Chapter 160


மாதங்கள் கடகடவென்று ஓடிக்கொண்டிருந்தன. மோகன், பத்மாவை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னொருபுறம், அபர்ணாவை கோவிலில் சந்தித்து, அவள் காலில் விழுந்தார்.

என்ன மன்னிச்சுடு அபர்ணா..... நான் உன்ன ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். உன்னை குழந்தையோடு தனியா தவிக்கவிட்டுட்டேன். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிடு அபர்ணா என்று கண்கலங்கி அழுதார்.

அபர்ணாவோ, அவரிடம் பேச விருப்பம் இல்லாதவளாய், துக்கம் தொண்டையை அடைக்க, அவரை அலட்சியம் செய்துவிட்டுப் போய்விட்டாள். மோகன், தன் ஈகோவையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அவள் போகும் இடங்களிலெல்லாம் அவளுக்காக காத்துக்கிடந்தார். மன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ஒருகட்டத்தில், மனமிரங்கி, அபர்ணா தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்து அவர் முன்னால் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்க, மோகன் அவளை அணைத்துக்கொண்டார். நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அபர்ணாவுக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் இருந்தது. வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதுபோல் இருந்தது. தனக்கு யாருமே இல்லையே என்கிற வேதனை மறைந்தது. அவரை ஏற்றுக்கொண்டாள்.

சீக்கிரமே உன்னை ஊரறிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் என்றார். காயத்ரியிடம் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் அதுவரைக்கும் அவளுக்கு தெரியவேண்டாம் என்றாள் இவள்.

எனக்கு உடனே என் மகளை பார்க்கணும் அபர்ணா

இல்ல மோகன் உங்க குடும்பத்துக்குள்ள குழப்பம் வேண்டாம். நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். அவளுக்கும் தெரியவேணாம்.

நோ நோ... நான் சீக்கிரமே பத்மாவை சமாதானப்படுத்துறேன் என்றார் அவர்.

நாட்கள் இப்படியே ஓடின.

ஒருவழியாக பத்மா சமாதானம் ஆகி, அபர்ணா, மோகனின் வீட்டுக்கு வந்தாள். அபர்ணாவும் மோகனும் சேர்ந்து போன் செய்ய...... காயத்ரி, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அபர்ணா அவளிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி அழ...... அவளுக்கு நம்பவே முடியவில்லை.

என் உயிர்த் தோழி நிஷா என்னுடைய அக்காவா?

காயத்ரிக்கு, சந்தோஷத்தில், கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றியது. நான் கர்ப்பமா இருக்கிறேன்ப்பா.. என்று சொன்னாள். .

இங்க வாங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நான் உங்களை உடனே பார்க்கணும். உடனே பார்க்கணும்....

மோகன் பாசத்தில் உருக, சீனுவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். தலை சுற்றியது. என்ன நடக்கிறது என் வாழ்க்கையில்? மோகன், என்னுடைய மாமனாரா?? நிஷா என்னுடைய மச்சினியா?

அடிப்பாவி அத்தை! உன்னை சாதாரணமா நெனச்சேனே. பெரிய ஆளா இருந்திருக்கியே. உன்னால நான் நினைக்க முடியாததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குதே

உன் அம்மா சாதாரண ஆள் இல்லைடி! என்றான் காயத்ரியிடம்.

என்னால நம்பவே முடியலைங்க

எனக்கும்தாண்டி. நிஷா எனக்கு இவ்வளவு க்ளோஸா வருவான்னு நான் நெனச்சே பார்க்கல.

அவனுக்கு அந்த hangover-லிருந்து வெளி வருவதற்கே ஒரு வாரம் ஆனது. அதற்கப்புறம்தான் அவன் தலைசுற்றல் நின்றது.

எஸ். மோகன் என்னுடைய மாமனார். ராஜ் என்னுடைய மச்சான். நிஷா என்னுடைய மதினி. எனக்கு நெருங்கிய சொந்தக்காரி. என் மனைவி காயத்ரியின்... அழகு அக்கா.

அவன் அதற்கு பிறகுதான் நிஷாவின் குடும்பத்துக்குள் ஒருவனாக தன்னை உணர ஆரம்பித்தான்.

என்னை ராசியில்லாதவ-ன்னு சொன்னான்ல மகேஷ், அவனுக்கு இந்த விஷயம் தெரியணும்ங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவனுக்கு

காயத்ரி என்னால நம்பவே முடியலடி

எனக்கும்தாங்க. நிஷா என்னோட அக்கா. ஐயோ என் அக்காவா நிஷா?

எனக்கு உடனே அப்பாவை பார்க்கணும்ங்க. அம்மா அவர்கூட மொத்தமா சந்தோஷமா நிக்குறதை பார்க்கணும். நிஷாவை பார்க்கணும்.

சீனுவும் காயத்ரியும் கிளம்பி வர, அவர்களுக்கு சரியான வரவேற்பு. என்னை மன்னிச்சிடுங்க மாமா இனிமே எந்த தப்பும் மண்ணமாட்டேன்... என்று மோகனின் காலில் விழுந்தான் சீனு.

நல்லதுப்பா. நல்லதுப்பா.

நீங்க ஆசைப்படுற மாதிரி உங்க பொண்ணு காயத்ரியை நல்லா பார்த்துப்பேன். என்றான்.

அடுத்ததாக ராஜ்ஜிடமும் அவன் மன்னிப்பு கேட்க... ராஜ் அவனிடம் பேருக்கு கைகொடுத்தான். இனிமேல் காமினியை இவன்கிட்ட இருந்து காப்பாத்தணுமா? இப்போதான் மலரை டேனியல் கிட்டயிருந்து காப்பாற்றினேன்!.

காமினி சீனுவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

இவன் எனக்கு தம்பி முறையா...? விளங்கும்

சீனுவும் காமினியும் கைகொடுத்துக்கொண்டார்கள். அப்பாவுக்காக... ராஜ் சீனுவை ஏற்றுக்கொண்டான். அவனோடு சகஜமாக பேசினான்.

எனக்கு சொத்து சுகம் பணம் எதுவும் வேண்டாம். இப்போ என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. நானே சொந்தமா ஒரு தொழில் தொடங்கிக்கொள்கிறேன் என்றான் சீனு.

அவனை சோதிப்பதற்காக, சரி என்றுவிட்டார் மோகன்.

சீனுவும் காயத்ரியும் கடகடவென்று வீட்டு வேலைகளை முடித்தார்கள். சீனு, ராஜ்ஜிடம் ஒரு உதவி செய்யமுடியுமா ஸார்? என்றான்.

என்ன சீனு?

ஒருத்தன் காயத்ரிகிட்ட வம்பு பண்ணினான். அவனை நாலு போடு போட்டாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.

அவன் ஷர்மாவையும் ஆட்களையும் அனுப்பி வைக்க, சீனு, மேஸ்திரியை ஆசை தீர போட்டு அடித்தான். இனிமே காயத்ரி லைன்லேயே நீ குறுக்கே வரக்கூடாது என்றான்.

சில நாட்களில் - நிஷாவின் மூத்த மகள் ரூபாவுக்கு காது குத்து விழா வர, நம் குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்றார் மோகன்.

நான் எதுக்கு? அது கதிருக்கும் நிஷாவுக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்றான் இவன். இதை காயத்ரி, மோகனிடம் சொல்ல, அவரோ, நோ நோ... நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும் என்றுவிட்டார். வேறு வழியில்லாமல், அனைவரும், குடும்பமாக கிராமத்துக்கு போனார்கள்.

அங்கே கதிருக்கு பெரிய பிரச்சினை காத்திருந்தது. விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருந்த தரகர் ஒருவன், கொள்முதல் வியாபாரி, கதிரின் மேல் வெறுப்பில் இருந்தான். கதிர் இருக்கும்வரை தனக்கு பிரச்சினைதான் என்று அவனை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தன் தம்பி திருவுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டினான்.

கதிர் மேல போலீசுக்கும் வெறுப்பு இருக்கு. அவனை செஞ்சிடுவோம் என்றான் திரு.

காதுகுத்து விழாவில், சீனு, யாரிடமும் ஒட்டாமல் தனித்தே நின்றான். அவனால் அவர்களோடு mingle ஆக முடியவில்லை. நிஷாவும் அவனிடம் ஆஹா ஓஹோவென்று பேசவில்லை. பங்க்சனுக்கு அவன் வந்ததுக்கு நன்றி சொன்னாள். பின், கதிர் மனசை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று, அவனிடம் லிமிட்டாகவே பேசிக்கொண்டிருந்தாள். கதிரும் அவனோடு கடமைக்கு பேசிக்கொண்டிருந்தான்.

பங்க்சன் முடிந்ததும், காயத்ரி நாம கிளம்புவோமா? என்றான்.

என்னங்க ஆச்சு? ஏன் அதுக்குள்ள?

இல்ல. கதிரை என்னால face பண்ண முடியல.

இருங்க. கதிர் கிட்ட நான் பேசுறேன். உங்க சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன். அவர் நல்ல டைப்! என்றாள் காயத்ரி.

அன்று இரவு - திருவின் அண்ணனிடமிருந்து (தரகரிடமிருந்து) இருந்து போன் வர, கதிர் போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வெளியே.. இருட்டில் பின்புறம் போக... காயத்ரி, கதிரிடம் தனியாக பேசுவதற்காக சீனுவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவன் போன் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். அப்போது எதிர்பாராவிதமாக திருவும் அவன் அண்ணனும் கதிரை தாக்க.... காயத்ரி அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

சீனு செய்வதறியாமல் தவித்து, நடுங்கிப்போய் நின்றான். சுதாரித்து, கதிரை காப்பாற்றுவதற்காக அவனிடம் ஓடினான். திருவை பிடித்துத் தள்ளினான். இதற்குள், திரு, அவன் அண்ணன், இருவருமே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்கள்.

வீட்டிலுள்ள அனைவரும் ஓடிவரும்போது, கொலை செய்ய வந்தவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, வேகம் வேகமாக அவர்களை தூக்கிக்கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள்.

அவர்கள் பிழைத்துக்கொண்டார்கள். ஆனால் கதிர் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுக்க, போலீஸ் கதிரை தேடி வந்தது.

நான் ஜெயிலுக்கு போறதுல எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. நான் போறேன். அவனுங்களை கொல்லாம விட்டுட்டேனே... என்றான் கதிர்.

நிஷா அழுதுகொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஐயோ கதிர் என் கண்ணால உங்களை எப்படி நான் ஜெயில்ல பார்ப்பேன்.....??

ஐயோ அவரு சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருந்தாரே இனிமே அதுல சேரவே முடியாம போயிடுமே

நிஷா ஓவென்று அவனை நினைத்து அழ, அனைவருமே நிலைகுலைந்து போய்விட்டார்கள். சந்தோஷமாக பங்க்சன் முடிந்த நிலையில்.. கதிரின் நிலைமை.. நிஷாவின் அழுகை... மோகனை சோகமாக்கியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

நிஷா அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, கண்கலங்கி நின்றான். அவள், தன் இடுப்பு செயினை கழட்டி தன் முகத்தில் விட்டெறிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே உட்கார்ந்த காட்சிதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னால்... தேவதை போல் வலம் வந்துகொண்டிருந்த நிஷா, இப்போது.. இப்படி...

அன்று நான் பிரச்சினைக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். நிஷாவை கவனித்துக்கொள்ளவில்லை. இப்போது.. அதே மாதிரி நிஷா அழுதுகொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜ்ஜை தனியாக கூட்டிக்கொண்டு போனான். இறுகிய முகத்தோடு சொன்னான். இந்த பழியை நான் ஏத்துக்கிடுறேன். கதிருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்.

ராஜ்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தடுமாறினான். நீ இரு சீனு. நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்றேன் என்றான். ஆனால் ஷர்மாவும் சரி, வேறு யாரும் சரி, பழியை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. தவிர, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் இருந்திருக்கவில்லை. ஹாஸ்பிடலில் கிடக்கும் திருவும் அவன் அண்ணனும் இதை ஈசியாக பொய்யென்று நிரூபித்து விடுவார்கள். கதிரை பழி வாங்குவார்கள்.

ராஜ் போய் மோகனிடம் சொல்ல, அவர், காயத்ரியின் வாழ்க்கை? என்றார்.

தப்பு அந்த வியாபாரி மேலதான். சீக்கிரம் சீனுவை வெளியே எடுத்துடலாம் என்றான்.

தீபா, காமினி, வினய், மலர் என்று அனைவரும் எது சரி என்ன செய்யலாம் என்று அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் பேச,

நிஷாவும் கதிரும், வேணாம், சீனு ஜெயிலுக்கு போகவேணாம் என்றார்கள். போலீஸ் விலங்கோடு வந்து நின்றார்கள்.

ராஜ் நிஷாவை சமாதானப்படுத்தினான். கதிர் உன்கூட இருக்கணும் நிஷா. I cannot allow Kadhir to go Jail.

கதிர் ஒத்துக்கொள்ளவில்லை. இல்ல ராஜ். இது அநியாயம். நான்தான் தண்டனை அனுபவிக்கணும்.

கதிர் ப்ளீஸ்.... உன்ன பெரிய பதவில வச்சி பாக்கணும்கிறது நிஷாவோட கனவு. உணர்ச்சிவசப்படாதே.

அவன் கதிரை பிடித்துக்கொள்ள... காயத்ரி, அழுதபடியே நிஷாவை பார்த்துக்கொண்டு நிற்க, சீனு, நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியிடம், நிஷாவை பார்த்துக்கோ காயு.... என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறினான்.

கதிரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நோ... நோ... இது தப்பு... என்றான். மோகன் எழுந்து வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டார். நிஷா என்கிட்ட அடிக்கடி சொல்லுவா மாப்பிள்ளை. கண்ணன் அளவுக்கு உங்களை பெரிய ஆளா ஆக்கணும்னு. அவ ஆசையை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்....

அவர் திரும்பி காயத்ரியை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் தட்டினார். காயத்ரி... நாங்க சீக்கிரமே சீனுவை வெளிய கொண்டு வந்துடுவோம். நீ கவலைப்படாதேம்மா.

காயத்ரி, கண்ணீரோடு அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

அந்த இருட்டில்... கதிரை காப்பாற்றுவதற்காக, நான்தான் அவர்களை குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்தான் சீனு.

நாட்கள் கடகடவென்று ஓடின. நிஷா, எவ்வளவுதான் சந்தோஷமாக, நார்மலாக இருக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை.

ஏன் சீனு இப்படி பண்ண???

ஜெயிலில் அவன் எவ்வளவு கஷ்டப்படுவானோ என்று அவள் அவனை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள், கதிர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு கேட்டான்.

என்னாச்சு நிஷா? உன் முகத்துல நிம்மதியே இல்லையே. உன் முகத்துல சிரிப்பே இல்லையே.

அவள், கண் கலங்கியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

ஸாரிங்க... என்னால சீனுவை நினைக்காம இருக்க முடியல. என்ன மன்னிச்சிடுங்க கதிர்

இட்ஸ் ஓகே நிஷா. இட்ஸ் ஓகே... இங்க பாரு... நான் உன்ன தப்பாவே எடுத்துக்க மாட்டேன்.

என்னங்க.. எனக்காக....

அவள் சொல்லுவதற்கு தயங்க... கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டான். உன்கூட இவ்வளவு நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கேன். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதா?

நிஷா பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே சொன்னான்.

வா. ரெண்டு பேரும் போய் சீனுவை பார்த்துவிட்டு வரலாம்.

அவன் சொன்னதும், அதை எதிர்பார்க்காத நிஷாவின் முகத்தில்... பல நாட்களுக்கு பிறகு சிரிப்பு அரும்பியது.

கதிரோடு போனாள். மறுபடியும் தாடியோடு அவனைப் பார்த்து.... மனம் கலங்கினாள்.

ஏன் சீனு இப்படி பண்ண?

ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சீனுவின் கைகளை ஆறுதலாக பற்றி பிடித்துக்கொண்டே நிஷா கேட்க, அவன், கதிர் முன்னால் அவளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி, தலையை குனிந்துகொண்டான்.

நிஷா, தன்னருகில் நின்ற கதிரைப் பார்த்தாள். பின் சீனுவிடம் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.

காயத்ரியைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா சீனு?

அவளை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே நிஷா

அவன் சட்டென்று சொல்ல... நிஷாவின் கண்ணீர் துளிகள் அவளையும் அறியாமல் சீனுவின் கைகளில் விழுந்தன.

அதன்பிறகு, நிஷா நார்மலாக தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். கதிருக்கு நிம்மதியாக இருந்தது.

அவன், சீனுவும் காயத்ரியும் மாறி மாறி தன்னிடம் பழைய நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கேட்டதை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ராஜ்க்கு போன் பண்ணினான்.

காயத்ரிக்கு டெலிவரி டேட் நெருங்கிட்டு இருக்கு ராஜ். அதுக்குள்ளே சீனுவை வெளியே கொண்டுவந்துட முடியுமா?

நீ கவலைப்படாதே மாப்ள. காயத்ரிக்கு குழந்தை பிறக்கும்போது நாம எல்லோருமே மொத்தமா சேர்ந்து இருக்கப்போறோம்.

தேங்க்ஸ் ராஜ்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நிஷா, தன் கணவனையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

தேங்க்ஸ் கதிர்! என்று அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

கதிருக்கு.... நடப்பது அனைத்தையும் பார்த்து வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் - கதிர் வயலிலிருந்து வரும்போது, வாசலில் தீபாவின் கார் நின்றுகொண்டிருந்தது.

தீபாவை நினைத்ததுமே அவனுக்கு... மனதுக்குள் சில்லென்று இருந்தது. தீபா அவனோடு ஜாலியாக விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவளிடத்தில் இருக்கும் பிரச்சினை எல்லை தாண்டி போவதுதான். அவள் எப்படி இருந்தாலும், நாம லிமிட் தாண்டி போய்விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். நிஷா மட்டும்தான் எனக்கு! என்கிற முடிவோடு இருந்தான். இதனாலேயே காயத்ரியை இழுத்துப் போட்டு ஓக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும்... வேணாம் என்று விட்டுவிட்டான்.

இவன் வீட்டுக்குள் நுழைந்ததும், மேல் ரூமிலிருந்து நிஷா எட்டிப்பார்க்க, பின்னாலேயே தீபா வந்தாள். இவனைப்பார்த்து கைகாட்டினாள்.

ஹாய் தீபா எப்போ வந்தே?

இப்போதான். ஆக்சுவலி... நானே தோட்டத்துக்கு வரலாம்னு நெனச்சேன்

கண்ணாடிலாம் போட்டு பெரிய சயன்டிஸ்ட் மாதிரி இருக்கியே

அவன் சொல்லிக்கொண்டே கிணற்றருகே போக, தீபா ஸ்டைலாக தன் கண்ணாடியை கொஞ்சம் ஏற்றி இறக்கினாள்.

கிணற்றடியில் வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவன் முகத்தையும் கால்களையும் கழுவ.. நிஷா டவலை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள்.

அவளுக்கு நீங்க ஒருதடவை கூட தோட்டத்தை சுத்திக் காட்டலையாம்

இவளைக் கூட்டிட்டு தோட்டத்துக்கா? ம்ஹூம்....

ஏன்? என்னைக் கூட்டிட்டுப் போனா என்னவாம்?

முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு கேட்டாள் தீபா. அவன் எதுவும் சொல்லாமல் முகத்தைத் துடைத்தான்.

அவளை ஒருநாள் கூட்டிட்டுத்தான் போங்களேன்... என்றுவிட்டு, அத்தையோடு சேர்ந்து சமைக்கப் போனாள் நிஷா. கதிர், படியேறி தங்கள் ரூமுக்குள் நுழைந்தான். தீபா, அவன் பின்னாலேயே வந்தாள்.

ஏய்.. கீழ இரு. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்

பண்ணுங்க. யாரு வேணாம்னு சொன்னா?

சொல்லிக்கொண்டே அவள் ஹாயாக இவர்களின் கட்டிலில் படுத்துக்கொள்ள, கதிர் அவளை முறைத்தான்.

நான் உங்க கொழுந்தியாதான்.... கூச்சப்படாம ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிக்கோங்க

விலையுயர்ந்த ஸ்கர்ட் மற்றும் டாப்ஸில் இருந்த அவள், இப்போது நகர்ந்து headboard-ல் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, காலை ஆட்டிக்கொண்டே சொல்ல, கதிர் தன் துணிகளை எடுத்துக்கொண்டு பாத் ரூமுக்குள் போனான். குளிக்க ஆரம்பித்தான்.

சட்டையை மாற்றத்தான் போயிருக்கிறான், வந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்த தீபா, அவன் இன்னும் வராததால் பொறுமையிழந்து எழுந்தாள். போய் கதவை தட்டினாள்.

என்ன? என்றான் அவன் உள்ளேயிருந்து.

கதவை திறங்க

நீ கீழ போ

அக்கா உங்ககிட்டே இதை கொடுக்கச்சொன்னாங்க.

எதை?

அட, கதவை திறங்க

அவன் மெல்ல கதவை திறக்க, இவள் இதுதான் சமயம் என்று உள்ளே நுழைந்துவிட்டாள். ஈரமாக, வெறும் டவலோடு நின்றுகொண்டிருந்த கதிர், ஏய்ய்... என்று பதற, அவள் சட்டென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

தீபா ஏய் என்ன பண்ற?

உங்களுக்காக எவ்ளோ தூரம் வந்திருக்கேன் தெரியுமா?

சொல்லிக்கொண்டே தன் முலைகளை நன்றாக அவன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

தீபா தீபா ஏய்.. என்ன இது?

அவள், நச்சென்று அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவனிடமிருந்து விலகினாள். டவலை உறுதியாக பிடித்துக்கொண்டு நின்ற அவனது கரடு முரடான தேகத்தை... அரை நிர்வாண கோலத்தை.... ரசித்துப் பார்த்தாள்.

ஏன் பதறுறீங்க? உங்களை நான் ஒண்ணும் கற்பழிச்சிட மாட்டேன்

சொல்லிக்கொண்டே அவள் அவனது நெஞ்சில் கைவைத்து ஒரு தடவு தடவிவிட்டு வெளியே போக... கதிர், ஆரம்பிச்சிட்டாடா என்று முமுணுத்தான். குளித்து முடித்து, ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிவிட்டு, வெளியே வந்தான். அவள் இப்போதும் அவனைப் பார்த்தவாறு கட்டிலில்தான் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

அவளது brown கலர் டாப்ஸில்... அவளது இரண்டு முலைகளுக்கு மேலும் துணி நனைந்திருப்பது தெள்ளத் தெளிவாக இரண்டு வட்டமாகத் தெரிந்தது. அவளது முலையழகு அவன் கண்ணைப் பறித்தது.

அவள், நனைந்திருந்த தன் முலைகளை அவனிடம் விரல் வைத்துக் காட்டிக்கொண்டே சொன்னாள்.

அக்காவை கூப்பிடட்டுமா?

கதிர் பதறிக்கொண்டு அவளிடம் ஓடி வந்தான். தீபா ப்ளீஸ்... ஏன் என்னை மாட்டிவிடப் பார்க்குற? சீக்கிரமா வேற டிரஸ் போட்டுக்கோ ப்ளீஸ்

அப்போ எனக்கு முத்தம் கொடு

கதிர், பெருமூச்சு விட்டுக்கொண்டே அவளருகில் உட்கார்ந்தான். அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.

தீபா நீ நல்ல பொண்ணுல்ல... ஏன் இப்படிலாம் பண்ற?

அவள் பதில் பேசாமல் அவனை பாவமாகப் பார்த்தாள். என்னை உனக்குப் பிடிக்கலைல்ல? என்றாள்.

உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? ஆனா நீ பண்றதைத்தான் என்னால புரிஞ்சிக்க முடியல

தீபா, சட்டென்று அவனது கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டு அவனை அணைத்துக்கொண்டாள். அவன் காதுக்குக் கீழே.. முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

தீபா... தீபா... ஏய்..

அவன் தயக்கத்தோடு அவளது முதுகில் கைவைத்து தட்டிக்கொண்டே கேட்க, அவள் அவன் கழுத்திலிருந்து முகத்தை எடுத்து.. அவனைப் பார்த்தாள்.

ஏன்தான் இப்படி செய்றாளோ? என்று அவளைப் பார்த்த கதிர், திடுக்கிட்டான். தீபாவின் கண்களில்... கண்ணீர் கட்டியிருந்தது.

ஏய்... தீபா.... என்னாச்சு? ஏண்டா அழுற?

கதிர் பதறிக்கொண்டு கேட்க, அவள் தலையை குனிந்துகொண்டாள். கதிர் வேகம் வேகமாக அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். ப்ச்.. என்ன இதெல்லாம்? என்று பரிதவிப்போடு கேட்டான்.

நான் எவ்வளவு ஆசையா உன்கூட விளையாடுறேன். நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற

கதிருக்கு, அவள் வார்த்தைகள் உடம்புக்குள் சில்லென்று ஒரு சுகத்தை கொடுத்தது. ஆனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல், மெதுவாக அவளிடம் கேட்டான்.

தீபா நீ எவ்ளோ பெரிய ஆளு. எவ்ளோ பெரிய Business Woman . வினய்யோட பொண்டாட்டி. எவ்ளோ பெரிய பணக்காரி. இந்த... கிராமத்தான்கிட்ட... எனக்கு புரியலை தீபா. அப்படி என்ன இருக்கு என்கிட்ட?

எனக்கு உன்னத்தான் பிடிச்சிருக்கு

இங்க பாரு இப்படி லூசு மாதிரி பேசிட்டிருந்தா செவுட்டுலயே அறைஞ்சிடுவேன்

அவன் திடீரென்று கோபமாகப் பேச, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். மெதுவாக, அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்தாள்.

கதிர், கோபப்பட்டுவிட்டோமே என்று, கையைப் பிசைந்தான். பாவமாக உட்கார்ந்திருந்த அவளைப்பார்த்து இப்போது மெதுவாகவும் பரிவோடும் சொன்னான்.

தீபா நீ வினய்யோட மனைவி. பெரிய உயரத்துல... பேர், புகழ், பணம்னு இருக்கிறவ. நான் உன் அக்கா புருஷன். ஒன்னும் தெரியாத கிராமத்தான். நீ புரிஞ்சுதான் நடந்துக்கறியா?

நீங்க என் அக்கா புருஷன்ன்னு எனக்குத் தெரியாதா.....?

கதிர் பதில் பேசாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளது உதடுகள்... பளிச்சென்று இளமை கொப்பளிக்க செம அழகாக இருந்தன. அவள் அந்த ஆரஞ்சு உதடுகளை பிரித்து... ஆதங்கத்துடன் சொன்னாள்.

புரிஞ்சுதான் நடந்துக்கறேன். எனக்கு இப்போ என்ன வயசு? இருபத்து அஞ்சு கூட ஆகல. அதுக்குள்ள பேரு, புகழ், அந்தஸ்த்துன்னு ஒரு மாய உலகத்துக்குள்ள போயிட்டேன். எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல. இங்க எல்லாமே போலியாயிருக்கு. யாருமே உண்மையா இல்ல. எல்லார் பார்வையிலயும் Maths. எல்லார் பேச்சுலயும் maths. எல்லாருமே உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேசுறாங்க. எல்லாருமே machine மாதிரி, robot மாதிரி நடந்துக்கறாங்க. இவங்களோடதான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?

கதிர் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தான். இப்போதுதான் அவனுக்கு பழைய தீபாவை பார்த்ததுபோல் இருந்தது.

There is no fun in my life Kadhir! என்கூட விளையாட, என்னை சிரிக்க வைக்க, என்னை கொஞ்ச, இங்க யாருமே கிடையாது. முதல்லேயாவது ராஜ் இருந்தான். இப்போ அதுவும் போச்சு

வி.. வினய்...??

அவன் பக்கா பிசினஸ்மேன். அவனுக்கு என்னைக்கொண்டுபோய் ஷோ கேஸ் பொம்மை மாதிரி பெருமையா மத்தவங்க முன்னாடி நிறுத்தணும். அவ்வளவுதான்.

வினய் உன்ன நல்லா பார்த்துக்கணும்னுதான் நினைக்கிறான் தீபா

நல்லாத்தான் பார்த்துக்கறான். ஆனா அவனைப்பொறுத்தவரை பெண்களுக்கு வசதியையும், செக்ஸையும் கொடுத்துட்டா போதும். கொஞ்சம் சிரிச்சி பேசுனோம், ஜாலியா பேசுனோம்னு கிடையாது. அவன் பக்கா செல்பிஷ். எல்லாரும் அவனை நிமிர்ந்து பார்க்கணும். மதிப்பு மரியாதையோட வாழனும். அது போதும் அவனுக்கு.

உன்ன மாதிரி சின்னப்பொண்ணுங்களுக்கெல்லாம் நீ ரோல் மாடல் தெரியுமா நீயே இப்படி சொன்னா எப்படி?

நான் கேட்டேனா? அக்கா மாதிரி ஒரு வாழ்க்கையைத்தான் நான் எதிர்பார்த்தேன். அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படி என்னை தள்ளிவிட்டுட்டாங்க. நீங்க மட்டும் கம்பெனியை பார்த்துக்கறேன்னு வந்திருந்தா நானும் எல்லா பொண்ணுங்களும் மாதிரி சராசரி வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். ஜாலியா இருந்திருப்பேன்.

தீபா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

சொல்லிக்கொண்டே கதிர் ஆறுதலாக அவள் கையைத் தொட, நீங்க எதுவும் சொல்ல வேணாம்!! என்று அவன் கையை தட்டிவிட்டுவிட்டு எழுந்தாள்.

நான்தான் உங்களை கட்டிக்க வேண்டியது. அது ஞாபகம் இருக்குல்ல?

தீபா...

இனிமே நான் உங்ககூட பேசவே மாட்டேன்

தீபா விடுவிடுவென்று கீழே இறங்கி போய்விட்டாள். கதிர், நெற்றியில் கைவைத்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

கீழே வந்தான். மறுபடியும் வயலுக்கு கிளம்பினான்.

என்னங்க.. சாப்பிட்டுட்டுப் போங்க. அடியேய் தீபா நீயும் வாடி

தீபா, வேறு டாப்ஸ் போட்டுக்கொண்டு, வந்து உட்கார்ந்தாள். கதிர் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவனை பார்க்கவேயில்லை.

குழந்தையை தூக்கிட்டு வந்திருக்கவேண்டியதுதானே தீபா என்றபடியே தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள் லட்சுமி.

கதிருக்கு சாப்பாடு இறங்கவில்லை. நிஷாவுக்காக கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

என்னங்க ஆச்சு? சாப்பிடாம எழுந்துட்டீங்க?

பசிக்கல நிஷா

சொல்லிவிட்டு அவன் செருப்பை மாட்ட, நிஷா, தீபாவையும் கூட்டிட்டுப் போங்க.. என்றாள்.

நான் போகலை. - வெடுக்கென்று தீபாவிடமிருந்து பதில் வந்தது.

இவள் ஏன் இப்படி கோபப்படுகிறாள் என்று நிஷா திகைக்க, கதிர், எதுவும் பேசாமல், கிளம்பினான்

ஈவினிங்க் - திரும்பி வந்ததும் கேட்டான்.

தீபாவை எங்கே நிஷா?

அவ அத்தை கூட போயிருக்கா. கபடி போட்டி நடக்குதுல்ல. அதை பார்க்கணும்னு ஆசைப்பட்டா.

அப்பா?

லோடு அடிக்கிறவனை பார்க்கப் போயிருக்காரு.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லட்சுமி வந்து சேர்ந்தாள். எம்மாடி... உன் தங்கச்சி வரவே மாட்டேங்குறா. விசிலடிச்சிட்டு நிக்குறா. என்றாள்.

தீபாவை ஏன் அனுப்பி வச்ச? வினய் அவளை நம்மளை நம்பி அனுப்பி வச்சிருக்கான். ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது? - கோபமாகக் கேட்டான் கதிர்.

ஸாரிங்க. சொன்னா எங்க கேட்குறா. நீங்க போய் கூட்டிட்டு வந்திடுங்களேன்

கதிர் வேகம் வேகமாக கிளம்பிப் போனான். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊர் எல்லையில்... விளையாட்டுப் போட்டி. இவன் போனதுமே, அங்கே கைதட்டிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டு நின்ற தீபாவை பார்த்துவிட்டான். பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் போனான்.

இவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அவள் நின்றுகொண்டிருக்க, கதிர் அவள் கையைப் பிடித்தான்.

தீபா.. அக்கா உன்னை தேடிட்டிருக்கா. வா போகலாம்

நான் வரமாட்டேன். போ

அவள் தன்னை வா போ என்று பேச ஆசைப்படுகிறாள் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் கோபமாகக் கேட்டான்.

இப்போ வரப்போறியா இல்லையா?

ம்ஹூம். வரமாட்டேன்.

அவள் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொள்ள... அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். பின் மெதுவான குரலில் கெஞ்சினான்.

படுத்தாதடி... வாடி...

தீபாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. முகம் சிவந்தது.

உனக்குத்தான் என்மேல அக்கறையே இல்லையே. போ

ஆமா அக்கறை இல்லைதான். வா வீட்டுக்கு போகலாம்

நான் வரமாட்டே....

அவள் சொல்லி முடிப்பதற்குள் கதிர், அவளது மெல்லிய வளைந்த இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... என்று உதட்டை சுழித்துக்கொண்டு கத்தினாள். அவனை வியப்போடு... வெட்கத்தோடு பார்த்தாள்.

ஏய்.. தீபா

என்ன?

இருட்டுற நேரம். உனக்கு சேப்டி கிடையாது. நல்ல பிள்ளையா என்கூட வாயேன்

வாடி...ன்னு உரிமையா கூப்பிட்டாத்தான் வருவேன்

உன்ன....

சொல்லிக்கொண்டே கதிர் கையை நன்றாக உள்ளே விட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள.... ஹான்... என்று முனகிக்கொண்டு, சுகத்தில் துடித்துவிட்டாள் தீபா.

கைய எடுங்க... என்று மெதுவாக கெஞ்சினாள்.

அவனோ, அவளது தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்துக்கொண்டான். வா.. என்று கண்களால் கூப்பிட்டான்.

வரேன்... என்று தலை குனிந்தாள் தீபா.

அப்படி வா வழிக்கு... என்று நினைத்துக்கொண்டே, கதிர், அவள் கையைப்பிடித்து கூட்டத்துக்கு வெளியே அவளை கூட்டி வந்தான். அவள் பதில் பேசாமல், தலைகுனிந்தபடியே அவனுக்குப் பின்னால் நடந்துவந்தாள்.

அப்போது, நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன், தெனாவட்டாக தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொண்டிருக்க, கதிர்... கதிர்... என்றாள்.

என்ன?

அந்த நிக்குறான்ல? ஒரு முரடன். அவன் என்கிட்ட வம்பு பண்ணினான்.

இதைக்கேட்டதும் கதிர் சட்டென்று நின்றான். அவனா? என்ன பண்ணான்?

தப்பா பேசினான் கதிர்

கதிருக்கு நரம்புகள் முறுக்கேறின. ச்சே.. நெனச்சேன்.

என்ன சொன்னான்?

என்னை ஐட்டம்ன்னு சொன்னான். வரியான்னு கூப்பிட்டான் கதிர்!

அவள், பாவமாக.. இப்படி சொல்லி முடிப்பதற்குள் கதிர் வேகமாக ஓடிப்போய் அந்த முரடனை ஒரு மிதி மிதிக்க... அவன் இன்னொருவனை தள்ளிக்கொண்டு கீழே விழுந்தான்.

டேய்... என்று ஒவ்வொருவரும் கத்தினார்கள். கதிர், எதையும் கண்டுகொள்ளாமல் போய் அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

கதிரு... இப்போ எதுக்காக என்ன வந்து அடிக்கிற?

என் கொழுந்தியாள்கிட்ட என்னடா பேசுன?

தீபாவை காட்டி கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, அந்த முரடன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கீழே விழுந்தான். ஆஆஆ... என்று கத்தினான்.

கதிர் கதிர் என்னப்பா இது பேசி தீர்த்துக்கலாம்ப்பா

விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்போது இவர்களை நோக்கி ஓடிவர, தீபாவுக்கு தலை சுற்றியது. ஐயோ என்ன இது பெரிய சண்டையா ஆகிடுச்சே....

கூட்டத்துக்குள் நுழைந்து ஓடினாள். கதிர் கதிர் வா போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

விடு தீபா இவனை ஒரு வழி பண்ணிடுறேன். ராஸ்கல்.

கதிர் மறுபடியும் அவன்மேல் பாய, தீபா இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு அவர்களைப் பார்த்தாள். கதிரை... வியப்புடன் ரசித்துப் பார்த்தாள்.

கதிர் ப்ளீஸ் வா போயிடலாம்.....

அவள் உற்சாகமாக அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே கூட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி... அவளுக்குள் பரவி அவளை என்னென்னவோ செய்தது. தன்னை நினைத்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

தீபா அவன்.. ஏன் அதுக்குள்ள என்ன கூட்டிட்டு வந்த?

அவன் கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவளுக்கு, அவனை அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.

நான் சொன்னா கேட்கமாட்டீங்களா?

கேட்பேன்

போய் bike-ல உட்காருங்க

அவன், அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக பைக்கில் போய் உட்கார, தீபா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவனை நன்றாகப் பிடித்துக்கொண்டாள்.

பைக் அங்கிருந்து சீறிப் பறக்க.... தீபாவுக்கு சுகமாக இருந்தது. அப்படியே அவன் முதுகில் கண்ணத்தை வைத்துச் சாய்ந்துகொண்டாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், நிஷாவிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கடகடவென்று படியேறி மேலே போய்விட்டாள்.

என்னங்க ஆச்சு அவ ஒருமாதிரியா சோகமா மேலே போறா?

தீபா பாவம் நிஷா

என்னங்க ஆச்சு?

அவன், நடந்ததையெல்லாம் நிஷாவிடம் சொன்னான். அந்த காளிப்பயல் சொன்னதை நெனச்சி தீபா அழுதுக்கிட்டு கிடக்கப்போறா. போய் என்னன்னு பாரு... என்று நிஷாவை அனுப்பி வைத்தான்.

நிஷா, கலங்கிய கண்களுடன், தீபாவை, கவலைப்படாதே என்று என்று ஆறுதல் சொல்வதற்காக, படியேறி வந்தாள். கதவு பூட்டியிருந்தது.

என்னங்க என்னங்க... கதவு பூட்டியிருக்குங்க

நிஷா பயத்தில் கத்த... கதிர் அலறியடித்துக்கொண்டு ஓடினான். நிஷா நிஷா பயப்படாதே பயப்படாதே ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்று சொல்லிக்கொண்டே அந்த ரூமின் ஜன்னலை திறந்தான்.

உள்ளே - தீபாவின் மொபைலில் 'குட்டி பட்டாஸ்' பாட்டு சத்தமாக ஓடிக்கொண்டிருக்க..

ஸ்கர்ட்டை ஏத்திச் சொருகிக்கொண்டு, சந்தோஷமாக... கைகளையும் இடுப்பையும் படு ஸ்பீடாக ஆட்டி... அவள் செம குத்து குத்திக்கொண்டிருந்தாள்.
Next page: Chapter 161
Previous page: Chapter 159