Chapter 01

கிரஹப் பிரவேஷம்

என் காலேஜ் ஃப்ரண்ட் சுரேஷ், இப்போது ஸ்விட்சர்லேந்தில் இருக்கிறான். அவனிடம் போனில் பேசினேன்.

“ஹலோ,….”

“ஹலோ,….. ரமேஷா?”

‘ஆமாண்டா,…. நான்தான் ரமேஷ் பேசறேன். நல்லா இருக்கியா? ஸ்விஸுக்கு போனதிலேர்ந்து அதிகமா பேசறதில்லே.”

“அதில்லேடா,…இங்கே பிஸ்னஸ்,…அது,… இதுன்னு கொஞ்சம் பிஸி ஆகிட்டதினாலே அடிக்கடி பேச முடியல. சரி,….என்னவோ சொல்ல வந்தியே?”

நான் செங்கல்பட்ல, பத்மாவதி நகர்ல ஏற்கனவே என் மகள் பேர்ல ரெண்டு கிரவுண்ட் பிளாட் வாங்கிப் போட்டிருக்கிறது உனக்கு தெரியும்ல.”

“ஆமாம்,….அதுக்கென்ன இப்ப?”

“ இப்ப அதுல ஹை சீலிங் வச்சு, ஒரு கோடி செலவு பண்ணி புதுசா வீடு கட்டி இருக்கேன்.”

“அப்படியா நல்ல விஷயம்தான். யாரு எஞ்சினியர்?’

“ சுதாகர்டா,….”

“யாரு,….ஒல்லியா வெட வெடன்னு நம்ம காலேஜ்ல, நம்ம கூட சிவில் படிச்சானே அவனா?”

“ஆமாடா,…. வீட்டை நல்லா டிசைனா கட்டி கொடுத்திருக்கான். மத்த இஞ்சினியருங்களை புடிச்சிருந்தா இன்னும் ரெண்டு மூணு லட்சம் சேத்து செலவு ஆகி இருக்கும். “

“ஆமாம். எல்லாம் காசை கொள்ளை அடிக்கத்தான் பாப்பானுங்க. நமக்கு பிடிச்ச மாதிரி, ஞாயமா வீட்டை கட்டி கொடுக்கறதில்லை. சரி,…இப்ப எதுக்காக போன் பண்ணே?”

“புதுசா கட்டுன வீட்டுக்கு கிரஹப் பிரவேஷம் பண்ணனும். ஒரு நல்ல ப்ரோகிதர் இருந்தா சொல்லுப்பா,….இது வரைக்கும் பல வீட்டுக்கு கிரஹப் பிரவேஷம் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்தாச்சு. ஆனா, அது எதுக்காக பண்றோம்னு, எப்படி பண்ணனும்கிறதை இன்னைக்கு வரையிலும் தெரிஞ்சிக்கிட்டதில்லே. எனக்குன்னு வீடு கட்டுறப்பதான் அது எதுக்காகப் பண்றோம்னு தெரிஞ்சுக்கத் தோணுது.”

“ஆமா,…அது அது வர்றப்பதானே அதைப் பத்தி தெரிஞ்சுக்கத் தோணும்.”

“ஆமாம்ப்பா,….. கிரஹப் பிரவேஷம் எதுக்காக பண்றோம்,….எப்படி பண்ணனும்கிறதையும் சொல்லுப்பா. நீதான் ரெண்டு வீடு கிரஹப் பிரவேஷம் பண்ணினவாச்சே.”

“அது சரிப்பா. நான் ஊரை விட்டு வந்து ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் செங்கல்பட்டு பக்கத்திலே புரோகிதர் யாராவது இருக்காங்களான்னு பழைய ஃப்ரண்ட் யார்கிட்டேயாவது விசாரிச்சு சொல்றேன். உள்ளூர்ல யாரும் இல்லையா?”

“காச விட்டெறிஞ்சா ஆயிரம் புரோக்கர்கள் வருவாங்க. அவங்க செய்யிற பூஜைலே எனக்கு திருப்தி இல்லே. மந்திரத்தையும் சரியா சொல்றதில்லே. அதனாலதான் உன் கிட்டே கேட்டேன்.”

“நீ சொல்றது சரிதாம்ப்பா. மந்திரத்தை ஒழுங்கா சொல்லி, பூஜை பண்ணினாதான் பிரயோஜனம் உண்டு. கடமைக்கு பண்றதை அந்த கடவுளும் ஏத்துக்கறதில்லே. நமக்கும் மனசு கேட்காது.”

கிரஹப் பிரவேஷம்கிங்கிறது, வழக்கமா புரோகிதரை அழைத்து பூஜை, புனஸ்காரங்கள் செய்றதுதான் எல்லா கிரஹப் பிரவேஷத்திலேயும் நடக்கிறது. ஹோமம் செய்வதும், யாகம் நடத்துவதும் அந்த வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழைய கூடாது என்பதற்காகவும், வாழப்போகும் வாழ்க்கை நலமோடும், செல்வச் செழிப்போடும் இருக்கவும் இதை செய்றோம்.”

“இதுக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்துதான் செய்யணுமா? இல்லே,…. நம்ம வசதிக்கேத்த மாதிரி ஒரு நல்ல நாள்லே செய்யலாமா?”

“கிரகபிரவேசம் செய்வதற்கு நாள், நட்சத்திரம் பார்ப்பதும் அவசியமாகும். அந்த வரிசையில் கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எந்த தவறுகளை நாம் செய்கிறோம்? எதை செய்யக்கூடாது? அப்படி செய்தால் என்ன ஆகும்? என்பதையும் நாம தெரிஞ்சு வச்சிருக்கணும்.”

“சரிப்பா,… நீயே எல்லாத்தையும் சொல்லிடு.”

“புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய கட்டாயம் நல்ல நாள் பார்க்க வேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி தீட்டு படாமலும், வீட்டு விலக்கு ஆகாமலும் இருக்க வேண்டும். குடும்ப தலைவர் மற்றும் தலைவிக்கு சந்திராஷ்டம நாளாக இருக்கக் கூடாது. கரி நாளில் கட்டாயம் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.”

“ஓ,…அப்படியா?”

“சில பேர் வீடு கட்டும் பொழுது அரைகுறையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். முழுமையாக முடித்திருக்க மாட்டார்கள். கூடுமானவரை வீடு முழுமை பெறாமல் கிரகபிரவேசம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வது முழுமையான பலனை கொடுக்காது.”

“ஓ,…..”

“ கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எதிலும் அவசரம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், மிகுந்த பக்தியுடன், பதட்டமின்றி கிரகப்பிரவேச பூஜைகள் நடைபெறுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.”

“சில பேர் அவசர அவசரமா கிரஹப் பிரவேஷம் செய்வாங்களே,….அப்படி செஞ்சா நல்லதா?”

“அவசர அவசரமா கிரஹப் பிரவேஷம் செய்யக் கூடாது. அவசர அவசரத்துடன் செய்வது கெடுபலன்களை உண்டு பண்ணும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்கும் 4 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்திலும், லக்ன முகூர்த்தமானா 6 முதல் 7 வரையிலான காலகட்டத்திலும் கிரகப்பிரவேசம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். அதிகாலையில் செய்யும் பொழுது நேரத்தை தவற விடுவது, வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதை மனதில் கொண்டு கிரகப்பிரவேசத்தை திட்டமிட்டு நடத்துவது நலம் தரும்.”

“கிரஹப் பிரவேஷம் செய்யிறப்போ, கோயிலுக்கு போலாமா,…. வேண்டாமா?”

“கிரகப்பிரவேசம் செய்பவர்கள் கட்டிய வீடு இருக்கும் பகுதியில் ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து புதிதாக வாங்கிய சுவாமி படம், அரிசி, பருப்பு, உப்பு, காமாட்சி அம்மன் விளக்கு, நிறைகுடம், மங்கலப் பொருட்களில் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய தாம்பூலம், தேங்காய் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தான் முதன் முதலாக கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்ல வேண்டும்”

“ஓ,….”

“கட்டிய வீடு பெரிதாக இருந்தாலும், சிறிதாக இருந்தாலும் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்.”

“என்ன செய்யணும்?”

“கிரகப் பிரவேசத்தின் பொழுது விநாயகர், லட்சுமி மற்றும் நவகிரகம் ஆகிய இந்த மூன்றுக்கும் தனித்தனியாக மூன்று கலசங்கள் வைக்க வேண்டும். கிரகப்பிரவேசம் முடிந்ததும் கலசத்தில் இருக்கும் நீரை புரோகிதர் மற்றும் யாராவது ஒருவரை மாடியில் ஈசானிய மூலையில் நின்று கொள்ள செய்ய வேண்டும். அதற்கு கீழே நேர ஈசானிய மூலையில் வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் நின்று கொள்ள வேண்டும். மேலிருந்து அவர்கள் கலசத்தில் இருக்கும் நீரை தாரையாக இவர்கள் மேல் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பல சந்ததிகளோடு, செல்வ செழிப்புடன் வாழ்வாங்கு வாழ செய்யுமாம்.”

“இதை யாரும் சொல்லலையேப்பா. சரி,….இதுக்குன்னு ஏதாவது விதி முறை இருக்கா?”

“கிரகப் பிரவேசம் என்று சொல்ல வேண்டும். கிரஹப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்றால் வீடு. கிரஹம் என்றால் வானத்தில் உள்ள கோள்களைக் குறிக்கும். க்ருஹப்ரவேசம் என்று அழைக்கப்படுகின்ற புதுமனை புகுவிழா செய்வதற்கு என்று ஒரு சில முக்கியமான விதிமுறைகள் உண்டு.”

“அப்படி என்னென்ன விதி முறைகள்?”

“முதலாவதாக அந்த வீட்டினில் தரை போடப்பட்டிருக்க வேண்டும். அது சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, அல்லது டைல்ஸ், மார்பிள், கிரானைட், மார்போனைட் என்று எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, எதனைப் பயன்படுத்தப் போகிறோமோ அதனைக் கொண்டு தரையினை அமைத்திருக்கவேண்டும்.”

“சும்மா சிமெண்ட் தரையை போட்டுட்டு கிரஹப் பிரவேஷம் செய்யலாமா?’

“ஒரு சிலர் மார்பிள் பதிக்கப்போகிறோம், மார்பிள் பதித்துவிட்டு க்ருஹப்ரவேச ஹோமம் செய்தால் தரை அழுக்காகிவிடும் என்ற எண்ணத்தில் வெறும் சிமெண்ட் கலவையை மட்டும் லேசாகப் பரப்பி அதனை பெருக்கித் துடைத்துவிட்டு புதுமனை புகுவிழா நடத்திவிடுகிறார்கள். பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு சாவகாசமாக தரைக்கு மார்பிள் பதிக்கிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. எந்தத் தரையை வீட்டினில் உபயோகப்படுத்தப் போகிறோமோ அதை போட்டு முடித்துவிட்டுத்தான் கிரஹப்ரவேசம் நடத்த வேண்டும். ஹோமத்தினால் கரை ஏதும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு பல வழிகள் உண்டு. இரண்டாவதாக சுற்றுச்சுவர் பூசப்பட்டிருக்க வேண்டும். உட்புறச் சுவரும், வெளிப்புறச் சுவரும் பூசப்பட்டு அதற்கு வெள்ளை அடித்திருக்க வேண்டும். மெதுவாக வண்ணப்பூச்சுகளை அடித்துக் கொள்ளலாம்.”

“ஓ,….அப்புறம் வேற ஏதாவது கன்டிஷன் இருக்கா?”

“ம்,……வாயிற்கதவு போட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் வாசக்கால் மட்டும் வைத்துவிட்டு கதவு போடாமல் புதுமனை புகுவிழாவினை நடத்துகிறார்கள். இது முற்றிலும் தவறு. கதவு டிசைன் செய்து வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தை முன் வைக்கிறார்கள். வாயிற்கதவு தயாரான பிறகுதான் புதுமனை புகுவிழாவை நடத்த வேண்டும். நான்காவது விதியானது புதுமனைபுகுவிழாவின் போது பஞ்சமஹாயக்ஞத்தினை நடத்த வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. ஐந்தாவதாக புதிய வீட்டினில் கிரகபிரவேச பூஜைகளை முடித்தவுடன் குறைந்தது பத்து நபர்களுக்காவது போஜனமிட வேண்டும்.”

“காலியா இருக்கிற பக்கத்து இல்லேன்னா,…. எதிர் வீட்ல வச்சு போஜனம் செய்யலாமா?”

“கூடாது. தற்காலத்தில் இடவசதி கருதி புதிய வீட்டிற்குள் பந்தி பரிமாறுவதை விடுத்து எதிர்வீடு அல்லது அருகில் உள்ள காலிமனை, போர்ட்டிகோ முதலான இடங்களில் வைத்து உணவளிக்கிறார்கள்.

இதுவும் தவறான முறையே. உணவளிக்கும் இடமானது க்ருஹப்ரவேசம் செய்யப்படுகின்ற வீட்டின் வாசற்படிக்கு உள்ளே இருப்பதாக அமைய வேண்டும். வாசற்படியைக் கடந்து வீட்டிற்குள் வந்து அமர்ந்துதான் விருந்தினர்கள் உணவருந்த வேண்டும். கிரகபிரவேசத்திற்கு நாள் குறிக்கும்போது வாரசூலையை கணக்கில் கொண்டு சூலம் இருக்கும் திசையை அறிந்து குடும்ப ஜோதிடரின் துணைகொண்டு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் காய்ச்சிய கையோடு குறைந்த பட்சமாக சர்க்கரைப் பொங்கல் செய்து பூஜை அறையில் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.”

“கிரஹப் பிரவேஷம் செய்யிறப்போ அந்த வீட்டோட உரிமையாளர் அவங்க குடும்பத்தோட தங்கணும்னு சொல்றாங்களே,…அது உண்மையா?”

“உண்மைதான். கிரகபிரவேசம் செய்கின்ற நாளில் மனை ஏறிய தம்பதியர் மற்றும் அந்த வீட்டு எஜமானரின் குடும்பத்தினர் அனைவரும் அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்து புதுமனை புகுவிழா செய்வோரின் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நீடித்திருக்கும்.”

“ஓ,…. நான் தெரிஞ்சுக்காத நல்ல விஷயங்களை சொன்னேப்பா. நன்றி. வேற ஏதாவது விஷயம் இருக்கா?”

“ம்,…..மக்கள், குறிப்பாக ஹிந்து மதத்தினர் புதிதாக வீடு வாங்கும் பொழுதோ அல்லது கட்டும் பொழுதோ, அந்த வீட்டுக்குள் குடியேறுவதற்கு முன்னர், கிரகப் பிரவேசம் என்ற வழிபாட்டு விழாவை நடத்துகின்றனர். இதில், கிரகங்கள் மற்றும் தீய சக்திகளின் பாதிப்புகளைக் களைய, பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்படுகின்றன. சுப வேளையில் செய்யப்படும் இந்த கிரகப் பிரவேச விழா, அந்தப் புதிய இடத்தைப் புனிதப்படுத்துகிறது. மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாகச் செய்கிறது.”

“கிரஹப் பிரவேஷ நிகழ்சிக்கு வேற ஏதாவது பேர் இருக்கா?”

“ம்,….கிரகப் பிரவேச விழா பல வகைப்படும்.

புதிதாக வாங்கப்பட்ட நிலத்தில், புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்காக நிகழ்த்தப்படும் விழா, அபூர்வ எனப்படும். நீண்ட நாட்கள் வெளியில் தங்கியிருந்த பின்னரோ அல்லது வேறு ஒருவருடைய வீட்டை வாங்கியிருந்தாலோ, அந்த வீட்டில் மீண்டும் குடிபுகும் நேரத்தில் நடத்தப்படுவது, சபூர்வ எனப்படும். வீட்டைப் பழுது பார்த்த பின்னரோ, சீரமைத்த பின்னரோ, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீட்டை சரி செய்த பின்னரோ குடிபுகும் பொழுது, த்வந்த்வ என்ற விழா நடத்தப்படும்.”

“ம்,…..சரி,….கிரஹப் பிரவேஷ நிகழ்ச்சிக்குன்னு ஏதாவது சம்பிரதாயம் இருக்கா?”

“ம்,…ஏன் இல்லாம,…. நெறைய பேருக்கு இது தெரியறதில்லே. எல்லாத்தையும் புரோகிதர் பாத்துக்கிடுவார்ன்னு விட்டுடுவாங்க. ஆனா, அதை நாமளும் தெரிஞ்சுக்கணும்.”

“ம்,….சொல்லுப்பா,…. தெரிஞ்சுக்கறேன்.”

“கிரகப் பிரவேச விழாவின் பொழுது, வீட்டின் நலனுக்காகவும், அங்கு வசிக்கப்போகும் மக்களின் நலனுக்காகவும் பல பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.

பசு மற்றும் கன்றுக் குட்டியின் ஆசி பெறுவதற்காக, கோ பூஜை செய்யப்படுகிறது.

வீட்டு வாயிலைத் தூய்மைப் படுத்துவதற்காக, கணபதி, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி பூஜைகள் செய்யப்படுகின்றன. .

கிரகப் பிரவேச நாளின், சுப வேளையில் புது வீட்டில் நுழைவதற்கும், வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

முதலில், இல்லத்தரசி, தூய தண்ணீர் நிறைந்த குடத்தை எடுத்துக் கொண்டு, தனது வலது காலை முன் வைத்து வீட்டில் பிரவேசிக்க வேண்டும்.

அவளைப் பின் தொடர்ந்து, அவளது கணவர், கடவுளர்களின் படங்களை ஏந்தியவாறு உள்ளே நுழைய வேண்டும்.

பின்னர், மங்களத்தையும், செழிப்பையும் குறிக்கும் மளிகை சாமான்களை எடுத்துக் கொண்டு, குழந்தைகள் உள்ளே செல்ல வேண்டும்.

இதன் பின்னர், உறவினர்களும், நண்பர்களும், விருந்தினர்களும் வீட்டிற்குள் செல்லலாம்.

ஜன்னல், கதவுகள் திறக்கப்பட்டு, வீடு காற்றோட்டமாக வைக்கப்பட வேண்டும். தீபங்கள், விளக்குகள் ஏற்றப்பட்டு, வீடெங்கும் வெளிச்சம் நிறைந்திருக்க வேண்டும். இல்லத்தரசி கர்ப்பம் தரித்திருக்கும் பொழுது, கிரகப் பிரவேசம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.”

“ஓ,…..சரிப்பா, புரோகிதர் யாரையாவது விசாரிச்சிட்டு சொல்லு. அவரை வச்சு பேசி முடிச்சிட்டு ஒரு நல்ல நாள் குறிச்சிட்டு பத்திரிக்கை அடிச்சு உன்னை இன்வைட் பண்றேன். வந்துடு.”

“ஸ்விட்சர்லாந்திலேர்ந்து நான் எப்படிப்பா வர்றது? முடிஞ்சா வர்றேன். இருந்தாலும் உனக்கு எனது வாழ்த்துடன் என் அன்பளிப்பையும் அனுப்பி வைக்கிறேன். சரி,…. வச்சிடட்டா.”

வீடும் பார்த்து பார்த்து கட்டி முடிதாகி விட்டது. சில சில சில்லரை வேலைகள் மட்டுமே இருந்தன.

நாங்கள் வீடு கட்டி இருந்த பகுதியில் ஒரு சில வீடுகளே கட்டுமானப் பணியில் இருந்தன. எங்கள் வீட்டைச் சுற்றிலும் காடு போல முட் புதர்களும், புற்களும், மரம் செடி கொடிகளும் வளர்ந்திருந்தது. எங்கள் வீட்டை சுற்றிலும் மனை வாங்கிய சில பேர் அதை அப்படியே விட்டு விட்டார்கள். இது டெவெலப்மென்ட் ஏரியா என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வீடுகள் முளைத்திருந்தன. எங்கள் ஏரியா முக்கிய சாலையை விட்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.

சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சாக்கடை வசதி இப்படி எந்த வசதியும் செய்யபடாமல் கூட இருந்தது. வீடுகள் அனைத்தும் கட்டி முடித்ததுக்கப்புறம் ஒரு வேளை அந்த வசதிகள் வரலாம்.

ஒரு 5 நாட்கள் கழித்து ஸ்விஸ்லேர்ந்து சுரேஷ் போன் பண்ணி, ஒரு புரோகிதரின் கை பேசி எண்ணைக் கொடுத்தான். அந்த எண்ணை கைபேசி வழியாக புரோகிதரைத் தொடர்பு கொண்டு, கிரஹப் பிரவேஷம் செய்வது பற்றி பேசி முடித்தோம்.

ஒரு சுபநாளில் மஞ்சள் வண்ண தாளில் பச்சை வண்ண எழுத்துகளுடன் இருந்த வண்ண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து எங்கள் வீட்டு கிரஹப் பிரவேஷ விழாவிற்கு அழைத்தோம்.

கட்டாயத்தின் பேரில், விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொடுத்த பிறகு எங்கள் மருமகன் வீட்டார் சம்பந்தி குடும்பத்தோடும், எங்கள் மகளோடும் நாங்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.

சரி, ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறோம். ஒரே மகள். அவளை அழைக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து, எங்கள் மனஸ்தாபங்களை தவிர்த்து விட்டு, எங்களை மதிக்காமல் மகள் செய்த செயலால் எங்களுக்குள் மனதுக்குள் கோவம் இருந்தாலும், என்னதான் பேசிக்கொள்ள வில்லை

என்றாலும், உறவு விட்டுப் போய் விடக் கூடாதென்று மகள் குடும்பத்தையும் அழைக்க முடிவு செய்தேன்.

என் மனைவி அவள் தோழிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றதாலும், ‘என்னை மதிக்காத மகள் வீட்டுக்கு நான் வரவில்லை. நீங்கள் மட்டும் போய் வாருங்கள்’ என்று என் மனைவி சொன்னதாலும், நான் மட்டும் எங்கள் மகள் வீட்டிற்கு சென்று அவர்களையும் கிரஹப் பிரவேஷ விழாவிற்கு வரும்படி முறைப்படி அழைத்தேன்.

மகள் பிரியாவுக்கு போன் செய்தேன். அவர் மாமியார்தான் எடுத்தார்கள். நான் அங்கே வரப் போகும் விஷயத்தை சொல்லி தாம்பரத்தில் அவர்கள் குடி இருக்கும் வீட்டு முகவரியை கேட்டு வாங்கி குறித்து வைத்துக்கொண்டேன்.

தாம்பரத்தில் உள்ள அவர்கள் வீட்டை எப்படியோ தேடிக் கண்டு பிடித்து வீட்டு காலிங் பெல்லை அழுத்த, பிரியாவின் மாமியார் வந்து கதவைத் திறந்தார்.

பிரியாவின் மாமியாருக்கு கண் கொஞ்சம் அவ்வளவாகத் தெரியாது. முட்டி வலியால் மாடிப்படிகளிலும் ஏறி நடக்க முடியாது. அதனால் கீழ் வீட்டிலேயே மெதுவாக தடியை ஊன்றியபடி நடை உடையில் இருந்தாள். பார்வை குறைவு ஆதலால், கண்ணாடி போட்டு உற்றுப் பார்த்துதான் அடையாளம் கண்டு கொள்வாள்.

அவர்கள் வீட்டுக்குச் சென்ற என்னைப் பார்த்ததும் சில நொடிகள் கண் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து உற்றுப் பார்த்து விட்டு, அடையாளம் கண்டு கொண்டு, ஆச்சரியப்பட்டு, கை கூப்பி வணக்க்கம் சொல்லி, “வாங்க,….. வாங்க,…. சம்பந்தி!!!” என்று சொல்லி சிரித்தபடி வரவேற்று கீழ் வீட்டில் ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு, “பிரியா,….யார் வந்திருக்காங்க பார்.” என்று மாடியை நோக்கி குரல் கொடுக்க,…. தட தடவென என் மகள் மாடிப்படிகளில் இறங்கி வரும் சத்தம், சலக்,…சலக்,… என்ற அவள் கொலுசொலியோடு கேட்டது.

“வாங்க சம்பந்தி. வராதவங்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று என் சம்பந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கீழ் வீட்டுக்கு வந்தவள் என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் முகத்தில் சந்தோஷம் மிளிர, பெரு மூச்சுடன் அவள் மார்புகள் ஏறி இறங்க என் எதிரில் வந்து நின்றாள்.

பாசம் அவள் மனதை அழுத்த என்னைப் பார்த்த என் மகளின் கண்களில் கண்ணீர் தழும்பியது.

பிரியா முன்பு இருந்ததை விட இப்போது இன்னும் அழகாக இருந்தாள்.

“அப்பா” என்று அழுதபடி ஓடி வந்து என்னை பாசத்தோடும், அன்போடும் தழுவிக்கொண்டாள். அவளை என்னோடு பாசமாக அணைத்துக்கொண்டு, அவள் தலையை தடவிக் கொடுத்து, “அதான் பழசை எல்லாம் மறந்துட்டு வந்திட்டேன்ல செல்லம்!!. எதுக்கு அழுதுகிட்டு?!! நீ சந்தோஷமா இருந்தா, அதுவே எங்களுக்கு போதும்மா.!!” என்று சொல்லி அவள் தாடையை நிமிர்த்தி, அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, தலையையும், முதுகையும் அன்பாக தடவிக் கொடுத்து அவளை என் நெஞ்சோடு சேர்த்து அனைத்துக்கொண்டேன்.

இதைப் பார்த்த சம்மந்தி, “இப்படிப் பாசமா இருக்கிற ரெண்டு பேரும் எப்படி பாக்காம, பேசிக்காம இருந்தீங்களோ” என்று சொல்லி ஆச்சரியப்பட்டாள்.

பிரியாவும் சகஜ நிலைக்குத் திரும்பி, சிரித்தபடி, “அம்மா வரலையாப்பா,…” என்று கேட்டாள்.

“ அவ ஃப்ரண்ட்ஸ்க்கு பத்திரிக்கை கொடுக்கறேன்னு காஞ்சிபுரம் வரைக்கும் போய் இருக்காம்மா. அதனால நான் மட்டும்தான் வந்தேன். மாப்பிள்ளை இல்லையா?”

“அவர் கடை வரைக்கும் போய் இருக்கார்ப்பா. இதோ இப்போ வந்திடுவார்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மாப்பிள்ளை ஹரி, வீட்டுக்கு வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்து கை கூப்பி எனக்கு வணக்கம் சொன்னார்.

எங்களைப் பார்த்ததும், பிரியாவும் ஹரியும் மிகவும் சந்தோஷப்பட்டு, “நாங்கள் ஏதாவது தப்பு செய்திருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். பேசாமல் மட்டும் இருக்காதீர்கள். எங்கே எங்களை விட்டு விட்டு கிரஹப் பிரவேஷம் நிகழ்ச்சியை நீங்களாகவே முடித்து விடுவீர்களோ என்று நினைத்து எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

எங்கள் மேல் வருத்தம் கொள்ளாமல், எங்கள் தவறுகளை மன்னித்து நீங்கள் தான் எங்களுக்கு தாய், தந்தையாக இருந்து எங்களை வழி நடத்த வேண்டும்.” என்று பிரியாவும், ஹரிகரனும் ஒன்றாக சேந்து எங்கள் காலில் விழுந்து அழ, அவர்களை சமாதானப்படுத்தி,,……..ஹாலில் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.

பத்து நிமிடம் கழித்து எழுந்து புறப்படும் போது, “கொஞ்சம் இருங்க மாமா. பிரியாவை காஃபி போடச் சொல்றேன். குடிச்சிட்டு போங்க. அதுவரைக்கும் இந்த ஆல்பத்தை பாத்துகிட்டு இருங்க” என்று ஹரி ஒரு ஆல்பத்தை என் கையில் கொடுத்து விட்டு அங்கே இருந்து விலக, நான் அந்த ஆல்பத்தை ஒவ்வொரு இதழாகப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி புரட்டி பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு மனதில் கடந்த கால பழைய இனிய நினைவுகள் வந்து போனது.

FLASH BACK.

நான் ரமேஷ் வயது 46. பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக பணியில் உள்ளேன். என் மனைவி பெயர் லதா. பழைய மகாபலிபுரம் சாலையில் உல்ள ஐடி சாப்ட்வேர் கம்பெனியில் ஹச் ஆராக பணி புரிகிறாள். எங்களுக்கு ஒரே மகள் ப்ரியா.

நான் அடையாரில் உள்ள ஐ ஐடி- இந்திய தொழில் நுட்ப கழகத்தில்- கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங்க் படிக்கும் போது, என் கல்லூரியிலேயே ஐடி படித்த லதாவை, கல்லூரி சேர்ந்த முதல் வருடத்திலேயே காதலித்து எங்கள் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டேன். அப்போது எனக்கு 21 வயது. என் மனைவிக்கு வயது 19.

காலங்கள் உருண்டோட, பிரியாவுக்கு இப்போது வயது 23. அவளுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது.

எங்கள் மகளின் காதலன் ஹரி என்றழைக்கப்படும் ஹரிஹரன் ஐடி எஞ்சினீயர். அவர்கள் குடும்பம் வறுமையான குடும்பம். அவர்கள் குடும்பத்தில் அவன்தான் முதல் பட்டதாரி.

எங்களுக்கு அவர்கள் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்ள விருப்பமில்லாமல் இருந்தாலும், எங்கள் மகளின் விருப்பப்படி ஹரி ஹரனை எங்கள் மகள் பிரியாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம்

தாம்பரத்துக்கு பக்கத்தில் சேலையூரில் பாரத் யுனிவெர்சிட்டி ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் அவள் படிக்கும் போது, அந்தக் கல்லூரி வளாகத்திலேயே இருக்கும் இஞ்சினியரிங் காலேஜில் ஐடி படித்த ஒருத்தனுடன் காதல் ஏற்பட்டு, எங்கள் பேச்சைக் கேட்காமல் அவனையே கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்றும், இல்லை என்றால் தற்கொலை செய்வதாகவும் சொல்லி அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ய,…. நாங்கள் வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு கோயிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து வைத்தோம்..

ஹரிஹரன் ,…ஆள் பார்க்க கொஞ்சம் லட்சனமாக இருந்ததாலும், எங்களின் ஒரே மகளின் விருப்பத்தை தட்டிக் கழிக்க நாங்கள் விரும்பாததாலும், அவனுக்கே எங்கள் மகளை எங்கள் செலவில் சிம்பிளாக கோயிலில் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.

எங்கள் மகள் செங்கல்பட்டுக்கு பக்கத்தில் வரதராஜபுரத்தில் இருக்கும் பெண்கள் அரசு உயர் நிலைப் பள்ளியில் இப்போது ஆசிரியையாக பணிபுரிகிறாள். இப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தாள். அவள் பி.எஸ்.ஸி., பி. எட், முடித்து, அரசு ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதி இருந்தாள். நான் அங்கே இங்கே ஆளைப் பிடித்து பணம் கொடுத்து அவளுக்கு அரசாங்க வேலை வாங்கிக்கொடுத்திருக்கிறேன்.

Next page: Chapter 02