Chapter 35

யார் இவன்? ஃப்ரெண்ட்லியா பழகிட்டிருக்கும் போது, திடீர்னு லவ் பண்றேன்னு சொன்னான்? எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு என்று சொன்னததும், கல்யாணப்பரிசு கொண்டு வந்து நீட்டுகிறான்? மனசுல தோணுச்சு அதனால சொன்னேன், ஆனா அதுக்காக உன் நட்பை இழக்க விரும்பல்லனு சொல்றான்? உண்மையிலேயே அவன் என்ன லவ் பண்ணினானா? நான் அவன் லவ்வ மறுத்தது அவனுக்கு வலிக்கலையா? இல்ல, அந்த வலியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஒருத்தரால வெளிவந்திட முடியுமா? ஜஸ்ட் லைக் தட் என்று ஒரு லவ் பண்ணுவது சாத்தியமா? என்று பலவிதமான கேள்விகள், கோயம்புத்தூர் நோக்கி விமானத்தைல பறந்துகொண்டிருந்த மதுவின் மனதில். ரஞ்சித்தை எந்த வகையில் சேர்ப்பது என்று குழம்பி போனாள், பின் அவளின் ஆரம்ப கால நெருடல் நினைவுக்கு வர, அவனிடம் கொஞ்சம் இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது என்று முடிவுசெய்தவள், அடுத்தடுத்த நாட்களில் அவனை தவிர்க்கவே கோயம்புத்தூர்க்கு கிளம்பினாள், கிராஜுவேஷனுக்கு.

***************

மதுவின் பார்வையில்

கோயம்புத்தூரை அடைந்ததுமே, மனதில் பாரம் ஏறியது போல் இருக்க, காணும் இடங்களில் எல்லாம் அவனுடன் இருந்த ஞாபகம் மட்டுமே எனக்கு. எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரும் வந்திருக்க, அவர்களின் மகிழ்ச்சியை குலைக்க வேண்டாம் என்று எண்ணி, போலியான புன்னைகை ஒன்றை பூசிக்கொண்டேன், நாள் முழுவதும். பிரதீப்பையும், நேத்ராவையும் தவிர அனைவரும் வெவ்வேறு ஊர்களில் தனியார் மருத்தவமனையில் பணி புரிந்தவாரே, முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்க, பிரதீப்பும், நேத்ராவும், அரசு மருத்தவராகி, பிரதீப் குன்னூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிய, நேத்ரா, சுந்தராபுரம் ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிந்தது வந்தாள். பட்டமளிப்பு விழா முடிந்ததும் அனைவரும் ரெஸிடென்சி பப் செல்வது பின் பிரதீப்பின் பொள்ளாச்சி பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, பிரிந்து செல்வது என்று திடீர் திட்டத்தில் மானமில்லாவிட்டாலும், என் வலியை புரிந்துகொண்டு அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நேத்ராவை சமாதானப் படுத்த, நானும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நேத்ராவிடம் காட்டிக்கொள்ள, நான் அந்த திட்டத்திற்கு ஒத்துக்கொள்ள, வேறு வழி இல்லாமல் நேத்ராவும் ஒத்துக்கொண்டாள்.

*******************

“தேவை இல்லாம எதுக்கு இந்த டிராமா?” ரேஷிண்டேன்சி பப் வந்து இரண்டு மணி நேராமாக, சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவும் இயலாமல், நண்பர்களின் மகிழ்ச்சியை கெடுக்கவும் விரும்பாமல், தவித்துக் கொண்டிருந்த என்னை கடிந்தது கொண்டாள் நேத்ரா.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல!! இங்க வந்ததுல இருந்து எனக்கு அவன பாக்கணும் போல இருக்கு!! நாளைக்கு அவன எங்கையாச்சும் வரச்சொல்லி கூப்படுறியா? நான் தள்ளி நின்னு பாத்துக்கிறேன்!!” என்ற என்னை பரிதாபமாக பார்த்தவள், பின் சரி என தலையாட்டினாள். அப்பொழுத்துதான்

"இங்க பாருங்க, கிராஜூவேஷன் பார்ட்டி ஸ்பெஷல் கெஸ்ட்" திடீர் என்று மணியை அழைத்து வந்த பிரதீப், எனக்கு எதிர்ல இருந்தா இருக்கையில் அமரவைத்தான். என் கையை பற்றிய நேத்ரா பதற, அவளை காட்டிலும் அதிக பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது. அவனை காண வேண்டும் என்று துடித்து கொண்டிருந்த இதயம், அவன் என் கண்களுக்கு முன் வந்து நிற்கையில், துடிப்பதை சில நொடிகள் நிறுத்தி விட்டது.

ரத்தமும், சதையுமாக, என் முன்னே என் உயிரே நிற்கையில், அவனை அனைத்துக்கொண்டு, என் துன்பத்தை எல்லாம் அவனை முத்தமிட்டே தீர்க்க வேண்டும் என்று பரிதவித்த மனதை இழுத்துப் பிடிக்க, அது கண்ணீராய் வெளிப்பட்டது என் கண்களின் வழியே.

“அப்புறம் பானு! எப்படி இருக்க!” நாக்கலாக கேட்கிறேன் என்று அவன் என்னை பானு என்று அழைக்க, அவனின் வலியே தெரிந்தது எனக்கு.

“அவளுக்கு என்ன, அவ நல்லா இருக்க!, நீ மூடிக்கிட்டு, மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” நேத்ரா சூடாக கேட்க, அவள் கைபற்றி வேண்டாம் என்று நான் கண்களால் கெஞ்சிக் கொண்டிருக்கையில், கோபத்தில் எழுந்து அவன், வழியில் வந்து கொண்டிருந்த ஒருவன் இடித்து, "சாரி" கேட்டவனை, “fuck your, sorry “ என்று அடிக்க, அவனின் மூர்க்க தனத்தில் ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். அந்த கைகலப்பில் அவன் அடிபட்டு மயங்கி சரிய,

"ஐய்யோ!!” என்ற என் அலறலில் அந்த பப்பே ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தி என்னை வேடிக்கை பார்த்தது.

விழுந்து கிடந்தவனை வாரி எடுத்து என் மடியில் போட்டு, "பாப்பா!!பாப்பா!!" அழைக்க, மூர்ச்சை இல்லாமல் இருந்த அவனை கண்டதும் உயிரே போய்விட்டது எனக்கு. என்ன செய்வதுதென்று அறியாமல், அவன் கன்னத்தில் தட்டியாவாறு நான் இருக்க, சுதாகரித்து கொண்ட நேத்ரா, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, சில நொடியில் அவன் விழித்ததும் தான் சென்ற உயிர் திரும்பி வந்தது எனக்கு. அவன் கன்னத்தை தடவிய படி நான் அழுதுகொண்டிருக்க எழுந்து அமர்ந்தவன், என்ன யோசித்தானவ காற்றை கிழித்துக் கொண்டு வெளியேறினான் அங்கிருந்து.

அவனை பின் தொடர்ந்து நான் செல்ல, என்னை பின் தொடர்ந்தனர் அனைவரும். பாரக்கிங் சென்றவன் தள்ளாடியா படியே பைக்கை எடுக்க, பதறிய நான், அதற்குள் காரை எடுத்துக்கொண்டு வந்த பிரதீப்பைப் பார்த்தேன். என் மனதை உணர்ந்து கொண்டவன், “வா, நான் டிராப் பண்ணுறேன்!” சொல்லி முடிக்க, அதற்குள் பைக்கோடு சேர்ந்தது கீழே விழுதான். பதறிய நான் அவனை நோக்கி ஓட, என் கைபிடித்து வேண்டாம் என்று தடுத்த

நேத்ரா,

“பிரதீப் பாத்துக்குவான்!!” வலுக்கட்டாயமாக என்னை காரின் பின் சீட்டில் தள்ளினாள்.

பைக்கை தூக்க முயன்றவன், முடியாமல் கீழே போட்டு, விரக்தியில் பைக்கின் கண்ணாடியை எட்டி உதைக்க, அது உடைந்து பறந்து சென்றது. மீண்டும் அழைத்தான் பிரதீப், கனுக்கொள்ளாமல் மீண்டும் பைக்கை எட்டி உதைத்தான். காரில் இருந்து இறங்கிய பிரதீப், அவனை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக காருக்குள் தினித்தான். மணி காரில் எறியதும், பிரதீப் ஏறுவதற்கு முன் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தேன். பின்னாடி திரும்பி நேத்ரவை பார்க்க, என் என்ன ஓட்டம் புரிந்துகொண்டு இறங்கிக் கொண்டாள். டிராப் செய்துவிட்டு வருய்றேன் என்று இருவரிடமும் கண்களால் சொல்லிவிட்டு, காரை எடுக்க, கோபப்படுவான் என்ற என் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைதியாய் இருந்தான். காதலே கசிந்துருகி, காந்த பார்வையில் கட்டுண்டு, மோகத் தீ வளர்த்து, அதில் காதல் குளிர் காய்ந்த எங்கள் கார் பயணங்கள், ஏதோ போன ஜென்மத்து நினைவுகள் போல் தோன்ற, மூச்சு முட்டும் அடர்த்தியுடன் வேதனையை நிறைத்துக் கொண்டு பதினைந்து நிமிடம் கார் பயணம்.

அவன் வீட்டின் முன் நிற்க, இறங்கப் போனவனின் கையை தன்னிச்சையாக பிடித்தேன், நான் என் வாழ்க்கையில் செய்த பெரும் தவறு அது.

“சாரிடா" அவனின் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் நான் தான் என்ற குற்ற உணர்ச்சியில் மன்றாடிய என்னை, விரகத்தியாய் பார்த்து சிரித்தவன், வேறு எதுவும் பேசவில்லை.

அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அழுதேன், அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றிய என்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஸ்டேயாரிங்கை இருக பற்றிக்கொண்டேன். “அவனை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்!!” என்று பிதற்றிய மனதை கட்டுப்படுத்த முடியாமல், அவனை இழுத்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழத்தொடங்கினேன். நான் செய்த இரண்டாவது மிகப் பெரிய தவறு அது. அதுவரை அமைதியாய் என் அழுகையை வேடிக்கை பார்த்தவன், அவனை கட்டிக் கொண்டு நான் அழ, அடுத்த நொடி என்னை இருக்கிக்கொண்டு அவனும் அழ ஆரம்பித்தான். எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட காயத்திற்கு ஆறுதல் தேடி அவன் தோளில் நான் தஞ்சமடைய, என்னால் ஏற்பட்ட காயத்திற்கு அவன் என்னிடமே தஞ்சம் புகுந்து ஆறுதல் தேடினான்.

அவன் என்னை அனைத்துக்கொண்டு அழ ஆரம்பித்ததுமே, நான் செய்து கொண்டிருக்கும் தவறை உணர்ந்தேன், அவனது அணைப்பில் இருந்து கொண்டே, அவனிடம் விலகுவது எப்படி என்பதை என் மூளை, என்னை கேட்காமலே யோசிக்க ஆரம்பித்திருந்தது. சுருசுருப்பாய் இயங்கிய மூளை கொடுத்த எண்ணம், என்னையே, ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. ஆனால் உண்மையான காரணத்தை சொல்வதை விடவும், அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொண்டாலே ஒழிய, இவன் என்னை மறப்பது நாடவாத காரியம் என்று உனமையை உணர்ந்தேன். தெரிந்தே, என் மனதில் தோன்றிய விஷத்திற்கு ஒப்பான எண்ணத்தை, நானும் அருந்தி, அவனுக்கும் கொடுத்து, எங்கள் காதலை கொலை செய்ய முடிவு செய்தேன்.

“என்ன சொன்னாலும் செய்வியா?” இல்லாத திடத்தை எல்லாம் இழுத்துப் பிடித்து, அவன் கண்களப் பார்த்து கேட்க

“நான் வேணா செத்துறட்டுமா?” குழைந்தை என என்னிடம் குழைந்தவன் அழுதான்,

“அத விட மோசமான ஒண்ணு, எனக்காக செய்வியா?” சாகட்டுமா? என்று அவன் வாயால் கேட்டும், என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை நிந்தித்து அழுதேன்.

“நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்!!, நீ என் கூட மட்டும் இரு!!” "இவன் என்னை காதலிக்க மாட்டானா?” என்று ஏங்கி நான் தவித்த தருணங்கள் எண்ண நினைவுக்கு வர

“எங்..!!" என்று பேச ஆரம்பித்து முடியாமல் போக, உடைந்து அழுதேன்.

“என்ன மறந்துரு!! நான் உனக்கு சரியானவ இல்ல!!” நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழ ஆரம்பித்தான். என்னை இழுத்து அனைத்து

“சாரி பாப்பா!! நான் பண்ணுணது எல்லாம் தப்புதான்!! ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்!! இனி நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! பிளீஸ்!! இந்த மாதிரி எல்லாம் பேசாதே!!” அழுகையின் ஏக்கங்களுக்கு இடையில், என்னிடம் அவன் கெஞ்ச, அவனை அணைத்தபடியே இந்த உயிர் இந்த நொடியே என்னை விட்டு நீங்காதா என்ற ஏக்கத்தில் நானும் அழுதேன். பின் என் எண்ணத்தின் முட்டாள்தனத்தை உணர்ந்தது, அவனை விலக்கி

“என்ன சொன்னாலும் செய்வியா?” கெஞ்சினேன், அழுதுவடியும் கண்களில் பெரும் பயம் அப்பியிருக்க முடியாதென்று அவன் தலையாட்ட

"ஐ ஹாட் அன் அப்பைர்!!!, வித் சம் ஒன்!!” முகத்தை மூடிக்கொண்டு, எங்கே நான் சொன்னதை நம்பிவிடுவானோ என்று ஏதோ ஒரு ஓரத்தில், என் உள்ளம் பதறி துடிக்க, அப்படி நினைக்க மாட்டான் என்று தெரிந்தும் அழுதேன்.

“பிளீஸ் மது!! நீ என்ன சொன்னாலும் செய்றேன்!! நான் பண்ணதெல்லாம் தப்புதான்!!” அவன் நம்பவில்லை என்பதை உணர்ந்ததும், கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.

“sorry!! I slept with someone!!” வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, அழுகையுடன் நான் கூற, அவன் கண்களில் வழிந்த கண்ணீர் சட்டென்று நின்றது, அவன் முகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்றாய் மாறியது. எதுவும் சொல்லாமல் சிலையாய் அவன் காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்க, மரணத்தின் இழப்பை முதல் முறையாக உணர்ந்தேன் நான். ஆனால் அது என்னுடைய மரணமா? அவனுடைய மரணமா? அல்லது எங்களது காதலின் மரணமா? என்பது தெரியவில்லை.

********************

குழப்பமான மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கோயம்புத்தூர் சென்ற நான், தாங்க முடியாத துயரத்துடன் அடுத்த நாளே டெல்லி திரும்பினேன். செய்முறை வகுப்பிற்கு செல்ல மனமில்லாமல், தனியாக வகுப்பில் அமர்ந்திருந்தேன். எண்ணமெல்லாம் அவன் கண்களே நிறைத்து இருக்க, அதில் நான் கண்ட பயம், என்னை மிச்சமில்லாமல் தின்று செறித்துக் கொண்டிருந்தது. உயிர் போகப் போகிறது என்று தெரிந்த ஒரு ஒருவன், உயிர் வாழவேண்டும் என்று பேராசையோடு, எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு என்று கடவுளையோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மருத்துவரையோ, பார்த்து கெஞ்சும் உயிர் வலியின், பயம் அது.

கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை, அப்படி ஒரு பயத்தை நான் அவனுக்கு கொடுப்பேன் என்று. அப்படி ஒரு பயத்தை அவன் கண்களில் கண்ட பின்பும், எப்படி என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்க, உடலோடு சேர்ந்து உயிரும் கூசியது எனக்கு. குதூகலமே வடிவாய், உற்சாகம் உருவம் கொண்டது போல், மாயக் குழந்தையென, எங்கள் அகாடமியில் துள்ளித்திரிந்தவனை, காதல் என்னும் என் சுயநலத்தால், வேறு வாய்ப்புகளை வழங்காது, காதலிக்க வைத்தது தவறு என்று முதல் முறையாக எண்ணினேன். பாசத்துக்கு ஏங்கி தவித்த அவனுக்கு எல்லாமாய் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டி, எதுவுமே இல்லாமல் நிற்கதியாய் அவனை நிற்கவிட்டு பிரிந்ததை நினைக்க நினைக்க, என் வேதனை மொத்தமும் என் அம்மாவின் மீது ஆத்திரமாய் மாறியது. சுய கழிவிரக்கத்தை போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் இல்லை, அடுத்தவர்களால் தனக்கு ஏற்படும் துன்பத்திற்கும், தன்னை குற்றம் சாட்டும் கொடூர அரக்கன் அது.

"இங்கதான் இருக்கியா?" வேதனையின் பிடியில் இருந்த என்னை உலுக்கியது ரஞ்சித்தின் குரல். குரல் வந்த திசையை நோக்கி நிமிர்ந்து பார்க்க

"எப்படி போச்சு கிராஜுவேஷன்?" சிரித்தவாறு கேட்டுக்கொண்டு வந்தவனின் முகம் சட்டென சீரியசான அரிதாரம் பூசிக் கொண்டது. என் முகத்தில் தெரிந்த வேதனையை கவனித்திருப்பான் போலும்.

நான் இருந்த வேதனையில், ஒரு வாரத்திற்கு முன் எனக்கு ப்ரொபோஸ் செய்தவன், எதுவுமே நடக்காதது போல இயல்பாக பேசுபவனை, எரிச்சலுடன் பார்க்க, எதுவும் சொல்லாமல் எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனது ஊடுருவும் பார்வை என்னை துளைப்பது போல் இருக்க, அதற்கு மேலும் அடக்க மாட்டாமல், முன்னால் இருந்த டேபிளில் அடுத்து உடைந்து அழ ஆரம்பித்தேன்.

******************

அரை மணி நேரம் கழித்து

"இத குடி, யூ வில் பில் பெட்டர்!!" என்னை நோக்கி ஒரு காபி குவளையை நீட்டினாள் ரஞ்சித். நான் உடைந்து அழ ஆரம்பித்து, பின் அந்த அழுகை விசும்பலாய் மாரி, அதுவும் ஓயும் வரை, ஆறுதல் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தவன், எங்கே சென்று விட்டானோ? என்று நான் நிமிர்ந்து பார்க்க, போகலாம் என்று கண்ணை காட்டினான். ஏனோ அவனது அழைப்பிற்கு கட்டுண்டது போல, அவனைப் பின் தொடர, கல்லூரியின் கேன்டீனுக்கு அழைத்து வந்தவன்தான், இப்பொழுது காபி கப்பை என்னை நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறான். அமைதியாக அவன் நீட்டிய கப்பை வாங்கி பருகினேன், அவன் சொன்னது போலவே, உள்ளே சென்ற காபியின் வெப்பம், என் உள்ள வெப்பத்தை கொஞ்சம் தனித்து ஆறுதல் படுத்தியது என்று சொல்ல வேண்டும்.

"போய் ரெஸ்ட் எடு!! நாளைக்கு பேசலாம்!!" ஏன் அழுதேன் என்று காரணம் கூட கேட்காமல், என்னை விடுதிக்கு போகச் சொல்ல, ஏனோ மறுப்பு எதுவும் சொல்லாமல், அவன் சொன்னதை செய்தேன்.

***************

மூன்று நாள் கழித்து,

"This is complete stupidity!! absurdity!!" நான் சொன்னதை நம்ப முடியாமல், இடதும் வலதுமாக தலையை ஆட்டிய ரஞ்சித், ஓரிடத்தில் நிற்க முடியாமல், அங்கும் இங்கும் நடந்தவன்

"நீ பண்றது முட்டாள்தனம், டோன்ட் பி சில்லி!!" மீண்டும் நான் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் புலம்பினான்.

"நான் உன்கிட்ட அறிவுரை கேட்கல, உதவி தான் கேட்டேன், பண்ண முடியுமா? முடியாதா?" அவனின் வார்த்தைகளை கொஞ்சும் மதிக்காமல், நான் பிடித்த பிடியாய் இருக்க, தன் கழுத்தை முடிந்த மட்டிலும் பின்னால் வளைத்து வானம் பார்த்தவன், "ஊ"

சத்தமிட்டு வாயினால் காற்றை ஊதி தள்ளிவன்

"பாவம் யா, அந்தப் பையன்!!" மணியின் மீது அவன் இறக்கப்பட, என் கண்களில் அரும்பிய கண்ணீரை, வலதுபுறம் திரும்பி துடைத்துக் கொண்டேன்.

"தேங்க்ஸ்!!" அவன் முகம் பாராமல் சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தேன்.

******************

இன்று காலையில் எழுந்ததுமே, எனக்கு மணியின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் பித்துப் பிடித்ததுபோல் இருப்பதாக சும்மா ஆன்ட்டி சொல்ல துடித்துப்போனேன். மனதை கட்டுப்படுத்தியவாறு அவர்களிடம் பேச, அவனுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டவர்களிடம், எதுவும் தெரியாது என்று பொய் சொன்னேன். எதுவும் பேசாமல் எப்பொழுதும் அவன் அமைதியாகவே இருப்பதாகவும், நான் வந்து பேச முடியுமா? இன்று அவர்கள் கேட்க, மறுக்க முடியாமல் வருகிறேன் என்றேன். அவனை எங்காவது வெளியில் அழைத்து வர முடியுமா? அவர்கள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் விண்ணப்பம் வைக்க, நாளை மறுநாள் லீமெரிடியன் அழைத்து வருவதாக சொன்னார்கள். அவர்கள் அழைப்பை தூண்டித்த அடுத்த நொடி, அடைக்கி வைத்த கண்ணீர் அருவியென கொட்ட, கடைசியா அவனைப் பார்த்த நொடி என் நினைவை நிரப்பிக்கொண்டது.

சிறு குழந்தையென துள்ளித்திரிந்தவனை, என் உடலின், உயிரின், நீட்சியாக என்னை ஒட்டிக்கொண்டு திரிந்தவனின், உயிரை மொத்தமாக உருவி எடுத்து, வெறும் ரத்தமும், சதையுமாய், உணர்வுகளற்ற மனித கூடாய், நடந்து சென்றவனை பார்த்த நானும், ஒரு பிணம் அங்கிருந்து கிளம்பியது நினைவில் வர, அவன் இன்னும் அப்படியேதான் இருக்கிறான் என்று அறிந்ததும், தீயில் இட்ட புழுவாய் துடித்துப் போனேன். கொடிய விஷத்துடன் கொத்திய பாம்பிடமே, விஷத்தை எடுக்கச்சொல்லி மன்றாடும் சுமா ஆண்ட்டியை நினைத்து அழுவதா, இல்லை இறக்கமே இல்லாமல் என்னை இப்படி செயல்பட வைக்கும் என் விதியை நினைத்து அழுவதா என்று தெரியாமல் அழுது தீர்த்தேன். பின் புலிவால் பிடித்த கதையாக, எதைச் சொல்லி அவனிடம், உயிர் பயத்தை பார்த்தேனோ, அதையே பிடித்துக் கொண்டு, அதை உண்மை என அவனை நம்ப வைக்க, என் மனதில் ஒரு திட்டத்தை தீட்டி, செயல்படுத்தவே ரஞ்சித்திடம் உதவி கேட்டேன்.

***************

மூன்று நாள் முன்பு, அவன் சொன்னதும் விடுதிக்குச் சென்ற நான், மறுநாளே, அவனிடம் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்தேன். எங்கள் பிரிவின் காரணத்தை மட்டும், மணியின் தந்தை மிரட்டினார் என்றும், என் மனதளவில் செத்துவிட்ட என் அம்மாவை, உண்மையாகவே செத்துவிட்டதாகவே மாற்றிச் சொல்லி இருந்தேன். ஆறுதலுக்கு அழுபவர்களிடம் அறிவுரை சொல்லாமல், அவர்களின் வேதனையை மட்டும் கரைக்கும் வித்தை தெரிந்தவன் ரஞ்சித். அனைத்தையும் கேட்டவன், எதுவுமே சொல்லவில்லை, எதுவும் கேட்கவும் இல்லை. மற்றவரின் பாவத்தை அள்ளி சுமப்பதற்கே பிறந்தவன் போல, நான் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டவன், நான் முடித்துவிட்டேன் என்று தெரிந்ததும்

"Are you feeling better now!!" என்று கேட்டவன், நான் தலையாட்டியது, போகலாம் என்று கண்ணை காட்டி, எழுந்து கொண்டான். இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியாத வினோததிலும் வினோதமானவன், இந்த ரஞ்சித்.

************

இரண்டு நாள் கழித்து,

என்ன பேசவேண்டும் என்பதில் தெளிவு இருந்தாலும், நான் திட்டமிட்ட படியே எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று நினைத்தத படியே, கடவுளை வேண்டிக் கொண்டு, லீ மெரிடியனுக்குள் நுழைந்தேன். அங்கே எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல். சுமா ஆன்ட்டி, மணியை, தனியாக அழைத்துக் கொண்டு வருவார்கள் என்ற என் நினைப்புக்கு மாறாக, அங்கே அவனது அப்பாவிற்கான பாராட்டு விழா என்று தெரிந்ததும் அதிர்ச்சியுற்றேன். உடனே அங்கிருந்து வெளியேற எத்தனிக்கும் போதுதான், விழா கூட்டத்தில், என் அம்மாவை கவனித்தேன். உடலெல்லாம் பற்றி எறியும் ஆத்திரத்துடன், அங்கிருந்து வெளியேறினேன். இவ்வளவு நடந்த பின்னும், மணியின் அப்பாவிற்காண பாராட்டு விழாவில், என் அம்மாவும் கலந்து கொண்டதை நினைக்கையில், பற்றிக்கொண்டு வந்தது எனக்கு. மணியை சுத்தமாக மறந்துவிட்டு, என் அம்மாவிற்கு ஒரு பாடம் கற்பிப்பது என்று முடிவு செய்து, திரும்பவும் அந்த பாராட்டு விழா நடக்கும் ஹாலுக்குள் நுழைந்தேன்.

என் அம்மா என்னை பார்க்கும் படி அவள் முன்னால் செல்ல, அவள் கண்டுவிட்டதும், அவளை முறைத்துவிட்டு, நேராக மணியின் அப்பாவிடம் சென்றேன், கை கொடுத்து, கட்டிப்பிடித்து, அவருடன் நெருக்கமாக நின்று செல்ஃப்பி எடுத்துவிட்டு, என் அம்மாவை முறைத்தவாறு அங்கிருந்து கிளம்பினேன். நான் எனது காரின் கதவு திறக்கும் போது, என்னை நோக்கி ஓடிவந்த என் அம்மா

“பானு!! ஒரு நிமிஷம் நில்லு!! நான் சொல்லுறத மட்டும் கேளு!!” பார்வையால் எரித்துவிட்டு

“நீ என்ன என்னை கூட்டிக் கொடுக்குறது!! நானே போய் படுக்குறேன்!! உனக்கு வேலை மிச்சம்!! அதுக்குத்தான ஆசைப்பட்ட?" கத்திவிட்டு, அவள் அருகில் நிர்ப்பதே பாவம் என்ற எண்ணத்தில், அங்கிருந்து கிளம்பினேன். நெதராவிற்கு அழைத்து அவளை விமான நிலையம் வரச்சொன்னேன், அடுத்த டெல்லி விமானத்திற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருக்க, கோயம்புத்தூரை விட்டு சென்றாள் போதும் என்ற எண்ணத்தில், நேத்ராவிடம் காரை கொடுத்துவிட்டு, என்ன எது என்று கேட்டவளுக்கு, டெல்லி சென்றது கால் செய்வதாக சொல்லி, விமான நிலையத்திற்குள் புகுந்து கொண்டேன்.

*************

ஒரே பிள்ளையான நான் அவளை விட்டுப் பிரிந்த பின்னும், அதற்கு காரணமான உறவை, இன்னும் அவள் தக்க வைத்திருக்கிறாள் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆற்றாமையில் தவித்திருந்த நான், விமான நிலையத்தின் கழிப்பறையில் முடங்கிக் கிடந்தேன். அப்பொழுதுதான் மணியிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத அழைப்பு என்றாலும், அவன் பெயரோடு சேர்ந்து, புகைப்படமும் தொடுதுறையில் தெரிய, கொஞ்சம் ஆறுதல் எனுக்குள், எடுத்திருக்கக் கூடாத அழைப்பை எடுத்தேன்.

"சொல்லு!!” என்றேன்,

"மது எங்க இருக்க?”

"என்ன வேணும்னு சொல்லு?”

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!!”

"சொல்லு!! கேட்டுகிட்டுதான் இருக்கேன்!!”

"இல்ல!! நேர்ல பேசணும்!!”

"முடியாது!!” என்று நான் மறுத்தும் அவன் விடுவதாய் இல்லை.

"பாப்பா!! என்ன பிரச்சனை இருந்தாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!! எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்!! நான் தாத்தாட்ட பேசுறேன்!!” “தாத்தா கிட்ட என்ன பேசுவான்?” என்று நினைக்க, அவனது நம்பிக்கையில் சலிப்பானேன்

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!!”

"நீ பார்க்கிங்ல ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்த நான் கேட்டேன்!!” திடுக்கிட்ட நான், எந்த உண்மை அவனுக்கு தெரியக்கூடாது என்று நான் இவ்வளவும் செய்தேனோ, அது தெரிந்துவிட்டதோ அவனுக்கு என்ற எண்ணம் கொடுத்த பயம் என்னை ஆட்க்கொள்ள, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சொன்ன உரையாடலை மீண்டும் என் மனதில் ஒட்டிப்பார்த்து, அதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்ததும், என் சூழநிலைக்கு பொருந்ததாத பெரும் நிம்மதி எனக்குள்.

"மது!!”

"சொல்லு!!”

"என்னால முடியல!!” அவன் கெஞ்ச, நான் டெல்லியில் இருந்து வந்த போது என்ன திட்டத்தில் வந்தேனோ அதை செயல் படுத்துவது என்று முடிவு செய்தேன்.

"சரி!! சொல்றேன்!! குறுக்கே பேசக்கூடாது!! எமோஷன் ஆகக்கூடாது!!

எல்லாத்துக்கும் மேல, முட்டாள்தனமா எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு, எனக்கு ப்ராமிஸ் பண்ணு!!”

"ம்ம்!!"

"தெளிவா வாய தொறந்து சொல்லு!!” அவன் எதுவும் பேசவில்லை.

"முதல்ல, I have moved on in my life, அதுதான் உண்மை!!. இப்போ என் வாழ்க்கைல இன்னொருத்தன் இருக்கான்!!. இரண்டாவது எங்க அம்மாகிட்ட நான் போட்ட சண்டைக்கும்,

இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரிஞ்சுக்கோ!! எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்!!. உன்ன கெஞ்சி கேக்குறேன், முட்டாள்தனமா எதுவும் பண்ணி, என்ன வாழ்க்கை ஃபுல்லா வருத்தப்பட வச்சிராத!!” அதற்கு மேலும் அவனை காயப்படுத்தி, என்னையும் காயபடுத்த விரும்பாமல்

"பாய்!!” அழைப்பை துண்டித்தேன்.

பத்து நிமிடம் அழைப்பு அவனிடம் இருந்து வர உடனே எடுத்தேன்.

"சீக்கிரம் சொல்லு!! டைம் இல்ல எனக்கு!!” என்ன சொல்லுவானோ என்று படபடத்தேன்.

"வெளிய வா!! உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்!! அவன் என் வீட்டின் அருகே நிற்கிறான் என்றதும், சொல்லமுடியா பதட்டம் என்னுள்.

"அங்க எதுக்கு போன? அங்க உன்ன போக கூடாதுணு சொல்லி இருக்கேன்ல!!” பதறினேன்.

"சரி!! பக்கத்துல இருக்குற பார்க்குல இருக்கேன் வா!!”

"நான் வீட்ல இல்ல!! வெளிய இருக்கேன்!!” அவனிடம் பதில் சொன்னாலும், அவனை எப்படியாவது அங்கிருந்து அவன் வீட்டிற்கு செல்ல வைப்பதை பற்றியே இருந்தது என் சிந்தனை. நான் சிள்வதை காது கொடுத்து கேட்கும் மனநிலையில் அவன் இல்லை என்பது அவனுடனான அடுத்த இரண்டு நிமிட உரையாடலில் தெரிந்தது.

"சரி!! நான் சொல்ற நம்பருக்கு கால் பண்ணி கான்பிரன்ஸ்ல போடு!!” ரஞ்சித்தின் நமபருக்கு அவனை அழைக்க சொன்னேன். நான் கேட்டபோது அரை மனதுடன் ஒத்துக்கொண்ட ரஞ்சித், காண்பரான்ஸ் காலில் முழு மனதுடன் நடித்தான். நான் தான் மணியின் நிலையை எண்ணி சுக்கு நூறாக நொடிந்து போனேன். பின் இதற்கு மேலும் அவனை துன்ப படுத்த கூடாது என்று முடிவு செய்து

"லைன்ல இருக்கியா?” குரலில் இருந்தா திடம் மனதில் இல்லை எனக்கு.

"இன்னும் கால் டிஸ்கனெக்ட் ஆகல!!, அதனால நீ கேட்டுக்கிட்டு கேட்டிருப்பேன் நம்புறேன்!!”

"சொல்லு!! லைன்ல தான் இருக்கேன்!!” அவன் குரலில் இருந்த உறுதி என்னை ஏதோ செய்தது.

"நான் சொன்னது உண்மைனு இப்ப நம்புவன் நினைக்கிறேன்!! உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னுதான், நான் இவ்வளவு நாள் ட்ரை பண்ணுனேன், நீ புரிஞ்சுக்கல!! உன்ன கஷ்டபடுத்த வச்சுட்ட, நீ எவ்வளவோ வருத்தபடுறியோ!! அதைவிட அதிகமாகவே நான் வருத்தப்படுறேன்!!. இதுல உன் மேல தப்பே இல்ல, ஃபர்ஸ்ட் நீ அதை புரிஞ்சுக்கோ!!. தப்பு எல்லாம் என் மேலதான்!!”

"எப்படி மது எனக்கு புரியல?” வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல், மொபைலை சற்று விலக்கி, சில நொடி அழுதுவிட்டு, பின் என்ன சமண படுத்திக்கொண்டு

பற்றி எரியும் தீயினுள் விழ போகும் குழந்தையை, எட்டி உதைத்தது காப்பாற்ற எண்ணும் தாயின் மன நிலையில்தான் நான் இருந்தேன். எட்டி உதைக்கும் போது அவனுக்கு வலிக்கும் என்பதை காட்டிலும், பொசுக்கி சாம்பலாகும் உண்மை என்னும் தீ இடமிருந்து அவளைக் காப்பாற்ற எட்டி உதைப்பதை ஒரே வழி என்று உணர்ந்து, வேறு வழி இல்லாமல் உதைத்தேன்.

"உனக்கு தெரியல நீ எவ்வளவு பெரிய பணக்காரன்னு!! அதுவும் இல்லாம என்னோட நாலு வயசு சின்னப் பையன்!! இந்த இரண்டும் ஒரு பொண்ண எவ்வளவு இன்செக்குர்டா பீல் பண்ண வைக்கும்னு உனக்கு தெரியாது!! மறுபடியும் சொல்றேன், தப்பு உன்னோடு கிடையாது!! என்னோடது தா..!!” முடியாமல் மீண்டும் அழுதேன். ஆனால் அவன் விடுவதாய் இல்லை,

"நீ நேஷனல் விளையாடுறதற்கு, மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே, இந்த இன்செக்யூரிட்டி எனக்கு வந்துடுச்சு. நீயே யோசிச்சு பாரு, அக்கா மாதிரி உன் கூட பழக ஆரம்பிச்சு, இப்போ உன்னை உன்னை லவ் பண்றேன், எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைங்க, அப்படின்னு நான் கேட்டா, உன் காசுக்காகதான் உன்னை மயங்கிட்டேன் ஊர் சொல்லும்!!. ஆனா, உன்னை கஷ்டப்படுத்த என்னால முடியல, அதான் உண்மை!! இதெல்லாம் சரியாயிரும்னு, உனக்குச் சொன்ன மாதிரியே, எனக்கு நானும் சொல்லிக்கிடேன்!!. அது எல்லாமே இங்கே டெல்லி வர்ற வரைக்கும்தான், ரஞ்சூவ பார்க்கிறது வரைக்கும் தான்!!. அவன் கூட பழகுனதுக்கு அதுக்கப்புறம், தான் நமக்குள்ள இருந்தது லவ் இல்லன்னு எனக்கு புரிஞ்சது!!”

"உனக்கே தெரியும் என் தம்பி பொறந்த மூணு மாசத்துலயே இறந்துட்டான்னு!! சிங்கிள் சைல்ட வளர்ந்த எனக்கு, நீ கிடைச்சதும் உன் மேல பாசம் வச்சேன்!!. திடீர்னு ஜினாலிய லவ் பண்றனு நீ சொன்னதும், எனக்குள் ஒரு பயம், எங்கே நீ யாரையாவது லவ் பண்ணுனா, என்ன விட்டு விலகி போயிருவியோனு!!. என்ன செய்றதுன்னு தெரியாம, உன் மேல இருந்த பொசசிவ்னஸ் லவ்வுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்!!. அதே மாதிரிதான் உனக்கும், நான் சொல்ற வரைக்கும் நீ என்ன அப்படி பார்த்தது கிடையாதுனு எனக்கு தெரியும்!! தேவையில்லாம நான் தான் உன்னை குழப்பிவிட்டுட்டேன்!!. உண்மையைச் சொல்லணும்னா பிளான் பண்ணி உன்னை என்ன லவ் பண்ண வச்சேன்!! நீ ரெஃப்யூஸ் பண்ணக்கூடாதுனு தான் அன்னைக்கே உன்கூட .. .” தொடர முடியாமல் அழுதேன். தன் காதலை தானே கொச்சை படுத்திக்கொள்ளும் நிலையை விட கொடுமையானது என்று உலகில் ஒன்று இருக்க முடியாது. கடந்ததுதான் ஆக வேண்டும் என்று எனக்கு நானே கொடுக்க வேண்டும் என்று நினைத்த தநனை நினைவில் நிறுத்தி, தொடர்ந்தேன்.

"அதனால வந்த வினை தான் இது. உனக்கு தோணும், பின்ன எதுக்கு எங்க அம்மாகூட நான் சண்டைபோட்டேன்னு? ஃபர்ஸ்ட் நான் டெல்லியில் ஜாயின் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கல, எங்கே நான் அவங்களை விட்டு விலகிபோயிருவேனோனு பயந்து, எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும் முடிவு பண்ணிட்டாங்க!!. ரஞ்சூ ஃபேமிலி நிலைமை சரி இல்லை, இப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது!!. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அப்படி அம்மாகிட்ட கோபப்பட வேண்டியதாப்போச்சு!!. எனக்கு தெரியுது, நான் ரொம்ப சுயநலம் பிடிச்சவ. ஆனால் உண்மையிலேயே சொல்றேன், உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன்!!”

"என்ன தப்பானவளா காட்டி, என்ன நீ வெறுக்கனும்னு நினைச்சேன்!!. என்ன நீ போர்ஸ் பண்ணு அன்னைக்குகூட, உங்கிட்ட எப்படியாவது உட்கார்ந்து தெளிவா பேசணும்னு நினைச்சு தான் வந்தேன்!!. ஆனா என்னனாமோ நடந்திருச்சு!!. இப்பவும் நான் உன்ன லவ் பண்றேன்!! ஒரு பிரண்டா!! என் வாழ்க்கையில் எப்பவுமே உனக்கு ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும்!!. ஏற்கனவே அம்மாவை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்!! நீயும் போய் அவங்ககிட்ட ஏதாவது கேட்டு அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாதே!!. ப்ளீஸ் அங்கிருந்து போயிடு!!. வீட்டுக்கு போ!!. சாரி டா!!” என்று குரல் தழுதழுக்க முடித்தாள்.

"பாப்பா!!” ஒரே சொல்லில் என் உறுதியை எல்லாம் உடைத்தேன்.

"இங்க போடிங் பண்ண கூப்பிடுறாங்க!! கிளம்புறேன்!! டைம் ஆச்சு!!” என் மீதே நம்பிக்கை இல்லாமல், எங்கே உண்மையை எல்லாம் சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் அழைப்பை தூண்டிக்க முயன்றேன்.

"அவ்வளவுதானா?” அவன் கதற, “ஆண்டவா எங்கள என் இப்படி சித்ரவதை படுததுற, எதுக்கு எங்களுக்கு இப்படி ஒரு தண்டனை என்று!!” என் உள்ளமும் கதற, அவனுடன் சேர்ந்தது வாய்விட்டு அழக்கூட வழி இல்லாமல் அழுதேன், சத்தமில்லாமல்.

“யாரு உள்ள?” என்று நான் இருந்தா கழிவரையின் கதவு தட்டப்பட, அழுகையை அடக்கி,

"இட்ஸ் ஓவர் மணிகண்டன்!!. புரிஞ்சுக்கோ!!” துண்டித்தேன், உயிரோடு என்னையிம் அவனையும். கலங்கிய கண்களுடன் வேலயே வந்த என்னை கேள்வியுடன் பார்த்த பணிப்பெண்ணை கண்டு கொள்ளாமல், முகம் கழுவிவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன்.

*************​
Next page: Chapter 36
Previous page: Chapter 34