Chapter 31

விநாயகர் சதுர்த்தியையும், கர்நாடகா தினத்தையும், தீபாவளியையும் சீரும் சிறப்புமா கொண்டாடுவாங்க. நன்கொடை வசூலித்து நம்ம ஊர்ல வைப்பது போல் பாட்டு கச்சேரி எல்லாம் வச்சி சும்மா பிரமாதமா கொண்டாடுவாங்க விநாயகர் சதுர்த்தியை. அந்த பாட்டு கச்சேரியில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பாடல்கள் தவிர வேறு தமிழ் பாடல்கள் இடம் பெறாது. வீட்டுக்குள் ஒலிபரப்பப்படுவது என்னமோ சன் மியூசிக் தான். 24 மணி நேரமும் தமிழ் சேனல்களை மட்டும் தான் பார்ப்பாங்க, ஆனால் தெருவில் நடத்தும் பாடல் கச்சேரியில் மட்டும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பாடல்கள் தவிர்த்து ஒரு தமிழ்பாடலும் பாட மாட்டாங்க. நம்மைப்போலவே மொழிப் பற்றாளர்கள். வெறினு கூட சொல்லலாம்.

டிசைன் டிசைனா ரெஸ்ட்டாரண்ட் இருக்கும், ஆனால் மீன் சாப்பிட வேண்டுமானால் மலபார் மெஸ் தான் பெஸ்ட். அம்மா மெஸ் எங்கடா? அயிர மீன் குழம்ப ஊத்துங்கடானு எல்லாம் மதுரக்காரய்ங்க கேட்ட மாதிரி கேட்க முடியாது. கப் சிப்னு மலபார் ஹோட்டல் போனோமா, சம்பா அரிசி சோறும் மீன் குழம்பும் சாப்பிட்டோமா, காச குடுத்தோமா, கையை கழுவுனோமானு வந்துட்டே இருக்கனும். பெங்களூரில் மீன்கள் அத்தனை சுவை இருக்காது.

ஒருமுறை நான் வேலை செய்த அலுவலகத்தில் எங்கள் டீம் லீடர் ஒரு அறிவிப்பு கொடுக்க வந்தார். யப்பா யாரெல்லாம் மஞ்சள் கலர் டிரெஸ் வச்சிருக்கீங்களோ அவங்க எல்லாம் நாளைக்கு மஞ்சள் கலர் டிரெஸ்ல வாங்கப்பா என்றார். வேற ஒன்னும் இல்லை அடுத்த நாள் CSK final மேட்ச். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அவங்க சப்போர்ட் CSK விற்கு தான். ஈ சாலா கப் நம்தே.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை செம இரைச்சல் சத்தம் கேட்கவும் ஜன்னலை திறந்து பார்த்தேன். காலை 6 மணி தான் இருக்கும் சுமார் ஒரு 100-150 பைக்கில் ஒரே நிற டீ சர்ட் அணிந்து இளைஞர்கள் கோஷமிட்டு சென்றனர். என்னாச்சு ஏதும் கலவரமா என்று அருகில் இருந்த மைசூர் தோழியிடம் கேட்டேன், எபன் இன்னைக்கு அஜித் படம் ஏதாச்சும் ரிலீஸா இருக்கும் என்றாள். உண்மையிலே அன்று அஜித் அவர்களின் படம் ரிலிஸ். 'தல' என்று வந்துவிட்டால், பெங்களூர் = தூத்துக்குடி தான். பெரும்பாலானோர் 'தல' ரசிகர்கள் தான்.

கோவிலும் பார்க்கும் அதிகம் இருக்கும். அதிகமானோர் ஆஞ்சினேயர் பக்தர்கள். கலர் கலர் கயிறு கையில் கட்டியிருப்பார்கள், அல்லது கருப்பு கலர் கயிறொன்றை காலிலேனும் கட்டி இருப்பார்கள்.

நாம அவலில் பால் ஊற்றி தேங்காய், வாழைப் பழம், சீனி சேர்த்து சாப்பிடுவோம். அவங்க வெங்காயம் தக்காளி நிலக்கடலை சேர்த்து 'அவலக்கி' என்று ஒரு டிஷ் செஞ்சி சாப்பிடுவாங்க. அதை வேற ஆஹா! ஓஹோ! எங்க விருப்பமான உணவில் இந்த அவலக்கியும் ஒன்று என்று புகழ்ந்து தள்ளுவார்கள். காதில் பஞ்சொன்றை சொருகிக் கொண்டே ஆன், அப்படியானே கேட்க வேண்டியது தான். நல்லா தான் இருக்கும் அந்த உணவும்.

தீபாவளி அன்று நீங்கள் வசிக்கக் கூடாத நகரம், பெங்களூர். உண்மையிலே அந்த தீபாவளி அன்று நான் அழவே செஞ்சிட்டேன். எல்லா ஐடி கம்பெனியிலும் பட்டாசை சும்மா கொடுப்பார்களோ என்னவோ தெரியாது. காது கிழியும் அந்த வெடி சத்தத்தில். புகை மூட்டத்தில் மூச்சு விட முடியாமல் நான் சிரமப்பட்டு கண்ணீர் வடித்தேன்.

"மச்சி அந்த ஆண்டி என்னமோ சொல்றாங்கல, ரொம்ப நேரமா நம்மள பார்த்து தான் ஏதோ சொல்றாங்க, உனக்கு தான் கனடா கொத்தாய்த்தே என்ன ஏதுன்னு கேட்டு ட்ரான்லேஷன் பண்ணுல" என்று சொல்லவும் என் கையை இழுத்துட்டு ஓடுனா பாருங்க என் தோழி. மூச்சிரைக்க அரை கிலோமீட்டர் ஓடி வந்த பிறகு தான் சொன்னான்.

உங்களுக்கு எல்லாம் அறிவு இல்ல? என் கார்ல சாஞ்சி நின்னுட்டு பேசிட்டு இருக்கீங்கனு இன்னும் கொஞ்சம் கேவலமா திட்டிருக்காங்க அந்த ஆண்ட்டி. கார் மேல் பைக் மேல் எல்லாம் கையை சும்மா வைத்தால் கடும் கோபம் வரும் அவங்களுக்கு. நம்ம ஊர் மாதிரி நம்ம பெயரை எழுதி ஹார்ட் விட்டு நம்ம பாய் ஃப்ரண்ட் பெயர் எல்லாம் முத்திரை பதிக்க முடியாது.

மோர் மார்க்கெட் & டி மார்ட் ரெண்டும் இல்லனா அவங்களுக்கு பைத்தியமே பிடிச்சிடும். டி மார்ட்டை மட்டும் தூக்கிட்டோம் அங்கிருக்கும் ஐடி ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்ண நிறைய நிறைய வாய்ப்பு இருக்கு.

"BTM மடிவாலா லேக்" எனக்கு பெங்களூரில் பிடித்த இடம். மனதை லேசாக்கிடும் ஒரு அற்புத இடம்.

எல்லா மெட்ரோபோலிடன் சிட்டியிலும் எந்த நாள் அதிக ட்ராஃபிக் இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆனால் பெங்களூரில் மட்டும் செவ்வாய்கிழமை காலை தான் ட்ராபிக் ரொம்ப அதிகமாக இருக்கும். எலக்ட்ரானிக் சிட்டி - மடிவாலா வந்து சேர மூன்று மணி நேரங்கள் எடுத்த நாட்களும் இருக்கு என் வாழ்வில். அது பெரும்பாலும் செவ்வாய்கிழமையாக தான் இருக்கும்.

போலிக்கும், ஜாங்கிரிக்கும் செத்தவங்க. நம்ம ட்ரெயினில் விற்குமே அதே போலி தான். அந்த போலி கடையில் ஏன் அவ்வளவு கூட்டம்னு அலைமோதும்னு எனக்கு தெரியல!!! பெங்களூரில் போலி கடை போட்டால் கோடீஸ்வரர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் மாலில் சரக்கு அடிக்க கடை இருக்கும். நம்ம பசங்க சேம்பிள் ட்ரை பண்ணுறதுக்காகவே உள்ள போவானுங்க. பெண்கள் கூட்டம் அங்கே அலை மோதும். ஆண்கள் கொஞ்சம் காத்திருக்க தான் செய்யனும்.

பெங்களூரில் எனக்கு பிடித்த கட்டமைப்பு வடிகால் வாரியம் தான். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்கவே முடியாது. அவ்வளவும் ஓடிடும். நல்ல நேர்த்தியான வடிகால் வாரியம் அமைத்திருப்பார்கள்.

நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்து, நீங்கள் அந்த நேர்முக தேர்விற்கு காலை 9 மணிக்கே சென்று, அந்த நேர்முகத் தேர்வு நடந்து முடிக்க மணி ஒன்றாகிவிட்டால், சோறு போட்டு தான் அனுப்புவாங்க. இந்த விசயத்தில் மட்டும் பெங்களூர் HR க்களை பாராட்டியே ஆக வேண்டும். டோக்கன் ஒன்றை கொடுத்து பேண்ட்ரீல சாப்பிட்டுவிட்டு வாங்கனு அனுப்பி சோறு போட்டு நேர்முகத்தேர்வு நடத்திய அத்தனை HRக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்க வேண்டியது என் கடமை. சரி,….அந்தப் பக்கமா பாருங்க. அதான் விதான சௌதா. வாங்க அதைப் போய் பாக்கலாம்”

காரை ஓட்டிச் சென்று பார்கிங்க் இடத்தில் பார்கிங்க் செய்து, விதான் சௌதா கட்டிட்த்தின் அருகில் சென்று பார்த்தோம்.

“வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் விதான சௌதாவாகும். கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான இது செங்கற்களாலும் கருங்கல்லாலும் எழுப்பப் பட்டுள்ள அற்புதமான கலைப்படைப்பாகும். 46 மீட்டர் உயரத்தில் அரண்மனை போன்று காட்சியளிக்கும் இந்த மாளிகைக்கட்டிடம் பெங்களூரில் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பாரம்பரிய திராவிடக்கட்டிடக் கலையுடன் நவீன பாணியும் கலந்து எழுப்பப்பட்டுள்ள இந்த அரசாட்சிக்கூடம் பார்ப்பவரை மயக்கும் கலையம்ச இயல்பை கொண்டுள்ளது. எல்லா பக்கங்களிலும் நுழைவதற்கேற்ற இதில் வாயில்கள் உள்ளன.

பொது விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுகிழமைகளிலும் விதான சௌதா பிரகாசமான விளக்குகளால் மாலை நேரத்தில் ஒளிரச் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் 6 மணி 8.30 வரை விதான சௌதாவின் விளக்குகள் எரிகின்றன. விளக்குகள் எரியும்போது விதான சௌதா மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

பெங்களூர் மாநகரின் மையத்திலிருந்து விதான சௌதா 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கப்பன் பார்க் அருகிலுள்ள இந்த பிரமாண்ட அமைப்பின் முன்புறம் பசுமையான புல்வெளியினை கொண்டுள்ளது. கலையம்சம் கொண்ட படைப்புகளை ரசித்து மகிழும் மனங்கொண்ட படைப்பாளிகளுக்கு இது ரசிக்கக்கூடிய இடமாகும். பெங்களூரின் மற்றொரு காட்சி விருந்து இந்த விகாச சௌதா ஆகும். கர்நாடக அரசாங்கத்தால் கட்டபட்ட கட்டிடங்களிலேயே இது மிகச்சிறந்த கட்டிடமாகும். 2005ம் ஆண்டு திறக்கப்பட்ட இது விதான சௌதாவுக்கு தென்புறம் அதன் சகோதர கட்டிடமாக சில அரசாங்க அலுவலகங்களுக்காக கட்டப்பட்டுள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்தோ அல்லது இதர பஸ் நிலையங்களிலிருந்தோ விசாக சௌதாவுக்கு வருவதற்கு அரசு பஸ் வசதிகள் உள்ளன.

இந்த விகாச சௌதாவின் சிறப்பம்சம் இது நவீன கட்டிடக்கலை அம்சங்களுடன் தென்னிந்திய மரபுப்பாணியையும் சேர்த்து கட்டப்பட்டிருப்பதாகும். எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டிட்த்தின் கட்டுமான பரப்பு 58,274 சதுர மீட்டர்களாகும். சுமார் 150 கோடி ரூபாய் இதை கட்டுவதற்கு செலவாகியுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

எட்டு தளங்களை கொண்ட இந்த கட்டிட அமைப்பில் 15 ஆலோசனை கூட்ட மண்டபங்களும் 350 க்கும் மேற்பட்ட அலுவலக அறைகளும் உள்ளன. இதை கட்டுவதற்கு பல வருடங்கள் பிடித்துள்ளன. உட்புறம் நுட்பமான கலை அம்சம் கொண்ட மர வேலைப்பாடுகளும் வெளிப்புற சுவற்றில் கல் அலங்கார வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன.

இந்தியாவில் வேறு எந்த சட்டப்பேரவை கட்டிடங்களிலும் காணப்படாத நவீன அம்சங்களும் இந்த பிரமாண்ட அரசாங்க கட்டிடத்தில் காணப்படுகின்றன.மூன்று தளங்களில் 600 கார்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதிகளும் இதில் உள்ளன. அதி நவீன பாதுகாப்பு அம்சங்களும் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

நவின கட்டிடக்கலை, நாகரிகமான உட்புறங்கள், அதிநவீன பாதுகாப்பு என்று எல்லாம் கொண்டிருக்கும் இந்த கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வடிவமைப்பை கொண்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி கிரிடுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை அதற்கு சான்றுகளாகும்.

இப்படி ஒரு கண்ணுக்கு விருந்தான மாளிகையை பார்ப்பது உங்கள் பெங்களூர் சுற்றுலா அனுபவத்தில் மற்றும் ஒரு மறக்க முடியா அம்சமாக நிச்சயம் அமையும்.

சரி,…. வாங்க பக்கத்திலே இருக்கிற கப்பன் பார்க்குக்கு போலாம்”

“எனக்கு இப்பவே பசிக்குதுப்பா. மதியம் எங்கேயாவது லன்ச் சாப்பிட்டு விட்டு அப்புறமா சுத்தி பாக்கலாமே.”

“சரி,…. இதை மட்டும் சுத்திப் பாத்துட்டு சில போட்டோ எடுத்துகிட்டு போலாம்.” என்று சொல்லி கப்பன் பார்க்குக்கு போனோம்.

உள்ளே நுழைந்து நால்வரும் பேசிக்கொண்டு நடந்தபடியே கப்பன் பார்க்கில் இருந்த இயற்கையான மரம், செடி, கொடி, தாவரங்களின் அழகை ரசித்தோம். ரோஜா தோட்ட்த்தையும் கண்டு களித்தோம். பிரியாவின் இடையை வளைத்து பிடித்தபடி நடந்துன் கொண்டே கப்பன் பார்க் பற்றிய வரலாற்றைச் சொன்னேன்.

என் மனைவியும் ஹரியின் தோள் மேல் சாய்ந்தபடி நடந்து வந்து கொண்டே நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

பார்க்குக்குள் நடந்தபடியே கப்பன் பார்க் பற்றி சொன்னேன்.

1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.

முதலில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பூங்கா பின்னர் விரிவு படுத்தப்பட்டு தற்சமயம் 300 பரப்பளவில் காணப்படுகிறது. பல அழகான அரிய வகை தாவரங்களையும் பூச்செடிகளையும் இந்த பூங்கா கொண்டுள்ளது. முதலில் மீட்’ஸ் பார்க் என்றழைக்கப்பட்ட இந்த பூங்கா அதன் பின்னர் மார்க் கப்பன் என்ற ஆங்கிலேய கமிஷனர் பெயரில் அழைக்கப்படுகிறது.

1927 ம் ஆண்டு அப்போதைய மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜா உடையார் இந்த பூங்காவின் பெயரை சாமராஜேந்திர உடையார் பூங்கா என்று மாற்றி அமைத்தார். (சாமராஜேந்திர உடையார் காலத்தில் தான் இந்த பூங்கா உருவானது என்பது குறிப்பிடத் தக்கது).

தற்சமயம் கர்நாடக மாநில அரசின் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கப்பன் பூங்கா பிரம்மாண்டமான பரப்பில் பசுமையான மூங்கில் காடுகள், பலவிதமான மரங்கள், செடிகளுடன் பெங்களூரின் முக்கிய சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இப்போ நம்ம மேட்டருக்கு வருவோம்,…..தட்டு இட்லி பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன்லியா,…. இப்பவும் சொல்றேன் கேட்டுக்கோங்க. அந்த தட்டு இட்லிக்கு வேற விளம்பரம் பண்ணுவாங்க பாருங்க. ப்ளிஸ் என்னை மன்னிச்சொக்கோங்க மக்களே, இதை நான் சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன் ஆனால் இப்ப சொல்லி தான் ஆகனும். உண்மையை சொன்னால் அதுக்கு நான் வைக்கிற புளிக்குழம்பே எவ்வளவோ மேல்.

பெங்களூரில் கன்சல்டன்சி வச்சி நடத்தி கால்செண்டரில் வேலை எடுத்துக் கொடுக்கும் பெண்களை போன்ற பூ போன்ற பெண்கள் இந்த உலகிலே இல்லை எனலாம். அவ்வளவு மென்மையா, மெருதுவா கிளி பிள்ளையிடம் பேசுவது போல் பேசுவார்கள். நம்மை வேலையில் சேர்த்துவிடுவது மட்டுமின்றி அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார்கள் தெரியுமா? நீங்கள் உதவி கேட்டால் PG ஏற்பாடு செய்து கொடுப்பதிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்வார்கள் கன்சல்டன்சியை நடத்தும் இளம் பெண்கள். ரொம்ப நல்ல பிள்ளைங்க உண்மையில். பெண்களுக்கு பெண்கள் நல்லா சப்போர்ட் பண்ணுவாங்க நான் அறிந்த மட்டில்.

Umbrella ஓபன் மாடி, umbrella close மாடி. இந்த ஒரு "மாடி" என்னும் ஒரே வார்த்தையை ஒருவர் திரும்ப திரும்ப பயன்படுத்தினால் சந்தேகப்படாமல் நீங்கள் அவர்களுடன் உங்கள் உரையாடலை தொடங்கலாம். 200% அந்த நபர் தமிழராக தான் இருப்பார். அந்த ஒரே ஒரு வார்த்தையையும், ச்சனாய்கிதே (நல்லா இருக்கு), எஸ்ட்டு (எவ்வளவு) இந்த ரெண்டு வார்த்தையையும் தவிர பெங்களூர் வாழ் தமிழ் இளம் பெண்களில் பெரும்பாலானோருக்கு வேற வார்த்தைகளே தெரியாது. (நாங்க ஒரு 40 பேர் இப்படி தான் இருந்தோம்)

திரு ராம்பாபு, Dr. பால் தினகரன் இருவரின் கூட்டத்திற்கும் அலைகடலென மக்கள் திரண்டு போவாங்க. தெலுங்கு மக்கள் டாக்டர். பால் தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை மிகவும் மதிப்பார்கள். பெரும்லான தெலுங்கு பசங்க எப்ப பாரு சர்ச், ப்ரெயர்னே சுத்துவாங்க. தெலுங்கு வாலிபர்கள் (ஆண், பெண்) மாதிரி சர்ச்ல ஆக்ட்டிவான வாலிபர்கள் வேறு எந்த மொழியிலும் இருக்க மாட்டாங்க. போதகர்களை ரொம்பவே கணம் பண்ணுவார்கள்.

எந்த PG க்கு சென்றாலும் சாப்பிட்டுவிட்டு வரலாம். உணவு நல்லா இருந்தால் நாளைக்கே வந்து சேருகின்றேன் என்று சொல்லி பாருங்க. உங்களுக்கு புது மாப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதை தான். விருந்தே கிடைக்கும். கையில் காசில்லாத, வேலை தேடும் பட்டாதாரிகள் இந்த ஆஃபரை உபயோகித்து கொள்ளலாம்.

ஷவர்மா- இதை சாப்பிட சிறந்த இடம் பெங்களூர் தான். சென்னையில் நடைபெறும் இப்தார் பார்ட்டிகளில் கூட இத்தனை சுவாயான ஷவர்மா கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கூடுதல் தகவல் : ஷவர்மா சாப்பிடக் கூடாத இடம் மதுரை மதுரை மதுரை. சிக்கனை வச்சி குடுப்பாய்ங்கனு நீங்க எதிர்பார்த்தீங்க கோஸ் ஷவர்மா குடுப்பாங்க அப்புறம் ஷவர்மா சாப்பிடுற ஆசையே போய்டும் சொல்லிட்டேன். ஷவர்மா சாப்பிடனும்னா வேலூர் சி.எம்.சி மருத்துமனைக்கு பின் கேட்டில் ஒரு கடை இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்கள் தான் அதிகமாக பெங்களுரில் உலா வருவார்கள். அவர்களுக்கு சென்னை ஏனோ பிடிப்பதில்லை.

சில பேருந்துகளை நடத்துனர் இன்றி ஒரே ஒரு டிரைவர் மட்டும் உட்கார்ந்து இயக்குவார். முன் பக்கம் மட்டும் கதவு இருக்கும், ஏறும்பொழுதே டிரைவரிடம் டிக்கெட் வாங்கிவிட வேண்டும். பெங்களூர் நடத்துனர்களை நம்பி 17 ரூபாய் டிக்கெட்டிற்கு 20 ரூபாயை கொடுக்க வேண்டாம். பெரும்பாலான நடத்துனர்கள் மீதி சில்லறையை கொடுக்க மாட்டாங்க. எனக்கு இந்த அனுபவம் நிறைய முறை நடந்திருக்கு. பெங்களூர் பேருந்தை பொருத்தவரை அடுத்து எந்த நிறுத்தம் என்பதை பேருந்து ஒலிபெருக்கி சொல்லிவிடும் அதனால் நடத்துனரிடம் ஒயிட் ஃபீல்ட் வந்தா சொல்லுங்க என்று சொல்லி வைக்க வேண்டாம்.

சோத்துல மட்டும் வஞ்சிக்கவே மாட்டாங்க பெங்களூர் வாழ் மக்கள். வாரத்தில் இருமுறை நான் வெஜ் என்று வாக்கு பண்ணிட்டு புதன்கிழமை அவித்த முட்டை போடும் தமிழ்நாடு விடுதி ஓனர்கள் மாதிரி எல்லாம் இல்லை. வாரத்தில் இருமுறை நான் வெஜ் என்றால் புதன்கிழமை நைட் சிக்கன் பிரியாணியும் ஞாயிறு மதியம் சிக்கன் கறியையும் மறக்காமல் தட்டில் வைத்து விடுவார்கள்.”

“சரிங்க,…. சாப்பாட்டை பத்தி நீங்க சொன்னதும், எங்களுக்கும் பசிக்க ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிருச்சு. பக்கத்துல ஏதாவது நல்ல ஸ்வுத் இந்தியன் ஓட்டல் இருந்தா பாருங்க. சாப்பிட்டாதான் இதுக்கு மேலே என்னால நடக்க முடியும்” என்று என் மனைவி சொல்ல, பக்கத்தில் இருந்த காமத் ஹோட்டலுக்கு சென்று மதிய உணவுக்காக உட்கார்ந்தோம்.

மதிய சாப்பாடு வந்தது. சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டே, நான் பேச ஆரம்பித்தேன்.

“ இங்கே லெமன் ஜூஸ்ன்னு போர்ட்ல பாத்துட்டு எனக்கு ஒன்னு ஞாபகம் வந்த்து. சென்னையிலே, "ண்ணே ஒரு கரும்புச்சாறுண்ணே கொஞ்சம் லெமன் ஊத்தி, ஐஸ் கொஞ்சம் கூடுதலா" இந்த மாதிரி அங்கே இருக்கும் கரும்புசாறு கடைகளில் சொல்ல முடியாது. கரும்புசாறிலே பல பல வகை இருக்கும். கரும்புச்சாறுக்கு மெனு கார்டே உண்டு, எதை ஆர்டர் பண்ணுகிறோமோ அதை கொண்டு வந்து உங்கள் மேசை மீது வைப்பார்கள்.

"விடுதியில் தண்ணீர் வரல அதனால் ஒரு ஒரு மணி நேரம் பெர்மிஷன்" என்ற வழக்கமான பொய்யை நீங்கள் பெங்களூர் டீம் லீடர்களிடம் மட்டும் சொல்லிடவே கூடாது. அங்கே தண்ணீர் வரல என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

20 ரூபாய் கொடுத்து மூன்று இளநீர் சாப்பிடலாம் பெங்களூர் சில்க் போர்ட் சாலையில் மட்டும். நம்ம ஊரில் தான் இளநீரை 40 ரூபாயில் இருந்து குறைக்கவே மாட்டாங்க. 2016 என் வாழ்வில் 5 ரூபாய்க்கு தினம் இளநீர் பருகிய ஆண்டு. #மை_பெங்களூர்_டேஸ்

சர்ச்சில் நடக்கும் எந்த மீட்டிங்கில் பங்கேற்க வேண்டும் என்றாலும் (ஞாயிறு ஆராதனை தவிர்த்து) ரெஜிஸ்டர் பண்ணினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அட இது என்ன பெரிய விசயம்? VBS க்கு கூட 100 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்வது அவசியம். நம்ம ஊர் போல் கன்வென்ஷன் கூட்டங்கள், நற்செய்தி பெருவிழாக்களை எல்லாம் பார்க்கவே முடியாது. தமிழ்நாடு வாழ் கிறித்தவர்கள் இந்த விசயத்தில் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான்.

BIBA தான் பெங்களூர் வாழ் பணக்காரர்களின் தேர்வு

நமக்கு YMCA மைதானம் எப்படியோ, அப்படி அவங்களுக்கு St.Johns மைதானம்.

மொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு டட்லி தங்கையா பெங்களூருக்கு பால் தங்கையா. அவ்வளவு தான்.

சரி,…..அடுத்ததா எங்கே போலாம்? ஒன்டர் லேன்ட் போலாம். அதைப் பாத்துட்டு லால் பாக் பாத்தோம்னா சாயந்திரம் 7 மணி ஆய்டும். அதுக்கப்புறமா நாம நம்ம குவார்ட்டர்ஸுக்கு போலாம்.

நான் சொன்னதற்கு அனைவரும் ஆமோதிக்க, ஒன்டர்லேன்ட் பாக்க கிளம்பினோம்.

பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லா ஆகும்.

82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது.

நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை போன்றவையும் உள்ளன. 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, 1150 பேர் உட்காரக்கூடிய 5 ரெஸ்டாரெண்டுகள் இவற்றுடன் உடைமகளை வைப்பதற்கான 2350 லாக்கர்களும் இங்கு உள்ளன. OHSAS 18001:2007 எனும் சர்வதேச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றும் இரண்டு கேளிக்கை பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட நீர் இங்கு பயன்படுத்தப்படுவது நீர் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இங்கு வரிசையாக மரங்கள் நடப்பட்டு மழை நீர் சேகரிப்பும் செய்யப்பட்டு நீர் தேவைகளுக்கு பயன்படுத்த்ப்படுகிறது. இங்குள்ள சவாரிகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி உங்கள் மனதில் சந்தேகங்கள் பயங்கள் இருந்தாலும் அவை யாவுமே இங்கு வந்து பார்க்கும்போது மறையும் அளவுக்கு வொண்டர் லாவின் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.

இப்ப நம்ம கதைக்கு வருவோம்,…..ஆஃபரை அள்ளி அள்ளி வழங்கும் ஊர் சென்னை என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள். அது உணவாக இருக்கட்டும் உடையாக இருக்கட்டும் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இங்கே கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள் எல்லாம் உங்கள் பர்ஸை காலியாக்கி மாதக்கடைசியில் உங்களை கடனாளியாக நிற்க வைக்கும் ஒரு மாயாஜாலம் தான்.

எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி, அந்த பிரியாணி இந்த பிரியாணி எல்லாம் வாழ்க்கையில் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய உணவு என்று யார் சொன்னாலும் காதிலே வாங்கிக் கொள்ளாதீர்கள். ஸ்விகி, சோமோட்டா இதில் அதிகம் விற்பனையாகி உணவு என்று ஒருமுறை ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டால் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சென்னையில் நீங்கள் உணவுக்காக மட்டுமே செலவு செய்யக்கூடிய நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் ஜாக்கிரதை.” என்று பேசிக்கொண்டே சாப்பாட்டுக்கு பில் பே செய்து வெளியே வந்தோம். அடுத்த்தா எங்கே போகலாம்? என்று நாங்கள் யோசித்த போது

சென்னையில் மட்டும் பணப்பையை இல்லாமல் வாழலாம். காரணம் ரொம்ப சிம்பிள், இங்கே பத்து ரூபாய்க்கு டீ குடிச்சா கூட கூகுள் Pay பண்ணிக்கலாம். பணத்தை பர்சில் வச்சிட்டு சுத்தணும்னு அவசியமே இல்லை. ஆனால் இங்கே தான் நாம தப்பே பண்ணுறோம். நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கி ஜீ பே செய்ததும் உடனே ஒரு ஸ்கிராட்ச் கார்ட் வரும் நாமளும் அதை தேய்த்து பார்த்தல் "WOW product"-ல் உங்களுக்கு 300 ரூபாய் ஆஃபர் என்று வரும். வாவ்-ஆ அப்படினா என்னா ஏதுனு கூகுளிடம் சென்று கேட்டால் அந்த ஒரு ஷாம்பூவை உபயோகித்தால் மட்டுமே உங்கள் கூந்தலும் சருமமும் மினு மினு என்று மின்னும் என்ற அளவிற்கு கூகுளும் கதை கதையா சொல்லும். நீங்களும் இனி இந்த ஆபர் கிடைக்காது என்று அவன் சொன்ன பொய்யை நம்பி அதை ஆர்டர் பண்ணுவீங்க. மாத செலவுக்கு என்று எடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயில் வெறும் 699 ரூபாயை அந்த product-க்கு அள்ளி கொடுத்திருப்பீர்கள்.

நூறு ரூபாய் கூகுள் பே பண்ண போய் 700 ரூபாய்க்கு உங்களுக்கு தெரியாமலே உங்களுக்கு தேவையா இல்லையா என்பதை யோசிக்காமலே வாங்கி பணத்தை தாரை வார்த்து கொடுக்கும் நிலை இங்கு உண்டு என்பதால் சொல்கிறேன் நீங்கள் சுயகட்டுப்பாடு மிக்கவர் என்றால் மட்டும் ஜீ பே , போன் பே எல்லாம் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் பணம் கொடுத்து பொருள் வாங்கும் முறையையே பின்பற்றுங்கள். டிஜிட்டல் பண பரிமாற்றம் முறையில் பணம் எங்கே எப்படி செல்வாகதுனே தெரியாது. மாதக்கடைசியில் மண்டையை பிச்சிக்காம இருக்கணும்னா இந்த முறையை பின்பற்றுங்கள்.

சென்னையில் மட்டும் ஆட்டோக்காரர்களிடம் அட்ரசே கேட்காதீங்க. இது அங்க இருக்குனு சொல்லி அடுத்த தெரு போகவே நூறு ரூபாயை வாங்கி விடுவார்கள். கூகுள் மேப் எப்படி பயன்படுத்துவது என்று உங்கள் ஊரிலே கூட கற்றுக் கொண்டு வாருங்கள். பெருசா ஒன்னும் இல்லை உங்க ஊரில் நீங்கள் வழக்கமாக செல்லும் மளிகை கடையில் நின்று கொண்டு உங்க வீட்டு அட்ரஸை போட்டு கூகுள் மேப்பை பின்பற்றி வீடு வந்து சேருங்கள். இதை ரெண்டு முறை பழக்கப்படுத்திக் கொண்டால் இங்கே வந்து மேப் பயன்படுத்தி பயணம் செய்வது எளிதாகிவிடும். இல்லனா 50 மீட்டரில் திரும்ப வேண்டிய இடத்தில் 500 மீட்டர் சென்று திரும்புவீர்கள்.

பொது போக்குவரத்தையே முடிந்த அளவிற்கு பயன்படுத்துங்கள்.

செடி கொடி வளர்க்கும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் ஊரிலிருந்தே ஒரு பையில் ரெண்டு கிலோ மண் எடுத்து வரவும். சென்னையில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் ஆனால் செடி வளர்க்கும் மண் மட்டும் குட்டிக்கரணம் அடிச்சாலும் கிடைக்காது.

மெட்ரோவில் வலது புறம் எங்கே செல்லும் இடது புறம் எங்கே செல்லும் என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கு தெரியும் பாதையில் எல்லாம் பயணித்தால் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல ரெண்டு மணி நேரம் கூடவே ஆகும்.

முடிந்த அளவிற்கு நீங்கள் வேலை செய்யும் இடமும் உங்கள் இருப்பிடமும் அருகருகே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேலை பார்க்குற இடம் வெறும் அஞ்சே அஞ்சு கிலோ மீட்டர்தான் என்று நினைத்தாலும் அங்கே போய் சேர் ஒரு முக்கால் மணி நேரம் ஆகும் பார்த்துக்கோங்க. சரி,….. இப்ப லால் பாக் போலாமா?’

ஒன்டர் லேன்ட் சுற்றிப் பார்த்து விட்டு அனைவரும் லால் பாக் நோக்கி பயணமானோம்.

பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது.

240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது.

தாமரை தடாகங்கள், பலவிதமான வடிவங்களில் புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் வருடந்தோறும் மலர்க் கண்காட்சிகளும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. செடிகள் பராமரிப்பு, தாவர வகைகள் குறித்த தகவல்கள் விபரங்கள் போன்றவை அச்சமயத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க இந்த கண்காட்சிகளும் முகாம்களும் உதவுகின்றன. தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இந்த பூங்கா திறக்கப்படுகிறது. பெங்களூரின் எல்லா முக்கிய பஸ் நிலையங்களிலிருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த பூங்காவிற்கு வருவதற்கு பஸ் வசதிகள் உள்ளன.

1856 ஆண்டு ஆங்கிலேய அரசால் அரசாங்க தாவரவியல் தோட்டமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த லால் பாக்கின் வளர்ச்சிக்குப்பின் பல ஆங்கிலேய அதிகாரிகளின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. தற்போது லால் பாக் தாவரவியல் தோட்டம் மாநில அரசின் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. லண்டனில் உள்ள கிரிஸ்டல் பேலஸ் போன்று லால் பாக் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் வருடாந்திர மலர்க்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. லால் பாகிற்கு HMT நிறுவனம் பரிசாக வழங்கிய ஒரு பெரிய எலக்ட்ரானிக் மலர் கடிகாரமும் இந்த பூங்காத்தோட்டத்தின் நடுவில் உள்ளது. இந்த அற்புதமான பூங்காவில் கொஞ்ச நேரத்தை கழித்தபின், வித விதமான மலர்களையும், தாவரங்களையும், மரங்களையும் தரிசித்த மயக்க வைக்கும் அனுபவத்திற்கு பின் ‘நான் மனிதர்களை விடவும் இயற்கையை மிகவும் நேசிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய மனோநிலைக்கு வருவீர்கள். சரி,…… நாம குவார்ட்டர்ஸுக்கு போலாமா?”

நால்வரும் குவார்டர்ஸ் நோக்கி பயணிக்க, நான் என் கதையை தொடர்ந்தேன்.

“சென்னையில் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் மெரினானு சொல்லிருப்பாங்க. அது என்னமோ உண்மையாக இருந்தாலும் சென்னைக்கு வருவதாக இருந்தால் அடையார் ஆலமரத்தை கண்டுவிட்டு செல்லவும். அடையார் ஆலமரம் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க முன் கூட்டியே அனுமதி வாங்கி வரவும்.

அடுத்ததா சென்னைக்கு வறீங்க ஏதோ ஒரு பொருளை வாங்க பாடி சரவணா ஸ்டோர்ஸ்பக்கம் போறீங்கனா நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது இது தான். வார இறுதி நாட்களில் அந்த பக்கம் எல்லாம் போகாதீங்க. பில் போட ரெண்டு மணி நேரம் ஆகும். சரி அப்படியே தெரியாத்தனமா வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்ய போனாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் வரிசையில் துண்டை போட்டு இடம் பிடிங்க. அவங்க எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் அஞ்சி பொருட்கள் தான் வாங்கி இருப்பாங்க அதனால் வரிசை சீக்கிரம் நகரும். பெண்கள் அதிகம் நிற்கும் வரிசையில் நின்றால் நாளான்னைக்கு அதிகாலையில் தான் உங்க வரிசை வரும் பார்த்துக்கோங்க. வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் தான் பெரும்பாலும் பெண்கள் வாங்கியிருப்பாங்க அதை ஒவ்வொன்றாக பார்த்து பில் போடுவதற்குள் விடிந்துவிடும் என்பதால் மீண்டும் சொல்கிறேன் சென்னையில் டாஸ்மாக், தியேட்டர் மற்றும் பார்க்கிங் தவிர்த்து மற்ற எந்த வரிசையில் நீங்கள் நிற்க நேரிட்டாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் வரிசையிலே துண்டை போடுங்கள்.

நூலகங்கள் அதிகமாக இருக்கும் ஒரு ஊர் சென்னை என்பதை எல்லாம் மறைத்து விட்டு பெரிய பெரிய மால் எல்லாம் சென்னையில் தான் இருக்குனு பேசுற உலகம் இது. நிறைய நிறைய அருமையான விசயங்கள் சென்னையில் இருக்கு. உதாரணத்துக்கு மிக குறைந்த விலையில் இயங்கும் உணவகங்கள், அளவிற்கு அதிகமான பொது போக்குவரத்து (அதைவிட மக்கள் தொகை அதிகம் அது வேற விஷயம்) அங்கே அங்கே சைக்கிள் சேவைகள், அது இதுனு இருக்குது எக்கச்சக்கமா. அடையாலிருந்து ஒரு பொருளை அண்ணாநகரில் இருக்கும் ஒருவரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா? அதற்கும் சேவை செய்யம் நிறுவங்கள் செயலிகள் இருக்கு. அதான் ஏற்கனவே சொன்ன மாதிரி மண்ணு, ஒரு வாய் நல்ல மீன் குழம்பு ரெண்டையும் தவிர்த்து எல்லாமே கிடைக்கும் எக்கச்சக்கமா கிடைக்கும்.

பிராண்ட் என்னும் பெயரில் கொள்ளையை காரர்கள் சுற்றி வருவார்கள் மிக மிக ஜாக்கிரதை. கிங்ஸ் சாய்ல தான் டீ சூப்பரா இருக்கும் அது தான் சென்னையில சூப்பரான டீ என்று தேநீர் பிரியர்களே சொன்னாலும் நம்பாதீங்க. உணவில் மட்டும் பிராண்ட் பெயரை பார்த்து ஏமாறாதீங்க. வெகு சில உணவுகள் மட்டும் தான் அந்த வகையில் நல்லா இருக்கும். அந்த யூடியூப் பிரபலம் சாப்பிட்ட கடை இந்த பிரபலம் சாப்பிட்ட கடைன்னு உங்க காசை காரியாக்காதீங்க.

நீங்கள் விடுதியில் தங்குவதாக இருந்தால் நீங்கள் சென்ற அன்று மின்சார மீட்டரில் எவ்வளவு யூனிட் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது என்பதை புகைப்படம் எடுத்து வைக்குது கொள்ளுங்கள். முப்பது நாள் முடிந்ததும் 160 யூனிட்டுக்கு 1600 ரூபாய் கொடுங்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கு முன் அந்த அறையில் தங்கி இருந்தவர் கடந்த ஐந்து மாதங்களில் 130 யூனிட் பயன்படுத்தி இருப்பார் என்ற கணக்கெல்லாம் பல இடத்தில் எடுபடாது. எந்த இடத்தில தங்குவதாக இருந்தாலும் எவ்வளவு யூனிட் நீங்க வரும் முன் ஓடிருக்குனு ஓனரை அழைத்து காண்பித்த பிறகே குடியேறுங்கள்.

நிறைய கல்லூரிகள் இருக்கு. பகுதி நேர படிப்பு எல்லாம் சென்னையில் இருக்கும்பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே போல் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதும் கூட. ஊரில் எல்லாம் ஸ்பீட் பிரேக்கர் இல்லாத சாலை சிக்னல் இல்லாத சாலைகளில் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதைவிட இது போன்ற நகரங்களில் கற்றுக் கொள்வது கூடுதல் சிறப்பு தான்.

நீங்கள் இடம் பெயர்ந்தாலே சில நாட்களில் உணவு ஒவ்வாமை அல்லது வேறு சில ஒவ்வாமைகள் வருவது மிக இயல்பு தான். அதற்கெல்லாம் பயந்து மறுபடியும் ஊருக்கே ஓடிறாதீங்க சென்னைக்கு வந்தேன் என் உடம்புக்கே என்னமோ ஆகிப்போச்சு அதுவா இதுவானு எல்லாம் பயந்துடாதீங்க. அது ரெண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

சென்னைதான் மிகவும் புகழ்வாய்ந்த நகரம். ஏனென்றால்,

பழம்பெருமை வாய்ந்த கோவில்கள், சென்னையில்தான் அதிகமாக உள்ளன.

ஒருகாலத்தில் தென்னிந்தியமொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் யாவும், சென்னையில், ஒரேசமயத்தில் நடைபெற்றுவந்தன. அந்தளவிற்கு ஏராளமான படப்பிடிப்புக்கூடங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருந்தது சென்னைதான். தற்போது கூட, அதிக படப்பிடிப்பு நடத்துவதற்கும், படப்பிடிப்பு வசதிகளுக்கும், சென்னைதான் உகந்ததாக உள்ளது.

நீர்வழிப்போக்குவரத்து, தரைவழிப்போக்குவரத்து, ஆகாயவழிப்போக்குவரத்து எனமூவகையான போக்குவரத்து வசதிகளையும் வெகுகாலம்வரையில் கொண்டிருந்த நகரம் சென்னைதான். (தற்போது, ஆக்ரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் நீர்வழிப்போக்குவரத்து இல்லாமற்போய்விட்டது. இங்கு நீர்வழிப்போக்குவரத்து என்பது, கால்வாய் வழியிலான போக்குவரத்தையே குறித்தது). தற்போது இருவகை போக்குவரத்துகள் மட்டுமே தொடர்கின்றன.

இந்தியாவின் பழமையான உயர்நீதிமன்றங்களுள் ஒன்றும், பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றும், அருங்காட்சியகங்களுள் ஒன்றும், நூலகங்களுள் ஒன்றும், கண்மருத்துவமனையில் ஒன்றும், சென்னையில்தான் அமைந்துள்ளன.

ராஜா முத்தையா நூலகம், உ.வே.சா நூலகம், பிரிட்டிஷ் நூலகம் உள்ளிட்ட பழம்பெருமை வாய்ந்த தனியார் நூலகங்களும் சென்னையில்தான் அதிகமாக உள்ளன.

சென்னையிலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையமும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டும் வருவாய் அளவிலும், பயன்பாட்டு அளவிலும், பரப்பளவிலும் மிகப்பெரியனவாக உள்ளன. பெங்களூருவில் இந்த அளவில், இவை அமையப்பெறவில்லை.

சித்தர்களுடைய ஜீவசமாதிகளும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக உள்ள அளவிற்கு, பெங்களூருவிலோ அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலோ காணப்படவில்லை.

பழம்பெருமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள், சென்னையில்தான் அதிகமாக உள்ளன; பெங்களூருவில் இவை குறைவாகவே உள்ளன.

சென்னையில், பலதுறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன. பெங்களூருவில், இவை குறைவாகவே உள்ளன.

பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், சென்னைதான் முதன்மையானதாக உள்ளது.

பெங்களுருவுடன் ஒப்பிடும்போது, வாகனப்போக்குவரத்து நெரிசல், சென்னையில் குறைவாகவே உள்ளது.

சென்னையில் அதிகளவிலான பள்ளிகள், கல்லூரிகள், பலவகையான தங்கும் விடுதிகள், புத்தக பதிப்பக நிறுவனங்கள், பத்திரிக்கை அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றுள் ஐம்பதாண்டுகளைக் கடந்த பாரம்பரியச் சிறப்புகளைக் கடந்தவை கணிசமான அளவில் உள்ளன.

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா சென்னையில்தான் உள்ளது.

சென்னையில் மிகப்பெரிய அளவிலான புத்தகக்கண்காட்சி நடைபெறுவதுபோல, பெங்களூரூவில் நடைபெறுவதில்லை.

சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். பெங்களூருவை, அதிகபட்சம் நான்கு, ஐந்து நாட்களுக்குள் சுற்றிப்பார்த்து விடலாம்.

பெங்களூரில் நிறைய இடங்களில் தமிழ்நாட்டு சுவை உணவுகள் கிடைக்கின்றன.

பத்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.

விலை குறைவு மனதிருப்ப்தி தேவை என்றல் கண்டிப்பாக இங்கு செல்லவும்.

சாந்திநகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் - வில்சன் கார்டன்

நம்ம ஊரு ஸ்டைல் 4 இட்லி 25ரூபாய் சாம்பார், சட்னி தமிழ்நாட்டு சுவை அப்படியே இருக்கும்

RK தோசை மிகவும் பேமஸ்.

Madiwala - மாருதி நகர் மட்டும் BTM 1st ஸ்டேஜ்,

இந்தப்பகுதியில் மதுரை & சேலம் மக்கள் நிறையபேர் கடை வைத்துள்ளனர் நம் ஊரு உணவு எப்போதும் கிடைக்கும்.

கம்மனஹள்ளி - சேவாநகர்

இங்கும் தமிழ்நாட்டு ஸ்டைலில் உணவுகள் கிடைக்கும். முக்கியமாக பரோட்டா அப்படியே இருக்கும்.

RT நகர் போகும் வழியில் JC ரோடு இங்கும் தமிழ் நாட்டு ஸ்டைல் உணவு கிடைக்கும்.

இப்படி பேசிக்கொண்டே வந்த்தில் இரவு 7 மணி ஆனது.

சிவாஜி நகரில் அனுபம் ஓட்டலில் டின்னர் முடித்து விட்டு அசோக் நகர் சென்றோம்.​
Next page: Chapter 32
Previous page: Chapter 30