Chapter 104
மறுநாள் -
நிஷா, மார்பில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அடக்கமாக இறங்கி வர, அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்த இவன், அம்மா... நிஷாவுக்கு சுத்திப் போடும்மா... என்றான்.
இனிமேல் அடிக்கடி நிஷாவுக்கு சுத்திப்போடவேண்டும் என்று அவன் ஆர்டர் போட்டிருந்தான். ஷேவ் பண்ணியிருந்தான். அவள், புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டு, அத்தையின்முன் நின்றாள். கதிர், உச்சி முதல் உள்ளங்கால்வரை... அவளை ரசித்துப்பார்த்துக்கொண்டு நின்றான். அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும், தாங்கு தாங்கு என்று தாங்கவேண்டும் என்பது எல்லாம் எத்தனை வருட ஆசைகள்! எல்லாம் நிறைவேறப்போகிறது.
உன்ன கொண்டுபோய் விடுறதுக்கு கார் வாங்கப்போறானாம். இதுக்கு முன்னாடி கார் வாங்கச்சொன்னதுக்கு போய் டிராக்டரை வாங்கிட்டு வந்து நின்னான்
லஷ்மி பொய்யான கோபத்தோடு சொல்ல, நிஷா அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே அத்தையிடம் சொன்னாள்.
நான் கார்ல போய்ட்டு வந்தேன்னா ஸ்டூடண்ட்ஸ், ஊர்க்காரங்க.. எல்லாரையும் விட்டு விலகி.. தனிச்சு நிக்குறமாதிரி தெரியும். அதனால்தான் அப்பாகிட்ட கார் வேணாம்னு சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாள் போகட்டுமே அத்தை... என்றாள்.
நான் சொன்னா அவன் எங்க கேட்பான். நீயே சொல்லிடும்மா
அவள் லேசாக சிரித்துக்கொண்டே வந்து பைக்கில் உட்கார்ந்தாள். எப்போதும் தோளில் கைவைத்துப் பிடிக்கும் அவள், அவன் வயிற்றில் கைவைத்து இடுப்போடு அணைத்துப் பிடித்துக்கொண்டாள். சிறிதும் தொப்பையில்லாத... அவனது ஒட்டிய வயிறை அவளால் உணர முடிந்தது. ஷேவ் பண்ணியிருந்ததால் அவனது மீசை ஷார்ப்பாக எடுப்பாக தெரிந்தது.
அழகா இருக்கீங்க! என்றாள்.
அந்த பைக், இதுவரை போகாத ஸ்பீடைத் தொட்டது.
கதிர், தன் மனைவியை ட்ராப் பண்ணுவதாகத்தான் உணர்ந்தான்.
ஸ்கூலில் இறங்கும்போது, இருவர் கண்களும் காதலோடு தழுவி மீண்டன. நான் கேட்டது என்னாச்சு? என்றான். அவள் அவன் கையில் தனது அளவு ப்ளவுஸை திணித்தாள்.
உங்களுக்கு பொறுமையே இல்ல....! என்று பொய்யான கோபத்தோடு சொல்லிவிட்டு, அழகு தேவதையாக ஸ்கூலுக்குள் நடந்துபோனாள்.
கதிர் அவளது அளவு ப்ளவுஸோடு.. வண்டியை மதுரைக்கு விட்டான். டீன் ஏஜ் வயதில்... பட்டுப்பாவாடை சட்டை.யிலும்... சில நாட்களில் பாவாடை தாவணியிலும்... அவனை ஏங்கவைத்து தூங்கவிடாமல் செய்த நிஷாவின் அளவு ப்ளவுஸோடு.... அவன் பறந்துகொண்டிருந்தான்.
ஈவினிங் -
அவள் தன் ரூமுக்குள் நுழைந்தபோது, புடவைகள், சுடிதார்கள், நைட்டிகள் சகிதம்... பாவாடை சட்டைகளும், தாவணிகளும் அவளது பெட்டில் இருந்தன.
நிஷா அவற்றைப் பார்த்து முகம் மலர்ந்தாள். மனதுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சி. கதிர் முதன் முதலில் தனக்கு துணி எடுத்துக் கொடுத்திருக்கிறான். என் நினைப்பாகவே இருக்கிறான்.
முகம் கழுவிவிட்டு, தலையிழுத்து பொட்டு வைத்து லேசாக அலங்கரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். லேசான புன்முறுவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. சந்தோஷத்தோடு, ட்யூஷன் எடுக்க கீழே இறங்கி வந்தாள்.
கதிர் எப்போதுடா வருவான் அவனோடு பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருந்தது. மனம்விட்டு அவனோடு நிறைய பேசவேண்டும்போல் இருந்தது.
லக்ஷ்மி கொடுத்த காபி... இன்று சுவையாயிருந்தது. நீ சென்னைல இந்த காபிதான் குடிப்பியாமே... வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கான்... என்று லக்ஷ்மி சொல்ல... மனதுக்கு இதமாக.. சுகமாக இருந்தது. ட்யூசன் எடுத்துக்கொண்டிருக்கும்போதே... அவன் வீட்டுக்குள் நுழைய, அவனைக் கண்டும் காணாததுபோல் பாடம் நடத்திக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் கண்கள் தானாகவே அவனைத் தேட.. அவன், வீட்டுக்குள் தூணில் சாய்ந்து நின்றுகொண்டு இவளையே ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
நாட்கள் இனிமையாய் கழிந்தன.
லக்ஷ்மிக்கு, இப்போது ரெஸ்ட் கிடைத்தது. சாப்பாடு பரிமாறுவதெல்லாம்.. நிஷாதான் பார்த்துக்கொண்டாள். அத்தை கஷ்டப்படுறாங்களே என்று மற்ற சிறு சிறு வேலைகளிலும் அவளுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.
அன்று இரவு -
அவன் வர லேட்டாகுதே.... என்னம்மா நீ சாப்பிட்டுட்டு படுக்குறியா?
அப்புறம் சாப்பிட்டுக்கறேன் அத்தை... அவர் வரட்டும்
லக்ஷ்மி லக்ஷ்மியாக இல்லை. ச்சே.. இந்தப் புள்ளையை பேசி முடிக்காம விட்டுட்டோமே
அத்தை படுக்கப்போய்விட... நிஷா காத்துக்கொண்டிருந்தாள். இன்று கதிர் வரும்போது அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தால் என்ன? என்று விரலைக் கடித்துக்கொண்டு... நாணத்தோடு யோசித்துக்கொண்டிருந்தாள்.
நிலவு வெளிச்சம் வீட்டு முற்றத்தை பகல்போல் காட்டிக்கொண்டிருந்தது.
கதிர், வாழைத்தாரோடு வீட்டுக்குள் வந்தான். அதை பக்குவமாக ஒரு ரூமில் நிமிர்ந்த நிலையில் வைத்துவிட்டு வெளியே வந்தபோது, நிஷா... பாவாடை சட்டையில் இறங்கி வந்துகொண்டிருந்தாள்.
கதிர், இன்ப அதிர்ச்சியில்... திக்குமுக்காடிப்போய் நின்றான். அவளையே... தன் அழகியையே... வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். நிஷாவோ, சாப்பிடுறீங்களா? என்று கேட்டுவிட்டு அவள்பாட்டுக்கு கிச்சனுக்குள் போனாள்.
கதிருக்கு, அளவில்லாத சந்தோஷமாக இருந்தது. டவலை காயப்போட்டுவிட்டு, வந்து உட்கார்ந்தான். எப்போதும் கனவில் வரும் நிஷா... அன்று நேரில் வர... கையும் ஓடாமல் காலும் ஓடாமல்... அவளை பித்துப்பிடித்தவன்போல் பார்த்து ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
ட்ரெஸ் நல்லாயிருக்கா? என்று அவளும் கேட்கவில்லை. நல்லாயிருக்கு என்று இவனும் சொல்லவில்லை.
நிஷா - அந்தப் பட்டுப் பாவாடை சட்டையில்.. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவனுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தாள். முலைகளின் வடிவமும் வனப்பும் தெரியாதவாறு முடியை இருபக்கமும் முன்னால் போட்டிருந்தாள். மிகவும் சின்னப் பெண்ணாக இருந்தாள். பளிச்சென்று... க்யூட்டாக இருந்தாள். இடுப்புவரை இருந்த அந்த டைட்டான பட்டு சட்டையில் அவளது மாங்கனிகள் இரண்டும் தூக்கிக்கொண்டு... அம்சமாகத் தெரிந்தன. அவளுக்கு தூக்கலான முலைகள் என்பதால் அவை சட்டையை இழுத்துக்கொண்டு... கவர்ச்சியாகத் தெரிந்தன. அவளது மெல்லிய செயின் அவளது க்ளீவேஜுக்குள் பதுங்கிக் கிடப்பது வேறு கூடுதல் அழகாக இருந்தது.
அவன் அவளை ஆஆவென்று தன்னை மறந்து ரசிப்பது அவளுக்கு உடலெங்கும் மயிலிறகால் வருடப்பட்டதுபோல் இருந்தது.
ப்ச். தட்டை பார்த்து சாப்பிடுங்க.
நீ சாப்டியா?
ம்..
அவன் திரும்பி அம்மாவின் அறையை நோக்கிப் பார்த்தான். கதவு சாத்தியிருந்தது.
ஆ காட்டு
எதுக்கு?
ம்... உனக்கு எத்தனை பல்லு இருக்குன்னு பார்க்க. நீ எவ்ளோ சாப்பிட்டிருப்பேன்னு தெரியாதா.
ம்ஹூம். அத்தை வந்தாலும் வருவாங்க
வந்தா நான் சமாளிச்சுக்கறேன். நீ ஆ காட்டு... - ஆசையாகக் கேட்டான். அவளைக் கைபிடித்து இழுத்து தன் மடியில் உட்காரவைத்தான்.
ஐயோ அத்தை பார்க்கப்போறாங்க....
அவங்க தூங்கட்டும்னுதானே லேட்டா வந்தேன்
அவளை நன்றாக இழுத்து மடியில் உட்காரவைத்துக்கொண்டான். நிஷாவுக்கு... அப்படி ஒரு அணைப்பு... இதம்.. தேவையாயிருந்தது. அவனது முரட்டுக்கை... அவளது முலைகளுக்கு கீழே... அவளை நன்றாகப் பற்றிப் பிடித்திருந்தது. அவனது கண்ணம்.. அவளது காது மடல்களை உரசிக்கொண்டிருந்தது. கோழிக்குஞ்சுபோல் அவளைப் பிடித்து வைத்திருந்தான்.
நிஷாவின் உடம்பெங்கும்... சுகமான இன்ப அலைகள் பரவி ஓடின. ஒவ்வொரு செல்களும் மலர்ந்தன.
சாப்பிட்டியா.... என்றான்.
ம்ஹூம்...
ஆ காட்டு
நிஷா நாணத்தோடு வாயைத் திறந்து காட்ட, அவன் அவளுக்கு ஊட்டிவிட்டான். மடியில் உட்காரவைத்துக்கொண்டு, திருட்டுத்தனமாக அவன் இப்படி ஊட்டிவிடுவது, அவளுக்கு சுகமாக இருந்தது.
காட்சி எப்படியெல்லாம் மாறிவிட்டது!
என்ன யோசிக்குற? - அவளது கீழுதட்டில் இருந்த ஒரு பருக்கையை விரல்களால் எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டே கேட்டான்.
இல்ல.... உன்னை கன்வின்ஸ் பண்ணி சிட்டிக்கு கூட்டிட்டு வரணுன்னு எனக்கு டாஸ்க் கொடுத்திருந்தாங்க. நீ என்னடான்னா....
கதிருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அடக்கமுடியாமல் சிரித்தான்.
நான் எவ்ளோ சீரியஸா சொல்றேன். இப்படி சிரிக்குறீங்களே
அவள் சிணுங்கிக்கொண்டே ஒழுங்கு காட்ட.... அவன் இடதுகையால் அவள் கண்ணத்தைப் பிடித்து இழுத்தான்.
ஸ்ஸ்ஸ்...ஆஆ....
சரியான திருட்டுக் கழுதைடி நீ. பெரிய ப்ளானோடதான் உள்ள வந்திருக்க
பிளானோடு வந்து என்ன செய்ய? உன்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டேன்.
எங்க? என்ன கன்வின்ஸ் பண்ணு! பார்ப்போம்
அவளது கீழுதட்டைப் பிடித்து அசைத்துக்கொண்டே குறும்பாக சொன்னான்.
உனக்கு விளையாட்டா இருக்கா? போ கதிர்
அவன் சிரித்தான். அவள் உதட்டோரம் ஒட்டியிருந்த பருக்கையைப் பார்த்தான். ஆசையோடு அவள் உதட்டோரம் தன் உதடுகளைப் பொருத்தி.... அந்தப் பருக்கையை தன் வாய்க்குள் எடுத்துக்கொண்டான்.
நிஷாவுக்கு வெட்கம் வந்தது. அவனை முறைத்தாள்.
வேஸ்ட் பண்ணக்கூடாதுல்ல
ம்க்கும்
அவள் அவனை ரசித்தாள். வாயை திறந்து காட்டினாள்.
எனக்காகத்தான் சாப்பிடாம இருந்தியா
ம்...
நாளைக்கே நான் சென்னை போறேன்
எதுக்கு?
என்னால முடியாதும்மா. உன்மேல பாய்ஞ்சிடுவேனோன்னு எனக்கே பயமா இருக்குது
நிஷாவுக்குப் பெருமிதமாக இருந்தது. அவனது தவிப்பு... பிடித்திருந்தது.
சாப்பிட்டு முடித்ததும்... தட்டில் கைகழுவினான். ஈரக்கையால் வாயைத் துடைத்தான்.
எதிர்பாராவிதமாக நிஷா தன் பாவாடையால் அவன் வாயைத் துடைக்க... கிறங்கினான்.
நிஷாவுக்கும் ஒருமாதிரியாகத்தான் இருந்தது. பாவாடை இழுபட்டிருந்ததால், தன் முழங்கால்கள் வரை அவனுக்குத் தெரிய.. இனம்புரியாத ஒரு கிளர்ச்சி. அவனைப் பார்க்க சிரமப்பட்டுக்கொண்டு.... கொலுசுவரை இழுத்துவிட்டாள்.
கதிருக்கு, அவள் உதடுகளைக் கவ்விக்கொள்ளவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தெழுந்தது. அதைவிட... அவள் உதடுகளை ரசித்துக்கொண்டேயிருக்கவேண்டும்போல் இருந்தது.
இதுக்கும் மேல இருந்தா கிறுக்காயிடுவோம் என்று... அவளைத் தூக்கிக்கொண்டான்.
நேரமாச்சு நிஷா. போய் படுத்துக்கோ
ம்ஹூம். எனக்கு உன்கூட பேசிக்கிட்டே இருக்கனும்போல இருக்கு கதிர்
எனக்கும்தான் நிஷா
நிஷா அவனைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டியணைத்துக்கொண்டாள். அவனுக்கு முத்தம் கொடுக்கவேண்டும்போல் உதடுகள் துடித்தன.
அவன், கிணற்ற்றுக்குப் பின்புறம்... அவளை உட்காரவைத்தான். மண்தரையில்.. அவள் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்துகொள்ள, அவன் அவளை உரசிக்கொண்டு, நெருக்கி உட்கார்ந்துகொண்டான். சட்டென்று அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.
நிஷா அவனைப் பொய்யாக முறைத்தாள். இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா பொறுக்கி
இல்ல. இதுக்கும்தான்... என்று அவள் இடுப்பில் கைவைத்து அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டான். நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அப்படியே... சின்னப்பொண்ணு மாதிரியே இருக்குற நிஷா
அவள் பதில் பேசாமல்... அவன் சட்டையை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டிருந்தாள். கேசுவலாக அவன் தன் இடுப்பு வளைவில் கைவைத்து அழுத்திப் பிடித்திருப்பது அவளை என்னவோ செய்தது.
எதுக்காக என்ன பாவாடை சட்டை போடச்சொன்ன கதிர்?
கண்டிப்பா சொல்லனுமா?
சொல்லு... - அவள் கிறக்கமாக கேட்டாள்.
நீ காலேஜ் சேர்ந்த புதுசுல... ஒரு தடவை இங்க வந்திருந்தீங்க அப்போ ஒருநாள் இந்த மாதிரி ஒரு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு வந்திருந்தே ஞாபகம் இருக்கா?
ம்ஹூம். சுத்தமா ஞாபகம் இல்ல
ஏய்.. நீ கூட மரத்துல இருந்த தேன் கூட்டை ஆச்சரியமா பார்த்துட்டிருந்தியே.. இது வேணும் வேணும்னு ஆசைப்பட்டியே... நான் தேன் எடுக்கும்போது, தேனீ விரட்டுதுன்னு பயந்துபோய் என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டியே...
நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சி சட்டென்று கண்முன் வந்து நின்றது. உண்மைதான். பட்.. ட்ரெஸ்.... ஞாபகத்துக்கு வரவில்லை
ஆமா... ஞாபகம் இருக்கு. அப்போ நான் இந்த ட்ரெஸ்ஸா போட்டிருந்தேன்?
Same dress தான். Same கலர். சைஸ் மட்டும் சின்னது.
சும்மா சொல்லாத. அப்போ என்கிட்ட இந்த கலரே இல்ல
இருந்தது. எனக்கு நல்லா தெரியும்.
நிஷா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?
ஏன்னா அந்த ட்ரெஸ்ஸே இப்போ என்கிட்டதானே இருக்கு
என்னது? உன்கிட்டயா?
ஊருக்குப் போகும்போது நீ விட்டுட்டுப் போயிட்ட. அன்னைலேர்ந்து உன்னோட அந்த ட்ரெஸ் என் பெட்டிக்குள்ளதான் இருக்கு. யாருக்கும் தெரியாது.
நிஷாவுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனது நனைந்து.. கண்களில் கண்ணீர் முட்டுவதுபோல் இருந்தது.
எ.. என்ன கதிர் சொல்ற?
இரு. வரேன்.... எடுத்துட்டு வரேன்... என்று எழுந்து போனான். அயர்ன் பண்ணி.. மடித்து வைக்கப்பட்டிருந்த அவளது டீன் ஏஜ் பருவ பாவாடை சட்டையை... கொண்டுவந்து அவள் கையில் கொடுத்தான்.
நிஷா... கண்கள் விரிய அந்த ட்ரெஸ்ஸை கைகளில் வைத்து விரித்து விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடகடவென்று அந்தக் காட்சி... நேற்று நடந்ததுபோல் கண்முன் வந்து நின்றது.
குளமான கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
என்னாச்சு நிஷா?
ஒ... ஒண்ணுமில்ல கதிர் - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும் சொல்லமாட்டேன்
அவள், பதில் பேசாமல், அந்தத் துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.