Chapter 83

தரகர்

நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் காலையில்

ஹசன் ரூமில் யாருடனோ போனில் பேசி

கொண்டு இருக்க

பவித்ரா தன் குழந்தை அபியாவுக்கு டிவியில்

கார்ட்டூன் காண்பித்து கொண்டே

உணவு ஊட்டி கொண்டு இருந்தாள்.

சலீம் தன் ரூமில் லேப்டாப்பில் வேலை செய்து

கொண்டு இருந்தான்.

அந்த சமயத்தில் ஒரு கார் வரும் சத்தம் கேட்க

பவித்ரா குழந்தையை தூக்கி கொண்டு

வாசலுக்கு வந்து பார்த்தாள்.

ஒரு அறுபது வயது நபர் அமிதாப்பச்சனை

நினைக்க தூண்டும் உயரத்துடன்,

கனமான உடம்புடன் காரில் இருந்து

கீழ இறங்கினார்.

உள்ள வந்த அவரை வரவேற்ற பவித்ரா

யார் என்று விசாரிக்க

தன் பெயர் குருநாதன் என்றும்

சலீம் தம்பி திருமண விஷயமா ஐயா வர

சொல்லி இருந்தாங்க என்று சொல்ல

பவித்ரா அவரை உள்ள வர சொல்லி

வரவேற்பறையில் இருந்த சோபாவில்

உட்கார சொன்னா.

குழந்தை அபியா அவரை பார்த்து சிரிச்சது.

பவித்ரா மெதுவா படி ஏறி ஹசன் ரூமை

எட்டி பார்க்க அவர் இன்னும்

போனில் பேசி கொண்டு இருந்தார்.

உள்ள நுழையாம வாசலில் நின்று

அவர் பேசி முடிக்க காத்திருக்க

இதை பார்த்த ஹசன் வேகமா

பேசி போனை கட் பண்ணிட்டு

பவித்ரா பக்கத்தில வந்தார்.

குழந்தை அபியா ஹசனை பார்த்து சிரிக்க

குழந்தையின் கன்னத்துக்கு முத்தம் கொடுத்த

ஹசன் அப்படியே பவித்ராவின் பட்டு

கன்னத்துக்கும் முத்தம் கொடுத்தார்.

சிரிப்புடன் முத்தத்தை வாங்கி கொண்ட பவித்ரா

குருநாதன் வந்த விஷயத்தை சொல்ல

ஹசன் பரபரப்புடன் கீழே இரங்கி வந்தார்.

குருநாதன் எழுந்து நமஸ்காரம் சொல்ல

இருவரும் உட்கார்ந்தனர்.

ஹசன் பவித்ராவையும் அருகில் உட்கார சொன்னார்.

நேரடியாக விஷயத்துக்கு வந்த குருநாதன்,

சலீம் தம்பிக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தீங்க.

சில வரன்கள் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி

வந்து இருக்கு.

முதல்ல பெண்களுடைய போட்டோக்களை பார்த்துருங்க.

அப்புறமா விவரம் சொல்றேன்.

சொன்னா குருநாதன் தான் கொண்டு வந்து இருந்த

லெதர் பேக்கை திறந்து உள்ள இருந்து ஒரு

லேப்டாப்பை எடுக்க

அட ஜோசியர் கையில் லாப்டாப்பா,

வியந்து பவித்ரா அவரை பார்க்க

லேப்டாப்பை திறந்து லாகின் செய்தார்.

பின்பு ஒரு போல்டரை ஓபன் செய்து

பார்க்க அதில் சில அழகிய பெண்களின்

போட்டோஸ் இருந்தது.

ஆல் லிட்டல் ஏஞ்செல்ஸ்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு போஸில்

நின்று கொண்டும் உட்கார்ந்த

மாதிரியும் பல வடிவங்களில்

பல கோணங்களில்..

சலீம் அழைக்க பட

அவனும் சில நிமிடங்களில் கீழ வந்தான்.

வரும்போதே பவித்ராவை பார்த்து முறைத்து

கொண்டே வர,

பவித்ராவுக்கோ உதட்டில் புன்னகை.

அபியா குட்டி ஓடி சென்று அவன் காலை கட்டி கொள்ள

அவன் குழந்தையை தூக்கிய வாறே

தன் அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஹசன் சலீமை பார்த்து,

டேய், நீ கேட்ட மாதிரி,

ஒருத்தர் கூட நம்ம இனத்தவர் கிடையாது.

பவித்ரா மாதிரி வேண்டும் என்று கேட்டதால்,

சாஸ்த்ரியிடம் விசேஷமா சொல்லி

வரன் பார்க்க சொல்லி இருந்தேன்.

அவரும் வந்திருக்கார்.

முதல்ல போட்டோஸ் பார்த்து

ரெண்டு மூன்று பெண்களை சூஸ் பண்ணு.

அப்புறமா சாஸ்த்ரியிடம் விவரம் கேட்டுக்கலாம்.

பவித்ரா பக்கத்துல இருந்ததால் சலீம் சிறிது

சங்கோஜ பட

உணர்ந்த ஹசன் அணைத்து போடோஸ்களையும்

சலீம் மெயில் ஐடி கு அனுப்ப சொன்னார்.

சாஸ்திரிகளும் ஐடி வாங்கி உடனே அனுப்ப

சலீம் புன்னகையுடன் மேல இருந்த தன்

ரூமுக்கு சென்றான்.

இந்த நேரத்துல பழரசம் பறி மாற பட்டது.

முவரும் பொதுவான விஷயத்தை பற்றி

பேசி கொண்டு இருக்க

சிறிது நேரத்தில் குருநாத சாஸ்திரியின் லேப்டாப்பில்

மெயில் வந்த நோட்டிபிகேஷன் வர

அவர் அதை திறந்து பார்த்தார்.

அதில் மூன்று போட்டோஸ் இருந்தது.

சிறிது நேரத்தில் சலீமும் கீழ வந்து

உட்கார்ந்தான்.

பழரசத்தை குடிச்சி முடிச்சி டம்ளரை கீழ

வைத்த சாஸ்திரி,

தன் வாயை துடைத்து கொண்டு

தன் எதிரில் உட்கார்ந்து இருந்த மூவரையும்

பார்த்து விபரங்களை சொல்ல ஆரம்பிச்சார்.

தம்பி, அருமையா சூஸ் பண்ணிருக்காங்க.

மூன்று பேர் ஜாதகங்களும் மிக அருமை.

அருமையான குடும்பம்.

மூன்று பெண்களும் அம்ச ஜாதக லட்சணங்கள்

பொருந்த அமைந்த பெண்கள்.

முதலாவது இந்த பெண் பெயர் காயத்ரி.

அப்பா பெயர் ராமமூர்த்தி.

பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்

ஒரே பொண்ணு. அப்பா செல்லம்.

ரொம்ப ஒழுக்கமா வளர்ந்த பொண்ணு.

எந்த ஆண்களையும் ஏர் எடுத்து பார்க்காத பொண்ணு.

இன்ஜினியரிங் படிச்சிட்டு MBA படிக்கச் ஆசை படுது.

தம்பி இந்த பொண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை

அமோகமா இருக்கும்.

குருநாத சாஸ்திரி தன் தொழில் பக்தியை காட்ட ஆரம்பிச்சார்.

அண்ட புளுகு ஆகாச புளுகு.

ஜோசியர் மற்றும் கல்யாண ப்ரோக்கர் என்றாலே இப்படித்தான்

என்று நமக்கு தெரியாதா என்ன.

அடுத்து இந்த பெண் பெயர் வினிதா.

இவங்க அப்பா பெயர் குமரவேல்.

இவரும் பெரிய இண்டஸ்ட்ரிலியஸ்ட்.

சொத்து பத்து எக்கச்சக்கம்.

ஒரு பையன் ஒரு பொண்ணு.

பையன் மூத்தவன்.

பொண்ணு சின்னவ.

பையன் படிச்சிட்டு மேற் படிப்பு படிச்சிட்டு இருக்கான்.

பொண்ணு காலேஜ் கடைசி வருஷம்.

பொண்ணு பற்றி சொல்லனுமா

சுருக்கமா ரொம்ப அடக்கமானவ.

குனிஞ்ச தலை நிமிராதவ.

பொது இடத்துல அவ பேசினா நமக்கு

சத்தமே கேட்காது.

அவ்வளவு சாது. (?????)

வீட்டுலயும் ரொம்ப அமைதி.

நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தபோ

இந்த பொண்ணை பார்த்துருக்கேன்.

பெரியவங்களுக்கு என்ன மரியாதையை குடுக்குது

இந்த பொண்ணு.

நானே ரொம்ப சந்தோச பட்டேன்.

அப்படி அவளை வளர்த்து இருக்காங்க.

பெத்தவங்களை நானே பாராட்டிட்டு வந்தேன்.

சலீம் தம்பி செலக்ட் பண்ண பொண்ணுங்கள்ள

கடைசி பொண்ணு பெயர் தீபிகா

ரொம்ப லட்சணமான பொண்ணு.

அப்பா பெயர் தர்மராஜ்.

இவரும் பெரிய தொழில் அதிபர்.

இவங்களுக்கு ரெண்டு பசங்க.

ரெட்டை பசங்க.

பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு.

பொண்ணுக்கு முதல்ல கல்யாணம்

பண்ணிட்டு அப்புறமா பையனுக்கு

பண்ணலாம்னு அவங்க ஆசை.

இந்த பொண்ணை பற்றி சொல்லலும்னா

சுருக்கமா பாசக்கார பொண்ணு.

ரொம்ப அடக்கமான பொண்ணு.

இவளும் குனிஞ்ச தலை நிமிராதவ.

அண்ணன் என்றால் உசிரு.

அவனை விட்டு பிரிய மாட்டா.

அவ்வளவு பாசம்.(????)

நானும் ஒரு தடவை இவங்க வீட்டுக்கு

போயிருந்தேன்.

அப்ப கூட அண்ணனும் தங்கையும்

ஒரே ரூமில கதவை பூட்டிக்கிட்டு

ஒரே ஆட்டம் (???).

படு சுட்டி.

ரொம்ப நல்ல பொண்ணு.

தம்பியுடைய செலேக்சன் அற்புதம்.

நான் மனசுல நினைச்சதையே தம்பியும் நினைச்சிருக்கு.

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.

இப்போ பெரியவங்க நீங்கதான் சொல்லணும்.

குருநாத சாஸ்திரி தன் நீண்ட உரையை முடிச்சார்.

அவர் சொன்னா அனைத்தையும் கேட்டு கொண்டு

இருந்த மூவரும்

ஒருத்தரை ஒருத்தர் பார்க்க

ஹசன், ஒரு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க சாஸ்திரி.

நாங்க கலந்து பேசி ஒரு நல்ல முடிவு சொல்றேன்.

அப்புறமா நாம மற்றதை பேசலாம்.

சொன்னா ஹசன் சலீமை பார்க்க

அவன் 5000 ரூபாயை ஒரு கவரில் போட்டு தன் அப்பாவிடம்

கொடுக்க

அவர் அதை குருநாத சாஸ்த்ரியிடம் கொடுக்க

அவர் வாய் எல்லாம் பல்லாக சிரித்து கொண்டு அதை

பவ்யமாக வாங்கி கொண்டார்.

மூன்று பேரில் யாரை சூஸ் பண்ண என்று மூன்று பேருக்கும்

குழப்பம்.

பெரிய விவாதம் நடந்தது.

சலீமின் வாழ்க்கை எந்த பெண்ணின் கையில் மாட்ட

போகிறது என்று பார்ப்போம்.

ஆபிசில் பிசியாக வேலை பார்த்து கொண்டு இருந்த

அன்பு தன் டேபிளில் இருந்த இன்டெர்க்காம் ஒலிக்க

அதை தன் இடது கையை நீட்டி எடுத்து தன் இடது

காதில் பொருத்தி ஹலோ சொல்ல

கூப்பிட்டது தன் முதலாளி நண்பன் சதிஷ்.

டேய் என்னடா பண்ணிட்டு இருக்க, சதிஷ் கேட்க

என்னடா கேள்வி இது.

பிசியா வேலை பார்த்துட்டு இருக்கேன்,

கூப்பிட்டு கலாய்க்கிறியா, அன்பு சிரிக்க

சதிஷ், நீ என்ன வேலை பார்த்துட்டு இருந்தாலும்

அதை அப்படியே மூடி வச்சிட்டு என் ரூமுக்கு வா.

போன் வைக்க பட்டது.

எதுக்கு இவ்வளவு அவசரமா சதிஷ் கூப்பிடுறான்

என்று யோசித்து கொண்டே

தன் இருக்கையில் இருந்து எழுந்த அன்பு

டேபிளில் இருந்த தன் மொபைலை எடுத்துக்கொண்டு

சதிஷ் ரூமிற்கு போனான்.

காண்டீனுக்கு சென்று நல்ல வடை மற்றும் டி குடிச்சிட்டு

கேஸூலாக பேசிக்கிட்டே வந்த ரூபாவும், வசந்தியும் சுமித்ராவும்

அன்பை பார்த்தவுடன் கப் சிப் என்று தங்கள்

பேசுவதை நிப்பாட்டிட்டு தங்கள் சீட்டுக்கு போய்ட்டாங்க.

பவித்ரா இந்த கம்பெனியில் வேலை பார்க்கும் போது

இவர்கள் பாடு ஜாலியாக இருந்தது.

ஆனால், இப்போதோ பவித்ராவும் இல்லை.

எதையும் கண்டுக்காத ஹசன் சாரும் இல்லை.

ஆனால் பவித்ரா அவ்வப்போது இவர்களிடம் தொடர்பில்

இருந்தா.

சரி இவர்கள் கதை நேரம் இருந்த அப்புறமா பார்ப்போம்.

லிப்டில் பயணித்த அன்பு மேல் மாடி சென்று

வராண்டாவில் நடந்து இடது பக்கம் திரும்பி

கடைசியில் இருந்த சதிஷ் ரூமிற்கு சென்று

டொக் டொக்..

கதவை தட்ட

டேய், உள்ள வாடா,

நோ பார்மாலிட்டீஸ்

சதிஷ் குரல் கேட்க

சிரிப்புடன் உள்ள வந்தான் அன்பு.

வேலை பார்த்துட்டு இருக்கும் போது

ஏண்டா கூப்பிட்ட,

அன்பு கேட்க

மச்சி, ஒரு முக்கியமான விஷயம்.

அதன் உடனே கூப்பிட்டேன்.

இதை கேட்ட அன்பு,

என்னடா துபாய் பார்ட்டி நம்ம

டீலுக்கு ஒத்துக்கிட்டாங்களா, அன்பு கேட்க

டேய் இது பியூரிலி பர்சனல்.

கொஞ்ச நேரத்துக்கு பிசினெஸ்ஸை ஒத்தி வை;

சொன்னா சதிஷ் அன்பை பார்க்க

நெற்றியில் ஆச்சார்ய குறியுடன் அவனை

நிமிர்ந்து பார்த்தான் அன்பு.

சதிஷ், மச்சி, நம்ம ரெண்டு பேரும் வெளிநாட்டில வேலை

பார்த்தோம் அல்லவா,

அன்பு, ஆமாண்டா.

சதிஷ், அப்போ, கடைசியா நான் வேலையை ரிசைன்

பண்ணிட்டு

வரும் போது நாம பேசிக்கிட்டது ஞாபகம் இருக்காடா.

அன்பு, கொஞ்ச நேரம் யோசித்தவன்,

ஆமாண்டா ஞாபகம் இருக்கு, ஆனா.

சதிஷ், என்னடா ஆனா.இழுக்கிற

அன்பு, இல்லைடா, இப்ப அது எதுக்கு..

சதிஷ், ஞாபகம் இருக்கா இல்லையா

அன்பு, இருக்கு. ஆனா.

சதிஷ், ஞாபகம் இருந்தா சொல்லு,

அன்பு, டேய் இப்ப எதுக்கு அது,

எதோ ஒரு எமோஷன்ல சொல்லிட்டேன்.

சதிஷ், பரவாயில்லை சொல்லு,

அன்பு, பவித்ராவை பழி வாங்கணும்னு

பேசிக்கிட்டோம்.

சதிஷ், கரெக்ட், ஆனா இப்போ விஷயம்

வேற மாதிரி போய் விட்டது,

சதிஷ் சோகத்துடன் சொல்ல

பதட்டம் தொற்றி கொண்ட அன்பு, என்ன என்று

வினவ

சதிஷ் பவித்ரா சலீமிடம் சிக்கி கொண்ட விஷயத்தை

மெதுவா சொல்லி முடிச்சான்.

கொஞ்ச நேரம் அந்த ரூமில் அமைதி.

சதிஷ்,

இங்க நான் வந்த பிறகு பவித்ரா எனக்கு

துரோகம் பண்ணிட்டானு தெரிஞ்சவுடன்,

மச்சி, பவித்ராவை எப்படியாவது உன்னை

வச்சி பழி வாங்கணும்னு துடியா துடிச்சிட்டு இருந்தேன்.

ஆனா நடந்த சம்பவங்க வேற மாதிரி.

ஹசனின் நல்ல குணத்துக்கு அவரை எதிர்க்க முடியல.

உண்மையையும் யார்கிட்டயும் சொல்ல முடியல.

ரொம்ப நொந்து போய் அநாதையா நின்னுட்டு இருந்த

என்னை,

அவருடைய பிசினெஸை எனக்கு கொடுத்து அவர் பெரிய

மனுஷன் என்று நிரூபித்து கொண்டார் ஹசன்.

அப்புறம் பவித்ராவை பழி வாங்கும் எண்ணத்தை விட்டுட்டேன்.

அன்பு, அப்புறம் என்னடா..

சதிஷ், இப்போ சலீம் அவளை பலவந்தமான பிடிச்சி

அவளை தொந்தரவு பண்றான்.

இதுக்கு மேலையும் சும்மா இருக்க முடியாது.

அன்பு, என்ன செய்யலாம், சொல்லு,

சதிஷ், தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பிச்சான்.

மச்சி, சலீமுக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.

அன்பு, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.

எனக்கு புரிஞ்சிடிச்சி.

வெற்றிகரமா முடிச்சிருவோம்.

புன்னகைத்தான் அன்பு.​
Next page: Chapter 84
Previous page: Chapter 82
Next article in the series 'தடுமாறியவள்': தடுமாறியவள் 2 - Bold Decision of Beauties