Chapter 08

சஞ்சனா அன்று மாலை ராஜாவை சந்தித்த பொழுது,

என்னடா வலி எல்லாம் போச்சா?.

ம்,நேற்று நீ கொடுத்த மாத்திரை நல்லாவே வேலை செய்தது சஞ்சனா.இரவு செம தூக்கம்.தூக்கத்தில் கூட நீ தான் வந்தே.

நான் வந்தேனா !

ஆமாம் நீயே தான்.

நான் வந்து என்ன பண்ணேன்?

நீயா,நேற்று நான் ஒன்னு கேட்டேன் இல்ல,அதை நீ கனவில் வந்து தந்து விட்டு போன.

நீ என்ன கேட்ட,நான் என்ன தந்தேன்?.

என்ன அதுக்குள்ள மறந்து விட்டீயா கண்மணி,சரி நானே சொல்றேன்.நீ கனவில் வந்து என் முகத்தை உன் இரு மலர்கரங்களால் பிடித்து,அப்படியே உன் முகத்தை என் முகம் கிட்ட கொண்டு வரே.உன் மூக்கை என் மூக்கோடு உரசி, கன்னத்தோடு கன்னம் தேய்த்து,உன் விழியால் என் இமைகளை மூடி,உன் செவ்விதழ்களை என் இதழில் பதித்து ஒரு சூப்பரான இங்கிலீஷ் முத்தத்தை கொடுத்து விட்டு போனே கண்ணே.

"ம்..,கனவு எல்லாம் நல்லா தான் இருக்கு,கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் அது நீ சொல்லும் வார்த்தையில் தான் உள்ளது."

நேற்று நீ கனவில் கொடுத்த முத்தத்திற்கே என் உடம்பு எல்லாம் சில்லுன்னு சிலிர்த்து போச்சு தெரியுமா,நிஜத்தில் மட்டும் நடந்தால் எப்படி இருக்கும்.?

நீ ஆசைப்பட்டது கூடிய விரைவில் நடக்கும்,போதுமா!..சரி ராஜா,இன்னிக்கு ஆபீஸில் ஒரு சின்ன பிரச்சினை.நான் உங்க கூட நேற்று வெற்றியை கொண்டாடியதில் எங்க டீமில் உள்ள எல்லோருக்கும் என் மேல கோபம்,அப்புறம் ஜார்ஜ் தான் வந்து எல்லோரையும் சமாதனப்படுத்தினான்.

ம்,பரவாயில்லையே.ஜார்ஜ் இந்த மாதிரி நல்ல வேலை கூட செய்வானா?

அப்புறம் எங்க டீம் மெம்பர்ஸ் எல்லோரும் நாளை மாலை ஜார்ஜ் பிறந்த நாள் விழா போறாங்க.என்னையும் கட்டாயப்படுத்தி கூப்பிட்டாங்க.நான் போகட்டுமா?

தாராளமா போய்ட்டு வா சஞ்சனா.கூட வேலை செய்யும் டீம் மெம்பர்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தான் உறவு மேம்பட்டு வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும்.

நீயும் வரீயா ராஜா,

வேண்டாம் சஞ்சனா,அழைப்பு எனக்கு இல்ல.நான் வரக்கூடாது.

அதுவும் சரி தான்.ஆனா நாளைக்கு உன்னை பார்க்க முடியாதே என்ற வருத்தம் தான்.

பரவாயில்லை ஒரு நாள் தானே விடு.

ராஜா எனக்கு வடபழனி கோவிலுக்கு போகனும் ஆசையா இருக்கு,கூட்டிட்டு போறியா,

சரி வா போகலாம்.

வடபழனி கோவில் வாசலில்,

சஞ்சனா அவனிடம் "வாடா உள்ளே போகலாம்"

இல்ல சஞ்சனா நீ போய்ட்டு வா,நான் இங்கே வெயிட் பண்றேன்.

இடுப்பில் அவள் கை வைத்து கொண்டு முறைப்பாக "ஏன்?" என்று கேட்க

உள்ளே இருக்கிறவருக்கும் எனக்கும் ஒரு பஞ்சாயத்து நாலு வருஷமா ஒடிட்டு இருக்கு ,அதனால் தான்.

யாரை சொல்ற?,

அது தான் கையில் வேலை வைச்சிக்கிட்டு நிக்கிறாரே,அவர் தான்.

அடப்பாவி, முருகக்கடவுள் கிட்ட பஞ்சாயத்தா!

"ஒழுங்கா உள்ளே வாடா",என்று தரதரவென்று உள்ளே இழுத்து போனாள்.

ராஜா இறைவனிடம்,"நாலு வருஷம் முன்னாடி வரை உன்னை தினமும் பார்க்க வருவேன்.ஆனால் எப்போ எனக்கு காதலில் தோல்வி கொடுத்தாயோ ,அன்றில் இருந்து நான் உன்னை பார்க்க வருவதை நிறுத்தி விட்டேன்.இப்போ இவள் தான் மறுபடியும் உன்னை பார்க்க என்னை கூப்பிட்டு வந்து இருக்கா,இவளையும் என்கிட்ட இருந்து பிரித்து விடாதே!"என்று வேண்டி கொண்டான்.

சஞ்சனா அவன் நெற்றியில் திருநீறு வைத்து மென்மையாக ஊத,தென்றல் காற்று அவனை வருடியது போல் இருந்தது.

ம், எனக்கு குங்குமம் வைச்சு விடு,

தன் மோதிர விரலால் தொட்டு அவள் நெற்றியில் வைக்க போகும் போது,கை விரல் நடுங்கியது.

என்னடா உன் கை இப்படி நடுங்குது?

முதல் தடவை சஞ்சனா,ஒரு பொண்ணோட நெற்றியில் வைக்க போறேன் அதனால் தான்..

சீக்கிரம் வை,

எப்படியோ அவள் நெற்றியில் வைத்து விட, இருவரும் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்.

இப்ப சொல்லுடா உன் பஞ்சாயத்தை,என்ன சுஜி உன்னை விட்டு போனதால் இவர் மேல கோபமோ?

"ம்"என்று ஆமோதித்தான்.

டேய் மரமண்டை,அவ உன்னை விட்டு போனதால் தானே நீ எனக்கு கிடைச்ச.அவ இருந்திருந்தா நான் உன் வாழ்வில் வர முடியுமா?

அப்போ நீ வந்து எனக்கும் அவருக்கும் இருந்த நாலு வருட பஞ்சாயத்தை முடிச்சு வைச்சுட்ட.

ம்,அப்புறம் உன் வாழ்வில் எத்தனை பேரை காதலிச்சு இருக்க,

அந்த லிஸ்ட் நீண்டுகிட்டே போகுமே ,

அப்படியா,கொஞ்சம் லிஸ்ட்டை அவுத்து விடு பார்ப்போம்.

முதன்முதலில் ஐந்தாவது படிக்கும் போது,

என்னது ஐந்தாவது படிக்கும் போதேவா,

குறுக்கே பேசக்கூடாது,அப்புறம் நான் மறந்து விடுவேன்.

சரி சொல்லு,

ஐந்தாவது படிக்கும் போது,நான் காமாட்சி டீச்சர் என்ற ஒருவரை லவ் பண்ணேன்.ஆனா பாரு நான் லவ் பண்ண ஒரே மாசத்திலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.அப்புறம் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மைதிலி அக்காவை லவ் பண்ணேன்.அவங்களுக்கு இன்னும் பாஸ்ட்,ஒரே வாரத்தில் கல்யாணம் ஆய்டுச்சு.பாலிடெக்னிக் படிக்கும் போது தீபாராணி என்ற பொண்ணை லவ் பண்ணேன்.எந்நேரம்..! அவ படிக்கும் போதே அவங்க முறைமாமனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.அப்புறம் நான் பெங்களூரில் வேலை பார்க்கும் போது நித்யா என்ற பொண்ணை லவ் பண்ணி,முதல் முறை போய் பேசலாம் என்று பார்த்தா ,அவ கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்டறா.

சஞ்சனா சிரித்து கொண்டே"டேய் போதும் நிறுத்து,இதெல்லாம் லவ்வா,ஆமா இதில் ஒருத்தர் கிட்டயாவது லவ் சொன்னீயா,இல்லையா?

ம்ஹீம் யார்கிட்டேயும் சொல்லல.அதுவும் என்னோட லவ் கல்யாண ராசி வேற,நான் யாரை லவ் பண்றேனோ ,அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து விடும்.

பார்க்கலாம் உன் கல்யாண ராசி என்கிட்ட பலிக்குதா என்று பார்ப்போம்.

எனக்கும் அது தான் பயமா இருக்கு சஞ்சனா,எங்க உனக்கும் வேறு ஒருவனோடு கல்யாணம் நடந்து விடுமோ என்று.

அது எப்படிடா என்னை மீறி நடக்கும்.அப்புறம் முக்கியமாக நீ சுஜி காதலை பற்றி சொல்லவே இல்லையே.

அடுத்தது அது தான்.முதன்முதலில் நான் சென்னை வந்த பொழுது நந்தனத்தில் தான் வேலை செய்தேன்.அப்போ எல்லாம் bike கிடையாது.பஸ் தான்.நான் திருமங்கலத்தில் 41D பஸ் ஏறுவேன்.சுஜிதா அம்பத்தூரில் ஏறி அதே பஸ்ஸில் வருவா, சுஜிதா என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகிட்டே வருவா.வெறும் லுக்,லுக் மட்டும் தான்.ஆனா அவ என் ஆபிசில் தான் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு தெரியவே தெரியாது.நான் 3rd floor, அவ வேலை பார்த்தது கீழே ஷோ ரூமில்.அன்னிக்கு பஸ்ஸில் ஒரே கூட்டம்,நிக்க கூட இடம் இல்ல,தீடீர்னு பரவாயில்ல உங்க பேகை கொடுங்க என்று அவ என்கிட்ட கேட்ட பொழுது எனக்கு உடம்பே வேர்த்து போச்சு.

ஏன்டா இதில் என்ன இருக்கு?,

நீ வேற சஞ்சனா,இப்போ இருக்கிற மாறி எல்லாம் அப்போ நான் இல்லை.பொண்ணுங்க கிட்ட பேசணும் என்றாலே ,கை, கால் எல்லாமே நடுங்கும்.

அப்புறம் ஒருநாள் ராஜேஷ் தான்,சுஜிதாவை கூட்டிட்டு வந்து என்னோட பழக வைச்சான்.

ஓ,அண்ணன் ,மாமா வேலை எல்லாம் பார்த்து இருக்கு,அவனுக்கு இருக்கு ஒருநாள் கச்சேரி.சரி அப்புறம் அவகிட்டேயாவது உன் லவ்வை சொன்னீயா , இல்லையா?

நான் எங்கே சொன்னேன்? அவ தான் சொன்னா,அவ தான் முதன்முதலில் என்னை propose பண்ணிய பெண்.ராஜேஷ் தான் என்னை கன்வின்ஸ் பண்ணி லவ் பண்ண வைச்சான்.கடைசியில் என்னை விட better option வந்த உடனே என்னை விட்டு விலகிவிட்டாள்.எனக்கு ரெண்டு நாள் ஒரு மாதிரி தான் இருந்தது.அப்புறம் அந்த பாதிப்பில் இருந்து ராஜேஷ் தான் என்னை மீட்டு கொண்டு வந்தான்.ஆனா நீ என்னை விட்டு போனால் நான் அதே போல் மீள முடியுமா என்று தெரியல.

இங்க பாரு,அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது.ஒழுங்கா சீக்கிரம் என்கிட்ட லவ் சொல்லி என்னை கல்யாணம் பண்ற வழியை பார்.உன்னோட கல்யாண ராசி என்னிடம் வொர்க் அவுட் ஆகுதா என்று பார்க்கலாம்.அப்புறம் நீ முதல் முதல் காதல் சொல்லும் பெண் அது நானா தான் இருப்பேன்.

ம்,நீயும் வந்து எனக்கும் முருகருக்கும் இருந்த நாலு வருஷ பஞ்சாயத்தை தீர்த்து வைச்சிட்ட.

அதற்கு சஞ்சனா சிரிக்க,

சஞ்சனா நீ சிரிக்கும் போது உன் அழகு பன்மடங்கு கூடுது.அதில் என் உள்ளம் கொள்ளை போகுது.நீ பேசும் போது,உன் கண்மட்டும் இல்ல,நீ காதில் அணிந்து இருக்கும் லோலாக்கு கூட என் கூட பேசுது.

ம்,என்ன பேசுது,கொஞ்சம் கேட்டு சொல்லு.

ராஜா அவள் காதருகே தன் காதை வைத்து"அப்படியா ,சரி ஓகே" என்றான்.

என்ன சொல்லுச்சு என் கம்மல்?,

அது முட்டாளே,என் எஜமானி மேனியில் இருப்பதற்கு எங்களுக்கு எவ்வளவு கர்வமா இருக்கு, அந்த தேவதையே உன்னை தேடி வரும் போது நீ காலம் தாழ்த்துவது சரியா ?என்று கேட்டுச்சு,

ம் சரியா தான் கேட்டு இருக்கு,அதுக்கு இந்த மண்டு என்ன சொல்லுச்சு.?

இங்கே பார் கம்மல்,என்னவளின் மேனியில் வெயில் படாத இடத்தில் இருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் என்றால்,வெயில் படாத இடங்களை ஆள போகும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று கூறினேன்

"ச்சீ போடா" என்று சஞ்சனா வெட்கப்பட்டாள்.

அடுத்த நாள் மாலை,

சஞ்சனா மற்றும் அவள் குழு நண்பர்கள் ஜார்ஜ் பிறந்த நாள் விழாவிற்கு சென்றனர்.

ஜார்ஜ் வீட்டின் முகப்பை பார்த்த உடனே அவள் ஆச்சரியம் ஆனாள்.

உள்ளே அவன் வீட்டின் ஆடம்பரத்தை பார்த்து மூக்கில் விரல் வைத்தாள்."என்ன இது இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து கொண்டு ஏன் இந்த சிறிய வேலைக்கு வருகிறான் என்று"என்று ஒரு நிமிடம் நினைத்தாள்.ஜார்ஜ் சொல்லி வைத்த மாதிரி,அவன் அப்பா,அம்மா எல்லோரும் அவளிடம் நெருங்கி பழகினர்.

ஏய் சஞ்சனா,கம் வித் மீ,நான் என் வீட்டை சுற்றி காட்டுகிறேன்.வீட்டின் ஒவ்வொரு அறையை காட்ட,சஞ்சனா அதிசயித்து கொண்டே வர,கடைசியில் அவன் பெர்சனல் அறையை காட்டினான்.

"இது என்னோட பெர்சனல் அறை சஞ்சனா, வா வந்து உட்காரு.இந்த அறைக்கு என் அப்பா அம்மாவை கூட உள்ளே அனுமதிக்க மாட்டேன்.உன்னை தான் முதல் முதலில் கூட்டி வந்து இருக்கேன்."

சஞ்சனா அந்த கட்டில் மீது உட்கார,அதன் மிருதுவான தன்மையே அதன் ஆடம்பரத்தை உணர்த்தியது.சுவரில் மாட்டி வைக்க பட்டு இருந்த ஓவியங்கள்,மின் விளக்கு அலங்காரம் எல்லாம் கண்ணை கவர்ந்தன.

இந்த அறையோட இன்டீரியர் வேலை எல்லாம் மிக அழகா இருக்கு ஜார்ஜ்

எல்லாம் நானே பார்த்து பார்த்து செய்ய வைச்சேன் சஞ்சனா,ஆனா ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருந்துச்சு.ஆனா இப்போ நீ வந்த பிறகு அந்த குறை நீங்கி இந்த அறையின் அழகு முழுமை பெற்று இருக்கு சஞ்சனா.

ஜார்ஜ்,உனக்கு தான் இவ்வளவு வீட்டில் வசதி இருக்கே,அப்புறம் ஏன் போயும் போயும் இந்த telesales job வந்து செய்யற,

அது எனக்கு ஜஸ்ட் hobby சஞ்சனா,கூடிய சீக்கிரம் ஒரு பிசினஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ண போறேன்.அதுவரை இந்த வேலை எல்லாம் சும்மா ஒரு அனுபவத்திற்காக தான்.

அப்பொழுது ஜார்ஜ் அம்மா வந்து கேக் வெட்ட கூப்பிட,

வா சஞ்சனா ,கீழே கேக் வெட்ட போகலாம்..

Cake வெட்டும் போது,முதல் துண்டை தனக்கு தான் ஊட்டுவான் என்று எதிர்பார்த்து அவன் அப்பா,அம்மா வாயை திறக்க,ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக இது இன்று என்னோட ஸ்பெஷல் கெஸ்ட் சஞ்சனாவிற்கு தான் என அவளுக்கு ஊட்ட , சஞ்சனாவே விக்கித்து போனாள்.

கடைசியாக சஞ்சனா தன் கிஃப்ட்டை கொடுத்து விட்டு கிளம்ப,

இரு சஞ்சனா,நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன்.

இல்லை பரவாயில்ல ஜார்ஜ் ,நான் cab புக் பண்ணி போய் விடுகிறேன்.உனக்கு எதுக்கு சிரமம்?

Oh no சஞ்சனா கமான்,எப்படியும் நான் சங்கீயை ட்ராப் பண்ண தான் போறேன்.அவ வீடும் உன் வீடும் அருகே தானே இருக்கு.உன்னையும் சேர்த்து ட்ராப் பண்ணா போச்சு.நீ சங்கீதாவிடம் பேசிட்டு இரு. நான் கார் கீ எடுத்துட்டு வந்து விடுகிறேன்.

சங்கீதா சஞ்சனாவிடம்"என்ன சஞ்சனா ஜார்ஜ் உன்னை லவ் பண்ற மாறி இருக்கு,"

"எனக்கு அப்படி தெரியல சங்கீ"

"இல்லன்னா அவன் அப்பா,அம்மாவை விட்டு முதல் கேக் துண்டை உனக்கு ஊட்டுவானா.இங்க பாரு அந்த வெறும் பய ராஜாவை விட்டுட்டு ஜார்ஜ்ஜை லவ் பண்ணு.உன் எதிர்கால நன்மைக்கு சொல்றேன்."

ஜார்ஜ் சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,

"சஞ்சனா நீ என்னோட பிறந்த நாள் விழாவிற்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.நான் இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.good night.sweet dreams"என்று விடை பெற்றான்.

ஜார்ஜ் மொபைலுக்கு அவன் தோழன் பாலாஜி ஃபோன் செய்தான்.

"என்ன ஜார்ஜ் நீ விரித்த வலையில் பட்சி சிக்கிடுச்சா"

"எப்படி சிக்காம போய்டும் பாலாஜி,என் வீடு,என் லைஃப் ஸ்டைல்,என்னோட அழகு பார்த்து மயங்காதவர்கள் யாராவது உண்டா?.இன்னும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் அந்த சஞ்சனா என் வலையில் தானா வந்து விழுவா பாரு.இப்பவே அவள் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு இருக்கும்.அப்புறம் இருக்கு அந்த பிச்சைகார பையன் ராஜாவுக்கு"

சரி எப்படி ,சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறீயா,இல்லை மத்த பொண்ணுங்க மாறி அனுபவிச்சிட்டு கழட்டி விட போறீயா.

ம்,அவ்வளவு சீக்கிரம் அவ படுக்க மாட்டா,கல்யாணம் தான் பண்ணிக்கணும்.ஒரு 3 மாசம் நல்லா

அனுபவிச்சிட்டு தூக்கி எறிய வேண்டியது தான். என்று சிரித்தான்.

ஜார்ஜ் சஞ்சனா மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினானா?வாழ்க்கையில் தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்தித்து வரும் ராஜாவின் நிலை என்ன ஆகும்?

இரண்டு நாட்களுக்கு பிறகு,

ஒரு வாடிக்கையாளர் சஞ்சனாவின் அலுவலகத்திற்கே வந்து சண்டை போட்டு கொண்டு இருந்தார்.

என்ன பிரச்சினை என சஞ்சனா சங்கீதாவிடம் கேட்க,

எல்லாம் உன் கஸ்டமர் தான்,நீ தான் கஸ்டமருக்கு தப்பான பிளான் ஏதோ வித்து இருக்கே.அதனால் தான் கஸ்டமர் வந்து சத்தம் போட்டு கொண்டு இருக்கார்.

இல்லையே நான் எதுவும் தப்பான பிளான் எதுவுமே விக்கலயே.இரு நான் போய் பார்க்கிறேன்.

இப்போ நீ போக வேண்டாம்.ஜார்ஜ் ,தான் விற்றதா பழியை தன் மேல போட்டுக்கிட்டான்.நீ போனா பிரச்சினை இன்னும் பெருசா ஆகும்.பிரியா மேடமும் பேசிக்கிட்டு இருக்காங்க.நீ அமைதியா இரு போதும்.

சிறிது நேரத்தில் ஜார்ஜ் வெளியே வர,ஒரு வழியா பிராப்ளம் முடிந்து விட்டது சங்கீதா.

என்ன ஆச்சு,என்ன பிராப்ளம் என்று சஞ்சனா கேட்க,

அது ஒன்னும் இல்ல சஞ்சனா,நீ அவருக்கு communicate செய்த பிளான் வேற,ஆனா அவருக்கு ஆக்டிவேட் ஆன பிளான் வேற,கஸ்டமர் அந்த ஏரியா கவுன்சிலர் வேற.நம்ம டெக்னீஷியனை வேற பிடிச்சு வைச்சுகிட்டாங்க.எப்படியோ கன்வின்ஸ் பண்ணி பிரியா மேடம் கிட்ட அப்ரூவல் வாங்கி அவருக்கு அந்த பிளானை வாங்கி கொடுத்துவிட்டேன்.என்ன இந்த பிளானை விற்றது new joinee நீ என்று தெரிந்து இருந்தால் பிரியா மேடம் இந்நேரம் உன்னை வேலையை விட்டு நீக்கி இருப்பார்கள்.

ரொம்ப தேங்க்ஸ் ஜார்ஜ்.இந்த உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன்.

என்னது, வெறும் thanks மட்டும் தானா?

பின்ன வேற என்ன வேணும்.?

இந்த தடவை ஓணம் பண்டிகை முன்னாடி வரும் நம் கம்பெனி ஆண்டுவிழாவில் நீ டான்ஸ் ஆடி நம்ம டீமுக்கு வெற்றியை தேடி தரணும்

அவ்வளவு தானே,ஆடிட்டா போச்சு.

ஆனா அதில் ஒரு சிக்கல் இருக்கு சஞ்சனா.sales டீமில் இருக்கும் ராஜா சிறந்த டான்சர்,அவன் தான் எப்பவுமே வெற்றி பெறுவான்.அவனை எதிர்த்து நீ போட்டி போடணும்.

என்னது ராஜாவை எதிர்த்தா?என்னால முடியாது ஜார்ஜ்,

இங்க பாரு சஞ்சனா,நட்பு வேற, போட்டி வேற,இப்ப பாரு ipl போட்டியில் ஒரே நாட்டை சேர்ந்த அணியின் வீரர்கள் பங்கேற்று எதிர் எதிர் அணியில் விளையாட வில்லையா?அதனால் என்ன அவங்க நட்புக்குள் விரிசல் வந்ததா என்ன?அவங்க அவங்க அணிக்கு உண்மையா விளையாடறங்க அவ்வளவு தான்.

எல்லோரும் அவளை வற்புறுத்த,"சரி சரி நீ எனக்கு உதவி செய்ததால் நான் ஒப்பு கொள்கிறேன் ஜார்ஜ்"

சஞ்சனா தன் இடத்திற்கு சென்று வேலை பார்க்க,சங்கீதா ஜார்ஜ்ஜிடம் வந்தாள்.

என்ன ஜார்ஜ் ,என்ன உன் பிளான்?.

ரொம்ப சிம்பிள் சங்கீதா,சஞ்சனாவையும் ,ராஜாவையும் நேருக்கு நேர் மோதவிட்டு இருக்கேன்.கண்டிப்பாக இதில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு தான் உண்மையான வெற்றி.

எப்படி ஜார்ஜ் எனக்கு ஒன்னும் புரியல.

அது உனக்கு புரிஞ்சா நீ ஏன் இப்படி இருக்க போற,இங்க பாரு சங்கீ,சஞ்சனா வெற்றி பெற்றால்,ராஜா மனதில் தன்னை விட இவ பெட்டரா இருக்காளே என்று சஞ்சனா மீது பொறாமை வரும்.ராஜா வெற்றி பெற்றால்,சஞ்சனா மனதில் என்ன இவன் இந்த சின்ன போட்டி கூட நமக்காக விட்டு கொடுக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.இந்த விரிசலை மேலும் ஊதி பெரிதாக்கி அவர்களை பிரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு.அதற்கான கூலி நீ ஆசைப்பட்ட ஐபோன் மாடல் ஏற்கனவே ஆர்டர் பண்ணி ஆச்சு.அது நாளை உன் வீட்டில் டெலிவரி ஆகிடும்.

ரொம்ப தேங்க்ஸ் ஜார்ஜ்.நீ சொல்றதை நான் அப்படியே செய்யறேன்.

மாலை பார்க்கில் ராஜா சஞ்சனாவுடன்,

வாருங்கள் என் உள்ளம் கொள்ளை கொண்ட தேவதையே,தங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்து இருக்கிறேன்.

சஞ்சனா அவன் அருகில் அமர்ந்து"ராஜா உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்ல போறேன்."

"கூறுங்கள் தேவி தாங்கள் கூற வந்த முக்கியமான விசயம் என்னவோ..!!

நம்ம கம்பெனி ஆண்டு விழாவில் நான் ஆட போறேன் ராஜா

சூப்பர்,அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.ஆனா நான் வேற என்னவோ எதிர்பார்த்தேன்.

என்ன ஒரு சங்கடமான விசயம் தெரியுமா?

நான் உன்னை எதிர்த்து ஆட வேண்டிய சூழ்நிலை.

இன்னும் சூப்பர்,இதில் என்ன சங்கடம் இருக்கு,நீ உன் டீமுக்கு ஆட போற,நான் என் டீமுக்கு ஆட போறேன்.

அப்போ இதில் உனக்கு வருத்தம் இல்லையா?

இங்க பாரு என்னவள் என்னை எதிர்த்து போட்டி போட்டால் எனக்கு என்ன வருத்தம்.இந்த மாதிரி போட்டி எல்லாம் நமக்குள் இன்னும் பிணைப்பை உறுதி ஆக்கும்.இன்னும் சொல்ல போனால், நான் வெற்றி பெற்றால் வரும் சந்தோஷத்தை விட நீ வெற்றி பெற்றால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

நான் கூட நீ என்ன நினைப்பியோ என்று பயந்து கொண்டே வந்தேன் ராஜா,நீ இதை ரொம்ப எளிதாக எடுத்துகிட்ட,

ஆனா ஒன்று சஞ்சனா,நீ எனக்காக எதையும் விட்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு வரவே கூடாது. நல்லா பிராக்டீஸ் பண்ணு.நாம ரெண்டு பேரும் நம்ம டீமுக்கு 100% அர்ப்பணிப்போடு ஆடுவோம்.

இதுதான் என் ராஜாகிட்ட எனக்கு பிடிச்சது,என்று அவள் கட்டி அணைக்க,

சஞ்சும்மா பார்க்கில் எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்கடீ

போடா யார் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை.

போட்டிக்கு அடுத்த நாளே ஓணம்,அன்று நான் என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல போகிறேன்.

அந்த நாளுக்காக தான்டா நானும் காத்து இருக்கிறேன்.

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் வருகிறதா? இல்லை செயற்கையில் மணம் வருகிறதா? என்ற சந்தேகம் திருவிளையாடல் காலத்தில் இருந்தே இருக்குது சஞ்சனா,ஆனா உன் கூந்தல் வாசம் கண்ட பின் இன்று அந்த ஐயம் தீர்ந்தது.இந்த மாதிரி வாசம்,எந்த சோப்,அல்லது சீயக்காயில் கிடைக்காது.இந்த வாசம் இயற்கையாக தான் வருகிறது.நீ இப்படியே என்னை கட்டி பிடித்து கொண்டு இருந்தால் எனக்கு இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை.

சட்டென்று சஞ்சனா வெட்கத்தில் விலகி பேச்சை திசை மாற்ற விரும்பி,டேய் steps வேற அடுத்து ரெண்டு நாளில் வருது. நல்லா அட்டென்ட் பண்ணு.

என் கண்மணி நீ சொல்லி கொடுத்த விசயம் எல்லாம் கல்வெட்டு போல் மனசில் பதிஞ்சு இருக்கு.கவலையே படாதே,இங்கிலீஷில் கலக்கி விடுகிறேன்.

ஸ்டெப்ஸ் உண்மையில் ராஜா அருமையாக அட்டென்ட் செய்தான்.சஞ்சனா டான்ஸ் பிராக்டீஸ் செய்வதில் மும்முரமாக இருந்ததால் இருவரும் சந்திக்க நேரம் அமையவில்லை.நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்க,போட்டிக்கான நாளும் நெருங்கி கொண்டு இருந்தது.

என்ன ராஜா,நீயும் சஞ்சனாவும் ஒரே போட்டியில் எதிர்த்து ஆடறீங்க.எதுனா பிரச்சினை வர போகுது

இதில் என்ன பிரச்சினை இருக்க போவுது ராஜேஷ்,யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்குள் எந்த பொறாமை கிடையாது.

அப்படினா சரி தான்,ஆனா அதுக்காக அவளுக்கு விட்டு கொடுத்து விடாதே.நம்ம டீம் ஜெய்க்கணும்.

பார்க்கலாம்டா,அவ வேற பக்கா கதக் டான்சர்.ஸ்டெப்ஸ் எல்லாம் செமையா போடுகிறா.இந்த போட்டி எனக்கு நிச்சயம் ரொம்ப கஷ்டமா தான் இருக்க போகுது.

அப்புறம் வாசு,நேற்று முகலிவாக்கம் கஸ்டமர் கிட்ட இருந்து தலைதெறிக்க ஓடி வந்ததா கேள்விப்பட்டேன் உண்மையா?

ஆமா மச்சான்,அது ஒரு சோகக்கதை.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.நான் போய் சந்தித்த கஸ்டமர் ஒரு விமான பணிப்பெண்.நான் போனப்ப அப்ப தான் குளிச்சிட்டு வெறும் டவலோடு வந்து நிக்கிறா மச்சான்.கால் ரெண்டும் சும்மா வெள்ளை வெளேன்று வழு வழுவென்று இருக்கு.மேல ரெண்டு முலையும் டவலை துருத்திக்கிட்டு வெளியே வர துடிக்குது.அந்த நேரத்தில் என் நிலைமையை யோசிச்சு பாரு எப்படி இருந்து இருக்கும்.?ஏதோ பிளான் உளறி கொட்டி கடைசியில் அந்த பொண்ணும் கன்வின்ஸ் ஆயிடுச்சி.payment உள்ளே வாங்க தரேன் என்று சொல்லி உள்ளே பெட்ரூமுக்கு கூட்டிட்டு போய்டுச்சு மச்சான்.

அய்யயோ அப்புறம்,

அப்புறம் டக்கென்று pant ஜிப்பை பிடிச்சு இழுத்து அவுத்துடுச்சு மச்சான்.அந்த பொண்ணு டவலை தவிர உள்ளே ஒண்ணுமே போடல மச்சான்.

"டேய் அது உனக்கு எப்படி தெரியும் ?"ராஜேஷ் கேட்க.

மச்சான் அவ என் பேண்ட்டை அவுக்கும் போதே அவ டவலையும் அவுத்துட்டாடா,

"அப்புறம் என்ன மஜா தான்" ராஜேஷ் சீண்ட,

நமக்கு என்னிக்குடா நல்லது நடந்து இருக்கு மச்சான்,

சரி முழுசா சொல்லு,

என்னை படுக்கையில் தள்ளி,வந்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்தா மச்சான்.

அய்யோ சூப்பர்,

அவ முலையை எடுத்து என் வாயில் வைச்சா மச்சான்,அதுக்குள்ள வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டுச்சு.யாரு அது இந்த நேரத்தில் அவ போய் பார்த்தா அவன் புருஷன் அதுக்குள்ள வந்துட்டான்.

அய்யயோ வசமா மாட்டீனீயா,

அது தான் இல்லை,கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சுகிட்டேன்.அவங்க ரெண்டு பேர் பேசறதை ஒட்டு கேட்டப்ப தான் தெரிஞ்சது,அவ புருஷன் ஏதோ அரசியல்வாதியாம்.துப்பாக்கி எடுத்து டேபிள் மேல வைக்கும் போது உடம்பே நடு நடுங்கி போச்சு.ஏதோ பிளைட் கேன்சலாம்.அது தான் பாதியிலேயே திரும்பி வந்து இருக்கான்.அவன் பாத்ரூமில் உள்ளே புகுந்த உடனே எடுத்தேன் பாரு ஓட்டம்,அவசரத்தில் அவுத்து போட்ட பேண்ட் கூட கிடைக்கமால் கிடைச்ச லுங்கியை கட்டி கொண்டு பால்கனி வழியா பைப் பிடிச்சு கீழே குதிச்சு ஓடி வந்தேன் மச்சான்.

ராஜா"டேய் கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண நினைச்சா இந்த மாறி தான் ஆகும்."

டேய் ராஜா,எல்லா ஆம்பளையோட வீக்னஸ்ஸே இது தான். எல்லா ஆம்பளையும் சந்தர்ப்பம் கிடைக்காத வரை ராமன் தான்.நீயும் என்னோட இடத்தில் இருந்தால் கண்டிப்பாக தடுமாறி இருப்பே.

டேய் நான் கண்டிப்பாக தடுமாற மாட்டேன்.ஏன் நான் இப்போ காதலிக்கும் என் சஞ்சனாவை கூட கல்யாணம் முடிந்த பிறகு தான் தொடுவேன்.

ஆனால் விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது?சஞ்சனாவை கல்யாணம் முடிக்கும் முன்பே விதி ராஜாவை தொட வைக்க போகிறது.அந்த சமயம் வரும் பொழுது அவனும் நிலை தடுமாற தான் போகிறான்.​
Next page: Chapter 09
Previous page: Chapter 07