Chapter 21

பிரபு வீட்டிற்கு திரும்பிச் சென்றான், அவனது கால்கள் சோம்பலாக நகர்ந்தன, நிகழ்வுகளின் திருப்பத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவனது மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில் அவன் பீல் பண்ணியது போல அவன் இதற்க்கு முன்பு ஒருபோதும் சோகமாக உணர்ந்ததில்லை. அவன் தனது வீட்டிற்குள் செல்லும்போது அவன் மனைவி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடையால் அவளும் சற்று முன்பு தான் வீடு திரும்பியிருப்பது போல் தோன்றியது.

கோமதி (பிரபுவின் மனைவி) அவனைப் பார்த்து, ”நீங்க இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டிங்களா? இன்று மதியம் தானே நீங்க வீட்டிற்கு வருவீர்கள் என்று சொன்னிங்க?"

அவள் முகத்தை பார்க்காமலே பிரபு பதில் சொன்னான், ”ஆம், ஆனால் என் வேலை சீக்கிரம் முடிந்தது. நீயும் வெளியே சென்று வந்தது போல் தெரிகிறது.”

"இங்கே, பக்கத்தில் உள்ள கடைக்கு சிறிது நேரம் தான் போய்வந்தேன். சில பழங்களை வாங்க போனேன்," என்று அவள் பதிலளித்தாள்.

"ஹ்ம்ம் . சரி, நான் சிறிது நேரம் படுத்துக் கொள்ள போறேன், நேற்று வந்த களைப்பில் நான் இன்னும் கொஞ்சம் சோர்வாக இருக்கேன்."

“உங்க கன்னத்தில் என்ன அது, அங்கே சற்று சிவந்து இருப்பது போல தெரியுதே… அது என்ன காயமா? கோமதி நாற்காலியில் இருந்து எழுந்து தன்னை நோக்கி வந்தபடி கேட்டாள்.

என்னை குத்தியபோது சரவணனின் கை செய்த காயமாக இருக்க வேண்டும் என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.

"ஓ, அது ஒன்றும் இல்லை, நான் பிசினெஸ் வேலை பற்றி நினைச்சுகிட்டு பாதையில் உள்ள தூணில் நான் கவனிக்காமல் இடிச்சிகிட்டேன், சின்ன வலி தான் அது ஒன்றுமில்லை."

"என்னங்க இப்படி கவன குறைவாக இருக்கீங்க, பார்த்து வரவேண்டாம்மா." “பாருங்க அங்கு சற்று வீக்கம் தெரியுது. நான் கொஞ்சம் ஐஸ் கட்டி கொண்டு வரேன், ”என்று அக்கறையாக சொன்னாள்.

"பரவாயில்லை விடு, அது ஒன்னும் வலிக்கில," பிரபுவுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. "நான் படுக்க போறேன்."

இப்போது இருந்த அவன் மனநிலைக்கு, அவன் மனைவியின் அக்கறை தான் அவனுக்கு தேவை படும் விஷயங்களில் கடைசி விஷயம். பிரபு விரைவாக அவன் அறைக்குள் நுழைந்தான், ஒரு வேஷிட்டிக்கு மாறி விட்டு படுக்கையில் படுத்துக் கொண்டான். அவன் மகள் படுக்கையில் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் கண்களை மூடிக்கொண்டான், ஆனால் அவன் மனதில் இருந்த கொந்தளிப்புக்கு, அவனுக்கு உறக்கம் வராது என்று அவனுக்கு தெரியும்.

மீராவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எவ்வளவு மோசமமாக தப்புகனுக்கு போட்டுவிட்டான். அவள் அதிர்ச்சியடைவாள் என்று அவன் எதிர்பார்தாது தான், அனால் அவளுடைய துரோகத்தைப் பற்றி அவள் கணவனுக்கு தெரியும் என்று அறிந்தபோது அவள் நடந்துகொண்டதில் அதிர்ந்து போனான். சரவணன் அவள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவான், அதனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மீராவை சமாதானம் படுத்திவிடலாம் என்று நம்பி இருந்தான் அனால் அனைத்தும் தலைகீழ் ஆகிவிட்டது.

சரவணன் அவளுக்கு கொடுத்த சில முடிவில் அவன் விதிமுறைகள் போட்டு இருந்தாலும், (அவள் பிரபுவுடன் உள்ள தொடர்பை முடித்துக்கொள்ள விரும்பாவிட்டால்) அதாவது அவர்கள் வெளி உலகத்துக்கு மட்டும் தான் இனி கணவன் மனைவி அனால் அவர்களுக்குள் இனி எந்த பந்தமும் இல்லை என்று சொன்னது, எல்லாம் கால போக்கில் மாற்றிவிடலாம் என்று அவள் மனதை மாற்றிவிடலாம் என்று பிரபு எண்ணி இருந்தான். அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாள் கூட சரவணன் மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொண்டு அவளையும் ஏற்று கொள்வான் என்று சொல்லி அவளை நம்பவைக்க பார்த்திருந்தான். அதனால் அவர்களின் அந்த இனிதான கள்ள உறவி கவலையின்றி தொடரலாம், அனுபவிக்கும் இன்பங்களை இழக்க தேவை இல்லை என்று ஆசை காட்டினான்.

மீரா ஒரு புன்னகை முகத்துடன் பிரபுவை வரவேற்றாள், ஆனால் பிரபு பேசும் போது, சரவணனின் முடிவுகள் சொல்லும் போது அது விரைவில் அவளது முகத்திலிருந்து மங்கிப் போய் மறைந்தது. பிரபு அவள் ரொம்ப பாதிரி போகும் முன்னே அவன் என்னையதை வேகமாக கூறி அவளை சாந்த படுத்த நினைத்தான். சரவணனுக்கு தெரிந்தால் என்ன அவனே அவர்களுக்கு பச்சை கோடி காட்டியது போல அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாலும் அவளுக்கு இன்பம் மட்டுமே, பாதிப்பு இல்லாமல் அவன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணத்தை மீராவின் மனதில் ஆழ்ந்து புகுத்த நினைத்தான் பிரபு. இது நடப்பதும் பதிலாக அவன் கவனித்த விஷயம் என்னவென்றால் அவள் முகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனது. பிரபு எதிர்பார்த்த எந்த வழியிலும் மீரா செயல்படவில்லை. அவள் உள்ளே என்ன உணர்கிறாள் என்பதற்கான ஒரே வெளிப்புற அறிகுறி அவள் கன்னங்களில் இருந்து ஓடும் கண்ணீரின் கோடுகள். அவள் அலுத்து புலம்பி கதறினாள் கூட சமாளித்து இருப்பான் அனால் அவள் மனதில் உள்ள துயரத்தை அடக்கிக்கொண்டு அவள் பேசும் போது தான் அவன் பயந்து போனான்.

"அவர் எப்போது முதல் முறையாக இதை கண்டுபிடித்தார்," என்று மீரா துக்கத்தை அடைகொள்ளுள் குரலில் கேட்டாள்.

முதலில் பொய் சொல்லலாமா என்று யோசித்தான் பிறகு, சரவணன் பல முறை அவர்களை பார்த்தும் தடுக்கவில்லை அதனால் ஒரு வகையில் அவனால் இதை ஏற்று கொள்ள முடிந்தது மற்றும் இதனால் இனியும் அவர்கள் உறவை தொடர்ந்தாலும் அவன் ஏற்றுக்கொள்ள வைக்க முடியும். அதனால் மீரா அப்படி நினைக்க வேண்டும் என்பரதுக்காக உண்மை சொல்லலாம் என்று மனதை மாத்திக்கொண்டான் பிரபு.

"பப்புவின் திருமணத்திற்கு முன்பு பின்னால் இருந்த அந்த பழைய வீட்டில் நம்மை பார்த்திருந்தான்."

அவள் தொண்டையில் இருந்து ஒரு புலம்பல் வெடித்தது, ஆனால் அவள் அதை கட்டுப்படுதி கொண்டாள். மீரா கண்களை வேதனையில் மூடினாள். அவள் மனதில் ஓடிய முதல் விஷயம், அவளும் பிரபுவும் அங்கு என்ன செய்தார்கள் என்பது தான். அவர்கள் முத்தமிடுவது மட்டும் தான்பார்த்திருந்தாலே மிகவும் மோசமாக இருந்திருக்கும், ஆனால் அவர்கள் வெறும் முத்தத்தோடு மட்டுமா நிறுத்தினார்கள். ஐயோ, அவர் பிரபு தனது முலைகளும் பெண்மையும் தீண்டுவதை பார்த்திருப்பார். மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், அவள் பிரபுவின் முத்தங்களை எப்படி விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாள். கடவுளே நான் அதோடு நிறுத்தவில்லை, நானும் பிரபு உறுப்பை பிடித்து பிசைதத்தை பார்த்திருப்பாரே. நான் எவ்வளவு அசிங்கமாக நடந்துகொண்டேன் என்று மீராவின் மனது வேதனையில் துடித்தது.

எவ்வளவு வேதனை கொடுத்தாலும், அவளுக்கு அவள் செயலை நினைத்து அவமானம் வந்தாலும் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மீரா தீர்மானித்தாள்.

"அடுத்த முறை எப்போது?" அவள் துக்கத்தில் குரல் முறித்துக் கேட்டாள்.

பிரபு மெதுவாக அச்சப்பட ஆரம்பித்தான். அவன் எதிர்பார்த்தபடி விஷயங்கள் செல்லவில்லை, ஆனால் அவனால் இனி பொய் சொல்லவும் முடியவில்லை. எல்லாவற்றையும் அவளிடம் சொல்லத் தொடங்கினான்.

"சரவணன் அன்று நம்மை பார்த்த பிறகு அவன் ரொம்ப வருத்தப்பட்டான், பாபு திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் காலையிலேயே வீட்டிற்கு திரும்பி வந்திருக்கான்."

பிரபு மேலும் எதுவும் சொல்ல தேவை இல்லை. அவள் இதயத்தை ஒரு கூர்மையான ஐஸ் கட்டி ஊடுருவி செல்லவது போல வலித்தது. அவளும் பிரபுவும் அவள்படுக்கையறையில் அந்த ஈன புணர்ச்சி செய்த நாள் அது, என்று நிலைகுலைந்தாள். அந்த அசிங்கத்தையும் அவர் பார்த்துவிட்டார். எப்படி அவர் துடித்து போயிருப்பார். கடவுளே என் உயிரே இப்போதே எடுத்துக்கொள்ளு என்று வேண்டினாள். இப்போது விஷயங்கள் தெளிவாகிவிட்டன. அன்று அவள் கணவர் மதிய உணவுக்கு வீட்டிற்கு வராத காரணமும், அவருடன் தங்குவதற்காக அன்று மாலை தனது தொழிலாளி மரிமுத்துவின் தாயை வீட்டிற்கு அழைத்து வந்ததற்கான காரணமும். வேதனையில் கால்கள் பலமில்லாமல் இருந்தது. இருதயம் வெடித்துவிடும்மோ என்று தோன்றியது. எப்படியோ உடலும் உள்ளமும் வேதனையில் துடிக்க நின்றுகொண்டு இருந்தாள் மீரா.

அவர் எங்களை ஏன் தடுக்கவில்லை… நான அவருக்கு இந்த மன்னிக்கமுடியாத துரோகம் செய்வதை கண்டபோதும், அவருடைய அன்பையும் நம்பிக்கையையும் சீரழித்ததை கண்டபோதும், அவர் என்னிடம் ஒரு கடுமையான வார்த்தை கூட பேசவில்லை. அவள் கைகள் இப்போது அவள் முகத்தை மூடின. அவள் உடல் நடுங்கிய விதத்தில் அவள் வெம்பி வெம்பி அழுகிறாள் என்று உணர்ந்தான் பிரபு.

"அழுத மீரா. சரவணனுக்கு தெரிந்தும் அவன் உன் சதோஷத்துக்காக எல்லாம் பொறுத்துக்கொண்டான். அது தான் அவனுக்கு முக்கியம். நீ இப்படி அழுவதை பார்க்க விரும்பமாட்டான்."

பிரபுவின் வார்த்தைகள் அவன் நினைத்ததுக்கு பதிலாக எதிர் விளைவு ஏற்படுத்தியது. அவள் செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள அவள் கணவர் கற்றுக்கொள்ள முடியும் என்றும், அவள் மகிழ்ச்சி சரவணனுக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்து நினைத்தான். அவளின் சொந்த மகிழ்ச்சியைத் தேடும் வழியில் சரவணன் நிற்க விரும்ப மாட்டான் என்றும் பிரபு காட்ட விரும்பினான். மீரா உணர்ந்தாள் அவள் கணவனான எல்லா கொடும்மையும் அவளுக்காகவே தாங்கி கொண்டான். எவ்வளவு பாசமும் அக்கறையும் அவள் மேல் இருந்தால், எல்லாம் தெரிந்தால் அவள் தன உயிரை கூட எடுத்து கொள்ள கூடம் என்ற அச்சத்தில் அவன் வேதனை எல்லாம் இப்படி பொருந்து கொண்டு இருப்பார். இதை நினைக்கும் போது அவளுக்கு அவள் இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இத்தனை வருட இல்லற வாழ்க்கையில் சரவணனுக்கு அவளை பற்றி நன்கு தெரியும். அவள் செய்த மோசமான செயல் வெளியே தெரிந்தால் அவள் இப்படி ஒரு முடிவுக்கு வருவாள் என்றும் அவருக்கு தெரியும் என்று மீராவுக்கு விளங்கியது. அதற் தவிப்பதும் அவர் எவ்வவலு மன கொடும்மையை பொறுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

அவள் உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்தாள். அவளால் எப்படி இன்னும் நிற்க முடிந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. சரவணனுடன் அவள் கட்டியிருந்த அழகான குடும்பம் அவளது முட்டாள்தனத்தாலும் சுயநலத்தாலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அவள் மேலே அவளுக்கு வெறுப்பு பொங்கி எழுந்தது. இனிமேல் அவள் என்ன செய்தாலும் அவளுடைய அசிங்கமான நடத்தைக்கு ஈடுசெய்ய முடியாது. ஆனாலும் மேலும் இருக்கும் என்டேரு மீராவுக்கு தெரிந்தது. அவர்கள் கள்ள உறவு அப்போதும் நிற்கவில்லை வேற எதுவோ நடந்து இருக்கணும். பிரபு அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஏன் இங்கிருந்து போனான் என்பதோடு இது சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். நேற்று அவளை சந்தித்தபோது பிரபு அவளுக்கு அளித்த விளக்கம் எல்லாம் வெறும் பொய்யாக இருக்கும்.

“பிரபு, இனியும் என்னிடம் பொய் சொல்லாதே. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நீ திடீரென்று போனா உண்மையான காரணத்தை சொல்லு. பழைய கோயில் மண்டபத்தில் நாம அன்று கடைசியாக சந்தித்த அன்று ஏதோ நடந்திருக்க வேண்டும். அதன்பிறகு நீ என்னுடன் பேசவோ தொடர்பு கொள்ளவோ இல்லை. ”

மீரா அவள் கேட்கப் போவதைப் பற்றி நிலைகுலைந்து பயந்தாலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. பிரபு தயங்கினான், ஆனால் அன்று மாலை என்ன நடந்தது என்று அவளிடம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவனுக்கு தெரியும்.

“நாம அங்கு வந்த கொஞ்ச நேரத்துக்கு பிறகு சரவணனும் அந்த பழைய கோயில் மண்டபத்திற்கு வந்திருகான். தற்செயலாக தான் வந்திருக்கான். கோவில் மண்டபத்திற்கு அருகில் உள்ள ஒரு நிலம் விற்பனைக்கு வருவதாக யாராவது அவனிடம் கூறியதால் அவன் அங்கு வந்திருந்தான்.”

மீராவின் தலை குனிந்து, அவள் கண்களில் இருந்து கண்ணீர் இப்போது தரையில் தாராளமாக விழுந்து கொண்டிருந்தது. இப்போது நல்ல காலை நேரம், வெளியில் சூரியன் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அன்று அந்த மண்டபத்தில் வரவிருக்கும் இடியும் மழையினால் வானம் எப்படி இருண்டு போயிருந்தோதோ அதே போல் அவள் மனதும் மற்றும் அவள் வீட்டில் ஹாலும் இப்போது இருண்டு இருந்தது.

“சரவணா எங்களைப் பார்த்தான் …” என்று பிரபு தொடர்ந்தான்.

இல்லை .. இல்லை… இல்லை… அவள் தனக்குத்தானே வேதனையில் கத்தினாள். பூமி ஏன் இப்போது என்னை விழுங்கவில்லை. என் அன்பு கணவர்… யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அதை அவர் பார்த்தார்… மீரா மனம் வெந்து போனாள். அன்று மாலை பிரபுவுடன் அவள் எவ்வளவு அருவருப்பான செக்சில் ஈடுபட்டாள். தன் மனைவி தன்னை வேறொரு ஆணுக்கு மிகவும் விருப்பத்துடன் கொடுக்கும் கொடும்மையும் மற்றும் இன்னொரு ஆணுடன் இத்தகைய அசிங்கமான செயல்களில் ஈடுபடுவதையும் எந்தவொரு கணவனும் பார்க்கும் நிலை எப்போதும் ஏற்பட கூடாது. இதயம் தாங்க முடியாத துக்கத்தை சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் கதறினாள்.

பிரபு அவளது முக தசைகள் வலியால் முறுக்க படுவதை கண்டான். அவன் அவளது முகத்தை பலமுறை வலியைப் போலக் துன்பத்தில் இப்படி மாறுவதை பார்த்திருக்கான், ஆனால் அவை அனைத்தும் அவன் அவளுக்குக் கொடுக்கும் தாங்க முடியாத இன்பத்தின் வெளிப்பாடாக இருந்தன, ஆனால் இப்போது அவள் முகத்தில் உண்மையான வலி இருந்தது, இது போன்ற வலி அவள் முகத்தில் முன்பு அவன் பார்த்ததில்லை. இதைப் பார்த்த அவன் முற்றிலும் அதிர்ந்து போனான்.

"என் அப்பாவும் அன்று தற்செட்டாளாக அங்கே வந்து நம்மை பார்த்துவிட்டார்," என்று பிரபு மேலும் சொன்னான்.

மீராவின் முகம் அதிர்ச்சியில் துடித்தது, ஓ, இல்லை .. அவரும் பார்த்திட்டாரா, அவள் பெரும் துன்பம் அவள் தொண்டையை அடைத்தது. முழிச்சு வாங்க திணறினாள். எப்போதும் அழகாக ஜொலிக்கும் பெண்ணின் முகத்துக்கு பதிலாக இப்போது வேதனையில் கருகி போய் இருக்கும் முகம் தான் அங்கே தெரிந்தது.

"அவர் எங்களை அங்கே அப்போதே கொன்றிருப்பார், ஆனால் சரவணன் தான் அவரைத் தடுத்தான். அன்று மாலை நான் வீட்டிற்கு வந்த பிறகு பெரிய பூகம்பம் எங்கள் வீட்டில் வெடித்தது. உன்னை இனிமேல் பார்க்க கூடாது என்று என் தந்தை கட்டளை இட்டார். எனக்கு சீக்கிரமாக கல்யாணத்தை முடித்தனர். நான் இனி இந்த ஊருக்கே வரக்கூடாது என்று என்னை விரட்டினர். மத்தது எல்லாம் உனக்கு தெரியும்மே." என்று பிரபு முடித்தான்.

அப்போதே, அங்கேயே நான் என் உயிரை விட்டு இருந்தால் நல்ல இருந்திருக்குமே என்று மீரா புலம்பினாள். அவர்களின் கள்ள உறவு திடீரென முடிவுக்கு வந்ததற்கான காரணம் இப்போது அவளுக்குத் தெளிவாக தெரிந்தது. அப்படி இருந்தும் இன்னும் என் கணவர் ஒரு முறை கூட என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருமுறை கூட என்னிடம் எந்தவிதமான வெறுப்பு காட்டியதில்லை. அவர் பார்த்த எல்லாவற்றிற்கும் பிறகும் கூட கோபத்தை என்னிடம் அவர் காட்டியதில்லை. வேறு எந்த ஒரு மனிதராக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் தங்கள் கோபத்தை எப்படியாவது வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இப்படி ஒரு கண்ணியமான மனிதனுக்கு மனைவியாக வாழ்வதும் நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவரை நானேஎவ்வளவு கொடும்மையாக காயப்படுத்திவிட்டேன். எனக்கு எந்த ஜென்மத்திலும் மன்னிப்பே கிடையாது. இந்த எண்ணங்கள் அனைத்தும் அவளுக்கு மேலும் மேலும் வேதனையை ஏற்படுத்தின. பிரபுவின் தந்தை எங்களைக் கொல்ல விரும்பினார் .. மன்னிக்க முடியாத இந்த துரோகத்திற்காக நான் என் கணவரின் கைகளில் மகிழ்ச்சியுடன் இறந்திருப்பேன். இந்த வேதனையான எண்ணங்கள் அனைத்தையும் மனதில் இருந்து விரட்ட விரும்பியது போல மீரா தடுமாறியபடிய பின்னே நடந்து சென்றாள். அவள் உடல் சுவரைத் தாக்கியது, அவள் கீழே விழுந்து, தலையை முழங்காலில் புதைத்துக்கொண்டாள்.

"இங்கே பாரு மீரா, உன் மகிழ்ச்சிக்காக தானே சரவணன் அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். உன் சந்தோசம் அவனுக்கு முக்கியம். எதிர்காலத்தில் நாம எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை தான் இப்போது பார்க்கணும்."

மீரா பிரபுவைப் பார்த்தாள், அவளுடைய முகம் அவன் மேல் உள்ள அதிகமான வெறுப்பைக் காட்டியது. அட ச்சே, இந்த துரோகிக்கு முக்கியமான ஒரே விஷயம், என் உடல் அவனுக்கு அளிக்கும் இன்பம் மட்டுமே. இதை அறியாமல் நான் எப்படி இவ்வளவு மூர்க்கத்தனமாக இருந்திருக்கேன். உடல் இன்பத்தின் இந்த சில நிமிடங்களுக்காக என் வாழ்க்கையில் எனக்கு இருந்த உண்மையான மகிழ்ச்சியை இழந்துவிட்டேன். எல்லாம் இழந்த பின் தான் உண்மைகளே புரியுது.

“அப்படியானால் என் கணவர் என்னைக் கைவிடுவது பற்றியும் நான் அவருடன் இனி வாழும் வாழ்கை ஒரு பொய்யான வாழ்கை என்றாலும் உனக்கு கவலை இல்லை. உனக்கு வேண்டியது இந்த அழுகிப்போக கூடிய சதை மட்டுமே, ”மீரா பிரபுவை பார்த்து கத்தினாள்.

பிரபு அதிர்ச்சியடைந்தான். அவள் முன்பு அவனைப் பார்க்கும் போது எல்லாம் அவன், அவள் கண்களில் ஆசை இருப்பதை மட்டும் பார்த்திருக்கான். முதல் முறையாக அவன் அந்த கண்களில் வெறுப்பைக் காண்கிறான். அவள் ஒரு அருவருப்பான புழுவைப் பார்ப்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரபு இன்னும் முயன்றான், ”மீரா, அவன் இப்போது வருத்தமாக இருக்கிறான், ஆனால் அவனுக்கு உன் மேல் பாசம் அதிகம் இருக்கு. அவன் நாளடைவில் உன்னை ஏற்றுக்கொள்வான் .. நம்ம ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வான் .. நான் சத்தியமாக சொல்லுறேன். இது எல்லோருக்கும் நல்லதாக முடியும் ”

“யாருடைய நல்லது ?? உன்னோடையதா .. நீ விரும்புவது எல்லாம் இந்த அழுகிய சதைதானே, வேறு எதுவும் உனக்கு முக்கியமில்லை. உன்னை மட்டும் குறை சொல்லி என்ன புரயோகனும். என் புத்தி ஒழுக்கம் எங்கே போனது. நான் உன்னை இனிமேல் பார்க்க விரும்பவில்லை .. என் வாழ்க்கை இப்போதே முடிந்து விட்டது.” என்று கதறினாள்.

பிரபு மிரண்டு போனான். “மீரா நீ உன்னை …” என்று தொடங்கிய அவனை நிறுத்தினாள்.

"பயப்புடாதே, என் சாவு உன் தலையில் விழாது. நான் ஒன்னும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். இதை நான் செய்ய கூடாது என்று தானே அந்த நல்ல மனிதன் எல்லாற்றையும் சகித்து கொண்டார். என் செயலால் அவர் பெயருக்கு இனிமேல் எந்த களங்கமும் வர விடமாட்டேன்."

மீரா பிரபுவைப் பார்த்தாள், ”இப்போது நீ வெளியே போ. உன் முகத்தை மீண்டும் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. ”

பிரபு வெளியேறினான். மேலும் பேசுவதும் எதுவும் இல்லை. மீராவின் கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு வெளியே சென்றான். அவள் ஹாலில் ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்தபடி இருந்தாள். நடந்ததை எண்ணி கொண்டு பிரபு அவன் வீட்டில் அறையின் உச்சவரம்பைப் அமைதி இன்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

எப்படி அவள் மீண்டும் அவள் கணவனின் முகத்தில் விழிப்பாள் என்று மீராவுக்கு தெரியவில்லை. அவர் முகத்தை பார்த்தால் மீதி இருக்கும் கொஞ்சம் கட்டுப்பாட்டையும் இழந்து நொறுங்கி போவாள். அவள் செய்கையின் அவமானத்தை தாங்க அவளால் முடியாது. உடல் மட்டும் இருக்கு உயிர் எதுவும் இல்லாதது போல இருந்தது. வாழ்வதுக்கே வெறுத்து போயிருந்ததது. அனால் வேறு வழி இல்லை. அவள் கணவன் முகத்தை பார்க்கணும். அவருடன் பேசணும். அந்த அருகதை அவளுக்கு இல்லை என்று வாகுக்கு தெரியும். சுவரை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளை நோக்கி கால்நடை சத்தம் கேட்டது. அது அவள் கணவனாக தான் இருக்கும். அவள் உள்ளே செத்துக்கொண்டு இருந்தாள்.

சரவணன் அவன் மனைவி தரையில் சரிந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவள் முகம் துக்கத்தால் சிதைந்து இருந்தது. அவள் உடலில் உயிர் எதுவும் இல்லை என்று இருப்பது போல தோன்றியது. சரவணன் அஞ்சிய இதுதான். இதையெல்லாம் அவள் எப்படி எடுத்துச் செல்லப் போகிறாள்.

"மீரா," அவன் மென்மையாக அவளை கூப்பிட்டான்.

அவன் குரலைக் கேட்டு அவள் உடல் விறைப்பதைக் கண்டான். அவள் நகரவில்லை, அப்படியே உறைந்து போல் இருப்பதாக தோன்றியது.

“மீரா,” அவன் மீண்டும் அவளை அழைத்தான்.

அவள் மெதுவாக திரும்பி அவன் முகத்தைப் பார்க்க சில நிமிடங்கள் ஆனது. இந்த அரை மணி நேர இடைவெளியில் அவள் முகம் வியப்பு அடையும் அளவில் ரொம்ப மாறிப்போய்விட்டது. எப்போதும் அவளுக்கு பிரகாசமான, அழகான முகம். அதற்கு பதிலாக அவள் கண்கள் எந்த ஒளி இல்லாமல் வெற்று குளம் போல் தெரிந்தது. அவள் அழுது அழுது அவள் முகம் வீங்கி இருந்தது. அவளுடைய முக தசைகள் கூட அவற்றின் உறுதியை இழந்துவிட்டதாகத் தோன்றியது. அவள் அவன் முகத்தைப் பார்த்ததும், அவளுக்குள் இது வரைக்கும் இருந்த கட்டுப்பாட்டை இழந்தாள். பிரபு இங்கே இருந்தபோது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் ஒரு மிக பெரிய முயற்சியை மேற்கொண்டிருந்தாள், ஆனால் இப்போது அவள் உள்ளே இருந்த அவளுடைய எல்லா துக்கமான உணர்ச்சிகளும் அவள் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அவள் கூச்சலிட்டாள், வேதனையில் அலறினாள், அவள் உடல் கட்டுக்கடங்காமல் தூக்கி தூக்கி போட்டது, அவள் அன்பான கணவனை பார்க்க முடியாமல் துடித்தாள். இப்போது கூட அவன் அவள் முகத்தைப் பார்த்தபோது அந்தக் கண்களில் கோபமோ, அறிவுறுத்தலோ இல்லை. அவளுடைய மோசமான மற்றும் வெட்கக்கேடான நடத்தை தெரிந்து இருந்தபோதிலும் அங்கே தென்பட்டது அவளுக்கு இரக்கமும் அக்கறையும் மட்டுமே. இத்தனை ஆண்டுகளில், திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்த பாசத்தோடு வாழ்ந்த அந்த புனித உறவை அவள் சீரழித்துவிட்டாள். அவள் வாழ்க்கையில் கற்பித்த எல்லா ஒழுக்கமும் அவளை பற்றிக்கொண்ட காமம் அவளை எல்லாம் மறக்க செய்து இந்த தலைகுனியும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டது.

ஏன்… ஏன்… ஏன்… .எப்படி உங்களால் தாங்க முடிந்தது .. அவள் அழுதபடி எதோ பேய் பிடித்தது போல தலையை வேகமாக ஆட்டினாள்.

ஒரு ஆறுதலான கையை அவள் மீது வைக்க விரும்பி சரவணன் அவள் அருகில் சென்றான். அவன் அவளைத் தொடுவதற்குள் அவள் திகிலுடன் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். இப்படி அவள் செய்யும் போது அவள் கணவரின் கண்களில் ஏற்பட்ட காயத்தை அவள் பார்த்தபோது, அவள் துக்கத்துடன் பதறி போனாள். அவர் தன்னை தொட கூட பிடிக்காமல் அவள் அவர் மேல் வெறுப்பு இருக்கு என்ற தவறாக நினைத்துவிட்டாரோ என்று துடித்துப்போனாள். அவள் மேல் அவர் கணவனின் விறல் பட கூடாது என்று அவர் விரும்பினாள் அனால் அதன் காரணமே வேற. அவரின் புனிதமான விரல்கள் அவளை போன்ற பெரும் பாவம் புரிந்த ஆள் மீது பட கூடாது. அது அவர் புனித்ததைய கெடுத்துவிடும் என்று மனதில் குமுறினாள்.

இல்லை… இல்லை .. நீங்கள் என்னைத் தொடக்கூடாது. உங்கள் விரல்கள் இந்த அசுத்தமான உடலை மீண்டும் ஒருபோதும் தொடக்கூடாது, "என்று அவள் கெஞ்சினாள்.

“மீரா அப்படி சொல்லாதே….” சரவணன் சொல்ல ஆரம்பித்தான் , ஆனால் அவள் மேலும் தொடர்ந்து பேசி அவன் வார்த்தைகளை நிறுத்தினாள்.

"இல்லை .. இல்லை…,” என்று கெஞ்சினாள், "என் பாவப்பட்ட துர்நாற்றம் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும். நீங்க எனக்கு எந்த அனுதாபமும் ப்டுவதுக்கு நான் தகுதியற்றவள். நான் உங்களை எவ்வளவு ஆழமாக காயப்படுத்தினேன் என்று நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்தில் ஈட்டு குத்துவது போல வலியை ஏற்படுத்துகிறது."

அவள் மீண்டும் குலுங்கி குலுங்கி அழு துவங்கினாள். அதிலிருந்து மீள அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.

அவளைத் தொடாதபடி கவனமாக சரவணன் அவள் அருகில் அமர்ந்தான். அவள் இருக்கும் நிலையில் அவள் இயக்கத்தில் மிகவும் வருத்தப்பட்டாள், அவளுக்குள் அவள் மேல் தீவிரமான சுய வெறுப்பு இருக்க வேண்டும் என்று புரிந்தது. அவன் இந்த நேரத்தில் அவளுக்காக மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

“பரவாயில்லை மீரா, அமைதியாக இரு. நாம் நடந்து முடிந்ததை இனிமேல் மாற்ற முடியாது. நடந்தது எதுவும் மாற செய்ய முடியாது. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் இப்போது பார்ப்போம், ”என்று அவன் மெதுவாகப் பேசினான்.

அவள் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள், அவள் முகம் வேதனையில் துவண்டு போய் இருந்தது. “இந்த அவமானத்தை நீங்கள் எப்படித் தாங்கினீங்க. நான் இனி வாழ விரும்பவில்லை .. நீங்கள் என்னை அடித்து கொன்றிருந்தால் நான் மகிழ்ச்சியுடன் உங்கள் கைகளில் இறந்திருப்பேன். ”

"இல்லை மீரா, நானும் உன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை, நான் முற்றிலும் குற்றமற்றவன் அல்ல."

“இல்லை .. இல்லை ..,” மீரா கதறினாள், “ஒருபோதும் .. எப்போதும் அப்படி சொல்லாதீங்க. இது முழுக்க முழுக்க என் தவறு. உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதனுக்கு மனைவியாக இருக்க தான் நான் தகுதியற்றவள் … உங்களை யாரும் குறை சொன்னால் அவுங்க நாக்கு அழுகி போய்விடும்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவள் தொடர்ந்து அழுதுகொண்டு இருந்தாள், சரவணன் பொறுமையாக இருந்தான், அவள் மீண்டும் கொஞ்சம் அமைதியான நிலைக்கு வர அவகாசம் கொடுத்தான்.

மீரா சோகமாக மறுபடியும் பேச ஆரம்பித்தாள், “நீங்க ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை .. நீங்க ஒருமுறை கூட என்னிடம் கோபமோ வெறுப்போ காட்டவில்லை .. நான் செய்த இந்த காரியத்துக்கு பிறகும் … ஏன் ??”

எப்படி ஒரு மனிதன் இதை பொறுத்துக்கொண்டான் என்று புரியவில்லை. இந்நேரம் அவளை துண்டு துண்டை வெட்டி போட்டு இருக்கவேண்டும்.

சரவணனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவனுடைய வாழ்க்கையில் அவன் மனைவியின் கள்ள உறவு ஏற்படுத்திய வேதனையை அவனால் எவ்வாறு தாங்க முடிந்தது என்று அவனுக்கும் தெரியாது. சரவணன் மெதுவாக அவள் துக்கத்தை தணிக்க முயன்றான், ஆனால் அவள் மிகவும் சுய வெறுப்பால் நிறைந்திருந்தாள், அவள் தன்னைத் தானே வெறுப்பாக பேசி கொண்டு இருந்தாள். இறுதியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவள் எதிர்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

“நீங்கள் பிரபுவுடன் சொன்னது ஒன்று சரிதான் .. என்னால் இனி உங்கள் மனைவியாக இருக்க முடியாது ..”

சரவணன் அவள் முகத்தை உற்று பார்த்தான். அதைப் பார்த்த அவள் விரைவாக தொடர்ந்து பேசினாள். "அதுக்கு எனக்கு தகுதி இல்லை என்று எனக்கு தெரியும்." அதற்காக பிரபுவின் வைப்பாட்டியாக வாழ விரும்பிய அவ்வளவு மோசமான ஒழுக்கங்களைக் கொண்ட ஒரு பெண் என்று அவர் நினைப்பதை அவள் விரும்பவில்லை.

"நான் உங்கள் மனைவியாக இருக்க தகுதியற்றவள் மட்டும் இல்லை .. நான் உங்களுக்கு கொடுத்த அவமானத்திற்கும் வேதனையுக்கும் என் வாழ்க்கையில் நான் இனி எந்த மகிழ்ச்சியையும் பெற தகுதியற்றவள்."

அவள் சரவணனின் முகத்தை நேர்மையாகப் பார்த்து தொடர்ந்தாள், ”பிரபு மீண்டும் இங்கு வரமாட்டான், நான் சாவேன் ஒழிய அவனை மீண்டும் சந்திக்க மாட்டேன். என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் உள்ளே இறந்துவிட்டேன் இப்போது இருப்பது வெறும் கூடு. ”

“இல்லை மீரா, கடந்த காலத்தை விட்டுவிட முதலில், நீ இப்படி வாழத் தேவையில்லை. எல்லோரும் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள்.”

ஹா,” அவள் வெறுப்பு பெருமூச்சு விட்டாள். அதில் அவளுக்கு அவள் மேல் இருந்த கசப்பான எண்ணம் தெரிந்தது. “பிரபுவின் தந்தை அவனை இங்கிருந்து நிரந்தரமாக போக சொன்ன போது எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது .. நான் அதைப் பயன்படுத்தவில்லை. நான் ஏற்கனவே வைத்திருந்த ரத்தினத்தைப் மதிக்காமல், சுயநலத்தை தீட்டி சென்ற தீய வேசி.”

"நான் மன்னிப்பு கேட்டு உங்கள் காலடியில் விழுந்து கடக்க விரும்புகிறேன், ஆனால் மன்னிப்புக்கு தகுதியான ஒருவர் மட்டுமே அதை செய்ய முடியும். அதுக்கு கூட எனக்கு தகுதி இல்லை. என்னை விரைவில் அழைத்துச் செல்ல மரணம் மட்டுமே நான் விருமுகிறேன்.”

சரவணன் இப்போது உண்மையிலேயே அச்சமடைந்தான். "மீரா, அவசரமாக முட்டாள்தனமான முடிவு எதையும் எடுக்காதே."

அவள் கணவரின் கவலையை அவரது குரலில் மீராவால் கேட்க முடிந்தது, அது அவளது இதயத்தில் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.அவர் அவளை உதைத்திருந்தால் அல்லது அடித்துவிட்டால் அவளுக்கு அதிலிருந்து கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கும், ஆனால் அவள் கணவனின் அக்கறையும் அன்பும், அவள் மேல் கொடுரா தாக்குதலை கொடுந்திருந்தாளை விட அதிக வேதனையை ஏற்படுத்தியது. அவளுக்கு இத்தகைய பாசம் வைத்திருந்தவரை நினைக்காமல் அவள் எப்படி இப்படி கண்மூடித்தனமாக இருந்திருக்க முடிந்தது. உடல் இன்பத்தின் சில விரைவான நிமிடங்களுக்காக அவள் எல்லாவற்றையும் இழந்தாள்.

அவள் தன் கணவருக்கு உருகி அன்பான வார்த்தைகளை பேச துடித்தாள், ஆனால் அதைச் செய்வதற்கான அனைத்து உரிமையையும் இழந்துவிட்டாள் என்று அவள் உணர்ந்தாள்.

“இந்த காரணமாக தானே நீங்கள் எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டீர்கள். நான் என் உயிரை எடுத்துக்கொள்ள மாட்டேன் .. கடைசி மூச்சு என் உடலில் இருக்கும் வரை உங்களுக்கு மேலும் அவமானத்தைத் தரும் எதையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். ”

அதைக் கேட்டு சரவணன் நிம்மதி அடைந்தான்.

"நீங்க சொன்னது போல உங்கள் வாழ்க்கையில் எனக்கு இனிமேல் இருக்கும் ஒரே தகுதி உங்கள் வேலைக்காரியாக மட்டும் தான். நான் என் வாழ்நாள் முழுவதையும் அப்படியே கடந்து செல்வேன். உங்களுக்கு சேவை செய்வது மட்டுமே எனக்கு புண்ணியம்."

சரவணன் அடுத்த ஒரு மணிநேரம் அவளுடன் முடிவை மாத்திக்கொள்ள அவளிடம் வாதாடி பார்த்தான். அவளுடைய முடிவிலிருந்து மாறுவது இல்லை என்று அவள் மிகவும் உறுதியாக இருந்தாள்.

எனவே அவர்களின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது. பிரபுவும் அவனது குடும்பமும் விரைவில் ஊரை விட்டு போய்விட்டார்கள். தங்கள் சொந்த வீட்டிற்கு கூட எப்போதாவது ஒரு முறை தான் வருகை தந்தனர். மீரா அவள் கணவனின் வேலைக்காரியாக வாழ்க்கையை தொடங்கினாள். அவள் அறையில் தரையில் தூங்குவாள், சரவணன் என்ன சொன்னாலும் வந்து படுக்கையில் தூங்க மாட்டேள். அவன் அவளை சம்மதிக்க முயன்றால், அவள் கன்னங்களில் இருந்து நிறைய கண்ணீர் வர ஆரம்பிக்கும், எனவே சரவணன் அந்த முயற்சியை கைவிட்டான், அவள் இப்படி செய்வதை பார்க்கும் போது சரவணனுக்கு கஷ்டமாக இருக்கும்.

தன் குழந்தைகளை அவளால் முடிந்தவரை கவனித்துக்கொள்வதற்கு அவள் தொடர்ந்து ஒரு அன்பான தாயாக இருந்தாள். அவளுடைய குழந்தைகளுடன் மட்டுமே அவள் முகத்தில் ஒருசில முறை ஒரு சிறிய புன்னகை தோன்றும். அவன் மேல் மிகுந்த அக்கறை கொண்டதும் அவனை நல்ல கவனிக்க விரும்பும் அவள் எண்ணம் சரவணனால் காண முடிந்தது. அவன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவள் மிகவும் கவலையைக் இருப்பதை காண முடிந்தது. அவள் அவனை ஆறுதல்படுத்தவும், அவனைக அன்போடு அரவணைத்து கவனித்துக் கொள்ளவும் ஏங்கினாள், ஆனால் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு செவிலியரைப் போலவே அவனைக் கவனித்துக் கொள்வாள். அவனை நேசிக்க அளவுக்கு தனக்கு உரிமை இல்லை என்று அவள் உணர்ந்தாள். அதை எப்போதோ இழந்துவிட்டாள்.

சரவணனின் நற்பெயருக்காக எந்த பங்கமும் ஏற்பட கூடாது என்று வெளி உலகத்துக்கு அவர்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்ற வெளிப்புற தோற்றத்தை காண்பித்தாள். வாராந்திர கோயில் வருகைக்குச் செல்லும்போது கூட, தன் மகனையோ மகளையோ கணவனுடன் முன்னால் உட்கார வைப்பாள். ஒரு வேலைக்காரியாக இப்போது அவள் இருக்கையில் அவள் தன் கணவனுடன் முன்னால் உட்கார உரிமை இல்லை என்று உணர்ந்தாள். அவளுக்கு மிகவும் புண்படுத்திய விஷயம் என்னவென்றால், தன்னைத் தானே தண்டிக்க விரும்புவதில், அவள் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் பெற கூடாது என்று புறக்கணித்தாள்.

காமத்தின் காரணமாக அவள் செய்த பெரிய பாவத்திற்காக, அவள் வாழ்க்கையில் பாலியல் இன்பத்திற்கான இடமே இனி இல்லை என்று இருந்தாள். அதனால் ஒரு மனைவி தன் கணவனுக்குக் கொடுக்க வேண்டிய படுக்கையில் இன்பங்களை அவளால் வழங்க முடியவில்லை என்பது வேதனை படுத்தியது. தன்னை தண்டிக்க நினைக்கும் போது அவள் கணவனுக்கு தண்டனை கிடைக்குதே என்ற எண்ணம் அவள் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஒரு கீழ் தர பெண்ணின் மூலம் தூய்மையான இதயமுள்ள ஒரு மனிதன் கலங்க படுவார் என்ற எண்ணத்தில் இருந்து அவள் விடுபட முடியவில்லை. அவர் இரண்டாவது மனைவியை அல்லது ஒரு வைப்பாட்டி மூலம் இன்பங்கள் கிடைத்தால் அவன் மனப்பூர்வமாக அதை வரவேட்ப்பாள். அனால் அவள் கணவன் அந்த வகையான மனிதர் அல்ல என்று தெரியும் அதனால் அவளுக்கு இதில் குற்ற உணர்வு தொடர்ந்தது.

அவள் தொடர்ந்த மன வேதனை அடைகிறாள் என்பதுக்கு அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களில் பிரதிபலித்தது. அவள் உடல் எடை குறைத்துக்கொண்டிருந்தாது. அவரது உடல்நிலை மெதுவாக மோசமடைந்து வருவதால் சரவணன் கவலைப்பட்டான். அவள் எதோ விரைவாக வயதாகி கொண்டு போவது போல தோற்றம் மாற துவங்கியது. அவர்கள் வாழ்க்கையின் இந்த புது அத்யாயம் ஆரம்பித்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. அவளுடைய உடல்நிலை ஏன் இப்படி ஆகுது என்று சரவணன் புலம்பி போனான். ஒரு வேலை அவள் சரியாக சாப்பிடவில்லை என்று அவன் நினைத்தான், அவள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவள் சரியாக உணவு சாப்பிடுகிறாள் என்று பார்க்க, அவர்களுடன் சேர்ந்து அவளை சாப்பிட வைத்தான். இதற்கு முன்பு அவர்கள் சாப்பிட்ட பின்னே அவள் சாப்பிடுவாள்.

இருப்பினும் இன்னும் அவள் உடல்நிலை மோசமடைந்து கொண்டு இருந்தது. அவள் ஏதோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சரவணன் கவலைப்பட்டான். அவன் அவளை தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தி, அவர்களின் ஊருக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையில் மருத்துவ ரீதியாக அவளுக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்தது. அவளுக்கு சில வைட்டமின்கள் பரிந்துரைக்கப்பட்டு வீட்டிற்கு அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செண்டர்கள். ஒரு மாதத்திற்குப் பிறகும் மீராவின் உடல்நிலைக்கு எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. சரவணன் மீண்டும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதே மருத்துவ நிபுணரைப் பார்த்தான். நிபுணர் மீண்டும் அனைத்து சோதனைகளையும் சில கூடுதல் சோதனைகளையும் செய்தார். மருத்துவர் மீராவிடம் ஒரு அறையில் படுக்கையில் ஓய்வெடுக்கச் சொல்லி, சரவணனை ஒரு புறம் அழைத்தார்.

"டாக்டர், சொல்லுங்கள், அவளுக்கு என்ன பிரச்சனை?"

"மிஸ்டர் சரவணன், நான் எல்லா சோதனைகளையும் செய்து பார்த்துவிட்டேன், ஆனால் எங்களால் எந்த ப்ரப்ளேம் கண்டுபிடிக்க முடியவில்லை.”

டாக்டர் ஒரு கணம் மெளனமாக இருந்தார் பிறகு, ”மன்னிக்கவும் சார், அவங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா என்று கூட நான் பரிசோதித்தேன் செய்தேன். பழைய காயங்கள் கூட எதுவும் இல்லை. ”

“என்ன டாக்டர் .. நான் ஒரு மோசமான மனைவி அடிப்பவன் என்று நினைச்சீங்களா??"

"கோப படாதீங்க சார், நாங்க எல்லா விதத்திலும் சிந்தித்து பார்க்கணும். நான் இப்போது சொல்லுறத கேட்டு மேலும் கோக படாதீங்க. உங்க மனைவிடம் தனியாக கேட்டேன் அவுங்கள நீங்க மனரீதியாக கொடுமை படுத்துறீங்களா என்று."

சரவணன் அவன் மனைவிடம் எவ்வாறு கேள்வி கேட்டார் என்று வருத்தப்படுவதைப் பார்த்த டாக்டர் விரைவாக தொடர்ந்தார், “உங்கள் மனைவி எப்போதும் மெளனமாக இருப்பதால் நான் அப்படி நினைக்க வேண்டியிருந்தது. அவுங்க எப்போதும் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை, ஆனால் நான் அவங்களிடம் இப்படி கேட்டபோது முதல் முறையாக அவுங்களிடம் இருந்து ஒருவித உணர்ச்சியைக் கண்டேன். ”

அது என்னவென்று தெரிய ஆவலாக, “என்ன உணர்ச்சி ??” என்றான் சரவணன்.

"உங்களை பற்றி நான் எப்படி அப்படி நினைக்கலாம் என்று அவுங்க கோபப்பட்டாங்க."

அவன் தவிர்க்க நினைத்தாலும் சரவணனின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தோன்றியது.

டாக்டர் தொடர்ந்தார், ”சரவணன், இது எல்லாம் ஏற்படுவத்துக்கு ஏதோ ஒன்று நடந்து இருக்கு. உங்கள் மனைவிக்கு உடல் ரீதியான பிரச்சனை எதுவும் இல்லை என்று தோன்றுது. அவுங்க மனதளவில் ஏதேனும் பாதிக்கப்படுகிறாங்க என்று நான் சந்தேகிக்கிறேன்.”

சரவணன் திடீரென்று அமைதியாக இருப்பதைப் பார்த்த அவர் சரியான பாதையில் செல்வதை டாக்டர் அறிந்திருந்தார்.

"அது என்னவென்று நான் தெரிந்துகொள்ள விரும்புல, ஏனென்றால் எனக்குத் தெரிந்திருந்தாலும் அதற்க்கு தீர்வு சொல்ல என்னால் முடியாது. மேலும் இது நிச்சயமாக மிகவும் பிரைவேட் ஒன்றாக இருக்க வேண்டும். உங்க மனைவிக்கு ஒரு மனநல நிபுணரின் ட்ரீட்மெண்ட் தேவை என்று நான் நினைக்கிறேன். ”

"என்னது ?? என் மனைவிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு என்று நினைக்கிறீர்களா ??

“இல்லை, இல்லை சார், பலர் அந்த தவறை செய்கிறார்கள். நாம் அனைவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம், சில மனநல பிரச்சினைகள் கூட இருக்கலாம், அவை பொதுவாக நாம் சமாளிக்க முடியும். மனம் சில நேரத்தில் பழகினமாகவும் சில நேரத்தில் வலிமையாகவும் இருக்கலாம். சிலர் தங்கள் கஷ்டங்களால் சமாளிக்க முடியும், சிலருக்கு அது நீங்கள் நினைப்பது போல் எளிதாக இருக்காது. ”

டாக்டர் என்ன சொல்கிறார் என்று சரவணன் யோசித்துக்கொண்டிருந்தான். மீரா இருக்கும் மன அழுத்தத்தை அவன் அறிந்திருந்தான். அவள் எப்போதும் சோகமாக, எதோ பறிகொடுத்து போல இருப்பாள். குழந்தைகள் அல்லது அவன் இருக்கும் போது அந்த பாதிப்பு குறைவதை அறிந்தான். சில நேரத்தில் அவள் அழுது இருக்கிறாள் என்று அவள் முகத்தை பார்த்தால் தெரியும். ஒரு முறை அவள் முன்பு போல பிரபுவுக்கு தான் ஏங்கி இருக்காள் என்று நினைத்து அதை கேட்டும் செய்துவிட்டான். அவன் அவளை அறைந்தது போல் அவள் முகம் சுளித்தது. அவள் முகம் வாடி போனது. அவளது வேதனையான தோற்றம் அவன் கேட்டதற்கு உடனடியாக அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

"அவனை மறுபடியும் பற்பத்துக்கு பதிலாக நான் செத்து போய்விடுவேன். இப்படி நீங்க நினைப்பதுக்கு நான் எப்படி குற்றம் சொல்ல முடியும். நான் முன்பு அவ்வளவு கீழ் தரமாக நடந்து கொண்டேன் இல்லையா," என்று கூறிய மீரா தேம்பி தேம்பி அழுதாள்.

நான் ஏன் இப்படி கேட்டேன் என்று சரவணன் தன்னை திட்டிக்கொண்டான். அவனது வார்த்தைகளால் ஏற்பட்ட வலியிலிருந்து அவள் மீண்டு வர சில நாட்கள் ஆனது. பிரபுவுடனான மீராவின் உறவு நிரந்தரமாக முடிவடைந்த பின்னர் அவன் எதிர்பார்த்ததைப் போல அவர்களின் வாழ்க்கை மீண்டும் முன்பு போல சந்தோஷமாக மாறவில்லை. இன்னும் என்ன தான் அவன் செய்ய முடியும் என்று வருந்தினான்.

"டாக்டர் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?"

"எனக்கு ஒரு சக ஊழியர் இருக்கிறார், இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் திறமமைசாலி. உங்களுக்காக அவருடன் ஒரு அப்பொய்ண்ட்மென்ட் செய்கிறேன். அடுத்த வாரம் உங்களுக்கு சரியாக இருக்கும்மா?”

சரவணன் தனது ஆழமான எண்ணங்களில் மூழ்கியபடி தனது காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். மீரா ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அவனருகில் அமர்ந்தாள் (சரவணன் அங்கே உட்கார வலியுறுத்தினான்). மாலை நேரம் ரொம்ப ஓடிவிட்டதால் இருட்டாகிவிட்டது.​
Next page: Chapter 22
Previous page: Chapter 20