Chapter 09
என் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்பு, மாலை அவள் வீட்டில், அவள் அறையில், கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தாள், என்னாச்சுனு கேட்ட மறு நொடி பொறிந்து தள்ளினாள்
“அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"
“என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”
“அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு சொல்ல எந்த சலனமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தும் கடுப்பானாள்
“ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு அவளின் கோவம் மொத்தமும் என் மீது திரும்பியது
“இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள்
----------------------------
அடுத்த நாள் மதியம் எங்க இருக்கேனு கேட்டு ஃபோன் பண்ணினாள், காலையிலேயே பண்ணுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன், நான் காலேஜ் கேண்டீனில் இருப்பதாக சொல்ல, சில நிமிடங்களில் காண்டீனுக்குள் நுழைந்தாள் வேகமாக!, இது நான் எதிர் பக்காதது. கொஞ்சம் தொலைவிலேயே நின்றாள், என்னை முறைத்துக் கொண்டு, நான் சிரித்தவாரே அவள் அருகில் செல்ல, பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியில்,,, சிரிப்பு எங்கோ பறந்து போனது!, வாங்கி அடியில் வந்த கோவத்தில் நான் பேச வாயெடுக்க
“பொருக்கியடா நீ?” என்றவள்
என் கை பற்றி இழுத்தாள், நான் என் கையை உருவிக் கொண்டு முறைக்க, அவளும் முறைத்தாள், வா என்று செய்கை காட்டியவள், என் பதிலுக்கு காத்திராமல், அவள் பாட்டுக்குப் போனால், எப்பொழுதும் போல் நானும் பின் தொடர்ந்தேன். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து எண்ணப் பார்த்தாள், எதுவும் பேசாமல் நானும் வண்டியில் அமர்ந்தேன்.
கொஞ்சம் நேரம் கழித்து,
“சாரி சொல்லு!”னு, அவள் என்னை பார்த்து முறைக்க,
நான் எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சுமேஷ்-யை முறைத்தேன்,
“சாரி சொல்லு!”னு இந்த முறை கொஞ்ச சத்தம் அதிகமாக வந்தது, அவளிடம் இருந்து, நான் திரும்பி மதுவைப் பார்த்து முறைத்தவாரே
“சாரி, ஆனா மறுபடியும் இவளை தேவை இல்லாம தொந்தரவு செஞ்ச,,,, நான் மனுசனவே இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டு, சுமேஷின் வீங்கி இருந்த முகத்தில் லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, விருவிரு அங்கிருந்து நடையை காட்டினேன், திமிராக.
அது திமிர் இல்லை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் என் உடலின் வளர்ச்சி, வொர்கவுட் பண்ணி என் உடலில் ஏற்றி இருந்த உரம், அப்புறம் முக்கியமாக என் பின்புலம், அதை பற்றி எனக்கு உண்டான புரிதல், அது கொடுத்த நம்பிக்கை. எனது அல்லது என் குடும்பத்தின் பின்புலம், பணவலிமையை நான் எப்போது வெளிக் காட்டிக் கொண்டதில்லை யாரிடமும், இருந்தும் எல்லோரிடமும் மறைக்கவும் முடியதல்லவா, அப்படியோ அறிந்து கொண்ட சில நண்பர்கள் வியப்பதுண்டு.
எப்படி, இப்படி ஒரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தின் வாரிசாக இருந்து கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல், ரெம்பவும் எளிமையாக இருக்கிறேன் என்று?, சிலருக்கு அதனாலேயே என் மீது கூடுதல் விருப்பம்!. ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த எளிமைக்கு காரணமே அந்த பின்புலமும், என்னிடம் இருக்கும் பணமும் தான் என்று. இந்த சமூகத்தில் பணம் என்பது அதிகாரத்தை குறிக்கும், உண்மையான அதிகாரம் தன் கையில் இருப்பதை உணர்ந்தவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள், எளிமையாகவே இருப்பார்கள்.
அன்று இரவு ஒன்பது மணி, டிங்னு மெசேஜ் டோன் என் மொபைலில் இருந்து, எனக்கு தெரியும் அவளாத்தான் இருக்கும் என்று, எடுத்துப் பார்க்கவில்லை, பத்து நொடிகளில் அவளிடம் இருந்து கால் வந்தது, எடுக்கவில்லை, இத்தோடு சேர்ந்து 11வது கால், மறுபடியும் டிங்னு மெசேஜ் டோன், எடுத்து பார்த்தால் பக்கம் பக்கமாக ஏதோ அனுப்பியிருந்தாள், படித்துப் பார்க்க மனம் இல்லை. பின்ன என்னதான் நினச்சுக்கிட்டு இருக்கா! இவள சும்மா சும்மா ஒருத்தன் நோண்டுன, நான் ஒண்ணும் செய்யாம பாத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சாளோ! என்கிற கோபம்.
"லீவு மே அலோன்"னு கோவமா ரிப்ளை பண்ண
“சாரி பாப்பா!"
பாப்பா!, என்னை எப்படி வீழத்தமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள், சிறு புன்னகை என் முகத்தில்
“ம்ம்"
“இன்னும் கோவமா?”
“என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது"
“பாப்பா" - என் சிரிப்பின் அளவு பெரிதாகியது
“லூசு"
“சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, அதற்கு மேலும் அவளை கெஞ்ச வைக்க மனம் இல்லாமல் கால் செய்தேன், எடுத்ததும்
“சாரி டா"என்றாள், பாப்பா வெறும் மேஸேஜில் மட்டும் தான்,
“உன் சாரி தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு நான் செல்லமாக கோபித்துக் கொள்ள, சிரித்தவள்
“உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”
“பின்ன பூரிய கேட்டாங்க?”
“நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு சொல்லி அவள் சிரிக்க
“என்ன எதுக்கு அடிச்ச?”
"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”
“எதுக்குனு தெரியாத?”
“நீ என் கால எடுக்க மாட்டேனு தெரிஞ்சு தான், மதியமே ஒண்ணு போட்டேன்"னு நக்கலாக அவள் சொல்ல
“நான் கால் எடுக்க மாட்டேனு உனக்கு எப்படி தெரியும்"
“எனக்குத்தான் இத்தாலில ஜோசியம் தெரியுமே!" சொல்லி அவள் சிரிக்க, நானும் கூட சேர்ந்து சிரித்தேன், பிறகு ஏதேதோ பேசினோம்,
“ஹாப்பி பர்த்டே டா", வாட்ச்சை பார்த்தேன் 12, அவளே தொடர்ந்தாள்
“சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்தாள்.
நான் அப்படியே பெட்டில் படுத்து கண்மூட, ஐந்து நிமிடம் கழித்து, டிங்னு மெசேஜ் டோன், அவள் தான்
“தூங்கிட்டியா?”
“ஆமா"
ஒரு கோப ஸ்மைலி
“பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்"
“அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"
கோப ஸ்மைலி அவளிடம் இருந்து
“அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” - அவள்
“நீ என்ன குடுத்தாலும் ஓகே"
“பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?”
“அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு மெசேஜ் போட்டுட்டு, எனக்குள் சிரிக்க
ஒரு செருப்பு ஸ்மைலி வந்தது, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி
பலத்த யோசனைக்கு பின் கேட்டேன்
“எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகானும்"
ஹார்ட் ஸ்மைலி வந்தது, தொடர்ந்து
“luv u “
“me too”
“காலைல ரெடியா இருக்கு, இப்போ தூங்கு"
----------------------------
அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்
காலையிலேயே அம்மா வந்து என்னை எழுப்பி விட்டு, பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றாள். சிறிது நேரத்தில் தாத்தாவும் ஃபோன் செய்து வாழ்த்து சொல்ல, ஆச்சிகளிடமும் பேசிவிட்டு, பத்து மணிக்குள் பழனிக்கு வருவதாக சொல்லி வைத்து விட்டு, ரெடி ஆகலாம் என்று எத்தனிக்கையில் என் மொபைல் அடித்து, பார்த்தால் பிரதீப், மதுவின் கிளாஸ் மேட். எடுத்து ஹலோ சொல்ல
“ஹாப்பி பர்த்டே ப்ரோ!", “ப்ரோ?", இவன் இப்படி கூப்பிட்டதே இல்லையே என்கிற குழப்பத்தோடு, நான்
“தாங்க்ஸ் ப்ரோ, உங்களுக்கு எப்படி தெரியும்?"னு கேக்க
“பானுதான் சொன்ன, உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு, ரெண்டு பேரும் பழனி போறீங்க,,,உங்க தாத்தா வீட்டுக்குனு" அவன் சொல்ல
“என்ன ப்ரோ, திடீர்னு வாங்க, போங்கனு?” நான் கேக்க
“பதினெட்டு வயசு ஆகிடிச்சு, அடுத்த எலக்ஷன்ல ஓட்டுப் போட போறீங்க, ஒரு வேல அடுத்த எலக்ஷன்ல நின்னா ஓட்டு போடணும்ல" சொல்லி அவன் சிரிக்க, இவன் இப்படி எல்லாம் பேச மாட்டானே, என்னாச்சு இவனுக்கு! குழப்பத்திலேயே,,, நானும் ஒப்புக்கு சிரிக்க
“ஓகே ப்ரோ, ரெம்ப தாங்க்ஸ், தப்பா எடுத்துக்காதீங்க,, நான் கெளம்பனும், ஈவினிங் கூப்பிடுறேன்"னு சொல்லி ஃபோன வைக்க போக
“ப்ரோ,,, ப்ரோ,,,வச்சுரதிங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு அவன் சொல்ல, மறுபடியும் குழம்பியவாரே
“சொல்லுங்க"னு சொல்ல, ஒரு சின்ன அமைதிக்கு பின் பேசினான்
“ப்ரோ, ஒரு ஹெல்ப்!” அதுதானே பாத்தேன், எலி அதுக்கு அம்மணமா ஒடுதுனு புரிய, அவனே தொடர்ந்தான்,
“நான் பானுவ லவ் பண்ணுறேன், அவ என்ட பேசுரத, பழகுறத,,, வச்சு பார்த்த, அவளும் என்ன லவ் பண்ற,,, மாதிரிதான் தோணுது,,, நேரடியா சொல்றதுக்கு ஒரு பயம், உங்ககிட்ட தான் அவ ரெம்ப குளோஸ்,,, இத பத்தி உங்ககிட்ட ஏதாவது சொல்லிறுக்காளா?”னு அவன் கேக்க, அதிர்ச்சியில் எனக்கு பேச்சு வரவில்லை, நான் எதுவும் சொல்லாமல் இருக்க, சிறிது நேர இடைவெளிக்கு பின்,
“ப்ரோ, ப்ரோ, இருக்கீங்களா?”னு அவன் கேக்க
“ எஸ், ப்ரோ, இருக்கேன்"னு நான் அதிரச்சயில் இருந்து மீளாமல் சொல்ல
“ஏதும் சொல்லிருக்காளா,, எண்ணப்பத்தி?, ப்ரோ!” னு மறுபடியும் அவன் கேக்க
“இல்லையே ப்ரோ, இதுவரைக்கும், அந்த மாதிரி எதுவும் சொன்னதில்ல"னு நான் சொல்ல,
“ஓகே, ப்ரோ,,,, விடுங்க”னு கொஞ்சம் ஏமாற்றத்தில் சொன்னவன், சில நொடிகள் கழித்து
“ப்ரோ, ரெண்டு பேரும் இன்னைக்கு தனியா தானே இருப்பீங்க, முடிஞ்ச சும்மா பேசுற மாதிரி அவ யாரையாவது லவ் பண்றாளானு மட்டும் கேட்டு சொல்லுங்களேன், பிளீஸ்"னு
அவன் கெஞ்ச நான் ஓகேனு சொல்ல, அவன் தாங்க்ஸ் சொல்லி ஃபோனை வைத்தான், நான் அப்படியே திரும்பவும் பெட்டில் உட்கார்ந்தேன். என்னதான் நான், சைட் அடித்தாலும், ஒரு பெண்ணை லவ் பண்ண தயாரா இருந்தாலும், அவளும் ஒருவனை லவ் பண்ணலாம், சைட் அடிகக்கலாம், என்பதை பற்றி நான் சிறிதும் சிந்தித்திருக்கவில்லை, சிந்திக்க தயாராகவும் இல்லை, எந்த சகோதரனும் அப்படி சிந்திக்கவும் மாட்டான். எனக்கு பெரும் குழப்பமாகிப் போனது, என்ன செய்வதென்று தெரியவில்லை, அவளுக்கென்று ஒருவன் வந்து விட்டால், அவள் வாழ்க்கையில் நான் யாராக?, என்னவாக இருப்பேன்? எவ்வளவு தொலைவில் இருப்பேன்? என்கிற கேள்விகள் என் மனதைப் போட்டு பிசைந்தன.
அதுவும் பிரதீப் வேறு என்னுடன் பேசும் பொழுது மிகவும் நம்பிக்கையுயன் பேசியது, அந்த கேள்விக்கான விடைகள் மிகவும் குறுகிய காலத்திலேயே கிடைக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்தது. இவ்வாறான சிந்தனைகளில் மூழ்கி இருக்க, என் ஃபோன் அடித்து, மதுதான் அழைத்தாள்
“ஹலோ"
“என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு அவள் சொல்ல, அப்பொழுது தான் நான் இன்னும் குளிக்கக்கூடா இல்லை என்பது நினைவுக்கு வர, எழுந்து பாத்ரூம் ஓடிக்கொண்டே
“15 மினிட்ஸ்"னு நான் சொல்ல
“இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு அவள் கோபத்தோடு கேக்க
“பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவள் ஓகே சொல்ல மாட்டாள்,,,, என்ற தைரியத்தில் சொல்ல
“ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து விடு ஷவரைத் திறந்தேன்.
இருபது நிமிடம் கழித்து, என் விசில் சத்தத்தை கேட்டு,, சிரித்தவாரே என்னைப் பார்த்து திரும்பினாள்
திரும்பியவளின் முகத்தில் இருந்து அந்த சிரிப்பு மறைந்து, கோபம் குடி கொண்டது,
“உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, வாயில் இட்லியோடு என்னை கேக்க,
அவள் தலையில் தட்டிவிட்டு, நானும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன், ஏற்கனவே என் அம்மாவுடன் உட்கார்ந்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் இட்லியோடு தட்டு வர, நான் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மதுவைப் பார்க்க, அவள் இன்னும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு பெரும் மூச்சுடன் நான், அவளை பார்த்து
“பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, அவள் அதை ஏறப்பதாக இல்லை,
“ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, ஆசிங்கமாயிரும்!”னு
அழுவதைப் போல சொல்ல, லேசாக சிரித்துக் கொண்டே சாப்பிட ஆராம்பித்தாள், ஆனால் இன்னும் விரைப்பாகவே. இருவரும் சாப்பிட்டு விட்டு, அம்மாவிடம் பாய் சொல்லிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தோம். அவளின் காரை நோக்கி செல்லும் போது
“இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, சிரித்தாள், ஆனால் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை,
“உன் சரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி அவளைக் கிள்ள, முறைத்தவள்
“செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொன்னாள்,
மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, கார் பழனி நோக்கி விரைந்தது. பிரதீப் சொன்னது நினைவுக்கு வர, எப்படி இருந்தாலும்,, மது யாரையாவது கல்யாணம் செய்தாகனும், அரசியல்வாதி பையனாக இருந்தாலும், பிரதீப் நல்லவன் தான், டாக்டர் ஆக போகிறவான், அவன் சொல்வதைப் பார்த்தால், இவளுக்கும் அவனைப் பிடித்திருக்கும் போல. யாரை கல்யாணம் செய்தாலும், எனக்கான, என்மீதான உரிமையையும், அன்பையும் இவள் குறைத்துக் கொள்ள, விட்டுக் கொடுக்க மாட்டாள். பிரதீப்க்காக நானே தூது போனால் அவனுக்கும் என் மீது ஒரு பிடிப்பும், பாசமும் இருக்கும், என்பது போன்ற பல வாரன எண்ணங்களில் முழக்கியிருக்க,
“என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு கேட்டு என் எண்ண ஓட்டத்தை கலைத்தாள், அப்பொழுதுதான் கவனித்தேன், வண்டி பொள்ளாச்சி சாலையில் பறந்து கொண்டிருந்தது.
“நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு நான் பதில் கேள்வி கேட்க
“மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”அவள் திருப்பி அடிக்க
“நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு சொல்ல, என்ன சம்பந்தம் இல்லாம பேசுறான் ஒரு பார்வைப் பார்த்தவள்,
“என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டாள், நான் முக்குடைந்ததில் அமைதியாக இருக்க
“என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு சீண்ட
“நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, செல்லமாக என்னை அடித்தவள்
“நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னா? டாமினேஷன்னா?”
“நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு நான் அலுத்துக்கொள்ள, ஒரு கையால் கார் ஒட்டிக் கொண்டு, மற்றொரு கையை என் தோள்களில் வைத்துக் கொண்டு
“விடு, ஒரு பொண்ணோட இன்ட்ரோ குடுக்கிறேன்னு சொன்னேன்ல, முடிஞ்ச இன்னைக்கு திரும்பி வந்ததும், அவள டின்னர்க் கூப்பிடலாம்"னு சொல்ல நான் கொஞ்சம் ஆர்வமாகி
“என்ன திடீர்னு?”
“இல்ல, நீ வேற ரெம்ப பீல் பண்ணுறே,, அதான்!”னு அவள் சொல்ல, ஒரு ஆர்வத்துல
“யாரு?, எப்படி இருப்பா?, நல்ல பொண்ணா?, நான் பாத்திருக்கேனா?”னு நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, தோள்களில் இருந்த கைகளால், என் தலையில் அடித்து
“ச்சீ,,,,அலையாத,,,விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்திருவ போல!”னு கிண்டலாக சிரிக்க, நான் அசடு வழிந்தேன்
“ரெம்ப வழியுது,,, தொடச்சுக்கோ!” என்றால் மறுபடியும் கிண்டலாக, மனசுல இவள் சொல்பவளைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை இருந்தாலும், இவள் மூக்குடைப்புகளுக்கு ஆளாக வேண்டாமென்று, கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
“அவளும் உன்னோட இன்ட்ரோ கேட்டு,, என்ன ரெம்ப நாளா நச்சரிக்குறா!!!”னு அவள் மறுபடியும் சீண்ட, கொறளி வித்த காட்டி வாய புடுங்குறா, இவள நம்பி வாய குடுத்தனா, மறுபடியும் முக்குடைப்பா,,,, நம்பாதே!, மூடிக்கிட்டு இருனு! எனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியா இருந்தேன்.
“ஓய்"னு மறுபடியும் அவள் சீண்ட, அவளைப் பார்த்து முறைத்தேன்
“என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு அவள் எகிற
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு அவளைப் பார்த்து சொல்லி, நான் கை எடுத்து கும்பிட, சிரித்தவள்
“அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவள் கேக்க
“தெரிஞ்ச சரி!”னு அவளுக்கு கேட்கும் படியாகவே முனங்கினேன்
“சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", அவள் கொஞ்ச, சிரித்துக் கொண்டே
“உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு நான் சந்தேகத்துடன் கேக்க
“இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு அவள் சிரித்தவாரே கூற, நான் அமைதியானேன்
"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு அவள் மறுபடியும் சொல்ல,
“அவ பேரு என்ன?”னு அடக்க முடியாத ஆர்வத்தில் நான் கேக்க
“இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல
“ஆமா, பேசம இருந்தவன, பேச சொல்லி தூண்டுவா, அப்புறம் பேசுனா, மூடிக்கிட்டு இருக்க சொல்லுவா!”னு நான் வாயிக்குள் முணுமுணுக்க
“என்ன?”அதிகாரத்துல கேக்க
“நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு கடுப்பாக சொல்ல, வாய்விட்டு சிரித்தாள், நான் கார் ஆடியோ வால்யூம் கூட்டி பாட்டு கேக்க ஆரம்பித்தேன்.
------------------------------------
இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் பழனி கோவிலில் இருந்தோம். ஆச்சிகளிடமும், தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அவள் சொன்னபடி வேஷ்டியை கட்டியவுடன், கோவிலுக்கு கிளம்பிவிட்டோம். தாத்தா தேவஸ்தான போர்ட் மெம்பர் என்பதால் நேரக உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அர்ச்சனை செய்யும் போது ஆச்சி என் பெயரை சொல்ல, தாத்தா மது பெயரையும் சேர்த்து சொல்ல, இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் என்று மது சொல்ல, தாங்கள் வரவில்லை என்றும், எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லிவிட்டு அங்கே அமர்ந்து கொண்டார்கள்.
நாங்களும் கோவிலை சுற்ற ஆரம்பித்தோம்,
“மது, ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு நான் கேக்க, கேள்வியுடன் என்னைப் பார்த்தாள்
“நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு நான் பட்டுனு, பிரதீப் சொன்னதை நேரம் பார்த்து கேக்க,
“என்ன திடீர்னு, இந்த கேள்வி?”னு அவள் முகத்தில் சலானமில்லாமல் கேட்க, அவளிடம் கோபத்தை எதிர்பார்த்த நான், கோபமில்லாத எதிர் கேள்வியை எதிர் பார்க்கவில்லை,
“இல்ல, இன்னைக்கு திடீர்னு பட்டுசாரீலாம் கட்டிருக்க, அதுதான், சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்ப
“நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்க, நீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு அவள் கேட்க்க
“ஆமா"
“உண்மையாவா?, யாரு?”னு அவள் அவலுடன் கேக்க, நான் சிரித்துக் கொண்டே
“ஜினாலி ஜெய்ன், என் மைதா மாவு"னு நான் அவளப் பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டு, சிக்கிறாதட செவளனு! மனசுக்குள்ள சொல்லுக்கிட்டு ஓட
“பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே தூரத்தினாள்.
------------------------------------------
“அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"
“என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”
“அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு சொல்ல எந்த சலனமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தும் கடுப்பானாள்
“ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு அவளின் கோவம் மொத்தமும் என் மீது திரும்பியது
“இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள்
----------------------------
அடுத்த நாள் மதியம் எங்க இருக்கேனு கேட்டு ஃபோன் பண்ணினாள், காலையிலேயே பண்ணுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன், நான் காலேஜ் கேண்டீனில் இருப்பதாக சொல்ல, சில நிமிடங்களில் காண்டீனுக்குள் நுழைந்தாள் வேகமாக!, இது நான் எதிர் பக்காதது. கொஞ்சம் தொலைவிலேயே நின்றாள், என்னை முறைத்துக் கொண்டு, நான் சிரித்தவாரே அவள் அருகில் செல்ல, பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியில்,,, சிரிப்பு எங்கோ பறந்து போனது!, வாங்கி அடியில் வந்த கோவத்தில் நான் பேச வாயெடுக்க
“பொருக்கியடா நீ?” என்றவள்
என் கை பற்றி இழுத்தாள், நான் என் கையை உருவிக் கொண்டு முறைக்க, அவளும் முறைத்தாள், வா என்று செய்கை காட்டியவள், என் பதிலுக்கு காத்திராமல், அவள் பாட்டுக்குப் போனால், எப்பொழுதும் போல் நானும் பின் தொடர்ந்தேன். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து எண்ணப் பார்த்தாள், எதுவும் பேசாமல் நானும் வண்டியில் அமர்ந்தேன்.
கொஞ்சம் நேரம் கழித்து,
“சாரி சொல்லு!”னு, அவள் என்னை பார்த்து முறைக்க,
நான் எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சுமேஷ்-யை முறைத்தேன்,
“சாரி சொல்லு!”னு இந்த முறை கொஞ்ச சத்தம் அதிகமாக வந்தது, அவளிடம் இருந்து, நான் திரும்பி மதுவைப் பார்த்து முறைத்தவாரே
“சாரி, ஆனா மறுபடியும் இவளை தேவை இல்லாம தொந்தரவு செஞ்ச,,,, நான் மனுசனவே இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டு, சுமேஷின் வீங்கி இருந்த முகத்தில் லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, விருவிரு அங்கிருந்து நடையை காட்டினேன், திமிராக.
அது திமிர் இல்லை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் என் உடலின் வளர்ச்சி, வொர்கவுட் பண்ணி என் உடலில் ஏற்றி இருந்த உரம், அப்புறம் முக்கியமாக என் பின்புலம், அதை பற்றி எனக்கு உண்டான புரிதல், அது கொடுத்த நம்பிக்கை. எனது அல்லது என் குடும்பத்தின் பின்புலம், பணவலிமையை நான் எப்போது வெளிக் காட்டிக் கொண்டதில்லை யாரிடமும், இருந்தும் எல்லோரிடமும் மறைக்கவும் முடியதல்லவா, அப்படியோ அறிந்து கொண்ட சில நண்பர்கள் வியப்பதுண்டு.
எப்படி, இப்படி ஒரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தின் வாரிசாக இருந்து கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல், ரெம்பவும் எளிமையாக இருக்கிறேன் என்று?, சிலருக்கு அதனாலேயே என் மீது கூடுதல் விருப்பம்!. ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த எளிமைக்கு காரணமே அந்த பின்புலமும், என்னிடம் இருக்கும் பணமும் தான் என்று. இந்த சமூகத்தில் பணம் என்பது அதிகாரத்தை குறிக்கும், உண்மையான அதிகாரம் தன் கையில் இருப்பதை உணர்ந்தவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள், எளிமையாகவே இருப்பார்கள்.
அன்று இரவு ஒன்பது மணி, டிங்னு மெசேஜ் டோன் என் மொபைலில் இருந்து, எனக்கு தெரியும் அவளாத்தான் இருக்கும் என்று, எடுத்துப் பார்க்கவில்லை, பத்து நொடிகளில் அவளிடம் இருந்து கால் வந்தது, எடுக்கவில்லை, இத்தோடு சேர்ந்து 11வது கால், மறுபடியும் டிங்னு மெசேஜ் டோன், எடுத்து பார்த்தால் பக்கம் பக்கமாக ஏதோ அனுப்பியிருந்தாள், படித்துப் பார்க்க மனம் இல்லை. பின்ன என்னதான் நினச்சுக்கிட்டு இருக்கா! இவள சும்மா சும்மா ஒருத்தன் நோண்டுன, நான் ஒண்ணும் செய்யாம பாத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சாளோ! என்கிற கோபம்.
"லீவு மே அலோன்"னு கோவமா ரிப்ளை பண்ண
“சாரி பாப்பா!"
பாப்பா!, என்னை எப்படி வீழத்தமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள், சிறு புன்னகை என் முகத்தில்
“ம்ம்"
“இன்னும் கோவமா?”
“என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது"
“பாப்பா" - என் சிரிப்பின் அளவு பெரிதாகியது
“லூசு"
“சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, அதற்கு மேலும் அவளை கெஞ்ச வைக்க மனம் இல்லாமல் கால் செய்தேன், எடுத்ததும்
“சாரி டா"என்றாள், பாப்பா வெறும் மேஸேஜில் மட்டும் தான்,
“உன் சாரி தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு நான் செல்லமாக கோபித்துக் கொள்ள, சிரித்தவள்
“உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”
“பின்ன பூரிய கேட்டாங்க?”
“நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு சொல்லி அவள் சிரிக்க
“என்ன எதுக்கு அடிச்ச?”
"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”
“எதுக்குனு தெரியாத?”
“நீ என் கால எடுக்க மாட்டேனு தெரிஞ்சு தான், மதியமே ஒண்ணு போட்டேன்"னு நக்கலாக அவள் சொல்ல
“நான் கால் எடுக்க மாட்டேனு உனக்கு எப்படி தெரியும்"
“எனக்குத்தான் இத்தாலில ஜோசியம் தெரியுமே!" சொல்லி அவள் சிரிக்க, நானும் கூட சேர்ந்து சிரித்தேன், பிறகு ஏதேதோ பேசினோம்,
“ஹாப்பி பர்த்டே டா", வாட்ச்சை பார்த்தேன் 12, அவளே தொடர்ந்தாள்
“சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்தாள்.
நான் அப்படியே பெட்டில் படுத்து கண்மூட, ஐந்து நிமிடம் கழித்து, டிங்னு மெசேஜ் டோன், அவள் தான்
“தூங்கிட்டியா?”
“ஆமா"
ஒரு கோப ஸ்மைலி
“பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்"
“அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"
கோப ஸ்மைலி அவளிடம் இருந்து
“அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” - அவள்
“நீ என்ன குடுத்தாலும் ஓகே"
“பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?”
“அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு மெசேஜ் போட்டுட்டு, எனக்குள் சிரிக்க
ஒரு செருப்பு ஸ்மைலி வந்தது, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி
பலத்த யோசனைக்கு பின் கேட்டேன்
“எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகானும்"
ஹார்ட் ஸ்மைலி வந்தது, தொடர்ந்து
“luv u “
“me too”
“காலைல ரெடியா இருக்கு, இப்போ தூங்கு"
----------------------------
அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்
காலையிலேயே அம்மா வந்து என்னை எழுப்பி விட்டு, பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றாள். சிறிது நேரத்தில் தாத்தாவும் ஃபோன் செய்து வாழ்த்து சொல்ல, ஆச்சிகளிடமும் பேசிவிட்டு, பத்து மணிக்குள் பழனிக்கு வருவதாக சொல்லி வைத்து விட்டு, ரெடி ஆகலாம் என்று எத்தனிக்கையில் என் மொபைல் அடித்து, பார்த்தால் பிரதீப், மதுவின் கிளாஸ் மேட். எடுத்து ஹலோ சொல்ல
“ஹாப்பி பர்த்டே ப்ரோ!", “ப்ரோ?", இவன் இப்படி கூப்பிட்டதே இல்லையே என்கிற குழப்பத்தோடு, நான்
“தாங்க்ஸ் ப்ரோ, உங்களுக்கு எப்படி தெரியும்?"னு கேக்க
“பானுதான் சொன்ன, உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு, ரெண்டு பேரும் பழனி போறீங்க,,,உங்க தாத்தா வீட்டுக்குனு" அவன் சொல்ல
“என்ன ப்ரோ, திடீர்னு வாங்க, போங்கனு?” நான் கேக்க
“பதினெட்டு வயசு ஆகிடிச்சு, அடுத்த எலக்ஷன்ல ஓட்டுப் போட போறீங்க, ஒரு வேல அடுத்த எலக்ஷன்ல நின்னா ஓட்டு போடணும்ல" சொல்லி அவன் சிரிக்க, இவன் இப்படி எல்லாம் பேச மாட்டானே, என்னாச்சு இவனுக்கு! குழப்பத்திலேயே,,, நானும் ஒப்புக்கு சிரிக்க
“ஓகே ப்ரோ, ரெம்ப தாங்க்ஸ், தப்பா எடுத்துக்காதீங்க,, நான் கெளம்பனும், ஈவினிங் கூப்பிடுறேன்"னு சொல்லி ஃபோன வைக்க போக
“ப்ரோ,,, ப்ரோ,,,வச்சுரதிங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு அவன் சொல்ல, மறுபடியும் குழம்பியவாரே
“சொல்லுங்க"னு சொல்ல, ஒரு சின்ன அமைதிக்கு பின் பேசினான்
“ப்ரோ, ஒரு ஹெல்ப்!” அதுதானே பாத்தேன், எலி அதுக்கு அம்மணமா ஒடுதுனு புரிய, அவனே தொடர்ந்தான்,
“நான் பானுவ லவ் பண்ணுறேன், அவ என்ட பேசுரத, பழகுறத,,, வச்சு பார்த்த, அவளும் என்ன லவ் பண்ற,,, மாதிரிதான் தோணுது,,, நேரடியா சொல்றதுக்கு ஒரு பயம், உங்ககிட்ட தான் அவ ரெம்ப குளோஸ்,,, இத பத்தி உங்ககிட்ட ஏதாவது சொல்லிறுக்காளா?”னு அவன் கேக்க, அதிர்ச்சியில் எனக்கு பேச்சு வரவில்லை, நான் எதுவும் சொல்லாமல் இருக்க, சிறிது நேர இடைவெளிக்கு பின்,
“ப்ரோ, ப்ரோ, இருக்கீங்களா?”னு அவன் கேக்க
“ எஸ், ப்ரோ, இருக்கேன்"னு நான் அதிரச்சயில் இருந்து மீளாமல் சொல்ல
“ஏதும் சொல்லிருக்காளா,, எண்ணப்பத்தி?, ப்ரோ!” னு மறுபடியும் அவன் கேக்க
“இல்லையே ப்ரோ, இதுவரைக்கும், அந்த மாதிரி எதுவும் சொன்னதில்ல"னு நான் சொல்ல,
“ஓகே, ப்ரோ,,,, விடுங்க”னு கொஞ்சம் ஏமாற்றத்தில் சொன்னவன், சில நொடிகள் கழித்து
“ப்ரோ, ரெண்டு பேரும் இன்னைக்கு தனியா தானே இருப்பீங்க, முடிஞ்ச சும்மா பேசுற மாதிரி அவ யாரையாவது லவ் பண்றாளானு மட்டும் கேட்டு சொல்லுங்களேன், பிளீஸ்"னு
அவன் கெஞ்ச நான் ஓகேனு சொல்ல, அவன் தாங்க்ஸ் சொல்லி ஃபோனை வைத்தான், நான் அப்படியே திரும்பவும் பெட்டில் உட்கார்ந்தேன். என்னதான் நான், சைட் அடித்தாலும், ஒரு பெண்ணை லவ் பண்ண தயாரா இருந்தாலும், அவளும் ஒருவனை லவ் பண்ணலாம், சைட் அடிகக்கலாம், என்பதை பற்றி நான் சிறிதும் சிந்தித்திருக்கவில்லை, சிந்திக்க தயாராகவும் இல்லை, எந்த சகோதரனும் அப்படி சிந்திக்கவும் மாட்டான். எனக்கு பெரும் குழப்பமாகிப் போனது, என்ன செய்வதென்று தெரியவில்லை, அவளுக்கென்று ஒருவன் வந்து விட்டால், அவள் வாழ்க்கையில் நான் யாராக?, என்னவாக இருப்பேன்? எவ்வளவு தொலைவில் இருப்பேன்? என்கிற கேள்விகள் என் மனதைப் போட்டு பிசைந்தன.
அதுவும் பிரதீப் வேறு என்னுடன் பேசும் பொழுது மிகவும் நம்பிக்கையுயன் பேசியது, அந்த கேள்விக்கான விடைகள் மிகவும் குறுகிய காலத்திலேயே கிடைக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்தது. இவ்வாறான சிந்தனைகளில் மூழ்கி இருக்க, என் ஃபோன் அடித்து, மதுதான் அழைத்தாள்
“ஹலோ"
“என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு அவள் சொல்ல, அப்பொழுது தான் நான் இன்னும் குளிக்கக்கூடா இல்லை என்பது நினைவுக்கு வர, எழுந்து பாத்ரூம் ஓடிக்கொண்டே
“15 மினிட்ஸ்"னு நான் சொல்ல
“இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு அவள் கோபத்தோடு கேக்க
“பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவள் ஓகே சொல்ல மாட்டாள்,,,, என்ற தைரியத்தில் சொல்ல
“ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து விடு ஷவரைத் திறந்தேன்.
இருபது நிமிடம் கழித்து, என் விசில் சத்தத்தை கேட்டு,, சிரித்தவாரே என்னைப் பார்த்து திரும்பினாள்
திரும்பியவளின் முகத்தில் இருந்து அந்த சிரிப்பு மறைந்து, கோபம் குடி கொண்டது,
“உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, வாயில் இட்லியோடு என்னை கேக்க,
அவள் தலையில் தட்டிவிட்டு, நானும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன், ஏற்கனவே என் அம்மாவுடன் உட்கார்ந்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் இட்லியோடு தட்டு வர, நான் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மதுவைப் பார்க்க, அவள் இன்னும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு பெரும் மூச்சுடன் நான், அவளை பார்த்து
“பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, அவள் அதை ஏறப்பதாக இல்லை,
“ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, ஆசிங்கமாயிரும்!”னு
அழுவதைப் போல சொல்ல, லேசாக சிரித்துக் கொண்டே சாப்பிட ஆராம்பித்தாள், ஆனால் இன்னும் விரைப்பாகவே. இருவரும் சாப்பிட்டு விட்டு, அம்மாவிடம் பாய் சொல்லிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தோம். அவளின் காரை நோக்கி செல்லும் போது
“இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, சிரித்தாள், ஆனால் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை,
“உன் சரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி அவளைக் கிள்ள, முறைத்தவள்
“செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொன்னாள்,
மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, கார் பழனி நோக்கி விரைந்தது. பிரதீப் சொன்னது நினைவுக்கு வர, எப்படி இருந்தாலும்,, மது யாரையாவது கல்யாணம் செய்தாகனும், அரசியல்வாதி பையனாக இருந்தாலும், பிரதீப் நல்லவன் தான், டாக்டர் ஆக போகிறவான், அவன் சொல்வதைப் பார்த்தால், இவளுக்கும் அவனைப் பிடித்திருக்கும் போல. யாரை கல்யாணம் செய்தாலும், எனக்கான, என்மீதான உரிமையையும், அன்பையும் இவள் குறைத்துக் கொள்ள, விட்டுக் கொடுக்க மாட்டாள். பிரதீப்க்காக நானே தூது போனால் அவனுக்கும் என் மீது ஒரு பிடிப்பும், பாசமும் இருக்கும், என்பது போன்ற பல வாரன எண்ணங்களில் முழக்கியிருக்க,
“என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு கேட்டு என் எண்ண ஓட்டத்தை கலைத்தாள், அப்பொழுதுதான் கவனித்தேன், வண்டி பொள்ளாச்சி சாலையில் பறந்து கொண்டிருந்தது.
“நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு நான் பதில் கேள்வி கேட்க
“மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”அவள் திருப்பி அடிக்க
“நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு சொல்ல, என்ன சம்பந்தம் இல்லாம பேசுறான் ஒரு பார்வைப் பார்த்தவள்,
“என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டாள், நான் முக்குடைந்ததில் அமைதியாக இருக்க
“என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு சீண்ட
“நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, செல்லமாக என்னை அடித்தவள்
“நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னா? டாமினேஷன்னா?”
“நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு நான் அலுத்துக்கொள்ள, ஒரு கையால் கார் ஒட்டிக் கொண்டு, மற்றொரு கையை என் தோள்களில் வைத்துக் கொண்டு
“விடு, ஒரு பொண்ணோட இன்ட்ரோ குடுக்கிறேன்னு சொன்னேன்ல, முடிஞ்ச இன்னைக்கு திரும்பி வந்ததும், அவள டின்னர்க் கூப்பிடலாம்"னு சொல்ல நான் கொஞ்சம் ஆர்வமாகி
“என்ன திடீர்னு?”
“இல்ல, நீ வேற ரெம்ப பீல் பண்ணுறே,, அதான்!”னு அவள் சொல்ல, ஒரு ஆர்வத்துல
“யாரு?, எப்படி இருப்பா?, நல்ல பொண்ணா?, நான் பாத்திருக்கேனா?”னு நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, தோள்களில் இருந்த கைகளால், என் தலையில் அடித்து
“ச்சீ,,,,அலையாத,,,விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்திருவ போல!”னு கிண்டலாக சிரிக்க, நான் அசடு வழிந்தேன்
“ரெம்ப வழியுது,,, தொடச்சுக்கோ!” என்றால் மறுபடியும் கிண்டலாக, மனசுல இவள் சொல்பவளைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை இருந்தாலும், இவள் மூக்குடைப்புகளுக்கு ஆளாக வேண்டாமென்று, கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
“அவளும் உன்னோட இன்ட்ரோ கேட்டு,, என்ன ரெம்ப நாளா நச்சரிக்குறா!!!”னு அவள் மறுபடியும் சீண்ட, கொறளி வித்த காட்டி வாய புடுங்குறா, இவள நம்பி வாய குடுத்தனா, மறுபடியும் முக்குடைப்பா,,,, நம்பாதே!, மூடிக்கிட்டு இருனு! எனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியா இருந்தேன்.
“ஓய்"னு மறுபடியும் அவள் சீண்ட, அவளைப் பார்த்து முறைத்தேன்
“என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு அவள் எகிற
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு அவளைப் பார்த்து சொல்லி, நான் கை எடுத்து கும்பிட, சிரித்தவள்
“அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவள் கேக்க
“தெரிஞ்ச சரி!”னு அவளுக்கு கேட்கும் படியாகவே முனங்கினேன்
“சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", அவள் கொஞ்ச, சிரித்துக் கொண்டே
“உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு நான் சந்தேகத்துடன் கேக்க
“இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு அவள் சிரித்தவாரே கூற, நான் அமைதியானேன்
"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு அவள் மறுபடியும் சொல்ல,
“அவ பேரு என்ன?”னு அடக்க முடியாத ஆர்வத்தில் நான் கேக்க
“இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல
“ஆமா, பேசம இருந்தவன, பேச சொல்லி தூண்டுவா, அப்புறம் பேசுனா, மூடிக்கிட்டு இருக்க சொல்லுவா!”னு நான் வாயிக்குள் முணுமுணுக்க
“என்ன?”அதிகாரத்துல கேக்க
“நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு கடுப்பாக சொல்ல, வாய்விட்டு சிரித்தாள், நான் கார் ஆடியோ வால்யூம் கூட்டி பாட்டு கேக்க ஆரம்பித்தேன்.
------------------------------------
இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் பழனி கோவிலில் இருந்தோம். ஆச்சிகளிடமும், தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அவள் சொன்னபடி வேஷ்டியை கட்டியவுடன், கோவிலுக்கு கிளம்பிவிட்டோம். தாத்தா தேவஸ்தான போர்ட் மெம்பர் என்பதால் நேரக உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அர்ச்சனை செய்யும் போது ஆச்சி என் பெயரை சொல்ல, தாத்தா மது பெயரையும் சேர்த்து சொல்ல, இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் என்று மது சொல்ல, தாங்கள் வரவில்லை என்றும், எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லிவிட்டு அங்கே அமர்ந்து கொண்டார்கள்.
நாங்களும் கோவிலை சுற்ற ஆரம்பித்தோம்,
“மது, ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு நான் கேக்க, கேள்வியுடன் என்னைப் பார்த்தாள்
“நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு நான் பட்டுனு, பிரதீப் சொன்னதை நேரம் பார்த்து கேக்க,
“என்ன திடீர்னு, இந்த கேள்வி?”னு அவள் முகத்தில் சலானமில்லாமல் கேட்க, அவளிடம் கோபத்தை எதிர்பார்த்த நான், கோபமில்லாத எதிர் கேள்வியை எதிர் பார்க்கவில்லை,
“இல்ல, இன்னைக்கு திடீர்னு பட்டுசாரீலாம் கட்டிருக்க, அதுதான், சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்ப
“நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்க, நீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு அவள் கேட்க்க
“ஆமா"
“உண்மையாவா?, யாரு?”னு அவள் அவலுடன் கேக்க, நான் சிரித்துக் கொண்டே
“ஜினாலி ஜெய்ன், என் மைதா மாவு"னு நான் அவளப் பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டு, சிக்கிறாதட செவளனு! மனசுக்குள்ள சொல்லுக்கிட்டு ஓட
“பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே தூரத்தினாள்.
------------------------------------------