Chapter 26

பத்து நிமிடத்தி திரும்பி வருகிறேன் என்று சென்றவன், இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி அறைக்கு வந்தேன்.

கோச்சின் அறைக்கு சென்றதும், "சின்னதா செலிபரேட் பண்ணலாம்!! அப்படியே லஞ்சும் சாப்பிட்டு விடலாம்!!” என்று கூறி மொத்த டீமும், கீழ் தளத்தில் இருந்த ரெஸ்டாரன்ட் சென்றோம். ஒரு கேக் ஆர்டர் செய்து, எனது வெற்றியை கொண்டாடி விட்டு, அப்படியே மதிய உணவையும் சாப்பிட்டோம். என் எதிர்கால திட்டம், நான் அன்று ஆடிய ஆட்டத்தைப் பற்றிய விமர்சனம், பாராட்டு என விவாதத்துக்கு இடையே மதிய உணவை உண்டு முடித்தோம். அப்பொழுது நான் உடனே கிளம்புவதை அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பும் போது, கண்டிப்பாக சாப்பிட்டு மது இருக்க மாட்டாள் என்று தோன்றியது. அவளுக்கும் ஒரு பிரியாணி பார்சல் செய்து வாங்கிக் கொண்டேன்.

நான் கதவைத் திறந்தது கூட உணறாமல் தூங்கிக்கொண்டு இருந்தாள் மது. தூக்கத்திலும் கவலையின் ரேகைகள் அவளது முகத்தில். உணர்வுகளை மட்டுப்படுத்தும் வலிமை கண்ணீருக்கு எவ்வளவு உண்டோ, அதே போல உணவிற்கும் உண்டு என்று நினைக்கிறேன். சாப்பிட்ட சாப்பாடும், அங்கு நடந்த விவாதங்கள் இடையே, பின் மண்டையில், இவள் இங்கு காலையிலேயே வந்து இருக்க வேண்டும் என்றால், எப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி இருக்க வேண்டும், எனக்காக எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கிறாள், என்றெல்லாம் என் எண்ணங்களில் ஓட, என் கோபம் எல்லாம் கரைந்து விட்டிருந்தது. குழந்தையைப் போல தூங்கும் அவள் முகத்தைப் பார்த்ததும் கொள்ளை கொள்ளையாய் இவள் மீது நான் கொண்ட காதல் என் சிந்தையையும், இதயத்தையும் நிரப்ப, ஆசையாய் அவள் முகம் பார்த்தேன்.

மொபைலை எடுத்து கோயம்புத்தூர் செல்வதற்காக டிக்கெட் புக் செய்தேன். சென்னையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக, இங்க இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் என்று தனித்தனியாக இரண்டு டிக்கெட் புக் செய்தேன். எனது உடைமைகளை பேக் செய்தேன். எதையும் மறந்து விட்டுவிடவில்லை என்று உறுதி செய்து கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த மதுவை எழுப்பினேன். எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவள், என் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்ததும், அவள் முகம் மீண்டும் கெஞ்சும் பாவனைக்கு மாறியது.

"ரீபிரேஷ் பண்ணிட்டு வா!!.. கிளம்பலாம்!!” என்று முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் சொல்ல, மீண்டும் என கெஞ்சுவது போல் பார்த்தவள், நான் அசையாது இருக்கவே, எழுந்து பாத்ரூம் சென்றாள்.

ஒரு சின்ன குறுஞ்சிரிப்பு என் முகமெல்லாம் படர்ந்திருக்க, சொல்ல முடியாத உற்சாகத்துடன், மனது ஒரு துள்ளலான மனோபாவத்தில் இருந்தது. எப்பொழுதும் அவளதும் முறைப்புக்கு கட்டுப்பட்டு, நான் பம்மிக்கொண்டு, அவளைக் கெஞ்சிக் கொண்டு, அவள் மிஞ்சிக்கொண்டு இருந்துதான் பழக்கம். எப்போதுதாவது தான் அவள் கெஞ்சுவதும் நான் மிஞ்சுவதும் நடக்கும். கடைசியாக "அக்கா" என்று அழைக்க வேண்டாம் அவள் கெஞ்சியதாக நினைவு. அந்த சமயங்களில் எல்லாம் இவளை என் போக்குக்கு ஆடவைத்து எவ்வளவோ மகிழ்ந்திருக்கிறேன். நான் ஆட்டி வைக்கும் படி எல்லாம் ஆடி இருக்கிறாள்.

"லவ்" பண்ணுவதற்கு முன்னாடி கூட அவ்வப்போது இவளிடம் கோபப்பட்டு இருக்கிறேன். எனக்கு லவ் சொன்னாளோ, அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இவள் வைப்பதுதான் சட்டம் என்று ஆகிப்போனது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் என்னிடம் இப்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். இப்படிப்பட்ட வாய்ப்பை, அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க என் மனது தயாராக இல்லை. கோவை போகும் வரைக்கும், இவளை என் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று மனதில் ஒரு திட்டத்தை வகுத்தேன். அந்தத் திட்டத்தின் முதல் படியாக, மீண்டும் மொபைலை எடுத்து ஆன்லைன் செக்கிங் செய்தேன். முகம் கழுவி விட்டு திரும்பி வந்தாள்,

"வேற டிரஸ் மாத்திக்கோ?” என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை, திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லிவிட்டு, வாங்கி வந்த பிரியாணியை, அங்கு இருந்த தட்டில் எடுத்து வைத்தேன்.

"பரவா இல்ல!! இதுவே இருக்கட்டும்!!” என்றாள் அடிக்குரலில், புதிதாக இருந்தது எனக்கு. அவள் அறியாமல், சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டேன்.

"சாப்பிடு!!” காபி டேபிலில், இருந்த பிரியாணியை தட்டை காட்டினேன். அவள் எதுவும் சொல்லாமல், என்னையே பார்த்துக் கொண்டு இருக்க, அவளை இழுத்துக்கொண்டு வந்து சேரில் அமர வைத்து அவளுக்கு ஊட்ட, அவள் வாய் திறக்காமல், என்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காலையில சாப்பிட்டியா?”

".…" இல்லை, என்று தலையாட்டினாள். அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு, தலையாட்டும் மதுவைப் பார்த்த எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு

"ஒழுங்கா சாப்பிடு!!.. டைம் இல்ல!!.. கிளம்பனும்!!” என்று என் குரலை உயர்த்த, வாயை திறந்தாள். அடிக்கு பயந்து சாப்பிடு பிள்ளை போல் அவள் சாப்பிட, "சீக்கிரமா முழுங்கு!!, வேகமா சாப்பிடு!!, வாயைத் திற!!, மெதுவா சாப்பிடு!! நல்ல மென்னு சாப்பிடு!!” என்று ஆயிரம் அறிவுரை சொல்லி, பலவாறு மிரட்டி தட்டிலிருந்த பிரியாணியை அவளுக்கு ஊட்டி முடித்துவிட்டு விட்டு, கிளம்ப எத்தணிக்கையில், என் கையை பிடித்தாள்.

“போலாம்!! இப்போ கிளம்பினாத்தான் ஃப்ளைட் புடிக்க முடியும்!!” என்று கையை உதறிக்கொண்டு கத்த,

பட்டென கலங்கிய கணங்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. பாத்திரத்தில் ஒன்றி கொஞ்சம் அதிகமாக போய்விட்டோமோ என்று தோன்ற, என் ஷோல்டர் பேக்கில் இருந்த மெடலை எடுத்து அவள் கழுத்தில் போட்டு, அவளை அணைத்தேன். பின் அவள் நெற்றியில் முத்தமிட, சிறு புன்முறுவலுடன் என்னைப் நிமிர்ந்து பார்த்தவளிடம்

“இன்னும் கோபமாத்தான் இருக்கேன்!!” என்று முறைத்துவிட்டு, பைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, என்னை பின் தொடர்ந்தாள்.

********

ஃப்ளைட்டில் சீட் பெல்ட் அணிந்து கொள்ள சொல்லி அறிவிப்பு வரவே, என் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டேன். அப்போது என் மொபைல் அடிக்கவே, எடுத்துப் பார்த்தால், நான் நினைத்ததைப் போலவே மதுதான் அழைத்தாள். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். எரித்து விடுவது போல் அவள் என்னை பார்க்க, அதில் எண்ணை ஊற்றுவது போல் அவளை ஏளனமாகப் பார்த்தேன்.

“sir, switch off your mobile please!!” விமான பணிப்பெண் சொல்லவே, மொபைலை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு, மீண்டும் எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் அமர்ந்து இருக்கும் மதுவைப் பார்த்தேன், இன்னும் கண்களால் என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஹோட்டலில் இருந்து கிளம்பிய டாக்ஸியில் பின் கதவை அவளுக்கு திறந்துவிட்டு, அவள் அமரந்தவுடன், முன்னால் சென்று டிரைவருக்கு அருகில் அமர்ந்து வெறிப்பேற்றினேன்.

ஆன்லைன் செக்கிங்கின் போது, வேண்டும் என்றே இருவருக்கும் வேறு வேறு சீட் தேர்ந்தெடுத்து இருந்தேன். அவளை விமானத்தில் சீட்டை காட்டி அமரச்சொன்ன போது "எனக்கு விண்டோ சீட்" என்று என்னை முந்திக்கொண்டு அமர்ந்து, என்னைப் பார்த்து சிரித்தவள், நான் இரண்டு வரிசை தாண்டி சென்று அமர்ந்ததும், என் திட்டத்தை உணர்ந்து, முறைக்க அரம்பித்தவள்தான், இன்னும் முறைத்துக் கொண்டு, இல்லை இல்லை, என்னை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருக்கிறாள்.

விமானம் பறக்க ஆரம்பித்த 15 நிமிடம் கழித்து,

“Excuse me!!” என்று மதுவின் குரல் கேட்கவே, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவளோ என் அருகில் இருந்தவரை அழைத்திருந்தாள்.

“Yesssss!!” என்று அவளுக்கு பதில் அளித்தவருக்கு, ஒரு அம்பது வயது இருக்கலாம், சபாரி சூட் அணிந்திருந்தார், அப்பொழுத்து தான் கவனித்தேன்.

“Can you do me a favour!!” என்று விண்ணப்பித்த மதுவை, ஏற இறங்கப் பார்த்தார்.

“Can we switch seats please!!” கெஞ்சும் தோரணையில் கேட்ட மதுவிடம்

“No!! I like window seat!!” முட்டாய் தரமாட்டேன் என்று மறுப்பாக தலையாட்டும் குழந்தை போல் அவர் மறுக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னைப் பார்த்து முறைத்த மது, பின் அவர் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு

“Sir, mine is also a window seat!! Two rows in front!!” அவள் சீட்டை கை காட்டி மீண்டும் இறைஞ்சினாள்

“Sorry!! NO!!” அருகில் இருந்தவர் என்ன நினைத்தாரோ, திட்டவட்டமாக மறுத்தார். சோர்ந்து போனவளின் முகம் வாடிவிட்டது. வாடிய முகத்துடன் திரும்பிச் சென்று, இருக்கையில் அமரும் முன் "ஏன் டா இப்படி பண்ணுற?” என்று கேட்பது போல் என்னை ஒரு முறைப் பார்த்தாள், அவளின் இந்த முகவாட்டத்துக்கு காரணாமான சபாரி மனிதர் மேல் கோபம் வந்தது எனக்கு.

சில நேரம் கழித்து “ப்ரோ!!” என்று சத்தம் கேட்டு, மொபைலை நொண்டிக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். மதுவின் அருகே அமர்ந்திருந்த நபர், 25 வயது இருக்கலாம்,

“ரெம்ப ஃபீல் பணறாங்க!! நீங்க வேணா என் சீட்ல உக்காந்துக்கோங்க!!” அவர் சொல்ல, மதுவை திரும்பிப் பார்த்தேன். அவளும், வலது கை பெருவிரல் நகத்தை கடித்தவாறு, என்னைப் கெஞ்சும் பார்வை பார்க்க,

“தாங்க்ஸ் ப்ரோ!!” என்று சொல்லிவிட்டு எழுந்து மதுவிடம் சென்றேன், அமரவில்லை. “என்ன?” என்பதுபோல் என்னைப் பார்த்த மதுவிடம்,

“விண்டோ சீட்!!” விரைப்பாக்க சொன்னேன். முறைத்துக்கொண்டே எழுந்து எனக்கு சன்னல் இருக்கை தர, சிரித்துத்தவாறு அதில் அமர்ந்து கொண்டேன். அருகில் நான் இருக்கிறேன் என்ற நிம்மதியோ, மகிழ்ச்சியோ அல்லது பயண களைப்போ அடுத்த ஐந்து நிமிடத்தில் தூங்கிப் போனாள்.

***********

“கோயம்புத்தூர் ஃப்ளைட் எத்தன மணிக்கு?” லக்கேஜ் எடுத்து டிராலியில் வைத்துக் கொண்டிருந்த என்னிடம், ஃபோன் பேசிக் கொண்டே என்னிடம் இருந்து விலகி சென்ற மது, திரும்ப என் அருகில் வந்து கேட்டாள்.

“10.45!!” அவளை கண்டுகொள்ளாமல், அடுத்த விமானத்துக்கு போர்டிங் போட, டிராலியை தள்ளினேன்.

“இன்னும் ஃபோர் அண்ட் ஹாஃப் ஹவர்ஸ் இருக்கா?” என்று என்னை உரசியவாறு, நான் தள்ளிக்கொண்டு சென்ற டிராலியில் அவள் கை பையை வைத்தாள். நான் டிராலியை தள்ளுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து முறைத்தேன்.

“பீச் போலாமா?” என் முறைப்பை சட்டை செய்யாமல் கேட்டவளை, “கிறுக்கா உனக்கு?” என்பது போல் பார்த்தேன்.

“பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!! எனக்கு உன் கூட பீச்க்கு போகணும்னு ரெம்ப நாள் ஆசை!!” என் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள், நிறைய உற்சாகத்துடன் சிறு குழந்தையைப் போல,

“முதல்ல!! என் கைய விடு!!” அவளது கண்களில் இன்று மதியத்தில் இருந்து இருந்த, கெஞ்சல் இல்லாமல் போகவே, விரைப்பாக அவளப் பார்த்து முறைத்தேன். எனது முறைப்பும், சொற்களும் தனது வேலையை சரியாக செய்ய, அவளது உற்சாகம் எல்லாம் வழிந்தோடியது.

“பிளீஸ்!! பாப்பா!! பிளீஸ்!!பிளீஸ்!!” என்று மீண்டும் கெஞ்சியவள், என் முறைப்பின் கணம் கூடுவதை கண்டு

“சாரி!!” தலையை குனிந்து கொண்டாள்.

“டைம் இல்ல!!” அவள் வாடிய முகத்தை பார்க்க முடியாமல், என் விரைப்பை தளர்த்தினேன்.

“ டிரைன்ல போலாம், நாப்பது நிமிஷம் தான் ஆகும்!! ஒரு டென் மினிட்ஸ் போதும் திரும்ப வந்துரலாம்!! பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!!” மீண்டும் கெஞ்சினாள்.

“ரெம்ப டையர்டா இருக்கு மது!! என்னால லக்கேஜ் தூக்க முடியாது!! பிளீஸ்!!” என்னை அறியாமல் நானும் கெஞ்சினேன்.

“நான் தூக்கிக்கிறேன்!! நீ சும்மா மட்டும் வா!!.. பிளீஸ்!!” விடுவதாய் இல்லை அவள். என் கிட் பேக் எப்படியும் ஒரு பதினைந்து கிலோ இருக்கும், அதுவும் போக என் துணிகளை வைத்திருக்கும் டிராலி பேக்கும் அதே கணம் இருக்கும்.

“முடியலனு என்ன தூக்க சொன்ன, கடுப்பாயிருவேன்" நான் அவளை மிரட்ட, வாயெல்லாம் பல்லாக, டிராலியை தள்ளிக்கொண்டு வெளியே சென்றாள்.

**************

திரிசூலம் சப்-வெயில் இறங்கி, பின் ஏறும் போதே, என் இரண்டு பைகளை சிரமப்பட்டே தூக்கிக் கொண்டு சென்றாள். அவள் தான் சென்று டிக்கெட்டும் வாங்கி வந்தாள். எங்கள் ராசியோ, அதிஷ்டமோ, உடனே டிரைன் வந்தது. டிரைனில் எறியதுமே எனக்கு, எங்களது முந்தைய டிரைன் பயணம் நினைவுக்கு வர, என்னவோ போல் ஆகிவிட்டது, உணர்ச்சியில் கொந்தளித்த மனதை அமைதி படுத்த, சன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்ததால், அதன் கூட்டம் இல்லாத, இருக்கைகள் குறைந்த விசாலமான சூழல் என் உணர்வுகளை மட்டுப்படுத்த பெரிதும் உதவியது.

“எனக்கு ஃபலூடா சாப்பிடணும் போல இருக்கு!!” பத்து நிமிடம் கழித்து என்னைப் பார்த்து கூறினாள்.

“என்ன வேணாலும் சாப்பிடு!! ஆனா பத்து நிமிஷத்தில் கிளம்பனும்!!” உறுதியாக சொன்னேன்.

“எனக்கு தெரிஞ்ச ஒரு கடைல ஃபலூடா நல்ல இருக்கும்.… பார்க் ஸ்டேஷன்க்கு வெளியில!!” கொஞ்சம் தயங்கி தயங்கி சொன்னாள்.

“அடுத்த ஸ்டேஷன்ல இறங்குறோம், தீரும்பி ஏர்போர்ட் போறோம்!!” கடுப்பானேன். அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து, என்னை நெருங்கி அமர்ந்து என் கையை, ஆவள் கைகளால் கோர்த்துக் கொண்டு, என் தோளில் சாய்ந்தாள். நான் எரிச்சலில் "ப்ச்" என்றேன்.

“என்னங்க!!” குழைந்தாள்.

(முன்பொரு முறை கல்யாணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், நான் “மது நம்ம கல்யாணத்திற்கு அப்புறம், என்ன எங்கனு கூப்பிடுவியா? இல்ல என்னங்கனு கூப்பிடுவியா?னு" கேட்டதுக்கு "ம்ம்..எரும மாடுனு கூப்பிடுவேன்!!” என்று சொல்லி என் முதுகில் மொத்தினாள்).

அவளே தீடிர் என்று நான் எதிர் பார்க்கத நேரம் "என்னங்க!!” என்று கூப்பிட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திரும்பிக்கொண்டேன்.

“எங்க பிளீஸ்ங்க!!” மீண்டும் அவள் காதோரம் கிசுகிசுக்க,

அவளிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு, சன்னலை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டேன், வெக்கத்துடன். விரலால் அவள் என் முதுகை சுரண்ட, முகத்தில் இருந்த சிரிப்பை துடைத்துவிட்டு, விரைப்பாக்க திரும்பினேன். இன்னும் நான் விரைப்பாகவே இருப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை வாடிய அவளது முகமே காட்டி கொடுத்து.

“பாப்பா!! உண்மைலேயே சாரி டா!! நீ கூப்ட உடனே வந்திருக்கனும்!! சாரி டா!! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கலாம் டா!! உன் கால்ல வேணா விழுறேன்!!” அவள் கெஞ்ச

"உன் கால்ல வேணா விழுறேன்!!” என்ற வார்த்தைகளை என் மூளை பிடித்துக் கொண்டது. இறங்குவாள் என்று தெரியும், ஆனால் இவ்வளவு இறங்குவாள் என்று நானே நினைக்கவில்லை. மீண்டும் கண்களால் கெஞ்சினாள், எழுந்து நின்றேன், அவள் லக்கேஜை எடுக்க முனைந்தாள், தடுத்தேன், கேள்வியாக பார்த்தவளிடம்

“கால்ல விழு!!” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, நான் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தாள், பின் நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டை சுற்றிப் பார்த்தாள்.

“சரி!! வேண்டாம்!!” என் சீட்டில் அமரப் பார்த்தேன்.

என் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். எவ்வளவோ முயன்றும், என் உதட்டோரத்தில், எட்டிப் பார்த்தது சிரிப்பு. மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தாள், இரண்டு மூன்று பேர், எங்கள் செய்கையால், எங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். எழுந்தவள், என் தோள்களில் இரு கையையும் கோர்த்து, ஏக்கி, அழுத்தமாக என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

முதலில் அவளது செய்கையில் அதிர்ந்த நான், பின் சுற்றிப் பார்க்க, சிறிய சலசலப்புடன் சிலர் எங்களை பார்த்து சிரிப்பதும், சிலர் அதிர்ச்சியில் வாயை பிளந்து பார்ப்பதை கண்டு வெட்கமாகிப் போனது எனக்கு. இவளோ, யாரோ யாருக்கோ முத்தமிட்டது போல் நிற்க, டிரைன்னும் நின்றது. என் லக்கேஜ் இரண்டையும் எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கி, வாயிலை நோக்கி நடந்தேன்.

*************

என் இதய துடிப்பு, என் நடையை விட வேகமாக துடித்தது. வாயிலை அடைந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்க,

"சப்-வே க்ராஸ் பண்ணனும்!!" எனது ஷோல்டர் பேக்கையும், அவளது கை பையையும் தூக்கியவாறு, என் அருகில் நின்றாள் மது. அவளைப் பார்த்து முறைக்க, கண்டுகொள்ளாமல் எனக்கு முன்னால் நடந்தாள். அவள்தான் லக்கேஜ் தூக்கவேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் மறந்து, அவளை பின் தொடர்ந்தேன்.

இருபது நிமிடம் கழித்து, ரிப்பன் பில்டிங் அருகில் இருந்த ஒரு கடையில் ஃபலூடாவை ருசித்துக் கொண்டிருந்த மது, முறைத்துக் கொண்டிருந்தன் நான். முறைப்பதை உணர்ந்தாளோ என்னவோ, நிமிர்ந்து என்னைப் பார்த்தாள், ஒரு முத்தத்தை என்னை நோக்கி பறக்கவிட்டவள், மீண்டும் ஃபலூடாவில் மூழ்கிப்போனாள். “முடியல!!" என்று வடிவேல் போல் என் மனதில் சொல்லிக்கொண்டு, நானும் ஃபலூடாவை ருசிக்க ஆரம்பித்தேன்.

“டைம் ஆச்சு!! சீக்கிரம்!!” இரண்டாவது ஃபலூடாவை மெதுவாக சுவைத்துக் கொண்டிருந்தவளை, நான் அவசரப்படுத்த, அவள் அவசரமே காட்டாமல் பொறுமையாக சாப்பிட்டாள். பணத்தை அவள் தட்டில் வைக்க, ஹோட்டேல் பணியாளர் அதை எடுத்துச்சென்றார்.

“பாப்பா!!” என் கையை பற்றி அழைத்தாள், நாள் முழுவதும் அவள் அப்படி அழைத்த போதெல்லாம் முறைத்த என்னிடம், இந்தமுறை எந்தவித எதிர்ப்பும் இல்லை.

“நான் கூப்டு போற இடத்துக்கு, எதுவும் சொல்லாம வருவியா?” நிதானமாக, நான் மறுக்க முடியாத குரலில் அவள் கேட்க, நான் தலையாட்டினேன்.

அவள் "என்னங்க" என்று அழைத்த போதே, சகலத்தையும் இழந்த நான், அவளை என் எண்ணத்திற்கு ஆட்டி வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் எல்லாமல், அவள் கொடுத்த முத்ததில் முழுதாக மூழ்கிப்போக, மொத்தமாக சரணாகதி அடைந்திருந்தேன். கோவைக்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஃப்ளைட் என்பது எல்லாம் மறந்து போனது எனக்கு. அவள் லுக்கேஜை தூக்கிக் கொண்டு நடக்க, அவள் பின்னால் நடந்தேன் நான். சென்ட்ரல் ஸ்டேஷன்க்குள் நுழைக்கையிலேயே எனக்கு ஏதோ புரிவது போல் இருக்க, அங்கிருந்த போர்ட்டரிடம் லுக்கேஜை கொடுத்து "சேரன் எக்ஸ்பிரஸ்" என்று மது சொல்ல, பொட்டில் அறைந்தது போல் தெளிவானது எனக்கு.

உணர்ச்சியில் கொதித்து கொண்டிருந்த என்னை அவள் கண்டுகொள்ளாமல், போர்ட்டரின் பின்னால் நடக்க, எங்கள் கம்பார்ட்மெனட்டை கண்டு பிடித்து, எங்களது கூபேயில் பெட்டியை வைத்துவிட்டு சென்ற, போர்ட்டரின் பின்னால் நானும் இறங்கி, பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். டிரைன் எடுப்பதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கையில், மதுவுடன் கூபேயில் தனியாய் இருந்தால், என்னால் கட்டுபாடாக இருக்க முடியாது என்று நம்பியதால். சிறிது நேரத்தில் கையில் காஃபியுடன் வந்தாள் மது, எனக்கென்று அவள் நீட்டிய கோப்பையை வாங்கி குடித்தேன்.

கோபப்பட்டேன் என்ற ஒரே காரணத்திரக்காக, அதிகாலை எழுந்து, இரண்டு விமானம் பிடித்து, என்னை சமாதானப் படுத்த ஆயிரம் கிலோமீட்டற்கு மேல் பயணம் செய்து, என் சிறுபிள்ளைத் தானமாக கோபத்தை எல்லாம் பொறுத்து, எனக்காக இவ்வளவு செய்பவளை பார்க்க, கண்கள் கலங்கியது. அப்படியே எழுந்து, அவளுக்கு முதுகுகாட்டி, சிறிது தூரம் நடந்தேன். கொஞ்சம் மனது சமநிலை அடைந்தது போல் இருக்க, மீண்டும் வந்து அவள் அருகே அமர்ந்து கொண்டேன்.

“என்ன டா?” என் தோளில் தடவியவாறு, காதல் பொங்க பார்த்தாள். ஒன்றுமில்லை என்று தாலாட்டி, ஆசை, ஆசையாய் அவளைப் பார்த்து, உதடு குவித்து ஒரு முத்தத்தை பறக்க விட்டேன். சிரித்தவள், என்னைப் பார்த்தும் ஒன்றை பறக்கவிட்டாள். மொத்த ரயில்நிலையமும் ஒரு வெளியில் இருக்க, நாங்க அந்த ரயில்நிலையத்திலேயே தனி வெளியில் இருந்தோம். என் மொபைலின் அழைப்பு மணி என்னை நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எடுத்து பேசினேன்.

என் அம்மா தான் அழைத்திருந்தார். என்னை ஏர்போர்ட்டில் இருந்த அழைத்து வர பணித்திருந்த ஓட்டுநரின் தகவலை அவர் சொல்ல, நான் இங்கு சென்னையில் தங்கிவிட்டு, காலையில் தான் புறப்படுவதாக சொன்னேன். எனது பயணத்தின் இந்த தீடிர் மாறுதலில் எரிச்சல் ஆணாவர், என்னை "எப்படியும் போ" என்று நேரடியாக சொல்லாமல் திட்டியவர் ஃபோனை வைத்துவிட்டார். என் மேல் சிறிது அக்கறை இருந்தாலும், தாத்தா, சொன்னபடி கோவைக்கு அன்று சாயுங்காலமே வந்துவிட்டதால், அவரை நான் காத்திருக்க வைத்ததால் வந்த கோபம் அவருக்கு. அம்மாவுடனான அந்த உரையாடல் என் உணர்வுகளை மட்டுப்படுத்தி விடவே, பழைய ஃபார்ம்க்கு திரும்பினேன் நான்.

*************

டிரைன் எடுக்கவும், எங்கள் கூபேயில் வந்து அமர்ந்த நான், என் மொபைலை நோட்டிக் கொண்டிருக்க, என் அருகில் அமர்ந்த மது, என் கையில் இருந்த ஃபோனை புடிங்கினாள்.

நிமிர்ந்து பார்த்த என்னை, புருவங்களை உயர்த்தி குறும்பாக பார்த்தாள்.

“ரெம்ப ஹப்பியா இருக்கேன்!!” என் கைகளைப் பற்றி, முத்தமிட்டாள்.

“எதுக்கு?” ஊத்துறது நல்லெண்ண தான மோடில் கேட்டேன், முதலில் முகம் சுழித்தவள், பின் சிரித்தவாறு

“டெல்லி டிரைன் ஜேர்னி தான் நியாபகம் வருது!! செம்ம சந்தோஷமா இருந்தோம் இல்ல!!” எழுந்து, என் மடியில் அமர்ந்து என் உதடுகளில் பூ போன்ற முத்தமிட்டாள்.

“இல்ல!!” அவளை விலக்கினேன். செல்லமாக முறைத்தால்.

“ஓகே!! நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன்!!” என் இரு கண்களில் முத்தமிட்டாள்.

“அதுதான் எனக்கு தெரியுமே!! அந்த ஜேர்னில நான் அழுத்துக்கீட்டு தான இருந்தேன்!! நான் அழுத்தாத்தான் நீ சந்தோஷமா இருப்பியே!! இன்னைக்கு மாதிரி!!” நான் விளையாட்டாக சொல்ல, தரையில் விட்ட மீனாக துள்ளி எழுந்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து.

நான் சாரி சொல்ல, அவள் கைகளைப் பிடிக்க எத்தனித்த போது, எங்கள் கூபேயின் கதவு தடப்பட்டது. நான் தான் எழுந்து திறந்தேன். டிக்கெட் பரிசோதகர், அவர் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப, கதவை சாத்திய மது, நேராக சென்று, எதிர் பெர்த்தில் படுத்து போர்வையை மூடிக்கொண்டாள். விட்டோத்தியாக நான் விட்ட வார்த்தைகள் அவளை காயப்படுத்தி விட்டதை எண்ணி என் மனம் குற்ற உணர்ச்சியில் தத்தளித்து.

எழுந்து சென்று, அவள் பெர்த் அருகே உட்கார்ந்து,

“மது!!” அவள் தோளில் கை வைக்க, வேகமாக தட்டிவிட்டவள், எனக்கு முதுகுகாட்டி பெர்த்தின் ஓரம் அட்டைபோல் ஒட்டிக்கொண்டாள். எழுந்து அவள் அருகே படுத்து, அவளை திருப்ப, திரும்பியவள் என்னை தள்ளிவிட்டாள். நான் கீழே விழப்போகும் தருவாயில், தள்ளிய கையாலே பிடித்து தடுக்க, ஒரு காலை தரையில் ஊன்றி, நானும் என்னை சமண செய்து கொண்டேன். எங்கே நான் விழுந்து விடுவேனோ என்ற பதட்டம் அவள் கண்ணீர் அப்பிய முகத்தில்.

“சாரி மது!!” நான் சொன்னதுதான் தாமதம், ஒரு கையால் என் டீ-ஷர்ட்டை பற்றியவள், மறுகையால் என் கைகளில் அடித்தாள்.

“நேத்து நைட் சரியா கூட தூங்கல!!”

“மூணு மணிக்கு ஏந்திருச்சு!! ரெண்டு ஃப்ளைட் மாரி!!”

“வீட்டுக்கு தெரியாம, அடிச்சு பிடிச்சு உனக்காக!!”

“முகம் குடுத்து கூட பேசாம, என்ன அழ வச்சு!!”

“காலைல சாப்பிட கூட இல்ல!!”

“அஞ்சு நிமிஷத்துல வர்றேன் போயிட்டு!!”

“என்ன விட்டு தள்ளி தள்ளிப் போற!!”

“கிழட்டு பயகிட்ட எல்லாம் என்ன அசிங்கப்பட வச்சு!!”

“கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி இந்த டிரைன் டிக்கெட் வாங்குனேன்!!”

அழுகையின் ஊடே, அவள் காதலையும், கோபத்தையும் சொல்லி, என் கையில் சரமாரியாக அடிக்க, நான் நகர்ந்து அவள் அருகே, அவள் அடிப்பதற்கு வசதியாக படுத்துக்கொள்ள, கோபத்தில் இருக்கையிலும் நகர்ந்து கொடுத்தாள், நான் படுப்பதற்கு. நான் பெர்த்தில் வசதியாக படுத்த பின்னும் டீ-ஷர்ட்டை பற்றி இருந்த அவளது கையை எடுக்கவில்லை. விழுந்துவிடுவேன் என்று பிடித்தாளா? இல்லை நான் அவள் அடியில் இருந்த தப்பாமல் இருக்க பிடித்தாளா? என்பதை அவள் தான் அறிவாள். அடிப்பதை நிறுத்தியவள், டீ-ஷர்ட்டைப் பற்றி இருந்த கையால் என்னை அவள் முகத்தருக்கே இழுத்து, என் கன்னத்தில் வலிக்குமாறு "பளார்" என்று அடித்தவள்

“நீ அழு..தா நான் சந்தோஷப்.. படுவேணா? “ கேவலுக்கிடையே கண்ணீருடன் என் கண்களைப் பார்த்து கேட்க, அவளை என் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு,

“சாரி பாப்பா!! சாரி பாப்பா!!” என்றவாறு அடக்கமாட்டாமல் நானும் அழுதேன்.

மதுவை நெஞ்சோடு அனைத்திருந்த நான், எப்படி அவளது அணைப்பில் அவளது கழுத்துக்குள் முகம் புதைத்து இடம் மாறினேன் என்று தெரியவில்லை. இப்பொழுது அவளிடம் அழுகை இல்லை, என் முதுகில் தடவிக் கொடுத்தே என் அழுகையை விசும்பலாக மாற்றி இருந்தாள்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு!! இப்படி பச்ச புள்ளையாட்டம்!! அழுதே என்ன ஏமாத்திரு!!”என் பின்னங்கழுத்து முடிகளை கோதியவாரே, என் உச்சந்தலையில் முத்தமிட்டாள், என் அழுகையை நிறுத்தும் வழி அறிந்தவள். மறுப்பாக, சிணுங்கிக்கொண்டே அவள் கழுத்துக்குள் மேலும் என்னைப் புதைத்து, இருக்கி அவளை அனைத்துக்கொண்டேன். சிரித்தவள் மீண்டும் என் தலையில் முத்தமிட, நான் அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.

அவள் கழுத்தில் என் முத்தத்தின் வேகம் கூட, ஒரு சாய்ந்து படித்திருந்தவள், மல்லார்ந்து படுத்தாள். என் உதடுகள், அவள் கழுத்தில் இருந்து மேல் நோக்கி அவள் தாடை, கன்னம் என்று பயணிக்க, என்னை அவள் மேல் இழுத்தாள். ஒரு காலை மட்டும், அவள் இடுப்பில் போட்டு, அவள் மேல் பாதி பரவி, இரு கண்களிலும் முத்தமிட்டு, அவள் முகத்தைப் பார்க்க, கண்களை மூடி என் முத்த பயணத்தின் அடுத்த இலக்கை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

நான் முத்தமிடாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, கண்ணை திறந்தவள், புருவம் உயர்த்தி "என்ன?” என்றாள். நான் "ஒன்றும் இல்லை" என்று தலையாட்ட, காந்த சிரிப்புடன் உதடு குவித்து முத்தமிட்டால் காற்றில், நானும் அதையே செய்ய, என் பிடதியில் கையை வைத்து இழுத்து என் உதடுகளில் முத்தமிட, நானும் அவள் உதடுகளை சுவைத்தேன். மென் காதல் முத்தமாக ஆரம்பித்த எங்களது உதடு தீண்டல், நேரம் செல்ல செல்ல, கொடுங்காதலாக, நாவினால் நீவி, உதடு கடித்து, ஒருவர் எச்சிலை மற்றொருவர் அருந்தி, எங்கள் காதல் தா(ப)கம் தீர்க்க முனைந்தோம்.

யார் உடையை? யார் கழட்டினோம்? என்று புரியாத காதல் போரில், ஒரு கட்டத்தில் அவளினுள் நான் சரணடையை, “ஹா!! ஹா!! ஹாக்!!” என்று என்னை உள் வாங்கிக்கொண்டாள், கண்கள் சொருக, காதல் சிரிப்புடன். தஞ்சம் புகுந்தவன் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்யாமல், சும்மா அவள் மீது படுத்திருக்க, முகமெங்கும் முத்தமிட்டவள், என் முற்றுகையை உணர்ந்து,

“பண்ணு டா!!” அவசரப்படுத்தினாள்

“..” நான் அவசரமே இல்லாமல் அவள் இதழ்களில், எண்ணி எண்ணி முத்தமிட, எண்ணிக்கையை விடுத்து எண்ணம் எல்லாம் என் உதடுகளில் வைத்து நீண்ட நேரம் என் உதடுகளை சுவைத்தவள், என் இடுப்பில் இரு கைகளையும் வைத்து, என்னை இயங்க இறைஞ்சினாள். அவள் இறைஞ்சலுக்கு நான் இனங்காமல் இருக்கவே

“என்ன டா!!” பொறுமை இல்லாமல் கேள்வியாக பார்த்தாள்

“இப்போ சொல்லு!!” அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டு, அவள் இடுப்பில் அழுத்தம் கொடுத்தேன்.

“ஐ லவ் யு!!” அழுத்தம் வேலை செய்தது, என் உதடுகளை அவள் உதடுகளால் ஒற்றி எடுத்தாள்.

"அது இல்ல!!” நான் மறுக்க, அவளே இடுப்பை அசைத்து, நிலை இல்லாமல் துடித்தாள்.

“என்னனு சொல்லு!!" இடுப்பில் இருந்த கைகளை கொஞ்சம் மேல உயர்த்தி என்னை எழுத்து அனைத்து, என் கழுத்தில் உதடு பதித்தாள்.

“என்னங்க சொல்லு!!” அவள் காதில் முத்தமிட்டு நான் கிசுகிசுக்க,

“எரும மாடு!! எரும மாடு!!” அனைத்திருந்த கைகளால் என் முதுகில் அடித்தாள். அவள் அடித்ததற்கு, நான் என் எதிர்ப்பை தெரிவிக்க,

“ஹம்ம்ம்!!” சுகமாக ஏற்றுக்கொண்டாள். என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை, நான் வன்மையாக கண்டிக்க,

“ஹாய்யோ!! ம்ம்!!”

“அப்படித்தான்!!” என்று வரவேற்றவள், கண்டிப்பு பொறுக்காமல்,

“மெதுவா!! ஹம்மா!!”

“ஸ்லோ பாப்பா!!” என்று மன்றாடினாள்.

ரயிலின் இயக்கம் எங்களுக்கு இடையூறு செய்ய

“வெளிய வெளிய வருது!! வசதியாவே இல்ல!!” எதிர்ப்பை காட்ட முடியாமல் நான் ஏங்க, அவள் எனக்கு வசதி செய்து கொடுக்கும்போது, நின்றிருந்த ரயில் கிளம்பியது. எதிர்ப்பை பதிவு செய்ய எழுந்து நின்ற நான், எகிறி விழுந்தேன், இரண்டு பெர்த்துக்கும் இடையில். எழ முயன்ற என்னை, தோளில் கைவைத்து தள்ளியவள், இடுப்பில் அமர்ந்து, “உனக்கு எதிர்ப்பை காட்டவே தெரியல!!” என்பதுபோல், சரியாக செய்து செய்முறை விளக்கம் அளிக்க முனைந்தாள். என் தலையின் இருபக்கமும் அவள் இருகைகளால் பிடித்துக்கொண்டு, பற்களை கடித்தவாறு, வெறித்துப் பார்த்து, நல்ல பாத்துக்கோ என்பது போல

“ஹா!! ஹா!!ஹா!!ஹா!!..ஹம்ம்ம்!!” என்று ஆரம்பித்து

“செல்லக்குட்டி!!” என்று கண்டித்து

“பாப்பாபாபா!!” என்று அழைத்து

“லவ் யு!!.. லவ் யு!!.. லவ் யு!!.. பாப்பா!!” இடையிடையே பலமுறை வன்மையாக முத்தங்கள் இட்டு, கீழ் உதடில், அவள் பற்கள் பதிய கடித்து என் இரத்தம் சுவைத்து, கண்டிப்பாக கண்டித்து முடித்தாள்,

மீண்டும் அவளை பெர்த்தில் கிடத்தி, அவள் கற்றுக்கொடுத்தை, நான் கொஞ்சம் மூர்க்கமாக கட்ட

“லவ் யு!! லவ் யு!! லவ் யு!! லவ் யு!!” என் காதில் இசைத்தவள்

“லவ் யுங்க!!” என்று என் கோரிக்கையை ஏற்க, தாமதித்து ஏற்கப்பட்ட கோரிக்கைக்காக, அவள் வலதுபுறம் கழுத்தெழும்புக்கு மேலான சதையில் பல் பதிய கடித்தேன்.

“ஆஆஆஆ!!..வலிக்குது!!” என்று அலறியவள், என்னை மேலும் இருக்கிக்கொண்டாள்.

பத்து நிமிடம் கழித்து,

"கேட்டு-க்குள்ள வா!!" என்னை இழுத்தவளை,

"இந்த டைம் நீதான் கேட்டு-க்குள்ள வரணும்!!" என் மேல் இழுத்து போட்டுக்கொண்டு, கால்களால் பின்னிக்கொண்டேன்.

“எதுக்கு?” என்று துள்ளியவளை,

“நான்தான் ரெம்ப கோபமா இருக்கேன்!!” துள்ளவிடாமல் இருக்கிக்கொண்டேன். சரி என்று ஒத்துக்கொண்டு, என் நெஞ்சில் கைவைத்து, அதில் நாடியை வைத்து, என் மேல வசதியாக படுத்துக்கொண்டு, என் முகம் பார்த்தாள். அவள் மேடான பின் புறத்தில் அடித்தேன்

“அவுச்!!” என்றவள்

“அங்க ஏண்டா அடிக்கிற!!” செல்லமாக முறைத்தாள்.

“என்ன விட உனக்கு எக்ஸாம்தான் முக்கியமா?” மீண்டும் அவள் பின் புறத்தில் அடித்தேன்.

“ஆமா!!”

“என் கண்ண நொண்டிருவியா?” அடித்தேன்.

“எடுத்து காக்காக்கு போடுவேன்!!”

“நீ முறைச்சா நான் பயப்படனுமோ?” முறைத்தேன், அவள் பின்புறத்தில் அடித்தேன்

“ஆமா!!” கண்ணடித்து காதலால் கவிழ்தாள்

“நான் முறைச்சா நீ பயப்பட மாட்டியோ?” பற்களை கடித்தேன்

“மாட்டேன்!!” உதடு குவித்து முத்தமிட்டு, உதாசீனப்படுத்தினாள்.

“வீடியோ கால் வர மாட்டியா?” கொஞ்சினேன்.

“நீயும்தான் வரல!!”

“நான் கூப்டா வரமாட்டியா?” காதல் பொங்க மிரட்டினேன்

“வர மாட்டேன்!!” என்று அவள் சொல்ல, அடித்த கையால் அவள் பின் புறத்தில் "நறுக்" என்று கிள்ளினேன். “ ஆஆஆ" என்று அலறியவள்

“நான் எப்போ கிள்ளுனேன்!!” கிள்ளிய இடத்தை, கிள்ளிய விரல்கலாலேயே நான் தேய்த்து விட, சிணுங்கினாள்.

“நீ செஞ்சதையும் செய்யவேன்!! நீ செய்யாததையும் செய்வேன்!!” கண்ணடித்தேன்

“அய்யயே!!” முகம் சுழித்தாள் அழகாக

“நான் உன் பாப்பா இல்லையா?” நான் கேட்ட அடுத்து நொடி, என் கண்களைப் பார்த்தவள், கண்ணீர் வராமல் இருக்க, இமைகளை சிமிட்டியவள்,

“சாரி டா!! ஏதோ கோவத்துல அனுப்பிட்டேன்!!” என் முகமெல்லாம் முத்தமிட்டாள். பின் என் தலையின் இருபுறமும் கைவைத்து, ஈர கண்களுடன் என்னைப் பார்த்து சிரித்தாள்.

“என்ன அழ வச்சு வேடிக்கை பாப்பியா?”

வேகமாக இருபுறமும் தலையாட்டி, என் கழுத்தை கட்டிக்கொண்டு, அதிலேயே முகம் புதைத்து அழுதாள் நான் அடிக்காமலே. நானும் அவளை கட்டிக்கொண்டே ஓரு சாய்ந்து படுக்க, குரங்கு குட்டியைப் போல் என்னுடன் ஒட்டிக்கொண்டாள்.

சில நேரத்துக்கெல்லாம் என் கழுத்தில் அவள் மூச்சு சீராக

“பாப்பா!!”

“ம்ம்" உம்கொட்டினாள், மூக்கை உருஞ்சிக்கொண்டு.

“பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!” அவள் எப்போதும் சொல்வதைப்போல நான் சொல்ல, என்னை அனைத்திருந்த கைகளால் அடித்தவள்,

“முடியாது!!” என் கழுத்தில் முத்தமிட்டு, சிரித்தாள்.

************

எழுத்தாளரின் குறிப்பு

சிறு குழந்தை போல் மது உறங்க, அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவாறு, கொட்ட கொட்ட விழித்தி ருந்தான் மணி கொள்ள முடியாத மகிழ்ச்சியில். வாழ்க்கை சுழற்சியில், ஏதோ ஒரு சுற்று, முழுமை அடைந்த திருப்தி அவனுக்கு. இதேபோல் ஒரு ரயில் பயணத்தில் தான், தன்னை முழுதாக அரவணைத்து குழந்தையாக ஏற்றுக்கொண்டவள், இப்பொழுது அவனுக்கு எல்லாமும் ஆனவள், அவன் மேல் ஒரு குழந்தையைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறாள். ஆரம்பத்திலிருந்து அவர்கள் உறவில் பிடி எப்போதும் மது வசம் இருக்கும், அது மாறிய நாள் இன்றுதான்.

இந்த உலகத்தின் இயக்கத்திலும், அதில் வாழும் உயிர்களின் இயக்கத்திற்கும், எந்த ஒரு பொதுவான ஒழுங்கு விதியும் பொருந்தாது. வாழ்வில் சின்னதாக ஏற்படும் மாற்றம், சிலசமயம் காலப்போக்கில், நாம் எதிர்பார்க்காத பெரும் மாற்றத்தை உண்டாகும். மது மற்றும் மணியின் வாழ்க்கையில், இன்று ஏற்பட்ட சின்ன மாற்றம் ஆடப் போகும் ஆட்டம் புரியாமல் காதலர்கள் இருவரும் அவர்களுக்கான கனவு வெளியில் மூழ்கி இருக்க, காலம் அவர்கள் வாழ்க்கையில் முதல் அடியை கொடுக்க காத்திருந்தது.​
Next page: Chapter 27
Previous page: Chapter 25