Chapter 19

ஜார்ஜ் இந்த மாலில் உள்ள உணவகத்திற்கு ரெகுலராக வருவது வழக்கம்.சாப்பிட்டு வரும் வழியில் ஜாலியாக பாட்டு பாடி கொண்டு வர,ராஜா அவன் சத்தம் கேட்டு உஷாரானான்.ஜார்ஜ் கார் கதவை திறக்கும் பொழுது ராஜா முகத்தை கைக்குட்டையால் மூடி கொண்டு ஜார்ஜ் பின்னே சென்று அவன் கழுத்தில் ஓங்கி அடிக்க,ஜார்ஜ் நிலை தடுமாறி விழுந்தான்.ஜார்ஜ் சுதாரித்து எழுந்து ராஜாவுடன் சண்டை போட்டு கொண்டே,யார் என்று பார்க்க ராஜா முகத்தை நோக்கி கை நீட்ட,ராஜா நீட்டிய அவன் கையை முதுகு புறம் மடக்கி,கார் கதவின் கண்ணாடியில் அவன் முகத்தை உள்ளே அழுத்தி கண்ணாடியை மேலேற்ற ஜார்ஜ்ஜின் முகம் கார் கதவின் கண்ணாடியில் சிக்கி கொண்டது.

ராஜா பக்கத்தில் உள்ள பார்க்கிங்கில் பயன்படுத்தபடும் ஸ்டீல் பைப்பை உருவி கொண்டு அவன் பிட்டத்தில் ,பள்ளி கூடத்தில் வாத்தியார் அடிப்பது போல மாறி மாறி பொளக்க,ஜார்ஜ் வலி தாங்காமல் கதறினான்.

அவன் கதறிய சத்தம் கேட்டு,அங்கு இருந்த செக்யூரிட்டிகள் ஓடி வரும் சத்தம் கேட்க,ராஜா பைப்பை வீசி விட்டு கிளம்பினான்.

ஜார்ஜ் கார் கதவில் சிக்கி இருந்தபடியே "முகத்தை மூடி கொண்டு அடிக்கிறீயே உனக்கு வெட்கமா இல்ல,கண்டிப்பாக எனக்கு தெரிந்தவனாக இருப்பே,உன்னை கண்டுபிடித்து சும்மா கூட விட மாட்டேன்"என்று கத்த,

ராஜா கொஞ்சம் கூட பதறாமல்"இதுவரை எத்தனை பேர் கிட்ட உதை வாங்கி இருக்க ஜார்ஜ்,ஒருவேளை நிறைய பேர் நீ உதை வாங்கி இருந்தால் நான் யார் என்று கண்டுபிடிப்பது கடினம்.ஆனா ஒரே ஒருத்தனிடம் உதை வாங்கி இருந்தால் அது தான் நான் "என்று ராஜா க்ளூ தர ஜார்ஜ் மூளையில் மின்னல் வெட்டியது.

ஜார்ஜ் இதுவரை அடி வாங்கியது ஒருவனிடம் மட்டுமே அது..

"ராஜாவாடா நீ"என்று ஜார்ஜ் அதிர்ச்சியில் கேட்டான்,

"பரவாயில்லை கண்டு பிடிச்சிட்ட,இன்னொரு தடவை எங்க ரெண்டு பேர் வாழ்க்கையில்

நடுவில் வந்தே அவ்வளவு தான் நீ இப்ப மாதிரி உசிரோடு விட்டு போக மாட்டேன்"என்று மிரட்டி விட்டு மின்னலென மறைந்தான்.

செக்யூரிட்டிகள் வந்து அவனை கார் கண்ணாடியில் இருந்து மீட்டு,சார் என்ன ஆச்சு என்று கேட்டனர்.

தன்னால் ராஜாவை எதிர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்த செக்யூரிட்டிகள் மீது எரிந்து விழுந்தான்.அவன் மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகியது.ராஜா அவன் பிட்டத்தில் அடித்த அடியால் காரில் சரியாக கூட அவனால் உட்கார கூட முடியவில்லை. "ஐயோ இன்னும் கொஞ்ச நாளுக்கு குப்புற படுத்து தான் தூங்கனும் போலயே "என்று புலம்பினான்

காரை மெல்ல வெளியே கொண்டு வந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க அதில் அவனுக்கு பழக்கமான வாடை வந்தது.மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள சிறிது குடித்த போது அதில் மது கலந்து இருப்பது தெரிய வந்தது.அப்பொழுது அந்த நேரம் ஜார்ஜ் காரை நிறுத்த சொல்லி போலீஸ் கைகாட்ட ஜார்ஜ் நிறுத்தாமல் காரை ஓட்டினான். எங்கே நிறுத்தினால் தான் குடித்து இருப்பதை கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தால் நிறுத்தாமல் ஒட்ட,அப்பொழுது ஜார்ஜ் மொபைலுக்கு ஒரு ஃபோன் வந்தது.

ஜார்ஜ் போன் எடுக்க,சஞ்சனா மறுமுனையில் பேசினாள்.

"என்னடா ஜார்ஜ் ,எப்படி இருக்கே,"

யாரென்று புரியாமல் "யார் பேசறது?"என்று ஜார்ஜ் கேட்க,

"நான்டா சஞ்சனா..!"என்ன என் குரல் கூட மறந்து போச்சா?

ஜார்ஜ் சந்தேகத்தோடு"ஆனா வேற நம்பரில் இருந்து கால் வருது."என்று கேட்டான்.

"பின்னே இந்த விசயத்துக்கு எல்லாம் என் நம்பரில் இருந்தா ஃபோன் பண்ணுவாங்க..என்னோட ராஜாவை போலீசில் மாட்டிவிட்ட இல்ல,அதுக்கு பதிலுக்கு பதில் உன்னை இப்போ போலீசில் மாட்டி விட்டு இருக்கேன்.."

ஜார்ஜ் சத்தமாக"ஹே ச்சீ உன்னை என்னவோ நினைச்சேன் இவ்வளவு மொக்கையாகவா திட்டம் போடுவே,என் வாட்டர் பாட்டிலில் ட்ரிங்க்ஸ் கலந்து வைச்சா என்ன நடக்கும்?நான் போலீசில் மாட்டினாலும் இது ஜஸ்ட் drink and drive கேஸ் தான்.என் மாமா மூலமா fine கட்டிட்டு வெறும் அரை மணி நேரத்தில் வெளியே வந்து விடுவேன்.இது தான் உன் பழிவாங்கலா" என்று சிரித்தான்.

சஞ்சனாவும் சிரித்து கொண்டே,"நல்லா சிரிடா மவனே,என்னை பற்றி நீ புரிந்து கொண்டது அவ்வளவு தான்.நான் என்ன அவ்வளவு முட்டாளாடா ஜார்ஜ்,உன் கார் டிக்கியை கொஞ்சம் திரும்பி பார் மகனே..!

ஜார்ஜ் திரும்பி எட்டி பார்க்க,ஒரு குழந்தை வாய் பொத்தி கைகட்டி மயக்க நிலையில் இருந்தது.பின்னாடி வேறு போலீஸ் வேன் துரத்தி கொண்டு வந்தது.

ஜார்ஜ் பதறி போய்,"யார் குழந்தைடி இது?"என்று அலறினான்.

சஞ்சனா கம்பீரமாக செய்தி வாசிப்பாளர் போல் "கமிஷனர் பேரன் கடத்தல்,கடத்திய ஜார்ஜ் என்ற நபரை ஒரு பெண் கொடுத்த துப்பு மூலம் அன்றிரவே போலீசாரால் மடக்கி பிடிக்கபட்டான்.அந்த பெண் வேறு யாருமல்ல இந்த சஞ்சனா தான்.நான் அன்னிக்கே உன்கிட்ட என்ன சொன்னேன்,நீ ராஜா மேல கையை வைத்தால் இந்த சஞ்சனா உன்னை சும்மா கூட விட மாட்டேன் என்று சொன்னேனா இல்லையா"..போலீஸ் வேன் சத்தம் சஞ்சனா காதுகளில் கேட்க,"சரிடா ஜார்ஜ்,உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டி போக பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.நான் வேற எதுக்கு உன்னை இந்த நேரத்தில் தொந்தரவு பண்ணிக்கிட்டு,போனை வைக்கிறேன்"என்று வைத்து விட்டாள்.

ஜார்ஜ் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு ,கமிஷனர் குழந்தை மீட்கப்பட்டது.ஜார்ஜ் நான் குழந்தையை கடத்தவில்லை என்று அலறினான்.ஆனால் அவன் குடித்தும், காரை நிக்காமல் ஒட்டி வந்த நிலையில் தர தரவென்று ஸ்டேஷன் இழுத்து செல்லப்பட்டான்.

ராஜா திரும்ப இக்பாலுக்கு ஃபோன் செய்ய,

ஹலோ இக்பால் நான் ராஜா பேசறேன்,ஜார்ஜை பார்த்தேன்,ஆனா அவன் மொபைலை தர மாட்டேன் என்று பிடிவாதமா சொல்லிட்டான் என்று கூற,

இக்பால் பதிலுக்கு"நோ பிராப்ளம் ராஜா,அவன் மொபைலை தராவிட்டாலும் பரவாயில்லை.அவனால் இதுக்கு மேல் அந்த மொபைலை பயன்படுத்த முடியாமல் செய்து விடுகிறேன் என கூறி ஒரு சாப்ட்வேரை அழுத்த ,ஜார்ஜ் மொபைல் reset ஆகி எல்லா டேட்டாக்களும் அழிந்து லாக் ஆகியது.சஞ்சனா தற்பொழுது பேசிய கால் உட்பட..

ராஜா எதுவாக இருந்தாலும் நேராக மோதி தான் பழக்கம்.ஆனால் சஞ்சனா சரியாக திட்டம் போட்டு ஜார்ஜ் பாணியிலேயே அவனை போலீஸிடம் வசமாக சிக்க வைத்து விட்டாள்

ஆனால் இந்த விசயம் ராஜாவிற்கு இதுவரை தெரியாது.

ஜார்ஜ் அரெஸ்ட் செய்யப்பட்டு போலீஸாரால் சிறையில் அடைக்கப்பட்டான்.அவனுடைய மாமா சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஓடி வந்து விபரங்கள் கேட்க,கமிஷனர் வீட்டு குழந்தை கடத்திய விவகாரத்தில் அவன் வசமாக சிக்கியுள்ளதை அறிந்தார்.கமிஷனரே நேரடியாக இந்த கேசை கவனிப்பதால் தன்னால் அவனுக்கு ஏதும் உதவ முடியாமல் திணறினார்.

அவர் தனது உயர் அதிகாரியிடம் சென்று உதவி கேட்க,

இன்ஸ்பெக்டர் அருள் அவரை பார்த்து,"இங்க பாரு அன்பரசு உன் அக்கா பையனை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்.கமிஷனர் அவன் மேல செம்ம கோபத்தில் இருக்கார். இன்னும் சொல்ல போனால் நிலுவையில் உள்ள ரெண்டு மூணு கேசை அவன் மேல போட்டு ஏழு வருஷம் சிறை தண்டனை வாங்கி கொடுக்க சொல்லி இருக்கார்.நான் என்ன பண்ணட்டும் சொல்லு.?

சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு பதறி "அய்யயோ ஏழு வருஷம் என்றால் அவன் வாழ்க்கையே பாழாய் போய் விடும் சார்.ஜார்ஜ் ஏதோ அந்த குழந்தையை சஞ்சனா தான் கடத்தி அவன் காரில் வந்து போட்டாதாக சொல்றான்."

இன்ஸ்பெக்டர் அருள் அன்பரசுவிடம் கோபமாக "அவனே ஒரு பிராடு,அவன் குடிச்சிட்டு சொல்றதை நீங்க நம்பறீங்களா..!ஏற்கனவே ராஜா விவகாரத்தில் நீங்க ரெண்டு பேர் பண்ண நாடகத்திலேயே தெரியும்,யார் தப்பு பண்ணி இருப்பாங்க என்று?அப்போ ராஜாவை மாட்டி விட நினைச்சான்,இப்போ சஞ்சனாவா..?என்று கத்த

சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க,அவன் சொல்றதை நானும் கண்மூடித்தனமாக நம்பல,அவன் உறுதியாக சொல்றான்.அவன் போனில் கடைசியாக சஞ்சனா பேசி இருப்பதாகவும்,அது கால் ரெக்கார்டிங்கில் பதிவு ஆகி இருப்பதாகவும் சொல்றான்.கொஞ்சம் செக் பண்ணி பாருங்க சார்.

இதே கதையை எங்ககிட்டேயும் விட்டான்.இந்தா அவனுடைய மொபைல் கொஞ்சம் நீயே செக் பண்ணி சொல்லு,

அன்பரசு அவரிடம் மொபைல் வாங்கி தேடி பார்க்க அதில் ஒன்றுமே இல்லை.(அதை தான் ராஜா சொல்லி இக்பால் முழுவதுமாக reset செய்து அழித்து விட்டானே)

அன்பரசு பதறி"சார் இந்த மொபைலில் ஒண்ணுமே இல்லை."

"யோவ் அதை தானே நானும் சொன்னேன்.இந்த மொபைல் அவனோட கம்பனி மொபைல்,அவனை வேலையை விட்டு நீக்கிய உடனே இவன் இந்த மொபைலை அங்கே திருப்பி கொடுத்து இருக்கணும்.அதையும் இவன் கொடுக்கல.அதுக்கு ஒரு case வேற பாக்கி இருக்கு.அவங்க கம்பனிகாரங்க இவன் திருப்பி கொடுக்காததால் reset பண்ணி இவன் பயன்படுத்த முடியாதபடி ஆக்கிட்டாங்க.இவ்வளவு தில்லாங்கலடி பண்ணி இருக்கும் இவனுக்கு support செய்தால் நீயும் உள்ளே போக வேண்டி இருக்கும் பார்த்துக்க..

அன்பரசு கெஞ்சுதலாக "சார் கடைசியாக கேட்கிறேன் இவனை காப்பாற்ற வழி ஏதும் இருக்கிறதா மட்டும் சொல்லுங்கள்.அவன் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்.பார்க்கவே பாவமா இருக்கு.?

இன்ஸ்பெக்டர் அருள் கொஞ்சம் இரக்கம் கொண்டு"ஒரே ஒரு வழி தான் இருக்குது அன்பரசு,கமிஷனர் மனசு வைத்தால் சிறிய தண்டனையோடு அவன் தப்பிக்க முடியும்.ஆனால் இருக்கும் பெரிய சங்கடமே யார் அவரை பார்த்து பேசி சமாதனபடுத்துவது..!"

அன்பரசு உடனே "சார் நான் உடனே நேரில் போய் சந்தித்து பேசறேன்."

அருள் கோபமாக"யோவ் அடிக்கடி நீ முட்டாள் என்று காட்டி கொண்டே இருக்கே,நீயே உன் அக்கா பையனை 7 வருஷம் தண்டனையில் இருந்து மரண தண்டனையே வாங்கி கொடுத்துடுவே போல் இருக்கு"

அன்பரசு பதறி " ஏன் சார் அப்படி சொல்றீங்க?"

அருள் அதற்கு"ஏன்யா உன் ட்ராக் ரெக்கார்ட் எவ்வளவு மோசம் என்று இந்த டிபார்ட்மெண்ட் முழுக்க வெட்ட வெளிச்சம்.அவனுக்கு நீ தான் மாமா என்று அந்த கமிஷனருக்கு தெரிந்தால் போதும்,அப்பிலே இல்லாமல் கண்டிப்பாக அவனுக்கு தூக்கு தண்டனை தான்".

இதை கேட்டு அன்பரசு பதறி" சார் அப்போ நீங்க எனக்காக பேச முடியுமா?"

அருளும் பதிலுக்கு"அந்த ஆள் என் பேச்சை கேட்கவும் மாட்டான்,எனக்கும் அந்த ஆள் கிட்ட பேச பயம்.அந்த ஆள் பற்றி தான் உனக்கே தெரியும் தானே.அந்த ஆள் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்..ஆனா அந்த ஆள்கிட்ட சகஜமா பேசக்கூடிய ஒரு ஆள் இருக்கான்.ஆனா அவன் இந்த விசயத்தில் உனக்கு உதவி செய்வானா என்று எனக்கு தெரியாது?

அன்பரசுவுக்கு சற்று தெம்பு வர"சார் யார்னு மட்டும் சொல்லுங்க,நான் அவன் காலில் போய் விழுந்து கெஞ்சி கேட்கிறேன்"

அருளும் சொல்ல தொடங்கினார்."உன்னால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு,தனக்கு கமிஷனர் நன்றாக தெரிந்தும் கூட அவரோட பேரை இதுவரை தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்தாமல் இருக்கும் ஒருத்தன் தான்.உனக்கு அறிமுகமான நபர் ,வேறு யாருமில்லை ராஜா தான்.சிறந்த குடிமகன் அவார்ட் வாங்கியதில் இருந்து அவனுக்கும் கமிஷனருக்கும் நல்ல பழக்கம்.அவனோட நேர்மை கமிஷனருக்கு பிடித்து இருப்பதால்,கமிஷனர் வீட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் அவனை கூப்பிட தவறுவதே இல்லை.அவனை தன் குடும்பத்தில் ஒருவனாகவே பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.அவன் என்ன சொல்கிறான் என்று குறைந்தபட்சம் காது கொடுத்தாவது கேட்பார்.மீதி கடவுள் விட்ட வழி."என்று சொல்ல அன்பரசுவுக்கும் ஜார்ஜ்ஜை காப்பாற்ற முடியும் என சற்று நம்பிக்கை வந்தது.

அன்பரசு வெளியே வர,ஜார்ஜ் அப்பா அம்மா அழுது கொண்டே அவரிடம் ஓடி வந்து விசாரித்தனர்.

நீங்க ரெண்டு பேரும் அழாம வீட்டுக்கு போங்க, நான் எப்படியாவது ஜார்ஜ்ஜை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன்.!என்று உறுதி அளித்தார்.

ராஜா உதவி செய்வானா?அப்படி ராஜாவே உதவி பண்ண நினைத்தாலும் சஞ்சனா அதற்கு ஒப்பு கொள்வாளா.!கமிஷனர் கூறப் போவது என்ன?​
Next page: Chapter 20
Previous page: Chapter 18