Chapter 14

F3 போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் அருள் வேகமாக உள்ளே நுழைந்தார்.அங்கு ஜட்டியோடு உட்கார வைக்க பட்டு இருந்த ராஜாவை பார்க்க,

டேய் ராஜா,என்னடா இது இப்படி வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கே,

யோவ் ஏட்டு,யாருய்யா இது இவனை இப்படி உட்கார வைத்தது?

ஐயா நம்ம சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு தான் விபச்சார வழக்கில் இவனை கைது பண்ணி கொண்டு வந்தாங்க,

யோவ் முதலில் இவனுக்கு ட்ரெஸ் கொடுங்க, எங்கேய்யா அந்த அன்பரசு?

ஏட்டு அதற்கு,"சார் அவர் வழக்கம் போல வெளியே. என்று ராகம் இழுக்க

என்ன மாமுல் வாங்க போய் இருக்கானா?

ஆமா சார்,

டேய் ராஜா எந்திரிச்சு ட்ரெஸ் போடு முதலில்,யோவ் அந்தாளு வந்த உடனே என் ரூமுக்கு வர சொல்லு.

சரிங்க சார்.

இன்ஸ்பெக்டர் அவர் அறையில் அவனை உட்கார வைத்து,..

ஏண்டா இந்த மாதிரி நடந்து விட்டது என்று எனக்கு ஒரு ஃபோன் பண்ண கூடாதா?

இல்ல சார்,நான் பழைய கம்பனி விட்டு வந்து 4 வருஷம் ஆச்சு.அதுவும் திடீரென்று நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியாகி எதுவுமே ஞாபகம் வரல. போனும் வாங்கி வைச்சுட்டாங்க.

சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளே நுழைய,ராஜா நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இன்ஸ்பெக்டர் அருள், அன்பரசை பார்த்து"எதுக்குயா ராஜாவை அரெஸ்ட் பண்ண,?"

சார் ,பலான தொழில் நடக்கும் ரோஹிணி இன்டர்நேஷனல் ஓட்டல் நான் ரெய்டு போகும் போது இவன் கையும் களவுமாகப் மாட்டினான்.

சரி மாட்டிய மத்த ஆளுங்க எங்கே?

சார் அது வந்து,

ஓ ,இவன் மட்டும் தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தானா?சரி விடு,இவன் கூட இருந்ததா சொல்ற அந்த பொம்பளை எங்கே,

சார் அது வழக்கமாக மாட்டும் செண்பகம் தான்.

நான் கேட்டது அந்த பொம்பளை எங்கே,?

சார்..அது வந்து

ஓ .,ரெண்டு பேர் மாட்டினாங்க,இவன் மட்டும் இருக்கான்.ஆனா அந்த பொம்பளைய மட்டும் வெளியில் விட்டுட்ட.

சார்..

என்னயா மென்னு முழுங்கற,முதலில் இவன் யாரு தெரியுமா?இவன் சிறந்த குடிமகன் என்று ஜனாதிபதி கையால் அவார்ட் வாங்கி இருக்கான்.

நான் இப்போ இன்ஸ்பெக்டராக இருப்பதற்கும் இவன் தான் காரணம் தெரியுமா?

எப்படி சார்?

நம்ம கமிஷனர் அலுவலகத்தில் போலீஸுக்கு தேவையான குரூப் சிம்கார்டு ..இவன் வேலை செய்த பழைய கம்பனி மூலமா ரெகுலரா இவன் தான் கொடுப்பான்.அப்போ தான் இவனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.ஒருநாள் இவனிடம் எவனோ ஒருவன் வந்து பொய்யான proof கொடுத்து நிறைய சிம் கார்டு வாங்கி இருக்கான்.அது பொய்யான proof என்று இவன் கண்டுபிடித்து தன் உயிரையே பணயம் வைத்து ரகசியமாக அவனை ஃபாலோ பண்ணியதில் அது தீவிரவாதிகளுக்காக பயன்படுத்துவதை கண்டுபிடித்து எனக்கு தகவல் சொன்னதால் தான் அவர்களை நாங்கள் எளிதாக வளைத்து பிடிக்க முடிந்தது.அதனால் தான் எனக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்தது.அவனுக்கும் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது கிடைத்தது.

சார் ஆனா எந்த நியூஸ் பேப்பர், டிவியில் எதிலும் இவன் முகம் வரவே இல்லயே

யோவ் நீயெல்லாம் எப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன?இவன் தான் தீவிரவாதிகளை பிடித்து கொடுத்தான் என்று தெரிந்தால் அடுத்த நாள் இவன் உயிரோடு இருக்க முடியுமா?இவன் சாதாரண மனுஷன்யா,தினமும் அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டாமா?.அதனால் தான் இவனோட போட்டோ வெளியில் போட கூடாது என்று கமிஷனர் தெளிவா சொல்லிட்டார்.இவன் இப்போ நினைச்சா கூட கமிஷனர் கிட்ட நேரடியாக பேச முடியும்.

என்ன ராஜா,இவர் மேல complaint கொடுக்கறீயா‌.நான் ஆக்சன் எடுக்கிறேன்.

இல்லை வேண்டாம் சார்.நான் கிளம்பறேன்.

சரி, நான் வந்து ட்ராப் பன்றேன்ப்பா

அப்பொழுது ராஜேஷ் மற்றும் நண்பர்கள் விசயம் அறிந்து வந்து சேர்ந்தனர்.

சார் என்னோட ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க,நான் கொஞ்சம் உடனே போகனும்.

அன்பரசு வெளியே வந்து"சாரிப்பா என்னோட ரிலேஷன் ஒருத்தன் சொல்லி தான் இந்த மாதிரி எல்லாமே பண்ண வேண்டியதாகி விட்டது"

உங்களை சொல்லி குற்றமில்லை சார்,என் ராசி அப்படி..!நான் பிறந்ததில் இருந்தே ஆசைப்பட்டது எதுவுமே கிடைச்சது இல்ல,நான் ஆசைப்படற பொண்ணு மட்டும் எனக்கு எளிதாக கிடைத்து விடுமா என்ன?

தம்பி நான் வேணா வந்து அந்த பொண்ணு கிட்ட பேசட்டுமா?

வேண்டாம் சார்,நான் பார்த்துக்கிறேன்.

ராஜேஷ் வண்டியில் ராஜா கிளம்ப,சஞ்சனா வந்த ஆட்டோ அடுத்த இரண்டு நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.

சஞ்சனா உள்ளே ஓடி வந்து இன்ஸ்பெக்டரிடம்,"சார் இங்கே ராஜா என்பவரை அரெஸ்ட் பண்ணி கொண்டு வந்தாங்க,நான் அவரை பார்க்க முடியுமா?"

நீ யாரும்மா?

நான் அவரை கல்யாணம் பண்ணிக்க போறவ சார்,

அப்படியா உட்காரும்மா

சார் அவரை நான் உடனே பார்க்கணும்.அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்.பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

அது எப்படிம்மா அவ்வளவு உறுதியாக சொல்ற,

சார்,அவன் உண்மையில் தப்பு செய்பவனாக இருந்தால் என்னையும்,என் அப்பாவையும் அவன் அங்கே வர சொல்லி இருக்க மாட்டான். நீங்க எதுக்காக அரெஸ்ட் அவனை பண்ணிங்களோ,அதே தொழிலில் இருந்த பெண்ணை மீட்டு அவளுக்கு மறுவாழ்க்கை தந்தவன் சார் அவன்.

ஓ,உனக்கும் அந்த விசயம் தெரியுமா?

நான் ஒரு மாதம் அவன் கூட நெருங்கி பழகி இருக்கேன் சார்.எந்த பெண்ணிடமும் கண்ணை பார்த்து தான் பேசுவான் சார்.என்னிடம் மட்டும் தான் இப்போ அவன் உரிமை எடுத்து கொள்கிறான்.அதுவும் என் அனுமதியோடு.

Good.ஆனா ஒரு பொண்ணு தனியா போலீஸ் ஸ்டேஷன் வருவது எல்லாம் தைரியம் வேணும்.

தைரியம் இல்ல சார்,அவன் மேல் இருக்கும் காதல்.அவனுக்காக என்ன வேணும் என்றால் செய்வேன்.இன்னொரு விசயம் சார்,வேறு எந்த பெண்ணும் கொடுக்காத சுகத்தை அவன் எப்ப விரும்பினாலும் நான் தருவேனே தவிர, அவன் என்னை விட்டு வேறு பெண்ணை தேடி செல்லும் நிலையை உருவாக்கவே மாட்டேன்.

என்னை நீ ரொம்ப ஆச்சரியப்படுத்திட்ட,உன் பேரு என்னவென்று நான் கேட்கவே இல்ல,

என் பேரு சஞ்சனா சார்,

அவன் நல்ல மனசுக்கு ஏத்த ஜோடி நீ தான்.உங்க கல்யாணத்திற்கு என்னை கூப்பிடுங்க.அவன் எந்த தப்பும் செய்யல.அவனை வீட்டுக்கு அனுப்பி ஆச்சு.

ரொம்ப தேங்க்ஸ் சார்

சஞ்சனா ராஜா வீட்டுக்கு விரைய,ராஜாவோ சஞ்சனா வீட்டுக்கு ராஜேஷின் பைக்கில் சென்று கொண்டு இருந்தான்.

சஞ்சனா வீட்டு காலிங்பெல்லை ராஜா அழுத்த சஞ்சனாவின் அப்பா வந்து திறந்தார்.அவனை வெளியேவே நிற்க வைக்க

மாமா,ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்.

மாமா கீமா என்று கூப்பிட்ட அவ்வளவு தான்டா உன் பல்லை பேத்துருவேன்.அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பி வந்துட்டியா.சரியான கிரிமினல் தான்டா நீ

சார் ,நான் தப்பித்து எல்லாம் வரல.நான் எந்த தப்பும் செய்யல என்று தான் என்னை வெளியில் விட்டாங்க..

அது எப்படிடா ,ரெண்டே மணி நேரத்தில் நீ எந்த தப்பும் செய்யவில்லை என்று போலீஸ் கண்டுபிடித்து உன்னை விட்டு விட்டார்களா..!!.எவனாவது காதில் பூ சுற்றி இருப்பான்.அவன் கிட்ட போய் உன் கதையை விடு.

ராஜா வெறுப்படைந்து "சார்,நீங்க சஞ்சனாவை கூப்பிடுங்க,நான் அவகிட்ட பேசிக்கிறேன்."

டேய் அவ என் பொண்ணு,எனக்கு இல்லாத உரிமை உனக்கென்னடா அவமேலே. அவ உன் முகத்தில் கூட விழிக்க விருப்பபடல,இந்த இடத்தை விட்டு உடனே நீ காலி பண்றீயா,இல்லை நான் போலீஸை கூப்பிடட்டுமா?

"சார் ,நானே இப்போ போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தான் வரேன்.நீங்க யாருக்கு வேணா ஃபோன் பண்ணுங்க,சஞ்சனா வெளியே வா சஞ்சனா" என்று கத்தினான்.ஆனால் அவள் உள்ளே இருந்தா தானே வெளியில் வர,

"டேய் நான் தான் சொல்றேன் இல்ல,அவ உள்ள தான் இருக்கா ஆனா உன்னை பார்க்க கொஞ்சம் கூட விருப்பபடல .இன்னொரு முக்கியமான விசயம் இன்னொரு தடவை அவளை பார்க்க வருகிற வேலை எதுவும் வச்சிக்காத,ஏன்னா அவளுக்கு இன்று ஒப்பு தாம்பூலம் நடந்து விட்டது.மாப்பிள்ளை யார் தெரியுமா?அவளோட மேனேஜர் பிரியா தம்பி அர்ஜுன் தான்.நீ ஏதாவது தகராறு பண்ணா அவ மேனேஜர் கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டே தூக்கிடுவேன்.அப்புறம் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்கணும்.

ராஜேஷ் கோபப்பட்டு,"யோவ் நிப்பாட்டுயா,போனால் போகுது என்று பார்த்தால் ரொம்ப ஓவரா தான் துள்ளுற.இந்த வேலை போனால் எங்களுக்கு என்ன வேற வேலை கிடைக்காதா?.நாங்கள் எல்லாம் உழைக்கிற வர்க்கம்,எங்க போனாலும் எங்களுக்கு வேலை உண்டு.உன் பொண்ணு தான் முதலில் இவன் தான் வேணும்னு சுற்றி சுற்றி வந்துச்சு.இவன் விலகி விலகி தான் போனான் தெரிஞ்சுக்க.

என் பொண்ணு இவன் நல்லவன் என்று ஏமாந்து சுற்றி சுற்றி வந்தா,இப்போ பொறுக்கி என்று தெரிஞ்ச பிறகு வேண்டாம் என்று ஒதுக்கிறா.உன் நண்பன் யோக்கியவனா இருந்தால் என் பொண்ணு கிட்ட கூட நெருங்க கூடாது என்று நீ சொல்லு..

"யோவ் இன்னொரு தடவை என் நண்பனை பொறுக்கி என்று சொன்னே வயசானவர் என்று கூட பார்க்க மாட்டேன்.அப்புறம் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி விடுவேன்.ஏய் சஞ்சனா உங்க அப்பா பேசறத கேட்டுட்டு உள்ளே உட்கார்ந்துக்கிட்டு என்னடி பண்ற.யோவ் கிழவா நீ இப்போ உயிரோடு இருப்பதற்கு காரணமே இவன் தான் ,"என்று கூற வந்தவனை ராஜா தடுத்தான்.

"வேண்டாம் ராஜேஷ் நாம போய்டலாம்".

ராஜா சஞ்சனா அப்பாவிடம்"தப்பு செய்ஞ்சவனுக்கு கூட தன் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்.ஆனா நான் தப்பே செய்யாதவன் சார்.இனிமேல் உங்க பொண்ணு கண் முன்னாடி நான் வர மாட்டேன்.உங்களுக்கு என்னை வேலையை விட்டு தூக்க வேண்டிய அவசியமே இருக்காது.நானே பேப்பர் போட்டு போய்டறேன். "

ராஜா திரும்பி திரும்பி பார்த்து கொண்டு கண்ணில் கண்ணீரோடு வெளியேற,"ராஜேஷ் நான் போய்ட்டு வரேன்டா"

இருடா நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்.

இல்ல மச்சான் என் வண்டி ரோஹிணி ஓட்டல் கிட்ட நிக்குது.நான் அதை எடுத்துகிட்டு அப்படியே ஊருக்கு போறேன்.

டேய் அப்போ நீ நாளை வேலைக்கு வரலயா?

"இல்ல ராஜேஷ்,இதற்கு மேல் நான் இந்த வேலைக்கு வர மாட்டேன்.சென்னையை விட்டே போக போகிறேன்."

டேய் இவளுக்கு பயந்துகிட்டு நீ ஏண்டா வேலையை விட்டு போற,?

இல்ல ராஜேஷ்,சுஜிதாவாது நேரில் வந்து குறைந்தபட்சம் தன்னோட காதலை முறித்து விட்டு போனாள்.ஆனா இவ என் கண் முன்னாடி கூட வரல.அந்த அளவுக்கு இவகிட்ட நான் கெட்ட பேரை சம்பாதித்து இருக்கேன்.அதுவும் இவளை ரொம்பவே நேசித்து விட்டேன்.இங்கே இருந்தால் அவ ஞாபகமாகவே இருந்து நான் ஏதாவது என்னை பண்ணிக்கிடுவேன்.

ராஜேஷ் பதறி"டேய் வேண்டாம்டா"

"புரிஞ்சிக்க ராஜேஷ்,என் அம்மா மற்றும் தங்கைக்காக நான் உயிரோடு இருப்பது அவசியம்.இங்கே இருந்தால் என்னை தப்பான முடிவு எடுக்க வழி வகுக்கும்".அவன் மேலும் சில விசயங்களை கூற கூற ராஜேஷ் அதிர்ச்சியாகி நின்றான்.நான் கிளம்பறேன்டா

ராஜேஷ் ,ராஜா கூறுவதை கேட்டு தடுக்க முடியாமல் திகைத்து நின்றான்.தன்‌ உயிர் நண்பன் போவதை பார்த்து அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆனால் சஞ்சனாவோ ராஜாவுக்காக அவன் ரூம் வாசலில் காத்து கொண்டு திரும்ப திரும்ப அவனுக்கு ஃபோன் அடிக்க அது ஸ்விட்ச் ஆப் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

ராஜா வண்டியை எடுக்க தொடும் பொழுது ,அவனுக்கு சஞ்சனாவின் நினைவுகள் அலைமோதியது. பைக்கில் அவள் மலர்கரங்களால் அவனை பின்னி கொண்டு ஊர் சுற்றியது கண்முன் வர,கோபத்தில் பைக்கை எட்டி உதைத்தான்.என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து குளிர்காய தான் வந்தாயா சஞ்சனா என்று பைத்தியம் போல வெறி கொண்டு வானத்தை நோக்கி கத்த சாலையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பி அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர்.அமைதியாக தரையில் உட்கார்ந்து வாயை மூடி அழுதான்.கீழே விழுந்த பைக் உந்து வேகத்தில் பின்சக்கரம் மட்டும் சுற்றி கொண்டு இருந்தது.ராஜா தன் பைக்கை சகோதரன் போல் பாவித்து வந்தான்.எத்தனையோ முறை அவன் களைப்பில் வண்டியை ஒட்டி விபத்து நடக்க இருந்த சமயத்தில் எல்லாம் பலமுறை இந்த பைக் அவனை காப்பாற்றி இருக்கிறது.இவனல்லவா என்னையும்,என் குடும்பத்தையும் வாழ வைக்கிறான் என வேகமாக சென்று பைக்கை நிமிர்த்தி "சாரிடா அவள் மேல் உள்ள கோபத்தில் உன்னை உதைத்து விட்டேன்.என்னை மன்னிச்சிடு."என மானசீகமாக தன் பைக்கிடம் மன்னிப்பு கேட்டான்.

பைக்கில் ஊர் சென்றால் அவள் நினைவுகள் அலை அலையாக தொடர்ந்துவரும் என்று பைக்கை கொண்டு சென்று கோயம்பேட்டில் விட்டு விட்டு பஸ்ஸில் சென்றான்.

அடுத்த நாள் காலை வழக்கமாக சந்திக்கும் இடத்தில்,

வாசு ராஜேஷிடம் "ராஜேஷ் எங்கடா ராஜாவை காணோம்"

அவன் இதுக்கு மேல் வரமாட்டான் வாசு.வேலையை விட்டு நிக்க போறான்.

டேய் என்னடா சொல்ற,இப்ப தான்டா அவன் TL ஆக செலக்ட் ஆனான்.போஸ்டிங் வருவதற்குள் ஏண்டா இப்படி ஒரு முடிவு?

"எல்லாம் சஞ்சனாவால் வந்த வினை" என்று ராஜேஷ் சொல்லும் பொழுதே சஞ்சனா அங்கே வர,

வாசு உடனே"மச்சான் சஞ்சனா தான் வரா"

சஞ்சனா ராஜேஷிடம்"அண்ணா ராஜா எங்கே"

ராஜேஷ் கோபத்துடன்"போதும் சஞ்சனா உன் நாடகம் எல்லாம்.எத்தனை தடவை தான் எல்லோரும் என் நண்பனை காயப்படுத்திட்டே இருப்பீங்க.உன்னால தான் அவன் இந்த வேலையையும் விட்டு எங்களையும் விட்டு போய்ட்டான்.

என்ன அண்ணா சொல்றீங்க,வேலையை விட்டுட்டானா?நான் என்ன தப்பு பண்ணேன்?

ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே சஞ்சனா,நேற்று நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து உங்க வீட்டில் அவனை எப்படி அசிங்கப்படுத்தினீங்க.அதுவும் உன் அப்பா உனக்கும் ,பிரியா தம்பி அர்ஜுனுக்கும் கல்யாணம் முடிவு ஆயிடுச்சு என்று சொன்னார்.உன் வாழ்கையில் ராஜா திரும்ப குறுக்கிடுவதாக இருந்தால் அவனை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் மிரட்டினார்.வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி ,கிரிமினல் என்று திட்டினார்.அதை எல்லாம் நீ கேட்டுட்டு உள்ளே சும்மா தானே இருந்தே..

அண்ணா நேற்று நீங்க வந்ததே எனக்கு தெரியாது.நான் நேற்று இரவு 10 மணி வரை ராஜா ரூம் கிட்ட தான் அவனுக்காக காத்திட்டு இருந்தேன்.

இந்த காதலால் அவன் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் சஞ்சனா.அவனோட ராசி அப்படி.இதற்கு மேல் அவன் வாழ்வில் நீ வராமல் இருப்பது தான் அவனுக்கும் நலம் உனக்கும் நலம்.உனக்கு கிடைச்ச வாழ்வை நீ நல்லா வாழு.அவன் பாவம் விட்டுடுங்க.

"ஆமாம் சஞ்சனா உன்னால தான் எங்க நண்பனை நாங்க இழந்துட்டு நிக்கிறோம்"வாசுவும் ஆமோதித்தான்.

டேய் முட்டாள்களா,ராஜாவுக்காக கவலைபட ஃப்ரெண்ட்ஸ் என்று நீங்க இருக்கீங்க..!எனக்காக யாரு இருக்காங்க.என் நிலைமையில் இருந்து யாராவது யோசித்து பார்த்தீங்களா?என் அப்பா மட்டுமே.அதுவும் ஒரு பொண்ணாக என்னால நிறைய விசயங்களை என் அப்பா கிட்ட கூட சொல்ல முடியாது.ஏதோ ராஜா மூலமா,அவனோட அம்மா எனக்கு அம்மாவாகவும்,நீங்க எல்லாம் எனக்கு அண்ணனாகவும் கிடைச்ச சந்தோஷத்தில் இருந்தேன்.தங்கை என்ற உரிமையில் தான் உங்களை அப்பப்ப அடிச்சேன்.ஒருவேளை என் அம்மா இருந்து இருந்திருந்தால் .."என சொல்லும் போதே அவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.சமாளித்து "சரி விடுங்க எனக்கு கிடைச்ச வாழ்க்கை அவ்வளவு தான்.ஆனா அவனை அப்படியே விட்டுட்டு எல்லாம் என்னால் போக முடியாது.நானே தேடிக்கிறேன்."கண்ணீரோடு சஞ்சனா திரும்ப

சஞ்சனா கூறிய வார்த்தைகள் ராஜேஷை முற்றிலும் நிலைகுலைய செய்தது "நில்லு சஞ்சனா உன் அண்ணன் தான் இப்படி முட்டாள்தனமா எதுனா பேசினா தங்கச்சி நீயும் கோவிச்சிக்கலாமா?நீ உத்தரவு இடு சஞ்சனா, நான் என்ன செய்யனும்."

நான் ராஜா மொபைலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருக்கேன்.அவன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது.

அவன் மொபைல் நேற்றே போலீஸ் ஸ்டேஷனில் ஆஃப் ஆயிடுச்சு சஞ்சனா.இன்னும் ஆன் பண்ணல.அவன் சொந்த ஊருக்கு தான் போய் இருக்கான்.

அப்போ நான் உடனே அவன் ஊருக்கு கிளம்பறேன்.

அவன் இப்போ அங்கே இல்ல சஞ்சனா.நானே காலையில் ஃபோன் பண்ணி தான் தெரிந்து கொண்டேன்.

ஆனா அவர் நம்பர் இப்போ வரை ஸ்விட்ச் ஆஃப் என்று தானே வருது.நீங்க எப்படி கால் பண்ணீங்க,

அவன் நம்பர் தானே ஸ்விட்ச் ஆஃபில் இருக்கு,ஆனால் அவன் தங்கச்சி நம்பர் on ல தானே இருக்கு.

அப்போ நான் உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி எங்கே இருக்கான் என்று கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

அது ரொம்ப கஷ்டம் சஞ்சனா,ராஜா தான் எங்கே போறேன் என்று யார்கிட்டேயும் சொல்ல கூடாது என அவன் தங்கச்சிகிட்ட சொல்லிட்டு போய் இருக்கான்.அவ அண்ணன் வார்த்தையை மீறி ஒரு விசயம் அவ சொல்ல மாட்டா.நான் கூட எவ்வளவு கேட்டும் அவ வாயே திறக்கல.அவ சரியான கிரிமினல்,ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோ.சின்ன வயசுல அவன் tvs excel எடுத்து கொண்டு தங்கச்சியை உட்கார வைத்து வீட்டுக்கு தெரியாம ரவுண்ட்ஸ் அடிச்சு இருக்கான்.அப்போ கீழே விழுந்து அவ தங்கச்சி காலில் silencer பட்டு வெந்து போச்சு.வீட்டில் மட்டும் சொல்லாத குட்டி, அப்பா என்னை பொளந்து விடுவாங்க என்று அவன் சொன்ன ஒரே வார்த்தைக்காக 4 வயசு குழந்தையாக இருக்கும் போதே அந்த பொண்ணு வீட்டில் வாயே திறக்கவில்லை.எப்படி அடிச்சு கேட்டும் சுத்தமா வேலைக்கே ஆகல.அப்புறம் தங்கச்சி அடி வாங்கறத பார்த்து மனசு கேட்காம கடைசியில் இவன் தான் உண்மையை ஒத்துகிட்டான்.இப்ப வரை அவ அண்ணன் ஒரு வார்த்தை சொன்னால் அந்த பொண்ணு மீறுவதே கிடையாது.

இல்ல அண்ணா,எனக்கு வேறு ஆப்ஷன் இல்ல,நான் அவளுக்கே ஃபோன் அடிக்கிறேன்.

சஞ்சனா திவ்யாவிற்கு ஃபோன் அடிக்க,முதல் அழைப்பிலேயே எடுக்கப்பட்டது.

என்ன அண்ணி,உங்களுக்கும் அண்ணனுக்கும் எதுனா பிரச்சினையா?மூஞ்சி வாடி இருப்பதை நான் கேட்டேன்.எதுவுமே வாயை திறக்கல.அப்புறம் அவன் சென்னையில் வேலையை விட்டு விட்டு மீண்டும் அவனுக்கு பிடிக்காத பெங்களூர் வேலைக்கு போக போறதா சொன்னான்.

அப்போ அவன் பெங்களூரில் தான் இருக்கானா திவ்யா ?

இல்ல அண்ணி..

பொறுமையை சோதிக்காதே திவ்யா,அவன் எங்கே இருக்கான் என்று மட்டும் சொல்லு.

சாரி அண்ணி ,என் அண்ணண் யார்கிட்டேயும் சொல்ல கூடாது என்று சொல்லி இருக்கு.இன்னும் ரெண்டு மூணு நாளில் அவன் சென்னை வருவான்.அப்போ பார்த்துக்கோங்க

திவ்யா நிலைமை புரியாமல் பேசாத,இந்த சூழ்நிலையில் உன் அண்ணனுக்கு உடனே நான் கண்டிப்பா தேவை.ஏற்கனவே எந்த தப்பும் செய்யமாலே விதி எங்களை சுத்தி சுத்தி அடிக்குது.இன்னும் ரெண்டு மூணு நாள் என்றால் எங்கே நான் அவனை இழந்து விடுவேனோ என்று பயமாய் இருக்குது.தயவு செய்து சொல்லு

என்னால் நேரடியாக சொல்ல முடியாது. உங்களுக்காக வேணா ஜாடை மாடையா சொல்றேன்.நீங்களே கண்டுபிடிச்சு கொள்ளுங்கள்.

அவன் இப்போ போய் இருக்கும் இடம் நாற்புறமாக சதுரமாய் திசைக்கு ஒன்றாய் மலை,அதன் நடுவில் சுந்தரமாய்,சந்தனமாய் லிங்கம்.இது தான் அவன் போய் இருக்கும் இடம்.

இதை வச்சு எப்படிடி கண்டு பிடிக்கிறது,எதுனா க்ளூ கொடு..

அவன் போய் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊரின் கோவில் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் சின்னத்தில் உள்ளது.இவ்வளவு தான் என்னால் க்ளூ கொடுக்க முடியும்.இதற்கு மேல் கண்டுபிடிக்க வேண்டியது உங்க திறமை என்று வைத்து விட்டாள்.

எப்படியோ சஞ்சனா அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டாள்.(வாசகர்கள் கண்டுபிடித்தால் comment இல் தெரிவிக்கலாம்.கட்டாயம் இல்லை)

சஞ்சனா நானும் உன் கூட உடனே வரேன்,ராஜேஷ் சொல்ல

இல்ல அண்ணா,இந்த தடவை நான் மட்டும் தனியா போய் என் சொந்த முயற்சியில் தான் அவனை இங்க கூட்டி வர வேண்டும்.அப்போ தான் எங்களுக்குள் மீண்டும் பிரிவு உண்டாகாது.அங்கே போவதற்கு முன்னாடி என் அப்பாகிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.

ராஜேஷ் அவளிடம் கண்கலங்க "சஞ்சனா அப்புறம் இன்னொரு தடவை எனக்கென்று யாரும் இல்ல என்று மட்டும் சொல்லாதே.இந்த ரெண்டு அண்ணன்கள் எப்பவுமே உன் கூட தான் இருப்போம்.ராஜாவே வந்தாலும் நாங்க உன் பக்கம் தான்.உன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அந்த ராஜா பையனை நான் சும்மா விட மாட்டேன்.வெற்றி உன் பக்கம் தான்டா. நீ போய்ட்டு வாடா செல்லம்."

வாசுவும் சஞ்சனாவிடம் "சிஸ்டர் உங்களுக்கு எப்பவெல்லாம் போர் அடிக்குதோ அப்பவெல்லாம் என்னை வந்து அடிச்சு பழகிக்கோங்க .உங்களுக்காகவே இந்த பாடியை நான் இன்சூரன்ஸ் பண்ணி வச்சி இருக்கேன்."

" சரிங்க அண்ணன்ஸ் நீங்க என்னுடன்

இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை",என்று சஞ்சனா சிரித்து கொண்டே கிளம்பினாள்.​
Next page: Chapter 15
Previous page: Chapter 13