Chapter 06
ஹே good morning சீனி,நேற்று promoter activity எப்படி போச்சு?promoter ஒழுங்கா வேலை செய்தானா?
எங்க வேலை செய்தான் ராஜா,அவன் சுத்த வேஸ்ட்.அவன் என்ன பண்ணான் தெரியுமா ?அவன் கிட்ட ஸ்டிக்கர்ஸ் கொடுத்துட்டு no parking போர்டில் பார்த்து ஒட்டு என்று சொல்லிட்டு போனேன்.ஒரே ஒரு appointment நான் போய் விட்டு வருவதற்குள் அவன் டீ கடையில் உட்கார்ந்து முட்டை போண்டா சாப்பிட்டுகிட்டு இருக்கான்.
"பசியா இருந்து இருக்கும்,சாப்பிட்டு கொண்டு இருந்து இருப்பான்."
"அப்படி தான் ராஜா நானும் நினைச்சேன்.என்னடா ஸ்டிக்கர்கள் எல்லாம் ஒட்டி ஆச்சா என்று கேட்டால் ஒட்டி ஆச்சு என்று சொல்றான்.வெறும் அரை மணி நேரத்தில் 500 ஸ்டிக்கர் எப்படி மச்சான் ஒட்ட முடியும்."
"கண்டிப்பாக ஒட்ட முடியாது.மிஞ்சி போனா நூறு ஸ்டிக்கர் ஒட்டலாம்."
ம் அது தான் ராஜா, எங்கடா ஒட்டிய ஸ்டிக்கர் காண்பி என்று கூட்டி போனால் நூறு ஸ்டிக்கர் கூட ஓட்டல.மிச்ச ஸ்டிக்கர் எங்கடா ஒட்டின என்று கேட்டால் பேந்த பேந்த முழிக்கிறான்.அப்புறம் முட்டை போண்டா எப்படிடா வந்துச்சி என்று கேட்ட பிறகு தான் உண்மையை சொல்றான். ஸ்டிக்கரை எடைக்கு போட்டு தான்,முட்டை போண்டா வாங்கினேன் என்று சொல்றான்.
"சும்மாவா விட்டே அவனை சீனி,complaint பண்ண வேண்டியது தானே"
அதற்கு வாசு,சீனி என்ன பண்ணான் என்று நான் சொல்றேன்.அவன்கிட்ட இருந்து முட்டை போண்டா பிடுங்கி இவன் தின்னு ஏப்பம் விட்டுட்டு,அது தான் உனக்கு தண்டனை என்று சொல்லி விரட்டி விட்டுட்டான்.
பதிலுக்கு சீனி"டேய் வாசு,என்னை நீ குறை சொல்றியா,போன வாரம் newspaper activity பண்ணப்போ, நியூஸ் பேப்பரை எடைக்கு போட்டு சரக்குக்கு காசு உஷார் பண்ணவன் தானே நீ!
ராஜா இருவரிடம் "உண்மையை சொல்றவங்க தெய்வத்திற்கு சமம் என்று பெரியவங்க சொல்லுவாங்க,ரெண்டு பேரும் இப்படியே மாறி மாறி போட்டு கொடுத்துக்கிறீங்களேடா .
என்ன பண்றது ராஜா,நீ target achieve பண்ணி incentive வாங்கிடுவே,ஆனா எங்க நிலைமை அப்படியா,நாங்க வாங்குற சம்பளம் அப்படியே பொண்டாட்டிகிட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. கைச்செலவுக்கு இந்த மாதிரி தானே கை வைக்க வேண்டி இருக்கு.சரி ராஜா எங்கே இன்னிக்கு ராஜேஷ் வரலையா?
இல்ல சீனி,அவன் இன்னிக்கு வீக் ஆஃப்,
அப்ப என்ஜாய் பண்ணட்டும்.டிஸ்டர்ப் பண்ண வேணாம்.ராஜா swiggy வருது.
என்னது swiggy யா ?
Food டெலிவரி மச்சான்.என்ன ரொம்ப லவ் பண்றளோ!
இல்ல மச்சான் கேட்டுட்டேன்,லவ் எல்லாம் கிடையாது என்று சொல்லிட்டா.சும்மா ஒரு அக்கறை தானாம்.அவ கொடுக்கிற சாப்பாட்டிற்கு அவளுக்கு பிடித்த கிஃப்ட்டா ஏதாவது வாங்கி கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்.
முருகேஷ் அண்ணன் வழக்கம் போல் வந்து கொடுத்து விட்டு போக சாயங்காலம் சஞ்சனாவும்,ராஜாவும் மீண்டும் சந்தித்தனர்.
சஞ்சனா இன்னிக்கு சப்பாத்தி சூப்பர்.அதுக்கு தக்காளி சட்னி வித்தியாசமான சுவையாக இருந்தது.இது வரை நான் அந்த மாதிரி சாப்பிட்டதே கிடையாது.
அது தக்காளி சட்னியில் கொஞ்சம் கடலை மாவு சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்.நான் எப்பவுமே அப்படி தான் செய்வேன்.
சூப்பர் சஞ்சனா,உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பாக குடுத்து வைச்சவன் தான்.
ராஜா,எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும்.இன்னிக்கு கொஞ்சம் என்னை அங்கே கூட்டி போக முடியுமா?
அவ்வளவு தானே,நீ எந்த பீச் மட்டும் சொல்லு,பெசன்ட் நகரா,இல்லை மெரினாவா?
மெரினாவே போலாம்.
முதல் முறை அவள் அவனோடு கை கோர்த்து கொண்டு மணலில் நடக்க,அவனுக்கு பூட்டி வைத்த உணர்வுகள் மேல் புதிய சிறகு முளைத்தது.
கடல் அலையை பார்த்ததும் சின்ன குழந்தை போல் துள்ளி குதித்து ஓடினாள்.கடலும் ஓடி வந்த அவள் பாதத்தை ஆசையுடன் நனைத்து சென்றது.
அவள், அவன் விரல்களுடன் கை கோர்த்து தோளை உரசிக்கொண்டு கடலின் அலையை அவள் ரசிக்க,அவனுக்கு ஒரு பனிமலை,ஒரு எரிமலை சேர்ந்து உள்ளுக்குள் பொங்கி வெடித்தது.
அவளின் பாதத்தை தழுவியது போதும் இன்னும் மேலே சென்று நனைக்கலாம் என்ற ஆவலோடு கடல் அலைகள் உற்சாகத்தோடு,பெரிய பெரிய அலையாக ஓடி வர,பெரிய அலையில் இடுப்பளவு தண்ணிரில் சஞ்சனா நிலைதடுமாறி கீழே விழும் போது,ராஜா அவள் மெல்லிய இடுப்பில் கை வைத்து தாங்கி பிடித்தான்.அவன் விரல்கள் அவள் இடுப்பில் பட்டவுடன் அவள் மேனி சிலிர்த்தது.இருவரும் ஒருவரை ஒருவர் நேரம் போவதே தெரியாமல் இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க,மற்றொரு அலை வந்து இருவரையும் கீழே தள்ளி முழுக்க நனைத்தது.
சஞ்சனா அணிந்து இருந்த மஞ்சள் சுடிதார் முழுக்க நனைந்து போனது.
ராஜா எழுந்து கை கொடுக்க,அவளும் வெட்கத்துடன் அவன் கைகளை பிடித்து எழுந்தாள்.
"என்னடா தண்ணிக்குள்ள ஜலபுலஜங்கா என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க" ,ராஜேஷ் சிரித்து கொண்டு நின்று இருந்தான்.
"அடப்பாவி நாங்க ரெண்டு பேர் என்ன பண்றோம் என்பதை வேடிக்கை பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருக்கியா நீ"
"டேய் நான் மட்டும் இல்ல, ஊரே வேடிக்கை பார்த்து சிரிச்சுச்சு.அப்படியே என்னவோ லைலா மஜ்னு மாதிரி ரெண்டு பேரும் போஸ் கொடுத்துட்டு நின்னுட்டு இருக்கீங்க."
"அது சரி நீ இங்கே எங்கடா வந்தே,"
"நான் என் பொண்டாட்டி,புள்ளையோடு லீவில் என்ஜாய் பண்ண வந்தேன்.சார் எதுக்கு வந்தீங்க என்று தெரிஞ்சுக்கலாமா"
நான் நான்..
நீ நீ நீ .. தான் சொல்லு
"சஞ்சனா ஆசைப்பட்டா அதனாலே கூப்பிட்டு வந்தேன்."
"டேய் சும்மா ரீல் உடாதே,நீ கூட்டிட்டு வந்துட்டு அவள் மேல் பழியை போடாதே.பச்ச மண்ணுடா அவ"
"டேய் நான் பொய் சொல்லல,நீ வேணுமின்னா சஞ்சனா கிட்டேயே கேளு."
"நீ சொல்லு தங்கச்சி,நீ தான் ஆசைப்பட்டீயா"
"இல்ல அண்ணா,இவர் தான் இன்னக்கி பாடம் போர் அடிக்குது,பீச்சுக்கு போலாமா என்று கேட்டார்.சரி என்று வந்தால் அங்கே இங்கே கை வைச்சு,தண்ணியில் இழுத்து போட்டு விளையாடி எப்படி என்னை நனைச்சுட்டார் பாருங்க",என்று சிணுங்க
டேய் ராஜா,இந்த பூனை பால் குடிக்கும் என்று பார்த்தால் பீரே அடிக்கும் போல இருக்கே.ரெண்டாவது நாளே பீச்சா,நீ தேறிடுவா மச்சான்.
"டேய் அவ பொய் சொல்றாட,நீ அவளை நம்பாதே."
"இந்த விசயத்தில் பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க மச்சான்,அதுவும் என் தங்கச்சி பொய் சொல்லவே மாட்டா"என்று ராஜேஷ் கூறியவுடன்
சஞ்சனா ராஜா பக்கம் திரும்பி,நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டி கண்ணடித்தாள்.
என்னிக்குடா ஆம்பள பேச்சை நம்பி இருக்கீங்க,
அண்ணா அவர் கிடக்கறாரு விடுங்க,நீங்க உங்க பொண்டாட்டியை அறிமுகம் செய்து வைங்க, சஞ்சனா கூறியவுடன்,
மூவரும் ராஜேஷ் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
ராஜேஷ் அவன் மனைவியிடம், சஞ்சனாவை அறிமுகப்படுத்தி அவன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க,உடனே அவன் மனைவி சஞ்சனாவிடம் கை நீட்டி advance congratulations என்று வாழ்த்து கூறினார்.
எதுக்குடா congratulations?ராஜா கேட்டான்.
ராஜேஷ் அதற்கு,அது ரெண்டு பொம்பளைக்குள்ள இருக்கிற விசயம்.அதை எல்லாம் நீ கேட்க கூடாது.
சஞ்சனா ராஜேஷ் குழந்தையை வாங்கி கொண்டு,
அண்ணா குழந்தை பேர் என்ன?
"யாழினி"
சூப்பர் தமிழ் பேரு அண்ணா,அப்படியே குழந்தை உங்களை உரிச்சு வைச்சு இருக்கு.
நால்வரும் பேசி சிரித்து அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது,சஞ்சனா ராஜாவை பார்த்து கொண்டே, அவன் பார்க்கும் போது குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
"சரி ராஜேஷ், டைம் ஆச்சு,கிளம்பலாமா?"
"சரி, நீ சஞ்சனாவை கூட்டிட்டு கிளம்பு"
ராஜா,சஞ்சனாவை நேராக நாகராஜ் kulfi கடைக்கு கூட்டி சென்றான்.ஒரு சின்ன tricycle தான்.அதை சுற்றி மக்கள் ஈ போல் அவரிடம் kulfi வாங்க மொய்த்து கொண்டு இருந்தனர்.
சஞ்சனா இங்கே kulfi ice நல்லா இருக்கும்.நானும்,ராஜேஷிம் இங்கே வந்தா கண்டிப்பாக சாப்பிடாமல் போக மாட்டோம்.
"அப்போ அவரையும் கூப்பிட்டு இருக்கலாமே"
அவன் குழந்தைக்கு ஐஸ் கிரீம் ஆகாது சஞ்சனா.கூட்டி வந்தால் குழந்தை அடம் புடிக்கும்.அதனால் தான் அவன கூப்பிடல.இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.
ஒரு இலை கப்பில் வைத்து kulfi ice கொண்டு வந்து கொடுத்தான்.சாப்பிடு சஞ்சனா,அருமையாக இருக்கும். பாதாம்,முந்திரி தூக்கலாக இருக்கும்.
சஞ்சனா வாயில் வைத்து சப்பி,"ம் செமையா இருக்கு."
பாதி ஐஸ்கிரீம் இருவரும் சாப்பிட்டு முடிக்க,சஞ்சனா அவன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை வாங்கினாள் இல்லை பிடுங்கினாள்.அவள் ஐஸ்க்ரீமை அவனிடம் கொடுத்து விட்டு அவன் எச்சில் ஐஸ்க்ரீமை சாப்பிட தொடங்க ,அவனும் சிரித்து கொண்டே அவள் எச்சில் பட்ட ஐஸ் க்ரீமை சுவைக்க தொடங்கினான்.
"ம்,நான் சாப்பிட்ட ஐஸ்க்ரீமை விட இது சுவையாக இருக்கே"என்று கூற சஞ்சனாவிற்கு வெட்கம் வந்தது.
"ம் இருக்கும்டா, இருக்கும்"என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க,ராஜேஷ் மீண்டும் நின்று இருந்தான்.
டேய் என்னடா எங்களையே சுற்றி சுற்றி வந்துட்டு இருக்கே.
நான் உன்கிட்ட பேச மாட்டேன் மச்சான்.வர வர நீயும் பொய் பேச ஆரம்பிச்சுட்ட,அவளை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்லிட்டு நேராக ஐஸ்கிரீம் கடைக்கு கூப்பிட்டு வந்து இருக்கே,ஏன் சஞ்சனா இங்க ராஜா என்ற ஒருத்தன் தான் ஒரு அரிச்சந்திரனா இருந்தான்.அவனையும் கெடுத்து விட்டுட்டேயே
நான் ஒண்ணுமே பண்ணல அண்ணா,எனக்கு ஒன்னும் தெரியாது என்று சஞ்சனா அப்பாவியாய் முகத்தை வைத்து கொள்ள,
ராஜா அவனிடம் "டேய் உன் கோபம் தீர நான் என்னடா பண்ணட்டும்"
ஒழுங்காக எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு.ஒன்னு இல்லை ரெண்டு வாங்கி கொடு.
ராஜா வாங்கிட்டு வந்து கொடுக்க,
டேய் நீ இங்கே தான் இருப்பே என்று ,நானே என் பொண்டாட்டியை எப்படியோ பொய் சொல்லி ஆட்டோவில் ஏற்றி விட்டு வந்தால் ,நான் நினைச்சபடியே இங்கே நின்னுட்டு இருக்கீங்க,இதுல romance வேற.
இது தான் எங்க ஏழு வருஷ friendship சஞ்சனா,அடுத்து நான் என்ன செய்வேன் என்று இவன் சரியா சொல்லிடுவான்.மனைவி கடவுள் கொடுத்த வரம் என்பார்கள்.ஆனால் நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் ஒவ்வொரு நிமிஷமும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பான்.
நானும் தான் என்று சஞ்சனா மனதில் சொல்லி கொண்டாள்.
டேய் அது தான் ஐஸ் வாங்கி கொடுத்தாச்சு இல்ல.அப்புறம் என்ன மேற்கொண்டு ஐஸ்.போதும் உடுடா. மழை வர மாதிரி இருக்கு,ரெண்டு பேரும் வீட்டுக்கு சீக்கிரம் கிளம்புங்க.
சரி ராஜேஷ் நான் நாளை appointment முடித்து விட்டு நேராக YMCA கிரவுண்ட் வரேன்.
நீ மட்டும் வராம போனே,அப்புறம் உன்னை சும்மா கூட விட மாட்டேன்.
கண்டிப்பாக வரேன் ராஜேஷ்.
ராஜா ,சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,
சஞ்சனா அவனிடம் ஒரு application கொடுத்தாள்.இதை fill பண்ணி monday கொடுங்க
என்ன இது,
Madras university application இது.இப்போ உனக்கு இருக்கிற qualification வச்சு TL மட்டும் தான் ஆக முடியும்.மேற்கொண்டு அடுத்த லெவல் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக டிகிரி அவசியம்.அதுதான் பகுதி நேரமாக டிகிரி சேருவதற்கான அப்பிளிக்கேஷன் இது.அடுத்த இரண்டு வருடத்தில் நீங்கள் கண்டிப்பாக AM ஆக வேண்டும்.
"சஞ்சனா ஒரு நிமிஷம்"
"என்ன சொல்லுங்க"
"உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் சொல்லணும்"
"ம் சொல்லுங்க"
"இப்போ இல்ல,ஓணம் அன்னிக்கு நான் கண்டிப்பாக சொல்றேன்."
சஞ்சனா நெருங்கி வந்தாள்.அவன் நெற்றியில் தன் ஸ்ட்ராபெர்ரி உதடுகளை அழுத்தமாக சில்லென்று பதித்தாள்.சுற்றிலும் உள்ள உலகத்தை இருவருமே மறந்தார்கள்.இரண்டு நிமிடம் தொடர்ந்த அந்த ஒரு முத்தமே அவள் காதலை அவனுக்கு பறைசாற்றியது.
"நீங்க சொல்லும் அந்த வார்த்தைக்காக நான் அனுதினமும் காத்து இருக்கிறேன்"என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அடுத்த நாள் ராஜா வாசுவுக்கு ஃபோன் செய்தான்
டேய் வாசு என்ன பண்ணிட்டு இருக்க,
நான் என் பொண்டாட்டி துணி துவைத்து கொண்டு இருக்கிறேன் ராஜா.
டேய் இன்னிக்கு மேட்ச்,நம்ம ராஜேஷ் கண்டிப்பாக வர சொல்லி இருக்கான்.சீனிவாசன் கூட விளையாடுறான்.நம்ம sales டீம் ஃபைனல் qualify ஆகி ஆச்சு.நாம போய் நம்ம டீமை support பண்ணலாம் வா.
No மச்சான்,வாய்ப்பே இல்ல,அவ்வளவு தூரம் எல்லாம் என்னால் பெட்ரோல் செலவு பண்ணி வர முடியாது.
அட அறிவு கெட்டவனே,நான் உன் ஏரியாவில் தான் இருக்கேன்.ஒரே வண்டியில் போய்ட்டு வந்து விடுவோம்.
அப்ப ஓகே ,உடனே கிளம்பலாம்.
சரி சீக்கிரம் வா,நான் கீழே வெயிட் பண்றேன்.
மைதானத்தில் telesales டீமுக்கும்,வேறு ஒரு அணிக்கும் போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது.
துர்கா சஞ்சனாவிடம்"ஏய் என்னடி மேட்சை பார்க்காம,வாசல் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துட்டே இருக்கே"
இல்ல அக்கா,ஒருத்தர் வரவை எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
யாரு அந்த ராஜாவா?
ஆமாக்கா,
இங்க பாரு,அவன் வந்தா,அவன் பின்னாடியே போய் விடாதே.எப்படியும் நம்ம டீம் இப்போ செமி பைனலில் வெற்றி பெறுகிற மாதிரி இருக்கு,அப்படி வெற்றி பெற்றால் sales அணியும்,நம்ம அணியும் பைனலில் விளையாட வேண்டி வரும்.அதுக்கு நீ இங்கே இருந்து நம்ம டீமை support பண்ணு.
சரிக்கா,உங்க பேச்சை போய் நான் மீறுவேனா?
Telesales அணியும் செமி பைனலில் வெற்றி பெற்றது.
Telesales அணியின் கேப்டன் ஜார்ஜ் ,sales அணியின் கேப்டன் சக்திவேலை ரகசியமாக சந்தித்தான்.
Hi ப்ரோ,எனக்கு நீங்க ஒரு favour செஞ்சீங்க என்றால் பதிலுக்கு நான் உங்களுக்கு நீங்க எதிர்பார்க்காத உதவியை செய்யறேன்.
சொல்லு ஜார்ஜ் நான் என்ன செய்யனும்.?
ரொம்ப சிம்பிள் சக்திவேல்,ஒவ்வொரு தடவையும் நீங்க தான் கப் அடிக்கறீங்க.இந்த முறை தான் நாங்க முதன் முதலாக ஃபைனல் வந்து இருக்கோம்.நீ இந்த மேட்ச் விளையாடவே கூடாது.உங்க அணியில் இன்னொரு ஆளும் விளையாட மாட்டான்.
அய்யோ அப்படி நடந்தால்,ஏற்கனவே 2 பேர் காலையில் நடந்த மேட்சில் தான் காயம் ஆனாங்க.மீதி இருப்பது மொத்தமே பதினொரு பேர் தான்.அதிலும் நானும் ,இன்னொரு பையனும் விளையாடவில்லை என்றால் 9 பேர் தான் இருப்பாங்க.அவர்களை வைத்து எப்படி விளையாட முடியும்.?
அது தான் எங்களுக்கு வேணும் சக்தி,ஆடாமலேயே நாங்க ஜெய்க்கனும்.அதுவும் அந்த டீமோட முக்கியமான தூணே நீங்க தான்.நீங்க விளையாடவில்லை என்றால் போதும் அவங்க மனதளவில் தளர்ந்து போய் விடுவாங்க.வேற யாரையும் அணியில் சேர்த்து கொள்ள தைரியம் வராது.
சரி,நீ சொன்னபடியே நான் செய்யறேன். ஆனா அதனால் எனக்கு என்ன பலன் நீ இன்னும் சொல்லவில்லையே.
ம். அடுத்தது அந்த விசயம் தான்.நான் உனக்கு மாசத்துக்கு 10 லீட் support பண்றேன்.அதுவும் லீட் clash எதுவும் வந்தால் என் டீம் கிட்ட பேசி உனக்கு விட்டு கொடுக்க சொல்றேன்.ஓகேவா
ம்.it sounds good deal ஜார்ஜ்.நானும் ஒவ்வொரு மாசமும் அந்த north team பையன் ராஜாகிட்ட வெறும் 5 நம்பர் வித்தியாசத்தில் தான் performer award கோட்டை விடறேன்.அந்த performer award கிடைக்காததால் என்னால steps கிட்ட கூட போக முடியல.நீ இந்த உதவி செய்தால் நான் கண்டிப்பாக TL ஆகி விட முடியும்.
நான் கண்டிப்பாக செய்யறேன் சக்தி.
ராஜா உள்ளே நுழைந்தது தான் தாமதம்.உடனே சஞ்சனா telesales கேம்ப்பில் இருந்து சிட்டாக பறந்து sales camp அருகே ஓடி வந்து விட்டாள்.அடியே போகாதே என்று துர்கா கத்தி கொண்டே இருந்தாலும் அவள் காதிலேயே வாங்கவில்லை.
ஆனால் sales கிரிக்கெட் அணியின் கேம்ப் நிலைமை மோசமாக இருந்தது.
வெறும் 9 பேர் மட்டுமே இருக்க,சக்திவேல் கேப்டனும் இல்லாமல் ராஜேஷ் தவித்து கொண்டு இருந்தான்.
டேய் இப்போ ரெண்டு பேர் குறையுதேடா,எப்படி விளையாடுவது?ராஜேஷ் கேட்க
சீனி அதற்கு "டேய் ராஜேஷ் நேரம் இல்ல நீ போய் டாஸ் போடு.மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்."
டேய் லூசா நீ,டாஸ் போடும் போது விளையாடும் வீரர்களின் விவரம் கேப்பானுங்களே?அப்ப நான் என்ன பண்ணட்டும்.
ராஜா உடனே,ஏண்டா நடக்காத போட்டிக்காடா என்னை வற்புறுத்தி கூப்பிட்டே,
வாசுவும் உடனே,"ஆமா ராஜா,வீட்டில் இந்நேரம் துணி துவைத்துவிட்டு அழகா ஒரு குட்டி தூக்கமே போட்டு இருப்பேன்.இப்ப கூட ஒன்னும் கெட்டு போல,என்னை கொண்டு போய் வீட்டில் விட்டு விடு ."
ராஜேஷ் அதற்கு"போட்டி கண்டிப்பாக நடக்கும்.".
ராஜா "எப்படி?அது தான் players 2 பேர் குறையுதே"
ராஜேஷ்"அது தான் நீங்க ரெண்டு பேர் இருக்கீங்களே,நீங்க வந்து விளையாடுங்க"
டேய் ராஜேஷ்,நானெல்லாம் கிரிக்கெட் மட்டையை பிடித்து 15 வருஷம் ஆச்சுடா.என்னால எல்லாம் முடியாது.
வாசுவும்,"ராஜா நீயாவது பரவாயில்லை.கிரிக்கெட் மட்டையை தொட்டு 15 வருஷம் ஆச்சு.ஆனால் நான் கிரிக்கெட் விளையாடும் போது எல்லாம் வாழை மட்டையில் தான் விளையாடி இருக்கேன்."
ராஜேஷ்"டேய் டேய் பிளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக விளையாடுங்க,போராடி தோத்தா கூட பரவாயில்லை.ஆனா விளையாடமால் விட்டு கொடுத்தா அதை விட கேவலம் எதுவும் இல்லை.
"சரி ராஜேஷ் உனக்காக நான் விளையாடறேன்"ராஜா ஒத்து கொண்டான்.
ஆனால் வாசுவோ "அவன் வேணும் என்றால் விளையாடட்டும்.ஆனால் நான் வரமாட்டேன்."
"டேய் வாசு ,நீ பந்து வரும் போது பிடித்து போட்டால் மட்டும் போதும்.அதுவும் உன்னை பந்தே வராத இடத்தில் தான் நிற்க வைப்பேன்.பேட்டிங் கூட நீ விளையாட வேண்டிய அவசியமே இருக்காது."
"முடியவே முடியாது ராஜேஷ்"வாசு கறாராக சொல்ல.
டேய் இன்னிக்கு இரவு ஒரு quarter வாங்கி தரேன்டா.
Quarter பத்தாது.HALF வாங்கி கொடுக்கறேன் சொல்லு.நான் விளையாடறேன்.
சரி நான் வாங்கி கொடுக்கிறேன்.
சஞ்சனா நடப்பது எதுவும் புரியாமல் ராஜாவின் அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தாள்.ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அவள் காதலன் விளையாட போகிறான் என.
சஞ்சனா " best of luck ராஜா"கை கொடுக்க
"எனக்கு எதுக்கு best of luck சஞ்சனா,நான் ஜஸ்ட் பீல்டிங் மட்டும் தான் பண்ண போறேன்.பேட்டிங்,பவுலிங் எல்லாம் அவர்களே பார்த்து கொள்வார்கள்."
ஜார்ஜ் நடுவரிடம் "சார் அவங்ககிட்ட பதினோரு வீரர்களே கிடையாது.எப்படி நீங்க அவங்க டீமை ஆட அனுமதிக்கலாம்?"
"அவங்க பதினோரு வீரர்கள் லிஸ்ட் கொடுத்து ஆச்சு.நீ வந்து டாஸ் போடு"
ராஜேஷ் டாசில் வெற்றி பெற்று,பேட்டிங்கை தேர்வு செய்தான்.
டீம்,அதிர்ஷ்டம் நம்ம பக்கம் தான் இருக்கு.நாம தான் பேட்டிங் பண்றோம்.ராஜாவும்,வாசுவும் பேட்டிங் விளையாட கூடாது.அதுக்கேற்ற மாதிரி விக்கெட் கொடுக்காம விளையாடுங்க.அது போதும்.
துர்காவின் தோழி வந்து துர்காவிடம் "சஞ்சனா எங்கே என்று கேட்க".
அங்க பாரு ,sales team கேம்பை காண்பித்து"அவ ஆளு வந்த உடனே சிட்டாய் பறந்து அங்கே ஓடி விட்டாள்."
இப்படி எதிர் அணியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு support பண்ணா ஜார்ஜ் கோவிச்சுப்பானே.
நான் என்னடி பண்ணட்டும்.அவ என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறா.
போட்டி ஆரம்பமாகியது.
எப்பொழுதுமே சக்திவேல் தான் துவக்க ஆட்டக்காரனாக இறங்கி சிறந்த தொடக்கத்தை கொடுப்பான்.ஆனால் இப்போ அவன் இல்லாததால் சேல்ஸ் அணியின் விக்கெட் சீட்டு கட்டு போல் சரிய தொடங்கியது.2 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விட்டது.நான்காவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுக்க, ராஜேசும்,சீனியும் சேர்ந்து ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.இவர்கள் இருவரும் 7.5 ஓவர்களில் 44 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.அப்பொழுது சீனி ஒரு ரன் அடித்து ஓடி வர,telesales ஃபில்டர் வேண்டுமென்றே குறுக்கில் ஓடி வர சீனி தடுமாறி கீழே விழுந்தான்.மீண்டும் எழுந்து ஓடி கீரிசை தொடுவதற்குள் சீனி ரன் அவுட் ஆகி விட்டான்.sales அணி 44 ரன்களுக்கு 6 விக்கெட் பரிதாபகரமான நிலையில் இருந்தது.
அப்பொழுது ட்ரிங்க்ஸ் ப்ரேக் வர, அனைவருக்கும் ஜுஸ் கொடுக்கப்பட்டது.பெவிலியனில் இருந்த வாசு ஒன்றுக்கு இரண்டாக ஜுஸ் எடுத்து குடித்து,
என்னடா,ஜூஸில் சர்க்கரையே கம்மியாக இருக்கு என்று சண்டை போட,அது போட்டி வர்ணனை செய்து கொண்டு இருந்த நபர் காதில் விழுந்தது.
"பாருப்பா sales அணி விக்கெட்களை இழந்து பரிதாபகரமான நிலையில் இருப்பது வாசுக்கு வருத்தம் இல்லையாம்.ஜூசில் சக்கரை குறைவாக இருப்பது தான் வருத்தமாம் என்று தன் பங்குக்கு மைக்கில் கலாய்த்தவுடன் வாசு திருதிருவென முழித்தான்.
ஏண்டா ஜூசில் சக்கரை இல்லை என்று கேட்டதுக்கு மைக் போட்டு ஊர் முழுக்க சொல்லுவீங்களாடா என்று வாசு முணுமுணுத்தான்.
ட்ரிங்க்ஸ் ப்ரேக் முடிந்து ஜார்ஜ் பந்து வீச வர,அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை எடுக்க சேல்ஸ் அணி நிலைமை இன்னும் மோசமானது.44 ரன்களுக்கு 8 விக்கெட்கள்.
வேறுவழியின்றி ராஜா களம் இறங்க ஜார்ஜ்ஜிற்கு பழிவாங்க சந்தர்ப்பம் வாய்த்தது.
ராஜேஷ் ,ராஜாவிடம் சென்று மச்சான் ரன் அடிக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை.ஜஸ்ட் இந்த ஓவரை மட்டும் கடத்தி விடு.இன்னும் அவனுக்கு ஒரு ஓவர் தான் இருக்கு.
ஜார்ஜ் ஓடி வந்து வெறியோடு ராஜாவின் முகத்தை நோக்கி பந்து வீச,அது பூமியில் படாமல் நேராக புல்டாசாக வந்து அவன் ஹெல்மெட்டை தாக்கியது.பந்து ஹெல்மெட்டையும் உடைத்து அவன் மூக்கை சென்று தாக்க,ராஜா அங்கேயே சுருண்டு விழுந்தான்.பந்து no ball ஆக அறிவிக்கப்பட , ஜார்ஜ்ஜிற்கு ஒருமுறை warning ம் கொடுக்கப்பட்டது.
எங்க வேலை செய்தான் ராஜா,அவன் சுத்த வேஸ்ட்.அவன் என்ன பண்ணான் தெரியுமா ?அவன் கிட்ட ஸ்டிக்கர்ஸ் கொடுத்துட்டு no parking போர்டில் பார்த்து ஒட்டு என்று சொல்லிட்டு போனேன்.ஒரே ஒரு appointment நான் போய் விட்டு வருவதற்குள் அவன் டீ கடையில் உட்கார்ந்து முட்டை போண்டா சாப்பிட்டுகிட்டு இருக்கான்.
"பசியா இருந்து இருக்கும்,சாப்பிட்டு கொண்டு இருந்து இருப்பான்."
"அப்படி தான் ராஜா நானும் நினைச்சேன்.என்னடா ஸ்டிக்கர்கள் எல்லாம் ஒட்டி ஆச்சா என்று கேட்டால் ஒட்டி ஆச்சு என்று சொல்றான்.வெறும் அரை மணி நேரத்தில் 500 ஸ்டிக்கர் எப்படி மச்சான் ஒட்ட முடியும்."
"கண்டிப்பாக ஒட்ட முடியாது.மிஞ்சி போனா நூறு ஸ்டிக்கர் ஒட்டலாம்."
ம் அது தான் ராஜா, எங்கடா ஒட்டிய ஸ்டிக்கர் காண்பி என்று கூட்டி போனால் நூறு ஸ்டிக்கர் கூட ஓட்டல.மிச்ச ஸ்டிக்கர் எங்கடா ஒட்டின என்று கேட்டால் பேந்த பேந்த முழிக்கிறான்.அப்புறம் முட்டை போண்டா எப்படிடா வந்துச்சி என்று கேட்ட பிறகு தான் உண்மையை சொல்றான். ஸ்டிக்கரை எடைக்கு போட்டு தான்,முட்டை போண்டா வாங்கினேன் என்று சொல்றான்.
"சும்மாவா விட்டே அவனை சீனி,complaint பண்ண வேண்டியது தானே"
அதற்கு வாசு,சீனி என்ன பண்ணான் என்று நான் சொல்றேன்.அவன்கிட்ட இருந்து முட்டை போண்டா பிடுங்கி இவன் தின்னு ஏப்பம் விட்டுட்டு,அது தான் உனக்கு தண்டனை என்று சொல்லி விரட்டி விட்டுட்டான்.
பதிலுக்கு சீனி"டேய் வாசு,என்னை நீ குறை சொல்றியா,போன வாரம் newspaper activity பண்ணப்போ, நியூஸ் பேப்பரை எடைக்கு போட்டு சரக்குக்கு காசு உஷார் பண்ணவன் தானே நீ!
ராஜா இருவரிடம் "உண்மையை சொல்றவங்க தெய்வத்திற்கு சமம் என்று பெரியவங்க சொல்லுவாங்க,ரெண்டு பேரும் இப்படியே மாறி மாறி போட்டு கொடுத்துக்கிறீங்களேடா .
என்ன பண்றது ராஜா,நீ target achieve பண்ணி incentive வாங்கிடுவே,ஆனா எங்க நிலைமை அப்படியா,நாங்க வாங்குற சம்பளம் அப்படியே பொண்டாட்டிகிட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. கைச்செலவுக்கு இந்த மாதிரி தானே கை வைக்க வேண்டி இருக்கு.சரி ராஜா எங்கே இன்னிக்கு ராஜேஷ் வரலையா?
இல்ல சீனி,அவன் இன்னிக்கு வீக் ஆஃப்,
அப்ப என்ஜாய் பண்ணட்டும்.டிஸ்டர்ப் பண்ண வேணாம்.ராஜா swiggy வருது.
என்னது swiggy யா ?
Food டெலிவரி மச்சான்.என்ன ரொம்ப லவ் பண்றளோ!
இல்ல மச்சான் கேட்டுட்டேன்,லவ் எல்லாம் கிடையாது என்று சொல்லிட்டா.சும்மா ஒரு அக்கறை தானாம்.அவ கொடுக்கிற சாப்பாட்டிற்கு அவளுக்கு பிடித்த கிஃப்ட்டா ஏதாவது வாங்கி கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்.
முருகேஷ் அண்ணன் வழக்கம் போல் வந்து கொடுத்து விட்டு போக சாயங்காலம் சஞ்சனாவும்,ராஜாவும் மீண்டும் சந்தித்தனர்.
சஞ்சனா இன்னிக்கு சப்பாத்தி சூப்பர்.அதுக்கு தக்காளி சட்னி வித்தியாசமான சுவையாக இருந்தது.இது வரை நான் அந்த மாதிரி சாப்பிட்டதே கிடையாது.
அது தக்காளி சட்னியில் கொஞ்சம் கடலை மாவு சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்.நான் எப்பவுமே அப்படி தான் செய்வேன்.
சூப்பர் சஞ்சனா,உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பாக குடுத்து வைச்சவன் தான்.
ராஜா,எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும்.இன்னிக்கு கொஞ்சம் என்னை அங்கே கூட்டி போக முடியுமா?
அவ்வளவு தானே,நீ எந்த பீச் மட்டும் சொல்லு,பெசன்ட் நகரா,இல்லை மெரினாவா?
மெரினாவே போலாம்.
முதல் முறை அவள் அவனோடு கை கோர்த்து கொண்டு மணலில் நடக்க,அவனுக்கு பூட்டி வைத்த உணர்வுகள் மேல் புதிய சிறகு முளைத்தது.
கடல் அலையை பார்த்ததும் சின்ன குழந்தை போல் துள்ளி குதித்து ஓடினாள்.கடலும் ஓடி வந்த அவள் பாதத்தை ஆசையுடன் நனைத்து சென்றது.
அவள், அவன் விரல்களுடன் கை கோர்த்து தோளை உரசிக்கொண்டு கடலின் அலையை அவள் ரசிக்க,அவனுக்கு ஒரு பனிமலை,ஒரு எரிமலை சேர்ந்து உள்ளுக்குள் பொங்கி வெடித்தது.
அவளின் பாதத்தை தழுவியது போதும் இன்னும் மேலே சென்று நனைக்கலாம் என்ற ஆவலோடு கடல் அலைகள் உற்சாகத்தோடு,பெரிய பெரிய அலையாக ஓடி வர,பெரிய அலையில் இடுப்பளவு தண்ணிரில் சஞ்சனா நிலைதடுமாறி கீழே விழும் போது,ராஜா அவள் மெல்லிய இடுப்பில் கை வைத்து தாங்கி பிடித்தான்.அவன் விரல்கள் அவள் இடுப்பில் பட்டவுடன் அவள் மேனி சிலிர்த்தது.இருவரும் ஒருவரை ஒருவர் நேரம் போவதே தெரியாமல் இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க,மற்றொரு அலை வந்து இருவரையும் கீழே தள்ளி முழுக்க நனைத்தது.
சஞ்சனா அணிந்து இருந்த மஞ்சள் சுடிதார் முழுக்க நனைந்து போனது.
ராஜா எழுந்து கை கொடுக்க,அவளும் வெட்கத்துடன் அவன் கைகளை பிடித்து எழுந்தாள்.
"என்னடா தண்ணிக்குள்ள ஜலபுலஜங்கா என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க" ,ராஜேஷ் சிரித்து கொண்டு நின்று இருந்தான்.
"அடப்பாவி நாங்க ரெண்டு பேர் என்ன பண்றோம் என்பதை வேடிக்கை பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருக்கியா நீ"
"டேய் நான் மட்டும் இல்ல, ஊரே வேடிக்கை பார்த்து சிரிச்சுச்சு.அப்படியே என்னவோ லைலா மஜ்னு மாதிரி ரெண்டு பேரும் போஸ் கொடுத்துட்டு நின்னுட்டு இருக்கீங்க."
"அது சரி நீ இங்கே எங்கடா வந்தே,"
"நான் என் பொண்டாட்டி,புள்ளையோடு லீவில் என்ஜாய் பண்ண வந்தேன்.சார் எதுக்கு வந்தீங்க என்று தெரிஞ்சுக்கலாமா"
நான் நான்..
நீ நீ நீ .. தான் சொல்லு
"சஞ்சனா ஆசைப்பட்டா அதனாலே கூப்பிட்டு வந்தேன்."
"டேய் சும்மா ரீல் உடாதே,நீ கூட்டிட்டு வந்துட்டு அவள் மேல் பழியை போடாதே.பச்ச மண்ணுடா அவ"
"டேய் நான் பொய் சொல்லல,நீ வேணுமின்னா சஞ்சனா கிட்டேயே கேளு."
"நீ சொல்லு தங்கச்சி,நீ தான் ஆசைப்பட்டீயா"
"இல்ல அண்ணா,இவர் தான் இன்னக்கி பாடம் போர் அடிக்குது,பீச்சுக்கு போலாமா என்று கேட்டார்.சரி என்று வந்தால் அங்கே இங்கே கை வைச்சு,தண்ணியில் இழுத்து போட்டு விளையாடி எப்படி என்னை நனைச்சுட்டார் பாருங்க",என்று சிணுங்க
டேய் ராஜா,இந்த பூனை பால் குடிக்கும் என்று பார்த்தால் பீரே அடிக்கும் போல இருக்கே.ரெண்டாவது நாளே பீச்சா,நீ தேறிடுவா மச்சான்.
"டேய் அவ பொய் சொல்றாட,நீ அவளை நம்பாதே."
"இந்த விசயத்தில் பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க மச்சான்,அதுவும் என் தங்கச்சி பொய் சொல்லவே மாட்டா"என்று ராஜேஷ் கூறியவுடன்
சஞ்சனா ராஜா பக்கம் திரும்பி,நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டி கண்ணடித்தாள்.
என்னிக்குடா ஆம்பள பேச்சை நம்பி இருக்கீங்க,
அண்ணா அவர் கிடக்கறாரு விடுங்க,நீங்க உங்க பொண்டாட்டியை அறிமுகம் செய்து வைங்க, சஞ்சனா கூறியவுடன்,
மூவரும் ராஜேஷ் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
ராஜேஷ் அவன் மனைவியிடம், சஞ்சனாவை அறிமுகப்படுத்தி அவன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க,உடனே அவன் மனைவி சஞ்சனாவிடம் கை நீட்டி advance congratulations என்று வாழ்த்து கூறினார்.
எதுக்குடா congratulations?ராஜா கேட்டான்.
ராஜேஷ் அதற்கு,அது ரெண்டு பொம்பளைக்குள்ள இருக்கிற விசயம்.அதை எல்லாம் நீ கேட்க கூடாது.
சஞ்சனா ராஜேஷ் குழந்தையை வாங்கி கொண்டு,
அண்ணா குழந்தை பேர் என்ன?
"யாழினி"
சூப்பர் தமிழ் பேரு அண்ணா,அப்படியே குழந்தை உங்களை உரிச்சு வைச்சு இருக்கு.
நால்வரும் பேசி சிரித்து அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது,சஞ்சனா ராஜாவை பார்த்து கொண்டே, அவன் பார்க்கும் போது குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
"சரி ராஜேஷ், டைம் ஆச்சு,கிளம்பலாமா?"
"சரி, நீ சஞ்சனாவை கூட்டிட்டு கிளம்பு"
ராஜா,சஞ்சனாவை நேராக நாகராஜ் kulfi கடைக்கு கூட்டி சென்றான்.ஒரு சின்ன tricycle தான்.அதை சுற்றி மக்கள் ஈ போல் அவரிடம் kulfi வாங்க மொய்த்து கொண்டு இருந்தனர்.
சஞ்சனா இங்கே kulfi ice நல்லா இருக்கும்.நானும்,ராஜேஷிம் இங்கே வந்தா கண்டிப்பாக சாப்பிடாமல் போக மாட்டோம்.
"அப்போ அவரையும் கூப்பிட்டு இருக்கலாமே"
அவன் குழந்தைக்கு ஐஸ் கிரீம் ஆகாது சஞ்சனா.கூட்டி வந்தால் குழந்தை அடம் புடிக்கும்.அதனால் தான் அவன கூப்பிடல.இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.
ஒரு இலை கப்பில் வைத்து kulfi ice கொண்டு வந்து கொடுத்தான்.சாப்பிடு சஞ்சனா,அருமையாக இருக்கும். பாதாம்,முந்திரி தூக்கலாக இருக்கும்.
சஞ்சனா வாயில் வைத்து சப்பி,"ம் செமையா இருக்கு."
பாதி ஐஸ்கிரீம் இருவரும் சாப்பிட்டு முடிக்க,சஞ்சனா அவன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை வாங்கினாள் இல்லை பிடுங்கினாள்.அவள் ஐஸ்க்ரீமை அவனிடம் கொடுத்து விட்டு அவன் எச்சில் ஐஸ்க்ரீமை சாப்பிட தொடங்க ,அவனும் சிரித்து கொண்டே அவள் எச்சில் பட்ட ஐஸ் க்ரீமை சுவைக்க தொடங்கினான்.
"ம்,நான் சாப்பிட்ட ஐஸ்க்ரீமை விட இது சுவையாக இருக்கே"என்று கூற சஞ்சனாவிற்கு வெட்கம் வந்தது.
"ம் இருக்கும்டா, இருக்கும்"என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க,ராஜேஷ் மீண்டும் நின்று இருந்தான்.
டேய் என்னடா எங்களையே சுற்றி சுற்றி வந்துட்டு இருக்கே.
நான் உன்கிட்ட பேச மாட்டேன் மச்சான்.வர வர நீயும் பொய் பேச ஆரம்பிச்சுட்ட,அவளை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்லிட்டு நேராக ஐஸ்கிரீம் கடைக்கு கூப்பிட்டு வந்து இருக்கே,ஏன் சஞ்சனா இங்க ராஜா என்ற ஒருத்தன் தான் ஒரு அரிச்சந்திரனா இருந்தான்.அவனையும் கெடுத்து விட்டுட்டேயே
நான் ஒண்ணுமே பண்ணல அண்ணா,எனக்கு ஒன்னும் தெரியாது என்று சஞ்சனா அப்பாவியாய் முகத்தை வைத்து கொள்ள,
ராஜா அவனிடம் "டேய் உன் கோபம் தீர நான் என்னடா பண்ணட்டும்"
ஒழுங்காக எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு.ஒன்னு இல்லை ரெண்டு வாங்கி கொடு.
ராஜா வாங்கிட்டு வந்து கொடுக்க,
டேய் நீ இங்கே தான் இருப்பே என்று ,நானே என் பொண்டாட்டியை எப்படியோ பொய் சொல்லி ஆட்டோவில் ஏற்றி விட்டு வந்தால் ,நான் நினைச்சபடியே இங்கே நின்னுட்டு இருக்கீங்க,இதுல romance வேற.
இது தான் எங்க ஏழு வருஷ friendship சஞ்சனா,அடுத்து நான் என்ன செய்வேன் என்று இவன் சரியா சொல்லிடுவான்.மனைவி கடவுள் கொடுத்த வரம் என்பார்கள்.ஆனால் நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் ஒவ்வொரு நிமிஷமும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பான்.
நானும் தான் என்று சஞ்சனா மனதில் சொல்லி கொண்டாள்.
டேய் அது தான் ஐஸ் வாங்கி கொடுத்தாச்சு இல்ல.அப்புறம் என்ன மேற்கொண்டு ஐஸ்.போதும் உடுடா. மழை வர மாதிரி இருக்கு,ரெண்டு பேரும் வீட்டுக்கு சீக்கிரம் கிளம்புங்க.
சரி ராஜேஷ் நான் நாளை appointment முடித்து விட்டு நேராக YMCA கிரவுண்ட் வரேன்.
நீ மட்டும் வராம போனே,அப்புறம் உன்னை சும்மா கூட விட மாட்டேன்.
கண்டிப்பாக வரேன் ராஜேஷ்.
ராஜா ,சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,
சஞ்சனா அவனிடம் ஒரு application கொடுத்தாள்.இதை fill பண்ணி monday கொடுங்க
என்ன இது,
Madras university application இது.இப்போ உனக்கு இருக்கிற qualification வச்சு TL மட்டும் தான் ஆக முடியும்.மேற்கொண்டு அடுத்த லெவல் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக டிகிரி அவசியம்.அதுதான் பகுதி நேரமாக டிகிரி சேருவதற்கான அப்பிளிக்கேஷன் இது.அடுத்த இரண்டு வருடத்தில் நீங்கள் கண்டிப்பாக AM ஆக வேண்டும்.
"சஞ்சனா ஒரு நிமிஷம்"
"என்ன சொல்லுங்க"
"உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் சொல்லணும்"
"ம் சொல்லுங்க"
"இப்போ இல்ல,ஓணம் அன்னிக்கு நான் கண்டிப்பாக சொல்றேன்."
சஞ்சனா நெருங்கி வந்தாள்.அவன் நெற்றியில் தன் ஸ்ட்ராபெர்ரி உதடுகளை அழுத்தமாக சில்லென்று பதித்தாள்.சுற்றிலும் உள்ள உலகத்தை இருவருமே மறந்தார்கள்.இரண்டு நிமிடம் தொடர்ந்த அந்த ஒரு முத்தமே அவள் காதலை அவனுக்கு பறைசாற்றியது.
"நீங்க சொல்லும் அந்த வார்த்தைக்காக நான் அனுதினமும் காத்து இருக்கிறேன்"என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அடுத்த நாள் ராஜா வாசுவுக்கு ஃபோன் செய்தான்
டேய் வாசு என்ன பண்ணிட்டு இருக்க,
நான் என் பொண்டாட்டி துணி துவைத்து கொண்டு இருக்கிறேன் ராஜா.
டேய் இன்னிக்கு மேட்ச்,நம்ம ராஜேஷ் கண்டிப்பாக வர சொல்லி இருக்கான்.சீனிவாசன் கூட விளையாடுறான்.நம்ம sales டீம் ஃபைனல் qualify ஆகி ஆச்சு.நாம போய் நம்ம டீமை support பண்ணலாம் வா.
No மச்சான்,வாய்ப்பே இல்ல,அவ்வளவு தூரம் எல்லாம் என்னால் பெட்ரோல் செலவு பண்ணி வர முடியாது.
அட அறிவு கெட்டவனே,நான் உன் ஏரியாவில் தான் இருக்கேன்.ஒரே வண்டியில் போய்ட்டு வந்து விடுவோம்.
அப்ப ஓகே ,உடனே கிளம்பலாம்.
சரி சீக்கிரம் வா,நான் கீழே வெயிட் பண்றேன்.
மைதானத்தில் telesales டீமுக்கும்,வேறு ஒரு அணிக்கும் போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது.
துர்கா சஞ்சனாவிடம்"ஏய் என்னடி மேட்சை பார்க்காம,வாசல் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துட்டே இருக்கே"
இல்ல அக்கா,ஒருத்தர் வரவை எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
யாரு அந்த ராஜாவா?
ஆமாக்கா,
இங்க பாரு,அவன் வந்தா,அவன் பின்னாடியே போய் விடாதே.எப்படியும் நம்ம டீம் இப்போ செமி பைனலில் வெற்றி பெறுகிற மாதிரி இருக்கு,அப்படி வெற்றி பெற்றால் sales அணியும்,நம்ம அணியும் பைனலில் விளையாட வேண்டி வரும்.அதுக்கு நீ இங்கே இருந்து நம்ம டீமை support பண்ணு.
சரிக்கா,உங்க பேச்சை போய் நான் மீறுவேனா?
Telesales அணியும் செமி பைனலில் வெற்றி பெற்றது.
Telesales அணியின் கேப்டன் ஜார்ஜ் ,sales அணியின் கேப்டன் சக்திவேலை ரகசியமாக சந்தித்தான்.
Hi ப்ரோ,எனக்கு நீங்க ஒரு favour செஞ்சீங்க என்றால் பதிலுக்கு நான் உங்களுக்கு நீங்க எதிர்பார்க்காத உதவியை செய்யறேன்.
சொல்லு ஜார்ஜ் நான் என்ன செய்யனும்.?
ரொம்ப சிம்பிள் சக்திவேல்,ஒவ்வொரு தடவையும் நீங்க தான் கப் அடிக்கறீங்க.இந்த முறை தான் நாங்க முதன் முதலாக ஃபைனல் வந்து இருக்கோம்.நீ இந்த மேட்ச் விளையாடவே கூடாது.உங்க அணியில் இன்னொரு ஆளும் விளையாட மாட்டான்.
அய்யோ அப்படி நடந்தால்,ஏற்கனவே 2 பேர் காலையில் நடந்த மேட்சில் தான் காயம் ஆனாங்க.மீதி இருப்பது மொத்தமே பதினொரு பேர் தான்.அதிலும் நானும் ,இன்னொரு பையனும் விளையாடவில்லை என்றால் 9 பேர் தான் இருப்பாங்க.அவர்களை வைத்து எப்படி விளையாட முடியும்.?
அது தான் எங்களுக்கு வேணும் சக்தி,ஆடாமலேயே நாங்க ஜெய்க்கனும்.அதுவும் அந்த டீமோட முக்கியமான தூணே நீங்க தான்.நீங்க விளையாடவில்லை என்றால் போதும் அவங்க மனதளவில் தளர்ந்து போய் விடுவாங்க.வேற யாரையும் அணியில் சேர்த்து கொள்ள தைரியம் வராது.
சரி,நீ சொன்னபடியே நான் செய்யறேன். ஆனா அதனால் எனக்கு என்ன பலன் நீ இன்னும் சொல்லவில்லையே.
ம். அடுத்தது அந்த விசயம் தான்.நான் உனக்கு மாசத்துக்கு 10 லீட் support பண்றேன்.அதுவும் லீட் clash எதுவும் வந்தால் என் டீம் கிட்ட பேசி உனக்கு விட்டு கொடுக்க சொல்றேன்.ஓகேவா
ம்.it sounds good deal ஜார்ஜ்.நானும் ஒவ்வொரு மாசமும் அந்த north team பையன் ராஜாகிட்ட வெறும் 5 நம்பர் வித்தியாசத்தில் தான் performer award கோட்டை விடறேன்.அந்த performer award கிடைக்காததால் என்னால steps கிட்ட கூட போக முடியல.நீ இந்த உதவி செய்தால் நான் கண்டிப்பாக TL ஆகி விட முடியும்.
நான் கண்டிப்பாக செய்யறேன் சக்தி.
ராஜா உள்ளே நுழைந்தது தான் தாமதம்.உடனே சஞ்சனா telesales கேம்ப்பில் இருந்து சிட்டாக பறந்து sales camp அருகே ஓடி வந்து விட்டாள்.அடியே போகாதே என்று துர்கா கத்தி கொண்டே இருந்தாலும் அவள் காதிலேயே வாங்கவில்லை.
ஆனால் sales கிரிக்கெட் அணியின் கேம்ப் நிலைமை மோசமாக இருந்தது.
வெறும் 9 பேர் மட்டுமே இருக்க,சக்திவேல் கேப்டனும் இல்லாமல் ராஜேஷ் தவித்து கொண்டு இருந்தான்.
டேய் இப்போ ரெண்டு பேர் குறையுதேடா,எப்படி விளையாடுவது?ராஜேஷ் கேட்க
சீனி அதற்கு "டேய் ராஜேஷ் நேரம் இல்ல நீ போய் டாஸ் போடு.மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்."
டேய் லூசா நீ,டாஸ் போடும் போது விளையாடும் வீரர்களின் விவரம் கேப்பானுங்களே?அப்ப நான் என்ன பண்ணட்டும்.
ராஜா உடனே,ஏண்டா நடக்காத போட்டிக்காடா என்னை வற்புறுத்தி கூப்பிட்டே,
வாசுவும் உடனே,"ஆமா ராஜா,வீட்டில் இந்நேரம் துணி துவைத்துவிட்டு அழகா ஒரு குட்டி தூக்கமே போட்டு இருப்பேன்.இப்ப கூட ஒன்னும் கெட்டு போல,என்னை கொண்டு போய் வீட்டில் விட்டு விடு ."
ராஜேஷ் அதற்கு"போட்டி கண்டிப்பாக நடக்கும்.".
ராஜா "எப்படி?அது தான் players 2 பேர் குறையுதே"
ராஜேஷ்"அது தான் நீங்க ரெண்டு பேர் இருக்கீங்களே,நீங்க வந்து விளையாடுங்க"
டேய் ராஜேஷ்,நானெல்லாம் கிரிக்கெட் மட்டையை பிடித்து 15 வருஷம் ஆச்சுடா.என்னால எல்லாம் முடியாது.
வாசுவும்,"ராஜா நீயாவது பரவாயில்லை.கிரிக்கெட் மட்டையை தொட்டு 15 வருஷம் ஆச்சு.ஆனால் நான் கிரிக்கெட் விளையாடும் போது எல்லாம் வாழை மட்டையில் தான் விளையாடி இருக்கேன்."
ராஜேஷ்"டேய் டேய் பிளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக விளையாடுங்க,போராடி தோத்தா கூட பரவாயில்லை.ஆனா விளையாடமால் விட்டு கொடுத்தா அதை விட கேவலம் எதுவும் இல்லை.
"சரி ராஜேஷ் உனக்காக நான் விளையாடறேன்"ராஜா ஒத்து கொண்டான்.
ஆனால் வாசுவோ "அவன் வேணும் என்றால் விளையாடட்டும்.ஆனால் நான் வரமாட்டேன்."
"டேய் வாசு ,நீ பந்து வரும் போது பிடித்து போட்டால் மட்டும் போதும்.அதுவும் உன்னை பந்தே வராத இடத்தில் தான் நிற்க வைப்பேன்.பேட்டிங் கூட நீ விளையாட வேண்டிய அவசியமே இருக்காது."
"முடியவே முடியாது ராஜேஷ்"வாசு கறாராக சொல்ல.
டேய் இன்னிக்கு இரவு ஒரு quarter வாங்கி தரேன்டா.
Quarter பத்தாது.HALF வாங்கி கொடுக்கறேன் சொல்லு.நான் விளையாடறேன்.
சரி நான் வாங்கி கொடுக்கிறேன்.
சஞ்சனா நடப்பது எதுவும் புரியாமல் ராஜாவின் அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தாள்.ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அவள் காதலன் விளையாட போகிறான் என.
சஞ்சனா " best of luck ராஜா"கை கொடுக்க
"எனக்கு எதுக்கு best of luck சஞ்சனா,நான் ஜஸ்ட் பீல்டிங் மட்டும் தான் பண்ண போறேன்.பேட்டிங்,பவுலிங் எல்லாம் அவர்களே பார்த்து கொள்வார்கள்."
ஜார்ஜ் நடுவரிடம் "சார் அவங்ககிட்ட பதினோரு வீரர்களே கிடையாது.எப்படி நீங்க அவங்க டீமை ஆட அனுமதிக்கலாம்?"
"அவங்க பதினோரு வீரர்கள் லிஸ்ட் கொடுத்து ஆச்சு.நீ வந்து டாஸ் போடு"
ராஜேஷ் டாசில் வெற்றி பெற்று,பேட்டிங்கை தேர்வு செய்தான்.
டீம்,அதிர்ஷ்டம் நம்ம பக்கம் தான் இருக்கு.நாம தான் பேட்டிங் பண்றோம்.ராஜாவும்,வாசுவும் பேட்டிங் விளையாட கூடாது.அதுக்கேற்ற மாதிரி விக்கெட் கொடுக்காம விளையாடுங்க.அது போதும்.
துர்காவின் தோழி வந்து துர்காவிடம் "சஞ்சனா எங்கே என்று கேட்க".
அங்க பாரு ,sales team கேம்பை காண்பித்து"அவ ஆளு வந்த உடனே சிட்டாய் பறந்து அங்கே ஓடி விட்டாள்."
இப்படி எதிர் அணியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு support பண்ணா ஜார்ஜ் கோவிச்சுப்பானே.
நான் என்னடி பண்ணட்டும்.அவ என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறா.
போட்டி ஆரம்பமாகியது.
எப்பொழுதுமே சக்திவேல் தான் துவக்க ஆட்டக்காரனாக இறங்கி சிறந்த தொடக்கத்தை கொடுப்பான்.ஆனால் இப்போ அவன் இல்லாததால் சேல்ஸ் அணியின் விக்கெட் சீட்டு கட்டு போல் சரிய தொடங்கியது.2 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விட்டது.நான்காவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுக்க, ராஜேசும்,சீனியும் சேர்ந்து ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.இவர்கள் இருவரும் 7.5 ஓவர்களில் 44 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.அப்பொழுது சீனி ஒரு ரன் அடித்து ஓடி வர,telesales ஃபில்டர் வேண்டுமென்றே குறுக்கில் ஓடி வர சீனி தடுமாறி கீழே விழுந்தான்.மீண்டும் எழுந்து ஓடி கீரிசை தொடுவதற்குள் சீனி ரன் அவுட் ஆகி விட்டான்.sales அணி 44 ரன்களுக்கு 6 விக்கெட் பரிதாபகரமான நிலையில் இருந்தது.
அப்பொழுது ட்ரிங்க்ஸ் ப்ரேக் வர, அனைவருக்கும் ஜுஸ் கொடுக்கப்பட்டது.பெவிலியனில் இருந்த வாசு ஒன்றுக்கு இரண்டாக ஜுஸ் எடுத்து குடித்து,
என்னடா,ஜூஸில் சர்க்கரையே கம்மியாக இருக்கு என்று சண்டை போட,அது போட்டி வர்ணனை செய்து கொண்டு இருந்த நபர் காதில் விழுந்தது.
"பாருப்பா sales அணி விக்கெட்களை இழந்து பரிதாபகரமான நிலையில் இருப்பது வாசுக்கு வருத்தம் இல்லையாம்.ஜூசில் சக்கரை குறைவாக இருப்பது தான் வருத்தமாம் என்று தன் பங்குக்கு மைக்கில் கலாய்த்தவுடன் வாசு திருதிருவென முழித்தான்.
ஏண்டா ஜூசில் சக்கரை இல்லை என்று கேட்டதுக்கு மைக் போட்டு ஊர் முழுக்க சொல்லுவீங்களாடா என்று வாசு முணுமுணுத்தான்.
ட்ரிங்க்ஸ் ப்ரேக் முடிந்து ஜார்ஜ் பந்து வீச வர,அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை எடுக்க சேல்ஸ் அணி நிலைமை இன்னும் மோசமானது.44 ரன்களுக்கு 8 விக்கெட்கள்.
வேறுவழியின்றி ராஜா களம் இறங்க ஜார்ஜ்ஜிற்கு பழிவாங்க சந்தர்ப்பம் வாய்த்தது.
ராஜேஷ் ,ராஜாவிடம் சென்று மச்சான் ரன் அடிக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை.ஜஸ்ட் இந்த ஓவரை மட்டும் கடத்தி விடு.இன்னும் அவனுக்கு ஒரு ஓவர் தான் இருக்கு.
ஜார்ஜ் ஓடி வந்து வெறியோடு ராஜாவின் முகத்தை நோக்கி பந்து வீச,அது பூமியில் படாமல் நேராக புல்டாசாக வந்து அவன் ஹெல்மெட்டை தாக்கியது.பந்து ஹெல்மெட்டையும் உடைத்து அவன் மூக்கை சென்று தாக்க,ராஜா அங்கேயே சுருண்டு விழுந்தான்.பந்து no ball ஆக அறிவிக்கப்பட , ஜார்ஜ்ஜிற்கு ஒருமுறை warning ம் கொடுக்கப்பட்டது.