Chapter 42
சிவகுருவை வீழ்த்திய அன்று, நடு இரவு,
கொடைநாடுலிருந்து கிழக்குப் பக்கமாக இருக்கிறது ,டைகர் வேலி எஸ்டேட். ஒரு வருடத்திற்கு முன், இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியிருந்தது மணியின் நிறுவனம், அதுவும் அவனது வற்புறுத்தலால். அடர்ந்த இருட்டில், ஒரு மலைமுகட்டின் மீது அமர்ந்திருந்தான், மணி. அடித்தக்கொண்டிருந்த வாடைக்காற்று, அவனது கொதித்து கொண்டிருந்த மனதுக்கு, இதமாக இருந்தது. தன் முன்னே தெரிந்த, அந்த இருண்ட பள்ளத்தாக்கை, வெறித்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப்பின், மனதில் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி குடியேறுவதை போல உணர்ந்தவன், அமர்ந்திருந்த மலைமுகட்டில் இருந்து இறங்கினான். அருகிலேயே இருந்த ஒற்றை, ஓடு வேய்ந்த, கற்களால் கட்டப்பட்ட வீட்டினுள் நுழைந்தான். போர்வையை வெறும் தரையில் விரித்தவன், நீண்ட நாட்களுக்கு பிறகு, படுத்ததும் தூங்கிப்போனான்.
**************
மணி வெளியேறியதும், சிவகுருவும், சுமாவும், என்ன நடந்தது என்பது கூடப் புரியாமல், பித்து நிலையில், நெடுநேரம் அமர்ந்திருக்க, தன் மகனின் சொற்களில் இருந்த உண்மை, கொஞ்சம் கொஞ்சமாக சுமாவின் மனதில் இறங்கியது. தான், வாழ்ந்த வாழக்கையே பொய்யோ என்ற எண்ணம் எழ, உடைந்து அழ ஆரம்பித்தாள், சுமா.
சுமாவின் அழுகை, சிவகுருவை, நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. தயங்கி, தயங்கி, அவள் அருகில் சென்றவன், அவள் தோளை தொட்டான். சிவகுரு தொளைத் தோட்டதும், நிமிர்ந்து அவனைப் பார்த்த சுமா, வெடித்து அழுதாள். மனைவியின் அழகை, சிவகுருவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவன், அப்படியே மனைவியின் அருகே அமர்ந்து, அவள் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொள்ள
"ச்சீ!!" என்றவள், நெருப்பால் தீண்டப்பட்டதைப் போல், துள்ளி எழுந்தாள். அழுதுகொண்டே மாடிக்குச் சென்று அறையை பூட்டிக் கொண்டாள். பதறிய சிவகுரு, தன் மனைவியின் பின்னால் ஓடினான். தன் மனைவி எங்கே தன்னை மாய்த்துக் கொள்வாளோ என்று பதறிவன், அறையின் கதவை பலம் கொண்டு தட்டினான். ஒரு கட்டத்தில் சோர்ந்து அப்படியே சாத்திய கதவில் சாய்ந்து அமர்ந்துதவன்
"அவன் ஏதோ முட்டாதனமா பேசுறான் டி!!, நான்.. உன்ன சந்தேகப்படுவேன்னு.. நீ நம்புறியா?" பெருங்குரலெடுத்து கத்தினான். உள்ளே இருந்து "ஓ" என்று ஓலமிட்ட சுமாவின் அழுகை, அவனுக்கு கொஞ்சம் சாக மாட்டாள் என்ற ஆறுதலோடு, அவன், கேள்விக்கான பதிலையும் சொன்னது. நிம்மதி இழந்தான், சிவகுரு.
*************
மறுநாள் காலை,
மணியின் பார்வையில்,
நேற்றிருந்த மனநிம்மதி இல்லை, இப்பொழுது, என்னிடம். நேற்று, இரவைப் போலவே, அதே மலைமுகட்டில் உட்கார்ந்து, எதிரே விரிந்துகிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன். மனதிலும், கண்களில் இருந்த அதே வெறுமை. இதே மலைமுகட்டில் மதுவின் மடியில் படுத்துக்கிடந்து கொஞ்சிக் கொண்டிருந்தது, என் நினைவு வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, ஏதோ போன ஜென்மத்து நிகழ்வு போல் தோன்றியது.
மது!!. பத்தொன்பது வயதுக்காரிக்கு!!, பதினாறே வயதான!! நான்!! இட்ட பெயர்!!. என்னை அன்னை, போல் அரவனைத்த, என் மது!!
நினைவு தெரிந்து, அவளைத் தவிர, வேறு யாரையும் காயப்படுத்தியிருக்காத, நான், நேற்று, யாரின் அன்பிறக்காக, என் சிறுவயதில் எங்கித் தவித்தேனோ, அவர்களை உயிரோடு கொன்று புதைத்துவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், மனம் முழுக்க வெறுமையோடு. மனம் போலவே, பார்வையும், இலக்கில்லாமல் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள், இல்லாது போன இந்த காலகட்டத்தில், நான், நானே அறியாத, புரிந்துகொள்ள முடியாத, என்னவாகவோ மாறிப்போனேன்.
அந்த பைக் ஆக்சிடென்ட் க்குப் பிறகு, முதன் முதலாக கோயம்புத்தூர் வந்ததில் இருந்து அவ்ளது எண்ணங்களை, எட்டியே வைத்திருந்தேன். நேத்ரா, அவள்தான், என் அலுவலக கதவைத் திறந்து கொண்டு வந்தவள், அதுவரை, நான் தள்ளி வைத்திருந்த, என் மதுவின் நினைவுகளை, நெருப்பென ஊற்றி போனாள், என் மனதில். ஒரு காலத்தில், மாசு தீண்டா இளம் தென்றலாய், என்னை சிலிர்க்கச் செய்த மதுவின் நினைவுகள், வெடித்துச் சிதறிய எரிமலை குளம்பு ஓடும் நெருப்பாற்றில், என்னை தள்ளிச் சென்றாள், நேத்ரா. வெளியேறும் வழியே இருந்தாலும் வெளியேற விரும்பாத, சுட்டெரிக்கும் வெப்பமே, இயல்பென மாறியிருந்த மதுவின் நினைவுகளில், துடித்துச் சாவதுதான், நான் செய்த பாவத்தின், விலை என்பதை, முதல்முதலாக உணர்ந்த தருணம் அது. என் முன்னால் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன்.
"தம்பி!!" என்ற சத்தம் என் வெறுமையை விரட்டியது.
திரும்பிப் பார்த்தேன், நாற்பதுகளின் நடுவில், எனது வயது என்று சொல்லும், தொப்பையும், ஆங்காங்கே நரைத்த முடியுமாக, ஒருவர் நின்றிருந்தார்.
"இப்பதான் தம்பி, வாட்ச்மேன் சொன்னாரு!! நீங்க நைட்டு வந்தீங்கனு!!" பேசிக் கொண்டிருந்தவர், என் முகத்தில் தோன்றிய எரிச்சலில் உணர்ந்துகொண்டார் போல
"தம்பி!! நான் எஸ்டேட் மேனேஜர்!!" அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, தலையசைத்தேன்.
"தம்பி!! நீங்க தங்குறதுக்கு பங்களோ ரெடி பண்ணிட்டேன் .!!" சொல்லிக்கொண்டு இருந்தவரை இடைமறித்து
"இந்த கேட்டோட சாவி, இருக்கா?" சற்று தூரத்தில், எஸ்டேட்டின் எல்லைவேலியில், இருந்த கேட்டை காட்டி, கேட்டேன்.
"இருக்கு தம்பி!! நம்ம கிட்ட ஒன்னு, ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கிட்ட ஒன்னு!! ரெண்டு கீ இருக்கு தம்பி!! உங்களுக்கு.."
"எனக்கு அந்த கீ வேணும்!!" மீண்டும் அவரை இடைமறித்தேன் , சரி, என்று தலையசைத்தவர், அருகிலிருந்த ஜீப்பில் ஏறப் போனார்.
"உங்க பேர் என்ன?"
"சண்முகம்!! " லேசாக சிரித்தவாறு என்னை நோக்கி வந்தார்.
"சண்முகம்!!, அந்த கீ-யோட, நாலு இட்லி!!, ஒரு ஆம்லெட் வேணும்!! நீங்க, உங்க வேலைய பாருங்க!! நான், கேட்டத யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க!!" மீண்டும் அவரை பார்க்க விரும்பவில்லை என்பதை, அவருக்கு உணர்த்தினேன்.
"ஓகே, சார்!!" அவரிடம் அந்த கேட்டின் சாவியை கேட்டது, அவரை அப்புறப்படுத்த என்பதை உணர்ந்து கொண்டார், அப்படியே என்னையும்.
***************
அரை மணி நேரம் கழித்து,
அதே மலை முகட்டில் அமர்ந்திருந்தேன். இந்த முறை, வேலியில் இருந்த கேட்டிலேயே, என் பார்வை இருந்தது. கேட்டின் அந்தப்புரம், மிருங்கள் வாழும் அடர்ந்த காடு, நான் அமர்த்திருந்தது, மனிதர்கள், தங்கள் வாழவதற்கு ஏதுவாக, செம்மை படுத்திய, நிலம். கையில் இருந்த அந்த கேட்டின், சாவியை உருட்டிக் கொண்டிருந்தேன். என் மனதில், ஏதோ ஒரு சின்ன உறுத்தல். நேற்று, நான் ஆடிய ஆட்டத்தில், ஏதோ ஒன்று இன்னும் எனக்கு புலப்படாமல் இருந்தது. ஏன், என் அப்பா, அவரிடம் இருக்கும், நானும் சிவகாமியும் கூடிக் களித்த வீடியோவை காட்டி, என்னை மிரட்டவில்லை?? மொத்தமாக அடித்து வீழ்த்தப்படப் போகிறோம் என்று தெரிந்தும், எப்படி ஒருவனால், தன்னிடம் மிச்சமிருக்கும், ஒரு பலமான ஆயுதத்தை உபயோகிக்காமல் இருக்க முடிந்தது?? சின்னதாக ஆரம்பித்த கேள்வியின் மன உறுத்தல், நேரம் செல்லச்செல்ல அழுத்தமாகியது. மனதில் அழுத்தம் கூட, கூட, புலப்படாத அந்த உண்மை என் முன்னே வந்து நின்று சிரித்தது. நம்பமாட்டேன் என்று, அதை நான் உதற தள்ளிவிட்டு, எழுந்து வேலியில் இருக்கும் கேட்டை நோக்கி நடந்தேன். ஒரு நொடி கூட யோசிக்காமல், பூட்டைத் திறந்து, அந்தக் காட்டில் நுழைந்தேன்.
*************
மணி காட்டில் நுழைந்த, அதே நேரம்,
ஹாலில் அமர்திருந்த சிவகுருவுக்கு மொத்த வழக்கையும் இருண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத், தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில் இருந்து, தான் மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், காலையில் இருந்து, முகம் கொடுத்து பேச மறுக்கும் சுமா. அடுத்தடுத்து வாங்கி அடிகளில், மனம் பாரமாய் இருக்க, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு சோபாவில் இருந்து சுருண்டு விழுந்தான், சிவகுரு.
************
இரண்டு மணி நேரமாக மழை இறங்கி கொண்டிருப்பதன் வெளிப்பாடாக, மணியின் உடல் எங்கும் வேர்த்திருந்தது. நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான், இல்லை இல்லை, அந்த உண்மையிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிந்தருந்தான். காடு, மலையென, அந்த உண்மையும், என்னை விடாமல் தூரத்தியது.
ஆறு மணி நேரம் கழித்து.
மலையடிவாரத்தை அடைந்து இருந்தான். அவன் உடலும், மனமும், சோர்வுற்று இருந்தது. அவன் காதுகளில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. அவன் கால்களையும், மனதையும் தன்னிச்சையாக அந்த சத்தம் ஈர்த்தது. பாறைகளுக்கிடையே தெள்ளத்தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது, ஒரு காட்டாறு, ஒரு நற்பதடி பாறையின் மேல், நின்றுருந்தான், மணி.
அவன் பார்வையில் பட்ட தண்ணீர், வறண்டு கிடந்த அவன், நாவையும், தொண்டையும், மேலும் வறட்சி ஆக்கியது. தண்ணீர் கேட்ட, உடலின் தாகத்தை தீர்க்க முனைந்தவன், திரும்பி நடந்த சில நொடிகளில், கால் இடறி உருண்டான், அந்த பாறையில். இடறி உருண்டவனின் வலது கையில், துருத்திக்கொணடிருந்த பாறையின் படிமம் சிக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவனை, தேடிப்பிடித்து அவனது தோளில் கெட்டியாக அமர்ந்து கொண்டது, அவனை துரத்தி வந்த, அந்த உண்மை. உண்மையின் கணம், அவன் மனதை அழுத்த, ஏற்கனவே ஏழு எலும்பு முறிவுகளை கொண்ட, அவன் வலதுகையில் வலி கூடியது.
அவன் தோளில் ஏறி அமர்ந்த உண்மை, வெற்றிபெற்ற குதூகலத்தில் துள்ளிக் குதிக்க, குனிந்து நாற்பது அடியில் கீழ் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றைப் பார்த்தான். ஒரு நிமிடம், பிடியை விட்டுவிட்டு, பாறைகளுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து, உண்மையோடு, தன்னையும் மாய்த்துக் கொள்ளலாமா? என்று எண்ணிவன் மனதில், நேற்று சிவகுரு "நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" சொன்னது ஒரு நொடி வந்துபோனது. அவ்வளவுதான், தன் உடலில் மீதம் இருந்த மொத்த வலுவையும், வலது கைக்கு மாற்றிவன், பாறையின் மீது ஏறினான். காற்றைப் போல, அந்த காட்டைக் கிழித்துக்கொண்டு கீழ ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றை நோக்கி ஓடினான்.
காட்டாற்றின் கரையை அடையும் முன்னே, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, சுற்றும் முற்றும் பார்க்க வில்லை, மொத்த உடைகளையும் களைந்தவன், அற்றில் இறங்கினான் அம்மணமாக, ஆழம் அறியாமல், ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கிப் போனான். காட்டற்றின் இழுப்பில், தன் தோளில் இருந்த உண்மையை கரைத்துவிட்டவனின், மனது இலகுவானது. தண்ணீர் அள்ளி குடித்தவனின் மன தாகம் தீரவில்லை, குளிர்ந்த நீர், அவன், மனசூட்டை தனிக்கவில்லை. அதுவரை கண்களில் மட்டுமே இருந்த அந்த ஓநாயை, அவனது, இரத்தம், சதை எலும்பு, நரம்பு என பற்றிப் படர்ந்தது. உண்மை-பொய், சரி-தவறு, பாவம்-புண்ணியம், அன்பு-வஞ்சம் என்று உணர்வுகள் எதுவும் இல்லாத, பசியையும், பிழைத்துக் கிடத்தலையும் மட்டுமே அறமாக, தர்மமாக, ஆதாரமாக கொண்டிருக்கும் காட்டில் ஒன்றென கலந்து, தண்ணீரில் இருந்து எழுந்தான், ஓநாயாய் மொத்தமாக மாறியிருந்த, மணி.
கரையேறி உடைகளை அணிந்து கொண்டவன், ஆற்றின் போக்கிலேயே சென்று, ஆழம் பார்த்து, ஆற்றுநீரின் இழுப்பை ஆராய்ந்து, அந்த காட்டாற்றை கடக்க பாதுகாப்பான இடம் தேர்ந்தெடுத்து, அதைக்கடந்து, மறுகரை ஏறினான், சற்றுமுன் அழமே தெரியாமல் அந்த காட்டாற்றில் விழுந்தவன். கண்ணில் பட்ட வழித்தடத்தில் நடந்தான், எதிர்பட்டது ஒரு கிராமம். அதை நோக்கி நடந்தவன், கண்ணில் பட்ட மனிதனிடம்
"இந்த, ஊர் பெயர் என்ன?"
"தெங்குமரஹடா!! பதில் சொன்னவர், இவனை, ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, தன் போக்கில் சென்றார்.
மொபைலை எடுத்து தனது டிரைவருக்கு அழைத்தவனுக்கு சிவகுருவின் நிலை சொல்லப்பட்டது. எந்த சலனமும் இல்லாமல் தன்னை எங்கு வந்து அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்டை நோக்கி நடந்தான்.
*****************
சிவகுருவை பேருக்கு இரண்டு முறை ஹாஸ்பிடல் சென்று பார்த்ததோடு சரி, அதன்பின் வேலையில் முழகிப்போனான், மணி. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ஆச்சிகள் இருவரும், சிவகுருவின் உடல்நிலையை பார்த்து வருந்திக் கொண்டிருக்க, சுமாவோ, பொய்யாகிவிட்ட, தன் வாழ்க்கைக்காக வருந்துவதா??, உடல் பலவீனப்பட்டு படுக்கையில் இருக்கும், தன் கணவனுக்காக வருந்துவதா?? இல்லை அவளது வாழ்க்கையைய் பொய்யாக்கிய உண்மையைச் சொன்னா மகனின், மனம் அதை தெரிந்து கொண்டபோது எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும் என்று வருந்துவதா?? என்று தெரியாமல், எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள்.
மணியின் தாத்தாவோ, ஒருபுறம், மருமகனின் உடல் நிலை கண்டு வருந்தினார் என்றால், மறுபுறம், தந்தையின் உடல்நிலை மோசமான அதிலிருந்து, ஏற்கனவே தன் வயதுக்கான வாழ்வை வாழாமல், பித்து பிடித்தவன் போல் இருந்தவன, மொத்த பொறுப்பையும் தன் மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு, வெறியாக உழைக்கும், தன் பேரனை நினைத்து வருந்துவதா?? அல்லது தொழில் குழுமத்தின் அடுத்த கட்ட நகர்வின், முக்கியமானதொரு நேரத்தில், அதை வழிநடத்த வேண்டிய, தொழிலதிபர் சிவகுருவின் இழப்பை நினைத்து வருந்துவதா என்று தெரியாமல் தினறிப்போனார். தங்கள் தொழில் குழுமத்தின் முப்பது வருட தூண் சரிந்ததை தொடர்ந்து, தொழில் போட்டியை சமாளிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் சிவகுரு உடல்நிலை தேறிவரும்வரை, தானே அந்த பொறுப்பை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்தவர், அதைப்பற்றி விவாதிக்க, மணியை அழைத்தார்.
உள்ளே நுழைந்த மணி, கைகளில் திருத்தி எழுதிய பேப்பருடன் வந்தான். அமர்ந்தவன் அதை, அவன் தன் தாத்தாவிடம் கொடுக்க, படித்த பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் இவனை நிமிர்ந்து பார்த்தார்.
"நமக்கு உரிமையுள்ளத, நாமதான் எடுத்துக்கணும், யார்கிட்டயும் கேட்கக்கூடாது!!. எனக்கு இப்ப புரியுது தாத்தா!! மொத்த சொத்தையும் எழுதி கொடுத்த நீங்க, ஏன், நான் கேட்டதும் என்ன சேர்மன் ஆக்கலனு!! தைரியமா கையெழுத்துப் போடுங்க!! இப்ப, நீங்க போடுற கை எழுத்துக்காக, எப்பவுமே வருத்தப்பட மாட்டிங்க!!" நிறுத்தி, நிதானமாக, தெளிவாக பேசினான் மணி.
என்ன நினைத்தாரோ, கையெழுத்திட்டு, அந்த காகிதங்களை மணியிடம் நீட்டியவர் கண்களில், பெருமிதமும், அதைத் தாண்டிய நிம்மதியும்.
***************
இரண்டு நாள் கழித்து,
ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கான, மொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணி. அதன் கடைசி நகர்வை, தன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும், சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான். தனக்கும், தன் தந்தைக்கும், நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும். கண்டிப்பாக, தன் தாய், அதைப் பற்றி, வெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம், சிவகுருவின் செக்கரட்டரி, சங்கரபாணி மீது விழுந்தது. இதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரை, நிரந்தரமாக அமைதியாக்க, அவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான். அவரை அழைத்தவன்
"நீங்க, வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால், ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோட, செகரட்ரியா தொடரலாம், இல்ல, அந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனா, இப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன், சில காகிதங்களை, சங்கர பாணியை நோக்கி நீட்டினாள். குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடு, தானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டிய, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்தது. சங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில், தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார். ஒரே வேளை அவரின் விசுவாசம், சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால், மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
தன் தந்தையின், வலதுகையாக செயல்பட்டவறின் மூலம், மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான், மணி. யாரையும் இழக்க விரும்பாதவன், அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும், யாரை, எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான். அடுத்த சில நாட்களிலேயே, திட்டமிட்டது போல், பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான். தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாக, புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது, அதிலேயே அவன் தங்குவதற்கென, அதன் மாடியில், அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்.
பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனி, உடனே உயரே பறக்காவிட்டாலும், அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல், ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றது. அந்த புதிய அலுவலக கட்டிடமோ, எழுந்து நின்றது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின், கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.
*****************
கட்டிட திறப்பு விழா முடிந்த, பத்து நாள் கழித்து.
தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதை ஒட்டி இருந்த, தனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதிய, வீட்டின் கதவை, நோக்கி நடந்தான்.
"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள், அவன் கால்களை கட்டிப் போட்டது.
ஒரு கையும், காலும், சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாத, ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான், சிவகுரு. பின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்கு, தினமும், மணியைப் பார்க்க, பார்க்க, அது அவனது உடல் சுகவீனத்தை, மேலும் கடுமையாக்கியது. பழனி செல்வதென்ற முடிவு செய்து, புதிய கட்டிடம் திறந்த மறுநாள், சுமாவை அழைக்க, அவளும், சிவகுருவுடன் சென்றாள். பழனி சென்றவள், தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, பெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடு, பத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள். திரும்பி வந்தவளுக்கு, கடந்த பத்து நாட்களாக மணி, வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்பட, அவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். அவன் அருகில் சென்ற சுமா,
"உன்ன, நான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனா, நான்தான் பெத்தேன்!!. நான் தான் உன் அம்மாங்கிறதுல, உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள், சுமா. கட்டுப்படுத்த முடியாதவள், தன் மகனை அணைத்து, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.
"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,
"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூட, நிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!" என்றவள், மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால். அவள், அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், பின், அவளை விலக்கிக்விட்டு, அவள், சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போல, அவன் அறையை நோக்கி நடந்தான்.
“உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அவன் இல்லை. ஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில், தொழில் முனைப்பு காட்ட வைத்து. அவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அது. அந்த முனைப்பிலேயே, வரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள், மீண்டும் அடி எடுத்து வைத்தான், சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்த, பத்து நாள் கழித்து. மொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள், மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
***************
டிஸ்கி
உணர்வுகள் இல்லாத, மிருகமென மாறி, மணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலை, வெறியோடிருக்க, அதே காலகட்டத்தில், டெல்லியில், தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது. அவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய், அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட, மயிர்க்கூச்செறிந்தவள், பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன், உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள். அவளை, வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த, அவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்.
***************
அதே காலகட்டத்தில், டெல்லியில்,
தன் வாழ்வின் தூண்கள் என்று யாரை எண்ணியிருந்தாளோ, அவர்கள் தனக்கு இழைத்த துரோகத்தினை எண்ணி எண்ணி கண்ணீர்விட்டவளின் காயத்திற்கு, அவள் வடித்த கண்ணீரே மருந்தானது. காலத்திற்கும், கண்ணீருக்கும் ஆறாத காயங்கள் எது? தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது.
இந்த நான்கு வருடங்களில் மதுவின் வாழக்கையை முன்நகர்த்தியா முக்கியமான சில நிகலவுகள்.
*************
கல்லூரி முடிந்து ஒருவருடம் கழித்து,
ரஞ்சித், Nero surgeon ஆகும் முனைப்பில், சிங்கப்பூர் சென்று படிப்பதற்க்கு முன் மதுவுக்கும், அவனுக்கும், நடந்த உரையாடல்.
"அப்புறம், அடுத்து என்ன பிளான்?" சிங்கப்பூர் செல்வதற்கு முன், ஒரு வாரம் சென்னையில் தங்கி விட்டுச் செல்லலாம் என்று, தனது மூட்டை முடிச்சுகளை கட்டிய ரஞ்சித், டாக்சிக்கு காத்திருந்த வேளையில், அருகிலிருந்த மதுவிடம் கேட்டான்.
"உனக்கு டாட்டா காட்டிட்டு, வீட்டுக்கு போகணும்!!" சிரித்தால் மது. சில நிமிட அமைதிக்குப் பின்
"ஐ லவ் யூ!!, மதி!!" மீண்டும் கடந்த ஒரு வருடமாக, மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டிவிட்டால் ரஞ்சித். ரஞ்சித் சொன்னதை நம்பமுடியாமல், வலதும் இடமுமாக தலையசைத்தாள்.
"உன்னை நான் வற்புறுத்துறேனு நினைக்காத!! ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவுதான்!!" என்றவனை பார்த்து சிரித்தாள், மது.
"என்னை, எதுக்கு நீ மதினு கூப்பிடுற?" பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான், ரஞ்சித்.
"ரஞ்சித்!!" மது பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தான் ரஞ்சித்.
"நீ, உன்னோட வெண்ணிலாவ, என்கிட்ட தேடுற, நீ சொல்றத ஒத்துக்கீட்டு, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாகூட உன்னால சந்தோஷமா வாழ முடியாது!!. முதல்ல, அவளத்தாண்டி உன் வாழ்க்கைய பத்தி யோசி!!" நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் மது.
"உன்னால, அவனைத் தாண்டி யோசிக்க முடியுமா மது?" தன் மனதில் பட்டதை கேட்டான் ரஞ்சித்.
"தெரியல!! ஆனா, கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்!! வாழ்க்கையா வாழ்ந்தாகனும்ல!!" சிரித்தவள், சில நொடிகள் யோசித்துவிட்டு.
"ஆனா, கண்டிப்பா அவனோட பிம்பத்தை, என்னால, யார்கிட்டயும் பார்க்க முடியாது!!" தீர்க்கமாக சொன்ன மது, அவனிடம் விடைபெற்று சென்றாள்.
*************
"எனக்கு நீங்க தெய்வம் மாதிரி!!" நாற்பதுகளின் தொடக்கத்தில், தன்னைவிட பத்துப் பதினைந்து வயது மூத்த பெண்மணி, தன் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அழ, உணர்ச்சிக் கொந்தளிப்பில், சிரமப்பட்டால் மது.
12 வயது சிறுவன், கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் அடிபட்டு, பந்தின் தாக்கத்தால் அடி பட்டவுடனேயே சுருண்டு விழுந்திருந்தான். அவனை, ஹாஸ்பிடல் கொண்டு வரும்பொழுது, சுயநினைவை இழந்திருந்தான். அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்ட அன்று, trauma careல் மதுதான், டூட்டி டாக்டர். முதல்உதவி சிகிச்சை அளித்த பின், வழக்கமாக செய்யப்படும் சோதனைகள் முடிவுகளில், அந்தச் சிறுவனின், மண்டையோட்டின் பின்பகுதியில் சின்ன கிராக், அதுவும் போக பந்தின் தாக்கத்தால் concussion தான், மயக்கத்திற்கு காரணம் என்று அறியப்பட்டது. (கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கலாம். நுரையீரல் போல, மூளையும் பஞ்சு போல் மிருதுவானது(ஹி!! ஹி!!). ஒரு உயிரின் மொத்த செயல்பாட்டையும், கட்டுக்குள் வைத்திருக்கும் மூளை, உடலமைப்பில், இருப்பதிலேயே கடினமான எலும்பால் ஆனா, மண்டை ஓட்டினுள், தண்ணீர் போன்ற திரவத்தில், மிதந்து கொண்டிருக்கும். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளில், தலையின் வேகமான அசைவு, அந்தத் திரவத்தின் பாதுகாப்பிலிருந்து மண்டை ஓட்டில் உட்புற சுவர்களில் மூளையானது மோதும் பொழுது, ரத்தக் கசிவோ அல்லது வீக்கமோ ஏற்பட்டு, நினைவு இழக்கும் பாதிப்புதான் இந்த concussion).
மூன்று நாட்களாகியும் நினைவு திரும்பாத சிறுவன், இனி பிழைப்பது கடினம் என்றே முடிவு செய்தது, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த, மதுவும் அங்கமாக இருந்த, மருத்துவக் குழு. நான்காம் நாள் ஏற்பட்ட, ஒரு சின்ன முன்னேற்றம் கொடுத்த நம்பிக்கையில், சிகிச்சைகள் வேகம் எடுக்க, பத்து நாள் கழித்து கண்விழித்தான், அந்த சிறுவன். மருத்துவக் குழுவும் பெரிதாக சாதித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்க, உயிர் பிழைத்த அந்தச் சிறுவனின் பெற்றோர், மருத்துவர்களை தெய்வமேன பார்த்தனர். அவர்கள் அந்த மருத்துவக் குழுவின் தலைவரான கோபால கிருஷ்ணனிடம், நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான், அவர், மதுதான், அவர்கள் மகன் பிழைப்பதற்கு முக்கிய காரணம் என்று கைகாட்டிவிட்டு சென்றிருந்தார். அதன் பின்னால் நடந்ததே, மதுவின் சிரமத்திற்கு காரணம்.
************
இரண்டு நாள் கழித்து,
மது வேளை பார்க்கும் மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான கேன்டினில், மதிய உணவு உண்டு கொண்டிருந்தாள், மது.
"நான் இங்க உட்காரலாமா!! மா??" சத்தம் வந்த திசையைப் பார்த்தாள், மது.
"ஐயோ சார்!! ப்ளீஸ் உட்காருங்க!!" கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே சொன்னாள், மது.
"தாங்யு!! மா!!" அமர்ந்தவர், உணவருந்த தொடங்கினார்.
"இட்ஸ் அண்பேர் சார்!! Dr.சிங்தான் மேக்ஸிமம் எஃபாட் போட்டாரு!! அவர் இருக்கும்போதே, எல்லா கிரெடிட்டையும் எனக்கு கொடுத்தது!!.இட்ஸ் அண்பேர் சார்!!" இரண்டு நாட்களாக சொல்ல வேண்டும் என்று மனதில் இருந்ததை, நேரம் வாய்த்ததும் சொல்லிவிட்டாள், மது. நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தவர்,
"இந்த ரெண்டு வருஷத்துல, இந்த மாதிரி எத்தனை கேஸ் நீ பார்த்து இருக்க?" மதுவைப் பார்த்துக் கேட்டார்.
"ஒரு.. இருபது.. இருபத்தைந்து கேஸ் இருக்கும்!!" திடீர் கேள்வியில் குழம்பினாலும், பதில் அளித்தாள் அது
"நான் ஹெட் இஞ்சுரி கேஸ் கேட்கலா மா!!, கண்காஷன் கேஸ், எத்தனை அட்டென்ட் பண்ணி இருக்க?" தன் கேள்வியை தெளிவாக்கினார்
"இதுதான் பர்ஸ்ட்!!" சில நொடிகள் யோசித்தவள், உதடு பிதுக்கினாள்.
"நானும், Dr. சிங்கும், எங்க சர்வீஸ்ல, இத மாதிரி எத்தனை கேஸ் பார்த்திருப்போம்னு நினைக்கிற?" அடுத்த கேள்வியைக் கேட்டார்.
".." மீண்டும் உதடு பிதுக்கியவள், "எனக்கு எப்படித் தெரியும்?" என்பது போல் தோள்களை உயர்த்தினாள்
"ஜஸ்ட், த்ரோ மீ சம் நம்பர்?"
"ஒரு. அம்பது. அறுபது!!" குத்துமதிப்பாக சொன்னால் மது.
"இட்ஸ் ஜீரோ!!, சீ, ஹெட் இஞ்சுரி ரொம்ப ரெகுலரான ஒன்னு!! நான் உன் வயசுல இருக்கிறப்ப, வருசத்துக்கு, முப்பது, நாற்பது கேஸ் பார்த்திருப்பேன்!! பட், கண்காஷன் எனக்கும் சரி, நீ சொன்ன Dr.சிங்குக்கும் சரி, இதுதான் பர்ஸ்ட் டைம்!! அண்ட், உனக்கே தெரியும், நான் சும்மா பேசணும்னு பேசுற ஆள் கிடையாது!! அதுவும் போக, டாக்டர் சிங், என்கிட்ட சொன்னதத்தான் , நான் அந்த பையனோட, பரேண்டஸ் கிட்ட சொன்னேன்!!. நீயும் தமிழங்கிரதால இல்ல!!. You deserve it. Characters are not made in crisis, they are exhibited!!. You exhibited your talent in a crisis. That's it!! இன்னும், அந்த பாராட்டுக்களுக்கு, தகுதி இல்லை உனக்கு தோணுச்சுன்னா, ஐ டேக் பேக் மை வேர்டஸ்!!" என்றவர், எழுந்து கை கழுவச் சென்றார். சுய கழிவிரக்கத்தில் இருந்து, தன்னை மீட்டுக்கொள்ள, போராடிக்கொண்டிருந்த மதுவிற்கு, பெரும் தாக்கத்தைத் அந்த தருணம் அது.
****************
இரண்டு வாரங்கள் கழித்து,
"நான் எப்ப? திரும்பவும் கிரிக்கெட் விளையாட முடியும்?" எப்பொழுதும் போல் தினசரி பரிசோதனைக்கு சென்றிருந்த மதுவைப் பார்த்து, சாவை நெருங்கி, தொட்டுவிட்டு, அதன் பிடியில் இருந்து, தப்பிவந்த அந்த சிறுவன் கேட்டான். கொஞ்சம் உடல்நிலை தேறியதும், அவன் கேட்ட கேள்வியில், மதுவும் திகைத்துத்தான் போனாள். சமாளித்துக்கொண்டு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!!" என்றவள், அவன் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள்.
அந்தச் சிறுவனின் அன்னையோ, எரித்துவிடுவது போல் தன் மகனை முறைத்துக் கொண்டிருந்தாள். அன்றைய பரிசோதனை சுற்றை முடித்து கொண்டு, தனது அறைக்கு வந்த மதுவின் நினைவில் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, அவனது அம்மா கொடுத்த எதிர்வினையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கள்ளம் கபடமில்லாத சிறுவர்களின் உலகம் மிகவும் அலாதியானதுதான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற, தனக்குள் சிரித்தவள், அந்தச் சிறுவனின் அம்மா முறைத்தது நினைவுக்கு வர, தான் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தவள், அடக்க மாட்டாமல் வாய்விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பை இடையூறு செய்தது, தொலைபேசி அழைப்பு. ரஞ்சித் தான் அழைத்திருந்தான். அழைப்பை எடுத்து தொலைபேசியை காதுக்கு கொடுத்தவள்,
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான இருக்க?" ஹலோ என்று சொல்வதற்கு முன்னமே, ரஞ்சித் கேட்க, அப்பொழுததான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, அவன் டெல்லி வருகிறேன் என்று சொன்னது, மதுவுக்கு.
"இல்லையே!! வீட்டுக்கு வந்துட்டேன்!!" சமாளித்தாள்.
"தேங்க் காட்!!, கதவ திற!!, நான் வெளியே தான் வெயிட் பண்றேன்!!" என்று ரஞ்சித்து சொல்லவும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்த மது
"ஒரு, 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுறியா?" "என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தாள்.
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்க?" நான்கு வருட நட்பில், மதுவை முழுதாக புரிந்து வைத்திருந்தான் ரஞ்சித்.
"சாரி டா!! சாரி டா!!" என்று வழிந்தாள்.
"பொய் சொன்னதுக்கும், என்ன வெயிட் பண்ண வச்சதுக்கும், உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்னு, நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள, ஒழுங்கா வந்து சேரு!!" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
மது வேலைபார்த்த ஹாஸ்பிடல் அருகே, மிகவும் பாதுகாப்பான, ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் ஒன்றில்தான் வசித்து வந்தாள். குடியிருப்பவர்களையும், அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் படிப்பை முடித்தவன், இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்கு பின், இப்பொழுதுதான் மதுவைப் பார்க்க டெல்லி வருகிறான், ரஞ்சித்.
*********************
20 நிமிடம் கழித்து,
அப்பார்ட்மெண்ட் வாயிலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள், மது.
"மேடம்!! உங்கள பாக்குறதுக்கு விசிட்டர் வந்து இருக்காங்க!!" மதுவை கவனித்துவிட்ட காவலாளி, அவளிடம் ஓடி வந்து சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சித், அப்புறம், இங்கு மருத்துவமனையில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், புதிதாக நடப்பு வட்டத்தில் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களை மட்டுமே, தன்னை பார்க்கவரும் விருந்தினர்களாக பதிவு செய்திருந்தாள் மது. "எதுக்காக ரஞ்சித் விசிட்டர் ரூம்ல வெயிட் பண்ணனும்" என்ற சிந்தனையுடனே, வாயில் கதவின் அருகிலேயே இருந்த விசிட்டர் அறைக்குள் நுழைந்தவள், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள். பின் சுதாகரித்துக் கொண்டவள்,
"இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது??" என்றவள், விறுவிறுவென்று தனது அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி நடந்தாள்.
"பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!! பானு மா!!" என்ற சிவகாமியின் கெஞ்சல், அவள் நடையின் வேகத்தை கூட்டியது. முதலில் வேகமாக நடக்க ஆரம்பித்தவள், சிவகாமியை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளிகளிடம், அவள் கெஞ்சுவது காதில் விழ, ஓட ஆரம்பித்தாள்.
அப்பார்ட்மெண்டில் நுழைந்தவள், தன் தோள் பையை சோபாவில் எறிந்தாள். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, அமைதியாக அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்து, இரண்டு நிமிடம் கூட இருக்காது, அவளது தொலைபேசி அடித்தது, அதை எடுத்து காதுக்கு கொடுக்க,
"மேடம், உங்கள பாக்க வந்தத விசிட்டர், மயங்கி விழுந்துட்டாங்க!!" காவலாளி அறையில் ஒருவர் பேச, அவள் உள்ளம் முரண்டு பிடித்தாலும், கால்கள் ஏனோ வாயிற்கதவை நோக்கி விரைந்தது. எதிரே வந்து கொண்டிருந்த, ரஞ்சித்தை கவனியாமல் ஓட்டமும் நடையுமாக பதட்டமாக கடந்து சென்று அவளை கேள்வியாக பார்த்தவன், பின் அவள் பின்னால் சென்றான். பார்வையாளர் அறையிலிருந்த ஷோபாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் சிவகாமி. ஏற்கனவே தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தது முகத்தில். ஒரு நிமிடம் தன் தாயின் நிலையை நினைத்து கலங்கித்தான் போனாள் மது.
"ஆம்புலன்ஸ்க்கு சொன்னீங்களா?" சிவகாமியைப் பரிசோதித்தவள், வாயில் காவலர்களிடம் வினவினார். அவர்கள் இல்லை என்று தலையசைக்க, அவள் ஆம்புலன்சுக்கு அழைக்க முயற்சிக்கையில் தான்
"வேண்டாம், கார்ல கொண்டு போகலாம்!!" என்ற ரஞ்சித்தின் சத்தம் கேட்டு அவனை பார்த்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில், மது வேலை செய்யும் மருத்துவமனையிலேயே, அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் சிவகாமி. மருத்துவமனையில் நுழைந்ததும், அட்மிட் செய்வதற்கான படிவம் ரஞ்சித்தின் கைகளில் கொடுக்கப்பட, அவனோ, செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, அவன் கையிலிருந்து அதை வாங்கிய மது கடகடவென பூர்த்தி செய்து கொடுத்தாள். ஏதோ ஒரு அவசர நிலைக்கு உதவுகிறாள் என்றுதான் அதுவரை நினைத்திருந்தால் ரஞ்சித், பின் கடந்த இரண்டு வருடத்தில் பழகிய நபராக இருக்கக்கூடும் என்று நினைத்தான்.
பத்து நிமிடம் கழித்து,
"கவலைப்படுவதற்கு ஒண்ணுமில்ல!!, ஹைபர்தென்ஷன், ஹை B.P.!! செட்டேட் கொடுத்திருக்கோம்!! இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு வரைக்கும் அபசர்வேசன்ல்அ வச்சிருக்கலாம்!!, ஸ்டேபில இருந்தா, நாளை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!!" என்ற, மருத்துவர், அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
மருத்துவர் சென்றதும், சிவகாமியின் அருகில் அமர்ந்தவள், தன் அன்னையைப் பார்த்தாள். அவள் மறக்க நினைத்த வாழ்வின் எண்ணங்கள், மனதை நிரப்பிக்கொள்ள, மதுவின் மனதோ, உலைகலன்யென, பலதரப்பட்ட உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கிடந்தது. தன் எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவள், உறங்கிக் கொண்டிருக்கும், தன் தாயை நிமிர்ந்து பார்த்தாள். கடைசியாகப் பார்ப்பதைக் காட்டிலும், சற்று மெலிந்து இருந்தால், தோலின் மினுமினுப்பு காணாமல் போயிருந்தது, முடிகளில் பாதி நரைத்திருந்தது. சிவகாமியை யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு சென்ற பொழுது, "பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!!" என்ற தன் தாயின் வார்த்தைகளில் இருந்த வலி, இப்போதுதான் மதுவின் மனதை எட்டியது. மனதை எட்டிய வலி, கண்ணீராக, கண்களின் வழியே வலிய, துடைத்துக் கொண்டுவளை
"யாரு இவங்க?" ரஞ்சித்தின் கேள்வி, அவளை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. மதுவின் கண்களில் வழிந்த கண்ணீர், ரஞ்சித்தின் அமைதியையும் கலைத்திருந்தது.
"அம்மா!!" கண்களில் இருந்து மீண்டும் கண் நீர் வெளியேறியது.
முதலில் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தின் மனதில் ஆயிரம் கேள்விகள். ஆனால் சூழ்நிலை கருதி, தக்க சமயம் வரும்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியானான்.
************
மறுநாள் காலை,
"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான், உள்ளே நுழைந்ததும் பார்த்தால், மது.
"என்கிட்ட தான், இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள், தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள், தலையை குனிந்து கொண்டாள், சிவகாமி.
அதிகாலையில், தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம், வாயில் காவலர் ஒருவர் வந்து, தற்பொழுது, சிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.
"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல், எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,
"நீ, போய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம், தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.
அன்று மாலை 6 மணி,
"உன்னோட பிளைட் டிக்கெட், இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டை, தன் தாயிடம் நீட்டியவள், மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள், மது.
எப்பவும் சொல்லாத சிவகாமி, மது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள். சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.
"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேச, எனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.
"எனக்குத் தெரியும், எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"என்ன மன்னிக்கவே மாட்டியா? பானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால், சிவகாமி.
"உன்ன, ஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள், ரஞ்சித் அறையில் நுழைந்ததும், கண்களை துடைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த ரஞ்சித், மதுவின் காதில் ஏதோ சொன்னான். அவனிடம், அவள் "தேங்க்ஸ்" என்றதும், அவன் அங்கிருந்து நகர்ந்தான். சிவகாமியிடம் திரும்பிய மது,
"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளை, கெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள், சிவகாமி. ஒரு பெருமூச்சு விட்ட மது.
"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள். அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம், அந்த அறையைவிட்டு வெளியேறினாள், மது.
*************
இன்று இரவு,
"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.
"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித், சிவகாமி, வாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான். அதை வாங்கி மது, அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல், கபோர்டு திறந்து, அதை, அதற்குள் வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள், அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால், ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,
"சரி, இப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால், ரஞ்சித்திடம் பேசுவதற்கு, இப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.
"நெக்ஸ்ட் வீக், பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித், சொன்ன செய்தியும், அவனது சிரிப்பும், மதுவை, சிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டது. பின்னர் அது தொடர்பான பேச்சிலேயே, அடுத்த அரை மணி நேரம் செல்ல, தூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள், மது.
"மதி!!" மது, கதவை அடைக்கும்முன், அவள் பெயர் சொல்லி அழைத்தான், ரஞ்சித்.
"உனக்கும், உங்கம்மாக்கும், என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட், முடிஞ்சா, அவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,
"உன்னால, வெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள். விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.
"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித், போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.
**************
மற்ற உறவுகளை போல் அல்லாமல், பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும், நமக்கு கொடுக்கப்பட்ட உறவு, மற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வது. பிடித்திருக்கிறதோ, இல்லையோ, அவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோ, இல்லையோ, சாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவு, அது. நான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும், அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்து, கசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம். அதுவரை, அவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியது, காந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலை. உறவுகளும், சமூகம் அண்ணார்ந்து பார்த்த, எப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம், அந்த கம்பீரம் அவள், எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை. காலத்தாலோ, விதியாலோ, இழந்த மதியாலோ, நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.
துணை இல்லாமல், இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை, கடந்த நான்கைந்து வருடங்களில், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள், மது. அப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல், முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்தது. அந்த வார்த்தைகள் கூட, உடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல், அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள். சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கை, குடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்.
அதே நேரத்தில், தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூட, அதற்கு மது கொடுத்த விலை, அவளது வாழ்க்கை என்பதால், தன் தாயை மன்னிக்கும் மனநிலையை, தான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள். இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும், குறுகிய காலமென்றாலும், உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன், கொடுப்பினை போன்றதொரு வாழ்வை, மணியுடன் வாழ்ந்திருந்தாள், அவள். அனைத்தையும் தாண்டி, வாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின், மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமா? அப்படி முடியும் என்றால்? தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானா? அவனின் வாழ்வில், தனது முக்கியத்துவம், அவ்வளவுதானா? அடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்கு, எல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளை, அவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்? என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு கேள்விகளுக்கும் விடையை எண்ணி, எண்ணி, அவள் எத்தனை முறை கலங்கினாள், கண்ணீர் விட்டாள், என்பதை காலம் மட்டுமே அறியும். இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால், அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு.
**************
மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்கு, இரண்டு வாரங்களுக்கு முன், மதுவின் வாழ்வில்
தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும், அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்க, மது, அந்தச் சிறுவனுக்கு, அன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை, ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான், மது, என்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும். அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால். பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால், அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,
"ஒன்னும் இல்ல பயப்படாத" இளம் வயதிலேயே, உயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்.
பின் தன் கவனத்தை, மருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள். அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,
"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறது, மயக்கம், இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தா, கெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும், பெற்றோரின் முகத்தில் நிம்மதி. சிறுவனின் முகத்தில், அதே பரிதவிப்பு. அதைக் கண்ட மது, என்ன? என்பது போல், அந்த சிறுவனைப் பார்த்தாள்
"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்ல, விளையாட முடியுமா? முடியாதா? என்றுதான் என்பதை உணர்ந்த மது, சிரித்து விட்டாள். அந்தச் சிறுவனின் பெற்றோரோ, அவனை எரித்து விடுவதுபோல், முறைத்துக் கொண்டிருந்தனர்.
"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள், மது.
ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, அவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியது. அதுவும் இல்லாமல், ஒரு டாக்டராக, அந்த சிறுவன், முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும், அந்த சிறுவன், அறையிலிருந்து வெளியேறியதும், அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள், ஒருவாராக, அவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள். அவர்கள் சம்மதித்ததும், மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள், இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன். மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,
"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்ட, தன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டான், அந்தச் சிறுவன். அவன் அழுகையை நிறுத்துவது, பெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்கு. சிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில், மது நெகிழ்ந்திருந்த வேலையில், பட்டென, அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், அந்தச் சிறுவன். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், வட இந்தியாவில், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, வழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும், அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை, அவள். அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.
*************
அன்று இரவு,
சாப்பிட்டு முடித்தவளுக்கு, அந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது, மனதில். அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, திரும்பத், திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்தது. சிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில், இதேபோன்ற பரிதவிப்புடன், இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றது. அவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போக, முகம் வெளிறியது, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
***************
நிகழ்காலம்.
அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவினாஷ் தாக்கறின், கிரீன் பவர் நிறுவனத்தை, கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடு, அதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டி, ஒரு மின்னஞ்சல் அனுப்பினான், மணி. அவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, அந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்தது. அடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்து, அப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன், டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன், தனது, அலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.
கதவை திறந்தவன், வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா.
*************
கொடைநாடுலிருந்து கிழக்குப் பக்கமாக இருக்கிறது ,டைகர் வேலி எஸ்டேட். ஒரு வருடத்திற்கு முன், இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியிருந்தது மணியின் நிறுவனம், அதுவும் அவனது வற்புறுத்தலால். அடர்ந்த இருட்டில், ஒரு மலைமுகட்டின் மீது அமர்ந்திருந்தான், மணி. அடித்தக்கொண்டிருந்த வாடைக்காற்று, அவனது கொதித்து கொண்டிருந்த மனதுக்கு, இதமாக இருந்தது. தன் முன்னே தெரிந்த, அந்த இருண்ட பள்ளத்தாக்கை, வெறித்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப்பின், மனதில் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி குடியேறுவதை போல உணர்ந்தவன், அமர்ந்திருந்த மலைமுகட்டில் இருந்து இறங்கினான். அருகிலேயே இருந்த ஒற்றை, ஓடு வேய்ந்த, கற்களால் கட்டப்பட்ட வீட்டினுள் நுழைந்தான். போர்வையை வெறும் தரையில் விரித்தவன், நீண்ட நாட்களுக்கு பிறகு, படுத்ததும் தூங்கிப்போனான்.
**************
மணி வெளியேறியதும், சிவகுருவும், சுமாவும், என்ன நடந்தது என்பது கூடப் புரியாமல், பித்து நிலையில், நெடுநேரம் அமர்ந்திருக்க, தன் மகனின் சொற்களில் இருந்த உண்மை, கொஞ்சம் கொஞ்சமாக சுமாவின் மனதில் இறங்கியது. தான், வாழ்ந்த வாழக்கையே பொய்யோ என்ற எண்ணம் எழ, உடைந்து அழ ஆரம்பித்தாள், சுமா.
சுமாவின் அழுகை, சிவகுருவை, நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. தயங்கி, தயங்கி, அவள் அருகில் சென்றவன், அவள் தோளை தொட்டான். சிவகுரு தொளைத் தோட்டதும், நிமிர்ந்து அவனைப் பார்த்த சுமா, வெடித்து அழுதாள். மனைவியின் அழகை, சிவகுருவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவன், அப்படியே மனைவியின் அருகே அமர்ந்து, அவள் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொள்ள
"ச்சீ!!" என்றவள், நெருப்பால் தீண்டப்பட்டதைப் போல், துள்ளி எழுந்தாள். அழுதுகொண்டே மாடிக்குச் சென்று அறையை பூட்டிக் கொண்டாள். பதறிய சிவகுரு, தன் மனைவியின் பின்னால் ஓடினான். தன் மனைவி எங்கே தன்னை மாய்த்துக் கொள்வாளோ என்று பதறிவன், அறையின் கதவை பலம் கொண்டு தட்டினான். ஒரு கட்டத்தில் சோர்ந்து அப்படியே சாத்திய கதவில் சாய்ந்து அமர்ந்துதவன்
"அவன் ஏதோ முட்டாதனமா பேசுறான் டி!!, நான்.. உன்ன சந்தேகப்படுவேன்னு.. நீ நம்புறியா?" பெருங்குரலெடுத்து கத்தினான். உள்ளே இருந்து "ஓ" என்று ஓலமிட்ட சுமாவின் அழுகை, அவனுக்கு கொஞ்சம் சாக மாட்டாள் என்ற ஆறுதலோடு, அவன், கேள்விக்கான பதிலையும் சொன்னது. நிம்மதி இழந்தான், சிவகுரு.
*************
மறுநாள் காலை,
மணியின் பார்வையில்,
நேற்றிருந்த மனநிம்மதி இல்லை, இப்பொழுது, என்னிடம். நேற்று, இரவைப் போலவே, அதே மலைமுகட்டில் உட்கார்ந்து, எதிரே விரிந்துகிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன். மனதிலும், கண்களில் இருந்த அதே வெறுமை. இதே மலைமுகட்டில் மதுவின் மடியில் படுத்துக்கிடந்து கொஞ்சிக் கொண்டிருந்தது, என் நினைவு வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, ஏதோ போன ஜென்மத்து நிகழ்வு போல் தோன்றியது.
மது!!. பத்தொன்பது வயதுக்காரிக்கு!!, பதினாறே வயதான!! நான்!! இட்ட பெயர்!!. என்னை அன்னை, போல் அரவனைத்த, என் மது!!
நினைவு தெரிந்து, அவளைத் தவிர, வேறு யாரையும் காயப்படுத்தியிருக்காத, நான், நேற்று, யாரின் அன்பிறக்காக, என் சிறுவயதில் எங்கித் தவித்தேனோ, அவர்களை உயிரோடு கொன்று புதைத்துவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், மனம் முழுக்க வெறுமையோடு. மனம் போலவே, பார்வையும், இலக்கில்லாமல் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள், இல்லாது போன இந்த காலகட்டத்தில், நான், நானே அறியாத, புரிந்துகொள்ள முடியாத, என்னவாகவோ மாறிப்போனேன்.
அந்த பைக் ஆக்சிடென்ட் க்குப் பிறகு, முதன் முதலாக கோயம்புத்தூர் வந்ததில் இருந்து அவ்ளது எண்ணங்களை, எட்டியே வைத்திருந்தேன். நேத்ரா, அவள்தான், என் அலுவலக கதவைத் திறந்து கொண்டு வந்தவள், அதுவரை, நான் தள்ளி வைத்திருந்த, என் மதுவின் நினைவுகளை, நெருப்பென ஊற்றி போனாள், என் மனதில். ஒரு காலத்தில், மாசு தீண்டா இளம் தென்றலாய், என்னை சிலிர்க்கச் செய்த மதுவின் நினைவுகள், வெடித்துச் சிதறிய எரிமலை குளம்பு ஓடும் நெருப்பாற்றில், என்னை தள்ளிச் சென்றாள், நேத்ரா. வெளியேறும் வழியே இருந்தாலும் வெளியேற விரும்பாத, சுட்டெரிக்கும் வெப்பமே, இயல்பென மாறியிருந்த மதுவின் நினைவுகளில், துடித்துச் சாவதுதான், நான் செய்த பாவத்தின், விலை என்பதை, முதல்முதலாக உணர்ந்த தருணம் அது. என் முன்னால் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன்.
"தம்பி!!" என்ற சத்தம் என் வெறுமையை விரட்டியது.
திரும்பிப் பார்த்தேன், நாற்பதுகளின் நடுவில், எனது வயது என்று சொல்லும், தொப்பையும், ஆங்காங்கே நரைத்த முடியுமாக, ஒருவர் நின்றிருந்தார்.
"இப்பதான் தம்பி, வாட்ச்மேன் சொன்னாரு!! நீங்க நைட்டு வந்தீங்கனு!!" பேசிக் கொண்டிருந்தவர், என் முகத்தில் தோன்றிய எரிச்சலில் உணர்ந்துகொண்டார் போல
"தம்பி!! நான் எஸ்டேட் மேனேஜர்!!" அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, தலையசைத்தேன்.
"தம்பி!! நீங்க தங்குறதுக்கு பங்களோ ரெடி பண்ணிட்டேன் .!!" சொல்லிக்கொண்டு இருந்தவரை இடைமறித்து
"இந்த கேட்டோட சாவி, இருக்கா?" சற்று தூரத்தில், எஸ்டேட்டின் எல்லைவேலியில், இருந்த கேட்டை காட்டி, கேட்டேன்.
"இருக்கு தம்பி!! நம்ம கிட்ட ஒன்னு, ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கிட்ட ஒன்னு!! ரெண்டு கீ இருக்கு தம்பி!! உங்களுக்கு.."
"எனக்கு அந்த கீ வேணும்!!" மீண்டும் அவரை இடைமறித்தேன் , சரி, என்று தலையசைத்தவர், அருகிலிருந்த ஜீப்பில் ஏறப் போனார்.
"உங்க பேர் என்ன?"
"சண்முகம்!! " லேசாக சிரித்தவாறு என்னை நோக்கி வந்தார்.
"சண்முகம்!!, அந்த கீ-யோட, நாலு இட்லி!!, ஒரு ஆம்லெட் வேணும்!! நீங்க, உங்க வேலைய பாருங்க!! நான், கேட்டத யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க!!" மீண்டும் அவரை பார்க்க விரும்பவில்லை என்பதை, அவருக்கு உணர்த்தினேன்.
"ஓகே, சார்!!" அவரிடம் அந்த கேட்டின் சாவியை கேட்டது, அவரை அப்புறப்படுத்த என்பதை உணர்ந்து கொண்டார், அப்படியே என்னையும்.
***************
அரை மணி நேரம் கழித்து,
அதே மலை முகட்டில் அமர்ந்திருந்தேன். இந்த முறை, வேலியில் இருந்த கேட்டிலேயே, என் பார்வை இருந்தது. கேட்டின் அந்தப்புரம், மிருங்கள் வாழும் அடர்ந்த காடு, நான் அமர்த்திருந்தது, மனிதர்கள், தங்கள் வாழவதற்கு ஏதுவாக, செம்மை படுத்திய, நிலம். கையில் இருந்த அந்த கேட்டின், சாவியை உருட்டிக் கொண்டிருந்தேன். என் மனதில், ஏதோ ஒரு சின்ன உறுத்தல். நேற்று, நான் ஆடிய ஆட்டத்தில், ஏதோ ஒன்று இன்னும் எனக்கு புலப்படாமல் இருந்தது. ஏன், என் அப்பா, அவரிடம் இருக்கும், நானும் சிவகாமியும் கூடிக் களித்த வீடியோவை காட்டி, என்னை மிரட்டவில்லை?? மொத்தமாக அடித்து வீழ்த்தப்படப் போகிறோம் என்று தெரிந்தும், எப்படி ஒருவனால், தன்னிடம் மிச்சமிருக்கும், ஒரு பலமான ஆயுதத்தை உபயோகிக்காமல் இருக்க முடிந்தது?? சின்னதாக ஆரம்பித்த கேள்வியின் மன உறுத்தல், நேரம் செல்லச்செல்ல அழுத்தமாகியது. மனதில் அழுத்தம் கூட, கூட, புலப்படாத அந்த உண்மை என் முன்னே வந்து நின்று சிரித்தது. நம்பமாட்டேன் என்று, அதை நான் உதற தள்ளிவிட்டு, எழுந்து வேலியில் இருக்கும் கேட்டை நோக்கி நடந்தேன். ஒரு நொடி கூட யோசிக்காமல், பூட்டைத் திறந்து, அந்தக் காட்டில் நுழைந்தேன்.
*************
மணி காட்டில் நுழைந்த, அதே நேரம்,
ஹாலில் அமர்திருந்த சிவகுருவுக்கு மொத்த வழக்கையும் இருண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத், தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில் இருந்து, தான் மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், காலையில் இருந்து, முகம் கொடுத்து பேச மறுக்கும் சுமா. அடுத்தடுத்து வாங்கி அடிகளில், மனம் பாரமாய் இருக்க, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு சோபாவில் இருந்து சுருண்டு விழுந்தான், சிவகுரு.
************
இரண்டு மணி நேரமாக மழை இறங்கி கொண்டிருப்பதன் வெளிப்பாடாக, மணியின் உடல் எங்கும் வேர்த்திருந்தது. நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான், இல்லை இல்லை, அந்த உண்மையிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிந்தருந்தான். காடு, மலையென, அந்த உண்மையும், என்னை விடாமல் தூரத்தியது.
ஆறு மணி நேரம் கழித்து.
மலையடிவாரத்தை அடைந்து இருந்தான். அவன் உடலும், மனமும், சோர்வுற்று இருந்தது. அவன் காதுகளில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. அவன் கால்களையும், மனதையும் தன்னிச்சையாக அந்த சத்தம் ஈர்த்தது. பாறைகளுக்கிடையே தெள்ளத்தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது, ஒரு காட்டாறு, ஒரு நற்பதடி பாறையின் மேல், நின்றுருந்தான், மணி.
அவன் பார்வையில் பட்ட தண்ணீர், வறண்டு கிடந்த அவன், நாவையும், தொண்டையும், மேலும் வறட்சி ஆக்கியது. தண்ணீர் கேட்ட, உடலின் தாகத்தை தீர்க்க முனைந்தவன், திரும்பி நடந்த சில நொடிகளில், கால் இடறி உருண்டான், அந்த பாறையில். இடறி உருண்டவனின் வலது கையில், துருத்திக்கொணடிருந்த பாறையின் படிமம் சிக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவனை, தேடிப்பிடித்து அவனது தோளில் கெட்டியாக அமர்ந்து கொண்டது, அவனை துரத்தி வந்த, அந்த உண்மை. உண்மையின் கணம், அவன் மனதை அழுத்த, ஏற்கனவே ஏழு எலும்பு முறிவுகளை கொண்ட, அவன் வலதுகையில் வலி கூடியது.
அவன் தோளில் ஏறி அமர்ந்த உண்மை, வெற்றிபெற்ற குதூகலத்தில் துள்ளிக் குதிக்க, குனிந்து நாற்பது அடியில் கீழ் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றைப் பார்த்தான். ஒரு நிமிடம், பிடியை விட்டுவிட்டு, பாறைகளுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து, உண்மையோடு, தன்னையும் மாய்த்துக் கொள்ளலாமா? என்று எண்ணிவன் மனதில், நேற்று சிவகுரு "நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" சொன்னது ஒரு நொடி வந்துபோனது. அவ்வளவுதான், தன் உடலில் மீதம் இருந்த மொத்த வலுவையும், வலது கைக்கு மாற்றிவன், பாறையின் மீது ஏறினான். காற்றைப் போல, அந்த காட்டைக் கிழித்துக்கொண்டு கீழ ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றை நோக்கி ஓடினான்.
காட்டாற்றின் கரையை அடையும் முன்னே, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, சுற்றும் முற்றும் பார்க்க வில்லை, மொத்த உடைகளையும் களைந்தவன், அற்றில் இறங்கினான் அம்மணமாக, ஆழம் அறியாமல், ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கிப் போனான். காட்டற்றின் இழுப்பில், தன் தோளில் இருந்த உண்மையை கரைத்துவிட்டவனின், மனது இலகுவானது. தண்ணீர் அள்ளி குடித்தவனின் மன தாகம் தீரவில்லை, குளிர்ந்த நீர், அவன், மனசூட்டை தனிக்கவில்லை. அதுவரை கண்களில் மட்டுமே இருந்த அந்த ஓநாயை, அவனது, இரத்தம், சதை எலும்பு, நரம்பு என பற்றிப் படர்ந்தது. உண்மை-பொய், சரி-தவறு, பாவம்-புண்ணியம், அன்பு-வஞ்சம் என்று உணர்வுகள் எதுவும் இல்லாத, பசியையும், பிழைத்துக் கிடத்தலையும் மட்டுமே அறமாக, தர்மமாக, ஆதாரமாக கொண்டிருக்கும் காட்டில் ஒன்றென கலந்து, தண்ணீரில் இருந்து எழுந்தான், ஓநாயாய் மொத்தமாக மாறியிருந்த, மணி.
கரையேறி உடைகளை அணிந்து கொண்டவன், ஆற்றின் போக்கிலேயே சென்று, ஆழம் பார்த்து, ஆற்றுநீரின் இழுப்பை ஆராய்ந்து, அந்த காட்டாற்றை கடக்க பாதுகாப்பான இடம் தேர்ந்தெடுத்து, அதைக்கடந்து, மறுகரை ஏறினான், சற்றுமுன் அழமே தெரியாமல் அந்த காட்டாற்றில் விழுந்தவன். கண்ணில் பட்ட வழித்தடத்தில் நடந்தான், எதிர்பட்டது ஒரு கிராமம். அதை நோக்கி நடந்தவன், கண்ணில் பட்ட மனிதனிடம்
"இந்த, ஊர் பெயர் என்ன?"
"தெங்குமரஹடா!! பதில் சொன்னவர், இவனை, ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, தன் போக்கில் சென்றார்.
மொபைலை எடுத்து தனது டிரைவருக்கு அழைத்தவனுக்கு சிவகுருவின் நிலை சொல்லப்பட்டது. எந்த சலனமும் இல்லாமல் தன்னை எங்கு வந்து அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்டை நோக்கி நடந்தான்.
*****************
சிவகுருவை பேருக்கு இரண்டு முறை ஹாஸ்பிடல் சென்று பார்த்ததோடு சரி, அதன்பின் வேலையில் முழகிப்போனான், மணி. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ஆச்சிகள் இருவரும், சிவகுருவின் உடல்நிலையை பார்த்து வருந்திக் கொண்டிருக்க, சுமாவோ, பொய்யாகிவிட்ட, தன் வாழ்க்கைக்காக வருந்துவதா??, உடல் பலவீனப்பட்டு படுக்கையில் இருக்கும், தன் கணவனுக்காக வருந்துவதா?? இல்லை அவளது வாழ்க்கையைய் பொய்யாக்கிய உண்மையைச் சொன்னா மகனின், மனம் அதை தெரிந்து கொண்டபோது எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும் என்று வருந்துவதா?? என்று தெரியாமல், எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள்.
மணியின் தாத்தாவோ, ஒருபுறம், மருமகனின் உடல் நிலை கண்டு வருந்தினார் என்றால், மறுபுறம், தந்தையின் உடல்நிலை மோசமான அதிலிருந்து, ஏற்கனவே தன் வயதுக்கான வாழ்வை வாழாமல், பித்து பிடித்தவன் போல் இருந்தவன, மொத்த பொறுப்பையும் தன் மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு, வெறியாக உழைக்கும், தன் பேரனை நினைத்து வருந்துவதா?? அல்லது தொழில் குழுமத்தின் அடுத்த கட்ட நகர்வின், முக்கியமானதொரு நேரத்தில், அதை வழிநடத்த வேண்டிய, தொழிலதிபர் சிவகுருவின் இழப்பை நினைத்து வருந்துவதா என்று தெரியாமல் தினறிப்போனார். தங்கள் தொழில் குழுமத்தின் முப்பது வருட தூண் சரிந்ததை தொடர்ந்து, தொழில் போட்டியை சமாளிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் சிவகுரு உடல்நிலை தேறிவரும்வரை, தானே அந்த பொறுப்பை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்தவர், அதைப்பற்றி விவாதிக்க, மணியை அழைத்தார்.
உள்ளே நுழைந்த மணி, கைகளில் திருத்தி எழுதிய பேப்பருடன் வந்தான். அமர்ந்தவன் அதை, அவன் தன் தாத்தாவிடம் கொடுக்க, படித்த பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் இவனை நிமிர்ந்து பார்த்தார்.
"நமக்கு உரிமையுள்ளத, நாமதான் எடுத்துக்கணும், யார்கிட்டயும் கேட்கக்கூடாது!!. எனக்கு இப்ப புரியுது தாத்தா!! மொத்த சொத்தையும் எழுதி கொடுத்த நீங்க, ஏன், நான் கேட்டதும் என்ன சேர்மன் ஆக்கலனு!! தைரியமா கையெழுத்துப் போடுங்க!! இப்ப, நீங்க போடுற கை எழுத்துக்காக, எப்பவுமே வருத்தப்பட மாட்டிங்க!!" நிறுத்தி, நிதானமாக, தெளிவாக பேசினான் மணி.
என்ன நினைத்தாரோ, கையெழுத்திட்டு, அந்த காகிதங்களை மணியிடம் நீட்டியவர் கண்களில், பெருமிதமும், அதைத் தாண்டிய நிம்மதியும்.
***************
இரண்டு நாள் கழித்து,
ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கான, மொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணி. அதன் கடைசி நகர்வை, தன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும், சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான். தனக்கும், தன் தந்தைக்கும், நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும். கண்டிப்பாக, தன் தாய், அதைப் பற்றி, வெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம், சிவகுருவின் செக்கரட்டரி, சங்கரபாணி மீது விழுந்தது. இதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரை, நிரந்தரமாக அமைதியாக்க, அவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான். அவரை அழைத்தவன்
"நீங்க, வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால், ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோட, செகரட்ரியா தொடரலாம், இல்ல, அந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனா, இப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன், சில காகிதங்களை, சங்கர பாணியை நோக்கி நீட்டினாள். குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடு, தானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டிய, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்தது. சங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில், தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார். ஒரே வேளை அவரின் விசுவாசம், சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால், மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
தன் தந்தையின், வலதுகையாக செயல்பட்டவறின் மூலம், மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான், மணி. யாரையும் இழக்க விரும்பாதவன், அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும், யாரை, எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான். அடுத்த சில நாட்களிலேயே, திட்டமிட்டது போல், பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான். தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாக, புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது, அதிலேயே அவன் தங்குவதற்கென, அதன் மாடியில், அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்.
பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனி, உடனே உயரே பறக்காவிட்டாலும், அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல், ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றது. அந்த புதிய அலுவலக கட்டிடமோ, எழுந்து நின்றது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின், கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.
*****************
கட்டிட திறப்பு விழா முடிந்த, பத்து நாள் கழித்து.
தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதை ஒட்டி இருந்த, தனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதிய, வீட்டின் கதவை, நோக்கி நடந்தான்.
"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள், அவன் கால்களை கட்டிப் போட்டது.
ஒரு கையும், காலும், சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாத, ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான், சிவகுரு. பின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்கு, தினமும், மணியைப் பார்க்க, பார்க்க, அது அவனது உடல் சுகவீனத்தை, மேலும் கடுமையாக்கியது. பழனி செல்வதென்ற முடிவு செய்து, புதிய கட்டிடம் திறந்த மறுநாள், சுமாவை அழைக்க, அவளும், சிவகுருவுடன் சென்றாள். பழனி சென்றவள், தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, பெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடு, பத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள். திரும்பி வந்தவளுக்கு, கடந்த பத்து நாட்களாக மணி, வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்பட, அவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். அவன் அருகில் சென்ற சுமா,
"உன்ன, நான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனா, நான்தான் பெத்தேன்!!. நான் தான் உன் அம்மாங்கிறதுல, உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள், சுமா. கட்டுப்படுத்த முடியாதவள், தன் மகனை அணைத்து, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.
"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,
"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூட, நிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!" என்றவள், மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால். அவள், அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், பின், அவளை விலக்கிக்விட்டு, அவள், சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போல, அவன் அறையை நோக்கி நடந்தான்.
“உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அவன் இல்லை. ஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில், தொழில் முனைப்பு காட்ட வைத்து. அவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அது. அந்த முனைப்பிலேயே, வரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள், மீண்டும் அடி எடுத்து வைத்தான், சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்த, பத்து நாள் கழித்து. மொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள், மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
***************
டிஸ்கி
உணர்வுகள் இல்லாத, மிருகமென மாறி, மணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலை, வெறியோடிருக்க, அதே காலகட்டத்தில், டெல்லியில், தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது. அவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய், அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட, மயிர்க்கூச்செறிந்தவள், பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன், உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள். அவளை, வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த, அவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்.
***************
அதே காலகட்டத்தில், டெல்லியில்,
தன் வாழ்வின் தூண்கள் என்று யாரை எண்ணியிருந்தாளோ, அவர்கள் தனக்கு இழைத்த துரோகத்தினை எண்ணி எண்ணி கண்ணீர்விட்டவளின் காயத்திற்கு, அவள் வடித்த கண்ணீரே மருந்தானது. காலத்திற்கும், கண்ணீருக்கும் ஆறாத காயங்கள் எது? தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள், அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க, மனிதத்தில், மனித சேவையில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள், மது.
இந்த நான்கு வருடங்களில் மதுவின் வாழக்கையை முன்நகர்த்தியா முக்கியமான சில நிகலவுகள்.
*************
கல்லூரி முடிந்து ஒருவருடம் கழித்து,
ரஞ்சித், Nero surgeon ஆகும் முனைப்பில், சிங்கப்பூர் சென்று படிப்பதற்க்கு முன் மதுவுக்கும், அவனுக்கும், நடந்த உரையாடல்.
"அப்புறம், அடுத்து என்ன பிளான்?" சிங்கப்பூர் செல்வதற்கு முன், ஒரு வாரம் சென்னையில் தங்கி விட்டுச் செல்லலாம் என்று, தனது மூட்டை முடிச்சுகளை கட்டிய ரஞ்சித், டாக்சிக்கு காத்திருந்த வேளையில், அருகிலிருந்த மதுவிடம் கேட்டான்.
"உனக்கு டாட்டா காட்டிட்டு, வீட்டுக்கு போகணும்!!" சிரித்தால் மது. சில நிமிட அமைதிக்குப் பின்
"ஐ லவ் யூ!!, மதி!!" மீண்டும் கடந்த ஒரு வருடமாக, மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டிவிட்டால் ரஞ்சித். ரஞ்சித் சொன்னதை நம்பமுடியாமல், வலதும் இடமுமாக தலையசைத்தாள்.
"உன்னை நான் வற்புறுத்துறேனு நினைக்காத!! ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவுதான்!!" என்றவனை பார்த்து சிரித்தாள், மது.
"என்னை, எதுக்கு நீ மதினு கூப்பிடுற?" பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான், ரஞ்சித்.
"ரஞ்சித்!!" மது பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தான் ரஞ்சித்.
"நீ, உன்னோட வெண்ணிலாவ, என்கிட்ட தேடுற, நீ சொல்றத ஒத்துக்கீட்டு, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாகூட உன்னால சந்தோஷமா வாழ முடியாது!!. முதல்ல, அவளத்தாண்டி உன் வாழ்க்கைய பத்தி யோசி!!" நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் மது.
"உன்னால, அவனைத் தாண்டி யோசிக்க முடியுமா மது?" தன் மனதில் பட்டதை கேட்டான் ரஞ்சித்.
"தெரியல!! ஆனா, கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்!! வாழ்க்கையா வாழ்ந்தாகனும்ல!!" சிரித்தவள், சில நொடிகள் யோசித்துவிட்டு.
"ஆனா, கண்டிப்பா அவனோட பிம்பத்தை, என்னால, யார்கிட்டயும் பார்க்க முடியாது!!" தீர்க்கமாக சொன்ன மது, அவனிடம் விடைபெற்று சென்றாள்.
*************
"எனக்கு நீங்க தெய்வம் மாதிரி!!" நாற்பதுகளின் தொடக்கத்தில், தன்னைவிட பத்துப் பதினைந்து வயது மூத்த பெண்மணி, தன் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அழ, உணர்ச்சிக் கொந்தளிப்பில், சிரமப்பட்டால் மது.
12 வயது சிறுவன், கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் அடிபட்டு, பந்தின் தாக்கத்தால் அடி பட்டவுடனேயே சுருண்டு விழுந்திருந்தான். அவனை, ஹாஸ்பிடல் கொண்டு வரும்பொழுது, சுயநினைவை இழந்திருந்தான். அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்ட அன்று, trauma careல் மதுதான், டூட்டி டாக்டர். முதல்உதவி சிகிச்சை அளித்த பின், வழக்கமாக செய்யப்படும் சோதனைகள் முடிவுகளில், அந்தச் சிறுவனின், மண்டையோட்டின் பின்பகுதியில் சின்ன கிராக், அதுவும் போக பந்தின் தாக்கத்தால் concussion தான், மயக்கத்திற்கு காரணம் என்று அறியப்பட்டது. (கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கலாம். நுரையீரல் போல, மூளையும் பஞ்சு போல் மிருதுவானது(ஹி!! ஹி!!). ஒரு உயிரின் மொத்த செயல்பாட்டையும், கட்டுக்குள் வைத்திருக்கும் மூளை, உடலமைப்பில், இருப்பதிலேயே கடினமான எலும்பால் ஆனா, மண்டை ஓட்டினுள், தண்ணீர் போன்ற திரவத்தில், மிதந்து கொண்டிருக்கும். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளில், தலையின் வேகமான அசைவு, அந்தத் திரவத்தின் பாதுகாப்பிலிருந்து மண்டை ஓட்டில் உட்புற சுவர்களில் மூளையானது மோதும் பொழுது, ரத்தக் கசிவோ அல்லது வீக்கமோ ஏற்பட்டு, நினைவு இழக்கும் பாதிப்புதான் இந்த concussion).
மூன்று நாட்களாகியும் நினைவு திரும்பாத சிறுவன், இனி பிழைப்பது கடினம் என்றே முடிவு செய்தது, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த, மதுவும் அங்கமாக இருந்த, மருத்துவக் குழு. நான்காம் நாள் ஏற்பட்ட, ஒரு சின்ன முன்னேற்றம் கொடுத்த நம்பிக்கையில், சிகிச்சைகள் வேகம் எடுக்க, பத்து நாள் கழித்து கண்விழித்தான், அந்த சிறுவன். மருத்துவக் குழுவும் பெரிதாக சாதித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்க, உயிர் பிழைத்த அந்தச் சிறுவனின் பெற்றோர், மருத்துவர்களை தெய்வமேன பார்த்தனர். அவர்கள் அந்த மருத்துவக் குழுவின் தலைவரான கோபால கிருஷ்ணனிடம், நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான், அவர், மதுதான், அவர்கள் மகன் பிழைப்பதற்கு முக்கிய காரணம் என்று கைகாட்டிவிட்டு சென்றிருந்தார். அதன் பின்னால் நடந்ததே, மதுவின் சிரமத்திற்கு காரணம்.
************
இரண்டு நாள் கழித்து,
மது வேளை பார்க்கும் மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான கேன்டினில், மதிய உணவு உண்டு கொண்டிருந்தாள், மது.
"நான் இங்க உட்காரலாமா!! மா??" சத்தம் வந்த திசையைப் பார்த்தாள், மது.
"ஐயோ சார்!! ப்ளீஸ் உட்காருங்க!!" கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே சொன்னாள், மது.
"தாங்யு!! மா!!" அமர்ந்தவர், உணவருந்த தொடங்கினார்.
"இட்ஸ் அண்பேர் சார்!! Dr.சிங்தான் மேக்ஸிமம் எஃபாட் போட்டாரு!! அவர் இருக்கும்போதே, எல்லா கிரெடிட்டையும் எனக்கு கொடுத்தது!!.இட்ஸ் அண்பேர் சார்!!" இரண்டு நாட்களாக சொல்ல வேண்டும் என்று மனதில் இருந்ததை, நேரம் வாய்த்ததும் சொல்லிவிட்டாள், மது. நிமிர்ந்து பார்த்து லேசாக சிரித்தவர்,
"இந்த ரெண்டு வருஷத்துல, இந்த மாதிரி எத்தனை கேஸ் நீ பார்த்து இருக்க?" மதுவைப் பார்த்துக் கேட்டார்.
"ஒரு.. இருபது.. இருபத்தைந்து கேஸ் இருக்கும்!!" திடீர் கேள்வியில் குழம்பினாலும், பதில் அளித்தாள் அது
"நான் ஹெட் இஞ்சுரி கேஸ் கேட்கலா மா!!, கண்காஷன் கேஸ், எத்தனை அட்டென்ட் பண்ணி இருக்க?" தன் கேள்வியை தெளிவாக்கினார்
"இதுதான் பர்ஸ்ட்!!" சில நொடிகள் யோசித்தவள், உதடு பிதுக்கினாள்.
"நானும், Dr. சிங்கும், எங்க சர்வீஸ்ல, இத மாதிரி எத்தனை கேஸ் பார்த்திருப்போம்னு நினைக்கிற?" அடுத்த கேள்வியைக் கேட்டார்.
".." மீண்டும் உதடு பிதுக்கியவள், "எனக்கு எப்படித் தெரியும்?" என்பது போல் தோள்களை உயர்த்தினாள்
"ஜஸ்ட், த்ரோ மீ சம் நம்பர்?"
"ஒரு. அம்பது. அறுபது!!" குத்துமதிப்பாக சொன்னால் மது.
"இட்ஸ் ஜீரோ!!, சீ, ஹெட் இஞ்சுரி ரொம்ப ரெகுலரான ஒன்னு!! நான் உன் வயசுல இருக்கிறப்ப, வருசத்துக்கு, முப்பது, நாற்பது கேஸ் பார்த்திருப்பேன்!! பட், கண்காஷன் எனக்கும் சரி, நீ சொன்ன Dr.சிங்குக்கும் சரி, இதுதான் பர்ஸ்ட் டைம்!! அண்ட், உனக்கே தெரியும், நான் சும்மா பேசணும்னு பேசுற ஆள் கிடையாது!! அதுவும் போக, டாக்டர் சிங், என்கிட்ட சொன்னதத்தான் , நான் அந்த பையனோட, பரேண்டஸ் கிட்ட சொன்னேன்!!. நீயும் தமிழங்கிரதால இல்ல!!. You deserve it. Characters are not made in crisis, they are exhibited!!. You exhibited your talent in a crisis. That's it!! இன்னும், அந்த பாராட்டுக்களுக்கு, தகுதி இல்லை உனக்கு தோணுச்சுன்னா, ஐ டேக் பேக் மை வேர்டஸ்!!" என்றவர், எழுந்து கை கழுவச் சென்றார். சுய கழிவிரக்கத்தில் இருந்து, தன்னை மீட்டுக்கொள்ள, போராடிக்கொண்டிருந்த மதுவிற்கு, பெரும் தாக்கத்தைத் அந்த தருணம் அது.
****************
இரண்டு வாரங்கள் கழித்து,
"நான் எப்ப? திரும்பவும் கிரிக்கெட் விளையாட முடியும்?" எப்பொழுதும் போல் தினசரி பரிசோதனைக்கு சென்றிருந்த மதுவைப் பார்த்து, சாவை நெருங்கி, தொட்டுவிட்டு, அதன் பிடியில் இருந்து, தப்பிவந்த அந்த சிறுவன் கேட்டான். கொஞ்சம் உடல்நிலை தேறியதும், அவன் கேட்ட கேள்வியில், மதுவும் திகைத்துத்தான் போனாள். சமாளித்துக்கொண்டு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!!" என்றவள், அவன் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள்.
அந்தச் சிறுவனின் அன்னையோ, எரித்துவிடுவது போல் தன் மகனை முறைத்துக் கொண்டிருந்தாள். அன்றைய பரிசோதனை சுற்றை முடித்து கொண்டு, தனது அறைக்கு வந்த மதுவின் நினைவில் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, அவனது அம்மா கொடுத்த எதிர்வினையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கள்ளம் கபடமில்லாத சிறுவர்களின் உலகம் மிகவும் அலாதியானதுதான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற, தனக்குள் சிரித்தவள், அந்தச் சிறுவனின் அம்மா முறைத்தது நினைவுக்கு வர, தான் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தவள், அடக்க மாட்டாமல் வாய்விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பை இடையூறு செய்தது, தொலைபேசி அழைப்பு. ரஞ்சித் தான் அழைத்திருந்தான். அழைப்பை எடுத்து தொலைபேசியை காதுக்கு கொடுத்தவள்,
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான இருக்க?" ஹலோ என்று சொல்வதற்கு முன்னமே, ரஞ்சித் கேட்க, அப்பொழுததான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, அவன் டெல்லி வருகிறேன் என்று சொன்னது, மதுவுக்கு.
"இல்லையே!! வீட்டுக்கு வந்துட்டேன்!!" சமாளித்தாள்.
"தேங்க் காட்!!, கதவ திற!!, நான் வெளியே தான் வெயிட் பண்றேன்!!" என்று ரஞ்சித்து சொல்லவும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்த மது
"ஒரு, 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுறியா?" "என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தாள்.
"இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்க?" நான்கு வருட நட்பில், மதுவை முழுதாக புரிந்து வைத்திருந்தான் ரஞ்சித்.
"சாரி டா!! சாரி டா!!" என்று வழிந்தாள்.
"பொய் சொன்னதுக்கும், என்ன வெயிட் பண்ண வச்சதுக்கும், உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்னு, நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள, ஒழுங்கா வந்து சேரு!!" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
மது வேலைபார்த்த ஹாஸ்பிடல் அருகே, மிகவும் பாதுகாப்பான, ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் ஒன்றில்தான் வசித்து வந்தாள். குடியிருப்பவர்களையும், அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட நபர்களைத் தவிர, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் படிப்பை முடித்தவன், இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்கு பின், இப்பொழுதுதான் மதுவைப் பார்க்க டெல்லி வருகிறான், ரஞ்சித்.
*********************
20 நிமிடம் கழித்து,
அப்பார்ட்மெண்ட் வாயிலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள், மது.
"மேடம்!! உங்கள பாக்குறதுக்கு விசிட்டர் வந்து இருக்காங்க!!" மதுவை கவனித்துவிட்ட காவலாளி, அவளிடம் ஓடி வந்து சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சித், அப்புறம், இங்கு மருத்துவமனையில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், புதிதாக நடப்பு வட்டத்தில் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களை மட்டுமே, தன்னை பார்க்கவரும் விருந்தினர்களாக பதிவு செய்திருந்தாள் மது. "எதுக்காக ரஞ்சித் விசிட்டர் ரூம்ல வெயிட் பண்ணனும்" என்ற சிந்தனையுடனே, வாயில் கதவின் அருகிலேயே இருந்த விசிட்டர் அறைக்குள் நுழைந்தவள், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள். பின் சுதாகரித்துக் கொண்டவள்,
"இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது??" என்றவள், விறுவிறுவென்று தனது அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி நடந்தாள்.
"பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!! பானு மா!!" என்ற சிவகாமியின் கெஞ்சல், அவள் நடையின் வேகத்தை கூட்டியது. முதலில் வேகமாக நடக்க ஆரம்பித்தவள், சிவகாமியை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளிகளிடம், அவள் கெஞ்சுவது காதில் விழ, ஓட ஆரம்பித்தாள்.
அப்பார்ட்மெண்டில் நுழைந்தவள், தன் தோள் பையை சோபாவில் எறிந்தாள். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, அமைதியாக அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்து, இரண்டு நிமிடம் கூட இருக்காது, அவளது தொலைபேசி அடித்தது, அதை எடுத்து காதுக்கு கொடுக்க,
"மேடம், உங்கள பாக்க வந்தத விசிட்டர், மயங்கி விழுந்துட்டாங்க!!" காவலாளி அறையில் ஒருவர் பேச, அவள் உள்ளம் முரண்டு பிடித்தாலும், கால்கள் ஏனோ வாயிற்கதவை நோக்கி விரைந்தது. எதிரே வந்து கொண்டிருந்த, ரஞ்சித்தை கவனியாமல் ஓட்டமும் நடையுமாக பதட்டமாக கடந்து சென்று அவளை கேள்வியாக பார்த்தவன், பின் அவள் பின்னால் சென்றான். பார்வையாளர் அறையிலிருந்த ஷோபாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் சிவகாமி. ஏற்கனவே தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தது முகத்தில். ஒரு நிமிடம் தன் தாயின் நிலையை நினைத்து கலங்கித்தான் போனாள் மது.
"ஆம்புலன்ஸ்க்கு சொன்னீங்களா?" சிவகாமியைப் பரிசோதித்தவள், வாயில் காவலர்களிடம் வினவினார். அவர்கள் இல்லை என்று தலையசைக்க, அவள் ஆம்புலன்சுக்கு அழைக்க முயற்சிக்கையில் தான்
"வேண்டாம், கார்ல கொண்டு போகலாம்!!" என்ற ரஞ்சித்தின் சத்தம் கேட்டு அவனை பார்த்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில், மது வேலை செய்யும் மருத்துவமனையிலேயே, அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் சிவகாமி. மருத்துவமனையில் நுழைந்ததும், அட்மிட் செய்வதற்கான படிவம் ரஞ்சித்தின் கைகளில் கொடுக்கப்பட, அவனோ, செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்க, அவன் கையிலிருந்து அதை வாங்கிய மது கடகடவென பூர்த்தி செய்து கொடுத்தாள். ஏதோ ஒரு அவசர நிலைக்கு உதவுகிறாள் என்றுதான் அதுவரை நினைத்திருந்தால் ரஞ்சித், பின் கடந்த இரண்டு வருடத்தில் பழகிய நபராக இருக்கக்கூடும் என்று நினைத்தான்.
பத்து நிமிடம் கழித்து,
"கவலைப்படுவதற்கு ஒண்ணுமில்ல!!, ஹைபர்தென்ஷன், ஹை B.P.!! செட்டேட் கொடுத்திருக்கோம்!! இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு வரைக்கும் அபசர்வேசன்ல்அ வச்சிருக்கலாம்!!, ஸ்டேபில இருந்தா, நாளை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!!" என்ற, மருத்துவர், அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
மருத்துவர் சென்றதும், சிவகாமியின் அருகில் அமர்ந்தவள், தன் அன்னையைப் பார்த்தாள். அவள் மறக்க நினைத்த வாழ்வின் எண்ணங்கள், மனதை நிரப்பிக்கொள்ள, மதுவின் மனதோ, உலைகலன்யென, பலதரப்பட்ட உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கிடந்தது. தன் எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவள், உறங்கிக் கொண்டிருக்கும், தன் தாயை நிமிர்ந்து பார்த்தாள். கடைசியாகப் பார்ப்பதைக் காட்டிலும், சற்று மெலிந்து இருந்தால், தோலின் மினுமினுப்பு காணாமல் போயிருந்தது, முடிகளில் பாதி நரைத்திருந்தது. சிவகாமியை யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு சென்ற பொழுது, "பானு மா!! பானு மா!! ப்ளீஸ்!!" என்ற தன் தாயின் வார்த்தைகளில் இருந்த வலி, இப்போதுதான் மதுவின் மனதை எட்டியது. மனதை எட்டிய வலி, கண்ணீராக, கண்களின் வழியே வலிய, துடைத்துக் கொண்டுவளை
"யாரு இவங்க?" ரஞ்சித்தின் கேள்வி, அவளை நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. மதுவின் கண்களில் வழிந்த கண்ணீர், ரஞ்சித்தின் அமைதியையும் கலைத்திருந்தது.
"அம்மா!!" கண்களில் இருந்து மீண்டும் கண் நீர் வெளியேறியது.
முதலில் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தின் மனதில் ஆயிரம் கேள்விகள். ஆனால் சூழ்நிலை கருதி, தக்க சமயம் வரும்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியானான்.
************
மறுநாள் காலை,
"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான், உள்ளே நுழைந்ததும் பார்த்தால், மது.
"என்கிட்ட தான், இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள், தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள், தலையை குனிந்து கொண்டாள், சிவகாமி.
அதிகாலையில், தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம், வாயில் காவலர் ஒருவர் வந்து, தற்பொழுது, சிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.
"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல், எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,
"நீ, போய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம், தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.
அன்று மாலை 6 மணி,
"உன்னோட பிளைட் டிக்கெட், இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டை, தன் தாயிடம் நீட்டியவள், மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள், மது.
எப்பவும் சொல்லாத சிவகாமி, மது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள். சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.
"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேச, எனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.
"எனக்குத் தெரியும், எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"என்ன மன்னிக்கவே மாட்டியா? பானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால், சிவகாமி.
"உன்ன, ஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள், ரஞ்சித் அறையில் நுழைந்ததும், கண்களை துடைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த ரஞ்சித், மதுவின் காதில் ஏதோ சொன்னான். அவனிடம், அவள் "தேங்க்ஸ்" என்றதும், அவன் அங்கிருந்து நகர்ந்தான். சிவகாமியிடம் திரும்பிய மது,
"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளை, கெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள், சிவகாமி. ஒரு பெருமூச்சு விட்ட மது.
"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள். அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம், அந்த அறையைவிட்டு வெளியேறினாள், மது.
*************
இன்று இரவு,
"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.
"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித், சிவகாமி, வாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான். அதை வாங்கி மது, அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல், கபோர்டு திறந்து, அதை, அதற்குள் வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள், அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால், ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,
"சரி, இப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால், ரஞ்சித்திடம் பேசுவதற்கு, இப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.
"நெக்ஸ்ட் வீக், பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித், சொன்ன செய்தியும், அவனது சிரிப்பும், மதுவை, சிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டது. பின்னர் அது தொடர்பான பேச்சிலேயே, அடுத்த அரை மணி நேரம் செல்ல, தூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள், மது.
"மதி!!" மது, கதவை அடைக்கும்முன், அவள் பெயர் சொல்லி அழைத்தான், ரஞ்சித்.
"உனக்கும், உங்கம்மாக்கும், என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட், முடிஞ்சா, அவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,
"உன்னால, வெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள். விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.
"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித், போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.
**************
மற்ற உறவுகளை போல் அல்லாமல், பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும், நமக்கு கொடுக்கப்பட்ட உறவு, மற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வது. பிடித்திருக்கிறதோ, இல்லையோ, அவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோ, இல்லையோ, சாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவு, அது. நான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும், அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்து, கசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம். அதுவரை, அவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியது, காந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலை. உறவுகளும், சமூகம் அண்ணார்ந்து பார்த்த, எப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம், அந்த கம்பீரம் அவள், எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை. காலத்தாலோ, விதியாலோ, இழந்த மதியாலோ, நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.
துணை இல்லாமல், இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை, கடந்த நான்கைந்து வருடங்களில், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள், மது. அப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல், முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்தது. அந்த வார்த்தைகள் கூட, உடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல், அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள். சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கை, குடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்.
அதே நேரத்தில், தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூட, அதற்கு மது கொடுத்த விலை, அவளது வாழ்க்கை என்பதால், தன் தாயை மன்னிக்கும் மனநிலையை, தான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள். இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும், குறுகிய காலமென்றாலும், உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன், கொடுப்பினை போன்றதொரு வாழ்வை, மணியுடன் வாழ்ந்திருந்தாள், அவள். அனைத்தையும் தாண்டி, வாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின், மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமா? அப்படி முடியும் என்றால்? தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானா? அவனின் வாழ்வில், தனது முக்கியத்துவம், அவ்வளவுதானா? அடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்கு, எல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளை, அவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்? என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு கேள்விகளுக்கும் விடையை எண்ணி, எண்ணி, அவள் எத்தனை முறை கலங்கினாள், கண்ணீர் விட்டாள், என்பதை காலம் மட்டுமே அறியும். இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால், அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு.
**************
மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்கு, இரண்டு வாரங்களுக்கு முன், மதுவின் வாழ்வில்
தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும், அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்க, மது, அந்தச் சிறுவனுக்கு, அன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை, ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான், மது, என்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும். அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால். பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால், அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,
"ஒன்னும் இல்ல பயப்படாத" இளம் வயதிலேயே, உயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்.
பின் தன் கவனத்தை, மருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள். அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,
"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறது, மயக்கம், இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தா, கெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும், பெற்றோரின் முகத்தில் நிம்மதி. சிறுவனின் முகத்தில், அதே பரிதவிப்பு. அதைக் கண்ட மது, என்ன? என்பது போல், அந்த சிறுவனைப் பார்த்தாள்
"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்ல, விளையாட முடியுமா? முடியாதா? என்றுதான் என்பதை உணர்ந்த மது, சிரித்து விட்டாள். அந்தச் சிறுவனின் பெற்றோரோ, அவனை எரித்து விடுவதுபோல், முறைத்துக் கொண்டிருந்தனர்.
"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள், மது.
ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, அவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியது. அதுவும் இல்லாமல், ஒரு டாக்டராக, அந்த சிறுவன், முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும், அந்த சிறுவன், அறையிலிருந்து வெளியேறியதும், அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள், ஒருவாராக, அவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள். அவர்கள் சம்மதித்ததும், மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள், இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன். மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,
"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்ட, தன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டான், அந்தச் சிறுவன். அவன் அழுகையை நிறுத்துவது, பெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்கு. சிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில், மது நெகிழ்ந்திருந்த வேலையில், பட்டென, அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், அந்தச் சிறுவன். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், வட இந்தியாவில், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, வழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும், அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை, அவள். அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.
*************
அன்று இரவு,
சாப்பிட்டு முடித்தவளுக்கு, அந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது, மனதில். அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, திரும்பத், திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்தது. சிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில், இதேபோன்ற பரிதவிப்புடன், இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றது. அவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போக, முகம் வெளிறியது, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
***************
நிகழ்காலம்.
அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவினாஷ் தாக்கறின், கிரீன் பவர் நிறுவனத்தை, கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடு, அதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டி, ஒரு மின்னஞ்சல் அனுப்பினான், மணி. அவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, அந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்தது. அடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்து, அப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன், டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன், தனது, அலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.
கதவை திறந்தவன், வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா.
*************