Chapter 36

டெல்லியில் எனது விடுதியில், எனது அரயில் இருந்தேன்.

விமானத்தில் ஏறியதும் அனைத்து வைத்த அலைபேசியை உயிர்பிக்க தைரியம் இல்லாமல், இப்படியே காற்றில் கரந்தது விட மாட்டேனா என்ற எண்ணங்களை எல்லாம் மீறி, அவன் அவனது வீட்டில் பாதுகாப்பாய் இருக்கிறானா என்பதை தெரிந்து கொள்ள துடித்த மனதை, அடக்க வழி தெரியாமல், தொடு திரையை வெறித்திருந்தேன். அவன் நலம் அறியாமல் என் மனம் அடங்காது என்று உணர்ந்து, நடுங்கிய கைகளை காட்டிலும் நடுங்கும் மனதுடன் அலை பேசியை உயிர்பித்தேன்.

என்னில் அடங்கா அவனது அழைப்பின் நோட்டிபிகேஷன் வர, பொறுமை இல்லாமல் அவனுக்கு அழைத்தேன். அழைப்பு எடுக்க படமால் போகவே, என் மூளை தேவை இல்லாத அத்தனை வாய்ப்புகளை சிந்திக்க, அதில் ஒன்று கூட எனக்கு ஆறுதல் கொடுப்பதாக இல்லை. பொறுமை இல்லாமல் மீண்டும் அழைக்க, மனமோ, இந்த ஜன்னலின் வழியே குதித்து என்னை கொன்று விடு என்று அரை ஜன்னலின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தது. எடுக்க படஅத அழைப்பு அடித்துக் கொண்டிருக்க, மூச்சைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக ஜன்னலை நோக்கி நடந்தேன், நான், அழைப்பு எடுக்கப்பட்டது

"ஹலோ!!”

“...................” பதிலில்லை

"ஹலோ!!” அவனது குரலை கேட்க பரிதவித்தேன்,

“...................” உயிர் கொள்ளும் அமைதி

"ஹலோ!!.... டேய்!! ஹலோ!!” பொறுமையில்லாமல் நான் கத்த, என் பார்வை ஜன்னலைத்தாண்டி, மூன்றாம் தளத்தில் இருந்து தரையில் விழுந்தது.

“...................” மூச்சின் சத்தம்.

"ஹலோ!! ஏன்டா என்னை இப்படி சித்திரவதை படுத்துற!!” அடக்கமாட்டாமல் அழு ஆரம்பித்தேன்.

"ஹலோ!!” என்ற அவனது சத்தம் கேட்டதுதான், நின்ற என் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"ஹலோ!!”

"தங்கியிருக்கிற அட்ரஸ் சொல்லு!!”

"இப்போ எங்க இருக்க?” பதட்டமானேன்.

"இன்னும் ஊர்ல தான் இருக்கிறேன்!!, அட்ரஸ் சொல்லு, காலைல வர்றேன்!! உன்னை நேர்ல பாக்கணும்!!”

"ப்ளீஸ்!! its over!! புரிஞ்சுக்கோ!!” என் மனதின் என்ன ஓட்டத்திற்கு மாறாக மன்றாடினேன் அவனிடம்.

"மது!! என்னால முடியல மது!!” கெஞ்சினான்.

“...................” உடைந்தது போனேன்.

"நீ இல்லாம.... எப்படி பாப்பா!!” அழுதான்.

“...................” உருக்குலைந்து போனேன். என்னை வேண்டி அவன் கெஞ்சுவது, அவனை நான் விலக்குவதும், என் வாழக்கையில் உண்மையிலேயே நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறினேன், சத்தமில்லாமல்.

"நெ....நெஜமாவே, முடிஞ்சு போச்சா!!”

“...................” என்னை வார்த்தகளால் வெட்டிப் போட்டான்.

"இதுக்கு ஒரு முடிவு!!, I want a proper closure!! நீ இப்ப தெளிவா இருக்கிற மாதிரியே, என்னையும் தெளிவாக்கு, போதும்!!” அவன் விடுவதாய் இல்லை

சூழ்நிலையின் பெயராலோ, ஆற்றாமை காரணமாகவோ, தாயினால் தண்டிக்கப்படும் குழந்தை, அழுகையுடன் தன்னை அடித்த தாயிடமே ஆறுதல் பெற்றுவிடும் தவிப்போடு , தன் அன்னையை நாடுவது போல, அவன் திரும்பத் திரும்ப ஆறுதல் தேடி என்னிடமே வர, சினம் தீரா தாயைப் போல மீண்டும் மீண்டும் அவனைத் தண்டித்து என்னை நானே துன்புறுத்திக் கொண்டு இருந்தேன். மனதை கொஞ்சம் திடப்படுத்தினேன். முடியாத பட்சத்தில் கடைசி ஆயுதமாய் உபயோகிக்க வேண்டும் என்று முடிவு செய்ததை, உபயோகித்தேன்.

"ஏன், நீ என்கிட்ட "ஐ லவ் யூ!!” சொன்னதே இல்லன்னு யோசிச்சு பாத்துருக்கியா?”

"நேர்ல பேசலாம்!! நீ...... நீ தங்கியிருக்க அட்ரஸ் அட்ரஸ் சொல்லு!!” அவனின் பதற்றம் எனக்கு தெம்பை கொடுக்க, எனோ அவனை காயப்படுத்த போகிறோம் என்பதை எண்ணாமல், என் திட்டம் வேலை செய்யும் என்று ஒரு எண்ணம் என் மூளையில்.

"நேர்ல வந்தாலும் எதுவும் மாறப் போறது இல்ல!!”

"பரவால்ல,கடைசியா, உன்ன ஒரு தடவ பார்க்கணும்!! என் முகத்த பார்த்து இதேயே சொல்லு, அது போதும் எனக்கு!!”

"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு பாக்குறேன்!!, உனக்கு அது புரிய மாட்டேங்குது. சரி நல்ல கேட்டுக்கோ, நான், உன்ன லவ் பண்ணுனேனா? இல்லையாங்குறது இருக்கட்டும்!!, நீ என்னை உண்மையாவே லவ் பண்ணுனியா?” எனோ மிகவும் தெளிவாக உணர்ந்தேன்.

"நான் எத்தனையோ தடவ கெஞ்சியும், உன் வாயிலிருந்து ஒரு தடவையாவது "ஐ லவ் யூ!!”ன்னு வந்துருக்கா?, நான் லவ்வ சொன்னதுக்கு அதுக்கப்புறமும்!!, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட!!, என் பக்கத்துல இருக்குறதுக்கே கில்டியா பீல் பண்ணவன் தான நீ?” உதடு துடிக்க, அடக்க மாட்டாமல், சத்தமில்லாமல் அழுதேன்.

யாரவது என்ன சைட் அடிச்சா கூட, எனக்கு பத்திகிட்டு எரியும், அப்படி பாக்குறவங்கள பார்வையாலேயே எரிச்சுறுவேன்!!. ஆனா நீ, எவ கை கொடுத்தாலும், அவ கைய புடிச்சி குலுக்கிகிட்டு, எவ பார்த்தாலும், திருப்பி பல்ல காட்டிகிட்டு தான் தெரிஞ்ச? யாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்கில வச்சு, நீ கை வச்ச இடத்தில கை வைப்பானா? இதுக்கு மேலயும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல!!” படபடவென்று , இருக்கும் மனஉறுதி குறையும் முன், தற்கொலை செய்ய செயல்படும் மனிதனின் வேகத்தில் செயல்பட்டேன்.

"போ..........போதும்!!” அவன் அழுகை என்னை சற்று ஆட்டிப் பார்க்க,

"இல்ல, நான் இன்னும் பேசிமுடிக்கல, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லணு தோணும், இன்னைக்கே இத முடிச்சுக்கலாம். I too want proper closure too this!! மூணு மாசமா நாங்க லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருக்கோம். இன்னும் பத்து நிமிஷத்துல, நான் வீட்டுக்கு போயிடுவேன்!! வீடியோ கால் பண்றேன்!! உன் கண்ணால பாத்து தெரிஞ்சுக்கோ!!, அது ரெக்கார்ட் பண்ணி என்ன வேணாலும் பண்ணிக்கோ!! உனக்கு நான் பண்ண தப்புக்கு தண்டனையா நெனச்சுக்கிறேன்!!” மொத்தமாக கொட்டிவிட்டு, அழைப்பை தூண்டித்தும், அப்படியே துவண்டு விழுந்தது "ஓ" வென்று சத்தமிட்டு அழுதேன். பின் ஈடுதியில் இருக்கிறேன் என்று நினவுக்கு வர, கையில் கிடத்த துணையை, வாயில் தினித்துக் கொண்டு அழுதேன்.

"போ..........போதும்!!” என்று அவன் அழுகையுடன் கெஞ்சியதே என் எண்ணத்தில் ரீங்காரமிட, அவன் துடித்துப் போயிருப்பான் என்று எண்ணம் தோன்ற, தலையில் அடித்துக்கொண்டு அழுதேன். தீடிர் என்று ஒரு ஆவேசம் என்னுள், போதும், வெட்கம் கெட்டு என் தாயும், அவன் தந்தையும் நடந்து கொள்ள, நாங்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்றே ஆவேசம். வருவது வரட்டும் என்றே மனதில் ஒரு எண்ணம் தோன்ற, உடேன அழைத்தேன் அவனுக்கு, கால் கட்டானது. மீண்டும் அழைத்தேன், ஸ்விட்ச் ஆஃப் என்று வர, என் இதயத்துடிப்பு பல மடங்காக எகிற, இருப்பு கொள்ளாமல் கோயம்புத்தூர் செல்வதென்று முடிவு செய்தது, அறையில் இருந்து வெளியேறும் போதுதான், தடுமாறி படிகளில் உருண்டு கீழே விழுந்தேன். ஓடிந்து விட்டது போல ஒரு வலி இடது காலில், வலது பக்கம் நெத்தியில் இருந்து குபுகுபுவென ரத்தம் வெளியேற, அடுத்த சில நொடிகளில் உணர்விழந்தேன்.

உணர்வு பெற்ற போது மறுநாள் காலை எட்டு மணி, அருகில் இருந்தான் ரஞ்சித்.

"இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டவனிடம்,

"மொபைல்!! மொபைல்!!” பிதற்றினேன். அவனது மொபைல்லை எனக்கு தர, உடனே மணிக்கு அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வர, என் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவன் அம்மாவிற்கு அழைத்தேன், அவர்கள் அவன் கல்லூரி சென்றிருப்பான் என்று சொல்ல, உடனே பிரதீப்புக்கு அழைத்து, மணியை நெற்றில் இருந்து காணவில்லை என்று அவன் அம்மா சொன்னதாகவும், கொஞ்சம் அவனை தேடச் சொன்னேன். இருப்பு கொள்ளாமல் எழுந்து, அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அனுமதிக்க மறுத்த நர்ஸ்ஸிடம் நான் செய்த கலவரத்தால், ஊசியின் உதவுயுடன் தூங்க வைக்கப் பட்டேன்.

***********

"ரொம்ப பாவம் யா இந்த பையன்!! அவன்கிட்ட பேசினேன், அவ்வளவு வலி குரல்ல, உனக்கு அடி பட்டிருச்சுனு தெரிந்ததும் அவ்வளவு பரிதவிப்பு அவனுக்கு!! வீட்டுக்கு போய்ட்டான், i think he is okay now, he understood its over!! முடிஞ்சா அவன, இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்தாதே!! மார்னிங் வர்றேன்!!" என் கையில் தொலைபேசியைத் கொடுத்த ரஞ்சித், மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறினான்,

"And one more thing!!" கதவை நெருங்கியவன், என்னை நோக்கித் திரும்பி பார்த்து.

"தயவு செய்து இனிமேல் என்ன "ரஞ்சூ"னு கூப்பிடாதே!!" என்றவன் அறையின் கதவை சாத்திவிட்டு சென்று விட்டான்.

மயக்க மருந்தி வீரியம் குறைந்து எழுந்ததும், முன்பிருந்த ஆவேசம் இல்லை என்னிடம், நான் கண் விழித்ததுமே, "மணி வீட்டிற்கு சென்று விட்டான்" என்று ரஞ்சித் சொன்னது கூட காரணமாக இருக்கலாம். “ he understood its over” என்ற அவனது வார்த்தையே என்ன எண்ணத்தை கட்டி போட்டிருக்க, பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தேன். கதவு திறக்கும் சத்தம் என் நிலையை கலைக்க, என்னுடன் போராடிய நர்ஸ் தான் உள்ளே வந்தார்.

“are you feeling better!!” என்று கேட்டவரிடம் தலையசைத்தேன். எனக்கு எறிக்கொண்டிருக்கும் ட்ரிப்ஸ் அளவை சரி பார்த்துவிட்டு, வெளியேற எத்தணிக்கையில்

“sorry sister!!” என்ற என்னை பார்த்து சினேகமாக புன்னைக்காய்தது விட்டு சென்றார்கள்.

அவனுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று நீண்ட மன போராட்டத்துக்கு பின், பிரதீப்புக்கு அழைத்தேன். அவன் நடந்ததை சொல்லி வருத்தப் பட, அவன் வைத்தும் மணிக்கு அழைத்தேன்.

“5 மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்!!” என்று சொல்லிவிட்டு, வைத்துவிட்டான். அவ்வளவுதான் அடைக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியென கொட்டியது. ஐந்து நிமிடத்தில் அழைக்கிறேன் என்றவன் அரைமணி நேரம் தாண்டிய பின் தான் அழைத்தான்.

"ஏன்டா இப்படி பண்ற!!" நான் அழகுகாயுடன் கேட்க, எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.

"மது, நான் பேசுறேன்!!” நான் பேச முயல, குறுக்கிட்டான். சரி என்று தலையாட்டினேன்.

"கவலைப்படாத!!, கண்டிப்பா நான் தற்கொலை எல்லாம் பன்னிக்க மாட்டேன்!!” கசந்த சிரிப்புடன் கூறினான்.

".....................” எனோ அவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன், எனக்கு பரீச்சியம் இல்லாத வெறுவனைப் போல் இருந்தான்.

"எனக்கு புரியுது!!, it's just...... am mourning!!, இந்த.... நெருக்கமா இருந்தவங்க செத்துப்போயிட்டா, கொஞ்சநாள் வருத்தப்படுவோம்ல, அந்த மாதிரி!! செத்துப்போன என் காதலுக்காக!! கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கேன்!!. கொஞ்ச நாள்ல சரியாயிடும், கவலைப்படாத!! முதல் முறையாக அவன் என்னை விலக்குவது போல் பேச, அதன் வலி தாங்காமல், முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதேன்.

"மது!!” அழைத்தான், கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தேன்.

"நைட் கோபத்துல மொபைல்ல ஓடச்சுட்டேன்!!, பீல் பண்ணாத!!, இனிமே அப்படி பண்ண மாட்டேன்!!” அத்தனை வழியையும் மறைத்துக் கொண்டு அவன் பேச, கண்ணைத் துடைத்தேன்.

"பா!.........” நிறுத்தினேன். அவன் உதடுகளில் ஒரு கசந்த சிரிப்பு.

“You are an early bloomer!!................” மீண்டும் பேசமுடியாமல் தொண்டை அடைக்க, என்னை சமண படுத்திக் கொண்டேன்.

"உனக்கு டென்னிஸ்ல ரொம்ப பெரிய பியூச்சர் இருக்கு!!. தயவுசெய்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு!!. அதேமாதிரி, உங்க பிசினஸ பாத்துக்குற, பெரிய பொறுப்பு இருக்கு உனக்கு!!. You have to carry forward your family's legacy, அதுக்கு உன்ன தயார்படுத்திக்க!! நான் உனக்கு பண்ணின பாவத்துக்கு, முடிஞ்சா என்ன மன்னிச்சிடு!!, சாரி!! Its not your fault, we are just not meant to be!!” வந்த அழுகை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டேன். பின் சமாளித்து, அவனைப் பார்த்தேன்.

"தலையில என்ன ஆச்சு!!”

"சின்னதா அடி!!”

"ஸ்டிட்ச் போட்டு இருக்காங்களா?” இல்லை என தலையாட்டினேன்.

பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவனும் தொடுதிரையை பார்த்திருக்க, நானும் தொடுதிரையை பார்த்திருந்தேன். வாழ வழியில்லாமல் தன்னை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்ட தாய், தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று அனாதை விடுதியில் விட்டுவிட்டு, கடைசியாக ஒருமுறை தன் குழந்தையை ஆரத்தழுவதுபோல், அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, துண்டித்தான்.

"ஓ" என்று கதறி அழ ஆரம்பித்த அடுத்த நொடி, மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, போர்வையை பற்களால் கடித்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதேன்.

*****************

பத்து நாள் கழித்து

பழைய டெல்லியின், சாந்தினி சாவுக் பகுதியில் இருந்த ஒரு பிரபலமான பஞ்சாபி ரெஸ்டாரண்டில், அமர்ந்து இருந்தோம் நானும், ரஞ்சிதும்.

"How are you?" வகுப்பறை முடிந்ததும், பத்து நாட்கள் என்னுடன் பேசாமல் இருந்த, ரஞ்சித் திடீரென்று என் நலம் விசாரித்தான். நல்லா இருக்கிறேன் என்பதைப் போல தலையாட்டினேன், உதடுகளை தாண்டாத புன்னகையுடன்.

"உன் கூட கொஞ்சம் பேசணும், வெளிய போலாமா?" அவன் கேட்க, மறுக்க முடியாமல், சரி என்று தலையசைத்தேன்.

இப்போது இங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு, அவன் ஆர்டர் செய்த "கரக் சாய்"க்காக (வட இந்தியாவின் மசாலா டீ) காத்துக் கொண்டிருக்கிறோம். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

"இவ பேரு வெண்ணிலா!!" திடீர்யென்று, என்னிடம் நீட்டிய அவனது மொபைல் தொடுதிரையில், சினேகமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். கொள்ளை அழகாக இருந்தாள், அவன் குறிப்பிட்ட வெண்ணிலா.

"நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் மேட்ஸ். செகண்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து MBBS முடிக்கிற வரைக்கும் ஒன்னாதான் படிச்சோம்!!. 9th ஸ்டாண்டர்டுல இருந்து லவ் பண்ணோம். லவ்வ சொல்லிக்கணும் என்கிற அவசியம் கூட இல்லாத உறவு எங்களோடது!!. என்னோட சைல்ட்ஹுட் க்ரஷ், அப்புறம் குளோஸ் ஃப்ரெண்ட், டீன் ஏஜ்ல லவ், எல்லாமே அவதான்!!. வயசுக்கு ஏத்த மாதிரி, எங்க உறவும் ரெம்ப இயல்பா மாறிக்கிட்டே இருந்துச்சு. its just felt so natural, you know!!. UG முடிச்சதும், அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க, குடும்பத்தோடு போய் பொண்ணு கேட்டோம். நாங்க பஞ்சாபி, அவங்க தமிழ், மதம், மொழி, வசதி, கலாச்சாரம்னு ஆயிரம் காரணம் காட்டி, அவங்க வீட்ல ஒத்துக்கல!!. ஆரம்பத்துல, நாங்க ரெண்டு பேரும் உறுதியாத்தான் இருந்தோம். எப்பொழுதும், எங்களுக்குள்ள வர சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், எங்க ஒருத்தரை ஒருத்தர் இழந்திடுவோமோ என்கிற பயத்துல, சண்டையே போடாம நிறைய விட்டுக்கொடுத்து, அதுவே எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு பெரிய இடைவெளியே உருவாக்கிடுச்சு!! ஒரு சமயத்துக்கு மேல, சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க வந்தப்ப முன்னாடி போட்டி போட்டு விட்டுக்கொடுத்தது மாதிரி, ஒருத்தொருக்கு, ஒருத்தர் விட்டுக்கொடுத்த போட்டிபோட்டு சொல்லிக்காட்டியே, பெருசாகி, ஒரு கட்டத்துல அவங்க வீட்டுல சொன்ன மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு போய்டா!!” தீடிர் என்று அமைதியானான், நான் ஏதோ வசியத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தேன். சில முறை பெரிதாக மூச்சுவிட்டவன், தன் டேபிளில், கைகளை விரித்துவைத்து, அதில் பார்வையை செலுத்தியவன், தொடர்ந்ததான்.

“I was her Soul mate and She was mine too, I still believe that. சாகுற வரைக்கும் அது மாறாது!! என்ன பத்தி in and out அவளுக்குத் தெரியும், நீ கூட அன்னைக்கு கேட்டியே, UG முடிச்சதுக்கு அப்புறம் எதுக்கு, ரெண்டு வருஷம் பிரேக் போட்டேன்னு, இது தான் காரணம், அவ தான் காரணம்!!. இப்போ, இந்த வருஷம், நான் படிக்கிறதுக்கும் அவதான் காரணம். DM neurology எடுத்ததுக்கும், அவ தான் காரணம்!! ரெம்ப டிப்ரஸ்ட ஆன நான், PGயும் பண்ணாம, ஒரு டாக்டரா பிராக்டீஸ்சும் பண்ணாம, சும்மா சுத்திக்கீட்டு இருந்தேன்!! காமன் பிரெண்ட்ஸ் மூலமா இத கேள்விப்பட்ட அவ, ஒருநாள் ஃபோன் பண்ணி அழுதா, சரி அவளாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான், மேனேஜ்மெண்ட் சீட்ல ஜாயின் பண்ணினேன்!!. ஏன்னா, எனக்கும் அவளைப் பற்றி in and out தெரியும், நான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போற வரைக்கும், அவளால நிம்மதியா வாழ முடியாதுனு எனக்கு தெரியும்!! அவங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிட்டு போனது, எனக்கு அநியாயமா இருந்தாலும், கண்டிப்பா அவ பக்கம் எங்க சண்டையத்தாண்டி, ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்!! அதுவும் இப்போ உன்ன பாத்ததுக்கு அப்புறம், அந்த காரணம் கூட நியமானதாதான் இருக்கும்னு தோணுது.

பொதுவா ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுறதுக்கு, ஆயிரம்முறை யோசிக்கிறவன் நான்!! அவனை நம்ப முடியாமல் நான் பார்க்க,

"என்ன நம்ப முடியலையா?” என்று கேள்வியோடு நிறுத்தி என்னை பார்த்தவன், நான் ஆமோதித்து தலையாட்ட, தொடர்ந்தான்.

"Love will make you do crazy things, மதி!!. அவ நிம்மதியா இருக்கவாச்சும், நான் மாறணும்னு தோணுச்சு!! மனசுல இருக்கிற கஷ்டத்தை மறைக்கத்தான், இப்படி லோட லோடனு எல்லார்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன்!! உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனது கூட, எப்படியாவது அவளைதாண்டி வாழ்க்கைய யோசித்திட முடியாதாங்கிற ஒரு எண்ணத்தில் தான்!!. எப்படியாவது என் காதலை காப்பாற்ற முடியாதாங்கிற ஆற்றாமையில, அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், வெட்கம், மானம், சூடு, சொரணை, எதுவும் இல்லாமல், அவகிட்ட அழுது கெஞ்சி இருக்கேன்!! எல்லாம் பொய்யானதும், அவளாவது, நிம்மதியா, சந்தோசமா இருக்கணும்னுதான் வாழக்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர, முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்!!

யோசிச்சுப் பார்த்தா, அந்த பையனோட நிலமையிலையும் நான் வாழ்ந்திருக்கிறேன்!!, உன்னோட நிலைமையில் தான் இப்ப நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்!! பொதுவா, நான் எப்போவுமே, யாருக்கும், எந்த அட்வைஸ் பண்ணமாட்டேன்!! சொல்லப்போனா, அப்படி இருந்ததற்காக, சுயநலவாதினு கூட பேரு வாங்கி இருக்கேன்!! அடுத்தவங்க அவங்க வாழ்க்கையை எப்படி வாழனும் என்று மூணாவது மனுஷன் சொல்லக்கூடாதுனு எப்பவுமே நம்புகிறவன்!! நான் சொல்ல போறதை அட்வைஸ்னு எடுத்துக்கிட்டாலும் சரி, இல்ல என்னோட புலம்பல்னு எடுத்துக்கிட்டாலும் சரி!!.

நீ, எடுத்த முடிவுதான், உங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் சரியானதா கூட இருக்கலாம்!! எதிர்காலத்துல, அவனை கடந்து ஒரு நல்ல நிறைவான, சந்தோஷமான வாழ்க்கையை, நீ வாழலாம், ஆனா, அந்த நம்பிக்கை உனக்கு இருக்கிறத இப்ப எனக்கு தொணல!! ஆனா கண்டிப்பா அவன நினைச்சுக்கிட்டே மீதி வாழ்க்கையை வாழனும்னு நீ முடிவு பண்ணியிருந்தா, தயவு செய்து, அவன பிரிவதற்கு இவ்வளவு யோசிக்கிற நீ, அவன் கூட சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? என்று கொஞ்சம் யோசிச்சுப் பாரு!! வாழ்க்கைல காம்ப்ரமைஸ் கண்டிப்பா பண்ணித்தான் ஆகணும்!! சில சமையம், தூரதிஷ்டவசமா, வாழ்க்கையே இதுதான்னு நாம நம்புற, நம்பிக்கை கூட அதுல அடங்கும்!!. ஆனா, அத தவிர்க்கிறதுக்கு சின்னதா ஒரு சான்ஸ் இருந்தாலும் அத முயற்சி பண்ணி பார்க்கிறதுல தப்பில்லை!!" கொட்டும் மழையென பேசி முடித்தவன், விரித்து வைத்த அவன் உள்ளங் கைகளையே வெறித்திருந்தான்.

அதுவரை அவனைப் பற்றிய சுய விபரங்களை தவிர, பெரிதாக என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளாத ரஞ்சித், தன் வாழ்வின் பெரும் வலியை என்னிடம் பகிர்ந்து கொள்ள, அதே வலியை அனுபவித்து வந்த நான் மூச்சு விடக்கூட மறந்து போய், அவனை பரிதாபத்துடன் பார்த்தேன். எங்களது நட்பு ரொம்பவும் வித்தியாசமானதுதான். பர்சனலான விஷயங்களை, நான் அடக்கமாட்டாமல் அவனுக்கு சொல்லும்வரை, எதையுமே பகிர்ந்து கொண்டதில்லை நாங்கள். பட்டும் படாமல் டென்னிஸ், படிப்பு, உலகவிஷயம் என்று பேசி வந்தாலும், எங்களுக்கு ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதை, எப்பொழுதும் நான் உணர்ந்தே இருந்தேன். இது இவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நிமிர்ந்து பார்க்க, கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தேன்.

"இது கூட, உன் மேல உள்ள அக்கறைங்கிறத தாண்டி, நான் இழந்ததை, உனக்கு மீட்டுக்கொடுத்தா, ஏதோ ஒரு வகையில் அடுத்த கட்டத்துக்கு என்ன நான் நகர்த்திக்க, ஒரு பிடி கிடைக்காதா என்கிறது சுயநலம் கூட காரணமா இருக்கலாம்!!" குரல் தழுதழுக்க கூறியவன், சட்டென்று எழுந்து வாஷ் ரூம் சென்று விட்டான்.

"Sorry, I got bit emotional!!" ஐந்து நிமிடம் கழித்து திரும்பி வந்தவன், சிரித்தவாரே மன்னிப்பு கோர, அவன் சிரிப்பில் இருந்த வலிதான் தெரிந்தது என் கண்களுக்கு. அவன் மீதான எனது நட்பும், மரியாதையும், உயர்ந்ததைப் போலவே, அவனைப்பற்றிய விநோதமும் அதிகமானது என் மனதில்.

சுத்தமாக, தூக்கம் தொலைத்த இரவாகி போனது அன்று எனக்கு. கொட்டும் மழையென தன் வலியை கொட்டித் தீர்த்தவன், அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டவன், அதன் பின்பு எதுவுமே பேசவில்லை. கல்லூரி விடுதியின் வாயிலில் வைத்து அவனுக்கு நான் நன்றி சொல்ல.

"ஆக்சுவலா, நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்!! Infact, I feel better now!! ரெம்ப நாளுக்கு அப்புறம்" என்றவன், சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.

அவன் சிரிப்பில் இன்னும், வலியின் மிச்சம் ஒட்டிகொண்டிருந்தது. ஏனோ, அதுவரை பார்த்திராத வெண்ணிலாவின் மேல், கடும் கோபம் வந்தது எனக்கு. எங்களை போலவே, இன்னொரு பரிதாபகரமான ஜீவனாகவே தோன்றினான் ரஞ்சித். இவ்வளவு வலியை தாங்கிக் கொண்டிருந்தவன், அவள் மீது துளி கோபம் கொள்ளாமல், தன்னை விட்டுச் சென்றவள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்வதற்கு, தன்னை வருத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித், உண்மையிலேயே ஒரு புரியாத புதிர் தான்.

முன்னிரவு மொத்தமும், ரஞ்சித்தை பற்றிய சிந்தனைகளில் தூக்கம் தொலைத்து இருந்தேன் என்றால், மீதி இரவை, அவனின் "சேர்த்து வாழ்வதற்கு ஏதாவது வழி" என்ற சொற்கள், என்னை தூங்க விடவில்லை. மணியுடன் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை யோசித்து, ஒன்றும் புலப்படாமல் போக, தவிப்பாய் இருந்தாலும், அது பற்றிய சிந்தனையே என்னை உணர்ச்சிப் பிழம்பாய் மாற்றியிருந்தது. அவனை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கிய குற்ற உணர்ச்சியோ இல்லை ரஞ்சித்தின் தூண்டுதல் வார்த்தைகளோ, அவனுடன் சேர்ந்து வாழ்வதற்கான, கடுகிலும் கடுகளவாக, ஒரு வாய்ப்பு இருந்தாலும், அதை முயற்சி செய்வது என்று உறுதி கொண்டேன். உண்மையிலேயே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயம் தான் இந்த ரஞ்சித்.

**************

இரண்டு வாரங்களுக்குப் பின், டென்னிஸ் விளையாடி விட்டு, என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் நானும் ரஞ்சித்.

"இந்தியாவில் எந்த மூலையில் நாங்க ஒளிஞ்சு இருந்தாலும், ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சுடுவாங்க!!" அந்த ரெஸ்டாரண்ட்டில் பேசுயதற்கு பின், அந்தப் பேச்சை எடுக்காமல் இருந்த ரஞ்சித், திடீரென்று "ஏன் நாங்க கல்யாணம் செய்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில், ஏதாவது பெயர் தெரியாத ஊருக்கு சென்றுவிட கூடாது" ரஞ்சித் ஐடியா கொடுக்க, அதை மறுத்தேன் நான்.

"அப்போ எங்காவது வெளிநாடு போயிருங்க?" இயல்பாய் அவன் சொல்ல, அதுவரை நான் அப்படி யோசித்து இருக்கவே இல்லை.

அவன், அம்மா, கோயம்புத்தூர், அதைத்தாண்டிய ஒரு வாழ்வினை யோசிக்க வேண்டிய தேவை, அந்த ட்ரெயின் நிகழ்விற்கு முன் எனக்கு வந்ததே இல்லை. என் அம்மாவின் துரோகத்தால் விலக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது கூட, அதிகபட்சமாக டெல்லி வரை தான் என்னால் யோசிக்க முடிந்தது. ரஞ்சித் அப்படி சொன்னதுமே அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய,

"அவங்க ரெம்ப பெரிய ஆளுங்க, இன்ஃப்ளூயென்ஸ் யூஸ் பண்ணி, எங்கள் திரும்ப இந்தியா கொண்டு வந்துருவாங்க!!" ஒரு நிமிடம், நம்பிக்கை அளித்த அவனது எண்ணம், இந்தியாவிற்கு திரும்பி கொண்டுவதுவிட்டாள், என் தாயின் முகத்தையும் அவனது தந்தையின் முகததையும், பார்த்துக் கொண்டு வாழ்வது என்னால் இயலாது என்பதை உணர்ந்தேன்.

"See, இந்தியா கூட நடுகடத்தும் ஒப்பந்தம் இல்லாத நாட்ல இருந்து, உங்களோட சம்மதம் இல்லாமல் திருப்பி அனுப்ப மாட்டாங்க!!" அவன் நம்பிக்கை விதைத்தான்.

வாழ்க்கையின் பெரும் சோதனைகளுக்கான விடைகள் எல்லாம் மிக எளிதானதாகவே இருக்கும். சூழ்நிலையின் காரணமாக, உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக, எளிதாக சிந்திக்கும் திறனை இழந்து, ஒரு பிரச்சனையை அணுகும் போது, அந்தப் பிரச்சினையின் உண்மை தன்மையை காட்டிலும், அது பெரிதாகவும், குழப்பமானதாக, தீர்க்க முடியாத சிக்கல் வாய்ந்ததாகவும் தோன்றலாம்.

***************

அதன் பின்னான நாட்களில், என்னைக்காட்டிலும், எனக்காக அதிகம் சிந்தித்தான் ரஞ்சித். வாழ்க்கையின் அத்தனை நெருக்கடியிலும், என்னை தாங்கி, தூக்கிவிடும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றது எனது வாழ்வின் கொடுப்பினை. நேத்ரா, பிரதீப் என்று கோயம்புத்தூரிலும், இப்போது இங்கே ரஞ்சித்.

அவனது திட்டப்படி தான், ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நான் படிப்பை தொடர்வதும், அதற்கு முன், எந்தவித சான்றுகளும் தேவைப்படாத டென்மார்க்கில் கல்யாணம் செய்து கொள்வது என்றும் திட்டமிட்டோம் (நிறைய நாடுகளில், தங்கள் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் செய்து கொள்ள, பின் சார்ந்த நாட்டின், வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்). என் அம்மா, நான் உபயோகப்படுத்திய வங்கி கணக்கில், இன்னமும், ஒவ்வொரு மாதமும் பணம் போட்டு வந்தாலும், அதை உபயோகப்படுத்த கூடாது என்ற முடிவில், என் பெயரில் இருந்த, வைப்பு தொகையை கணக்கை, உடைத்துத்தான், என் செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். மணிக்கு, ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் விசா எடுத்திருந்ததால், திரும்ப எடுப்பது மிகவும் எளிதான காரியம் என்பதால், முதலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு கல்லூரியில், எனக்கான அட்மிஷன் பெற்றுக் கொண்டு, அதைவைத்தே, எளிதாக எனக்கான விசா எடுத்தவுடன், மணிக்கு மொத்த விபரங்களையும் சொல்லி, இந்தியாவை விட்டு பறந்து விடுவது, என்பதுதான் எங்கள் திட்டம்.

ஒரு மாதத்திற்கு முன், அவன்னுடனான வாழ்க்கை என்பது, இந்த பிறப்பில் எனக்கு விதிக்கவில்லை என்று உறுதியாக நம்பிய நான், கைகூட போகும் என் காதலை, எண்ணி பூரித்துப் போயிருந்தேன். எனக்கு இருந்த ஒரே ஒரு சின்ன நெருடல், கையில் இருந்த பணத்தில், என் படிப்பு செலவு போக, அதிகபட்சம் நான்கு வருடங்கள் தாக்கு பிடிக்கலாம். அதற்குள் தகுதித் தேர்வுகள் எழுதி, மருத்துவராக பயிற்சி செய்வதற்கு லைசன்ஸ் வாங்கி விட்டால், ஆடம்பர வாழ்க்கை வாழ விட்டாலும், மகிழ்ச்சிக்கு குறைவில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவனது கனவை கண்டிப்பாக தியாகம் செய்யத்தான் வேண்டும்.

ஸ்பான்சர் இல்லாமல் தொழில்முறை டென்னிஸ் ஆடுவதற்கு, குறைந்தபட்சம் நாற்பதில் இருந்து அறுபது லட்சங்கள் வரை, வருடத்திற்கு செலவு செய்ய வேண்டும். எனக்காக அவன் அந்தத் தியாகத்தை செய்ய சிறுதும் தயங்கமாட்டான் என்று எனக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சின்ன நெருடல். அந்த நெருடலை என் சுயநலத்தை கொண்டு, துடைத்தெறிந்து. அந்த நெருடல் தான் இப்படியான ஒரு யோசனையை, முடிவை, யாருடைய தூண்டுதலும் இல்லாமல் என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

********************

மணியுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் பொழுதே, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்த நான், அதற்கான வழி தெரிந்ததும், அவனைப் பார்க்காமல், அவனுடன் பேசாமல் இருப்பது மூச்சுக் கூட விடமுடியாத இன்ப அழுத்தத்தில் தவித்தேன். என் உணர்வுகளின் பிடியில் நானும், என் பிடியில், என் உணர்வுகளும் இல்லாமல், கனவிலும் கற்பனையிலுமே வாழ்ந்திருந்தேன்.

"என்ன மேடம், டூயட் ட்ரீமா?" எதுவும் பேசாமல், டென்னிஸ் விளையாடிவிட்டு, என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்க, நெடுநேரம் கவனித்திருப்பான் போல, சிரித்துக் கொண்டே கேட்டான் ரஞ்சித். வழிந்தேன்.

"அவன் கிட்ட பேசாம, ரொம்ப கஷ்டமா இருக்கு!!" நான் என் உணர்வைச் சொல்ல

"அந்த "அவனோட" பெயர் என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்!!" நக்கல் அடித்த அவனிடம், பதில் சொல்ல வாய்யெடுக்க, எனது மொபைல் சத்தமிட்டது.

"ஹலோ!!" தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து காதுக்கு கொடுக்க, எங்கள் ஆடிட்டர் தான் பேசினார். அவரிடம் பேசிவிட்டு வைத்தவுடன், என் முக மாறுதலை கவனித்த ரஞ்சித்,

"என்ன? ஏதும் ப்ராப்ளமா?" கேட்டவனிடம், இல்லை என்று தலையாட்டி விட்டு, விடுதியை நோக்கி நடந்தோம்.

*****************

"பட்ட காலிலேயே படும்" என்பதற்கு ஒப்பாக, கிட்டத்தட்ட, கடந்த ஒரு வருடமாக வாழ்வில் கொடும் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வந்த எனக்கு, "கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுகிட்டு கொடுக்கும்" என்பதைப் போல தோன்றியது ஆடிட்டரிடமிருந்து வந்தத, அந்த அழைப்பு.

எப்பொழுதும் முன்கூட்டியே வருமான வரி செலுத்தும் பழக்கம், என் அம்மாவிற்கு இருந்தது. அடுத்த வருடத்திற்கான, என் பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் முதலீடுகளுக்குமான வருமான வரி செலுத்துவதற்குத்தான், அவர் அழைத்திருந்தார். கோயம்புத்தூருக்கு வர முடியுமா? என்று கேட்டவரிடம், எனது முகவரியை கொடுத்து, நான் கையெழுத்து போட வேண்டிய படிவங்களை அனுப்பச் சொன்னேன். அவரும் அவ்வாறே செய்திருந்தார், அவர் அனுப்பிய படிவங்களில் கையெழுத்திட்டு முடித்தபின் தான், எனக்கு அந்த யோசனை தோன்றியது. ஏன், என் பெயரில் இருக்கும் ஏதாவது ஒரு சொத்தை விற்று, அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்ற, அதற்கான வேளைகளில் இறங்கினேன்.

ஆடிட்டர் அனுப்பிய கணக்கு வழக்குகளை, ரஞ்சித்தின் உதவியோடு, இங்குள்ள ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து அலசிணோம். மணியின் குழுமத்திள் ஒரு அங்கமாக இருக்கும் கார்மெண்ட்ஸ் தொழிலில் 6 சதவீத பங்குகள் என் பெயரில் இருந்தது. அதைத்தான் இருப்பதிலேயே, நல்ல தொகைக்கு விற்கமுடியும் என்று தெரிந்ததும், பிரதீப்பிடம் பேசி, வெளியில் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துமுடிக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கினேன். பிரதீப்பும், அவன் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் மூலம், விஷயம் வெளிய தெரியாமல், மணியின் அப்பாவின், தொழில் போட்டியாளர் ஒருவரிடமே, விற்பதற்கு ஏற்பாடு செய்ய, பேரம் படியாமல் கொஞ்ச நாள் இழுத்துக் கொண்டிருந்தது. அவர் கேட்ட விளைக்கே கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து, அந்த சொத்திற்கான டாக்குமெண்டை எப்படி எடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான், வருமான வரித்துறை சோதனையில் என் அம்மா சிக்கி, தலைமறைவாக இருந்தாள். அவளது கஷ்டம், எனக்கு துன்பத்தையும் கொடுக்கவில்லை, இன்பத்தையும் கொடுக்கவில்லை. மாறாக, அவளுக்கு வந்த சோதனை, எனக்கு அதிர்ஷ்ட கதவுகளைத் திறந்துவிட்டது. அவள், தலைமறைவாய் இருந்த சமயத்தை உபயோகப்படுத்திக் கொண்டு, வீட்டுக்குச் சென்று, எனக்கு தேவையான டாக்குமென்ட்களை, எந்த சந்தேகமும் வராதபடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். எடுத்துக்கொண்டு வந்த சில நாட்களிலேயே, ஒரு வாரத்தில் எழுதிக்கொடுக்க முடிந்தால், நாங்கள் பேரம் பேசிய தொகையை விடவும், அதிகமாக 5% சதவீதத்திற்கு வாங்கிக்கொள்ள, நாங்களும் பேரம் பேசிக் கொண்டிருந்தவர் சம்மதிக்க, அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது எனக்கு. எனக்கும், என்னவனுக்கும் இழைத்த அநியாயத்திற்கு, துன்பத்திற்கு, கடவுளே பரிகாரம் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

*******************

எங்கள் மொத்த திட்டமும் மாறியிருந்தது. மூன்று நாட்களில், பங்குகளை எழுதிக் கொடுப்பது என்று முடிவு செய்து, அதற்கான அக்ரிமண்ட் அடுத்த நாளே தயாரிக்கப்பட்டு, பிரதீப் அவன் பங்கிற்கு அவனுக்குத் தெரிந்த வக்கீல் மூலம் சரிபார்க்க, ரஞ்சித், அவனது அண்ணன் கம்பெனியின், லீகல் டீமிடம் கொடுத்து, அவன் பங்கிற்கு, அதை சரி பார்த்தான். மணி பயிற்சி பெற்ற ஸ்பெயின் அக்காடமியிலேயே அவனை பயிற்சி பெறவைக்கும் நோக்கத்தோடு, ஸ்பெயினிலேயே, ஏதாவது ஒரு கல்லூரியில், நானும் படிப்பது என்று முடிவு செய்து, எனக்கான ஆறுமாத சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பமும் கொடுத்தாகிவிட்டது. 15 நாட்களுக்குள் கண்டிப்பாக வீசா வந்துவிடும் என்று, டிராவல்ஸ் ஆட்களும் உறுதி சொல்ல, மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு மாதம்தான், நானும் மணியும், கணவன் மனைவியாக, ஐரோப்பாவில் இருப்போம் என்ற கனவுடன், கோயம்புத்தூர் பறந்து கொண்டு இருந்தேன் நான்.

எனது அலைபேசியின் தொடுதிரையில், என் கழுத்தை கட்டிக் கொண்டு, கள்ளம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான், பதினானக்கே வயதான மணி. டெல்லியில், நாங்கள் கலந்துகொண்ட ஜூனியர் நேஷனல்ஸின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில். தொடுதிரையில் இருந்த, அவன் முகத்தின் மீது, பெருவிரலால் நீவிக்கொண்டே, அவனை கொஞ்சிக் கொண்டிருந்தேன் கண்களால்.

"பேசாம, நாளைக்கே உன்னை என் கூட கூட்டிட்டு போய்டவா?"

"என் கழுத்துல இருக்கற தாலியப் பார்த்தா, என்ன செய்வே?"

"உன்ன கூட்டிட்டு ஓடிப்போனதும், ஒரு பத்து நாள், இல்ல!! இல்ல!! போதும்!! போதும்னு, தோணுற வரைக்கும் இருக்க கட்டிப்புடிச்சுக்கணும்!! உன் வாசத்த அப்படியே நுகர்ந்தது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அடச்சு வச்சுக்கணும்!!"

"உன்னை, கண்ட இடத்துல எல்லாம் கடிச்சு வைக்கப் போறேன்!!"

"நீ டென்னிஸில பெரிய ஆள் ஆகிறாய்யோ, இல்லையோ!!, நான் படிக்கிறனோ, இல்லையோ, அங்க போன உடனே இரண்டு குழந்தை பெத்துக்கணும்!!" என்று ஆசை தீர அவனை கொஞ்சி கொண்டிருந்தாலும்

"ப்ளீஸ் பாப்பா!! நல்ல வலிக்கிற மாதிரி, ஒரு பத்து அடியாவது, அடி!!" அவனுக்கு நான் தந்த வேதனைகளை, அவன் கையால் திரும்பப் பெறாமல், எனது காயம் ஆறவே ஆறாது. அவன் என்னை காயப்படுத்துவது நடக்கவே, நடக்காது என்று தெரிந்தும், மனம் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தது. கண்களைப் போலவே, என் இதயமும் ஈரம் செறிந்த இருக்க, வருத்தமும், குற்றஉணர்வும் இருந்தாலும், அதயெல்லாம் தாண்டிய, அவன் மேலான காதலில், திளைத்துக் கிடந்தேன்.

"விமானம் இன்னும் சற்று நேரத்தில் கோயம்புத்தூரில் தரை இறங்கப்போகிறது" என்ற அறிவிப்பு, என்னை, மோன நிலையிலிருந்து வெளிக்கொணர, கை கால்கள் பரபரத்தது, அதைவிட அதிகமாக, என் உள்ளம் பரபரத்தது. வந்தது, வியாபார நோக்கமாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு, "எப்படா அவனை கண்குளிர பார்ப்பேன்!!" என உள்ளம் துடித்து கிடந்தது.

விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும் "டிங்" என்று என் மொபைல் சத்தம் எழுப்ப, பிரதீப்பாய்த் தான் இருக்கும் என்று நினைத்தவாறு, மொபைலை நோண்டினேன், தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

"The sun doesn't rise and set on your ass!!" மெசேஜைப் படித்ததுமே, என் இதயத் துடிப்பு எகிற, பதட்டம் தொற்றிக்கொண்டது. என் மூளை ஏதோ அபாயம் என்று உணர்த்த, உள்ளங்கைகள் வேர்த்தது. மீண்டும் "டிங்" என்ற சத்தத்துடன், அதே எண்ணிலிருந்து, ஒரு வீடியோ வர, அதைத் தொடர்ந்து “Enjoy” என்ற மெசேஜும் வந்தது. இதயத்தின் துடிப்பு, என் காதுகளுக்கு கேட்க, ஆளை விழுங்கும் பயம் என்னை அப்பிக்கொண்டது. "அந்த வீடியோவ பிளே பண்ணாத!! டெலிட் பண்ணு!!அந்த நம்பரை பிளாக் பண்ணு!!" என்று என் உள்ளுணர்வு சொல்ல, அருகிலிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தேன் நான்.

உடம்பெல்லாம் வேர்க்க துவங்கியிருந்தது, கையிலிருந்து மொபைல் நழுவுவது போல் இருக்க, அதை இறுகப் பற்றிக்கொண்டு, அந்த வீடியோவை பிளே செய்த, அடுத்த நொடி, என் வாழ்வு, இருண்டுவிட்டது.

***************​
Next page: Chapter 37
Previous page: Chapter 35