பு, எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, எனக்கு யாரையும் தெரியாததால், என் முன்னால் உள்ள பெஞ்சை சுரண்டிக் கொண்டிருந்தேன், இறுக்கமான எனக்கு பழக்கப் பட்ட மனநிலையில்.
பக்கத்தில் யாரோ வந்து அமர, திரும்பிப் பார்த்தால் புன்முறுவலுடன் ஸ்கூல் டிரஸ்ல் பானு. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தது விட்டு அவளது கிளாஸ்க்கு சென்றாள். அவள் பேசிச் சென்றதில் மனசு சற்று லேசா-ஆக, நிமிர்ந்தது பார்த்தால், கிளாசில் உள்ள அனைத்து பாசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள், பின்ன, ஸ்கூலின் அழகு தேவதை, ஒரு புதுப் பையனிடம் அருகில் அமர்ந்து பேசினால் எல்லாரும் அதிசியமாத்தானே பார்ப்பார்கள். புது ஸ்கூல்க்கு வெகு இயல்பாக பழகிக் கொண்டேன், உபயம் பானு. எல்லோரிடமும் என்னை அவள் தம்பி என்றே அறிமுகம் செய்தது வைத்தாள், பானுவிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்கிறே ஒரே காரணத்துக்காகவே என்னுடன் நட்பு பாராட்டினார் பலர்.
அடுத்த சில மாதங்களில் நடந்தவை - என்னை பானுவில் டெய்ல்(வால்) என்று ஸ்கூலிலும், டென்னிஸ் அக்கடமியிலும் கிண்டல் அடிக்கும் அளவுக்கு அவளுடனே ஒட்டிக் கொண்டிருந்தேன். ஸ்கூல் டென்னிஸ் டீமில் சேர்ந்திருந்தேன், டென்னிஸ் அக்கடமியில் தினம் காலை, மாலையில் பயிற்சி, பானு காலையில் மட்டும் தான் வருவாள், இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் மாலையில் டியூஷன் சென்று விடுவாள். உடன் பிறந்த அக்கா தம்பி போல், நெருங்கி இருந்தோம், நான் கோவை வந்த இந்த ஆறு மாதங்களில். பானு ஒரு நாள் என்னை அவள் அம்மாவிடம் அழைத்துச் சென்று
"ஹியர் ஐ இன்ட்ரொடியூஸ் யு டூ யுவர் நியூ சன் Mr.மணி, மை அடோப்டேட் தம்பி"னு
சொல்ற அளவுக்கு, பாசமலர் ரேஞ்ச்க்கு மிகவும் நெருக்கமானோம். என்ன தாத்தாவும், ஆச்சியும், செல்லமாக, நான் அவர்களை மறந்து விட்டதாக அலுத்துக் கொள்வார்கள்.
நான்கு மாதங்கள் கழித்து ஒருநாள் மாலை, நான் குளித்து விட்டு வரும் போது என் ஃபோன் ரிங் சத்தம் சன்னமாக வர, அதைத் தேடி, என் டென்னிஸ் கிட் பேக்கில் இருந்து கண்டு பிடித்து எடுக்குமுன் கால கட்டானது, பானு தான் அழைத்திருந்தாள். எடுத்துப் பார்த்தால், இரண்டு மிஸ்டு கால அக்கடமில இருந்து, இவளிடம் இருந்து எட்டு கால், என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவளுக்கு கால் செய்யும் முன் அவளே அழைத்தாள். அட்டன் செய்ய
"பன்னி, எத்தன தடவ ஃபோன் பண்றது, அட்டன் பண்ண மாட்டியா?"னு கோபமாக கத்த, நான் குளித்து விட்டு இப்போ தான் வந்ததாக சொல்ல
"சரி, கீழ உங்க வீட்டு ஹாலுக்கு போ, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்"னு சொல்ல,
என்னவாக இருக்கு என்று குழம்பியவாரே, கீழே போக, "அந்த குழந்தையே நீங்க தான்ற மாறி" சர்ப்ரைஸ்-ாக அவளே அமர்ந்திருந்தாள்,, சோபாவில் அம்மாவுடன், என்னைக் கண்டவுடன் ஓடி வந்து கட்டிப் பிடித்து, டெல்லியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நேஷனல் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அவரவர் பிரிவில் தமிழ்நாடு டீமில் இடம் பிடித்திருந்தோம், பதினைந்து நாள் கழித்து சென்னைக்கு சிறப்பு பயிற்சிக்கு போகாணும்னு அவள் சொல்ல, நான் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தேன்.
தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ராங்கிங்கில் வரும் நான்கு டோர்ணமென்ட்களில் மூன்றில் அன்டர்-16 பிரிவில் வென்றிருந்தேன் (நான் இக்கதையில் சிறிது முன்னால் ஆடியது, அந்த வருடத்திரக்கான இரண்டாவது டோர்ணமென்ட்), ஒன்றில் கலந்து கொள்ளவில்லை, பானு, அன்டர்-18 பிரிவில் ஒன்றில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் இறுதியிலும், ஒன்றில் அரையிறுதியிலும் தோற்று போய் இருந்தாள், புள்ளிகளின் அடிப்படையில் தேர்வாகியிருந்தாள். அன்றிரவு டின்னர் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் சென்றாள்.
சென்னை பிரேபிரேஷன் கேம்ப்க்கு சேர்ந்தே காரில் சென்றோம், சென்னையில் ஒட்டிப் பிறந்தவர்கள் போல், ஒன்றாகவே சுற்றினோம், தூங்கும் நேரம் தவிர்த்து. கேம்ப் முடிஞ்சு மூணு நாள் கழித்து சென்னையில் இருந்து டெல்லி, என் முதல் இரயில் பயணம், எனக்கு மிகவும் பிடித்த பானு அக்காவுடன். என்னையும் பானுவையும் தவிர டீமில் இருந்த அனைவரும் சென்னை பிளயர்ஸ், அவர்களில் சிலர் அவ்வப்பொது இவளிடம் வழிவதும், இவளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து பேசி என்னை கடுப்பேத்தினாள், அதிலும் அனிஷ்னு, இவள் வயதுடையன், இவளிடம் கடலை போட என்னையே காக்க பிடித்தான், என்னிடமே பானுவின் நம்பர் கேட்டான், குடுக்க மறுத்து விட்டேன்.
டிரைனிலும், டெல்லியிலும் ஏதாவது செய்தது எங்களுடனே ஒரு அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்தான், பானுவிடம் என்னைப் பேச விடாமல், இவனே எப்போ பார்த்தாலும் பேசிக் கொண்டிருந்தான், இவளும் அவன் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தாள், கூடவே இருந்தாலும் அவளிடம் அன்னியப் பட்டது போல் ஒரு உணர்வு. அது தந்த வலி எனக்கு பரிச்சியமானதுதான் என்றாலும், அதற்க்கு காரணம் பானு என்பதால் அதன் அழுத்தம் கொடியதாய் இருந்தது, அவள் மீது முதல் முறையாக வெறுப்பு, இல்லை, இல்லை கோபம்.
லீக் போட்டிகளும் ஆரம்பித்தது, இவர்கள் மேல் இருந்த கோபத்தை மொத்தமாக போட்டிகளில் காண்பித்தேன்.எப்பொழுதும் போல, நேர் செட் வெற்றி, லீக் போட்டிகளின் முடிவில் டோர்ணமென்ட் பிரபலம் ஆகியிருந்தேன். தமிழ்நாடு டீமில் இருந்து முதல் முறையாக அனைத்து கேட்டகிரியையும் சேர்த்து பதினொரு பேர் நாக்-அவுட் சுற்றுக்கு தேர்வாகி இருந்தோம், நானும் பானுவும் அதில் அடக்கம், மொத்த டீமும் சந்தோஷத்தில் இருக்க, நான் மட்டும் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தேன், காரணம் அனிஷ் சோகத்தில் புள்ளிகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி இருந்தான்.
போட்டி முடிந்து ஹாஸ்டல்க்கு பஸ்சில செல்லும் பொது, என் அருகில் இருந்த பானு, அனிஷ்-ஆக வருத்தப் பாட்டு பேச, நான் இவள் மீது கடுப்பிலும், அவனை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தேன். எல்லா பொண்ணுங்களும் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் பஸ் நிக்க இறங்கினார்கள், இவளும் என்னிடம் சொல்லி விட்டு இரங்க சென்றவள், இடையில் அனிஷிடம் பேசி விட்டு, திரும்பி எனக்கு டாட்டா காட்டி விட்டு சென்றாள்.
குளித்து விட்டு நான் அறையில் இருக்க, கீழே டீம் மீட்டிங் இருப்பதாக அழைப்பு வந்தது, சாம்பியன்ஷிப்பில் இருந்து எலிமினேட் ஆனவர்களை தேற்றும் விதமாக பாராட்டிப் பேசும் ஒரு சடங்கு அது. சடங்கின் முடிவில் மேலும் ஒரு சந்தோஷ செய்தி வந்தது எனக்கு, எலிமினேட் ஆன அனைவருக்கும் மறுநாள் காலை பதினொரு மணிக்கு டிரைன் என்று, இதை கேட்ட எனக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.
மீட்டிங் முடிய, பானுவிடம் இருந்து ஃபோன் வந்தது, டெல்லிக்கு டிரைன் ஏறினதுக் அப்புறம் முதல் முறையாக மனசு முழுக்க சந்தோஷத்துடன் பேசினேன் அவளிடம். அவளிடம் பேசிவிட்டு வைக்க, தாத்தாவிடம் இருந்து ஃபோன் வந்தது, நான் தாத்தாவிடம் எப்பொழுதும் போல அன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் ரெம்ப முக்கிமான மீட்டிங் இருப்பதால், தான் உறுதியாளித்த படி என் போட்டிகளுக்கு டெல்லி வர முடியாதென்றார். இறுதிப் போட்டிக்கு தேர்வானால் வருவதாக தாத்தா உறுதி அளித்திருந்தார், சிறுது வருத்தம் இருந்தாலும் அன்று இருந்த மனநிலையில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு ரூம்க்கு சென்றேன், சந்தோஷமாக.
சாதாரணமா என்னுடைய விடுமுறை நாட்களில், காலையில் தாத்தாவுடன் கிளம்பி டெக்ஸ்டைல் மில்லுக்கோ, கிரானைட் பிளாண்ட்-க்கோ போய் சுத்திவிட்டு, மதிய சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுவேன், மதியம் டீவி, புத்தகம் வாசிப்பது (தாத்தாவிடம் இருந்து வந்த பழக்கம்) அல்லது தூங்குவதாக இருக்கும். மாலை சிறிது நேரம் டென்னிஸ், பின்பு தாத்தா வரும் வரை ஆச்சிகளுடன் அரட்டை, தாத்தா வந்தவுடன் அரட்டையில் சேர்ந்து கொள்வார், சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரமாவது அன்று நடந்த, இல்லை பிசினஸ் சம்பந்தமாக ஏதாவது பேசுவார் தாத்தா என்னிடம். அவர் சொல்வது புரிக்கிறதோ இல்லையோ காது கொடுத்து கெட்க்க சொல்வார், பல நேரம் அவர் பேசுவது எனக்கு புரியவில்லை என்பது என் முகத்தில் தெரிந்தாள் "சொல்றத எல்லாம் கவனமா காதுல வாங்கிக்க, இப்போ புரியாவிட்டாலும், பின்னாளில் புரியும்" என்பார். அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கையில் தாத்தா திடீரென்று ஆரம்பித்தார்,
"தம்பி, அடுத்த வருசத்துல இருந்து கோயம்புத்தூர்ல படிக்கிறையா?"னு கேக்க, நான் உடனே மறுத்து தலைஅசைத்து
"சென்னைல படிக்கிறேன் தாத்தா, கோயம்புத்தூர் வேண்டாம்" என்க, என் பதிலை எதிர் பார்த்திருந்த அவர், சின்ன ஆச்சி (தாத்தாவின் மனைவி) என்னைப் பார்த்து
"இல்ல தங்கம், கோயம்புத்தூரு, இந்தா இங்குனக்குள்ள இருக்கு ரெண்டேட்ல வந்துரும், கொடைக்கானல் மாதிரி!,,,, மெட்ராஸ் எவ்வளவு தூரம், நினச்ச உடனே வர முடியுமா? சொல்லு?" னு சொல்ல, நான் சென்று தாத்தா மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு
"தாத்தா, நான் எங்க ஸ்கூல்லையே படிக்கிறேன், அங்க வேண்டாம், அங்க போன நான் தனியாத்தான் இருக்கனும்"னு சொல்லி மறுக, என் முதுகில் தட்டினார்,
"அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்ல, நான் வேணா அங்க ஏதாவது ஹாஸ்டல்ல சேந்துக்கிறேன், அந்த வீட்ல இருக்க மாட்டேன்"னு சொல்லி அழுதேன், முதுகில் தடவியவர்,
"கண்ணு, நீ பெரிய டென்னிஸ் பிளேயர்யா வரணும், நல்ல படிக்கணும், பேரும் புகழும் வாங்கணும், அதுதான் உன்ன வளத்த எங்களுக்கு பெருமை!”
"எங்களுக்கோ வயசாயிருச்சு, எங்க காலத்துக் அப்புறம், நீ எப்படி இருந்தாலும் அங்க போய்தான் இருக்கனும், என்ன இருந்தாலும் அவங்க உன்ன பெத்தவங்க! நீ நினைக்கிற மாதிரி உன் மேல பாசம் இல்லமா எல்லாம் இல்ல, ஏதோ நான் செஞ்ச பாவம்!, என் பேரன், நீ இப்படி கஷ்டப் படுறே?"னு
ஆரம்பிச்சு ஏதேதோ சொல்லி, பெரிய ஆச்சியையும் என் கூட அனுப்புவதாக சொல்லி என்னை சம்மதிக்க வச்சார், நானும் அவர்கள் கெஞ்சியதாலும், மேலும் அவர்களை கஷ்டப் படுத்த வேண்டாம்னும், பெரிய ஆச்சி கூட வருவதாலும் ஒத்துக் கொண்டேன்.
அடுத்த சில நாட்களில் இரு முறை கோவை சென்று வந்தார் தாத்தா, இரண்டாவது முறை செல்லும் போவது என் ரூமில் பாதியை காலிசெய்து கொண்டு போனார். கடைசியா நான் கோவை செல்லும் நாளும் வந்தது, மொத்தமாக அனைவரும் கிளம்பிச் சென்றோம், தாத்தா என்னுடன் இரண்டு நாள் தங்குவதாக உறுதி அளித்திருந்தார். பழனியில் இருந்து கிளம்பி அஞ்சு மணி நேரம் கழித்து, நான் என் அறையில், பெட்டில் அமர்ந்திருந்தேன், எனக்கு பிடிக்காத வீட்டில் எனது அறையில்(?). சிறிது நேரத்தில் தாத்தா வந்து என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார், வீட்டின் மூன்றாவது தளம், அந்த இடம் மொத்தமாக மாறியிருந்தது, அங்கே ஒரு பெரிய ஜிம் மற்றும் இன்டோர் ஸ்வீமிங்க பூல் தவிர மீதி இருந்த இடத்தில் அழுமினியும் ரூஃபிங்க் பண்ணிய மாடித் தோட்டம் இருந்தது.
ஆனால் இப்பொழுது அந்த தோட்டத்தில் முக்கால் வாசி காலி செய்யப் பட்டு, ஃபைபர் கிலாஸால், கதவுடன் கூடிய சுவர் எழுப்பி பட்டிருந்தது, கதவை திறந்து பார்த்தால் உள்ளே, ஒரு வலையடித்த டென்னிஸ் கோர்ட், ஆச்சரியமாக, அதே நேரம் சந்தோஷமாக நான் தாத்தாவை பார்க்க, சிரித்தவர்,
"எல்லாம் உனக்குத்தான், ஏர் கண்டிஷனிங் மட்டும் பண்ணனும், அதுவும் ரெண்டு நாள்ல ரெடியாயிரும்"னு சொல்ல, நான் தாத்தாவைக் காட்டிக் கொண்டேன்.
டென்னிஸ் கோர்ட்டைப் பார்த்தவுடன் தான் பானுவின் நினைவு வந்தது, தாத்தாவிடம் நன்றி சொல்லிக் கொண்டு, கீழே என் ரூம்க்கு வந்து "ஹாய்"னு ஒரு மெசேஜ் பன்னினேன் பானுவிற்க்கு, பதில் வர வில்லை, ஆஃப்லைனில் இருந்ததாள். அன்று இரவு டின்னரின் போது "ரெம்ப நாள் கழித்து மொத்த குடும்பமும் ஒன்ன உக்காந்து சாப்பிடுவதாக" தாத்தா கூற அனைவரும் ஆமோதித்தனர், இடையில் "சாப்பாடு நல்ல இருக்கானு?” சுமா என்னைப் பார்த்து கேட்டாள், சமயல்காரியை அழைத்த சிவா "என்ன வேண்டும், என்ன பிடிக்கும்" என்று என்னிடம் கேட்டு வைத்துக் கொள்ள உத்தரவு இட்டார். சாப்பாடு முடிந்தவுடன், ஹாலில் அமர்ந்தது பேசிக் கொண்டிருக்க, நான் தாத்தாவிடம் குட் நைட் சொல்லிவிட்டு தூங்க கிளம்ப, சுமா எனக்கு குட் நைட் சொன்னாள், நானும் பதிலுக்கு கூறிவிட்டு ரூம்க்கு வந்தேன்.
குழம்பியிருந்தேன், சிவாவும், சுமாவும் இதற்கு முன் இப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை, டின்னர்க்கு முன்னாடியே, இருவரும் தனித் தனியாக என் அறைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு போயிருந்தார்கள், ஒரு வேலை தாத்தா சொன்னது போல் என் மீது பெத்த பாசம் இருக்குமோ என்று எண்ணுகையில், மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
"டிங்" என்ற ஃபோனின் சத்தம் என் எண்ண ஓட்டத்தை கலைக்க, மெசேஜ்யை பார்க்க "ஹாய்" என்று பானுக்கா அனுப்பி இருந்தாள்,
அவளிடம் டெக்ஸ்ட் செய்ததின் சுருக்கம் - அவள் இத்தாலிக்கு வேக்கேஷன் போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என்று சொன்னாள். வந்தவுடன் மெசேஜ் பண்ண சொல்லியிருந்தேன். நான் கோவைக்கு ஷிப்ட் ஆனதை அவளிடம் சொல்லவில்லை, சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டேன். கோவை வந்த இந்த பத்து நாள்களில் சிவாவும், சுமாவும்-ஆக என் எண்ணத்தில் இருந்தவர்கள், அப்பவும், அம்மாவுமாக மாறியிருந்ததார்கள், பாசத்தை பொழிய விட்டாலும் அப்பா இல்லாத சமையங்களில் அம்மா கொஞ்சம் பேசுவாள், அப்பா "எண்ண? எது? “ என்று தேவைகளின் பொருட்டே பேசுவார், ஆனால் பேச்சில் முன்பிருந்த வெறுப்பு இருக்காது, ஆனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.
நான் தினமும் மதியம் ஆச்சி தூங்கியவுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்ட்க்கு வந்துவிடுவேன், சில பசங்களை பிரெண்ட்ஸ் பிடித்திருந்தேன், அவர்களுடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட், பின்பு வீட்டுக்கு சென்று டென்னிஸ், சாப்பிட்டு விட்டு தூக்கம் இப்படியாக கழிந்தது என் கோவை வாழ்க்கை. எப்பொழுதும் போவள் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்புகையில் என் ஃபோன் அடித்தது. சைக்கிள் நிறுத்திட்டு ஃபோன பார்கக, பானு தான் அழைத்தாள், சந்தோஷத்தில்
"ஹலோ அக்கா, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"
"யாராவது ஃபோன் பன்னா, முதல்ல நல்ல இருக்கீங்களானு கேக்கணும், எடுத்த உடனே வந்துட்டீங்களா? போட்டீங்களா?"னு அவள் போய்க் கோபம் கொள்ள
"ஓகே, நல்ல இருக்கீங்களா?"
"எஸ்"
"இப்போ சொல்லுங்க, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"
"இல்ல, இப்போதான் சென்னை வந்தோம், ஒரு மணி நேரம் ஆச்சு, கோயம்புத்தூர் ஃப்ளைட்-காக வெயிட்டிங்"
"நைட் வந்துருவிங்களா?"
"எஸ்"
"நீங்க கோயம்புத்தூர் வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு"
"அப்படியா?..நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுறுக்கேன்!" அவள் சொல்ல, நான் ஆர்வ மிகுதியில்
"என்ன சர்ப்ரைஸ்?"
"நீ ஒரு புளூ கலர் சைக்கிள் வச்சுருக்கியா?"
"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்" என்று ஆச்சரியமாக கேக்க
"சொன்னேல சர்ப்ரைஸ்னு, இத்தாலில ஜோசியம் காத்துக்கிட்டேன்" நான் சிரித்துக்கொண்டே
"சும்மா, விளையாடாதீங்க"னு சொல்ல,
"ஓகே இப்போ உன் எதிர் காலத்துல நடக்க போற ஒண்ணே சொல்லுறேன் கேக்குரியா?"
"ம்ம்"
"உன் எதிர்கால மாமியாரை பக்க போறே இன்னும் கொஞ்ச நேரத்துல"னு சொல்ல,
அப்போ உண்மையிலேயே ஒரு அழகான ஆண்ட்டி என்ன கடந்தது போச்சு, நான் பேச்சு மூச்சு இல்ல இருக்க,
"என் உன் மாமியார் அழகா இருக்கங்களா?" கேக்க, இந்த முறை ஆச்சரியத்துடன்
"அக்கா, உண்மையெலே நீங்க ஜோசியம் கத்துக்கிட்டீங்களா?" கேக்க
"இன்னும் என்ன நம்பமாட்டே, ஓகே இன்னொன்னு சொல்றேன் கேக்குரியா?"னு கேக்க, நான் வாயடைத்துப் போய், நான் தலையை மட்டும் ஆட்டினேன்
"என்ன தலையா ஆட்டுன கேக்கது தம்பி, வாயால பேசணும்"னு சொல்லி அவள் சிரிக்க, உண்மையிலேயே ஜோசியம் தான் சொல்லுற போல நான் நினைக்க
"ஓகே, கூல், இப்போ உன் முன்னாடி என்ன இருக்கு?", நான் நிமிர்ந்து பார்த்தேன்,
"ஒரு குப்பை தொட்டி"
"வேற?"
"கார்"
"வேற?"
"ஒரு லாம்ப் போஸ்ட்"
"ஓகே, இப்போ அந்த லாம்ப் போஸ்ட் கிட்ட போய் சைக்கிள திருப்பு", நான் அவள் சொன்னதை செய்ய
"ம்"
"இப்போ அப்படியே சைக்கிள உருட்டிக்கிட்டு எண்ணி ஒரு ஃபிஃப்டி ஸ்டெப்ஸ் ஸ்ட்ரைட்-ஆ வா", நான் எண்ணிக்கொண்டே அவள், சொன்னதை செய்ய
"ம்"
"ஓகே, இன்னும் ஒரு டென் ஸ்டெப்ஸ் முன்னால போ", மறுபடியும், நான் எண்ணிக்கொண்டே அவள், சொன்னதை செய்ய
"ம்"
"இப்போ உன் ரைட் ஸைட் என்ன இருக்கு?"
"ஒரு வீடு!"
"அந்த வீட்டுக்கு, காம்பவுண்ட் கேட் இருக்கா?"
"ஆமா"
"என்ன கலர்?"
"பிளாக்"
"கேட்ப் பக்கத்துல, காம்பவுண்ட்ல ஏதாவது பேர் எழுதிருக்கா?"
"ஆமா, டாக்டர் சிவகாமினு எழுதிருக்கு"
"ஐய்யோ! மண்டு, பேர் எழுதிருக்கானு மட்டும் தானே கேட்டேன்?, ஜோசியம் கேக்கும் போது, கேக்குறதுக்கு ஸ்பெசிஃபிக்கா பதில் சொல்லணும்"னு அவள் சீரியஸ்ஸா சொல்ல, நான் உண்மையிலேயே சாமியாரிடம் ஜோசியம் கேக்கும் ஒருவனின் மனநிலையில் இருந்தேன்.
"ஓகே, விடு, அந்த வீட்டு காம்பவுண்ட்ல டோர் நம்பர் இருக்க?"
"இருக்கு"
"ஓகே, இப்போ அந்த டோர் நம்பர் சொல்லட்டா?"
"ம்"
"ம்ம்.ம்ம்..ம்ம்..செவன்டீன் பை..ம்ம்..ம்ம்..128, கரெக்ட்டா"னு அந்த டோர் நம்பரா அவள் கரெக்ட்டா சொல்ல, நான் சிலிர்த்து விட்டேன்
"ஆமாக்கா, உண்மையிலேயே நீ ஜோசியம் கரெக்ட்டா சொல்லுறே"னு சொல்ல,
பலமான சிரிப்பு சத்தம், குழப்பமாக ஃபோன் காதில் இருந்து எடுத்த பின்பும், சிரிப்பு சத்தம் தொடர்ந்தது. சத்தம் வந்த திசையை அண்ணாந்து பாக்க அங்கே பானுவும், பக்கத்தில் அழகான ஆண்ட்டியும் ஹை ஃபைவ் தட்டிக் கொண்டார்கள். ஏமாற்றபட்டது புரிந்தவுடன், என் முகம் பாக்க, பானு என் கண்களில் இருந்து மறிந்து சில நொடிகளில் கேட்டில் இருந்து வெளிபட்டாள். வந்தவள் நேர என் கன்னத்தைக் கிள்ளியவள்,
"சாரி டா, சும்மா விளையாட்டுக்கு"னு சொல்லி கைய பிடுச்சு இழுக்க, நான் அசையாமல் நின்றேன், திரும்பி என்னை கட்டிப்பிடித்து
"அக்காதான் சாரி சொல்லிட்டேன்ல, நல்ல பையன்ல வா"னு கூப்பிட, உள்ள சென்று சைக்கிள் நிறுத்திவிட்டு திரும்ப, என் தோள்களில் கைபோட்டு, வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போதே கேட்டாள்
"நீ, எப்பிடிடா இங்க" நான் சந்தோஷமாக மூச்சு விடாமல், அவளிடம் மொத்த கதையையும் ஒப்பித்து முடிக்க, இவளுடன் மேலே நின்றிருந்த ஆண்ட்டி வந்தாள்,
"அம்மா, நான் சொல்ல "டென்னிஸ் ஓண்டர் பாய்", குட்டிப் பையன் சூப்பரா ஆடுறான்னு, இவன் தான்"
"பெரு மணி தானே? மணிகண்டன்? கரெக்ட்?"னு ஆண்ட்டி சொல்ல, ஆச்சரியத்துடன் நான் அவர்களைப் பார்க்க
"ஏற்கனவே இவன் பேர சொல்லிறுக்கணா?, இல்லையே, பின்ன எப்படி தெரியும்?"னு கேக்க
"பேரென்ன, இவன் ஜாதகமே எனக்கு தெரியும்"னு அவள் சொல்ல, பானு நக்கலாக
"ஓ, அப்போ உனக்கும் ஜோஷியம் தெரியுமோ?"னு கேட்டு சிரிக்க, என் அருகில் வந்த ஆண்ட்டி, நக்கலாக சிரித்தவாரே
"தெரியும், மச்ச ஜோசியம்.."னு சொல்லி டிக்கியில் தட்டியவள்
"இவனுக்கு இந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கு, ஆன எந்த ஸைட்னு சரியா தெரியல" தீவிரமா யோசிப்பது போல் பார்க்க, பானு சோபாவில் விழுந்து குலுங்க, குலுங்க சிரித்தாள், ஆண்ட்டி தொடர்ந்தாள்
"என் கணக்கு சரியா இருந்தா ரைட் ஸைட், கரெக்ட் டா"னு கேக்க,
நான் அதிர்ச்சியுடன் தலை ஆட்டுவதைப் பார்த்த பானுவின் சிரிப்பு பட்டேன அடங்ககியது. சோபாவில் இருந்து எழுந்தவாள், என் கைகளைப் பிடித்து
"நிஜமா இருக்கா?"னு கேக்க, நான் மறுபடியும் தலையாட்ட, பட்டேன பானு அவள் அம்மாவைப் பார்த்தாள், பானுவின் தலையில் தட்டிய ஆண்ட்டி
"டீ, இவன் நம்ம சுமா பையன் டீ?"
"சுமா ஆண்ட்டி பையனா?" அதிசயத்து கேட்டாள் பானு.
பின்பு நடந்த சுருக்கம்:
சிவகாமி மெடிக்கல் காலேஜ் நான்கு வருட சீனியர், நெருங்கிய தோழிகள், கோயம்புத்தூர்ல உள்ள பெரிய ஹாஸ்பிடல்-களில் இவர்களுடையதும் ஒன்று, கணவர் பானுவிற்க்கு இரண்டு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், என் அப்பா நடத்தும் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள். பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னாள்.
---------------------------
பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னதில் இருந்து, பத்து நாளில் அவள் படித்த ஸ்கூலில் அட்மிஷன் கிடத்தது. தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், சிலரிடம் பெருசா பழக்கம் இல்லாட்டலும் சட்டுனு ஒட்டிக்குவோம்ல அந்தமாதிரி நான் பானுவிடம் ஒட்டிக்கொண்டேன்.
ஒன்றரை மாதங்களுக்குப் பின், நான் புது ஸ்கூலில், என் கிளாசில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருதேன். ஒன்பதாம் வகுப்பு, எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, எனக்கு யாரையும் தெரியாததால், என் முன்னால் உள்ள பெஞ்சை சுரண்டிக் கொண்டிருந்தேன், இறுக்கமான எனக்கு பழக்கப் பட்ட மனநிலையில்.
பக்கத்தில் யாரோ வந்து அமர, திரும்பிப் பார்த்தால் புன்முறுவலுடன் ஸ்கூல் டிரஸ்ல் பானு. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தது விட்டு அவளது கிளாஸ்க்கு சென்றாள். அவள் பேசிச் சென்றதில் மனசு சற்று லேசா-ஆக, நிமிர்ந்தது பார்த்தால், கிளாசில் உள்ள அனைத்து பாசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள், பின்ன, ஸ்கூலின் அழகு தேவதை, ஒரு புதுப் பையனிடம் அருகில் அமர்ந்து பேசினால் எல்லாரும் அதிசியமாத்தானே பார்ப்பார்கள். புது ஸ்கூல்க்கு வெகு இயல்பாக பழகிக் கொண்டேன், உபயம் பானு. எல்லோரிடமும் என்னை அவள் தம்பி என்றே அறிமுகம் செய்தது வைத்தாள், பானுவிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்கிறே ஒரே காரணத்துக்காகவே என்னுடன் நட்பு பாராட்டினார் பலர்.
அடுத்த சில மாதங்களில் நடந்தவை - என்னை பானுவில் டெய்ல்(வால்) என்று ஸ்கூலிலும், டென்னிஸ் அக்கடமியிலும் கிண்டல் அடிக்கும் அளவுக்கு அவளுடனே ஒட்டிக் கொண்டிருந்தேன். ஸ்கூல் டென்னிஸ் டீமில் சேர்ந்திருந்தேன், டென்னிஸ் அக்கடமியில் தினம் காலை, மாலையில் பயிற்சி, பானு காலையில் மட்டும் தான் வருவாள், இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் மாலையில் டியூஷன் சென்று விடுவாள். உடன் பிறந்த அக்கா தம்பி போல், நெருங்கி இருந்தோம், நான் கோவை வந்த இந்த ஆறு மாதங்களில். பானு ஒரு நாள் என்னை அவள் அம்மாவிடம் அழைத்துச் சென்று
"ஹியர் ஐ இன்ட்ரொடியூஸ் யு டூ யுவர் நியூ சன் Mr.மணி, மை அடோப்டேட் தம்பி"னு
சொல்ற அளவுக்கு, பாசமலர் ரேஞ்ச்க்கு மிகவும் நெருக்கமானோம். என்ன தாத்தாவும், ஆச்சியும், செல்லமாக, நான் அவர்களை மறந்து விட்டதாக அலுத்துக் கொள்வார்கள்.
நான்கு மாதங்கள் கழித்து ஒருநாள் மாலை, நான் குளித்து விட்டு வரும் போது என் ஃபோன் ரிங் சத்தம் சன்னமாக வர, அதைத் தேடி, என் டென்னிஸ் கிட் பேக்கில் இருந்து கண்டு பிடித்து எடுக்குமுன் கால கட்டானது, பானு தான் அழைத்திருந்தாள். எடுத்துப் பார்த்தால், இரண்டு மிஸ்டு கால அக்கடமில இருந்து, இவளிடம் இருந்து எட்டு கால், என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவளுக்கு கால் செய்யும் முன் அவளே அழைத்தாள். அட்டன் செய்ய
"பன்னி, எத்தன தடவ ஃபோன் பண்றது, அட்டன் பண்ண மாட்டியா?"னு கோபமாக கத்த, நான் குளித்து விட்டு இப்போ தான் வந்ததாக சொல்ல
"சரி, கீழ உங்க வீட்டு ஹாலுக்கு போ, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்"னு சொல்ல,
என்னவாக இருக்கு என்று குழம்பியவாரே, கீழே போக, "அந்த குழந்தையே நீங்க தான்ற மாறி" சர்ப்ரைஸ்-ாக அவளே அமர்ந்திருந்தாள்,, சோபாவில் அம்மாவுடன், என்னைக் கண்டவுடன் ஓடி வந்து கட்டிப் பிடித்து, டெல்லியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நேஷனல் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அவரவர் பிரிவில் தமிழ்நாடு டீமில் இடம் பிடித்திருந்தோம், பதினைந்து நாள் கழித்து சென்னைக்கு சிறப்பு பயிற்சிக்கு போகாணும்னு அவள் சொல்ல, நான் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தேன்.
தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ராங்கிங்கில் வரும் நான்கு டோர்ணமென்ட்களில் மூன்றில் அன்டர்-16 பிரிவில் வென்றிருந்தேன் (நான் இக்கதையில் சிறிது முன்னால் ஆடியது, அந்த வருடத்திரக்கான இரண்டாவது டோர்ணமென்ட்), ஒன்றில் கலந்து கொள்ளவில்லை, பானு, அன்டர்-18 பிரிவில் ஒன்றில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் இறுதியிலும், ஒன்றில் அரையிறுதியிலும் தோற்று போய் இருந்தாள், புள்ளிகளின் அடிப்படையில் தேர்வாகியிருந்தாள். அன்றிரவு டின்னர் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் சென்றாள்.
சென்னை பிரேபிரேஷன் கேம்ப்க்கு சேர்ந்தே காரில் சென்றோம், சென்னையில் ஒட்டிப் பிறந்தவர்கள் போல், ஒன்றாகவே சுற்றினோம், தூங்கும் நேரம் தவிர்த்து. கேம்ப் முடிஞ்சு மூணு நாள் கழித்து சென்னையில் இருந்து டெல்லி, என் முதல் இரயில் பயணம், எனக்கு மிகவும் பிடித்த பானு அக்காவுடன். என்னையும் பானுவையும் தவிர டீமில் இருந்த அனைவரும் சென்னை பிளயர்ஸ், அவர்களில் சிலர் அவ்வப்பொது இவளிடம் வழிவதும், இவளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து பேசி என்னை கடுப்பேத்தினாள், அதிலும் அனிஷ்னு, இவள் வயதுடையன், இவளிடம் கடலை போட என்னையே காக்க பிடித்தான், என்னிடமே பானுவின் நம்பர் கேட்டான், குடுக்க மறுத்து விட்டேன்.
டிரைனிலும், டெல்லியிலும் ஏதாவது செய்தது எங்களுடனே ஒரு அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்தான், பானுவிடம் என்னைப் பேச விடாமல், இவனே எப்போ பார்த்தாலும் பேசிக் கொண்டிருந்தான், இவளும் அவன் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தாள், கூடவே இருந்தாலும் அவளிடம் அன்னியப் பட்டது போல் ஒரு உணர்வு. அது தந்த வலி எனக்கு பரிச்சியமானதுதான் என்றாலும், அதற்க்கு காரணம் பானு என்பதால் அதன் அழுத்தம் கொடியதாய் இருந்தது, அவள் மீது முதல் முறையாக வெறுப்பு, இல்லை, இல்லை கோபம்.
லீக் போட்டிகளும் ஆரம்பித்தது, இவர்கள் மேல் இருந்த கோபத்தை மொத்தமாக போட்டிகளில் காண்பித்தேன்.எப்பொழுதும் போல, நேர் செட் வெற்றி, லீக் போட்டிகளின் முடிவில் டோர்ணமென்ட் பிரபலம் ஆகியிருந்தேன். தமிழ்நாடு டீமில் இருந்து முதல் முறையாக அனைத்து கேட்டகிரியையும் சேர்த்து பதினொரு பேர் நாக்-அவுட் சுற்றுக்கு தேர்வாகி இருந்தோம், நானும் பானுவும் அதில் அடக்கம், மொத்த டீமும் சந்தோஷத்தில் இருக்க, நான் மட்டும் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தேன், காரணம் அனிஷ் சோகத்தில் புள்ளிகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி இருந்தான்.
போட்டி முடிந்து ஹாஸ்டல்க்கு பஸ்சில செல்லும் பொது, என் அருகில் இருந்த பானு, அனிஷ்-ஆக வருத்தப் பாட்டு பேச, நான் இவள் மீது கடுப்பிலும், அவனை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தேன். எல்லா பொண்ணுங்களும் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் பஸ் நிக்க இறங்கினார்கள், இவளும் என்னிடம் சொல்லி விட்டு இரங்க சென்றவள், இடையில் அனிஷிடம் பேசி விட்டு, திரும்பி எனக்கு டாட்டா காட்டி விட்டு சென்றாள்.
குளித்து விட்டு நான் அறையில் இருக்க, கீழே டீம் மீட்டிங் இருப்பதாக அழைப்பு வந்தது, சாம்பியன்ஷிப்பில் இருந்து எலிமினேட் ஆனவர்களை தேற்றும் விதமாக பாராட்டிப் பேசும் ஒரு சடங்கு அது. சடங்கின் முடிவில் மேலும் ஒரு சந்தோஷ செய்தி வந்தது எனக்கு, எலிமினேட் ஆன அனைவருக்கும் மறுநாள் காலை பதினொரு மணிக்கு டிரைன் என்று, இதை கேட்ட எனக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.
மீட்டிங் முடிய, பானுவிடம் இருந்து ஃபோன் வந்தது, டெல்லிக்கு டிரைன் ஏறினதுக் அப்புறம் முதல் முறையாக மனசு முழுக்க சந்தோஷத்துடன் பேசினேன் அவளிடம். அவளிடம் பேசிவிட்டு வைக்க, தாத்தாவிடம் இருந்து ஃபோன் வந்தது, நான் தாத்தாவிடம் எப்பொழுதும் போல அன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் ரெம்ப முக்கிமான மீட்டிங் இருப்பதால், தான் உறுதியாளித்த படி என் போட்டிகளுக்கு டெல்லி வர முடியாதென்றார். இறுதிப் போட்டிக்கு தேர்வானால் வருவதாக தாத்தா உறுதி அளித்திருந்தார், சிறுது வருத்தம் இருந்தாலும் அன்று இருந்த மனநிலையில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு ரூம்க்கு சென்றேன், சந்தோஷமாக.