Chapter 07

ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,

"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை.

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர,

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்,

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன்

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது.

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்.

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்,

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்.

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்.

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன்

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்.

"டேய்..ஹலோ..டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்.

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில்

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்",

"யு ஆர் கோயிங் தொ கோ பிளேஸ்ஸஸ்",

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"
ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,

"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை.

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர,

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்,

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன்

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது.

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்.

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்,

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்.

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்.

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன்

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்.

"டேய்..ஹலோ..டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்.

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில்

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்",

"யு ஆர் கோயிங் டூ கோ பிளேஸ்ஸஸ்",

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"

"யு ஆர் தே பெஸ்ட் இன் திஸ் டோர்ணமென்ட்"னு

பல அறுதல்கள், பாராட்டுக்கள், சொல்லப் போனால் தோற்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இந்த ஆறுதல்கள் எதுவும் எனக்கு தேவைப் படவில்லை, காரணம் அடுத்து நடந்த போட்டியில் பானு வென்று சாம்பியன்-ஆகி இருந்தாள், அதையும் விட இந்த ஐந்து நாட்களில் பானுவுடன் நான் பழைய படி சகஜம் ஆகி இருந்தது தான் காரணம். பல வருங்களுக்கு பிறகு மகாராஷ்டிரா டீம்-ற்க்கு போட்டியா இன்னொரு டீம் வந்துவிட்டதாக விழாவில் பேசினார்கள். விழா முடிந்து கிளம்பும் போது என்னை கட்டி பிடித்த பானு "தாங்க்ஸ் டா, செல்லக்குட்டி"னு கொஞ்சினாள், ஏன் என்று கேட்டு, அவள் அணைப்பில் இருந்து விடுபட விரும்பாமல் அப்படியே நின்றேன்.

மறுநாள் காலை, பதினொரு மணி, எங்கள் டிரைன் நகர, மற்றவர்களுக்கு, டா..டா காட்டிட்டு, எங்கள் இருக்கைக்கு வந்தோம். டீமில் எங்களைத் தவிர, எல்லோரும் சென்னை என்பதால், அவர்கள் சென்னை செல்ல, நாங்கள் டெல்லியில் இருந்து நேர கோயம்புத்தூர், கேரள எக்ஸ்பிரஸ். இருவரும் ஃப்ளைடில் போவதாகத்தான் திட்டம், இவளுக்கு ரயில் பயணம் பிடிக்கும் என்பதால் இவள் முரண்டு பிடித்ததால் இந்த ரயில் பயணம், ஃபர்ஸ்ட் ஏசி, கூபே. கபினுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் பானுவின் அம்மாவிடம் இருந்து ஃபோன், இருவரிடமும் பேசினார்கள், ஒரே அட்வைஸ், டிரைன் நிக்கிதுனு சும்மா எந்த ஸ்டேஷன்லையும் இரங்க கூடாது, எப்போது கபின் லாக் பண்ணிக்கிட்டு இருக்கணும், ரெண்டு பெரும் சின்ன பசங்க, சேஃபா இருக்கணும், தேவை இல்லாம யார்க்கிட்டையும் பேச கூடாது, முக்கியமா அடிக்கடி ஃபோன் பண்ணனும், இன்னும் பல.., பேசிவிட்டு ஃபோனை வைத்தாள்.

நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன், இருக்காதா, இன்னும் ரெண்டு நாள், எனக்கு பானு அக்கா, அவளுக்கு நான் மட்டுமே துணை, கேபின் டோர் லாக் பண்ணிட்டு என் சீட்ல உக்கார,

"இப்படி தனியா போறதுக்கு ஃப்ளைட்லயே போய் இருக்கலாம்"னு சலித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம், அப்புறம் தூங்கிப்போனோம். அவள் தான் எழுப்பினாள், டீ குடித்துக் கொண்டிருந்தாள், எனக்கும் ஒன்று இருந்தது, டீ எடுத்து குடிக்க, என் தலையில் தட்டியவள்

"போய், மவுத் வாஷ் பண்ணிட்டு வாடா எரும!"என்க,

நானும் டீய வச்சுட்டு, எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வந்து கதைவை திறந்தால், இவள் என் கப்பில் இருந்த டீயை அவள் கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள், நான் அவளைப் பார்த்து முறைக்க

"கொஞ்ஞ்சோண்டு தான், முறைக்காத, வாய் கொப்பளிக்காம டீ குடிச்சில! அதுக்கு ஃபைன்!"என்றால், நான் உம்மென்று இருக்க, சிரித்தவள்

"தம்பி,.. நான் குடிச்சு முடிக்கிறதுக்கு முன்னால் நீ குடிக்கலா, மிச்சம் இருக்கிறதையும் நான் குடிச்சுறுவேன்"னு சொல்ல,

இவள் குடித்தாலும் குடிப்பானு நெனச்சு, நான் டீ எடுத்து குடிக்க, அவள்

"அது, அந்த பயம் இருக்கணும்"னு சிரிச்சுக்கிட்டு சொல்ல,

நான் அவளை பார்த்து வக்கலம் காட்டி விட்டு, டீய குடிக்க, "டிங்"னு அவள் மொபைலில் மெசேஜ் டோன். எடுத்துப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் ஃபோன் வைத்தாள், என்னனு நான் கேக்க

"சாரினு, மெசேஜ் பண்றான் லூசுப் பய!"னு சொல்ல, அனிஷாதான் இருக்கும்னு தெரிந்தாலும்

"யாரு?"னு உறுதி படுத்திக்க கேக்க

"அதுதான் அந்த பன்னி, அனிஷ்"னு சொல்ல, நான் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்,

"ஆமா நான் அன்னைக்கே கேக்கனும் நினச்சேன், ஆன மறந்துட்டேன், உனக்கு எப்படி தெரியும் நான் அந்த பன்னி கூட ஜூஸ் குடிச்சது?"னு கேக்க

அவன் என் பானு அக்காவை பற்றி கேவலமா பேசினது நினைவுக்கு வர, வெறுப்பும் கோபமும் தாங்காமல் அழுதுவிட்டேன். பதறிய பானு

"டேய், என்னாச்சு டா, எதுக்கு டா அழுறே?"னு கேக்க,

மொத்ததையும் கொட்டிவிட்டேன், மொத்தத்தையும் கேட்டவள் கண்களில் கண்ணீர், கடும் கோபத்தில் எழந்து வெளியே சென்றாள், நானும் அவள் பின்னால் போக, பாத்ரூம் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், அங்கேயே நின்றேன். நெடு நேரம் கழித்து வெளிய வந்தவள் என்னைப் பார்த்து முறைத்தவள்,

"நீயும் அந்த பன்னி சொன்னத நம்பிட்ட? இல்ல?"னு கேக்க, நான் இல்லை என்று தலை ஆட்டியதை கவனிக்காமல்

"ச்சீ..என் மூஞ்சிலேயே முழிக்காத" கோபத்தில் கத்தியவள்,

கேபினுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்றிருந்தேன் கலங்கிய கண்களுடன். தாத்தாவும், பானு, டென்னிஸ், ஆச்சிகளும் மட்டுமே உலகம் என்றிருந்த எனக்கு, இனிமேல் பானு அக்கா என்னுடன் பேச மாட்டாளோ?,, என்ற எண்ணம் தோன்ற,, வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன், எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஒரு கை என் தோள்களை பற்றி உலுக்க, தீரும்பி பார்த்தால், பானு அக்காதான்

"உள்ள வா"என்றவள் என் பதிலை எதிர்பாராமல் கேபினுக்குள் சென்றாள். அவள் என்னிடம் பேசியதே எனக்கு போதுமானதாக இருந்தது, உள்ளே சென்று என இருக்கையில் அமர்ந்தேன். ஒரு பார்சல் எடுத்து பிரித்து என்னிடம் நீட்டியவள்

"சாப்பிடு"என்று சொன்னாள், நான் வாங்கிக் கொண்டு அவளையே பார்க்க, இன்னோரு பார்சலைப் பிரித்து இரண்டு வாய் சாப்பிட்டவள், என்னைப் பார்த்தாள், நான் சாப்பிடாமல் அவளே பார்த்துக் கொண்டிருக்க,

"என்ன ஊட்டிவிடனுமா?"னு எரிச்சலுடன் கேக்க,,, கலங்கிய கண்களுடன் வேண்டாம் என்று நான் தலை அசைக்க

"பின்ன?..ஏற்கனவே உன்மேல கடுப்புல இருக்கேன், ஒழுங்கா சாப்புடு,..இப்படி ரெம்ப பாவம் மாதிரி நடிக்காத"னு சொல்ல,

உடைந்து அழ அரம்பித்துவிட்டேன், இவள் நான் நடிப்பதாக சொன்ன வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் கூடுத்த பார்சலை வைத்து விட்டு பெர்த்தில் குப்புற படுத்துக் கொண்டேன், ஏற்கனவே வெளியே ரெம்ப நேரம் அழுத்தால், மூச்சடைக்க ஏங்கி ஏங்கி அழ தொடங்கினேன். சிறிது நேரத்தில் என் முதுகில் தட்டியவள்

"டேய் அழாத, அக்கா ஏதோ கோவத்துல திட்டிடடேன்!"னு சொல்லி முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் காதில் விழாதது போல் அழுது கொண்டிருக்க, பெர்த்தில் என் தலைக்கு மேல இருந்த சிறிய இடத்தில் அமர்ந்தவள், என் தோள்களைப் பற்றி திருப்ப முயன்றாள், முடியாது போகவே, என் முகத்தை பற்றி தூக்கியவள், உள்ளே நகர்ந்தாள், என் முகம் அவளது கால்களில் இருந்தது.

"சரிடா, அக்கா தான திட்டுனேன்!, இதுக்குப் போய் இப்படி அழுவியா? ம்ம்"னு சொல்லி என் முதுகை வாஞ்சை உடன் தடவினாள்

"அதுதான் அக்கா சாரி சொல்லிட்டேன்ல!, அழத டா"னு மறுபடியும் சொன்னவள், என் தோள்களை பற்றி அவள் மடியை நோக்கி இழுக்க முயன்றாள் முடியாது போகவே

"டேய் கொஞ்ச மேல ஏறி, அக்கா மடில படுத்துக்க, கழுத்து வலிக்கப் போகுது!"னு

பாசத்துடன் சொல்ல, நான் சற்று மேல் சென்று அவள் மடியில் தலை வைத்து, அவள் இடுப்பை சுற்றிக் காட்டிக் கொண்டேன். அழுகை நின்றிருந்தது, ஆனால் அவ்வப்பொது ஏங்கிக் கொண்டிருந்தேன், கை பொத்தியவாறு, என் முதுகில் தட்டிக் கொண்டிருந்தவள்,

"சாரிடா, அந்த கிறுக்கு பய மேல இருந்த கோவத்த உன்மேல காட்டிட்டேன்!, சாரிடா"னு

சொல்லி என் தோள்களைப் பற்றி திருப்பி, இந்த முறை அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் நானே திரும்பிப் படுத்தேன். கண்களின் ஓரம் இருந்த கண்ணீரை துடைத்தவள், என் கன்னங்களை வாஞ்சையாக தடவினாள், பின் என் கன்னத்தைக் கிள்ளி

"டேய் சும்மா திட்டுனதுக்கு,, இப்படியா தேம்பி தேம்பி அழுவே?"னு கேக்க, எனக்கு மீண்டும் அழுகை வந்தது,

"நீங்க திட்டுனா எனக்கு அழுகைதான் வருது!"னு சொல்லி மீண்டும் திரும்பி அவள் மடியினில் முகம் புதைத்து அழ, சிறிது துள்ளியவள்

"டேய் வயித்துல படுக்காதே, கூசுது!"னு சொல்லி நெளிய,

கொஞ்சம் இயல்பாகி நான், வேண்டும் என்றே அவள் வயித்துல என் முகத்தை வேகமாக தேய்ததேன். கூச்சம் தாளாமல் என் ஒரு தொளைப் பற்றி தள்ளியவள், நான் கிழ விழப்போக என் டீ-ஷர்டைப் பிடித்து விழாமல் பிடித்துக்கொண்டாள். நான் அவளைப் பார்த்து சிரிக்க

"அப்பாடா, சிரிச்சுட்டான்!"னு சொல்லி என் முதுகில் வலிக்காமல் அடித்து

"போ, போய் முஞ்ச கழுவிட்டு வா, அழுது அழுது, பாக்க கேவலமா இருக்கு"னு சொன்னாள்.

நான் முகம் கழுவிட்டு திரும்பி வந்து, அவள் அருகிலேயே உக்கார, சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், சப்பாத்தியை பிய்த்து எனக்கு ஊட்டுவது போல் காட்டினாள், நான் சந்தோஷமாக வாய் திறக்க, என்னை பாத்து விரலை மடக்கி சின்னப் பிள்ளை போல் கட்டியவள், சப்பாத்தியை அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள். நான் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள வேறு பக்கம் திரும்பி கொண்டேன்.

சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, இன்னும் அருகே நீட்டினாள், நான் வாய் திறக்க, மறுபடியும் என்னை ஏமாற்றி விட்டு அவள் சாப்பிடும் முன், அவள் கைகளைப் பிடித்து பாய்ந்து சென்று சப்பாத்தியோடு அவள் விரல்கள் கவ்வினேன், பற்களால்,,, கையை உருவப் பார்த்தாள், நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்ட,,,, கையை உருவதை நிறுத்திக் கொண்டு, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

"டேய், சாரிடா, கைய விடு டா!"னு கெஞ்ச நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்டி முடியாதென்று தலையாட்டினேன்.

"வழிக்குதுடா எருமே"னு கத்த பற்களின் அழுத்தம் குறைத்தேன், ஆனால் விடவில்லை.

"செல்லம் இல்ல,,,, விடுடா"னு கெஞ்ச, நான் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தேன், பெருமூச்சு விட்டவள்

"ஓகே, இப்போ என் கைய விட்டேனா, இன்னைக்கு அக்காவே உனக்கு ஊட்டிவிடுவேன்"னு அவ சொல்ல, நான் அவள் கைகளில் இருந்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு, அவள் கையை விட்டேன்.

"எரும கையெல்லாம்,,, எச்சி ஆக்கிருச்சு"னு சொல்லி சலித்துக் கொண்டு, சப்பாத்தியை பிய்த்து ஊட்டினாள், நான் வாய் திறக்க மீண்டும் அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள், நான் முறைத்தேன். சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, சப்பாத்தியால் என் உதடுகளில் அழுத்தினாள், நான் முறைத்துக் கொண்டே வாய் திறந்து வங்கிக்கொள்ள, இருவரும் சிரித்தோம்.

எனக்கு ஊட்டிக்கொண்டே, அவளும் சாப்பிட்டு முடிக்க, அவள் அம்மாவிடம் இருந்து கால் வந்தது பேசிவிட்டு லைட் அனைத்து விட்டு படுத்தோம்.​
Next page: Chapter 08
Previous page: Chapter 06