Chapter 49
அவன் போட்டிக்கான அழைப்பு வருவதற்கு முன்,
பதட்டமான மனநிலையில் தன்னையறியாமல் அல்லது உள்ளுணர்வின் தூண்டுதலால், ஒருமுறை தற்பொழுது மது பார்க்க எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக்கை திறந்தவன், அவளது ப்ரோஃபைலை திறக்க, மூன்று மாதங்களக்கு முன் அவள் பதிவிட்டிருந்த புகைப்படம் தான் முதலில் இருந்தது. “HBD Puzzle!!. It’s been five long years but I am yet to solve this puzzle!!” (இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - புதிர்!!. ஐந்து வருடங்கள் கழித்தும் இன்னும் நான் புரிந்து கொள்ள முடியாத புதிர்!!”) என்று உதடு குவித்து வைத்து, கண்களை சுருக்கி, மூக்கிற்கும், மேல் உதடுக்கும் நடுவில் ஆட்காட்டி விரலை மடக்கி வைத்தவாறு, அருகில் சிறத்தாவாறு இவளைப் பார்க்கும் ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் முகபாவனையை ரசித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு சின்ன மலர்ச்சி தோன்றி, பின் மலர்ந்த முகம் சுருங்கியது. எனோ அவனுக்கு புகைப் படங்களுக்கான பகுதில் சென்று வெறும் புகைப்படங்களை பார்க்க எனோ தயங்கினான். அப்படியே தொடுதிரையை மேல் நோக்கி இழுத்தவன் கண்களில் பட்டதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான பகிர்தல்கள். அப்படி தொடுதிரையை உருட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் பட்டது வெறும் “HBD.” என்ற பதிவி. அதைப் பார்த்த நொடியே அவனுக்குத் தெரியும் அந்த வாழ்த்து தனக்கானது என்று, அது பதிவிடப்பட்ட தேதி அதை உறுதி செய்தது.
மானதெல்லாம் இதமான ஒரு உணர்வு பரவ, தொடுதிரையை அனைத்துவிட்டு, கண்களை முடி அமர்ந்திருந்த சேரில் தலைசாய்ந்தான். மணி தேடியது, மதுவின் மகிழ்ச்சியை அல்ல என்பதே அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. மதுவின் நினைவில் எங்கோ ஒரு ஓரத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தில், அவன் உடலும் உள்ளமும் சில நொடி சிலிர்த்து அடங்கியது. அதுவரை இருந்தா பதட்டம் நீங்கி போட்டிக்கு தாயாராக இருந்தான். அப்பொழுதுதான் மதுவின் மருத்துவம் சம்பந்தமான பதிவுகளை ஜீரணித்த மூளை, அதில் தொண்ணூறு சதவிகிதம் கற்பமுறுதல், அதில் உள்ள சிக்கல் சம்பந்தமான பதிவு என்று அவனுக்கு உணர்த்த, அவனது முகமும், மனமும் இருக்கியது. அதிவேகத்தில் செயல்பட்ட மூளை, தன்னால் சிந்திக்க முடிந்த அத்தனை செய்திகளையும் அவனுக்கு சொல்ல, அதில் சில, அவன் உயிரைப் பிடித்து ஆட்டியது. “இல்லை!!, இல்லை!!, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை, தேவை இல்லாமல் கற்பனை செய்யாதே!!" என்று மனதிற்கு கடிவாளம் போட அது அடங்கவில்லை. கைகளில் வேர்க்க ஆரம்பித்து. நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து அவன் ஆட்டத்திற்கான அழைப்பு வர, எண்ணங்களை உதறிக் கொண்டு நடக்க ஆரம்பத்தான், கால்கள் வேர்க்க தொடங்கியது. இதய துடிப்பு எகிறியது.
"இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ"
"இன்னும் பத்து செகண்ட் தான்!!” என்று விடியலுக்கு காத்திருந்தவனின் வானம், மொத்தமாக இருட்டியது. சூரியனை விழுங்கும் நிலவு போல.
"சிகரெட்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் கண்களில் முதலில் மதுவின் கார் பட, என்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமே, அவன் கண்களில் பட்டாள், மது. அழுகிறாள் என்பது, அடிக்கடி இடதுகையால் கண்களை துடைப்பதில் இருந்தே தெரிந்தது, வலது கையைப் பற்றிய படி, அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் ரஞ்சித். இல்லை, இல்லை, மதுவைக் காட்டிலும், அவனது நடையின் வேகம் சற்று அதிகமாக இருந்தது, மதுவை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுவந்தான். அந்த மினி கூப்பர் காரின் அருகில் வந்ததும் நின்றவள், ரஞ்சித்திடம் இருந்து கைகளை உருவிக் கொண்டவள், மறுப்பாக தலையசைத்தவாரே அவனிடம் ஏதோ சொல்ல, அவள் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்தது கண்ணீர். இடுப்பில் கையை வைத்து, கொஞ்சம் பின்னால் சாய்ந்து, பின் நேராக நின்று அவளிடம் கைகளை இங்கும் அங்கும் ஆட்டியவாறு, ஆக்ரோசாமாக பேசினான். மீண்டும் அவள் மறுப்பாக தலையசைத்தவாரே கெஞ்சும் பாவனையில் அவனிடம் சொல்ல, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காரின் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளினான், கதவை அடைத்தவன், வேகமாக சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான். சில நொடிகளில் கார் மணியை கடந்து சென்றது, காரில் அமர்ந்திருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான் மணி. இருவரது கண்களும் ஒரு நொடி சந்திக்க, அந்த நொடி மணியின் இதயத் துடிப்பு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் அவளின் கண்களோ அவனை பார்த்ததாற்கான எந்தவித, உணர்வுகளையும், அசைவையும் காட்டவில்லை. உருக்குலைந்து போனான்.
சிலை போல் அவன் நின்றிருக்க, அவன் தோளை யாரோ தொட, உணர்வு பெற்றவனாய் திரும்பிப் பார்த்தான்.
“சுத்தி நிறைய பேர் பார்க்கிங் பன்னிருந்தாங்க!!., அதுதான் சார் லேட்!!” என்று பவ்வியமாக சொன்ன அவனது டிரைவர், மணி அமருவதற்கு, காரின் கதைவைத் திறந்தார்.
திறந்திருந்த கதவை கண்டுகொள்ளாமல் சென்றவன், டிரைவர் இருக்கையில் சென்று அமர, கதவை அடைத்த டிரைவர், அவன் பக்கம் செல்ல எத்தனிக்கும் போதே, அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது. எதுவும் புரியாமல் டிரைவர் குழம்பிப் பொய் நிற்க, எந்த குழப்பமும் இல்லாமல், அதே சமயம் எந்தவித சிந்தனையும் இல்லாமல், வெறுமையாய் மனதும் மூளையும் இருக்க, கருப்பாய் விரிந்து கிடந்த தார் சாலையை மட்டுமே எண்ணத்தில் கொண்டு, இலக்கு இல்லாமல் பயணித்து அந்த கார்.
**************
இரண்டு மணி நேரம் கழித்து,
அந்தக் கார் சென்று சேரும் இலக்கிலலாமல் மிதமான வேகத்தில் ஏதோ ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்ததற்கான சாட்சியாக சாலையெல்லாம் நீர் கோர்த்து இருந்தது. மணி தான் அந்த காரை ஒட்டிக்கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் கழித்து, இன்று தான் கார் ஓட்டுகிறான். சீராக துடித்துக் கொண்டிருந்தது அவன் இதயம், அவன் கைகள் நடுங்க வில்லை, உடல் வியர்க்க வில்லை, உள்ளம் படபடக்கவில்லை, மாறாக அது கொதித்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் ஒரு கடை தென்பட்டதும் வண்டியை நிறுத்தினான். இறங்கிச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் லைட்டர் வாங்கிவன், மீண்டும் எடுத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன், என்ன நினைத்தானோ, அதை வைத்துவிட்டான். வண்டியை ஓரம் கட்டியவன், GPSல் "தெங்குமரஹாடா" தேடியவன், காரை எடுத்தான். "நேத்ரா சொன்னதுதான் சரி, நான் அவளை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருக்க கூடாது" என்ற எண்ணம் தோன்ற, அதுவரை மிதமாக சென்று கொண்டிருந்த கார், வேகம் எடுத்தது.
ஒரு மணி நேரம் கழித்து,
ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று காட்டிய தூரத்தை நாற்பது, நாற்பத்ததைந்து நிமிடங்களில் வந்தடைந்திருந்ததான். அவன் அமர்ந்திருந்த காரின் இன்ஜின் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியில் "சட்!! சட்!!” என்று விழுந்து கொண்டிருந்த தூரல்களின் மீது தன் மொத்த கவனத்தையும் வைத்திருந்தான். எண்ணம் சிதருறும் போதெல்லாம் "அவ உன்ன கவனிச்சிருக்க மாட்டா!!” என்று சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் விழும் மழைத்துளியின் மீது தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரமாக தன் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தான், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு, நீலகிரி மலையின் கிழக்கு சரிவின் அடிவாரத்தில் வந்துவிட்டான். பத்தொன்பது வயதில், இதே போல ஒருமுறை தன்னை இழந்ததால், அவன் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்ட காயங்களை நினைத்தவன், எங்கே அப்படி மீண்டும் ஒருமுறை நடந்தால்? என்று யோசித்தவன், அதற்கு மேல் யோசிக்கவில்லை.
அவனுக்கு நன்றாக தெரியும், அவன் மீண்டும் ஒரு எமோஷனல் பிரேக்டவுனின் விழும்பில் இருக்கிறான் என்பது. அப்படி மனம் சஞ்சலப்படும் போதெல்லாம், இந்த பள்ளத்தாக்கும், அந்த காட்டாரும் தான் அவனை கட்டுப்படுத்தி, சமாநிலைக்கு கொண்டுவரும். ஒன்றரை வருடங்கள் கழித்து, மீண்டும் அந்த காட்டில் தன்னை தொலைத்துக் கொள்ளும்வரை, அந்த டென்னிஸ் அக்கடமியில் நடந்த நிகழ்வை தள்ளி வைத்திருக்க படாத பாடுபட்டான். வயது முதிர்ச்சியோ, அல்லது வாழ்க்கைப் பாடாமோ, அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருந்தான். அமர்ந்திருந்த சீட்டை சரித்தவன், காரின் கூரையை வெறித்தான். அடுத்த நொடி, இது போன்ற எத்தனையோ இரவுகளில், மதுவும் அவனும், கொஞ்சிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருந்த நினைவுகள் மடைதிறந்த வெள்ளம் போல அவன் மனதை நிரப்பிக் கொண்டது. அடுத்த மூன்று நொடிகளில், சிகரெட்டையும, லைட்டரையும் எடுத்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி, எதிரே கிடந்த மண் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான். “எதுக்கு மது அங்க வந்த??” என்று அவன் மனது புலம்ப ஆரம்பிக்க அவனது கால்கள் வேகம் எடுத்தது. ஓட்டமும் நடையுமாக அவன் அந்தக் காட்டை நோக்கி நடக்க, அதுவரை அவன் மனதில் அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் கட்டவிழ்ந்தது.
"மதுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஏதாவது சிக்கல் இருக்குமோ?"
இல்ல, இல்ல, தேவை இல்லாம எதுவும் யோசிக்காதீங்க.
"அதுக்கு, லவ் பண்ணும்போது எடுத்துக்கிட்ட கர்ப்பத்தடை மாத்திரை தான் காரணமாய் இருக்குமோ?" அய்யோ என்று அலறியது அவன் மனம்.
அவனது நடை ஓட்டம் ஆக மாறியது.
"தேவையில்லாம எதையும் யோசிக்காத, அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது, கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் தான் ஆறது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மனதை சமாதானப்படுத்த முயன்றார்.
சிறிதாக தூறல் விழ ஆரம்பித்தது. பளீரென்ற மின்னல் வெட்டும் வானத்தை வெடி வைத்து வெடிக்க வைத்ததைப் போல அதைத் தொடர்ந்து வந்த இடியின் சத்தமும் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. மின்னல் வெளிச்சத்தில், தெரிந்த அந்த காடும், மலையும், அதன் பிரமாண்டமும், அவனுக்குள் அச்சத்தையும், அது தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆபத்தையும் உணர்த்தியது. இருந்தும் காட்டை நோக்கி நகரும் அவன் கால்கள் நிற்கவில்லை. தூரத்தில், அந்த காட்டுக்குள், ஆயிரம் பேர் "ஓ" வென்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற இரைச்சல் அவன் காதுகளை எட்ட, எதேனும் நடந்து, இந்த காற்றோடு காற்றாக, இந்த இருளோடு இருளாக கரைந்து போய்விடக் கூடாத என்று எங்கியது அவன் உள்ளம். அவன் காட்டுக்குள் நடக்க நடக்க அந்த இரைச்சல் அவனை நோக்கி வருவது போல் தோன்ற, பயம் அவன் உள்ளத்தை கவ்விக் கொண்டது.
அவனுள், பல இரவு இதேபோன்று, அலைந்து திரிந்தததைப் போல மிகவும் பழக்கபட்ட, அதே நேரம் பெரும் தவறு நிகழப் போகிறது என்ற உணர்வு. இதேபோன்றதொரு பயம் அப்பிய இரவில் தான், யாரேனும் ஒரு வார்த்தை ஆறுதலாய் சொல்லி விட மாட்டார்களா?? என்று அநாதையாய் அலைந்து திரிந்து, அது கிட்டாமல் போய் விரக்தியுற்று, பெரும் பாவத்தை, இந்த நொடிவரை அவனை இரையாய் கேட்கும் சாபத்தை அவன் பெற்றது அவன் நினைவுக்கு வந்தது. அவனுக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் "ஓ"வென்ற ஓலம் அவன் காதுகளில் ஒலித்தது. அவனால் முடியாத அழுகையை, அவனுக்காக அழுது கொண்டிருந்தது அந்த காட்டாறு. இல்லாத ஒளியை, வெள்ளை வெளேரென்று பிரதிபலித்தவாறு, "ஓ" என்று ஓலமிட்டு, மணியின் மனதைப் போலவே கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு.
அன்று பகலில் பெய்த பெரு மழையின் காரணமாக, இயற்கை தனக்கு போட்டிருந்த வேலியை எல்லாம் உடைத்துக் கொண்டு, பெரும் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டு இருந்தது அந்தக் காட்டாறு. அந்த காட்டாற்று வெள்ளம் எல்லாம் தன் கண்ணீர் தான் என்று நினைத்தவன் கொஞ்சம் முன்னகர்ந்து, தண்ணீரின் விழும்பில் நின்று கொண்டான். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
அழுதுகொண்டிருந்த மதுவை, இழுத்துக் கொண்டு வந்து காரில் வழுக்கட்டாயமாக ரஞ்சித் ஏற்றியது நினைவுக்கு வர
“ஒரேவேலை, அவன் என் மதுவை அடிப்பானோ?, பொது இடம் என்பதால்தான் கட்டுப்பாடுடன் இருந்தானோ?” என்று யோசித்து அய்யோ என்று கதறியது அவன் உள்ளம்.
ரஞ்சித், மதுவை காயப்படுத்துவானோ? என்று நினைக்கும் பொழுதே அவன் மனதில் ஆத்திரம் தோன்ற,
“அப்படியெல்லாம் இருக்காது. மது அடிமை போன்று அடங்கிப்போகும் பெண்ணல்ல!!” தனக்கு தானே சமாதானம் சொல்லி ஆத்திரத்தை ஓதுக்கி தள்ளியவன்
“மது அழும் போது ஆறுதல் சொல்லாமல், எப்படி அவனால் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்ள முடிந்தது? முரடனிடமா என் மது சிக்கியிருக்கிறாள்?” என்று மீண்டும் அலறியது அவன் உள்ளம்.
“ஒரு புருஷன், முன்னால் காதலனுக்காக அழும் தன் மனைவியை திட்டாமல், கொஞ்சுவானு எதிர்பாக்கிறையா?” என்ற எதிர் கேள்வி, அவனை துடிக்க செய்தது.
“எதுக்கு மது அங்க வந்தே?” ஓலமிட்டுக் கொண்டிருந்த நதியில் அவன் பார்வை நிலைத்திருக்க, மீண்டும் ஆரம்பித்த கேள்வியிலேயே வந்து நின்றது அவனது மனம்.
அவள் தேடிவந்த பொழுது மறுதலித்திருக்க கூடாதோ என்று எண்ணினான். இப்படி துன்பப்படுவதற்கு பதில் அவளை மணந்து கொண்டிருந்தால், அவளின் இன்பத்திலாவது தான் தேடும் ஆறுதல் கிட்டியிருக்குமோ என்று முதல் முறையாக தன்னையே கேள்வி கேட்டான்.
மதுவின் விழிகள் தன் மீது ஒரு நொடி விழுந்ததை நினைத்தவன்
"என் முகமே அவளுக்கு மறந்துவிட்டதா? என்று எழுந்த கேள்வி அவனை மொத்தமாக நொறுக்கி போட்டது.
“அவள் அழும் போது ஆறுதல் சொல்லக் கூட வக்கற்று நின்றேனே?”
அவளின் வாழ்வில் முதன்மையான ஆணாக இருந்திருக்க வேண்டிய தன்னை ஒரு வழிபோக்கனாய் மாற்றிய வாழ்வை நினைக்கையில் “போதும்!! இந்த ஆற்றில் குதித்து விடு!!” என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, "நோ" என்று இன்னொரு குரல் அவனை தடுத்தது. இந்த முறை ஆற்றில் இறங்கினால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவனை எச்சரித்து அவனது மூளை. அப்படியே சோர்ந்து அமர்ந்தான். உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.
பின் என்ன நினைத்தானோ எழுந்து நின்றான், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அந்த காட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்துடன் இரண்டி எடுத்து வைத்த போது, சருகுகள் சலசலக்க, ஏதோ ஒரு மிருகத்தின் காலடியோசை, அவன் காதுகளில் கேட்டது. சட்டென ஓசை வந்த திசை பார்த்து அவன் கண்களில் எதுவும் புலப்படவில்லை, இருந்தும் அந்த ஓசையை அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக காலடி ஓசையின் எதிர் திசையில் வேகமாக அவன் கால்கள் நகர, ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அந்த ஆற்றுக்குள் இறங்கினான். "ஆற்றில் பெருவெள்ளம்" என்று அவன் மூளை உணர்த்திய அதே நொடியில், அவனை இழுத்துச் சென்றது அந்தக் காட்டாற்று வெள்ளம். அறிவையும், ஆற்றலையும் ஒன்றுமில்லாமல் செய்வதில் உணர்வு பெருகும்!! வெள்ளப் பெருக்கும்!! ஒன்று. காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவது என்பது மீன்களால் கூட முடியாது. வெள்ளம் அவனை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.
என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே, அவனது விலாஎழும்பு ஒரு பாறையில் மோத, தானாகத் திறந்த வாயினுள் புகுந்தது ஆற்று வெள்ளம். சில நேரத்திற்கெல்லாம் மூர்ச்சையாகி தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போனான். நினைவு வந்தபோது ஏதோ ஒரு பாறையில் அவனைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு. பெரிதாக இருந்த பாறையின் நடுவில் இருந்த ஓரடி பிளவின் இழுப்பால், அவன் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது. பாறையைப் பற்றிக்கொண்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உடல் வலுவும், உள்ளத்தில் உறுதியும் சுத்தமாக இல்லை அவனிடம். மொத்தமாக தன்னை அந்தக் காட்டாறுக்கு ஒப்புக்கொடுத்து இருந்தான். மூச்சுக் குழாயில் இருந்த தண்ணீர் அவன் மூச்சு விடுவதை அனுமதிக்கவில்லை. அந்த காட்டாற்று வெள்ளத்தின் பேரிரைச்சல் அவன் காதுகளை எட்ட வில்லை. வலதுபுற இடுப்பு எலும்பில் ஏதோ ஒன்று அழுத்த, அதன் வலி மட்டுமே அவன் உணர்ந்த ஒரே உணர்வு. அந்தப் பாறையின் பிளவில் சிக்கியிருந்த ஒரு மரக் கொம்பு, அவன் இடுப்பில் அழுத்திக் கொண்டிருந்தது.
மூச்சுவிடும் சிரமத்துக்கு இடையில், ஒரு பக்கமாக அவன் இடுப்பு எலும்பை உடைப்பது போல அந்த கட்டை அழுத்த, இடுப்பு எலும்பின் கடுப்பில், வலி தாங்காது, அவன் உதடு துடித்தது. அந்த நிலையிலும் அவனது மனமும், "இப்படி ஒரு சாவுதான் உனக்கு சரியானது" என்று அவனை எள்ளி நகையாடியது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு மரம் அவன் பின் மண்டையை தாக்க, அதன் விசையால் அடி வயிறு வரை அந்தப் பாறையின் மேல் இழுத்து போடப்பட்டு இருந்தால். அருகிலிருந்த மற்றொரு பாறையில் அந்த மரத்தின் தண்டு சிக்கிக் கொள்ள, அந்த மரம் அவனது முதுகில் விழுந்து அவனை பாறையோடு அழுத்திப் பிடித்துக்கொண்டது. அவன் இடுப்பில் குத்திக் கொண்டிருந்த அந்தக் அட்டையோ அவனது தொடையில் நாலு இஞ்சுக்கு ஒரு கோடு கிழித்து இருந்தது.
பளீரென்ற வெளிச்சம், கண்களைக் கூசச் செய்யாத, பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரு வெளிச்சம் அவனைத் தாக்க, அவன் உடல் வலியை எல்லாம், அந்த வெளிச்சம் எடுத்துக் கொண்டு, கண நொடியில் நீங்க, அண்டம் விழுங்கும் இருள் அவனை கவ்விக்கொண்டது. இருள் தின்னும் வெளிச்சமும், வெளிச்சம் புகா இருளும், அந்த மரத்தின் உபயம். ஆற்று வெள்ளத்தின் இழுப்பை அவன் உணரவில்லை, உடல் சில்லிட்டது, ஆனால் அதற்கு காரணம் ஆற்று நீர் இல்லை. ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தவனுக்கு, இதுதான் உடல் அற்ற உயிரின் உணரவோ என்று தோன்றியது.
காட்டாற்று வெள்ளத்தில் மணி தன்னைக் கரைத்துக் கொண்ட மறுநாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, சிவகாமியும் மதுவும், டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இருவரது கவனமும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது இல்லை.
தன் மகள் தன்னுடன் பேச ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஆகி இருந்தாலும், நேருக்கு நேர் முகம் பார்த்து பேச, தன் மகளுடன் ஆன உறவைப் புதுப்பித்துக் கொள்ள சிவகாமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. கடந்த மூன்று நாட்களாக ரஞ்சித் உடன் இருந்ததால், அவளால் இயல்பாக தன் மகளுடன் பேச முடியவில்லை. இன்று அதற்கான வாய்ப்பு கிடைக்கவே, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாத குழப்பத்தில், தயக்கத்தில் கண்களை தொலைக்காட்சியின் மீது பதித்து இருந்தாலும் கவனம் மொத்தத்தையும் தன் மகளின் மீதே வைத்திருந்தாள் சிவகாமி. மது, சிவகாமி என இருவருமே கொஞ்சம் அசூசையாகவே உணர்ந்தார்கள். பழைய இயல்புக்கு தங்கள் உறவு உடனே திரும்பாது என்பதை இருவருமே உணயர்ந்திருந்தார்கள். தன் மகளுடனான உறவை புதுப்பித்துக் கொள் துடித்துக் கொண்டிருந்தவளுக்கு மகளின் திடீர் வருகை சொல்ல முடியாத அளவுக்கு இன்பத்தை கொடுத்தாலும், அவளை எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றத்தையும் கொடுத்து.
மதுவின் மனமோ வேறு மாதிரியான குழப்பத்தில் சிக்கித் தவித்து இருந்தது. நேற்று இரவு அகாடமியில் இருந்து நேராக மணியின் வீட்டுக்குத்தான் அவளும் ரஞ்சித்தும் சென்றார்கள். கேட்டிலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா உரிமைகளையும் கொண்டு, சர்வ சாதாரணமாக சென்று வந்த வீட்டிற்குள் கூட அனுமதிக்க கூட படாததில் நொந்தவள், மணியன் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றத்தில் மேலும் நொந்து போனாள்.
ரஞ்சித் தான் "மணிக்கு ஒன்னும் ஆயிருக்காது, நடந்து போனார்னு தானே சொன்னாங்க!!" என்று சொல்லி தேற்றி அழைத்து வந்திருந்தான்.
இன்று காலை சென்ற போதும் அதே நிலைதான். வீட்டின் செக்யூரிட்டி ஆட்கள் அலுவலகத்தில் சென்று பார்க்கும்படி அறிவுறுத்த, மணியின் அலுவலகத்திலோ எப்படியும் அவனை பார்க்க ஒரு வாரத்திற்கு அப்பாயின்ட்மெண்ட் கிடைக்காது என்ற தகவல் சொல்லப்பட மேலும் சோர்வானாள். மதுவிற்கு ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை, சீக்கிரம் அவனை சந்திப்பது எப்படி என்ற குழப்பத்தில் இருந்தாள் மது.
"பத்து நாளுனு சொல்லிட்டு, மாப்பிள திடீர்னு இன்னைக்கே கிளம்பி போயிட்டாரு?"
ஒருவாராக குழப்பத்தில் இருந்து வெளிவந்த சிவகாமி, இருவருக்குமான அமைதியை உடைத்தாள்.
"இல்ல, ரொம்ப முக்கியமான விஷயம், அதான்!!"
தன் மனக் குழப்பத்திலிருந்து மீளாமல் பதில் சொன்னாள் மது.
"நீயும் மாப்பிள்ளை கூட போயிருக்கலாமே மா!!" தவிப்பாக சொன்னாள் சிவகாமி.
தன் தாயைப் பார்த்து வாஞ்சையாக சிரித்த மது, எழுந்து சென்று அவள் அருகே அமர்ந்து
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் வந்தேன். அதனாலதான் போகல!!"
தான் கேட்க தவித்த வார்த்தைகளே தன் மகளின் வாயிலிருந்து வந்து விழ, லேசாக கலங்கிய கண்களுடன் சிரித்தவள், தன் மகளின் இரு கைகளையும் பிடித்து கொண்டாள்.
"சரி டா.. போய் தூங்கு!!" என்று சொல்லிவிட்டு எழப் போனவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து அமர வைத்தாள் மது.
மீண்டும் அங்கே சில நிமிட அமைதி நிலவியது. தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்றதுமே ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது சிவகாமியின் மனதில்.
"உனக்கு தெரியுமான்னு தெரியல!!..நானும் மணியும் லவ் பண்னோம்!!. அவ.." என்று நிறுத்த, சிவகாமியின் முகத்தில் கலவர ரேகைகள்.
"அவன ரொம்ப கஷ்டப் படுத்திருக்கேன் மா!!. வாழ்க்கையில நான் பண்ண சில தப்ப சரி செய்யணும்னு தான் கோயம்புத்தூர் வந்தேன்!!" சிவகாமியின் முகத்தில் இருந்த கலவரம் அதிர்ச்சியாக மாறியது.
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண.. உனக்காகத்தாமா இங்கே வந்தேன்!!.. முடிஞ்சா அவனுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுச்சு!!" தன் தாயின் அதிர்ச்சியைக் கண்டவள் பொய் சொன்னாள்.
மீண்டும் அந்த அறையில் சில நிமிட அமைதி. இருவரது மனமும் வெவ்வேறான குழப்பத்தில் சிக்கித் தவித்தது. தன் தாய் காயப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மதுவுக்கு. தன் மகளின் இந்த விபரீத முடிவால் அவளது திருமண வாழ்விற்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்ற கவலை சிவகாமிக்கு.
"வேணாமே!!.." என்று ஆரம்பித்த சிவகாமி, நிறுத்தி தன் வார்த்தைகளை திருத்தினாள்.
'மாப்பிள்ளைக்கு தெரியுமா?!!" மது ஆமோதிப்பாக தலையாட்ட என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியானாள் சிவகாமி.
அரை மணி நேரம் கழித்து,
சிவகாமியும் மதுவும் அவரவருக்கான அறையில் படுத்திருக்க இருவரது மனதிலும் பெரும் குழப்பமும் பயமும். அந்த இரவு இருவருக்கும் நிம்மதியில்லாத தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது.
*************
“ஹேய்!! என்ன நீ இவ்வளவு நர்வஸா இருக்க?” என்ற ரஞ்சித்தைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த மதுவின் கண்கள் கதவுகளில் நிலைத்திருந்தது. ரஞ்சித்தும், மதுவும் அந்த டென்னிஸ் கோர்ட்டீன் மேல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அவள் கண்கள் தேடிய உருவம் அந்த உள் விளையாட்டாரங்கத்தில் நுழைந்தது. அவன் நடையில் அவள் அறிந்த, ரசித்த துள்ளல் இல்லை. தன் மொத்த உடல் எடையையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றியவாறு நிதானமாக நடந்தவாறு அந்த கோர்ட்டுக்குள் நுழைந்தான் மணி. மதுவின் நினைவு அடுக்குகளில் இருந்த அவனது பிம்பத்துக்கு எந்த வித பொருத்தமும் இல்லாத மணிகண்டன். மதுவால் உணர்ந்து கொள்ள முடிந்த ஒன்றே ஒன்று அவன் முகத்தில் தென்பட்ட பதற்றம். அவனின் பதற்றம் அவளுக்குள் இருந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க,
“He too.” என்றவாரு மதுவைப் பார்த்து திரும்பியவன், பாதியில் இருத்தினான்.
அவள் தோளை அசைத்தவன், இரு கைகளையும் விரித்து என்னவென்று கேட்க, மீண்டும் மறுப்பாக தலையசைத்தாள். அதன் பின் அவளை ரஞ்சித்து தொந்தரவு செய்யவில்லை. மணியின் பதற்றமான முகத்தை பார்க்க பார்க்க மதுவின் இதயத்துடிப்பு எகிறியது. இதயத்தின் "லப்.. டப்" ஓசை அந்த அரங்கத்தின் இரைச்சலையும் மீறி அவள் காதுகளுக்கு கேட்பது போல் தோன்றியது. எதிராளிக்கு கை கொடுத்தவன் அவனது பக்கம் சென்று நின்றான். கேலரி சுற்றிப் பார்க்கவில்லை, உடலை ஸ்ட்ரெச் செய்யவில்லை. விளையாடவே விருப்பம் இல்லாதவன் போல் வெறுமன நின்றான். மது அறிந்த மணியோ டென்னிஸ் கோர்ட்க்குள் நுழைந்தால் எதோ டென்னிஸ் கோர்ட்டை குத்தகைக்கு எடுத்தவன் போல், காலில் ஸ்பிரிங் வைத்தது போல் எல்லைக் கோடுகளை சிலமுறை அளந்து விட்டுத்தான் அவன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பான். முன்னங்கால் மட்டுமே தரையில் அழுந்தியிருக்க மொத்த உடலும் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டே இருக்கும்.
"Are you ready?" என்று ரெபரி கேட்க, அரை விழியில் அவரைப் பார்த்து தலையசைத்தவன் நின்ற நிலை மதுவை குழப்பம்முற செய்தது.
கோகோர்ட் வலதுபுற எல்லையில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்றவன் கால்கள் வலதுபுறம் திரும்பி நின்றது. அவன் நிற்கின்ற நிலையில் பந்து அவனுக்கு இடதுபுறம் அடிக்கப்பட்டால் பந்தை எதிர் கொள்வதற்கு ஒரு வினாடி எனும் அதிகம் தேவைப்படும். டென்னிசில் மிகவும் அடிப்படையான ஒன்று. என்னதான் நீண்ட நாட்கள் விளையாட விட்டாலும் இதெல்லாம் மறக்கக் கூடியதல்ல. விசில் ஊதப்பட்டும் அவன் தலை நிமிராமல் குனிந்தவாறே இருக்க, மதுவுக்கு வாய் எடுத்து கத்தவேண்டும் போல் இருந்தது. மது எதிர்பார்த்தது போலவே பந்து மணிக்கு இடதுபுறமாகவே அடிக்கப்பட்டது. மணியின் உடலில் எந்தவித அசைவும் இல்லை, அரங்கத்தில் "ஓ" என்று எழுந்த சத்தம் ஓரிரு நொடிகளில் அடங்கியது. மொத்த அரங்கமும் மயான அமைதியாக இருக்க, முகம் தரையில் மோத பொத்தென்று விழுந்தான். மீண்டும் அந்த அரங்கமே "ஓ" என்று அதிர்ந்தது.
திதிடுக்கிட்டு விழித்தால் மது. உடலெல்லாம் வேர்த்திருந்தது
விழித்த பின்னும் அவன் தரையில் உயிரற்ற சடலம் போல் விழுந்தது அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்தது. மயங்கி விழும் போது யாரும் அப்படி மொத்தமாகச் சரிந்து விழ மாட்டார்கள். கையையோ காலையோ ஊன்றி தனக்கு அடிபடாதவாறு உடலே தன்னிச்சையாக செயல்படும். அவன் அப்படி மொத்தமாக சரிந்து விழுந்தான் என்றால் சில நொடிகளுக்கு முன்பாகவே நினைவு இழந்திருக்க வேண்டும். உடலை நிலை நிறுத்தி இருந்த நிலையில் உடல் சிறிது நேரம் தாக்கு பிடித்தே அப்படிச் விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவனைக் காண இன்னும் ஒரு வாரம் காத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. எப்படியாவது இன்று அவனை பார்த்தால்தான் தன் மனம் ஆறும் என்று உணர்ந்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வாட்ச்சைப் பார்த்தால், அது ஆறு என்று காட்டியது.
குளித்துவிட்டு வந்தவுடன் மனம் சற்று அடங்கி இருந்தது. நேற்றிரவு தன் தாயிடம் மணியை காதலித்ததை சொன்னது நினைவுக்கு வந்தது. “வேணாமே" என்று அவள் தாய் வேண்டியதில் இருந்தே தேவயில்லாத குழப்பத்தை அவள் மனதில் விதைத்துவிட்டோம் என்று உணர்ந்தவள் முதலில் அதை எப்படி சரி செய்வது என்று நினைக்கலானாள். உடை மாற்றும் பொழுத்துதான் அந்த பேக்-கைப் பார்த்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாய் தன்னிடம் கொடுக்கச் சொல்லி, ரஞ்சித்திடம் கொடுத்தது. அதில் என்ன இருக்கும் என்று தெரிந்ததாலேயோ என்னவோ அதை திறந்து கூடப் பார்க்கவில்லை. அதற்குள் சிவகாமி சாப்பிட அழைக்க, சாப்பிட சென்றாள்.
காலை சாப்பாட்டின் போது பெரிதாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. யோசனையுடனே சாப்பிட்ட மது, சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்ததும் அந்த பேக்-கை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
எடுத்து வந்ததை தாயிடம் கொடுக்க
"என்னமா?” என்று குழப்பமாக பார்த்தவளிடம்
“பழசு எல்லாத்தையும் நான் மறக்கணும்னு நினைக்கிறேன்!!.. அத நான் திறந்து கூட பாக்கல!!” என்றாள். மகளை நிமிர்ந்து பார்த்த சிவகாமி,
“என்ன மன்னிச்சிருடா!!” என்றாள்.
மது பேச ஆரம்பித்த பின், கடந்த கால கசப்புகளை மறக்க நினைத்து மன்னிப்பு கேட்காதவள், முதல்முறையாக தன் செயலுக்காக மன்னிப்பை கேட்டாள். அருகில் அமர்ந்த மது ஆறுதலாக தன் தாயை அணைக்க தாயிற்கும் இருவருக்கும் இடையே இருந்த மாயத்திரையின் அடர்த்தி குறைவது போல் தோன்றியது.
அரைமணி நேரம் கழித்து
மகள் மீண்டும் அவளது அறைக்கு சென்றுவிட, தன் அறைக்கு வந்த சிவகாமி, மது கொடுத்த பேக்-கை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழப்பமான மனநிலையில் இருந்தாள், பின் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தவள், அதை அறையில் இருந்த கப்போர்ட்டில் வைத்து பூட்டிவிட்டாள்.
அதே சமயம் தன் அறையில் இருந்த மதுவின் முகத்தில் பெரும் படபடப்பு. மொபைல்லை காதுக்கு கொடுத்திருந்தாள். அழைப்பின் ஓசை காதில் விழ, அந்த படபடப்பு அதிகரித்துக் கொண்டே போனது. நீண்ட சிந்தனைக்குப் பின் ஒருவாராக முடிவுக்கு வந்தவளாக நேத்ராவுக்கு அழைக்க தொற்றிக் கொண்ட படபடப்புத்தான் அது.
“ஹலோ!!” பிரதீப் தான் அழைப்பை எடுத்தான்.
“ஹலோ!!”
“எஸ்!!”
“பிரதீப், நான் பானு!!” என்றவளின் குரலில் படபடப்பு அடங்கவில்லை.
“பானு?..” என்றவன், இரண்டு நொடிகளுக்குப் பின்
"ஹேய் பானு!!.. எப்படி இருக்க?” என்க, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“நேத்ரா..?” பொதுவான உரையாடலுக்குப் பின்னர், கொஞ்சம் தயக்கமாகவே கேட்டாள் மது.
“தூங்குறா!!” பதில் சொன்ன விதத்தில் இருந்தே அவளை எழுப்புவதை அவன் விரும்பவில்லை என்று புரிந்தது மதுவுக்கு. சில நொடி தயக்கத்துடன் மௌனமானாள்.
“ஃபேஸ்புக் பாத்தியா?” என்றான் பிரதீப்
“இல்லையே!!.. ஏன்?”
“இல்ல.. நேத்து உனக்கு மெசேஜ் அனுப்பிருந்தேன்.. அத பாத்திட்டுதான் கூப்பிட்டேயோனு நினச்சேன்!!”
“ஸாரி.. பிரதீப்!! நான் பாக்கல” என்றவளின் மனதில் எண்ணற்ற கேள்விகள்.
“கோயம்புத்தூர் வர முடியுமா பானு??..” என்று சொல்லி நிறுத்தியவன் பின் தொடர்ந்ததான்
"நேர்ல பாக்கனும்.. பிளீஸ்!!” என்று பிரதீப் கூற, மதுவின் மனம் சீரில்லாமல் சிந்தித்து.
“இப்போ நான்.. ஊர்ல தான் இருக்கேன்!!” தயங்கி தயங்கியே பதிலுறைத்தாள் மது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிரதீப்
“லஞ்சுக்கு மீட் பண்ணலாமா?.. நான் ஒரு ரெஸ்டரண்ட் லொகேஷன் மெசேஜ் அனுப்புறேன்!!”
“ம்ம்ம்!!”
“வாட்ஸ்அப் இதே நம்பர் தான?”
“ம்ம்ம்"
“ஓகே!! பை..”
“பிரதீப்..” அழைப்பை தூண்டித்துவிடுவானோ என்று அவசர அவசரமாக அழைத்தவள்
“அவன் கூட.. டச்ல இருக்கியா?” ஏனோ நாக்கு ஒட்டிக் கொண்டது போல தோன்றியது மதுவுக்கு.
“ம்ம்ம்!!”
“எப்படி இருக்கான்?” என்றவளின் காதுகள் கூர்மையடைந்தன
“அவனுக்கு என்ன செமய்யா இருக்கான்.. பெரிய ஆள் ஆயிட்டான்.. ஏன் நீ நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் இருந்தது வருத்தமா?? கோபமா என்று தெரியவில்லை. கோயம்புத்தூரில் இருந்து அவ்வளவு தூரம் விலகியிருந்தாள்.
“சரி. லஞ்சுல பார்க்கலாம்!!” என்றவன் அழைப்பை தூண்டிக்க, கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள் மது.
பிரதீப் பேசியவிதத்தில் இருந்து அவனுக்கு தன் மேல் வருத்தமொ கோபமோ இருப்பது புரிந்து கொள்ள முடிந்தாலும், மணியிடன் அவன் தொடர்பில் இருப்பது கொஞ்சம் ஆறுதலிப்பதாக இருந்தது. ஏப்படியும் இன்று அவனை பார்த்துவிடலாம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அவன் சொன்ன "பிளீஸ்" அவளுக்குள் சொல்ல முடியாத பயத்தையும் தூண்டியது. ஒருவேளை மணிக்கு? இல்ல நேத்ராவுக்கு? என்று எழுந்த கேள்விகளை அவளது மொபைலின் ஓசை கலைத்து. பிரதீப் தான் ரெஸ்டரண்ட் லொகேஷன் அனுப்பியிருந்தான்.
பிரதீப் சொன்ன நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாகவே அந்த ரெஸ்டரண்ட்டை என்றடைந்தாள். ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கிடந்தது அவளது மனம். மணியை சந்திப்பது என்று முடிவு செய்துவிட்டாலும், அந்த சந்திப்பிற்கு பின் அவர்களது வாழ்வு உறவு எந்த திசையில் பயணிக்கும் என்ற பயம் கொடுத்த விளைவு அது. பேசுவானா? இல்லை கடைசியாக சந்தித்த போது யாரோ ஒருவரிடம் பேசுவது போல் நடந்து கொள்வானா? அன்புடன் அவன் நடந்து கொண்டாள் என்ன செய்வது? என்பது போன்ற கேள்விகளுக்கு இடையில் அவள் எண்ணம் அங்கும் இங்கும் ஓட, அவளது கண்களோ பிரதீப்பின் வரவை எதிர்பார்த்து வாயிலையே வெறித்திருந்தன.
மதுவை நீண்ட காத்திருக்க வைக்காமல் அவனும் கொஞ்சம் முன்னதாகவே வந்தான், அவன் உள்ளே நுழைந்ததும் இவள் எழுந்து கைகாட்ட, கவனித்தவனின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை. இருவரும் அனைத்துக் கொண்டபின் எதிரே அமர,
“என்ன டா தோப்ப போட்டுட்ட?” தொலைபேசியில் தயங்கிய வார்தை, நேரில் பார்க்கும் போது எளிதாக வந்தது.
மதுவின் மனதை குழப்பிய கேள்விகள் எங்கோ காற்றில் கரைந்தது. நட்பில் மட்டுமே நடக்கும் மாயாஜாலம் அது. மதுவின் கேள்விக்கு பெரிதாக சிரித்தவன் தன் வயிறைப் பார்த்தான்.
“ஹா ஹா.. வாயாசாயிடுச்சு!!” சிரித்தவன், மதுவின் முகத்தை கவனித்தான்.
“ஆனா நீ இன்னும் அப்படியேதான் இருக்க. நெத்தில குங்குமம் மட்டும் தான் புதுசு" என்றவனின் கண்கள் இயல்பாக அவள் கழுத்தில் எதையோ தேடியது. தேடியது கிடைத்தவுடன்
“அப்புறம்.. ஹோவ் இஸ் ரஞ்சித்?” என்க
“நல்ல இருக்கான்!!” என்றவள் லேசாக புன்னகையித்தாள்
“நேத்ரா வருவானு எதிர் பார்த்தேன்!!” அவள் புன்னகை வரண்டது.
மதுவுக்கு பதில் சொல்லாமல் மெனு காரட்டை புரட்டியவன், மதுவுக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு அதையும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
“நீ கோயம்புத்தூர் வந்தத இன்னும் அவ கிட்ட சொல்லல!!”
“..”
இருவருக்கு இடையில் ஏதோ வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல ஒரு அமைதி நீடிக்க, பிரதீப்பே அதை உடைத்தான்.
“ மணி உன்ன பாக்கனும்னு ஹெல்ப் கேட்டான்!!,.. உனக்கு எந்த ப்ராப்ளமமும் இல்லனா நான் கூட்டிட்டு போறேன்!!.. நான் உன்ன கட்டாயப் படுத்தல.. உனக்கு ஓகேனா மட்டும் வந்தாப் போதும். இல்லனா நான் அவன சமாளிச்சுக்கிறேன்!!” கொஞ்சம் தயங்கி தயங்கிய கேட்க, ஒரு சில நொடி வாயடைத்துப் போனாள் மது.
மீண்டும் அவளது மனம் சந்திப்பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து. மதுவின் தயக்கத்தைப் பார்த்த பிரதீப்
“இட்ஸ் ஓகே!!.. ஐ அண்டர்ஸ்டாண்ட்!! நீ தேவை இல்லாம ஃபீல்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சரி என்று தலையசைத்தாள்.
“ஆர் யு சூர்?!!” பிரதீப் தயக்கமாக கேட்க, இந்தமுறை ஆமோதிப்பாக தலையசைத்தாள், வேக வேகமாக. வார்த்தைகள் ஏனோ அவள் உதடுகளை விட்டு வருவேணா என்றது.
முக்கால் மணி நேரம் கழித்து,
நெஞ்சம் படபடக்க காரில் அமர்திருந்தாள் மது. அவளது வலது கை பெருவிரல் இடது உள்ளங்கையின் ரேகைகளை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. எண்ணங்கள் எதுவும் இல்லா ஒரு அடர்த்தி அவள் மனதை அழுத்த, அவளது பார்வையோ ரேகையை அழிக்க முயற்சி செய்யும் விரலை உற்சாகம் ஊட்டியது. பிரதீப் ஒட்டிக் கொண்டிருந்த அந்த காரின் வேகம் குறைந்து, வலது புறமாக திரும்ப, தயக்கமாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் பெரிதாக விரிந்தது.
மதுவின் மனமோ விரிந்த விழிளில் விழுந்த காட்சியை நம்ப மறுத்து.
***********************
பதட்டமான மனநிலையில் தன்னையறியாமல் அல்லது உள்ளுணர்வின் தூண்டுதலால், ஒருமுறை தற்பொழுது மது பார்க்க எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக்கை திறந்தவன், அவளது ப்ரோஃபைலை திறக்க, மூன்று மாதங்களக்கு முன் அவள் பதிவிட்டிருந்த புகைப்படம் தான் முதலில் இருந்தது. “HBD Puzzle!!. It’s been five long years but I am yet to solve this puzzle!!” (இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - புதிர்!!. ஐந்து வருடங்கள் கழித்தும் இன்னும் நான் புரிந்து கொள்ள முடியாத புதிர்!!”) என்று உதடு குவித்து வைத்து, கண்களை சுருக்கி, மூக்கிற்கும், மேல் உதடுக்கும் நடுவில் ஆட்காட்டி விரலை மடக்கி வைத்தவாறு, அருகில் சிறத்தாவாறு இவளைப் பார்க்கும் ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் முகபாவனையை ரசித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு சின்ன மலர்ச்சி தோன்றி, பின் மலர்ந்த முகம் சுருங்கியது. எனோ அவனுக்கு புகைப் படங்களுக்கான பகுதில் சென்று வெறும் புகைப்படங்களை பார்க்க எனோ தயங்கினான். அப்படியே தொடுதிரையை மேல் நோக்கி இழுத்தவன் கண்களில் பட்டதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான பகிர்தல்கள். அப்படி தொடுதிரையை உருட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் பட்டது வெறும் “HBD.” என்ற பதிவி. அதைப் பார்த்த நொடியே அவனுக்குத் தெரியும் அந்த வாழ்த்து தனக்கானது என்று, அது பதிவிடப்பட்ட தேதி அதை உறுதி செய்தது.
மானதெல்லாம் இதமான ஒரு உணர்வு பரவ, தொடுதிரையை அனைத்துவிட்டு, கண்களை முடி அமர்ந்திருந்த சேரில் தலைசாய்ந்தான். மணி தேடியது, மதுவின் மகிழ்ச்சியை அல்ல என்பதே அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. மதுவின் நினைவில் எங்கோ ஒரு ஓரத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தில், அவன் உடலும் உள்ளமும் சில நொடி சிலிர்த்து அடங்கியது. அதுவரை இருந்தா பதட்டம் நீங்கி போட்டிக்கு தாயாராக இருந்தான். அப்பொழுதுதான் மதுவின் மருத்துவம் சம்பந்தமான பதிவுகளை ஜீரணித்த மூளை, அதில் தொண்ணூறு சதவிகிதம் கற்பமுறுதல், அதில் உள்ள சிக்கல் சம்பந்தமான பதிவு என்று அவனுக்கு உணர்த்த, அவனது முகமும், மனமும் இருக்கியது. அதிவேகத்தில் செயல்பட்ட மூளை, தன்னால் சிந்திக்க முடிந்த அத்தனை செய்திகளையும் அவனுக்கு சொல்ல, அதில் சில, அவன் உயிரைப் பிடித்து ஆட்டியது. “இல்லை!!, இல்லை!!, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை, தேவை இல்லாமல் கற்பனை செய்யாதே!!" என்று மனதிற்கு கடிவாளம் போட அது அடங்கவில்லை. கைகளில் வேர்க்க ஆரம்பித்து. நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து அவன் ஆட்டத்திற்கான அழைப்பு வர, எண்ணங்களை உதறிக் கொண்டு நடக்க ஆரம்பத்தான், கால்கள் வேர்க்க தொடங்கியது. இதய துடிப்பு எகிறியது.
"இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ"
"இன்னும் பத்து செகண்ட் தான்!!” என்று விடியலுக்கு காத்திருந்தவனின் வானம், மொத்தமாக இருட்டியது. சூரியனை விழுங்கும் நிலவு போல.
"சிகரெட்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் கண்களில் முதலில் மதுவின் கார் பட, என்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமே, அவன் கண்களில் பட்டாள், மது. அழுகிறாள் என்பது, அடிக்கடி இடதுகையால் கண்களை துடைப்பதில் இருந்தே தெரிந்தது, வலது கையைப் பற்றிய படி, அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் ரஞ்சித். இல்லை, இல்லை, மதுவைக் காட்டிலும், அவனது நடையின் வேகம் சற்று அதிகமாக இருந்தது, மதுவை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுவந்தான். அந்த மினி கூப்பர் காரின் அருகில் வந்ததும் நின்றவள், ரஞ்சித்திடம் இருந்து கைகளை உருவிக் கொண்டவள், மறுப்பாக தலையசைத்தவாரே அவனிடம் ஏதோ சொல்ல, அவள் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்தது கண்ணீர். இடுப்பில் கையை வைத்து, கொஞ்சம் பின்னால் சாய்ந்து, பின் நேராக நின்று அவளிடம் கைகளை இங்கும் அங்கும் ஆட்டியவாறு, ஆக்ரோசாமாக பேசினான். மீண்டும் அவள் மறுப்பாக தலையசைத்தவாரே கெஞ்சும் பாவனையில் அவனிடம் சொல்ல, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காரின் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளினான், கதவை அடைத்தவன், வேகமாக சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான். சில நொடிகளில் கார் மணியை கடந்து சென்றது, காரில் அமர்ந்திருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான் மணி. இருவரது கண்களும் ஒரு நொடி சந்திக்க, அந்த நொடி மணியின் இதயத் துடிப்பு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் அவளின் கண்களோ அவனை பார்த்ததாற்கான எந்தவித, உணர்வுகளையும், அசைவையும் காட்டவில்லை. உருக்குலைந்து போனான்.
சிலை போல் அவன் நின்றிருக்க, அவன் தோளை யாரோ தொட, உணர்வு பெற்றவனாய் திரும்பிப் பார்த்தான்.
“சுத்தி நிறைய பேர் பார்க்கிங் பன்னிருந்தாங்க!!., அதுதான் சார் லேட்!!” என்று பவ்வியமாக சொன்ன அவனது டிரைவர், மணி அமருவதற்கு, காரின் கதைவைத் திறந்தார்.
திறந்திருந்த கதவை கண்டுகொள்ளாமல் சென்றவன், டிரைவர் இருக்கையில் சென்று அமர, கதவை அடைத்த டிரைவர், அவன் பக்கம் செல்ல எத்தனிக்கும் போதே, அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது. எதுவும் புரியாமல் டிரைவர் குழம்பிப் பொய் நிற்க, எந்த குழப்பமும் இல்லாமல், அதே சமயம் எந்தவித சிந்தனையும் இல்லாமல், வெறுமையாய் மனதும் மூளையும் இருக்க, கருப்பாய் விரிந்து கிடந்த தார் சாலையை மட்டுமே எண்ணத்தில் கொண்டு, இலக்கு இல்லாமல் பயணித்து அந்த கார்.
**************
இரண்டு மணி நேரம் கழித்து,
அந்தக் கார் சென்று சேரும் இலக்கிலலாமல் மிதமான வேகத்தில் ஏதோ ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்ததற்கான சாட்சியாக சாலையெல்லாம் நீர் கோர்த்து இருந்தது. மணி தான் அந்த காரை ஒட்டிக்கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் கழித்து, இன்று தான் கார் ஓட்டுகிறான். சீராக துடித்துக் கொண்டிருந்தது அவன் இதயம், அவன் கைகள் நடுங்க வில்லை, உடல் வியர்க்க வில்லை, உள்ளம் படபடக்கவில்லை, மாறாக அது கொதித்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் ஒரு கடை தென்பட்டதும் வண்டியை நிறுத்தினான். இறங்கிச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் லைட்டர் வாங்கிவன், மீண்டும் எடுத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன், என்ன நினைத்தானோ, அதை வைத்துவிட்டான். வண்டியை ஓரம் கட்டியவன், GPSல் "தெங்குமரஹாடா" தேடியவன், காரை எடுத்தான். "நேத்ரா சொன்னதுதான் சரி, நான் அவளை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருக்க கூடாது" என்ற எண்ணம் தோன்ற, அதுவரை மிதமாக சென்று கொண்டிருந்த கார், வேகம் எடுத்தது.
ஒரு மணி நேரம் கழித்து,
ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று காட்டிய தூரத்தை நாற்பது, நாற்பத்ததைந்து நிமிடங்களில் வந்தடைந்திருந்ததான். அவன் அமர்ந்திருந்த காரின் இன்ஜின் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியில் "சட்!! சட்!!” என்று விழுந்து கொண்டிருந்த தூரல்களின் மீது தன் மொத்த கவனத்தையும் வைத்திருந்தான். எண்ணம் சிதருறும் போதெல்லாம் "அவ உன்ன கவனிச்சிருக்க மாட்டா!!” என்று சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் விழும் மழைத்துளியின் மீது தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரமாக தன் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தான், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு, நீலகிரி மலையின் கிழக்கு சரிவின் அடிவாரத்தில் வந்துவிட்டான். பத்தொன்பது வயதில், இதே போல ஒருமுறை தன்னை இழந்ததால், அவன் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்ட காயங்களை நினைத்தவன், எங்கே அப்படி மீண்டும் ஒருமுறை நடந்தால்? என்று யோசித்தவன், அதற்கு மேல் யோசிக்கவில்லை.
அவனுக்கு நன்றாக தெரியும், அவன் மீண்டும் ஒரு எமோஷனல் பிரேக்டவுனின் விழும்பில் இருக்கிறான் என்பது. அப்படி மனம் சஞ்சலப்படும் போதெல்லாம், இந்த பள்ளத்தாக்கும், அந்த காட்டாரும் தான் அவனை கட்டுப்படுத்தி, சமாநிலைக்கு கொண்டுவரும். ஒன்றரை வருடங்கள் கழித்து, மீண்டும் அந்த காட்டில் தன்னை தொலைத்துக் கொள்ளும்வரை, அந்த டென்னிஸ் அக்கடமியில் நடந்த நிகழ்வை தள்ளி வைத்திருக்க படாத பாடுபட்டான். வயது முதிர்ச்சியோ, அல்லது வாழ்க்கைப் பாடாமோ, அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருந்தான். அமர்ந்திருந்த சீட்டை சரித்தவன், காரின் கூரையை வெறித்தான். அடுத்த நொடி, இது போன்ற எத்தனையோ இரவுகளில், மதுவும் அவனும், கொஞ்சிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருந்த நினைவுகள் மடைதிறந்த வெள்ளம் போல அவன் மனதை நிரப்பிக் கொண்டது. அடுத்த மூன்று நொடிகளில், சிகரெட்டையும, லைட்டரையும் எடுத்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி, எதிரே கிடந்த மண் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான். “எதுக்கு மது அங்க வந்த??” என்று அவன் மனது புலம்ப ஆரம்பிக்க அவனது கால்கள் வேகம் எடுத்தது. ஓட்டமும் நடையுமாக அவன் அந்தக் காட்டை நோக்கி நடக்க, அதுவரை அவன் மனதில் அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் கட்டவிழ்ந்தது.
"மதுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஏதாவது சிக்கல் இருக்குமோ?"
இல்ல, இல்ல, தேவை இல்லாம எதுவும் யோசிக்காதீங்க.
"அதுக்கு, லவ் பண்ணும்போது எடுத்துக்கிட்ட கர்ப்பத்தடை மாத்திரை தான் காரணமாய் இருக்குமோ?" அய்யோ என்று அலறியது அவன் மனம்.
அவனது நடை ஓட்டம் ஆக மாறியது.
"தேவையில்லாம எதையும் யோசிக்காத, அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது, கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் தான் ஆறது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மனதை சமாதானப்படுத்த முயன்றார்.
சிறிதாக தூறல் விழ ஆரம்பித்தது. பளீரென்ற மின்னல் வெட்டும் வானத்தை வெடி வைத்து வெடிக்க வைத்ததைப் போல அதைத் தொடர்ந்து வந்த இடியின் சத்தமும் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. மின்னல் வெளிச்சத்தில், தெரிந்த அந்த காடும், மலையும், அதன் பிரமாண்டமும், அவனுக்குள் அச்சத்தையும், அது தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆபத்தையும் உணர்த்தியது. இருந்தும் காட்டை நோக்கி நகரும் அவன் கால்கள் நிற்கவில்லை. தூரத்தில், அந்த காட்டுக்குள், ஆயிரம் பேர் "ஓ" வென்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற இரைச்சல் அவன் காதுகளை எட்ட, எதேனும் நடந்து, இந்த காற்றோடு காற்றாக, இந்த இருளோடு இருளாக கரைந்து போய்விடக் கூடாத என்று எங்கியது அவன் உள்ளம். அவன் காட்டுக்குள் நடக்க நடக்க அந்த இரைச்சல் அவனை நோக்கி வருவது போல் தோன்ற, பயம் அவன் உள்ளத்தை கவ்விக் கொண்டது.
அவனுள், பல இரவு இதேபோன்று, அலைந்து திரிந்தததைப் போல மிகவும் பழக்கபட்ட, அதே நேரம் பெரும் தவறு நிகழப் போகிறது என்ற உணர்வு. இதேபோன்றதொரு பயம் அப்பிய இரவில் தான், யாரேனும் ஒரு வார்த்தை ஆறுதலாய் சொல்லி விட மாட்டார்களா?? என்று அநாதையாய் அலைந்து திரிந்து, அது கிட்டாமல் போய் விரக்தியுற்று, பெரும் பாவத்தை, இந்த நொடிவரை அவனை இரையாய் கேட்கும் சாபத்தை அவன் பெற்றது அவன் நினைவுக்கு வந்தது. அவனுக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் "ஓ"வென்ற ஓலம் அவன் காதுகளில் ஒலித்தது. அவனால் முடியாத அழுகையை, அவனுக்காக அழுது கொண்டிருந்தது அந்த காட்டாறு. இல்லாத ஒளியை, வெள்ளை வெளேரென்று பிரதிபலித்தவாறு, "ஓ" என்று ஓலமிட்டு, மணியின் மனதைப் போலவே கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு.
அன்று பகலில் பெய்த பெரு மழையின் காரணமாக, இயற்கை தனக்கு போட்டிருந்த வேலியை எல்லாம் உடைத்துக் கொண்டு, பெரும் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டு இருந்தது அந்தக் காட்டாறு. அந்த காட்டாற்று வெள்ளம் எல்லாம் தன் கண்ணீர் தான் என்று நினைத்தவன் கொஞ்சம் முன்னகர்ந்து, தண்ணீரின் விழும்பில் நின்று கொண்டான். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
அழுதுகொண்டிருந்த மதுவை, இழுத்துக் கொண்டு வந்து காரில் வழுக்கட்டாயமாக ரஞ்சித் ஏற்றியது நினைவுக்கு வர
“ஒரேவேலை, அவன் என் மதுவை அடிப்பானோ?, பொது இடம் என்பதால்தான் கட்டுப்பாடுடன் இருந்தானோ?” என்று யோசித்து அய்யோ என்று கதறியது அவன் உள்ளம்.
ரஞ்சித், மதுவை காயப்படுத்துவானோ? என்று நினைக்கும் பொழுதே அவன் மனதில் ஆத்திரம் தோன்ற,
“அப்படியெல்லாம் இருக்காது. மது அடிமை போன்று அடங்கிப்போகும் பெண்ணல்ல!!” தனக்கு தானே சமாதானம் சொல்லி ஆத்திரத்தை ஓதுக்கி தள்ளியவன்
“மது அழும் போது ஆறுதல் சொல்லாமல், எப்படி அவனால் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்ள முடிந்தது? முரடனிடமா என் மது சிக்கியிருக்கிறாள்?” என்று மீண்டும் அலறியது அவன் உள்ளம்.
“ஒரு புருஷன், முன்னால் காதலனுக்காக அழும் தன் மனைவியை திட்டாமல், கொஞ்சுவானு எதிர்பாக்கிறையா?” என்ற எதிர் கேள்வி, அவனை துடிக்க செய்தது.
“எதுக்கு மது அங்க வந்தே?” ஓலமிட்டுக் கொண்டிருந்த நதியில் அவன் பார்வை நிலைத்திருக்க, மீண்டும் ஆரம்பித்த கேள்வியிலேயே வந்து நின்றது அவனது மனம்.
அவள் தேடிவந்த பொழுது மறுதலித்திருக்க கூடாதோ என்று எண்ணினான். இப்படி துன்பப்படுவதற்கு பதில் அவளை மணந்து கொண்டிருந்தால், அவளின் இன்பத்திலாவது தான் தேடும் ஆறுதல் கிட்டியிருக்குமோ என்று முதல் முறையாக தன்னையே கேள்வி கேட்டான்.
மதுவின் விழிகள் தன் மீது ஒரு நொடி விழுந்ததை நினைத்தவன்
"என் முகமே அவளுக்கு மறந்துவிட்டதா? என்று எழுந்த கேள்வி அவனை மொத்தமாக நொறுக்கி போட்டது.
“அவள் அழும் போது ஆறுதல் சொல்லக் கூட வக்கற்று நின்றேனே?”
அவளின் வாழ்வில் முதன்மையான ஆணாக இருந்திருக்க வேண்டிய தன்னை ஒரு வழிபோக்கனாய் மாற்றிய வாழ்வை நினைக்கையில் “போதும்!! இந்த ஆற்றில் குதித்து விடு!!” என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, "நோ" என்று இன்னொரு குரல் அவனை தடுத்தது. இந்த முறை ஆற்றில் இறங்கினால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவனை எச்சரித்து அவனது மூளை. அப்படியே சோர்ந்து அமர்ந்தான். உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.
பின் என்ன நினைத்தானோ எழுந்து நின்றான், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அந்த காட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்துடன் இரண்டி எடுத்து வைத்த போது, சருகுகள் சலசலக்க, ஏதோ ஒரு மிருகத்தின் காலடியோசை, அவன் காதுகளில் கேட்டது. சட்டென ஓசை வந்த திசை பார்த்து அவன் கண்களில் எதுவும் புலப்படவில்லை, இருந்தும் அந்த ஓசையை அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக காலடி ஓசையின் எதிர் திசையில் வேகமாக அவன் கால்கள் நகர, ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அந்த ஆற்றுக்குள் இறங்கினான். "ஆற்றில் பெருவெள்ளம்" என்று அவன் மூளை உணர்த்திய அதே நொடியில், அவனை இழுத்துச் சென்றது அந்தக் காட்டாற்று வெள்ளம். அறிவையும், ஆற்றலையும் ஒன்றுமில்லாமல் செய்வதில் உணர்வு பெருகும்!! வெள்ளப் பெருக்கும்!! ஒன்று. காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவது என்பது மீன்களால் கூட முடியாது. வெள்ளம் அவனை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.
என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே, அவனது விலாஎழும்பு ஒரு பாறையில் மோத, தானாகத் திறந்த வாயினுள் புகுந்தது ஆற்று வெள்ளம். சில நேரத்திற்கெல்லாம் மூர்ச்சையாகி தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போனான். நினைவு வந்தபோது ஏதோ ஒரு பாறையில் அவனைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு. பெரிதாக இருந்த பாறையின் நடுவில் இருந்த ஓரடி பிளவின் இழுப்பால், அவன் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது. பாறையைப் பற்றிக்கொண்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உடல் வலுவும், உள்ளத்தில் உறுதியும் சுத்தமாக இல்லை அவனிடம். மொத்தமாக தன்னை அந்தக் காட்டாறுக்கு ஒப்புக்கொடுத்து இருந்தான். மூச்சுக் குழாயில் இருந்த தண்ணீர் அவன் மூச்சு விடுவதை அனுமதிக்கவில்லை. அந்த காட்டாற்று வெள்ளத்தின் பேரிரைச்சல் அவன் காதுகளை எட்ட வில்லை. வலதுபுற இடுப்பு எலும்பில் ஏதோ ஒன்று அழுத்த, அதன் வலி மட்டுமே அவன் உணர்ந்த ஒரே உணர்வு. அந்தப் பாறையின் பிளவில் சிக்கியிருந்த ஒரு மரக் கொம்பு, அவன் இடுப்பில் அழுத்திக் கொண்டிருந்தது.
மூச்சுவிடும் சிரமத்துக்கு இடையில், ஒரு பக்கமாக அவன் இடுப்பு எலும்பை உடைப்பது போல அந்த கட்டை அழுத்த, இடுப்பு எலும்பின் கடுப்பில், வலி தாங்காது, அவன் உதடு துடித்தது. அந்த நிலையிலும் அவனது மனமும், "இப்படி ஒரு சாவுதான் உனக்கு சரியானது" என்று அவனை எள்ளி நகையாடியது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு மரம் அவன் பின் மண்டையை தாக்க, அதன் விசையால் அடி வயிறு வரை அந்தப் பாறையின் மேல் இழுத்து போடப்பட்டு இருந்தால். அருகிலிருந்த மற்றொரு பாறையில் அந்த மரத்தின் தண்டு சிக்கிக் கொள்ள, அந்த மரம் அவனது முதுகில் விழுந்து அவனை பாறையோடு அழுத்திப் பிடித்துக்கொண்டது. அவன் இடுப்பில் குத்திக் கொண்டிருந்த அந்தக் அட்டையோ அவனது தொடையில் நாலு இஞ்சுக்கு ஒரு கோடு கிழித்து இருந்தது.
பளீரென்ற வெளிச்சம், கண்களைக் கூசச் செய்யாத, பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரு வெளிச்சம் அவனைத் தாக்க, அவன் உடல் வலியை எல்லாம், அந்த வெளிச்சம் எடுத்துக் கொண்டு, கண நொடியில் நீங்க, அண்டம் விழுங்கும் இருள் அவனை கவ்விக்கொண்டது. இருள் தின்னும் வெளிச்சமும், வெளிச்சம் புகா இருளும், அந்த மரத்தின் உபயம். ஆற்று வெள்ளத்தின் இழுப்பை அவன் உணரவில்லை, உடல் சில்லிட்டது, ஆனால் அதற்கு காரணம் ஆற்று நீர் இல்லை. ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தவனுக்கு, இதுதான் உடல் அற்ற உயிரின் உணரவோ என்று தோன்றியது.
காட்டாற்று வெள்ளத்தில் மணி தன்னைக் கரைத்துக் கொண்ட மறுநாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, சிவகாமியும் மதுவும், டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இருவரது கவனமும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது இல்லை.
தன் மகள் தன்னுடன் பேச ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஆகி இருந்தாலும், நேருக்கு நேர் முகம் பார்த்து பேச, தன் மகளுடன் ஆன உறவைப் புதுப்பித்துக் கொள்ள சிவகாமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. கடந்த மூன்று நாட்களாக ரஞ்சித் உடன் இருந்ததால், அவளால் இயல்பாக தன் மகளுடன் பேச முடியவில்லை. இன்று அதற்கான வாய்ப்பு கிடைக்கவே, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாத குழப்பத்தில், தயக்கத்தில் கண்களை தொலைக்காட்சியின் மீது பதித்து இருந்தாலும் கவனம் மொத்தத்தையும் தன் மகளின் மீதே வைத்திருந்தாள் சிவகாமி. மது, சிவகாமி என இருவருமே கொஞ்சம் அசூசையாகவே உணர்ந்தார்கள். பழைய இயல்புக்கு தங்கள் உறவு உடனே திரும்பாது என்பதை இருவருமே உணயர்ந்திருந்தார்கள். தன் மகளுடனான உறவை புதுப்பித்துக் கொள் துடித்துக் கொண்டிருந்தவளுக்கு மகளின் திடீர் வருகை சொல்ல முடியாத அளவுக்கு இன்பத்தை கொடுத்தாலும், அவளை எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றத்தையும் கொடுத்து.
மதுவின் மனமோ வேறு மாதிரியான குழப்பத்தில் சிக்கித் தவித்து இருந்தது. நேற்று இரவு அகாடமியில் இருந்து நேராக மணியின் வீட்டுக்குத்தான் அவளும் ரஞ்சித்தும் சென்றார்கள். கேட்டிலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா உரிமைகளையும் கொண்டு, சர்வ சாதாரணமாக சென்று வந்த வீட்டிற்குள் கூட அனுமதிக்க கூட படாததில் நொந்தவள், மணியன் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றத்தில் மேலும் நொந்து போனாள்.
ரஞ்சித் தான் "மணிக்கு ஒன்னும் ஆயிருக்காது, நடந்து போனார்னு தானே சொன்னாங்க!!" என்று சொல்லி தேற்றி அழைத்து வந்திருந்தான்.
இன்று காலை சென்ற போதும் அதே நிலைதான். வீட்டின் செக்யூரிட்டி ஆட்கள் அலுவலகத்தில் சென்று பார்க்கும்படி அறிவுறுத்த, மணியின் அலுவலகத்திலோ எப்படியும் அவனை பார்க்க ஒரு வாரத்திற்கு அப்பாயின்ட்மெண்ட் கிடைக்காது என்ற தகவல் சொல்லப்பட மேலும் சோர்வானாள். மதுவிற்கு ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை, சீக்கிரம் அவனை சந்திப்பது எப்படி என்ற குழப்பத்தில் இருந்தாள் மது.
"பத்து நாளுனு சொல்லிட்டு, மாப்பிள திடீர்னு இன்னைக்கே கிளம்பி போயிட்டாரு?"
ஒருவாராக குழப்பத்தில் இருந்து வெளிவந்த சிவகாமி, இருவருக்குமான அமைதியை உடைத்தாள்.
"இல்ல, ரொம்ப முக்கியமான விஷயம், அதான்!!"
தன் மனக் குழப்பத்திலிருந்து மீளாமல் பதில் சொன்னாள் மது.
"நீயும் மாப்பிள்ளை கூட போயிருக்கலாமே மா!!" தவிப்பாக சொன்னாள் சிவகாமி.
தன் தாயைப் பார்த்து வாஞ்சையாக சிரித்த மது, எழுந்து சென்று அவள் அருகே அமர்ந்து
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் வந்தேன். அதனாலதான் போகல!!"
தான் கேட்க தவித்த வார்த்தைகளே தன் மகளின் வாயிலிருந்து வந்து விழ, லேசாக கலங்கிய கண்களுடன் சிரித்தவள், தன் மகளின் இரு கைகளையும் பிடித்து கொண்டாள்.
"சரி டா.. போய் தூங்கு!!" என்று சொல்லிவிட்டு எழப் போனவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து அமர வைத்தாள் மது.
மீண்டும் அங்கே சில நிமிட அமைதி நிலவியது. தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்றதுமே ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது சிவகாமியின் மனதில்.
"உனக்கு தெரியுமான்னு தெரியல!!..நானும் மணியும் லவ் பண்னோம்!!. அவ.." என்று நிறுத்த, சிவகாமியின் முகத்தில் கலவர ரேகைகள்.
"அவன ரொம்ப கஷ்டப் படுத்திருக்கேன் மா!!. வாழ்க்கையில நான் பண்ண சில தப்ப சரி செய்யணும்னு தான் கோயம்புத்தூர் வந்தேன்!!" சிவகாமியின் முகத்தில் இருந்த கலவரம் அதிர்ச்சியாக மாறியது.
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண.. உனக்காகத்தாமா இங்கே வந்தேன்!!.. முடிஞ்சா அவனுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுச்சு!!" தன் தாயின் அதிர்ச்சியைக் கண்டவள் பொய் சொன்னாள்.
மீண்டும் அந்த அறையில் சில நிமிட அமைதி. இருவரது மனமும் வெவ்வேறான குழப்பத்தில் சிக்கித் தவித்தது. தன் தாய் காயப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மதுவுக்கு. தன் மகளின் இந்த விபரீத முடிவால் அவளது திருமண வாழ்விற்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்ற கவலை சிவகாமிக்கு.
"வேணாமே!!.." என்று ஆரம்பித்த சிவகாமி, நிறுத்தி தன் வார்த்தைகளை திருத்தினாள்.
'மாப்பிள்ளைக்கு தெரியுமா?!!" மது ஆமோதிப்பாக தலையாட்ட என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியானாள் சிவகாமி.
அரை மணி நேரம் கழித்து,
சிவகாமியும் மதுவும் அவரவருக்கான அறையில் படுத்திருக்க இருவரது மனதிலும் பெரும் குழப்பமும் பயமும். அந்த இரவு இருவருக்கும் நிம்மதியில்லாத தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது.
*************
“ஹேய்!! என்ன நீ இவ்வளவு நர்வஸா இருக்க?” என்ற ரஞ்சித்தைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த மதுவின் கண்கள் கதவுகளில் நிலைத்திருந்தது. ரஞ்சித்தும், மதுவும் அந்த டென்னிஸ் கோர்ட்டீன் மேல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அவள் கண்கள் தேடிய உருவம் அந்த உள் விளையாட்டாரங்கத்தில் நுழைந்தது. அவன் நடையில் அவள் அறிந்த, ரசித்த துள்ளல் இல்லை. தன் மொத்த உடல் எடையையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றியவாறு நிதானமாக நடந்தவாறு அந்த கோர்ட்டுக்குள் நுழைந்தான் மணி. மதுவின் நினைவு அடுக்குகளில் இருந்த அவனது பிம்பத்துக்கு எந்த வித பொருத்தமும் இல்லாத மணிகண்டன். மதுவால் உணர்ந்து கொள்ள முடிந்த ஒன்றே ஒன்று அவன் முகத்தில் தென்பட்ட பதற்றம். அவனின் பதற்றம் அவளுக்குள் இருந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க,
“He too.” என்றவாரு மதுவைப் பார்த்து திரும்பியவன், பாதியில் இருத்தினான்.
அவள் தோளை அசைத்தவன், இரு கைகளையும் விரித்து என்னவென்று கேட்க, மீண்டும் மறுப்பாக தலையசைத்தாள். அதன் பின் அவளை ரஞ்சித்து தொந்தரவு செய்யவில்லை. மணியின் பதற்றமான முகத்தை பார்க்க பார்க்க மதுவின் இதயத்துடிப்பு எகிறியது. இதயத்தின் "லப்.. டப்" ஓசை அந்த அரங்கத்தின் இரைச்சலையும் மீறி அவள் காதுகளுக்கு கேட்பது போல் தோன்றியது. எதிராளிக்கு கை கொடுத்தவன் அவனது பக்கம் சென்று நின்றான். கேலரி சுற்றிப் பார்க்கவில்லை, உடலை ஸ்ட்ரெச் செய்யவில்லை. விளையாடவே விருப்பம் இல்லாதவன் போல் வெறுமன நின்றான். மது அறிந்த மணியோ டென்னிஸ் கோர்ட்க்குள் நுழைந்தால் எதோ டென்னிஸ் கோர்ட்டை குத்தகைக்கு எடுத்தவன் போல், காலில் ஸ்பிரிங் வைத்தது போல் எல்லைக் கோடுகளை சிலமுறை அளந்து விட்டுத்தான் அவன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பான். முன்னங்கால் மட்டுமே தரையில் அழுந்தியிருக்க மொத்த உடலும் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டே இருக்கும்.
"Are you ready?" என்று ரெபரி கேட்க, அரை விழியில் அவரைப் பார்த்து தலையசைத்தவன் நின்ற நிலை மதுவை குழப்பம்முற செய்தது.
கோகோர்ட் வலதுபுற எல்லையில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்றவன் கால்கள் வலதுபுறம் திரும்பி நின்றது. அவன் நிற்கின்ற நிலையில் பந்து அவனுக்கு இடதுபுறம் அடிக்கப்பட்டால் பந்தை எதிர் கொள்வதற்கு ஒரு வினாடி எனும் அதிகம் தேவைப்படும். டென்னிசில் மிகவும் அடிப்படையான ஒன்று. என்னதான் நீண்ட நாட்கள் விளையாட விட்டாலும் இதெல்லாம் மறக்கக் கூடியதல்ல. விசில் ஊதப்பட்டும் அவன் தலை நிமிராமல் குனிந்தவாறே இருக்க, மதுவுக்கு வாய் எடுத்து கத்தவேண்டும் போல் இருந்தது. மது எதிர்பார்த்தது போலவே பந்து மணிக்கு இடதுபுறமாகவே அடிக்கப்பட்டது. மணியின் உடலில் எந்தவித அசைவும் இல்லை, அரங்கத்தில் "ஓ" என்று எழுந்த சத்தம் ஓரிரு நொடிகளில் அடங்கியது. மொத்த அரங்கமும் மயான அமைதியாக இருக்க, முகம் தரையில் மோத பொத்தென்று விழுந்தான். மீண்டும் அந்த அரங்கமே "ஓ" என்று அதிர்ந்தது.
திதிடுக்கிட்டு விழித்தால் மது. உடலெல்லாம் வேர்த்திருந்தது
விழித்த பின்னும் அவன் தரையில் உயிரற்ற சடலம் போல் விழுந்தது அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்தது. மயங்கி விழும் போது யாரும் அப்படி மொத்தமாகச் சரிந்து விழ மாட்டார்கள். கையையோ காலையோ ஊன்றி தனக்கு அடிபடாதவாறு உடலே தன்னிச்சையாக செயல்படும். அவன் அப்படி மொத்தமாக சரிந்து விழுந்தான் என்றால் சில நொடிகளுக்கு முன்பாகவே நினைவு இழந்திருக்க வேண்டும். உடலை நிலை நிறுத்தி இருந்த நிலையில் உடல் சிறிது நேரம் தாக்கு பிடித்தே அப்படிச் விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவனைக் காண இன்னும் ஒரு வாரம் காத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. எப்படியாவது இன்று அவனை பார்த்தால்தான் தன் மனம் ஆறும் என்று உணர்ந்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வாட்ச்சைப் பார்த்தால், அது ஆறு என்று காட்டியது.
குளித்துவிட்டு வந்தவுடன் மனம் சற்று அடங்கி இருந்தது. நேற்றிரவு தன் தாயிடம் மணியை காதலித்ததை சொன்னது நினைவுக்கு வந்தது. “வேணாமே" என்று அவள் தாய் வேண்டியதில் இருந்தே தேவயில்லாத குழப்பத்தை அவள் மனதில் விதைத்துவிட்டோம் என்று உணர்ந்தவள் முதலில் அதை எப்படி சரி செய்வது என்று நினைக்கலானாள். உடை மாற்றும் பொழுத்துதான் அந்த பேக்-கைப் பார்த்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாய் தன்னிடம் கொடுக்கச் சொல்லி, ரஞ்சித்திடம் கொடுத்தது. அதில் என்ன இருக்கும் என்று தெரிந்ததாலேயோ என்னவோ அதை திறந்து கூடப் பார்க்கவில்லை. அதற்குள் சிவகாமி சாப்பிட அழைக்க, சாப்பிட சென்றாள்.
காலை சாப்பாட்டின் போது பெரிதாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. யோசனையுடனே சாப்பிட்ட மது, சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்ததும் அந்த பேக்-கை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
எடுத்து வந்ததை தாயிடம் கொடுக்க
"என்னமா?” என்று குழப்பமாக பார்த்தவளிடம்
“பழசு எல்லாத்தையும் நான் மறக்கணும்னு நினைக்கிறேன்!!.. அத நான் திறந்து கூட பாக்கல!!” என்றாள். மகளை நிமிர்ந்து பார்த்த சிவகாமி,
“என்ன மன்னிச்சிருடா!!” என்றாள்.
மது பேச ஆரம்பித்த பின், கடந்த கால கசப்புகளை மறக்க நினைத்து மன்னிப்பு கேட்காதவள், முதல்முறையாக தன் செயலுக்காக மன்னிப்பை கேட்டாள். அருகில் அமர்ந்த மது ஆறுதலாக தன் தாயை அணைக்க தாயிற்கும் இருவருக்கும் இடையே இருந்த மாயத்திரையின் அடர்த்தி குறைவது போல் தோன்றியது.
அரைமணி நேரம் கழித்து
மகள் மீண்டும் அவளது அறைக்கு சென்றுவிட, தன் அறைக்கு வந்த சிவகாமி, மது கொடுத்த பேக்-கை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழப்பமான மனநிலையில் இருந்தாள், பின் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தவள், அதை அறையில் இருந்த கப்போர்ட்டில் வைத்து பூட்டிவிட்டாள்.
அதே சமயம் தன் அறையில் இருந்த மதுவின் முகத்தில் பெரும் படபடப்பு. மொபைல்லை காதுக்கு கொடுத்திருந்தாள். அழைப்பின் ஓசை காதில் விழ, அந்த படபடப்பு அதிகரித்துக் கொண்டே போனது. நீண்ட சிந்தனைக்குப் பின் ஒருவாராக முடிவுக்கு வந்தவளாக நேத்ராவுக்கு அழைக்க தொற்றிக் கொண்ட படபடப்புத்தான் அது.
“ஹலோ!!” பிரதீப் தான் அழைப்பை எடுத்தான்.
“ஹலோ!!”
“எஸ்!!”
“பிரதீப், நான் பானு!!” என்றவளின் குரலில் படபடப்பு அடங்கவில்லை.
“பானு?..” என்றவன், இரண்டு நொடிகளுக்குப் பின்
"ஹேய் பானு!!.. எப்படி இருக்க?” என்க, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“நேத்ரா..?” பொதுவான உரையாடலுக்குப் பின்னர், கொஞ்சம் தயக்கமாகவே கேட்டாள் மது.
“தூங்குறா!!” பதில் சொன்ன விதத்தில் இருந்தே அவளை எழுப்புவதை அவன் விரும்பவில்லை என்று புரிந்தது மதுவுக்கு. சில நொடி தயக்கத்துடன் மௌனமானாள்.
“ஃபேஸ்புக் பாத்தியா?” என்றான் பிரதீப்
“இல்லையே!!.. ஏன்?”
“இல்ல.. நேத்து உனக்கு மெசேஜ் அனுப்பிருந்தேன்.. அத பாத்திட்டுதான் கூப்பிட்டேயோனு நினச்சேன்!!”
“ஸாரி.. பிரதீப்!! நான் பாக்கல” என்றவளின் மனதில் எண்ணற்ற கேள்விகள்.
“கோயம்புத்தூர் வர முடியுமா பானு??..” என்று சொல்லி நிறுத்தியவன் பின் தொடர்ந்ததான்
"நேர்ல பாக்கனும்.. பிளீஸ்!!” என்று பிரதீப் கூற, மதுவின் மனம் சீரில்லாமல் சிந்தித்து.
“இப்போ நான்.. ஊர்ல தான் இருக்கேன்!!” தயங்கி தயங்கியே பதிலுறைத்தாள் மது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிரதீப்
“லஞ்சுக்கு மீட் பண்ணலாமா?.. நான் ஒரு ரெஸ்டரண்ட் லொகேஷன் மெசேஜ் அனுப்புறேன்!!”
“ம்ம்ம்!!”
“வாட்ஸ்அப் இதே நம்பர் தான?”
“ம்ம்ம்"
“ஓகே!! பை..”
“பிரதீப்..” அழைப்பை தூண்டித்துவிடுவானோ என்று அவசர அவசரமாக அழைத்தவள்
“அவன் கூட.. டச்ல இருக்கியா?” ஏனோ நாக்கு ஒட்டிக் கொண்டது போல தோன்றியது மதுவுக்கு.
“ம்ம்ம்!!”
“எப்படி இருக்கான்?” என்றவளின் காதுகள் கூர்மையடைந்தன
“அவனுக்கு என்ன செமய்யா இருக்கான்.. பெரிய ஆள் ஆயிட்டான்.. ஏன் நீ நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் இருந்தது வருத்தமா?? கோபமா என்று தெரியவில்லை. கோயம்புத்தூரில் இருந்து அவ்வளவு தூரம் விலகியிருந்தாள்.
“சரி. லஞ்சுல பார்க்கலாம்!!” என்றவன் அழைப்பை தூண்டிக்க, கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள் மது.
பிரதீப் பேசியவிதத்தில் இருந்து அவனுக்கு தன் மேல் வருத்தமொ கோபமோ இருப்பது புரிந்து கொள்ள முடிந்தாலும், மணியிடன் அவன் தொடர்பில் இருப்பது கொஞ்சம் ஆறுதலிப்பதாக இருந்தது. ஏப்படியும் இன்று அவனை பார்த்துவிடலாம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அவன் சொன்ன "பிளீஸ்" அவளுக்குள் சொல்ல முடியாத பயத்தையும் தூண்டியது. ஒருவேளை மணிக்கு? இல்ல நேத்ராவுக்கு? என்று எழுந்த கேள்விகளை அவளது மொபைலின் ஓசை கலைத்து. பிரதீப் தான் ரெஸ்டரண்ட் லொகேஷன் அனுப்பியிருந்தான்.
பிரதீப் சொன்ன நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாகவே அந்த ரெஸ்டரண்ட்டை என்றடைந்தாள். ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கிடந்தது அவளது மனம். மணியை சந்திப்பது என்று முடிவு செய்துவிட்டாலும், அந்த சந்திப்பிற்கு பின் அவர்களது வாழ்வு உறவு எந்த திசையில் பயணிக்கும் என்ற பயம் கொடுத்த விளைவு அது. பேசுவானா? இல்லை கடைசியாக சந்தித்த போது யாரோ ஒருவரிடம் பேசுவது போல் நடந்து கொள்வானா? அன்புடன் அவன் நடந்து கொண்டாள் என்ன செய்வது? என்பது போன்ற கேள்விகளுக்கு இடையில் அவள் எண்ணம் அங்கும் இங்கும் ஓட, அவளது கண்களோ பிரதீப்பின் வரவை எதிர்பார்த்து வாயிலையே வெறித்திருந்தன.
மதுவை நீண்ட காத்திருக்க வைக்காமல் அவனும் கொஞ்சம் முன்னதாகவே வந்தான், அவன் உள்ளே நுழைந்ததும் இவள் எழுந்து கைகாட்ட, கவனித்தவனின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை. இருவரும் அனைத்துக் கொண்டபின் எதிரே அமர,
“என்ன டா தோப்ப போட்டுட்ட?” தொலைபேசியில் தயங்கிய வார்தை, நேரில் பார்க்கும் போது எளிதாக வந்தது.
மதுவின் மனதை குழப்பிய கேள்விகள் எங்கோ காற்றில் கரைந்தது. நட்பில் மட்டுமே நடக்கும் மாயாஜாலம் அது. மதுவின் கேள்விக்கு பெரிதாக சிரித்தவன் தன் வயிறைப் பார்த்தான்.
“ஹா ஹா.. வாயாசாயிடுச்சு!!” சிரித்தவன், மதுவின் முகத்தை கவனித்தான்.
“ஆனா நீ இன்னும் அப்படியேதான் இருக்க. நெத்தில குங்குமம் மட்டும் தான் புதுசு" என்றவனின் கண்கள் இயல்பாக அவள் கழுத்தில் எதையோ தேடியது. தேடியது கிடைத்தவுடன்
“அப்புறம்.. ஹோவ் இஸ் ரஞ்சித்?” என்க
“நல்ல இருக்கான்!!” என்றவள் லேசாக புன்னகையித்தாள்
“நேத்ரா வருவானு எதிர் பார்த்தேன்!!” அவள் புன்னகை வரண்டது.
மதுவுக்கு பதில் சொல்லாமல் மெனு காரட்டை புரட்டியவன், மதுவுக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு அதையும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
“நீ கோயம்புத்தூர் வந்தத இன்னும் அவ கிட்ட சொல்லல!!”
“..”
இருவருக்கு இடையில் ஏதோ வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல ஒரு அமைதி நீடிக்க, பிரதீப்பே அதை உடைத்தான்.
“ மணி உன்ன பாக்கனும்னு ஹெல்ப் கேட்டான்!!,.. உனக்கு எந்த ப்ராப்ளமமும் இல்லனா நான் கூட்டிட்டு போறேன்!!.. நான் உன்ன கட்டாயப் படுத்தல.. உனக்கு ஓகேனா மட்டும் வந்தாப் போதும். இல்லனா நான் அவன சமாளிச்சுக்கிறேன்!!” கொஞ்சம் தயங்கி தயங்கிய கேட்க, ஒரு சில நொடி வாயடைத்துப் போனாள் மது.
மீண்டும் அவளது மனம் சந்திப்பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து. மதுவின் தயக்கத்தைப் பார்த்த பிரதீப்
“இட்ஸ் ஓகே!!.. ஐ அண்டர்ஸ்டாண்ட்!! நீ தேவை இல்லாம ஃபீல்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சரி என்று தலையசைத்தாள்.
“ஆர் யு சூர்?!!” பிரதீப் தயக்கமாக கேட்க, இந்தமுறை ஆமோதிப்பாக தலையசைத்தாள், வேக வேகமாக. வார்த்தைகள் ஏனோ அவள் உதடுகளை விட்டு வருவேணா என்றது.
முக்கால் மணி நேரம் கழித்து,
நெஞ்சம் படபடக்க காரில் அமர்திருந்தாள் மது. அவளது வலது கை பெருவிரல் இடது உள்ளங்கையின் ரேகைகளை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. எண்ணங்கள் எதுவும் இல்லா ஒரு அடர்த்தி அவள் மனதை அழுத்த, அவளது பார்வையோ ரேகையை அழிக்க முயற்சி செய்யும் விரலை உற்சாகம் ஊட்டியது. பிரதீப் ஒட்டிக் கொண்டிருந்த அந்த காரின் வேகம் குறைந்து, வலது புறமாக திரும்ப, தயக்கமாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் பெரிதாக விரிந்தது.
மதுவின் மனமோ விரிந்த விழிளில் விழுந்த காட்சியை நம்ப மறுத்து.
***********************